திருக்குறள்

  1. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.
  2. ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.
  3. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.
  4. ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!
  5. ஆசை வெட்கம் அறியாது.
  6. ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.
  7. ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.
  8. ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமா.
  9. ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது.
  10. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
  11. ஆயிரங்காலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
  12. ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே
  13. ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
  14. ஆரால் கேடு, வாயால் கேடு.
  15. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
  16. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
  17. ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
  18. ஆழமறியாமல் காலை இடாதே.
  19. ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
  20. ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
  21. ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
  22. ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
  23. ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
  24. ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
  25. ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
  26. ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
  27. ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
  28. ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
  29. ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
  30. ஆனைக்கும் அடிசறுக்கும்.
  31. ஆனை படுத்தால் ஆள் மட்டம்.ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற