திருக்குறள்

Rajinikanth’s life Story in CBSE 6th Standard Course Book



Rajinikanth’s life Story in CBSE 6th Standard Course Book




Thanks-Techshankar


அடடா, இப்படியொரு விளக்கமா?


இந்திய ரூபாய்க்குப் புதிதாகக் குறிப்படம் ஒன்றைச் சமீபத்தில் அறிமுகப் படுத்தியுளார்கள்.(A symbol which is in printed or written sign used to represent an operation, element, quantity, quality, or relation, as in mathematics or music) அனைவரும் அறிந்ததே! அதற்கு ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். படம் கிழே உள்ளது. பார்த்து அது சரிதானா? அல்லது இல்லையா? என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்! 

'சிறந்த ஜோடி நயன்தாரா - பிரபு தேவா' - கேலிக்கூத்தான ஒரு விருது!!!

Nayanthara and Prabhu Deva Best Couple of The year
ஒரு ஆங்கில சினிமா பத்திரிகையின் விருது வழங்கும் (ஒரு வெளம்பரம்ம்ம்!)
 விழா சமீபத்தில் ஹைதராபாதில் நடந்தது.A நயன்தாரா - பிரபு தேவா
 'கள்ளக் காதல்', சட்ட விரோத திருமணம் [^], இருவருக்கும் எதிரான நடவடிக்கை [^] பற்றியெல்லாம் ஒரு பக்கம் பரபரப்பாக செய்திகள் [^] வெளியாகிக்
கொண்டிருக்கும் நிலையில், இந்த இருவரையும் அழைத்து சிறந்த
 ஜோடி (தம்பதி) விருதினை வழங்கியிருக்கிறார்கள் ஹைதராபாதில்!
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழித் திரைப்படக்
கலைஞர்களுக்கு இதில் விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழில் சிறந்த நடிகராக பிரகாஷ் ராஜும், சிறந்த நடிகையாக
தமன்னாவும் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த படத்துக்கான விருதினை பசங்க படம் வென்றது.

வாழ்நாள் சாதனையாளர் விருது பிரபல தெலுங்கு மற்றும்
 தமிழ் படத் தயாரிப்பாளர் டி ராமாநாயுடுவுக்கு வழங்கப்பட்டது.

அதுவரை எல்லாமே சரியாகத்தான் நடந்தது. அதன் பிறகு
நடந்ததுதான் அபத்தத்தின் உச்சம் என வர்ணிக்கப்படுகிறது
திரையுலகில்.

ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகளுடன் வசிக்கும் பிரபு தேவாவையும்,
அவருடன் கிசுகிசுக்கப்பட்டு வரும் நயன்தாராவையும் சிறந்த ஜோடியாகத்
(தம்பதியாக - best couple award) தேர்ந்தெடுத்து விருது வழங்கியது
இந்தப் பத்திரிகை.

இந்த இருவருக்கும் திருமணமாகவில்லை என்பது ஒரு புறமிருக்க,
இருவரும் இதுவரை எந்தப் படத்திலும் சேர்ந்து நடித்தது கூட இல்லை
 என்பதுதான் இந்த விருதை கேலிக் கூத்தாக்கிவிட்டது.

விழாவுக்கு வந்திருந்த ஒரு இயக்குநர் [^] இப்படிக் கூறினார்: "
சமூக நியதி, கட்டுப்பாடு, ஒழுக்கம் என்றெல்லாம் பத்திரிகைகள்தான்
 பெரிதாக கூப்பாடு போடுகின்றன. ஆனால் இன்றைக்கு அதே பத்திரிகையுலகம்,
சட்டவிரோத உறவுக்குள் வாழும் இருவருக்கு சிறந்த தம்பதி விருது கொடுக்கிறது.
 எல்லாம் விளம்பர ஸ்டன்ட் என்பதைத் தவிர இதை வேறு எப்படிச் சொல்வது...,"
என்றார் கடுப்புடன்.
நன்றி-தட்ஸ் தமிழ்

காலில் விழும் கலாச்சாரத்தை கற்று தரும் ஆசிரியர்கள்

- ராஜ்ப்ரியன்

      கடந்த ஒரு வாரமாக தினசரி செய்திதாள்களை புரட்டியபோது தினமும் குறைந்தது 3 புகைப்படங்களாவது கண்ணில் பட்டது. அந்த படத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் பூக்கள் நிரம்பிய தட்டுகளோடு எதிரும் புதிருமாக வரிசையில் நின்றுகொண்டு நடுவில் நடந்து வருபவர்களுக்கு மலர் தூவிக்கொண்டிருந்தனர்.

வேறு சில படங்களில் அதேபோல் வேறு பள்ளி 
மாணவ-மாணவிகள் சிலருக்கு பாதபூஜை செய்துக்கொண்டிருந்தார்கள். 

மலர் தூவி பாத பூஜை செய்யும் அளவுக்கு அந்த மிக முக்கியமானவர்கள் யார் என படத்தை உற்று உற்று பார்த்தபோதும் 
சம்பந்தப்பட்ட வி.ஐ.பிகள் யாரென்றே தெரியவில்லை. புகைப்படத்திற்கான செய்திகளை படித்தபோது தான் தெரிந்தது;அவர்கள்ஆசிரியர் பெருமக்களாம். 


      செப்டம்பர் 5ந்தேதி ஆசிரியர் தினம். ஆசிரியர்களை பெருமைப்படுத்த மாணவ-மாணவிகள் தங்களது அன்பை இவ்வாறு வெளிப்படுத்தினார்கள் எனச்செய்தி தெரிவித்தது ஆச்சர்யமாக இருந்தது.

நமக்கு தெரிந்த சில ஆசிரியர்களிடம் இதுபற்றி 
கேட்டபோது, ஆசிரியர் தினத்துக்கு இந்த மாதிரி விழா எடுக்கச்சொன்னாங்க. பசங்க வீட்டிலிருந்து பணத்தை வாங்கி வந்து இந்த
மாதிரி விழா எடுத்தாங்க. இது நடந்தது எல்லாமே தனியார் பள்ளிகளில் தான் என்றார்கள். 

      மாணவ சமுதாயத்துக்காக என்ன செய்துவிட்டது இந்த தனியார் பள்ளிகள்.   எல்.கே.ஜி சேர்க்க க்யூவில் நிற்க வைத்து பணத்தை பிடுங்க தொடங்கி வகுப்பில் சேர்த்த பின் யூனிபார்ம், நோட்-புக், ஸ்பெஷல் க்ளாஸ் என மாதாமாதம் பணத்தை கறப்பதோடு கட்டிட நிதி, அந்த நிதி, இந்த நிதியென ஆண்டுக்கு ஆண்டு பணத்தை கறக்கிறார்கள்.

கூடவே லீவு போட்டால் 
அபராதம், மதிய நேரத்தில் பள்ளியில் உள்ள பிள்ளைக்கு மதிய உணவு ஊட்ட வந்தால் அபராதம் என்று பணத்தை பிடுங்க புது புது வழிகளை உருவாக்குகிறார்கள். 

      பள்ளி நிர்வாகங்களுக்கு சலித்தவர்களில்லை இந்த ஆசிரியர்களும். வகுப்பில் பாடம் நடத்தாமல் வீட்டுக்கு டியூசன் வா என வரவைத்து மாதம் 200ரூபாய்க்கு குறையாமல் பீஸ் பிடுங்குகிறார்கள். பிராக்டிக்கல் மார்க் வேண்டுமா என் வீட்டுக்கு வந்து துணி துவை, வீடு பெருக்கு, காய்கறி வாங்கிவா, எச்சில் பாத்திரங்களை துலக்குவது என தங்களிடம் படிக்கும்
பிள்ளைகளை வேலை வாங்குகிறார்கள். 

      சம்பள உயர்வு, போனஸ், அரியர்ஸ் என செய்யும் வேலையை காட்டிலும் அதிகமாகவே அரசாங்கம் கொட்டி தந்தாலும் பேப்பர் திருத்த பணம் தா, மாலையில் பள்ளியில் சிறப்பு வகுப்பு எடுக்க பணம் தா என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து கொடி பிடித்து ஊர்வலம் போகிறார்கள். வேலை நாட்களில் இப்படி பள்ளிக்கு போகாமல் தெருவுக்கு வந்து போராட்டங்கள் செய்கிறோமே மாணவர்களின் படிப்பு என்னவாவது என எந்த ஆசிரியராவது கவலைப்படுகிறார்களா?. 

      அதுமட்டுமா பள்ளியறையை படுக்கையறையாக மாற்றி சல்லாபம் புரிந்து மாட்டிக்கொண்ட ஆசிரியர்கள், மாணவிகளை சீரழித்து மாட்டிய ஆசிரியர்கள் தண்டனை எதுவும் பெறாமல் தொடர்ந்து பணிபுரிகிறார்கள். இவர்கள் மாணவ செல்வங்களுக்கு எதை கற்று தந்திருப்பார்கள். பதவிக்கும், பணத்துக்கும், சுகத்துக்கும் அலைபவர்களாக இருக்கும் இவர்களை போன்றவர் களுக்கு தான் சிறந்த ஆசிரிர்களுக்கான விருதே தரப்படுகிறது. அதைப்பற்றி தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம் அந்தளவுக்கு அத்தனை கோல்மால்கள். 

      இப்படி தப்பு செய்வதையே நோக்கமாக கொண்ட பல ஆசிரியர்கள் தற்போது  தங்களது வகுப்பு மாணவர்களிடம் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எங்களுக்கு பாதபூஜை செய், மலர் தூவு, காலில் விழு என நிர்பந்தம் செய்வது எந்த விதத்தில் நியாயம்.
அரசியல்வாதிகள் பதவி சுகம் வேண்டியும், இருக்கும் பதவியை தக்க வைத்துக்கொள்ளவும் தான் தனது தலைவன் கால்களில் விழுகிறார்கள். பின் காலை வாருகிறார்கள். அந்த பழக்கத்தை நீங்கள் ஏன் வளரும் மாணவ செல்வங்களுக்கு கற்று தருகிறீர்கள்.
பிள்ளைகளை படிக்க தான் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். உங்கள் கால்களை கழுவி பொட்டு வைத்து, மலர் தூவி, காலில் விழ அனுப்பவில்லை. மரியாதை தரும் அளவுக்கு நீங்கள் சாதனையாளர்களும் அல்ல. மரியாதை என்பது கேட்டுப்பெருவதல்ல. அது ஒருவரின் செயல் பாடுகளை வைத்து மற்றவர்கள் தருவது. கேட்டு வாங்குவது என்பது பிச்சை எடுப்பதற்கு சமம். 

      வருங்கால தலைவர்களை உருவாக்க நீங்கள் என்ன செய்திர்கள்.  யாரோ எழுதி வைத்ததை படித்து விளக்கம் என்ற பெயரில் அவர்களுக்கு சொல்லி தருகிறீர்கள். மாணவர்களும் புத்தகத்தில் உள்ளதை மனப்பாடம் செய்து தேர்வெழுதி பாஸ்செய்கிறார்கள்.

இதுவா கற்று தரும் முறை. நீங்கள் கற்று தந்த லட்சணத்தை சமீபத்தில் தமிழகத்தில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி 
விவரம் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு வெளிவரும் மாணவ-மாணவிகளில் 70 சதவீத மாணவர்களுக்கு  ஆங்கிலத்தில் பேச தெரியவில்லை. கல்லூரியில் நுழைந்ததும் சிரமப்படுகின்றனர். 

      கணக்கு பாடத்தில்; 40 சதவித மாணவ-மாணவிகள் தோல்வியை தழுவுகிறார்கள். தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 30 சதவிதமானவர்கள் பார்டர் மதிப்பெண்ணில் வெற்றி பெற்றவர்கள் என குறிப்பிடுகிறது அந்த புள்ளி விபரம். பள்ளி படிப்பை முடித்து வெளியே வரும் 60 சதவிகித மாணவர்களுக்கு உலகத்தை பற்றி, நாட்டை பற்றி, அரசியலைப்பற்றி, ஏன் தாங்கள் படித்த படிப்பு பற்றிக்கூட எதுவும் தெரிவதில்லை. அப்பறம் என்ன நீங்கள் கற்று தந்தீர்கள். 

      கற்று தருவது என்பது புத்தகங்களில் உள்ள எழுத்துக்களை மட்டுமல்ல. உலகத்தை, நாட்டை, மக்களை, அரசியலை, அவர்களை சுற்றி நடப்பவற்றை கற்று தர வேண்டும். அப்போது தான் அந்த மாணவன் சிறந்த மனிதனாக உருவாகுவான்.
அவனுக்கு எதிராக பிரச்சனை நடக்கும் போது போராட முன் வருவான். தவறு செய்வதை தட்டி கேட்பான். அவர்களுக்கு போராட கற்று தர வேண்டும். அதை கற்று தருபவர்கள் தான் சிறந்த ஆசிரியர்கள். 

      தமிழகத்தில் எத்தனை ஆசிரியர்கள் அப்படி இருக்கிறீர்கள் சொல்லுங்கள் பார்ப்போம். கிராமங்களில், நகரங்களில் உள்ள சில பள்ளிகளில் சில ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். மாணவர்கள் நலனுக்காக தங்களது வாழ்வையே அர்பணித்தவர்கள்.
தங்களது ஊதியத்தின் பாதியை மாணவர்களுக்காக செலவு செய்கிறார்கள். இலவசமாக மாலை நேரங்களில் வீட்டுக்கு வரவைத்து பாடம் நடத்துகிறார்கள். ஏழை மாணவர்களுக்கு உதவிகள் செய்கிறார்கள். சமுதாயத்தை பற்றி அவர்களுக்கு கற்று தருகிறார்கள். வாழ்க்கை பாடத்தை புரியவைக்கிறார்கள். 

      மாணவர்கள் முன்னேற்றத்துக்காக, இப்படி ஆசிரியராக செயல்பட்டு காட்டியவர் தான் மறைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன். அதனால் தான் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர்க்கு குடியரசு தலைவர் பதவி தேடி வந்தது. அவரைப்போல மற்ற ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பதற்காக தான் அவரின் பிறந்த நாளை ஆசிரியர்கள் தினமாக அறிவித்தார்கள். 

      அந்த நன்நாளில் சாதிக்க தூண்டுபவர்களின் கால்களை கழுவினால் சிறப்பாக இருக்கும். கல்வி என்ற பெயரில் பண கொள்ளை நடத்தி தங்களது வாழ்வை சுகபோகமாக மாற்றிக் கொள்ளும் நிர்வாகிகளின் கால்களையும், அதற்கு ஒத்து ஊதும் ஆசிரியர்களின் கால்களை கழுவினால் அந்த மாணவனுக்கு படிப்பு வராது இவர்களை போன்ற கீழ் தரமான புத்தி தான் வரும். 

      ஆசிரிய பெருமக்களே, இனி வரும் ஆசிரியர்கள் தினத்தில் ஒரு மாணவன் உங்களுக்கு வாழ்த்து சொல்ல வந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் முன் அந்த தகுதி தனக்குயிருக்கிறதா என ஒவ்வொரு ஆசிரியரும் மனசாட்சியை தொட்டு கேளுங்கள். அதன் பின் முடிவு எடுங்கள்.

- நன்றி - நந்தவனம்

ஒரு கிலோ அரிசி 1ரூபாய்... நித்யப்பிரியாவின் உயிர் 4 ரூபாய்

மிழகத்தில் ஒரு கிலோ அரிசியின் விலை, 1 ரூபாய். அதைக் காட்டிலும் கொஞ்சமே
கொஞ்சம் அதிகமாக ஓர் உயிரின் விலையே 4 ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா?
நித்யப் பிரியா! சென்னைக்கு அருகே, திருவள்ளூர் மாவட்டத்தில் தச்சூர் என்கிற கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத நிலப்பரப்பைச் சேர்ந்தவர். தினமும் தன் வீட்டில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்குச் சென்று படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவி. சுறுசுறு... துறுதுறுவென சிறுமியாக வலம் வந்த நித்யப் பிரியா, இப்போது இல்லை. பஸ் பாஸ் வடிவில் வந்தது விபரீதம்!
குரல் கம்மப் பேசுகிறார் நித்யப்பிரியாவின் அப்பா முருகேசன்.
"எப்பவும் என் பொண்ணு அரசாங்க இலவச பஸ் பாஸ்லதான் ஸ்கூலுக்குப் போயிட்டு வருவா. அன்னிக்கு காலையில ஸ்கூல் பேக் கிழிஞ்சிருக்கு, தைக்கணும்னு 100 ரூபாய் வாங்கிட்டுப் போனா. பை தெச்ச பணம் போக மீதியை வெச்சிருந்தா. ஸ்கூல் முடிஞ்சு பஸ்ல ஏறி இருக்கா. பேக்ல கைவிட்டுப் பார்த்தா, பஸ் பாஸைக் காணோம். கண்டக்டர் திட்டுவாரோன்னு பயந்து, அழற நிலைமைக்கு வந்துட்டா. அப்புறம் அவகூடவே பஸ்ல வரும் ரஞ்சித்குமார்கிட்டே, 'உன் பஸ் பாஸைத் தா, நான் கண்டக்டர்கிட்ட சமாளிச்சுக்கிறேன்'னு கேட்டிருக்கா. 'என் பஸ் பாஸ்ல, என் பேர் எழுதி என் போட்டோதான் இருக்கும். கண்டுபிடிச்சுடுவார் கண்டக்டர்!'னு ரஞ்சித் சொல்லிட்டான். அப்புறம் தான் பை தெச்ச காசு போக மிச்சக் காசு தன் கிட்ட இருக்கிறது இவளுக்கு உறைச்சு, 4 ரூபாயைக் கொடுத்து கண்டக்டர் உமாபதியிடம் டிக்கெட் கேட்டு இருக்கா. ஆனா, இவளை ஆரம்பத்தில் இருந்தே பார்த்துட்டு இருந்த கண்டக்டர் உமாபதி, கோபத்தில் இருந்திருக்கார். பஸ்ல அத்தனை பேர் முன்னாடியும் பிரியாவையும் ரஞ்சித்குமாரையும் காட்டுக் கத்தலாக் கத்தித் திட்ட ஆரம்பிச்சிருக்கார். பிரியா அப்பவே அழுதுட்டா. ஆனாலும், கண்டக்டர் திட்டுறதை நிறுத்தலை. அதே பஸ்ஸில் ராஜேந்திரன்னு ஒரு டைம் கீப்பரும் வந்திருக்கார். அப்ப அவருக்கு டியூட்டியே கிடையாதாம். கொஞ்சம் போதையிலும் இருந்ததா சொல்றாங்க. அந்த டைம் கீப்பரோட சேர்த்து, பிரியாவையும் ரஞ்சித்குமாரையும் டெப்போவில் இறக்கிவிட்டுட்டார் கண்டக்டர் உமாபதி.
அங்கே ராஜேந்திரனும், உதவி மேலாளர் ஜான்சுந்தரும் சேர்ந்து, இவங்க ரெண்டு பேரையும் அசிங்க அசிங்கமாத் திட்டி இருக்காங்க. ரஞ்சித் குமாரை வெளியே நிக்கச் சொல்லிட்டு, பிரியாவை மட்டும் ஒரு ரூமுக்குள் கூட்டிட்டுப் போயிருக்காங்க. அரை மணி நேரத்துக்கும் மேலே அவ வெளிய வரலை. 'வெளியிலேயே அசிங்கமாத் திட்டினவங்க, உள்ளே பிரியாவை எவ்வளவு மோசமாத் திட்டு றாங்களோ?'னு பயந்துட்டே ரஞ்சித் வெளியே நின்னுட்டு இருந்திருக்கான். இதுக்கு நடுவில், பஸ்ல பிரியாவோடு வந்த எங்க பக்கத்து வீட்டுப் பொண்ணு என்கிட்டே வந்து விஷயத்தைச் சொல்லிச்சு. நான் உடனே டெப்போ பக்கத்தில் இருக்கிற என் நண்பனுக்கு போன் பண்ணி, 'ஃபைன் எதுவும் கட்டுறதுன்னா, கட்டி பிரியாவை டெப்போல இருந்து கூட்டிட்டுவந்துடு'ன்னு சொன்னேன். ஆனா, அவன் போனப்போ... பிரியாவும் ரஞ்சித்குமாரும் அங்கே இல்லை. அனுப்பிச்சிட்டாங்க!" என்று மேற்கொண்டு தொடர முடியாமல் மௌனமாகிறார் முருகேசன்.
டெப்போவில் இருந்து வீடு திரும்பிய நித்யப் பிரியா யாருடனும் பேசவில்லை. மனசும் முகமும் இறுகிப்போன அவர், தன் அம்மா விமலா கடைக்குப் போயிருந்த சமயத்தில், தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துவிட்டார். "வீட்டுக்கு வந்தவ என்கிட்டே ஒண்ணும் பேசவே இல்லை. எப்பவுமே கலகலன்னு இருப்பா. ஆனா, அன்னிக்கு முகம் கூடக் கழுவலை. வீட்டுக்கு வந்து நைட்டி மாட்டினவ, ஸ்கூல் யூனிஃபார்ம் துப்பட்டாவை மேலுக்குப் போட்டு இருந்தா. புள்ளை சாப்பிடலையேன்னு தக்காளியும் முட்டையும் வாங்க கடைக்குப் போனேன். வந்து பார்த்தா, உத்திரத்தில் துப்பட்டாவை மாட்டிப் பொணமாத் தொங்கறா என் புள்ளை. அப்புறம் அவ பேக்கைப் புரட்டி பார்த்துட்டு இருந்தப்ப, அந்த பாழாப் போன பஸ் பாஸ் கீழே ஒரு புஸ்தகத்துக்கு அடியிலதான் இருந்துச்சு!" என்ற விமலாவுக்கு வார்த்தைகளை முந்திக் கொண்டு கண்ணீர் எட்டிப் பார்க்கிறது. "அவ எப்பவுமே எதையுமே ஈஸியாத்தான் எடுத்துக்குவா. யார் என்ன திட்டினாலும் அதைப்பத்திக் கவலைப்பட மாட்டா. ஆனா, அவளே மனசு உடைஞ்சு தூக்குல தொங்குற அளவுக்கு டெப்போவுல என்ன நடந்ததுன்னு தெரியலை!" என்கின்றனர் அக்கம்பக்கம் இருப்பவர்கள்.
விஷயம் பரவவும், கொதித்தெழுந்த ஊர் மக்கள் சாலை மறியலில் இறங்கினர். மறியல், அரசுப் பேருந்து சேதம் என 14 பேரைக் கைது செய்திருக்கிறார்கள் காவலர்கள். இப்போது ராஜேந்திரனும் ஜான்சுந்தரும் காவல் துறையால் கைது செய்யப்பட, கண்டக்டர் உமாபதி மட்டும் தலைமறை வாகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
4 ரூபாய் டிக்கெட்டுக்காக, ஒரு மாணவியைக் கொடுமைக்கு ஆளாக்கும் அளவுக்கா... மனம் சிதைந்தவர்கள் மத்தியில் நாம் வாழ்கிறோம்?
"எம் பொண்ணு அப்படி என்ன தப்பு செஞ்சா? அவகிட்டே பஸ் பாஸ் இல் லைன்னா, பஸ்ஸைவிட்டு இறக்கிவிட்டு இருக்கலாம். ஃபைன் போட்டிருக்கலாம். ஆனா, ஏன் டெப்போவுக்குக் கூட்டிப் போகணும்? இத்தனைக்கும் அவ டிக்கெட் எடுக்கத் தயாராதானே இருந்தா?"
முருகேசனின் கேள்விகளில் நியாயம் நிரம்பி வழிகிறது. ஆனால், அதற்கான விடைகள்?

- நன்றி விகடன்

எந்திரன் -வியக்கவைக்கும் புதிய சாதனை!

எந்திரன் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு படத்தின் ட்ரெய்லருக்கு ரசிகர்கள் இத்தனை அதிக முக்கியத்துவம் கொடுத்து பாலாபிஷேகம் செய்தது உலகிலேயே இந்தப் படத்துக்காகதான் இருக்கும். அந்தவகையில் எந்திரன் மேலுமொரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

எந்திரன் ட்ரெய்லர் பல்வேறு இடங்களில் வெளியிடப்பட்டது. சத்யம் காம்ப்ளக்ஸ்தான் ஹைலைட். வைரமுத்து, ஆர்யா, கே.எஸ்.ரவிக்குமார் என அரங்கு வழிய விஐபிகள். லதா ர‌ஜினிகாந்த், சௌந்தர்யா என குடும்ப உறுப்பினர்களும் உண்டு. 

ர‌ஜினி எண்பதாவது வயதிலும் இதேபோல் டூயட் பாடுவார். காரணம் ஏ‌‌ஜ் அல்ல இமே‌ஜ் என்று ர‌ஜினி ரசிகர்களை விசிலடிக்க வைத்தார் ரவிக்குமார். வைரமுத்து இன்னும் ஒருபடிமேல். எந்திரனில் ர‌ஜினி 100 அடி பாய்ந்திருக்கிறார். அடுத்தப் படத்தில் 120 அடி பாய்வார் என்றார். ர‌ஜினியையும், அமிதாப்பையும் வைத்து அவர் சொன்ன கதையை ர‌ஜினியே ரசிப்பாரா என்பது சந்தேகம்.

எந்திரன் படத்துக்கு 1000 நாள் போஸ்டர் அடிப்பார்கள் என  சொன்னார் ஆர்யா
திருச்சி,கோவை போன்ற ஊர்களிலும் 30 தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது
3 டிரைலரை வெளியிட்ட வகையில் சண்டிவியில் அதை ஒளிபரப்பிய வகையில் சண்டிவி சம்பாதித்தது பல லட்சம்.படம் வரும் முன்னரே எந்த வகையில் எல்லாம் சம்பாதிக்க முடியுமோ அந்தளவு சம்பாதிக்க கசக்கி சாரு குடிக்க கலா நிதி மாறன் முயற்சி செய்கிறார்..

இதுவரை எந்த படத்திற்க்கும் போடப்படாத பிரிண்டுகள்,இதுவரை இந்திய அளவில் விற்பனை ஆகாத அளவு பாடல் சிடிக்களின் விற்பனை என கோடம்பாக்கம் மட்டுமல்லாது இந்திய திரை உலகையும் திகைக்க வைத்துக்கொண்டு இருக்கிறது எந்திரன்.ஏற்கனவே இந்திய அளவில் சூப்பர் ஸ்டாராக ரஜினி இருக்கும் போது கலாநிதி மாறன் இந்த படம் வருவதற்க்கு முன்பே இதன் புகழால் ரஜினி இந்தியாவின் சூப்பர்ஸ்டார் ஆகிவிட்டார் என்கிறார்.அதாவது ஷாருக்கான்,அமிதாப்பை ரஜினி முந்தி விட்டார் என்ற தொனியில் கூறினாரா என தெரியவில்லை.அது உண்மையாகும் காலம் எந்திரன் வரும் காலம் .அதன் பிரம்மிக்க வைக்கும் வெற்றி சொல்லும் காலம்.

எந்திரன் டிரைலரை விழா எடுத்து கொண்டாடி அதற்க்கு திரளான ரசிகர்கள் வந்திருந்து பார்ப்பதென்றால் அது ரஜினிக்கு மட்டுமே உள்ள மாஸை சொல்லும் ஆதாரம்.வேறு எந்த நடிகர் பட டிரைலரையும் வைத்து இப்படி கூட்டத்தையோ பணத்தையோ சம்பாதிக்க முடியாது.மேலும் இதுவே உலக அளவில் புது முயற்சி.புது சாதனை

நன்றி-வெப்புலகம்

23 ஆணிகளும் 1.8 மில்லியன் பெண்களும்

23 ஆணிகளும் 1.8 மில்லியன் பெண்களும்- வெறோனிக்கா
(பெண்ணியத்திற்காக மூலக் கட்டுரையை சிங்களத்தில் அனுப்பியவர்
வெறோனிக்கா - தமிழில் என்.சரவணன்.)


                  ந்த வாரம் இலங்கை மக்களை மட்டுமல்ல உலகில் பலரையும் உலுக்கிய செய்தியாக இலங்கையை சேர்ந்த ஆரியவதியின் கதை அமைந்திருக்கிறது.

இயேசுநாதர் சிலுவையில் ஆணி அறையப்பட்டு கொல்லப்பட்டதை நாம் அறிந்திருக்கிறோம். உயிருடன் உள்ள பெண்ணை அதுவும் மனிதவுலகம் நாகரிகமடைந்தாக கூறப்படும் இந்த காலத்தில் ஒரு பெண் சுத்தியால் ஆணிகள் அடிக்கப்பட்டு சித்திரவதைசெய்யப்பட்டுள்ளார்.

உடலில் எட்டு ஆணிகள் உள்ளே ஏற்றப்பட்ட நிலையில் சவுதியில் இருந்து திரும்பியிருக்கிறார் ஆரியவதி என்கிற பெண்.

தனது வாழ்நாளுக்குள் தனது 3 பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ சொந்தமாக ஒரு சிறு குடிசையை அமைத்துக்கொள்வதற்காக பிழைப்பு தேடி பணிப்பெண் வேலைக்காக சவுதி சென்றவர் ஆரியவதி (வயது 49).

இவர் இலங்கையின் தெற்குப் பகுதியில் உடதெனிய எனும் இடத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு தரகர் ஒருவர் இலவசமாக அனுப்புகிறார் என்று கேள்வியுற்று அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு பணியகத்தின் 15 நாள் பயிற்சியை மேற்கொண்டார். அதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி சவுதி புறப்பட்டார்.

சவுதியில் ரியாத் நகரத்தில் இறங்கியதும் அவரை இருவர் காரொன்றில் அன்பாக வேலைக்காக அழைத்துச் சென்றனர். அந்த வீட்டின் உரிமையாளர் அவரது மனைவி மற்றும் 5 பிள்ளைகளுக்கும் பணிவிடைகள் செய்வதும் வீட்டை சுத்தமாக பராமரிப்பதும் அவருக்கு வழங்கப்பட்ட பிரதான வேலைகள். இதனைத் தவிர உடுதுணி துவைத்தல், அவற்றை ஸ்திரிசெய்து மடித்து வைத்தல், வாகனங்களை கழுவுதல் போன்ற வேலைகளும் அவருக்கு ஒதுக்கப்பட்டன.

ஒரே வாரத்தில் அந்த வீட்டினர் தமது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினர். சிறு சிறு தற்செயல் பிழைகளுக்காக அவரை கட்டையைக் கொண்டு தாக்கியுள்ளனர்.

தற்செயலாக ஒரு கிளாஸ்’ கைதவறி விழுந்து உடைந்த சம்பவத்திலிருந்தே இந்த வன்முறைகள் தொடங்கின.

உரிமையாளரின் மனைவி (எஜமானி அம்மா) ஆரியவதியின் கைகளை இறுக்கிப் பிடித்திருக்க கணவர் சூடாக்கிய ஆணிகளை உடலில் சுத்தியலால் அடித்திருக்கிறார். அதே நாள் இரண்டரை இஞ்ச் உயர ஆணிகள் ஐந்து இவ்வாறு ஆரியவதியின் உடலில் ஏற்றப்பட்டுள்ளன.

அன்றைய தினம் ஆரியவதியின் ஓவென்ற அவலக்குரல் எவர் காதுகளிலும் விழவுமில்லை. அந்த வீட்டில் ஆரியவதியின் அன்புப் பணிவிடைகளை அதுவரை பெற்றுக்கொண்ட அந்த வீட்டின் பிள்ளைகள் கூட காப்பாற்ற முன்வரவில்லை.

தொடர்ந்து கத்தினால் கழுத்தை வெட்டி எறிவோம் என்று மிரட்டப்பட்டுள்ளார். தனது அன்புக்குரிய பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக ஆணிகள் ஏற்றப்பட்ட உடலுடன் தொடர்ந்தும் அங்கு பணிபுரிந்துள்ளார்.

ஆரியவதி தாய்மண்ணுக்கு திரும்பியதும் அவர் கண்களில் நீர்பெருக பகிர்ந்துகொண்ட விபரங்கள் அனைவரது நெஞ்சையும் உலுக்கச் செய்யும் கதைகள்.

“ஒரு தடவை கோப்பை நழுவி விழுந்தது. இன்று தொலைந்தேன்.. என்று பதறிக்கெணடிருக்கையில் வீட்டு எஜமானி அம்மா “உன் கண்கள் என்ன குருடா.. இரு... குருடாக்கி விடுகிறேன் என்று கூறிக்கொண்டு ஆணியை எடுத்து கண்களில் சொருகுவதற்காக கிட்ட கொண்டு வந்தார். என் கண்களை இறுக மூடிக்கொண்டு இருந்தேன். எவ்வளவோ கதறியும் அந்த ஆணிகளை எனது புருவ இமைகளின் மேல் பகுதியில் இறுக்கிச் சொருகினார்.... “ என்று இன்னமும் நீக்கப்படாத நிலையில் உள்ள அந்த ஆணி சொருகப்பட்ட இடத்தைக் காண்பித்தார் ஆரியவதி..

அவரது கால் பாதங்களுக்குள் இரு ஆணிகளை ஏற்றியுள்ளனர். இவ்வாறு சிறுசிறு பிழைகளுக்கெல்லாம் உடலின் ஏதாவது ஒருபகுதியில் ஆணியை செருகினார்கள். வெளியில் இழுக்கக்கூடிய ஆணிகளை இழுத்துவிட்டேன். அகற்ற கடினமானவற்றை அப்படியே விட்டுவிட்டேன். காய்ச்சல் ஏற்ப்பட்டபோது என்னை சிகிச்சையளிக்க அனுமதிக்கவில்லை. இலங்கைக்கு திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று மன்றாடியபோது, அவர்கள் கிடைத்ததைக் கொண்டு என்னைத் தாக்கினர்.

இறுதியில் எனது உடலில் ஆணிகள் உள்ள பகுதிகளில் இருந்து புண் முற்றி சீழ் வடிய ஆரம்பித்தது. இருக்கின்ற உடு துணிகளைக் கொண்டு சுத்தப்படுத்தி கட்டு போட்டுக்கொண்டே இருந்தேன். கடந்த மாதம் அவர்கள் என்னைப் பார்த்து அசிங்கப்பட்டனர். ஆணி உள்ள இடங்களில் வேதனை அதிகமாகிக் கொண்டிருந்தது. மீண்டும் சித்திரவதை செய்வார்கள் என்று பயந்து வேலைகளை செய்து வந்தேன்..." எனறார்.

இதற்கிடையில் தொடர்பு இல்லாத நிலையில் ஆரியவதியின் குடும்பத்தினர் பீதியடைந்த நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆரியவதியுடன் தொலைபேசி தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆரியவதியால் சுதந்திரமாக விபரமாக நிலைமைகளை எடுத்துரைக்க முடியவில்லை. “...எனக்கு இங்கு பிரச்சினை என்னை உடனடியாக இலங்கை திரும்ப ஏற்பாடு செய்யுங்கள்..” எனக்கூறி வைத்துவிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஆரியவதியின் கணவர் மீண்டும் இலங்கை வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து அவர் திருப்பி அழைக்கப்பட்டார். இது குறித்து ஆரியவதி தெரிவிக்கையில்

"..கடந்த 20ஆம் திகதி வீட்டு எஜமானி அம்மா ஒரு பையைக் கொண்டுவந்து தந்து ஒரு காரில் என்னை ஏற்றிக்கொண்டுவந்து விமான நிலையத்தில் ஏஜென்சியிடம் ஒப்படைத்தார். அந்த ஏஜென்சி, நாடு திரும்புவதற்கு டிக்கெட் செலவுக்காக 3 மாத சம்பளத்தை எடுத்துக்கொண்டு எஞ்சிய இரு மாத சம்பளத்தை என் கைகளில் வைத்தார். ஏன் நடப்பதற்கு கஸ்டப்படுகிறாய் என்று அவர் என்னிடம் கேடடார். காலில் வருத்தமுள்ளது என்று மட்டும் கூறினேன். இருந்த பண்த்தில் எனது கணவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நான் நாடு திரும்புவதை அறிவித்தேன். 21ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் என்னை அழைத்துச் செல்ல எனது கணவர் வந்திருந்தார்." என்றார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர் நடந்து வந்த விதத்தை வைத்து ஒரு துன்புறுத்தப்பட்ட நிலையில் திரும்புகிற ஒரு பெண் என்பதை யாரும் புரிந்து கொள்வர். அது குறித்து விமான நிலைய அதிகாரிகள் பலர் ஆரியவதியிடம் விசாரித்த போதும், தனக்கு காலில் நோ உள்ளதாக மட்டுமே கூறியுள்ளார். தனத பாதங்களில் ஆணிகள் ஏற்றப்பட்டுள்ளன என்கிற உண்மையை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளும் மனநிலையில் அவர் இருக்கவில்லை. ஒரு அதிகாரி 700 ரூபாவை வைத்தியச் செலவுக்காக பெற்றுக்கொடுத்துள்ளார்.

நான் நாடு திரும்பிய மகழ்ச்சி எனக்கு போதும். உடலில் உள்ள வலிகூட தெரியவில்லை. உண்மையை எங்காவது சொன்னால் என்னை பிடித்து வைத்துக்கொள்வார்களோ என்ற பயத்தில் நான் எங்கும் உண்மை கூறவில்லை..” என்று அப்பாவித்தனமாக பின்னர் அவர் ஊடகங்களுக்கு கூறினார். விமான நிலையங்களின் உலோகங்களைக் கண்டுபிடிக்கும் கருவிகள் எதுவுமே இவரது உடலின் ஆணிகளைக் கண்டு பிடிக்காதது பலருக்கும் வியப்பைத் தந்திருக்கிறது.

வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் கூட அவர் கணவருக்கோ பிள்ளைகளுக்கோ தான் பட்ட வேதனைகளை அவர் கூறவில்லை. சிறு ஊசியொன்று ஏறியிருப்பதால் தனக்கு கால் வலிப்பதாகக் கூறியியிருக்கிறார். அவரது 25 மகன் சமில் பிரியதர்சன தனது தாயை அழைத்துக்கொண்டு கும்புறுபிட்டி நகர வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதுதான் முதற்தடவையாக வைத்தியரிடம் உண்மைகளைக் கூறியிருக்கிறார்.



வைத்தியர் நிமல் ஜயசிங்க உடனடியாகவே அவருக்கு ஏற்பு ஊசி ஏற்றியிருக்கிறார். பின்னர் அவரது உடலை முழுவதும் எக்ஸ்ரே எடுத்து மேலதிக அறிக்கைகளை சிரேஸ்ட வைத்தியர் ஒருவர் சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கை அங்குள்ள எல்லோரையும் திடுக்கிடச் செய்துள்ளது. மொத்தம் 23 ஆணிகள் உடல் முழுவதும் ஆங்காங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இது போன்றதொரு சம்பவம் இதற்கு முதல் இடம்பெற்றதில்லை என ஆஸ்பத்திரிக்கு விஜயம் செய்த வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரி தெரிவித்தார். இது பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஆரியவதிக்கு நியாயம் கிடைக்கச் செய்ய அனைத்தையும் மேறகொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது குடிசையை சரிசெய்து குடும்பத்துடன் ஒன்றாக சந்தோசமாக வாழவென புறப்பட்டுச் சென்று 5 மாதங்களின் பின் தனது கிராமத்துக்குத் திரும்பியபோது ஆரியவதிக்கு எஞ்சியிருந்தது ஐந்து மாதங்களுக்கு முன்னர் இருந்த குடிசையும் கடும் மழையினால் உடைந்து உருக்குலைந்து இருந்தது. ஆணிகள் ஏற்றப்பட்ட போது கிடைத்த வலியை விட அது வேதனைமிக்கது என அவர் கண்ணீர்மல்க பலர் முன்னிலையில் தேம்பினார்.

27அன்று நடந்த ஒப்பரேசனில் 5 ஆணிகளை நீக்க முடியவில்லை.

ஆரியவதியின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய அந்த 23 ஆணிகளில் முக்கிய 18 ஆணிகளை இன்று (ஓகஸ்ட் 27) நீக்கப்பட்டுள்ளது. ஏழு சிரேஸ்ட வைத்தியர்கள் உள்ளிட்ட 15 பேரைக் கொண்ட குழு இரண்டரை மணித்தியாலங்களாக செய்த ஓப்பரேசனில் 13 இடங்களை வெட்டி ஆணிகளை நீக்கியுள்ளனர். எஞ்சிய 5இல் குண்டு ஊசிகளும் உண்டு என்றும் அவற்றை நீக்குவது ஆபத்து மிகுந்ததென்றும். அவற்றை நீக்கும் போது நரம்புகளுக்கு பாதிப்பை கொண்டுவரக்கூடும் என்றும். அதை விட அவற்றை நீக்காமல் விடுவது பாதுகாப்பானது எனது வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.


நீக்கப்பட்ட ஆணிகள்

கண் இமை நெற்றிக்கருகில் - 1 கம்பி
வலது கையில் - 5 ஆணிகள், 1 கம்பி
இடது கையில் - 3 ஆணிகள், 2 கம்பிகள்
வலது காலில் - 4 ஆணிகள்
இடது காலில் - 2 ஆணிகள்

ஆகக் கூடிய நீளமுள்ள ஆணி 6.6 சென்றிமீற்றர் கொண்டது என வைத்தியர்கள் அறிவித்தனர்.

குறிப்பு

மத்தியகிழக்கு நாடுகளுக்கு வேலைக்காக சென்றவர்களின் சராசரி 20 சடலங்கள் மாதாந்தம் இலங்கை கொண்டுவரப்படுகின்றன. இயற்கை மரணங்கள், ஏனைய விபத்துக்களினால் மரணித்தவர்கள் அதில் அடக்கம்.


வெளிநாடுகளில் நாடுகளில் 1.8 மில்லியன் இலங்கையர்கள் பணிபுரிகின்றனர்.

இவர்களில் 70 வீதத்தினர் பெண்களாவர்.

சவுதியில் மட்டும் 5.5 மில்லியன் வெளிநாட்டவர்கள் பணிபுரிகின்றனர்.

இதில் 4 லட்சம் பேர் இலங்கையர்கள்.

இலங்கையின் சனத்தொகையில் 10 வீதத்தினர் இவ்வாறு வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

மாதாந்தம் 18 ஆயிரம் பெண்கள் மத்தியகிழக்கிற்கு வேலைக்காக பயணிக்கின்றனர்.

இலங்கையின் மொத்த தேசிய வருமானத்தை ஈட்டித் தருவதில் வெளிநாட்டு பணிப்பெண்கள் முக்கிய இடத்தில் உள்ளனர்.

http://www.penniyam.com/2010/08/23-18.html

மனதோடு பேசிய சொர்ணலதா

ரே வாரத்துக்குள் இன்னொரு துயரப்பகிர்வைப் பதிவாகத் தரும் துரதிஷ்டத்தை நினைத்து மனம் வருந்திக் கொண்டே தொடர்கின்றேன். 

நம் பால்ய காலத்தின் ஞாபகங்களின் எச்சங்களாக, அந்தக் காலகட்டத்தை மீண்டும் எம் மனத்திரையில் ஓட்டிப்பார்க்கப் பண்ணும் சங்கதிகளில் அந்த நாட்களில் வந்த பாட்டுக்கள் பெரும் ஆக்கிரமிப்பை உண்டு பண்ணி விடும். அந்த வகையில் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தன் குரலினிமையால் வசீகரித்த ஸ்வர்ணலதா என்ற பாட்டுக் குயில் இன்று ஓய்ந்த செய்தியைக் கேட்டபோது ஒரு எல்.பி ரெக்கோர்ட் ஐ பாளம் பாளமாக உடைத்து நொருக்கும் நிலையில் என் மனம். அந்த இளமை துளிர் காலத்து நினைவுகளை வேரோடு பிடுங்கிச் சாய்த்தது போல.

சில வாரங்களுக்கு முன்னர் சிட்னியில், தமிழகத்துக் கலைஞர்களை வரவழைத்து இசை நிகழ்ச்சிகளை நடத்தும் நண்பர் ஒருவரிடம் பேசும் போது "யார் யாரையெல்லாம் அழைத்து வருகின்றீர்களே, பாடகி ஸ்வர்ணலதாவையும் ஒரு முறை சிட்னிக்கு அழைத்து வரலாமே" என்று கேட்டேன். "அவரை ஏற்கனவே அணுகியிருக்கின்றேன், ஆனால் அவருக்கு விமானத்தில் ஏறிப் பயணிக்க இயலாமையை ஏற்படுத்தும் ஒருவித பயவியாதி இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்" என்றார். 

"சரி அப்படியென்றால் ஸ்வர்ணலதாவின் தொலைபேசி எண்ணையாவது தாருங்கள், நான் ஒரு வானொலிப் பேட்டி எடுக்கின்றேன்" என்றேன். வானொலிப் பேட்டிக்கான தருணம் பார்த்திருக்கையில் அதை முற்றுப்புள்ளியாக்கியிருக்கின்றது ஸ்வர்ணலதாவின் அத்தியாயம்.

தமிழ்த்திரையிசையின் ஜாம்பவான்களான மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய மூவரின் ஆசியைப் பெற்ற விரல்விட்டு எண்ணக் கூடிய பாடகர்களில் ஸ்வர்ணலதாவும் ஒருவர். "நீதிக்குத் தண்டனை" திரைப்படத்தின் மூலம் மகாகவி பாரதியாரின் "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா" பாடல் தான் ஸ்வர்ணலதாவின் திரையிசை வாழ்வின் முதற் பாட்டு. பாரதியாரைப் போலவே தன் வாழ்க்கைக் கணக்கை முழுமையாக முடிக்காமல் போய்ச் சேர்ந்து விட்டார். 

இசைஞானி இளையராஜாவுக்கு எண்பதுகளின் முதல் வரிசைப் பாடகிகளான எஸ்.ஜானகி, சித்ராவுக்கு மாற்றீடாக ஒரு பாடகி தேவைப்பட்டபோது கச்சிதமாகப் பொருந்திப் போனவர் சுவர்ணலதா. 

"குரு சிஷ்யன்" படத்தில் வரும் "உத்தமபுத்திரி நானு" என்ற பாடல் தான் ராஜாவின் பட்டறையில் ஸ்வர்ணலதாவுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு. சுனந்தா, மின்மினி ஆகியோர் அளவுக்கு ஒரு தேக்கம் இல்லாது கடகடவென்று உயரே உயரே பறந்து உச்சத்தை தொட்டார் ராஜாவின் மந்திர மெட்டுக்களோடு. 

நடிகை குஷ்பு பரபரப்பான ஒரு பிரபலமாக மாறிய போது கச்சிதமாகப் பொருந்திப் போனது சுவர்ணலதாவின் குரல். குறிப்பாக சின்னத்தம்பி, இது நம்ம பூமி, பாண்டித்துரை ஆகியவை சாட்சியம் பறையும். என் ராசாவின் மனசிலே படத்தில் "குயில் பாட்டு ஹோ வந்ததென்ன இளமானே" பாட்டில் தன்னுடைய அத்தனை உணர்ச்சிகளையும் கொட்டிக் குவித்துப் படத்தின் பெருவெற்றியிலும் பங்காளி ஆனார். 

அந்தக் காலகட்டத்தின் நான் சென்னை வானொலியை நேசித்த போது லல்லு, சத்யா , ரேவதி என்ற முகம் தெரியாத சென்னைவாசிகள் ஞாயிற்றுக்கிழமை நேயர் விருப்பில் தொடர்ந்து கேட்ட அந்தப் பாட்டு என் விருப்பமாகவும் பெயர் சொல்லாது இடம்பிடித்தது. "மாலையில் யாரோ மனதோடு பேச" பாடலில் இவர் கொடுத்த உருக்கத்தை யாரை வைத்துப் பொருத்திப் பார்க்க முடியும்? அந்தக் காதல் அரும்பிய காலகட்டத்தில் நேசித்தவளின் குரலாகப் பிரதியெடுத்தது இந்தச் ஸ்வர்ணலதாவின் ஸ்வரம்.

"மாசிமாசம் ஆளான பொண்ணு" தர்மதுரை படப்பாட்டில் அடக்கி வாசித்த இவர் "ஆட்டமா தேரோட்டமா" என்று கேப்டன் பிரபாகரனில் ஆர்ப்பரித்த போதும் தயங்காமல் ஏற்றுக் கொண்டது மனசு. "என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி" பாட்டின் ஆரம்ப அடிகளில் இவர் செய்யும் ஆலாபனை இருதயத்தை ஊடுருவி காதல் மின்சாரம் பாய்ச்சும்.

"என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்" என்ற அந்த மந்திரப்பாட்டுக் காதுகளை ஊடுருவும் போது மயிர்க்கூச்செறியும் நிகழ்வு ஒவ்வொரு முறையும்.

1990 ஆம் ஆண்டில் இருந்து 1995 வரையான காலகட்டத்தில் இசைஞானி இளையராஜா இவரை மனதில் வைத்தோ என்னவோ அள்ளி அள்ளிக் கொடுத்த அத்தனை மெட்டுக்களும் அந்தந்தப் படங்களின் நாயகிகளுக்குப் பொருந்தியதோடு நம் மனசிலும் அழியாத கோலங்கள் ஆகி இது நாள் வரை தொடர்கின்றன.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் புதுக்குரல் தேடிடும் பயணத்தில் விட்டுவிலக்காத குயில்கள் வரிசையில் ஸ்வர்ணலதாவுக்கு மிகச்சிறந்த பாடல்களைக் கொடுத்ததோடு தேசிய விரு(ந்)தாக "கருத்தம்மா" படப்பாடலான "போறாளே பொன்னுத்தாயி" பாடலைக் கொடுத்த பெருமை இவருக்குக் கிடைத்த அங்கீகாரங்களில் மகுடம். அந்தப் பாடலில் ஆர்ப்பரிப்பில்லாத மெலிதான இசையைக் கடந்து ஆக்கிரமிப்புச் செய்வது ஸ்வர்ணலதாவின் அந்த சோக நாதம். "அலைபாயுதே" படத்து "எவனோ ஒருவன் யாசிக்கிறான்" பாட்டு அதே அலைவரிசையில் பொருத்திப் பார்க்க வேண்டிய இன்னொரு வைரம். "காதல் எனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்" பாட்டில் ஸ்வர்ணலதாவுக்கு ஜோடி கட்டி அவரை இன்னொரு வடிவிலும் தன் இசையால் நிரப்பியவர் ரஹ்மான்.

ஸ்வர்ணலதாவின் முதற்பாட்டு "சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா" - நீதிக்குத் தண்டனை சமீபகாலமாக நான் அடிக்கடி ஐபொட் இல் கேட்டுக் கிறங்கும் பாடல் "நன்றி சொல்லவே உனக்கு என் மனவா வார்த்தையில்லையே" பாடல்.
 
சொந்தம் எதுவும் இல்லாத தனியன் ஒருவன், சமுதாயத்தில் ராசியில்லாது கல்யாணச் சந்தையில் விலைபோகாதவளைக் கரம்பிடிக்கின்றான். இந்த இரு உள்ளங்களும் இது நாள் வரை தம் வாழ்வின் சோகப் பக்கங்களைப் பகிர்ந்து மாறி மாறித் தம்மிடையே இருவரும் நன்றி பகிர்கின்றார்கள் இந்த புது வசந்தத்திற்காக. பாடலின் அடி நாதத்தை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் , ஸ்வர்ணலதாவும் அள்ளிக் கொட்டிய அந்தப் பாடல் மீண்டும் நினைவில் எட்டிப் பார்த்துச் சோக ராகம் பிரிக்கின்து.

"திசையறியாது நானே இங்கு தினசரி வாடினேனே
இந்த பறவையின் வேடந்தாங்கல்
உந்தன் மனமென்னும் வீதி தானே"
-கானாபிரபா

தங்கத்தில் இத்தனை வழிகளா!!!

ழக்க தோஷம் என்ற ஒன்று உண்டு. தங்கத்தை நகையாக வாங்கிப் பழக்கப்பட்டவர்கள் நகையாகத்தான் வாங்கிக்கொண்டிருப்பார்களே தவிர, வேறு எந்த வழிகளில் அந்த உலோகத்தில் முதலீடு செய்யலாம் என்று யோசிப்பதே இல்லை. அதே போலத்தான் தங்கத்தை நாணயமாக வாங்குபவர்கள் தொடர்ந்து நாணயமாகவே வாங்கிக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு மாற்றத்துக்காகவாவது வேறு எந்தெந்த வகையிலெல்லாம் தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்பதை அறிந்துகொள்வதற்கும், அதில் முயற்சி செய்து பார்ப்பதற்கும் சில வழிமுறைகள்...

தங்கக் காசுகள்!
தங்கக் காசுகள் என்பது ஆதிகாலம் முதலே புழக்கத்தில் இருந்தாலும்,      கடந்த சில ஆண்டுகளாகத்தான் முதலீட்டு வழிகளில் ஒன்றாக பிரபலமாகி  வருகிறது.
தங்கக் காசுகளை விற்கும் நகைக் கடைகள் அல்லது வங்கிகள் அதைத்   திரும்ப வாங்கிக் கொள்வதில்லை!
அவசரத்துக்கு விற்றுப் பணமாக்க முடியாது.
வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்க முடியாது.
தங்கக் கட்டிகள்!
முன்பெல்லாம் ஒரு கிலோ, அல்லது அதற்கு  மேற்பட்ட அளவிலேயே பார் இருக்கும். பெரும் பணம் படைத்தவர்களால்         மட்டுமே வாங்க முடியும்.
இப்போது 5 கிராம் தொடங்கி 400 கிராம் வரை பலவிதமான      எடைகளில் தங்கக் கட்டிகள் கிடைக்கின்றன. இது பெரும்பாலும்             சுத்தத் தங்கமாக (99.5%) இருக்கும்.

கோல்டு இ.டி.எஃப்!
காகிதத் தங்கம் என்று அழைக்கப்படும் எக்ஸ்சேஞ்ச் டிரேடட்         ஃபண்ட் மூலம் தங்கத்தை யூனிட்களாக வாங்கிச் சேமிக்கலாம்.
தங்கத்தை நகையாக வாங்கும் போது           கழிக்கப் படும் சேதாரம், செய்கூலி பிரச்னை இதில் இல்லை.
பீரோவில் பொத்திப் பொத்தி பாதுகாக்க வேண்டும் என்கிற        அவசியமும் இல்லை.
ஒரு யூனிட் என்பது ஏறக்குறைய ஒரு கிராம் தங்கத்தைக் குறிக்கும்.    தங்கத்தின் விலை மாற்றத்தைப் பொறுத்து இதன் என்.ஏ.வி. மாறும்.         செலவு குறைவு. ஆனால், இதில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு தேவை.
கோல்டு பீஸ், கோல்டு ஷேர், கோட்டக் கோல்டு, ரிலையன்ஸ் கோல்டு, குவாண்டம் கோல்டு, ரெலிகேர் கோல்டு, எஸ்.பி.ஐ. கோல்டு, ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் கோல்டு என பல நிறுவனங்கள் கோல்டு இ.டி.எஃப். திட்டங்களை நடத்தி வருகின்றன.
கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகள்
குறைவான ரிஸ்க் உள்ள வழிகளில் ஒன்று தங்க மியூச்சுவல் ஃபண்ட் திட்டம். இது ஃபண்ட் ஆப் ஃபண்ட் வகையைச் சேர்ந்தது.
இந்தியாவில் இரண்டு ஃபண்ட் கம்பெனிகள் தங்க மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நடத்தி வருகின்றன.
ஏ.ஐ.ஜி. வேல்டு கோல்டு ஃபண்ட், டி.எஸ்.பி. பிளாக் ராக் வேல்டு கோல்டு ஃபண்ட் போன்றவை உலக அளவில் தங்கச் சுரங்கப் பணியில் ஈடுபட்டுவரும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யக்கூடிவை.

கோல்டு ஃப்யூச்சர்ஸ்
காமாடிட்டி சந்தையில் தங்கத்தை வாங்கலாம். இதில் அதிகம் ரிஸ்க் உண்டு. போட்ட பணம் முழுவதும் நஷ்டம் அடையவும் வாய்ப்புண்டு. அதே நேரத்தில் பல மடங்கு வரை லாபம் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
கமாடிட்டி ஃப்யூச்சர்ஸ் சந்தை பற்றி நன்கு விவரம் தெரிந்தவர்களுக்கு ஏற்றது இது.
தங்கத்தில் முதலீடு செய்வதற்கான அனைத்து வாய்ப்புகளையும் சொல்லி விட்டோம். இனி களத்தில் இறங்க வேண்டியது நீங்கள்தான்!
தங்கத் துளிகள்...
ங்கத்துக்கான தேவையில் முதல் இரண்டு இடங்களை இந்தியா, சீனா ஆகிய நாடுகளே முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் 164 டன் தங்கத்துக்கான தேவை இருக்கிறது. விலை அதிகரிப்பின் காரணமாக இரண்டாவது காலாண்டில் ஆபரணத் தங்கத்தின் தேவை 123 டன்னாக (2%) குறைந்துள்ளது.
உலகளவில் கோல்டு இ.டி.எஃப். மூலம் 291.3 மெட்ரிக் டன் தங்கம் வாங்கப்பட்டுள்ளது.
தற்போது எலெக்ட்ரானிக் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. எலெக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் தங்கம் பயன்படுத்தப்படுவதால் தங்கத்தின் தேவையும் (107.2 டன்) அதிகரித்துள்ளது.


- பானுமதி அருணாசலம்
நன்றி - விகடன் குழுமம்