திருக்குறள்

ஒரு சென்டிமென்ட் ..

பாகவதர் காலம் தொடங்கி 'பசங்க' காலம் வரை தமிழ் சினிமா ஒரு சென்டிமென்ட் கடல்தான்! சில துளி இங்கே...

அம்மா - தங்கச்சி:

'நாடோடி மன்னன்' எம்.ஜி.ஆர். தொடங்கி 'நந்தா' சூர்யா வரை அம்மா என்றாலே சென்டிமென்ட்தான். முன்பு ஆறு பாடல்களில் ஒன்றை அம்மாவின் பெருமையைப் பாட ஒதுக்கிவிடுவார்கள். அம்மாவுக்கு அடுத்த இடம் தங்கச்சிக்கு. ''தங்கச்சீ...'' என்று டெரராகக் கூவி சென்டிமென்ட்டை டெரரிஸமாக மாற்றியதில் டி.ஆருக்குப் பெரும் பங்கு உண்டு. கிளைமாக்ஸில்அம்மாவையும் தங்கச்சியையும் உயரமான கட்டடத்தின் உச்சியிலோ, ரயில்வே தண்டவாளத்திலோ கட்டிப்போட்டு வில்லன் மிரட்டுவார். ஹீரோ வந்து இருவரையும் காப்பாற்றி, காதலியைக் கைப்பற்றி கேமராவைப் பார்த்துச் சிரிப்பார்!

தாலி:

கொஞ்சநாள் முன்பு வரை தாலிதான் சினிமா ஹிட்டாக வழி என்று இருந்தது. தாய்லாந்தில் கணவன் தடுக்கி விழுந்தால் இங்கே மனைவி கழுத்தில் தாலி அறுந்துவிழும். மனநோயாளியை விட்டு விதவைக்குத் தாலிகட்ட வைத்தார்கள். மொள்ளமாரி புருஷனாக இருந்தாலும் தாலியைக் கண்ணில் ஒற்றிக்கொள்ள வைத்தார்கள். ஹீரோயின் தாலியை வில்லனைவிட்டு அறுத்து எறியவைத்தார்கள். 'பிடித்த பெண்ணை அடைய வேண்டுமா?'... 'கட்றா தாலியை' என்று மஞ்சள் கயிற்றைச் சுழற்றினார் கள். 'கள் குடித்தாலும் கணவன்' என்று தாலியைக் கழற்றாமல் மனைவிகளைத் தவிக்கவிட் டார்கள். இப்போதுதான் 'தாலி'க்கு வந்து இருக்கிறது லைட்டாக வேலி!

காதல்:
'
காதல் இல்லாமல் சினிமா எடுக்க வேண்டும்' என்று சட்டம் கொண்டுவந்தால் எல்லோ ரும் படம் பார்க்க பக்கத்து மாநிலத்துக்குத்தான் போக வேண்டும். காதலிக்காகக் கடலில் மூழ்கி சங்கு எடுப்பது தொடங்கி, தனக்குத்தானே சங்கு ஊதிக்கொள்வது வரை காதலுக்காக தமிழ் சினிமா காதலன் இழந்தது ஏராளம். தங்கள் காதலைச் சொல்லாமலே மறைத்து தியாகம் செய்வது ஒரு சீஸன். பிறகு சொல்லாமலே காதல்,பார்க் காமலே காதல், பல் விளக்காமலே காதல், போன் காதல், போண்டா காதல் என்று எக்கச்சக்கமான காதல்கள் கோடம்பாக்கத்தை ஆட்டிப்படைத்தன!

மதுரை:

பொள்ளாச்சி, கோபிசெட்டிப்பாளையம் என்று திரிந்த சினிமா வேன்களை மதுரைப் பக்கம் திருப்பியது 'காதல்' படம். அந்தப் படம் ஹிட்டானதும் தமிழ் சினிமாக்காரர்களுக்கு மதுரை மீது பாசம் பொங்கியது. 'ஏய்ய்ய், நாங்கள்லாம் யார்னு தெரியும்ம்ம்ல' என்று சிலுப்பிக்கொண்டு ஆரப்பாளையம், தேவர்சிலை, சிம்மக்கல், அரசரடி என்று மதுரையை டம்மி ரத்தத்தால் தோய்த்து எடுக்கும் சினிமாக்காரர்களை யாராவது ஊர் கடத்தினால் நல்லது. உங்களுக்காகவே இளைய தளபதி பாடினதைக் கேளுங்க பாஸ்... 'மதுரைக்குப் போகாதடி...'

யதார்த்தம்:

'பருத்திவீரன்' ஆரம்பித்துவைத்த யதார்த்தக் காய்ச்சல். இரண்டு வாரம் குளிக்காமல்,மேக் கப் தொடாமல் வெயிலில் கறுக்கத் தொடங்கினார்கள்.
''ஹீரோன்னா அழகா இருக்கணும்னு எவன்டா சொன்னான்?'' என கமல்ஹாசன் கலர் உள்ளவர்களை எல்லாம் கருவாயன் ஆக்கினார்கள். யதார்த்த சினிமா தப்பில்லை. ஆனால், நான்கைந்து பையன்கள் ஒரு குரூப்பாக அலைவது, நாலு பேரில் ஒருவன் தாடியோடு இருப்பது, கீச்கீச் என்று கத்தும் அம்மாக்கள், கூடவே ஒரு திருவிழாப் பாட்டு என இவர்கள் யதார்த்த சினிமா என்ற பெயரில் பண்ணும் ஒரே டைப் பதார்த்தம் திகட்ட ஆரம்பித்துவிட்டது!

ஊர்ப் பெயர்:

'ஊரரசு' என்கிற பேரரசு 'திருப்பாச்சி' என்று படம் எடுத்து ஓடினாலும் ஓடியது, மனுஷன் ஒரு ஊரை விடவில்லை. சிவகாசி, திருவண்ணாமலை, பழநி என்று தமிழ்நாட்டு மேப்பைத் தாளிக்க ஆரம்பித்துவிட்டார். இடையில், ஆந்திரத் திருப்பதியை டைட்டில்ஆக் கியது எல்லை தாண்டிய பயங்கரவாதம்.

கருத்து கந்தசாமி:

ஷங்கர்தான் இதைத் தொடங்கிவைத்த 'பெருமைக்கு உரியவர்'. 'நல்லதுக்காகக் கெட்டது செய்யும்' ஷங்கரின் ஹீரோக்கள் கடைசியில் போனால் போகிறது என்று போலீஸிடம் மாட்டுவார்கள். உடனே, மக்களின் வாய்க்குள் மைக் திணிக்கப்படும். 'அவர் செஞ்சதுல என்ன சார் தப்பு? நாங்க நினைச்சதைத்தான் அவர் செஞ்சாரு', 'அவரை மாதிரி நூறு பேர் வரணுங்க. அப்பதான் இந்த அரசியல்வாதிங்க திருந்துவாங்க', 'எங்களுக்கு மட்டும் அதிகாரம் இருந்தா அவரை உகாண்டாவுக்கு உள்துறை அமைச்சர் ஆக்குவோம்', 'சட்டம் இதுக்கு இடம் கொடுக்குமா?', 'மக்களுக்காகத்தான சட்டம், சட்டத்தைத் திருத்துங்க, சட்டைப் பட்டனைப் போடுங்க' என்று 'மக்கள் கருத்து' திரையில் ஓங்கி ஒலிக்கும். 50 ரூபாய் டிக்கெட்டை 150 ரூபாய்க்கு பிளாக்கில் வாங்கிய மக்கள், நிஜத்தில் கருத்து சொல்ல எந்த மைக்கும் கிடைக்காது!

- ஆனந்தவிகடன்

தொழில் நுட்ப நிறுவனங்களின் பெயர் வந்த காரணம்..

தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங்கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார்த்திருப்போமா! இதோ இப்போது பார்ப்போமா!


அடோப் (ADOBE)


இந்த பெயர் ஒரு நதியின் பெயர். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களின் ஒருவரான ஜான் வார்நாக் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார். இவரின் வீட்டிற்குப் பின்புறம் இந்த அடோப் நதி ஓடுகிறது.

ஆப்பிள் (APPLE)

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் இலச்சினை வாசகம் என்ன தெரியுமா! – "Bite into an Apple"என்பதுதான். இதுதான் இந்நிறுவனத்தின் ஸ்லோகன் ஆக இருந்தது. ஆனால் இந்நிறுவனத்தின் மிகப் புகழ் பெற்ற ஸ்லோகன் "Think Different" என்பதே. எனவே இரண்டையும் கலந்து, வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் நிறுவனத்தை ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என வைத்திருக்க வேண்டும். ஜாப்ஸ் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஆப்பிள்களை உற்பத்தி செய்திடும் பண்ணையில் முதலில் வேலை பார்த்து வந்தாராம். அவர் நண்பர்களுடன் தன் புதிய கம்ப்யூட்டர் கம்பெனிக்குச் சரியான பெயரை அவரின் நண்பர்கள் தரவில்லை என்றால் கம்பெனிக்கு ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்று பெயர் வைத்து விடுவேன் என்று செல்லமாகவும் வேடிக்கைக்காகவும் மிரட்டி உள்ளார். ஆனால் அவரின் நண்பர்களால் வேறு எந்த மிக நல்ல பெயரையும் கொடுக்காத நிலையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்பதே பெயரானது. அதுவே சரித்திரத்திலும் நிலைத்துவிட்டது என்பது நாம் அறிந்த வரலாறு.

கூகுள் (GOOGLE)


சர்ச் இஞ்சின் கொண்ட நிறுவனத்தை நிறுவிய போது, இதில் தேடப்படும் தகவல்களின் எண்ணிக்கை 1 போட்டு அதன் பின் 100 சைபர்கள் கொண்ட எண்ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் "Googol" என்ற சொல்லை முதலில் வைத்தனர். இந்த சொல் நம் ஊர் லட்சம், கோடி என்பது போல, மேலே சொன்ன எண்ணைக் குறிக்குமாம். ஆனால் இந்த சொல்லை எழுதுகையில் அதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட நமக்கு "Google" என்ற பெயர் கிடைத்தது. அது கூட இந்நிறுவனத்தை ஏற்படுத்தியவர்களால் ஏற்படுத்தப்பட வில்லை. ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்த செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரால் தான் கூகுள் தொடங்கப்பட்டது. இவர்கள் இதனைத் தொடங்குவதற்கான ப்ராஜக்ட் ரிப்போர்ட்டினைத் தயாரித்து, ஒரு முதலீட்டாளரிடம் கொடுத்து நிதி உதவி கேட்டுள்ளனர். அவர் நிதி உதவி வழங்குகையில் தந்த செக்கில் "Google"" எனத் தவறாக எழுதப்போய், தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டாம் என இருவரும் நினைத்து அந்த தவறான ஸ்பெல்லிங்குடனே நிறுவனத்தைத் தொடங்கி இன்று மனித இனத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றிவிட்டனர்.

ஹாட் மெயில் (HOTMAIL)


இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் ஜாக் ஸ்மித். இணையம் வழியாக இமெயில்களைப் பெறும் வழி குறித்து முதலில் யோசித்துள்ளார். அதாவது இணைய இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் துணையின்றி, அவர்கள் சர்வரில் இடம் கேட்டு வாங்கி, இமெயில் பெறும் பழக்கத்தை மாற்றி வெப் சர்வரை அடைந்து மெயிலைப் பெறும் வழி குறித்துப் பல காலம் சிந்தித்து ஹாட்மெயிலை வடிவமைத்தார். ஹாட் மெயிலின் இன்னொரு நிறுவனரான, இந்தியரான, சபீர் பாட்டியா இதற்குப் பல பெயர்களை எழுதிப் பார்த்தார். எந்த பெயராக இருந்தாலும் அது மெயில் (MAIL) என முடிய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். இறுதியாக HOTMAIL என்ற பெயரே போதும் என முடிவுக்கு வந்தார். ஏனென்றால் இணையத்தில் வெப் பக்கங்களில் பயன்படுத்தப்படும் புரோகிராமிங் மொழியினை HTML Hyper Text Markup Language என அழைக்கிறோம். HOTMAIL என்பதில் HTML இருப்பதால் அதுவே இருக்கட்டும் என முடிவு செய்து ஹாட் மெயில் என அழைத்தார். 1996 ஜூலை 4ல் இது அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் இது HoTMaiL என சின்ன எழுத்தும் குறிப்பிட்ட சில பெரிய எழுத்துமாக அமைக்கப்பட்டே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின் நாளில் இது வழக்கமாக எழுதும் முறையில் அமைக்கப்பட்டது.

இன்டெல் (INTEL)

இந்த நிறுவனத்தை நிறுவியவர்கள் பாப் நாய்ஸ் மற்றும் கார்டன் மூர் (Bob Noyce and Gordon Moore) என்பவர்களாவர். அவர்கள் தங்களின் புதிய நிறுவனத்தை "Moore Noyce" என அழைக்க முதலில் முடிவு செய்தனர். ஆனால் பின்னர் பார்க்கையில் இந்த பெயர் ஹோட்டல்கள் பல அடங்கிய ஒரு குரூப்பிற்கு இருப்பது தெரியவந்தது. அந்த பெயர் அந்த நிறுவனத்தால் பதியப்பட்டது தெரியவந்ததால் வேறு பெயரைச் சிந்திக்கத் தொடங்கினார்கள். அப்போது to ‘more noise’ என இருக்கட்டுமே என்று யோசித்தனர். ஆனால் ஒரு செமி கண்டக்டர் நிறுவனத்திற்கு இந்தப் பெயர் தவறான பொருளைத் தரும் என தவிர்த்துவிட்டனர். பின் முதல் ஓராண்டிற்கு NM Electronics என்ற பெயரைப் பயன்படுத்தினர். அதன் பின் INTegrated Electronics என்ற பெயரைச் சுருக்கி NTEL எனப் பெயர் வைத்தனர். அப்படியே அந்தப் பெயர் இன்றளவும் உலகில் புகழ் பெற்ற ஒரு பெயராக இருந்து வருகிறது.

மைக்ரோசாப்ட் (MICROSOFT)

பில் கேட்ஸின் இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் எனப் பெயர் பெற்ற நிகழ்ச்சி மிகச் சாதாரணமான ஒன்றாகும். Microcomputer மற்றும் Software என்ற இரண்டையும் இணைத்து இந்த பெயர் உருவாக்கப்பட்டது. முதலில் பில் கேட்ஸ் தன் சகா பால் ஆலன் என்பவருக்கு 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ல் எழுதிய கடிதத்தில் MicroSoft எனப் பிரித்து இடைக் கோடிட்டு எழுதினாராம். அதன் பின் இருவரும் சேர்ந்து தங்கள் நிறுவனத்திற்கு இன்றைய பெயரை 1976 நவம்பர் 26ல் பதிவு செய்திருக்கின்றனர். இடையே இருந்த இடைக்கோடு காலப்போக்கில் நீக்கப்பட்டு MICROSOFT என ஒரே பெயராகப் பின்னர் உருவானது. அதுவே உலக மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நிறுவனத்தின் பெயராக அமைந்தது.

யாஹூ (YAHOO)

தொடக் கத்தில் இந்த நிறுவனத்தின் பெயர் "Jerry and David’s Guide to the World Wide Web" என்பதாக இருந்தது. 1994ல் யாஹூ என்ற பெயருக்கு மாறியது. ஜொனதன் ஸ்விப்ட் என்பவர் எழுதிய கல்லிவரின் பயணங்கள் என்ற நாவலில் "Yet Another Hierarchical Officious Oracle" என்ற சொல் தொடரின் சுருக்கமாக YAHOO என்பதைப் பயன்படுத்தினார். இந்த பெயர் மிக முரட்டுத்தனமான, நாகரிகம் மற்றும் பண்பாடு தெரியாத இளைஞனைக் குறிக்கும். யாஹூ நிறுவனத்தைத் தொடங்கிய ஜெர்ரியங் மற்றும்டேவிட் பைலோ ஆகிய இருவரும் தாங்கள் அப்படிப்பட்ட இளைஞர்கள் என்று தங்களைத் தாங்களே வேடிக்கையாகக் குறிப்பிட்டுக் கொண்டு இந்த பெயரையே தங்கள் நிறுவனத்திற்கும் தேர்ந்தெடுத்தனர்.

- தேன் தமிழ்

கூத்தாடிகளுக்கு சில கேள்விகள் - ஜெ.பிஸ்மி

கட்டுரைக்கு செல்லும் முன் : சினிமா நிருபர் திரு.ஜெ. பிஸ்மி அவர்கள் எழுதியது

திரைப்படங்களில் நடிகர், நடிகைகள் பக்கம் பக்கமாகப் பேசுகிற வசனங்கள் அவர்களின் அறிவிலிருந்து உதிப்பவை அல்ல. எழுதிக்கொடுக்கும் வசனங்களை மனப்பாடம் செய்து கேமிராவுக்கு முன் ஒப்பிக்கும் கிளிப்பிள்ளைகளே இவர்கள்.

இதுகாறும், இரவல் வசனங்களையே பேசிப்பழக்கப்பட்டவர்கள், சில நடிகைகளைப் பற்றி ஒரு நாளிதழ் அவதூறு செய்தி வெளியிட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கும்வகையில் கூட்டப்பட்ட கூட்டமொன்றில் சொந்த வசனத்தைப் பேசியிருக்கிறார்கள்.

அவதூறு செய்த நாளிதழைக் கண்டிக்கிற பெயரில் கூடிய கூத்தாடிகள்கூட்டம் ஒட்டுமொத்தப் பத்திரிகையாளர்களையும், அவர்களின் குடும்பத்துப்பெண்கள் மீதும் வார்த்தைமலத்தை வாரியிறைத்திருக்கிறது. தங்களின் வளர்ச்சிக்கும், புகழுக்கும் முக்கியக் காரணமாக விளங்கும் பத்திரிகையாளர்கள் மீது இந்தக் கூத்தாடிகள் வாசித்த குற்றப்பத்திரிகையில் ஒருவேளை நியாயம் இருக்கலாம், ஆனால் நன்றியுணர்ச்சியோ, நாகரிகமோ, கண்ணியமோ எள் அளவுமில்லை. மாறாக, வரம்பு மீறிய வார்த்தைகளைப் பயன்படுத்தியதன் மூலம், இதுநாள்வரை அரிதாரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அவர்களின் அசிங்கமான, அருவறுப்பான, ஆபாசமுகம் வெளிப்பட்டிருக்கிறது.

பத்திரிகையாளர்கள் மீது இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?
திரைப்படவிழாக்களில் கலந்து கொள்ளும் நடிகைகளை, அவர்கள் அமர்ந்திருக்கும் நாற்காலிக்குக் கீழே உட்கார்ந்து புகைப்படம் எடுக்கிறார்கள் என்பதும் அங்கே வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்று.

இப்படியொரு கருத்தை முன்வைக்கிற நடிகர் சூர்யா, பொது விழாக்களில் ஆபாச உடையணிந்து வந்ததாக சில நடிகைகள் மீது வழக்குகள் பாய்ந்ததை எல்லாம் வசதியாக மறந்துவிட்டு பேசியிருக்கிறார். படுக்கையறையில் அணியும் உடைக்கும், பல பேர் கூடும் பொதுஇடத்திற்கு வரும்போது அணிய வேண்டிய உடைக்கும் வித்தியாசம் உண்டு.

இந்த அடிப்படைகூட தெரியாமல், திரைப்படங்களில் அணிந்தாலே ஆபாசம் என்று தணிக்கைக்குழு ஆட்சேபிக்கக்கூடிய படு ஆபாசமான உடைகளை கொஞ்சமும் கூச்சமில்லாமல் பொதுவிழாக்களுக்கு அணிந்து வரும் எத்தனையோ நடிகைகள் இருப்பதை எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. இதைத் தற்செயலாகவோ, தவறென்று தெரியாமலோ
செய்வதில்லை - அவர்கள்.

அங்க, அவயங்கள் தெரிவதுபோல் உடை அணிந்து வருவதென்பது, திரைப்படத்துறையினரின், குறிப்பாக - கதாநாயக நடிகர்களின் கவனஈர்ப்பைப்பெற விழையும் முயற்சியே அது. அதன் மூலம் பட வாய்ப்பைப்பெற முடியும் என்று நம்புகிற நடிகைகளுக்கு உடனடிப்பலன் கிடைத்து வருவதும் நாம் அறியாததல்ல! ஆபாச உடையணிந்து வரும் நடிகைகள் தங்களை மீடியாக்கள் புகைப்படம் எடுக்க வேண்டும், அவை பத்திரிகைகளில் வெளியாக வேண்டும் என்று விரும்பித்தான் கர்ச்சீப்பைக் கூட கட்டிக்கொண்டு வரத் தயாராக இருக்கிறார்கள்.

எந்தவொரு புகைப்படக்கலைஞனும், (சூர்யா சொன்னதுபோல்) நாற்காலிக்குக் கீழே உட்கார்ந்து எடுத்த நடிகைகளின் புகைப்படங்களை தன் வீட்டில் மாட்டி வைத்துக்கொள்வதில்லை என்பதை இப்படியொரு குற்றச்சாட்டைக் கூறி கொதித்தெழுந்தவர் புரிந்து கொள்ள வேண்டும்.

''இந்த ஈனப்பயலுக....'' இதுவும் அவரே உதிர்த்த பொன்மொழிதான். அது மட்டுமல்ல, ''இவனுங்களை நசுக்கிடணும்..'' என்றும் ஆவேசப்பட்டிருக்கிறார் சூர்யா. இதெல்லாம் சக நடிகைகள் மீது அவதூறு செய்தி வெளியிட்ட கோபத்தில் சம்மந்தப்பட்ட பத்திரிகை மீது மட்டும் இவர் கக்கிய அனல் என்று அறிவுள்ள எவரும் நம்பமாட்டார்கள்.

ஆங்கில வழிக்கல்வி கற்ற அவர் வேண்டுமானால், ஒருமைக்கும், பன்மைக்கும் வித்தியாசம் தெரியாதவராக இருக்கலாம், மற்றவர்களும் தன்னைப்போலவே அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது அறிவான செயல் அல்ல! கம்பராமாயணத்தைக் கரைத்துக்குடித்த அவரது தந்தை சிவகுமாரிடம் தமிழ் கற்றுக் கொண்டு இனி மேடையில் முழங்க வேண்டும் என்பதே சூர்யாவுக்கு நாம் வைக்கும் வேண்டுகோள்!

அது மட்டுமல்ல, தான் பேசிய பேச்சு நியாயமானது, அதில் தவறில்லை என்று அவர் கருதினால் கடைசிவரை தன் கருத்தில் உறுதியாக இருந்திருக்க வேண்டுமல்லவா? அதுதான் நேர்மையாகவும் இருக்கும். பல பேர் கூடியிருக்கும் சபையில் பகிரங்கமாக ஈனப்பிறவிகள் என்று இழித்துப்பேசிவிட்டு, அதன் விளைவுகள் கடுமையாய் இருக்கும், அது தன் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று தெரிந்த பிறகு, 'ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் நான் பேசவில்லை', 'பத்திரிகை நண்பர்களோடும், மீடியா உலகத்தோடும் எனக்கிருக்கிற ஆரோக்கியமான நல்லுறவை நான் மதிக்கிறேன்' என்று பல்டியடிப்பது ஏன்? சூர்யாவுக்கு ஒன்றைச் சொல்ல வேண்டும். 'நசுக்குவதற்கு நாங்கள் ஒன்றும் மூட்டைப்பூச்சிகள் இல்லை நண்பரே! உங்களைப் போன்றவர்களுக்கு முகவரி கொடுத்தவர்கள்!'

அதே மேடையில் 'நான் மானஸ்தன்' என்று மார்தட்டியதோடு, தன்னை கவரிமானுக்கு நிகரானவராகக் காட்டிக்கொண்ட மூத்த நடிகர் விஜயகுமாரோ, 'உங்க அக்காத்தங்கச்சிங்களை கவர்ச்சியாய் படம் எடுத்து பத்திரிகையில் போடுங்க' என்று ஒட்டுமொத்த பத்திரிகை உலகத்துக்கே அரியதொரு அறிவுரை வழங்கி இருக்கிறார். அவதூறு செய்தியினால் நேரடியாக பாதிக்கப்பட்ட ஆத்திரத்தில் இப்படி பேசியிருக்கும் விஜயகுமாருக்கு அவருடைய பாஷையிலேயே பதில் சொல்வது நமக்கு மிக எளிதானதுதான்.

அதைவிட, அந்த கண்டனக்கூட்டத்தில் ரஜினி பேசியதையே விஜயகுமாருக்கு பதிலாக சொல்வது பொருத்தமாக இருக்கும். ''நீங்க எப்படிப்பட்டவங்க என்பது உங்கள் குடும்பத்துக்கு தெரியும், உங்கள் நண்பர்களுக்குத் தெரியும், உங்கள் மனசாட்சிக்குத் தெரியும். எல்லாத்துக்கும் மேலே கடவுளுக்குத் தெரியும்.!'' இதுதான் ரஜினி சொன்னது.

மேடைகளில் பேசும்போது குட்டிக்கதைகள் சொல்லும் ரஜினி, இம்முறை பேசியதும் 'குட்டிக்கதை'தான். இதன் உள்ளர்த்தம் புரிகிறவர்களுக்குப் புரியும். மக்களுக்குப் புரிகிறதோ இல்லையோ.. குறைந்தபட்சம் கோடம்பாக்கத்துக்குப் புரியும்.

தன் பெயருக்கு முன்னால் பத்மஸ்ரீ விருதை பெருமையுடன் போட்டுக் கொள்ளும் கமல் அவர்களுக்கு இந்த சந்தர்பத்தில் ஒரு வேண்டுகோள்! இனி பத்மஸ்ரீ பட்டத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டாம்.! ஏனெனில், நகைச்சுவை என்ற பெயரில் திரைப்படங்களில் மிமிக்ரி செய்து பிழைக்கும் விவேக்குக்கு வழங்கப்பட்டபோதே பத்மஸ்ரீ விருது, தன் பெருமையையும், கௌரவத்தையும் இழந்துவிட்டது.

இப்போது அதே விவேக்கினால் பத்மஸ்ரீ விருது இன்னொரு தடவை அசிங்கப்பட்டிருக்கிறது. அவதூறு செய்தியில் அவருக்கு நெருக்கமான நடிகை அஞ்சுவையும் சேர்த்துவிட்டார்களே என்ற ஆத்திரமோ என்னவோ.. தன் பேச்சில் ஆபாசத்தின் உச்சத்தைத்தொட்டிருக்கிறார் இந்த விரசகவி.

பத்திரிகையாளர்கள் அனைவரும் தன் குடும்பத்துப் பெண்களின் புகைப்படத்தை இவரிடம் கொடுக்க வேண்டுமாம். அந்தப் புகைப்படங்களில் உள்ள பெண்களுக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் ஜட்டியும், பிராவும் அணிவித்து அதை உலகம் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டப்போவதாக கொக்கரித்திருக்கிறார் இந்தக்கோமாளி. இவரின் தனிப்பட்ட வாழ்க்கை அசிங்கங்களையும், நட்சத்திர ஹோட்டல்களில் இவர் நடத்துவதாக நம் காதுக்கு வருகிற பாலியல் லீலைகளையும் பட்டியலிட்டால், இவரை புகழின் உச்சியில் அமர்த்திய தமிழக மக்களே இந்தக்கோமாளியை தமிழ்நாட்டிலிருந்தே ஓடஓட விரட்டியடிப்பார்கள்.

தன்நிலை மறந்த ஒரு குடிகாரனைப்போல் பொதுமேடையில் ஆபாசஉரை நிகழ்த்திய இந்த அதிமேதாவி, பத்மஸ்ரீ விருதுக்கு மட்டுமல்ல, சின்னக்லைவாணர் என்ற அடைமொழிக்கும் அருகதையற்றவர்தான்.
தன் நகைச்சுவை மூலம் மக்களை சிந்திக்க வைத்த கலைவாணர் எங்கே?
திரையில் கோமாளியாய், நிஜத்தில் இழிபிறவியாய் இரட்டைமுகம் காட்டும் இவர் எங்கே?

இந்தியத்திருநாட்டின் உயர்ந்த விருதான பத்மஸ்ரீயை உடனடியாய் இவரிடமிருந்து திரும்பப்பெற வேண்டும் என்பதே நாம் வைக்கும் கோரிக்கை!
பெயரில் மட்டுமே விவேகத்தை வைத்திருக்கும் இந்தக் கோமாளியின் பேச்சு பத்திரிகையாளர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது தெரிந்ததும், அவசர அவசரமாக ஒரு அறிக்கையை அனுப்புகிறார். 'நான் பொதுமக்களை அழைத்துப்பேசிய கூட்டமல்ல அது, என் கலைக்குடும்பம் சம்மந்தப்பட்ட தனிப்பட்ட கூட்டம்' இதுதான் அந்தத் தன்னிலை விளக்கத்தின் சாரம்சம்.
நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தை தன் மகளுக்கு நடந்த பூப்புனித நீராட்டுவிழா என்று நினைத்துக்கொண்டாரா இவர்? பெற்ற அம்மாவையே வயோதிகக்காலத்தில் கவனிக்க வக்கத்துப்போன இவர் கலைக்குடும்பத்தைப் பற்றிக்கவலைப்படுவதும், பேசுவதுவும் வேடிக்கைதான். சாத்தான் வேதம் ஓதுகிறது!

கிராபிக்ஸில் ஜட்டி, பிரா போட்டு போஸ்டர் அடிக்க முன்வந்த விவேக்கிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறார் சத்யராஜ். ''சின்ன சைஸ் ஜட்டி, பிராவாகப் போடுங்க. வேணும்னா நானே வாங்கித்தர்றேன்'' இதுதான் புரட்சித்தமிழன் அங்கே வைத்த வேண்டுகோள்.

பத்திரிகையாளர்களின் மனைவி, மகளும் தமிழச்சிகள்தான் என்பதை மறந்துவிட்ட. புரட்சித்தமிழனுக்கு பொதுவிழாக்களில் ஆபாசமாகப்பேசுவது புதிதல்ல. சில வருடத்துக்கு முன் ஓகேனேக்கல் பிரச்சனைக்காக திரைப்பட நட்சத்திரங்கள் நடத்திய உண்ணாவிரத நாடகத்தின்போதும் இப்படித்தான் கெட்ட வார்த்தைப்பேசி தன் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தினார்.

பெண்ணினத்துக்காகப் போராடிய பெரியாரின் கொள்கையைப் பின்பற்றுகிறவராக தன்னை பிரகடனப்படுத்திக்கொள்ளும் சத்யராஜிடம் வைக்கவும் ஒரு கோரிக்கை இருக்கிறது. 'தயவு செய்து இனி பெரியாரின் பெயரைக்கூட உச்சரிக்காதீர்கள்!'

நடிகைகளின் கற்பைக் காப்பாற்றக் கிளம்பிய இந்த கற்புக்கரசர்களைப்பற்றி சொல்ல ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. அவர்களிடம் கேட்கவும் எத்தனையோ கேள்விகள் இருக்கின்றன.சில கேள்விகளை மட்டும் இங்கே முன் வைக்கிறேன்.

* தமிழ்த்திரைப்படத்துறையில் 'அட்ஜெஸ்ட்மெண்ட்' என்ற வார்த்தை அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறதே. அதன் அர்த்தம் என்ன?

* சினிமாவில் கதாநாயகியாக நடிக்க விரும்பி வாய்ப்பு கேட்டு வரும் புதுமுக நடிகைகளிடம் நீங்கள் போடும் முதல் கண்டிஷன் என்ன?

* கதைக்குத் தேவையில்லை என்று தெரிந்தும் கதாநாயகி சகிதமாக வெளிநாட்டில் படப்பிடிப்பு வைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களை வற்புறுத்துகிறீர்களே ஏன்?

* உங்களுக்கு ஜோடியாக இன்னார்தான் நடிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறீர்களே..ஏன்?

* உங்களுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகளை எந்த அடிப்படையில் சிபாரிசு செய்கிறீர்கள்? கதாபாத்திரத்துக்குப் பொருத்தமானவர் என்றா? அல்லது....?
வெளிப்புறப்படப்பிடிப்புக்கு செல்லும்போது கதாநாயகி தங்கும் அறைக்குப் பக்கத்திலேயே எனக்கும் அறை வசதி செய்ய வேண்டும் என்று கண்டிஷன் போடுவது ஏன்?

* விபச்சார வழக்கில் சிக்குமளவுக்கு நடிகைகளின் வாழ்க்கை சீரழிந்ததற்கு யார் காரணம்?

* நடிகைகளின் வாழ்க்கை துயரமானது என்று கிளிசரின் இல்லாமலே கண்ணீர் வடிக்கிறீர்களே? அவர்களின் துயரத்துக்கு யார் காரணம்?

* சில வருடங்களுக்கு முன் நடிகர் சங்கம் தொடர்பான மோதலில் விஜயகுமாரும், ராதாரவியும் எதிரெதிர் அணியில் இருந்தபோது, 'விஜயகுமார்வீட்டில் அறுபது அறைகள் இருப்பது ஏன்?' என்று ராதாரவி பத்திரிகைப்பேட்டிகளில் கேள்வி எழுப்பினாரே? அதற்கான பதிலை இன்னமும் விஜயகுமார் சொல்லாமல் இருப்பது ஏன்?

கிழியும் விவேக் முகங்கள்:சா’தீ” மூட்டலுக்கு எதிர்ப்பு!


சின்னக்கலைவாணர் என்ற பட்டத்திற்கு கொஞ்சமும் தகுயியானவர் கிடையாது விவேக். காலக்கொடுமைதான் அவருக்கு அந்த பட்டப்பெயர் வந்தது.

பகுத்தறிவாளன் என்று திரையில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் விவேக், தன் வீட்டை வாஸ்து முறைப்படிதான் கட்டினார் என்று முன்பு விவேக் மீது ஏச்சுக்கள் விழுந்தது.

காமெடி என்கிற பெயரில் நமீதா,மாளவிகா என்று நடிகைகளை வைத்துக்கொண்டு இரட்டை அர்த்த வசனம் பேசும் இவர் நடிகைகளுக்காக வரிந்துகட்டிக்கொண்டு நடிகர் சங்க கோதாவில் நின்றார்.

இரட்டை அர்த்தத்துடன் ஆபாசமாக பேசும் இவருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சென்னை விருந்தினர் மாளிகை எதிரில் 20.10.09 அன்று மகளிர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.

சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதி பாட்டை பாடி பறவைகளுக்கு எல்லாம் ப்ளு கிராஸ் இருக்கு..இவாளுக்கு எல்லாம் நம்மள மாதிரி ஒய்ட் கிராஸ்தானே இருக்கு என்று திரையில் சமத்துவம் பேசிய இவரின் இந்த முகமும் இப்போது கிழிய ஆரம்பித்திருக்கிறது.

பத்திரிக்கையாளர்களை மிகவும் தரக்குறைவாக பேசியதற்காக பத்திரிகையாளர்கள் தொடர்ந்த வழக்கில் 23ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

மேலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் விவேக் பத்மஸ்ரீ விருதுக்கு தகுதியானவர் அல்ல; அவரது விருதை பறிக்க வேண்டும் என்றும் பத்திரிக்கையாளர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் விவேக், தனது சாதியை நாடியிருக்கிறார். டாக்டர் சேதுராமன் நடத்திய மூவேந்தர் முன்னேற்றக் கழக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு ‘’எனக்கு ஒன்ணுன்னா நீங்க நிற்கனும்’’என்றிருக்கிறார்.

பதிலுக்கு கூட்டத்தில், ‘’உங்களுக்கு ஒன்னுன்னா உசிரையே கொடுப்போம்’’என்று ஆதரவுக்கரங்கள் நீண்டதாம்.

அடங்கொப்புறான...., இதற்கு பேருதான் பகுத்தறிவா?சாதீ மூட்டலுக்கு எதிர்ப்பு குரல் கிளம்பியுள்ளன.

இது மட்டுமல்ல இன்னும் கிழித்தெறியவேண்டிய விவேக் முகங்கள் நிறைய இருக்கு என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

- நக்கீரன்.

மர்பி விதிகள் - 1000

Murphys Law

பா.ம.க இராமதாஸ் + பச்சோந்தித்தனம் = புதுப்படம் ரிலீஸ்!!

சூழ்நிலைமைகளுக்கேற்ப தனது வண்ணத்தை பச்சோந்தி மாற்றிக்கொள்ளும். சுயநலத்திற்காக தனது அரசியல் கூட்டணி வண்ணத்தை இராமதாஸ் அடிக்கடி மாற்றுவார். இராமதாஸின் இந்த சாதனைச் செயலை கின்னஸ் உலக சாதனைக்கு இன்னும் ஏன் அனுப்பாமல் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.


கடந்த மே மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது ஒரு சீட்டுக்காக தி.மு.க கூட்டணியிலிருந்து அ.தி.மு.க கூட்டணிக்கு மாறிய பா.ம.க ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு மண்ணைக் கவ்வியது. மத்திய அமைச்சரவையில் கடைசி நிமிடம் வரை பொறுக்கித் தின்றுவிட்டு பின்பு ஈழப்பிரச்சினைக்காக நடுவண், மாநில அரசுகள் ஒன்றுமே செய்யவில்லை என்று அதற்கு துணை போயிருந்த பா.ம.க கூச்சமில்லாமல் கூச்சலிட்டது.


தேர்தலுக்கு முந்தைய நாள் வரைக்கும் ஈழத்தின் பிணங்களைக் காட்டி வாக்குகளை அள்ளிவிடலாமென்று குரூரமாக முயன்றது.
பாசிச ஜெயாவை ஈழத்தாயாக சித்தரிக்கும் வரலாற்று கொடுமைக்கு துணை போனது. ஆனாலும் இந்த நாடகத்தை மக்கள் நிராகரித்து விட்டார்கள். இந்தத் தோல்விக்கு தி.மு.க அரசின் பணபலமும், வாக்கு எந்திரங்களின் முறைகேடும்தான் காரணங்களென இராமாதாஸ் புகார் வாசித்தார்.
வெற்றிபெரும் கூட்டணிகளில் இடம்பெற்று மத்திய அமைச்சரவையில் சேர்ந்து பா.ம.க இதுவரை சம்பாதித்ததற்கு என்ன கணக்கு என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.


இவர்களும் வாக்களார்களுக்கு பணம் வழங்கினார்கள் என்பதும், அதில் தி.மு.கவோடு போட்டிபோட முடியவில்ல என்பதை விட எப்படியும் ஈழப்பிரச்சினைக்காக மக்கள் தமக்கு வாக்களிப்பார்கள் என்று அலட்சியமாக பச்சோந்தி தலைவர் சிந்தித்தார். எப்படியும் வர இருக்கும் வெற்றிக்காக ஏன் பணத்தை வீணாக செலவழிக்க வேண்டுமென்பதே அவரது எண்ணம்.
ஏழு தொகுதிகளிலும் தோற்றபிறகு ஒப்பந்தப்படி பா.ம.கவிற்கு அளிக்கப்பட விருந்த ராஜ்ஜிய சபா தொகுதியும் இப்போது கேள்விக்கிடமானது.


அதை ஜெயாவிடம் வலியுறுத்தும் அளவிற்கு பா.ம.கவிற்கு தைரியமில்லை. தோல்விக்குப் பிறகு இடதுசாரிகள் மற்றும் வைகோவை சந்தித்த ஜெயா பா.ம.க தலைவர்களை மட்டும் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கவில்லை.


இந்நிலையில் சென்ற சட்டமன்ற தேர்தலின் போது திண்டிவனத்தில் உள்ள அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டின் முன்நடந்த கொலைவழக்கில் இராமதாசு குடும்ப உறுப்பினர்கள் உட்பட பல பா.ம.கவினர் மீது வழக்கு தொடரப்பட்டது. கீழ் கோர்ட்டில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் சி.வி. சண்முகம் அவர்கள் வழக்கில் சேர்க்கக்கூறி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இதை தடுக்க வேண்டுமென்பதற்காக பா.ம.கவின் கோ.க.மணியும், தன்ராஜும் கொடநாட்டில் அம்மையாரை சந்தித்து பேசினர்.


அப்போது அம்மா என்ன பேசினார் என்பது தெரியாவிட்டாலும் வழக்கின் மீது தலையிட அவர் விரும்பவில்லை என்பது தற்போது நிரூபணமாகியிருக்கிறது. சரி ஜனநாயக நாட்டில் இத்தகைய வழக்குகளை சட்டபூர்வமாக எதிர்கொள்வதுதானே சரியாக இருக்கும் என்று பலரும் நினைக்கலாம்.


ஆனால் தன்மீது தொடரப்பட்ட வழக்குகளை நிறுத்துவதற்காக மத்திய ஆட்சியையே கவிழ்த்த ஜெயா அதே அளவுகோலின்படி தனது கூட்டணி கட்சிக்காகவும் வழக்கை விட்டுக்கொடுக்க சண்முகத்திற்கு கட்டளையிடுவார் என்பதே பா.ம.க கணக்கு. இந்த கணக்குதான் தற்போது பிழையாகியிருக்கிறது.
பாசிஸ்டுகள் எப்போதும் தமக்கு ஒரு வழிமுறையைக் கையாண்டால் அதை மற்றவர்கள் பின்பற்றுவதை விரும்பமாட்டார்கள்.


அவ்வகையில் சட்டம், வழக்கு, நீதிமன்ற விவகாரங்களில் பா.ம.கவிற்காக தலையிட அன்னையார் விரும்பவில்லை. இப்படித்தான் ‘ஜனநாயக’ நெறிமுறை பா.ம.க விவகாரத்தில் பாசிச ஜெயாவால் நிலைநாட்டப்பட்டிருக்கிறது.


எப்படியும் கொடநாட்டிலுருந்து நல்ல சேதி வருமென்று காத்திருந்த பா.ம.க இராமதாஸ் இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க கூட்டணியை ஆதரிப்பதாக அறிவித்திருந்தார். அப்படியும் அம்மா அருள்பாலிக்கவில்லை.


எனவே அவசரமாக கூட்டப்பட்ட பா.ம.கவின் நிர்வாகக்குழு கூட்ட முடிவின்படி அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகுவதாக இரமாதாஸ் அறிவித்து விட்டார்.


இராமதாஸின் குடும்ப உறுப்பினர்கள் ஒரு கொலை வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் எனபதற்காகவே கட்சி கூட்டணி மாறுகிறது என்றால் கட்சியின் நிர்வாகக் குழுவும் இராமதாஸின் குடும்ப நலனுக்காகத்தான் செயல்படுகிறது என்பது தற்போது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.


ஒரு வழக்கு குறித்த பிரச்சினயை சட்டப்பூர்வமாக சந்திக்கமாட்டோமென்ற ஜனநாயக விரோதத் தன்மையும் இங்கே குடும்ப அரசியலுக்காக வெளிப்பட்டிருக்கிறது.


அடுத்த சட்டமன்றத்தேர்தலுக்காக இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது, இப்போது விரட்டப்பட்ட பா.ம.க மீண்டும் வாலை ஆட்டியவாறு தன்னிடம்தான் வரும், அப்போது பார்த்துக்கொள்ளலாமென்பது ஜெயாவின் எண்ணம்.


இதில் தி.மு.க நிலை என்ன என்பதை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், “பா.ம.விற்கு இந்த ஞானோதயம் வர காரணம் கொள்கை ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ கிடையாது. தனிப்பட்ட சொந்தக் காரணங்களுக்காக அவர்கள் கூட்டணியில் இருந்து விலகியிருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.


இதை வைத்துப்பார்த்தால் முந்தைய பா.ம.க கூட்டணிகளெல்லாம் அரசியல் ரீதியிலானது என்று பொருளாகிவிடுகிறது. இதுவரை பா.ம.க இடம்பெற்ற எல்லாக்கூட்டணிகளிலும் எத்தனை சீட்டு என்பதே இராமதாஸின் கொள்கையாக இருந்தது.


எது எப்படியோ தி.மு.கவும் இப்போது அய்யா கட்சியை தமது கூட்டணியில் சேர்க்கத் தயாரில்லை என்பதை மறைமுகமாக அறிவித்திருக்கிறது. கருணாநிதியும் ஜெயா போல இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அய்யா வாலை ஆட்டிக்கொண்டு வருவார் என்று அலட்சியமாக சிந்திக்கலாம்.


இதற்கு ஆதரமாக பா.ம.கவின் கடந்த கால வரலாறு கட்டியம் கூறுகிறது. 1991, 1996 சட்டப்பேரவை தேர்தல்களில் தனித்துப்போட்டியிட்ட பா.ம.க 1998 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்து 4 தொகுதிகளில் வென்றது. 1999 மக்களவைத் தேர்தலில் தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்து 5 இடங்களை வென்றது. 2001 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று 20 தொகுதிகளில் வென்றது. 2004 மக்களவைத் தேர்தலில் மீண்டும் தி.மு.க கூட்டணிக்குத் திரும்பிய பா.ம.க., 6 தொகுதிகளில் வென்றது.


2006 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தி.மு.க கூட்டணியில் நீடித்து 18 தொகுதிகளில் வென்றது. 2009 மக்களவைத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.
இப்போது அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.


2011 சட்ட மன்றத்தேர்தலில் இந்த பச்சோந்தி யாரிடம் சேருவார் என்ற முடிவு போயஸ் தோட்டத்திடமும், கோபாலபுரத்திடமும் உள்ளது.


ஆனால் அந்த தேர்தலில் மட்டும் இருவரும் பா.ம.கவிற்கு இடமில்லை என்று அறிவித்து விட்டால் ஒரு வரலாற்றுப் புகழ்பெற்ற பச்சோந்தியை நாம் தமிழக அரசியலிலிருந்து ஒழிக்கப்படுவதை காணலாம். பச்சோந்தியை வளர்த்து விட்ட இருகழகங்களும் அதை ஒழிப்பதையும் செய்து விட்டால் தைலாபுரத்தின் அரசியல் அனாதையாக மாறிவிடும்.


ஆனால் அவர்கள் அப்படி செய்யமாட்டார்கள். எனினும் இனியும் பேரம்பேசும் வலிமையை இழந்து அடிமை போல நடப்பதே இரமாதாஸின் விதி.
ஏனெனில் தற்போது வன்னிய சாதி நலன் என்ற பெயரில் வெறியை மீண்டும் வளர்த்து தனது சாதிய ஓட்டுவங்கி செல்வாக்கை கைப்பற்ற பா.ம.க முயல்கிறது.


ஆனால் இக்காலம் 80கள் அல்ல என்பதை அவர்கள் உணரவில்லை. பெரும்பாலான வன்னியர்களே பா.ம.கவை இராமதாஸின் குடும்பச் சொத்து என்று புரிந்துகொண்டு புறக்கணித்து வரும் வேளையில் இந்த சாதிய அரசியல் எடுபடாது.


இப்பேற்பட்ட பச்சோந்திதான் ஈழத்திற்காக குரல் கொடுத்தது என்று இன்னமும் அப்பாவித்தனமாய் நம்பி வரும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் மக்கள் இனியாவது புரிந்து கொள்வார்களா என்பதே நமது கேள்வி.


இறுதியாக ஒரிரு மாதங்களுக்கு முன்னர் இராமதாஸின் பச்சோந்தி கார்ட்டூனை நண்பர் ராஜா அனுப்பியிருந்தார். அதை எப்போது வெளியிடலாம் என்று காத்துக்கொண்டிருந்த நேரத்தில் இப்போது வெளியிடுவதற்கு வாய்ப்பளித்த இராமதாஸுக்கும் அதற்கு வழியமைத்துக் கொடுத்த பாசிச ஜெயாவிற்கும் எமது ‘நன்றி’யைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


- நன்றி

வினவு

நடைப் பயிற்ச்சி - வைரமுத்து

நடைப்பயிற்சிக்குப் பெரிதும் உகந்த நேரம் காலைதான். அது ஓசோன் நிறையும் நேரம்; அதிக ஆக்சிஜன் கிடைக்கும் நேரம். படுக்கையில் அசைவற்றுக் கிடந்த உங்கள் மூட்டுகள் விறைத்திருக்கும். காலை நேர நடைப்பயிற்சியால் மூட்டுகள் முடிச்சவிழும்.


அடுத்த வீட்டு நண்பரை அழைத்துக் கொண்டு அடுத்த தெருவில் காப்பி சாப்பிட்டு ஒரு மணி நேரத்தில் வீடுவந்து சேர்வதே நடைப்பயிற்சி என்று பலர் நம்புகிறார்கள்; தவறு. நடைப்பயிற்சியில் முக்கியமானது நேரமல்ல; தூரம். குறைந்த நேரத்தில் அதிக தூரம் நடப்பது நல்ல பயிற்சி. பூமிக்கு வலிக்குமென்று பொடிநடை போவதெல்லாம் ஒரு நடையா? கைவீசி நடக்க வேண்டும்; காற்று கிழிபடும் ஓசை கேட்க வேண்டும்.


63 தசைகள் இயங்கினால் தான் நீங்கள் நன்றாய் நடந்ததாய் அர்த்தம்.நடைப்பயிற்சியின் போதே லாகவமாய்ச் சுழற்றிக் கழுத்துக்கு ஒரு பயிற்சி தரலாம். தோள்களை மெல்ல மெல்ல உயர்த்திக் காதுகளின் அடிமடல் தொடலாம். விரல்களை விரித்து விரித்துக் குவிக்கலாம். நடைப்பயிற்சியில் பேசாதீர்கள். உங்கள் ஆக்சிஜனை நுரையீரல் மட்டுமே செலவழிக்கட்டும்.


ஒருபோதும் உண்டுவிட்டு நடக்காதீர்கள். சாப்பிட்டவுடன் உடம்பின் ரத்தமெல்லாம் இரைப்பைக்குச் செல்ல வேண்டும்; இரைப்பையின் ரத்தத்தைத் தசைகளுக்கு மடைமாற்றம் செய்யாதீர்கள். உங்கள் விலாச் சரிவுகளில் திரவ எறும்பு போல் ஊர்ந்து வழியட்டும் வேர்வை. அதை இயற்கைக் காற்றில் மட்டுமே உலர விடுங்கள். இருக்கும் சக்தியை எரிக்கத்தானே நடந்தீர்கள். எரித்ததற்கு மேல் வழியிலேயே நிரப்பிக் கொண்டு வந்துவிடாதீர்கள்.


உடல் எழுத்து



அதிகாலை எழு.

ஆகாயம் தொழு.

இருதயம் துடிக்க விடு.

ஈரழுந்த பல் தேய்.

உடல் வேர்வை கழி.

ஊளைச்சதை ஒழி.

எருதுபோல் உழை.

ஏழைபோல் உண்.

ஐம்புலன் பேணு.

ஒழித்துவிடு புகை & மதுவை.

ஓட்டம் போல் நட.

ஒளதடம் பசி.

அஃதாற்றின் எஃகாவாய்.


தன்னம்பிக்கை ..