திருக்குறள்

ஷார்ஜா: மரண தண்டனை விதிக்கப்பட்ட 17 பேருக்கு சட்ட உதவி-இந்தியா

துபாய்: ஷார்ஜாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்களையும் காப்பாற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். சட்ட உதவிகள் வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.


பாகிஸ்தானியர் ஒருவரைக் குத்திக் கொன்ற சம்பவம் தொடர்பாககைது செய்யப்பட்ட 17 இந்தியர்களுக்கு சமீபத்தில் ஷார்ஜாவில் உள்ள ஷரியா கோர்ட் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 17 பேரும் தங்களுக்கு எதிரான தண்டனையை எதிர்த்து 15 நாட்களுக்குள் அப்பீல் செய்யலாம். இல்லாவிட்டால் தண்டனையை ஏற்றுக் கொண்டதாகி விடுமாம்.

இதையடுத்து 17 பேரையும் காப்பாற்ற இந்திய அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதுகுறித்து வெளிநாட்டு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி கூறுகையில், இதுதொடர்பான அறிக்கையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் இந்திய தூதரக அலுவலகத்திடம் கேட்டுள்ளோம். இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய உதவும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அதிவிரைவான நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

இதை தொடர்ந்து இந்திய தூதரகம் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தீர்ப்பு நகலை கேட்டுள்ளது. தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகவலை அந்நாட்டு பத்திரிகை வெளியிட்டுள்ளது.

- Thanks
Thatstamil

உறவுகள் கைவிட, துபாயில் தவிக்கும் உயிர்!

துபாய்: தமிழகத்தில் நான்கு மனைவிகள், அவர்கள் மூலம் பிறந்த 12 குழந்தைகள், சொத்துக்கள் என எல்லாம் இருந்தும், அனைவரும் கைவிட்டு விடவே, துபாயில் கடைசி நேர உயிர்த் துடிப்பில் மன நலம் இன்றி தவித்துக் கொண்டிருக்கிறார் ஒருவர்.


மலையாள சமூக நல அமைப்பிடமிருந்து நமக்கு ஒரு செய்தி வருகிறது, அதாவது தமிழகத்தைச் சார்ந்த ஒருவர் துபாயில் உள்ள பிரபல அரசு மருத்துவமனையில் உடல் நிலை சரியில்லாத நிலையில் நீண்ட நாட்களாக உள்ளார், அவரை தாயகத்திற்கு அனுப்ப வேண்டும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

நோயாளியினுடைய நிலையைத் தெரிந்துக் கொள்ள மருத்துவமனையில் அவரது வார்டில் சென்று விசாரிக்கும்போது அவர் பெயர் ராஜகோபால் எனவும், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மருத்துவமனையில் இருக்கிறார் எனவும், மாரடைப்பு என யாரோ இங்கே சேர்த்துவிட்டு சென்றிருக்கிறார்கள் எனவும், இப்போது மாரடைப்பு சரியாகிவிட்டது. ஆனால் அவரது மன நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது, அதன் பின் ஒரு கை, ஒரு கால் செயலிழந்துவிட்டது என்று தகவலும் கிடைத்தது.

அவரை சென்று பார்த்தோம், அவர் உறங்கிக் கொண்டிருந்தார், மீண்டும் ஒருநாள் முயற்சி செய்து அவர் விழித்திருக்கும் போது சென்று அவரிடம் பேசியபோது அவருக்கு மன நிலை பாதிக்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிந்தது.

ஒரு சில விஷயங்களைத் தெளிவாக பேசினாலும் பல விஷயங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார். உதாரணத்திற்கு, தான் தினந்தோறும் இரவு நேரங்களில் துபாயிலுள்ள வீட்டுக்கு சென்று விடுவதாகவும், பகல் நேரங்களில் மருத்துவமனைக்கு வந்துவிடுவதாகவும் சொல்கிறார். ஆனால் விசாரணையின் போது நம்முடன் இருந்த நர்ஸ் அவர் மருத்துவமனைக்கு வந்ததிலிருந்து யாரும் வந்து பார்க்கவுமில்லை, இதுவரை மருத்துவமனையை விட்டு இவர் சென்றதுமில்லை எனக் கூறினார்.

அவரிடம் பல விஷயங்களைப் பற்றி பேசி அவரைப் பற்றிய விபரங்களைத் தெரிந்துக் கொள்ள முயற்சி செய்யும் போது ஏதாவது தொடர்பு எண் அவருக்கு நினைவுக்கு வருகிறதா என சோதிக்கும் போது துபாயிலுள்ள ஒரு லோக்கல் நம்பரைச் சொன்னார் அதை ஆர்வமாக டயல் செய்துப் பார்த்தால் அந்த எண் தவறாக இருந்தது. ஊரில் ஏதாவது எண் நினைவில் இருக்கிறதா என கேட்கும் போது கொஞ்ச நேரம் யோசித்து ஒரு நம்பரைச் சொன்னார் அதை நம்பிக்கையில்லாமல் டயல் செய்யும்போது அது ரிங் ஆனது, அதில் அவரது மகள் வசுமதி பேசினார்.

இவரைப் பற்றி சொல்லும்போது நிதானமாக கேட்டுவிட்டு அவருடன் கடந்த 25 வருட காலமாக தொடர்பில் இல்லை எனவும், ஆகையால் நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது எனவும் கூறிவிட்டார். மேலும், தனது தம்பி சுந்தரிடம் பேசுங்கள் என சொல்லி ஒரு நம்பரைத் தந்தார்.

சுந்தரைத் தொடர்புக் கொள்ளும்போது அவரும் கடந்த 25 வருட காலமாக எங்களுக்குள் எந்தவித தொடர்புமில்லை எனக் கூறினார். அதனைத் தொடந்து சுந்தர் சொன்ன விஷயங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.

துபாய்க்கு டிரைவராக வந்து, பிறகு சொந்தமாக 3க்கும் மேற்பட்ட வாகனங்கள் வைத்து தொழில் செய்து செல்வச் செழிப்போடு இருந்த ராஜகோபால், தன் வாழ்க்கையில் நான்கு மனைவிகளைத் திருமணம் செய்திருக்கிறார். நன்றாக இருந்த காலத்தில் தந்தையாக இருந்து செய்யவேண்டிய எந்த கடமையையும் ராஜகோபால் செய்யவில்லையெனவும், அவசர தேவைக்குக் கூட பண உதவி செய்ததில்லை எனவும் வேதனையோடு சுந்தர் கூறினார்.

முதல் மனைவியைத் திருமணம் செய்து சிறிது நாட்களில் விட்டுவிட்டு இரண்டாவது மனைவியைத் திருமணம் செய்திருக்கிறார். அதன் பின் ஒரு கிருஸ்துவ மதப் பெண்ணை கோயம்புத்தூரில் திருமணம் செய்திருக்கிறார். கடைசியாக துபாயில் ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார்.முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்யும் போது ராஜகோபாலும் முஸ்லிமாக மாறியிருப்பதாகவும் சுந்தர் கூறினார்.

மேலும், ராஜகோபால் கடைசியாக அதிகமாக தொடர்பில் இருந்தது திருச்சியிலுள்ள இரண்டாவது மனைவியிடத்தில்தான் எனவும், சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் இரண்டாவது மனைவியின் பேரில்தான்; உள்ளது எனவும், அவர்கள்தான் அவரை கவனிக்க வேண்டுமெனவும் கூறி முடித்துக் கொண்டார்.

திருச்சியிலுள்ள இரண்டாவது மனைவியின் தொடர்பு எண்ணை சுந்தரிடமிருந்து வாங்கி அவரிடம் பேசும் போது, சம்பாதித்து எங்களுக்கு தந்தது உண்மைதான். ஆனால் இந்த வீட்டைத் தவிர எந்த சொத்துமில்லை. அவருக்கு மருத்துவ செலவு பார்க்க, கவனிக்க எங்களால் முடியாது எனக் கூறிவிட்டார். ஆகையால் இப்போது தாயகத்திற்கு அனுப்பினாலும் அவரை ஏற்பதற்கு யாரும் தயாரில்லை.

கோயம்பத்தூரில் திருமணம் செய்த மனைவியைப் பற்றியும், துபாயில் வைத்து திருமணம் செய்த மனைவியைப் பற்றியும் எந்த தகவலும் இல்லை. நான்கு மனைவிகள், 12க்கும் மேற்பட்ட குழந்தைகள், துபாயில் செல்வச் செழிப்பான வாழ்க்கை, ஊரில் சொத்துக்கள் என அனைத்தும் இருந்தாலும் ராஜகோபாலுக்கு கை கொடுக்கவில்லை!

மனைவிகளிடத்தில் முறையாக நடந்துக் கொள்ளாதது, பெற்ற பிள்ளைகள் மீது அக்கறை செலுத்தாதது போன்ற செயல்களால் ராஜகோபாலைப் பார்க்க யாரும் முன் வரவில்லை என புரிய முடிந்தது. வாழ்க்கையின் நோக்கம் எதுவென்றே தெரியாமல் பயணிக்கிறவர்களுக்கு ராஜகோபால் ஒரு பாடம்.

கடைசியாக ராஜகோபாலை மருத்துவமனையில் சந்தித்துவிட்டு திரும்பும்போது அவர் சொன்ன வார்த்தைகள் கண்களை ஈரமாக்கின. என் பொண்டாட்டி, புள்ளைங்கல்லாம் தினமும் என்னை வந்து பார்த்துட்டுதான் போறாங்க, நீங்க அடிக்கடி வந்து போங்க என்று சொன்னது நெஞ்சில் காயத்தை ஏற்படுத்தியது.

கட்டுரையாளர்- ஹுசைன் பாஷா (துபாய்)
 Thanks - Thats Tamil

துபாய் வழியில் சீனா ?? !!

''பிரணாப்பின் பட்ஜெட்டுக்குப் பிறகு பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடம் புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது. இனி இந்தியத் தொழிலுலகம் வளர்ச்சியை நோக்கிச் செல்லும். எனவே துணிந்து சந்தையில் முதலீடு செய்யலாம் என முதலீட்டாளர் சமூகம் நினைக்க ஆரம்பித் திருக்கிறது. இதனால்தான் கடந்த இரண்டு வாரங்களில் சந்தை சுமார் ஆயிரம் புள்ளிகள் உயர்ந்திருக்கிறது. ஆனால், இந்த ஏற்றத்தினால் நம்மவர்களைவிட வெளி நாட்டைச் சேர்ந்த முதலீட் டாளர்கள் அடைந்த லாபமே அதிகம். காரணம் அவர்கள்தான் நிறைய முதலீடு செய்திருக்கிறார்கள். கடந்த 2-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை எப்.ஐ.ஐ.கள் நம் பங்குச் சந்தையில் முதலீடு செய்த நிகரத் தொகை சுமார் ரூ.11,000 கோடி. சமீப காலத்தில் இவ்வளவு பணத்தை இத்தனை குறுகிய நாட்களில் அவர்கள் கொண்டு வந்து கொட்டியதே இல்லை என்கின்றனர் சில புள்ளிவிபரப் புலிகள். எப்.ஐ.ஐ.கள் இங்கு வந்து பணத்தைக் கொண்டு வந்து கொட்டுவதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. கடந்த இரண்டு வாரங்களில் டாலரின் மதிப்பு கடுமை யாகக் குறைந்திருக்கிறது. டாலரின் மதிப்பு சரியும்போது அதன் மூலம் ஏற்படும் இழப்பைக் குறைக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்வது வழக்கம். அதுதான் இப்போதும் நடந்திருக்கிறது''.


''அப்படியானால் இந்த ஏற்றம் தொடர்ந்து இருக்குமா, இருக்காதா?'' - கிடுக்கிப்பிடி போட்டோம்.


''நிச்சயம் ஏறும்; ஆனால் நிச்சயம் இறங்கும்! மார்க்கெட் அதிக ஏற்றமும் இறக்கமும் இல்லாமல் ஏறியிறங்கி, இறங்கியேறவே செய்யும். இதைப் பார்த்து நீங்கள் நிம்மதி இழக்கக்கூடாது. அடுத்து வரும் சில மாதங்களில் ஒன்று நீயா, நானா என்று பார்த்துவிடுங்கள் அல்லது நல்ல பங்குகளில் நீண்டகாலத்துக்கு முதலீடு செய்துவிட்டு கவலைப்படாமல் இருங்கள்.''


''இன்று வெளியான ஐ.ஐ.பி. டேட்டாவை கவனித்தீரா?'' ஆப்பிள் பழத்தின் ஒரு சிலதை சாப்பிட்டுவிட்டு பதில் சொல்ல ஆரம்பித்தார்.

''பிரமாதமான வளர்ச்சிதான். கடந்த ஆண்டு ஜனவரியில் இந்தியத் தொழில்துறை பொருளாதார நெருக்கடியின் பிடியில் சிக்கி இருந்ததால் 1% மட்டுமே வளர்ச்சி கண்டது. ஆனால் இந்த ஆண்டு ஜனவரியில் 16.7% வளர்ச்சி கண்டிருக்கிறது. இப்போது பொருளாதாரச் சலுகைகள் வாபஸாகி இருப்பதால் அடுத்துவரும் மாதங்களில் தொழிற் துறை உற்பத்தி இன்னும் குறையவே செய்யும் என்கிறார்கள்.''

''என்.எம்.டி.சி.க்கு கிடைத்த மரியாதை மிகவும் மோசமாக இருக்கிறதே!'' - நம் கவலையைத் தெரிவித்தோம்.

''முதலில் என்.டி.பி.சி., அடுத்து ஆர்.இ.சி., இப்போது என்.எம்.டி.சி. அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது குறித்து சிறுமுதலீட்டாளர்கள் நிறைய யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ரீடெய்ல் முதலீட்டாளர்களுக்காக ஒதுக்கிய பங்குகளில் கொஞ்சத்தைக்கூட அவர்கள் வாங்கவில்லை. அவர்கள்தான் வாங்கவில்லை என்றால் பெரும் பணம் படைத்த தனிநபர்களும் (HNI) வாங்கவில்லை. இந்த முறையும் வேறு வழியில்லாமல் எல்.ஐ.சி. நிறுவனம் பெருமளவில் பணத்தை முதலீடு செய்து பெருவாரியான பங்குகளை வாங்கி இருக்கிறது. 'எந்தப் பங்கு வெளியிட்டாலும் அதனை விற்றுத் தீர்க்க எல்.ஐ.சி.தான் கிடைத்ததா? தனியார் நிறுவனங்களே முதலீடு செய்யத் தயங்கும் போது எல்.ஐ.சி. மட்டும் ஏன் மக்கள் பணத்தை பணயம் வைக்கிறது?' என்கிற விமர்சனம் வந்ததைத் தொடர்ந்து எத்தனைகோடி ரூபாய்க்கு என்.எம்.டி.சி. பங்குகள் வாங்கினோம் என்கிற தகவலை ஐ.பி.ஓ. முடியும் வரை ரகசியமாக வைத்திருந்தது எல்.ஐ.சி.''

''சர்க்கரை பங்குகளுக்கு நேர்ந்த நிலைமையைப் பார்த்தீர்களா?'' கேள்வியைக் கேட்டபடி சாத்துக்குடி ஜூஸைக் கொடுத்தோம்.

கொஞ்சம் குடித்தவர், ''ஓவர் சர்க்கரை. விலை குறைந்ததற்காக இப்படியா கொட்டுவது?'' என்றவர், குடித்துவிட்டு,

''முன்பு கச்சா எண்ணெயின் விலையை ஏற்றியது போல சர்க்கரை விலையை ஏற்றினார்கள். இதற்கு மேல் விலை ஏற்றமுடியாது என்கிற நிலை வந்தபோது அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டார்கள். இப்போது சர்க்கரை விலை அதலபாதாளத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் ஒரு கிலோ சர்க்கரை 22 ரூபாய்க்குக் கிடைக்கும் என்கிறார்கள்.

இந்த விலை சரிவால் சர்க்கரை நிறுவனப் பங்குகளின் வருமானம் வெகுவாக குறையும் என்பதால் கிடைத்த விலைக்கு சர்க்கரைப் பங்குகளை விற்று வருகிறார்கள் முதலீட்டாளர்கள். இந்த நிலையில் கோ-ஆப்பரேட்டிவ் மில்கள் விலை அதிகம் வைத்து விற்காமல் வந்த விலைக்கு சர்க்கரையை விற்கும்படி வாய்மொழி உத்தரவு வந்திருக்கிறதாம். தவிர, வெளிநாடுகளில் இருந்து ஆர்டர் செய்திருந்த 1 லட்சம் டன் சர்க்கரை இப்போது கப்பலில் பாதி தூரம் வந்துவிட்ட நிலையில் அந்த ஆர்டரை கேன்சல் செய்திருக்கிறதாம் சில நிறுவனங்கள். இப்போதைக்கு கையில் சர்க்கரைப் பங்குகளை உடனடியாக விற்றுவிட்டு, கொஞ்ச நாளைக்கு அந்த செக்டார் பக்கமே போகாமல் இருப்பது நல்லது''.

''அமெரிக்க நிலைமை எப்படி இருக்கிறது? அங்கு பொருளாதாரம் சரியாகிவிட்டதா?'' என்று அடுத்த கேள்வியைக் கேட்டோம்.

''பற்றாக்குறையைக் குறைக்கும் விஷயத்தில் நம்முடைய நடவடிக்கைகள் எவ்வளவோ பரவாயில்லை.

அமெரிக்காவின் நடப்பு நிதி ஆண்டு பற்றாக்குறை 1.14 டிரில்லியன் டாலர்களாக இருக்குமாம். வரும் நிதி ஆண்டில் இது 1.56 டிரில்லியன் டாலராக உயருமாம். அடுத்த 10 ஆண்டுகளில் மொத்த பற்றாக்குறை 9 டிரில்லியன் டாலர்களாக அதிகரிக்குமாம்... அமெரிக்காவின் கடனே அதன் கழுத்தை நெரித்துக் கொன்றுவிடும் போலிருக்கிறது! ஒபாமா வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று அமெரிக்க மக்கள் நினைத்தனர். ஆனால் நிலைமை மோசமாகிக் கொண்டேதான் போகிறது.''

''அமெரிக்கக் கதை இருக்கட்டும். துபாய், க்ரீஸ் இப்போது எப்படி இருக்கிறது?'' என்று கேட்டோம்.

''துபாயும் க்ரீஸூம் பழைய கதை. இப்போது லேட்டஸ்ட் டாக் சீனா பற்றிதான். பில் போனர் என்பவர் 'த டெய்லி ரெக்கனிங்' என்று ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். இந்தப் புத்தகத்தில் அவர் சொல்லும் விஷயங்கள் சீனாவின் இமேஜையே சுத்தியலால் உடைக்கிற மாதிரி இருக்கிறது. சீனாவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் பல நூற்றுக்கணக்கான மால்களில் மில்லியன் சதுர அடி இடத்தை வாங்க இன்னமும் யாரும் தயாராக இல்லையாம். விஸ்தீரணமான புதிய சாலைகள் நடப்பதற்கே ஆட்கள் இல்லாமல் கிடக்கிறதாம். கடந்த பத்து ஆண்டுகளில் கட்டமைப்புக்காக சீனா செலவு செய்தது 200 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்குமாம். இவ்வளவு பணத்தைச் செலவு செய்தும், இப்போது அதனால் எந்த பலனும் இல்லையாம். துபாய் இப்படித்தான் கட்டமைப்புக்காக கணக்குவழக்கில்லாமல் செலவு செய்து மாட்டிக் கொண்டது. இப்போது சீனாவும் அந்த மாதிரி ஆகிவிடுமோ என்று ஒரு பீதியை ஆணித்தரமாக கிளப்பிவிட்டிருக்கிறார் இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர். இந்த நூற்றாண்டை நடத்திச் செல்லப் போவது சீனாவும் இந்தியாவும்தான் என்று எல்லோரும் சொல்லும் இந்த வேளையில் இப்படி ஒரு குழப்பம்'' என்று சொல்லிவிட்டு புறப்படத் தயாரானவரிடம் தங்கத்தின் எதிர்காலம் பற்றி கேட்டோம்.

''கடந்த மூன்று ஆண்டுகளில் தங்கத்தின் விலை அபாரமாக உயர்ந்தது. இப்போது அதில் கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. உலக அளவில் ஃப்யூச்சர் மார்க்கெட்டில் இருக்கும் கோல்ட் கான்ட்ராக்ட்களின் விலையைப் பார்த்தால் பெரிய அளவில் லாபம் இருக்காது என்றே தோன்றுகிறது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இப்போதிருக்கும் விலையிலிருந்து 100 டாலர் ஏறுவதற்கே இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகும் என்கிறார்கள் சிலர். இந்த வாதத்தின் நீட்சியாக, அடுத்துவரும் மாதங்களில் தங்கத்தின் விலை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். திருமணத்துக்காக தங்க நகை வாங்குகிறவர்கள் இப்போதுள்ள விலையை மறந்துவிட்டு வாங்கலாம். மற்றபடி சுத்தமான முதலீடுதான் என்கிறவர்கள் நன்றாக யோசித்து முடிவெடுக்கலாம்'' என்று புறப்பட்டார்.

- நன்றி
நாணயம் விகடன்.

திகுதிகு திகம்பர சாமிகள்!

கையில் இருந்த சில்லறைக் காசுகளையும் குளத்தில் வீசிவிட்டு தபசில் ஆழ்ந்த ரமணர், 'காசும், பணமும், நகையும், ஆட்கொல்லி' என்றார்.


தனக்குத் தினமும் பக்தர்கள் தரும் பழங்களை மட்டுமல்ல; வெள்ளி, தங்கத்தையும் அன்றைய தினமே அடுத்து வருகிற பக்தனுக் குக் கொடுத்தவர் மகா பெரியவர். 'இதெல்லாம் வாசலுடன் போயி டணும்' என்பது அவரது அருள் வாக்கு.

பக்கத்தில் ஒரு குச்சி... கையில் விசிறி... இரண்டு சிரட்டைகள்...மட்டும் சொத்தாகவைத்திருந்த யோகி ராம்சுரத்குமாரிடம் யாரா வது ஏதாவது வேண்டினால், 'ஐ யம் எ பெக்கர். உனக்கும் சேர்த்து நான் ஆண்டவனிடம் பிச்சை கேட்கிறேன்' என்று மட்டும் சொல்வார்.

இந்து மதத்தின் தத்துவத்தை உலகம் அறியச்செய்துவிட்டதாக கும்பகோணத்தில் விவேகானந்தருக்குப் பாராட்டு விழா நடந்தது. 'உங்களுடைய விசுவாசம்எப்போ தும் கொள்கைகளில்தான் இருக்க வேண்டும். தனி நபர்களிடம் இருக்கக் கூடாது' என்று சொல்லிவிட்டுப் போனார்.

இவர்களில் யாரும் இன்று இல்லை. இன்று இருப்பவர்களில் எவரும் இவர்கள் இல்லை!

கடந்த ஒரு வாரமாக நித்யானந் தர் மட்டும் நித்திரையை இழக்க வில்லை. அவரைப்போலவே அலைந்து திரிந்து வரும் பலதிகம் பர சாமியார்களும் நிம்மதிஇல்லா மல் தவிக்கிறார்கள்.

நாடி சாமி, ரேகை சாமி, சுவடி சாமி, சித்து சாமி, பீடி சாமி, சுருட்டு சாமி, கஞ்சா சாமி, எச்சில் துப்பும் சாமி, கெட்ட வார்த்தை சாமி, கற்பூரச் சாமி, ஊதுவத்திச் சாமி, பீர் சாமி, சாக்கடைச் சாமி என்று சாமிகளால் ஆனது நம் நாடு. இவர்கள் எல்லாரும் அன்றாட வயிற்றுப்பாட்டுக்குக்கூட உத்தரவாதம் இல்லாமல் எதையாவது சொல்லி, சில தட்சணைகளைப் பெற்று வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இன்று படாடோப விளம்பரங்களால் ஜொலித்து காலையில் ஒரு கண்டம், மாலையில் இன்னொரு நாடு எனக் கதாகாலட்சேபம் நடத்தி வருபவர்களின் கஜானாக்களோ கோடிகளால் ஆனது. இவர்கள் தங்களது உருவப்படங் களையே தந்து பூஜிக்கச் சொல் கிறார்கள். சாமிகள் செய்யாததைச் சாமியாரால் செய்ய முடியும் என்று பக்தர்களை நம்பவைத்தது தான் இவர்களது பெரிய பலம்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் இதுபற்றி எழுத்தாளர் சுஜாதாவிடம் கேட்டபோது, 'டொமினோ எஃபெக்ட்தான் இதற்குக் கார ணம்' என்று சொன்னார். சைக் கிள் ஸ்டேண்டில் ஒன்றைத் தள்ளிவிட்டால் வரிசையாக அனைத்தும் விழும் அல்லவா... அதையே அவர் உதாரணமாகச் சொன்னார். ''யாரோ ஒருத்தர் தனக்கு நிகழ்ந்த நல்லதைச் சொல்ல... அவர் மற்றவர்களுக்கும் சொல்ல... அது விரிகிறது'' என் பது சுஜாதாவின் கணிப்பு.

''யாருடைய சுயபுத்தியும் சொல்லாத எந்த விஷயத்தையும் இந்தச் சாமியார்கள் சொல்லிவிடு வது இல்லை. ஆனால், அவர் களின் தோற்றம் தரும் மாயை, அவர்களைச் சுற்றிப் பின்னப் பட்டு இருக்கும் அற்புத விளம்பர ஜோடனைதான் இதற்குக் கார ணம்'' என்று சொல்லும் மனநல மருத்துவர் ருத்ரன், ''இவர்களுக் கான தேவை இந்தச் சமூகத்தில் உள்ளது. அந்தத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள இவர்கள் தங்களை நிறுவிக்கொள்கிறார்கள். பெரும் அமைப்புகளை உருவாக் கும்போது அந்த அமைப்புகளுக் குரிய அத்தனைச் சிக்கல்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது'' என்று சொன்னார். நித்யானந் தர் உள்ளிட்ட சாமியார்களின் சிக்கல் இப்படித்தான் ஆரம்பிக் கிறது.

அரசியல்வாதிகள், அதிகார மையங்கள், தொழிலதிபர்கள், சமூக சேவை அமைப்புகள், இவற்றுடன் ஆன்மிக வகுப்புகள் என்ற அவியல் சேர்க்கைதான் இன்றைய கார்ப்பரேட் சாமியார்கள். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது புறப்பட்ட தீரேந்திர பிரம்மச்சாரிதான் இவர்களின் ஆரம்பம். இந்திராவிடம் நட்பு இருந்தபோதே அவரது எதிரி களாக இருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஜெகஜீவன்ராம் ஆகியோருடனும் இருந்தார் தீரேந்திரர். அடுத்து அதை வளர்த்தவர் சந்திராசாமி. இன்றைய எல்லாச் சாமியார்களுக்கும் ரோல் மாடல் சந்திராசாமிதான். பி.வி.நரசிம்ம ராவ் முதல் சந்திரசேகர் வரை அவரது ஆசிரமத்துக்கு வராதவர் எவரும் இல்லை. ஆன் மிகத்தில் சம்பாதித்தாரா... ஆயுத வியாபாரத்தில் கொழித்தாரா என்று தெரியாத வகையில் கோடிக்கணக்கான பணம் அவருக்குச் சேர்ந்தது. மத்திய அமலாக்கப் பிரிவு மட்டும் 11 வழக்குகளைப் பதிவு செய்து வெளிநாட்டுக்குப் போக முடியாமல் முடக்கியது. 'பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மாலத் தீவு ஆகிய இடங்களில் சிறப்பு யாகமும் பிரார்த்த னையும் நடத்தப்போகிறேன். எனது பாஸ் போர்ட்டை விடுவியுங்கள்' என்று உச்ச நீதிமன்றத் தின் அனுமதி கேட்டு அவர் காத்திருக்க வேண்டி இருந்தது.

இன்னொரு பக்கத்தில் வளர்ந்து வந்தார் ரஜ்னீஷ். அவரை செக்ஸ் குரு என்று சொன்னார் கள். அவர் அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட வில்லை. அன்பின் ஆழம்பற்றிச் சொன்னது போலவே செக்ஸில் ஆழமாகப் போவதுபற்றி வெளிப்படையாகக் கற்பித்தார். 'செக்ஸ் என்பது சமாதி நிலைக்குச் செல்வதற்கான ஒரு படிக்கல். அதை ஆழ்ந்து அனுபவித்தால், அதில் இருந்து விடுதலை அடைவார்கள்' என்றார். அவரது வெளிப்படையான தன்மையால் யாரும் கேள்வி கேட்க முடியவில்லை. இதே காலக்கட்டத்தில் புட்டபர்த்தி சாய்பாபா வந்தார். வெறுங்கையில் விபூதி வரவழைப்பது, சங்கிலி மற்றும் மோதிரம் வரவழைத்துப் பரிசளிப்பது, புற்றுநோயை நீக்குவது, பார்வை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுப்பது என்பது மாதிரியானவை அவரைப் பிரபல்யப்படுத்தியது. லண்டன் பி.பி.சி, நார்வே நாட்டு அரசுத் தொலைக்காட்சியான என்.ஆர்.கே. இரண்டும் இவை சித்து வேலைகள் தான் என்பதை ஆதாரத்துடன் வெளியிட்டன. பிரபல மேஜிக் நிபுணர் பி.சி.சர்க்கார் வேறு ஒரு பெயரில் பாபாவைச் சந்தித்து அவருக்கு முன் னால் ஸ்வீட் வரவைத்துப் பரபரப்புக் கிளப்பினார். அதன் பிறகு, சமூக சேவை பக்கம் தனது ஆர்வத் தைத் திருப்பினார் சாய்பாபா.

ரஜ்னீஷின் மெகா ஆசிரமம், சந்திராசாமியின் அதிகார வட்டச் செல்வாக்கு, சாய்பாபாவின் சமூக சேவை - இம்மூன்றும் இணைந்த கலவைதான் இன் றைய கார்ப்பரேட் சாமியார்கள்.

இன்று இருக்கும் எல்லா சாமியார்கள் மீதும் ஏதாவது ஒரு சந்தேக ரேகையாவது படர்ந்தே வருகிறது. தன்னிடம் இருந்த சிறுவர்களுடன் ஹோமோ செக்ஸில் ஈடுபட்டார், அதைப் பார்த்த மற்ற பையன்களைக் கொன்றுவிட்டார்... கொலை வழக்கில் இருந்து தப்பிக்க சாமியார் ஆனார்... தனது சகோதரியையே பாலியலுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்... பெரிய சாமியாரைக் கொல்ல சின்ன சாமியார் மருந்துவைத்தார்... தனக்குப் பிறந்த பையனையே அடுத்த வாரிசாக ஆக்கி, பிறகு பிரச்னை வந்ததும் போலீஸில் புகார் சொன்னார்... என்று இன்று இருக்கும் கோடீஸ்வர சாமியார்கள் அத்தனை பேர் மீதும் புகார்க் கதைகள் உண்டு. தான் எடுத்து வளர்த்த சிறுமிகள் வயதுக்கு வந்ததும் அவர்களைத் தனது பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்தியது மட்டுமல்லாமல், கொலை வரைக்கும் போய் சிக்கிய பிரேமானந்தா, இரட்டை ஆயுள் தண்டனை வாங்கி உள்ளே இருக்கிறார். ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் மீதான கொலை வழக்கின் விசாரணை பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. கல்கி சாமியார் பற்றி ஏராளமான புகார்கள். தியானம், யோகா, ஹீலிங், பிரசங்கம், மெடிடேஷன் என்று பக்தர்களை வளைப்பதாகக்குற்றச் சாட்டுகள் இருக்கின்றன. இது போன்ற வகுப்புகளை நடத்துவதால் சாமியார்களிடம் கோடிக் கணக்கான பணம் சேர்ந்துவிடுவது இல்லை. பணம் சேருவது பகீர் வழியாக இருக்கிறது.

தன்னைப்பற்றியும் தனது மடத்தைப்பற்றியும் கதைகளை முதலில் உருவாக்கிக்கொள்கிறார்கள் இந்தச் சாமியார்கள். ஆன்மிகம் என்றால் யாரும் முதலில் வரத் தயங்குவார்கள் என்பதால், சமூக சேவை, மருத்துவத் தொண்டு என்று காரணம் சொல்லி அதிகார மைய ஆட்களை அழைப்பார்கள். மடங்களுக்குள் வரும் தொழிலதிபர்களுக்கு இந்த அதிகார மைய ஆட்களுடன் சாதாரணமாக நெருக்கம் ஏற்பட்டுவிடுகிறது. பெரும்பாலான வங்கிக் கடன்களை வாங்கித் தருவதும் பரிந்துரை செய்வதும் இந்தச் சாமியார்களே. முதலில் மடத்தின் வளர்ச்சிக் காக நன்கொடைகள் தருபவர்களிடம் சில புரோக்கர் கள் மூலமாகப் பேரம் பேசப்படுகிறது. 'உங்கள் பணத்தை சாமியிடம் கொடுத்துவைக்கலாம். உங்களுக்கு எப்போது தேவையோ, அப்ப தந்திருவார். சாமியே உங்களிடம் கேட்கச் சொன்னார்' என்று சொல்லப்படும். சாமியிடம் நல்ல பெயரை வாங்குவதற்காக தொழிலதிபர்களும் பெரும் தொகைகளைக் கொடுத்துவைக்கிறார்கள். அறக்கட்டளைக்குப் பணம் கொடுத்தால், வருமான வரிவிலக்கு இருக்கும் என்பதால் பணம் குவிகிறது. சாமியார்களது எல்லைகள் இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் இருப்பதால், இங்கு இருந்து அங்கும், அங்கு இருந்து இங்கும் பணத்தை மாற்றிக்கொள்ள ஹவாலா வேலைகள் சாமியார்கள் மூலமாகப் பார்க்கப்படுகிறது. முக்கியமானவர்கள் தங்களது லாக்கராக இந்த சாமியார்களைப் பயன்படுத்துகிறார்கள்.

வருமான வரி, லஞ்ச ரெய்டுகள் மடங்களில் நடத்துவது சாத்தியம் இல்லாததாகவே ஆகிவிட் டது. தென் மாவட்ட மடம் ஒன்றில் தங்கக் கட்டிகள் எடுக்கப்பட்டதும், இறந்துபோன சென்னைச் சாமியாரின் சொத்தை அவரது நண்பர் சுருட்டிக் கொண்டுபோய் தனித்தொழில் தொடங்கியதும் நாடு பார்த்த விஷயங்கள்தான். இப்படி இருண்ட பக்கங்களால் நிரம்பியிருக்கிறது சாமியார்கள் கதை.

''தவறு சமயத்தில் இல்லை. இந்து மதப் புரோ கிதர்கள் பலவிதமான கொடுங்கோல் இயந்திரங் களைக் கண்டுபிடித்துள்ளனர். அதில்தான் வம்பு பொதிந்துள்ளது'' என்றார் விவேகானந்தர். இவை குறித்துக் கண்காணிக்க இந்து சமய அறநிலையச் சட்டத்தில் இறுக்கமான சரத்துகள் இருக்கின்றன. சொத்தைத் தவறாகக் கையாண்டால் மடாதிபதி யாகத் தொடர முடியாது, ஒழுக்கக் கேடான வாழ்க்கை வாழ்பவராக அறியப்பட்டாலோ, தமக்குரிய கடமையைத் தவறி நெறிபிறழ்ந்தார் என்றாலோ நடவடிக்கை எடுக்கலாம் என்றும் சட்டம் சொல்கிறது. ஆனால், சாமியார்கள் விஷயத்தில் சட்டம் தனது கடமையைச் செய்வது இல்லை.

மூடநம்பிக்கைகளை கட்டுப்படுத்த சமூக சீர்திருத்தக் குழுவை கருணாநிதி தொடங்கினார். இரண்டு ஆண்டுகளாக அது கூடவே இல்லை. இதுபோன்ற பிரச்னைகள் வரும்போது அறிக்கை விடுவதோடு மறக்கப்பட்டுவிடுகிறது. அடுத்த சாமியார் சிக்கும் போதுதான் மீண்டும் பேச்சு கிளம்பும்.

தாங்கள் சொல்லி வரும் ஒழுக்கக் கோட்பாடு களுக்கும் போட்டுவரும் பிரம்மச்சரிய வேஷத்துக்கும் விரோதமாகச் செயல்படும் சாமியார்களிடம் ஜாக்கிரதையாக இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மக்கள்தான் ஆன்ம பலம் பெற வேண்டும்!

அறிவுமதியின் கவிக்கூடம்..

கவிஞர் அறிவுமதியின் அலுவலக முகவரிதான் இன்று கோடம்பாக்கம் கொண்டாடும் கலைஞர்கள் பலரின் முதல் வரியுமாக இருக்கிறது.


சுந்தர்.சி, செல்வபாரதி, சீமான், பாலா, பழநிபாரதி, நா.முத்துக்குமார், நந்தலாலா, யுகபாரதி, கபிலன், தபூசங்கர், அஜயன்பாலா, ஜெயா, சரவணன், நெல்லை ஜெயந்தா வரை அறிவுமதியின் கவிக்கூடத் தில் வளர்ந்தவர்கள் ஏராளம்.

‘உள்ளேன் ஐயா’ என்று ஒரு படம் எடுக்க விரும்பி ஆரம்பிக்கப்பட்ட அலுவலகம்தான், இன்றைக்கும் எங்கெங்கிருந்தோ வண்ணக் கனவுகளுடன் சென்னை வந்தடைகிற இளைஞர்களின் தாய்க் குடில்.

”கனவுகளும் ஆசைகளும்தான் மனதில் இருக்கும். கையில் ஒரு பைசாகூட இருக்காது. இந்த நகரத்தில் வறுமையோடு வாழ நான் கற்றுக்கொண்டது அறிவுமதி அண்ணனிடம்தான். கையில் கொஞ்சம் பணம் இருந்தால், திமிராக நடக்கத் தோன் றும். காசே இல்லாவிட்டால் சோர்ந்து போய் எங்காவது முடங்கத் தோன்றும். ஆனால், இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒரே மாதிரி வாழ்க்கையை எதிர்கொள்கிற தைரியத்தைக் கற்றுக்கொண்டது அவரிடம் தான். ஒரு நாள், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கு அழைத்துப் போனார். குளிப் பதற்காகக் காவிரி ஆற்றுக்குப் போனோம். நான் சோர்ந்து போய் காவிரிக் கரையில் தூங்கிவிட்டேன். எழுந்து பார்த்த போது, அழுக்கான என் சட்டையை எடுத்துத் துவைத்து, அது காய்வதற்காகக் காத்திருந்தார். அண்ணன் எனக்கு அம்மாவுமான தருணம் அது!” என்கிறார் இயக்குநர் சீமான்.

”பழ.பாரதி என்கிற என் பெயரை பழநிபாரதி என மாற்றி வைத்தவர் அண்ணன்தான். என் முதல் கவிதைத் தொகுப்பான ‘நெருப்புப் பார்வைகள்’ புத்த கத்தை முழுக்கத் திருத்தி வடிவமைச்சது, என்னை ஒரு கவிஞனாக அங்கீகரித்து மேடை களில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது என எல்லாமே அவர்தான். ஒருவேளை, இந்த அபிபுல்லா சாலையில் உள்ள அறிவுமதி அண்ணனின் இந்த அலுவலகம் இல்லை என்றால், நானெல்லாம் வெளி உலகத்துக்கு அறியப்படாத கவிஞனாகத்தான் இருந்திருப்பேன். எனக்கு மட்டு மல்ல, ஊரிலிருந்து கிளம்பிவரு கிற யாரோ ஒரு முகம் தெரியா தமிழனுக்குக்கூட இதுதான் உண்மையான சரணாலயமாக இருக்கிறது. என்னைப் போல பலரும் இங்கு வந்து போவதால், நாங்கள் அறிவுமதி அண்ணனின் நிழலில் நண்பர்களானோம். கவிதையும் கற்பனையுமாகக் கழிந்த மிக நீண்ட இரவுகள் அவை. செல்வபாரதி அப்போது எங்களுடன்தான் இருந்தார். அவரைப் பார்க்க சுந்தர்.சி வரு வார். நான் ‘புதிய மன்னர்கள்’ படத்தில் பாடல் எழுதியிருந்தேன். அதைக் கேட்டுவிட்டு, ‘எனது அடுத்த படத்துக்கு எல்லா பாடல்களையும் நீ எழுது’ என்று சுந்தர்.சி தந்ததுதான் ‘உள்ளத்தை அள்ளித் தா’. அந்தப் படத்தின் அத்தனை பாடல்களையும் அண்ணனின் அறையிலிருந்தே எழுதினேன். எனக்குத் திருப்பு முனையாக அமைந்தது அந்தப் படம்தான்!” என்கிறார் பழநிபாரதி.

”கணிதம் படித்த என்னை கவிதை எழுதத் தூண்டியதும், உதவி இயக்குநராக என்னைச் சேர்த்துவிட்டதும், ஆறு வருடம் என்னைத் தங்கவைத்துப் பாது காத்ததும் அண்ணன்தான். காதல் கவிதைகளில் எனக்கென ஓர் இடத்தைப் பிடித்ததில் என்னைவிடப் பெரிதான சந்தோஷம் அண்ணனுக்குதான். போட்டிகள் நிறைந்த இந்த வெப்பத்தைத் தாங்கும் நிழலாக, எனக்கு அண்ணன் இருக்கிறார்” என்கிறார் தபூசங்கர்.

”சினிமாவில் உதவி இயக்கு நராகச் சேர வேண்டும் என்கிற வேட்கையில்தான் சென்னைக்கு வந்தேன். என்னைப் பாடல் எழுதச் சொல்லி, திசை திருப்பி யது அண்ணன். இசைக்குப் பாடல் எழுதுவதற்குப் பயிற்சி எடுத்துக்கொண்டதும் இந்த அறையில்தான். என் முதல் கவிதைத் தொகுப்பான ‘பட்டாம் பூச்சி விற்பவன்’ புத்தகத்தை, அண்ணன் தன் ‘சாரல் வெளியீடு’ மூலமாகக் கொண்டுவந்தார். என்னை பாலுமகேந்திரா சாரிடம் உதவியாளராகச் சேர்த்துவிட் டார். அந்த அறைதான் எங்களுக்குச் சுவாசம் மாதிரி இருந்தது. ‘என்னைச் சந்திக்க கனவில் வராதே’ என்ற ஜப்பானியக் காதல் கவிதைகளின் மொழிபெயர்ப்பு நூலுக்கு, ‘சமர்ப்பணம் 73, அபிபுல்லா சாலை’ என்று எழுதியதும் அந்த நன்றியில்தான்” என்று சிலாகிக்கிறார் நா.முத்துக்குமார்.

இப்படி, அறிவுமதி வழிகாட்டிய கவிஞர் களெல்லாம் இன்று சினிமாவில் கொண் டாடப்படும் கவிஞர்களாகவும் கலைஞர் களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அறிவுமதியோ, இரண்டு வருடங்களுக்கு முன்பே, ‘இனி திரைப்படங்களில் பாடல் கள் எழுத மாட்டேன்’ என அறிவித்து விட்டார்.

”’உள்ளேன் ஐயா’ என்ற படத்துக்காகத் தான் புதுவை அற்புதம் எனக்கு இந்த அலுவலகத்தைப் போட்டுக்கொடுத்தார். இன்றுவரை அது தொடர்கிறது. ஒரு கவியரங்கத்தில் என் கவிதை களைக் கேட்ட பெரியவர் கவிஞர் மீரா அவர்கள், என்னை தமிழ் ஆசான் கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த அறிவுமதியைக் கவிதையில் வளர்த்தது அவர்தான். எனக்கு ஓர் அப்துல் ரகுமான் கிடைத்த மாதிரி இந்த கிராமத்து இளைஞர்களுக்கு நாம் இருக்க வேண்டும் என நினைத்தேன். அதைத்தான் இன்றுவரை செய்து வருகிறேன்.

சுந்தர்.சி., சீமான், செல்வபாரதி ஆகிய மூவரும் ஒரே காலகட்டத்தில் இந்த அறைக்கு வந்தார்கள். அப்படி வந்த தம்பி களில் முதலில் திரையில் வெளிச்சத்துக்கு வந்து, ஒரு இயக்குநராக வெற்றியடைந்து, தபூசங்கர், பழநிபாரதி, செல்வபாரதி என நிறைய தம்பிகளுக்கு வெளிச்சம் கொடுத்தது சுந்தர்தான். யுகபாரதி பாடல் கள் எழுதிக்கொண்டு இருந்த சமயத்தில் தான் இங்கு வந்து சேர்ந்தான். வார்த்தை களை ஒரு நேர்க்கோட்டில் கொண்டு வரும் வித்தையைக் கற்றிருக்கிறான். கபிலன் புதிய புதிய விஷயங்களைப் பாடல்களாக்குவதற்குக் கற்றிருக்கிறான். நா.முத்துக்குமார் சங்க இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரையில் பரிச்சயமுள்ள, அதை எளிய தமிழில் பாடல்களில் கொண்டு வரும் வித்தையைக் கற்றவன்.

பாலா மதுரையிலிருந்து வந்த நேரத்தில், என்னிடம் ஒரு நண்பர் அறிமுகப்படுத் தினார். அப்போது பாலாவும் பொன் வண்ணனும் ஒரே அறையில் தங்கியிருந் தார்கள். ‘வீடு’ படப்பிடிப்பு நடந்துகொண்டு இருந்தது. அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் பாலாவின் அறைக்குச் சென்று எழுப்பி, ‘வீடு’ படப்பிடிப்புக்கு அழைத் துச் செல்வேன். அந்தப் படம் முழுவதுமே படப்பிடிப்பை அருகிலிருந்து பார்த்துப் பணி யாற்றினான். அந்தப் படம் முடிந்ததும் பாலுமகேந்திரா, ‘இன்னொரு உதவியாளர் வேண் டும். யாராவது இருக்கிறார்களா?’ என்று கேட்டார். பாலாவைச் சொன்னேன். ‘யாரிடம் பணி யாற்றியிருக்கிறான்?’ என்றார். ‘உங்களிடம்தான். உங்களுக்குத் தெரியாமலேயே!’ என்று சொல்லிச் சேர்த்துவிட்டேன். ‘சேது’ கதையை என்னிடம் முதலில் சொல்லும்போதே என்னை அழவைத்தவன் பாலா.

அஜயன் பாலா ஒரு சிறுகதை ஆசிரியராகத்தான் என்னிடம் வந்தான். பின்பு அவனது உலக சினிமாக்களின் பரிச்சயம் என்னைப் பிரமிக்கவைத்தது. நந்தலாலா, சந்தங்களுடன் பாடல்கள் எழுதுவதில் சிறப்பானவன்.

சென்னைக்கு வந்த இத்தனை வருடங்களில் இத்தனைப் பாசமுள்ள இளைஞர்களை என் தம்பிகளாகச் சம்பாதித்திருக்கிறேன் என்பதை நினைக் கும்போது பெருமிதமாக இருக்கிறது” என்கிறார் கவிஞர் அறிவுமதி.

கலை வளர்க்கும் கம்பீரத் தோடு நிற்கிறது 73ம் எண் கட்டடம்!

நன்றி: ஆனந்த விகடன்



‘கலை, கவிதை எல்லாம் இருக்கட்டும். உலகின் எந்த நிலப் பரப்பிலிருக்கும் தமிழனுக்கும் ஒரு துயரென்றால் பொறுக்காத மனமுடையவர். பேசுவது, எழுதுவது என்று நிறுத்திக் கொள்ளாமல், களத்தில் இறங்கி இயங்குபவர். இளைஞர்கள் தமிழ் எழுத வருகிறார்கள் என்றால், தனக்கு வருகிற சந்தர்ப்பங்களையும் தாரை வார்த்துக் கொடுக்கிறவர். எப்போதும் நான்கு ‘தம்பி’களோடே இருப்பதால் சிந்தனையில் மார்க்கண்டேயர்… அவர்தான் அறிவுமதி. தான் ‘பாட்டாளி’ ஆன கதையை இங்கே பகிர்ந்து கொள்கிறார்…”பட்டிக்காட்டுப் பையனான என்னை, திரைப்பட வாசலுக்கு அழைத்துச் சென்றவர்கள் - பூவை செங்குட்டுவன், என் நினைவில் வாழும் நண்பர் -இயக்குநர் தசரதன் ஆகியோர். அந்த அல்லிநகரத்து அழகுக் கறுப்பனின் ‘பதினாறு வயதினிலே’ படம் பார்த்த பிறகு, இயக்குநராக வேண்டும் என்ற ஆவல்தான் எனக்குள் உயர்ந்ததே தவிர, பாடலாசிரியராக வரவேண்டும் என்ற எண்ணம் நொங்குநீர் தடவிய வேர்க்குருவாய் தணிந்துவிட்டது. ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப் படத்துக்கு நான் எழுதிய கவிதை மடலைப் படித்து வியந்த இயக்குநர் பாரதிராசா தன்னுடன் பணியாற்ற அழைத்தார். அதே நேரத்தில் இயக்குநர் பாக்யராச் அவர்களும் தன்னுடன் பணியாற்ற அழைத்தார். நான் பாக்யராசிடம் சேர்ந்தேன். அவரிடமிருந்து வல்லபன், பாலுமகேந்திரா, பாரதிராசா என இயக்குநர் பயிற்சி நீண்டது.

எனது இயக்குநர் பாலுமகேந்திரா தெலுங்கில் இயக்கிய ‘நிரீக்சனா’வை எனது நண்பர்கள் இரகுபதிரமணன், பாபு ஆகியோர் ‘கண்ணே கலைமானே’ என்று தமிழில் செய்தபோது, அதில் பாடல்கள் எழுத வற்புறுத்தினார்கள்.

‘தாலாட்டே! நீ தூங்கிப்போக நான் தாயானேன்!

நாள்காட்டித் தாள் தேங்கிப்போக நான் நீயானேன்!’என இசைஞானி இளையராசா இசையில் எழுதிய அந்தப் பாடல்களை மறக்க முடியாது.

அப்புறம்… ‘அன்னை வயல்’ திரைப்படத்தில் என் பொன்வண்ணன் எழுதச் செய்த இரு பாடல்கள். சிற்பியின் இசையில்…

‘பூவே! வண்ணப் பூவே! கிழக்கே பொட்டு வைத்தாயே!’ என்று என் திரைப்பயணம் துவங்கியது.

‘கிழக்குச் சீமையிலே’ திரைப் படத்தில் பணியாற்றுகிறபோது என்மீது நம்பிக்கை வைத்த அண்ணன் தாணு அவர்கள், ‘பிரியதர்சன் இயக்கும் ‘சிறைச் சாலை’ திரைப்படத்துக்கான உரையாடல்.. பாடல்கள் அறிவுமதி’ என்று அறிவிக்கப் போகிறேன். என்ன சொல்கிறாய்?’ என்றார். ‘சரி’ என்றேன்.

திரைத்துறையில் எனக்கு ‘விடுதலை’ பெற்றுத் தந்தது ‘சிறைச்சாலை’.

‘மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ,
இன்று எந்தன் சூரியன் பாலையில் தூங்குமோ,
கனவு கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமோ,
கவிதை விழிக்கும் நேரம் நீ உறங்கப் போகலாமோ..
ஆசை அகத்திணையா.. வார்த்தை கலித்தொகையா..
அன்பே நீ வா! வா! காதல் குறுந்தொகையா,
என அகத்துறைப் பாடல்களில் மட்டுமல்லாமல், விடுதலைப் போராட்ட வீரர்கள் பாடுவதாக அமைந்த..

‘வீரத்தைக் குண்டுகள் துளைக்காது!
வீரனைச் சரித்திரம் புதைக்காது!
நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள் வாடகை மூச்சில் வாழாது!
இழந்த உயிர்களோ கணக்கில்லை!
இருமிச் சாவதில் சிறப்பில்லை!
இன்னும் என்னடா விளையாட்டு
எதிரி நரம்பிலே கொடியேற்று!

என்கிற புறப்பாடலிலும் இலக்கியச் செழுமையுடன் தமிழ் செய்ய வாய்ப்புத் தந்தவர் அண்ணன் தாணு அவர்கள்தான்.

முதன்முதலில் இசைஞானி இளையராசா அவர்களோடு நேரிடையாக அமர்ந்து எழுதிய பாடல். ‘இராமன் அப்துல்லா’ படத்தில் இடம்பெற்ற ‘முத்தமிழே! முத்தமிழே!’ பாடல்தான். அதில் வரும் காதல் வழிச் சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை! நாணக்குடை நீ பிடித்தும் வேர்வரைக்கும் சாரல்மழை! என்கிற வரிகளை இசைஞானியும் பாலு மகேந்திராவும் தாய்மையுடன் பாராட்டினார்கள்.

‘தேவதை’யில் நண்பர் நாசருக்காக நான் எழுதிய பாடல்…

‘தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்

மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபம் அது காலங்காலமாய் காதல் கவிதைகள் பேசுமே’தீப ஒளியில் சூழலே பிரகாசிக்க அதி அற்புதமாக அந்தப் பாடலைப் படம் பிடித்திருந்தார்கள். பிரமாண்டங்களைக் காட்டி வித்தைகள் பண்ணுகிறவர்களுக்கு மத்தியில் எளிமையின் அழகால் சிறப்புச் சேர்த்திருந்தார் ராசா.

அதேபோல, ‘சேது’. என் தம்பி பாலாவின் முதல் படம். மனதின் வலியை அத்தனை உக்கிரமாக நான் அதுவரை உணர்ந்ததில்லை. காதலை இளமையின் கொண்டாட்டமாகவே பார்க்கத் தருகிற தமிழ்த் திரைப்பட உலகில் அதன் மறுபக்கத்தை, ஆன்மாவின் அலறலோடு அள்ளிக்கொண்டு வந்த பாலாவின் படத்தில்…

‘எங்கே செல்லும் இந்தப் பாதை யாரோ… யாரோ… அறிவார்’

பாடலை மறக்க முடியுமா? அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தந்த தமிழும், வாணியம்பாடியில் அப்துல் ரகுமான் அவர்கள் தந்த தமிழும்தாம் என்னுடைய பாடல்களில் இலக்கிய அழகுகள் ஒளிரப் பயன்படுகின்றன என்பதை இங்கே நான் நெகிழ்ந்த நன்றியில் பதிவுசெய்ய வேண்டும்.

‘பிரிவொன்றைச் சந்தித்தேன் முதல் முதல் நேற்று!
நுரையீரல் தீண்டாமல் திரும்புவது காற்று!
ஒருவரி நீ ஒருவரி நான்
திருக்குறள் நாம் அன்பே! அன்பே!
தனித்தனியே பிரித்து வைத்தால்
பொருள் தருமோ கவிதை இங்கே?’

‘பிரியாத வரம் வேண்டும்’ திரைப் படத்துக்காக எழுதிச் சென்றிருந்த இந்த வரிகளைப் படித்ததும் இசையமைப்பாளர் இராச்குமார் உணர்ச்சிவசப்பட்டுத் தனது விரலில் அணிந்திருந்த மோதிரத்தைக் கழற்றி எழுந்து நின்று என் விரலில் அணிவித்தார். ‘நான் தங்கம் அணிவதில்லை’ என்றேன். ‘இது உங்களுக்கில்லை.. தமிழுக்கு’ என்று கூறி கட்டியணைத்துக்கொண்டார்.

‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ பாடல் பதிவுகளின்போது இசைப் புயல் ஏ.ர். ரகுமான் அவர்களிடம் அண்ணன் தாணு அவர்கள் என்னைப் பற்றிக் கூறியிருக்கிறார். அதை நினைவில் வைத்து இயக்குநர் அழகம்பெருமாளிடம் சொல்லி ‘உதயா’ திரைப்படத்துக்காக ஒரு மெட்டு தந்து எழுதிக்கொண்டு வரும்படி கூறியிருந்தார். அது ஒரு மண விழாப் பாட்டு.

பனிக்குகையின் உச்சியிலிருந்து பனித்துளிகள் சொட்டிச் சொட்டி பனிச் சிற்பங்கள் உருவாக்குவதுபோல் அவர் உருவாக்கிய ‘புது வெள்ளைமழை… என் மேல் விழுந்த மழைத்துளியே… மார்கழிப் பூவே…’ போன்ற உயிரைப் பிழியும் மெல்லிய பாடல்களில் எனக்குப் பெருவிருப்பம். எனவே, அவரோடு இணைகிற முதல் பாடல் அத்தகைய மெல்லிய மெட்டாக இருந்தால் நலமாக இருக்கும் என்று கூறி இந்த மெட்டைத் திருப்பித் தந்துவிட்டேன். அதற்காக எதுவும் நினைக்காமல்.. ‘அப்படியா கூறினார்… அப்படியானால் அப்படியொரு பாடலை அவரை எழுதச் சொல்லுங்கள்.. பயன்படுத்துகிறேன்’ என்று சொல்லியனுப்பினார்.

‘அழவைப்பேன் உன்னை அன்பே!
என்னைக் கிள்ளி!
விழ வைப்பேன் உன்னை அன்பே!
என்னைத் தள்ளி
இதயம் திறந்து இறங்கிப் பார்த்தேன் நான் நான்
நான் துடிக்க மறந்து துள்ளிக் குதித்தாய் நீ நீ நீ
மழையைப் பிடித்து ஏறிப் பார்த்தேன்நான் நான் நான்
உயிரை உதறி உலரப்போட்டாய் நீ நீ நீ’

என்று நான் எழுதியனுப்பிய பாடலைப் படித்து மகிழ்ந்து, இன்னொரு மெட்டையும் தந்தனுப்பினார்.

‘ஊனே ஊனேஉருக்குறானே!

உயிரின்மீதே உயிரை வைத்துநசுக்குறானே!’என்ற இந்தப் பாடலுடன்தான் அவரை முதன்முதலாக அழகம் பெருமாளுடன் சந்தித்தேன். பாடலைப் படித்து மகிழ்ந்து, அன்றிரவே பாடகர்களை அழைத்துப் பதிவு செய்தார்.

‘தெனாலி’யிலும் உடனே வாய்ப்புத் தந்தார். ‘வல்லினம் மெல்லினம்இடையினம்நாணம் கூச்சலிடசிவந்தனம்’ இத்தகைய இலக்கிய அழகுகளை அவர் விரும்பிச் சுவைக்கிறார்.

சந்தம் நெருடாத, தமிழ்ச் சத்து குறையாத சொற்களுக்காகத் தாகம் வளர்த்துத் தவிப்பவர் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

‘தோம் தோம்
தித்தித்தோம்
தொலைவிலிருந்தும்
சந்தித்தோம்
கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல்பாடம் ஒப்பித்தோம்
தீண்டத் தீண்ட
தூண்டும்விரலைத்
திட்டிக்கொண்டே தித்தித்தோம்!’

என்ற பாடலை இயக்குநர் பிரசாத், எடுத்துப்போய் வித்யாசாகரிடம் தந்தார். அடுத்த அரை மணி நேரத்தில் பாடலுக்கான மெட்டு தயார்!

அடிப்படையில் நானொரு புலூசைக் காட்டுப் பிள்ளை. எனக்குள் அமெரிக்காவைத் திணிக்க நகரம் எவ்வளவோ முயற்சி செய்கிறது. ‘ஆங்கிலம் கலந்து பாடல் எழுதத் தெரியுமா?’ என்கிறது. ஊத்தாவுக்குள் சிக்கிய விறால்மீன் உள்நுழைந்து துழாவும் கைகளுக்கு அகப்படாமல் நழுவிப்போவதாய், நான் தப்பித்துக் கொண்டிருக்கிறேன். அம்மாவை விற்றுத்தானா பிள்ளைகளுக்குச் சோறு போட வேண்டும் என்கிற தவிப்பில் திமிறிக் கொண்டிருக்கிறேன்.இதற்கு நடுவிலும் என் புலூசைக் காட்டுத் தமிழையும் பாடல்களில் பயன்படுத்த வாய்ப்புத் தரும் இயக்குநர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் எப்படி நன்றி சொல்ல!

நடவு நடும் பெண்கள் எல்லாம் அழுக்கு பாடல்கள் தவிர! இது ஒரு சப்பான் நாட்டு அய்க்கூ. இதுதான் உண்மை.ஆனால், அத்தகைய நடவுப் பாடல்கள் செழித்துக் கிடந்த வயல்களில் இன்று போய்ப் பார்க்கிறேன். மோழி பிடித்து, வரிசை கட்டி ஏர் உழுத இடத்தில்… இன்று ஒற்றை உழுவண்டி பேரிரைச்சலில் உழுதுகொண்டிருக்கிறது. இந்தப் பேரிரைச்சலுக்கு நடுவிலும் அந்த வண்டியிலிருந்து கேட்கிறது திரையிசைப் பாடல்!

பாடல்களைப் பாடியபடியே உழுதவர்கள், இன்று பாடல்களைக் கேட்டபடியே உழுகிறார்கள். பாடல்களைப் பாடியபடியே மாட்டு வண்டி ஓட்டியவர்கள், இன்று பாடல்களைக் கேட்டபடியே பேருந்துகள் ஓட்டுகிறார்கள். உற்பத்தியாளர்கள் நுகர்வாளர்களாக மாற்றப் பட்டுவிட்டார்கள். அள்ளி அள்ளி இலவசமாகத் தந்தவர்களின் மீது, ‘வாங்கிக் கொள்ளுங்கள்’ என்கிற வணிகச் சூழல் சுமத்தப்பட்டிருக்கும் காலத்தில் வாழலாச்சே!”

நன்றி : ஆனந்தவிகடன்

காதல் படிக்கட்டுகள்

இது காதல் படிக்கட்டுகள் என்று ஜூனியர் விகடனில் தொடராக வந்தபோது அறிவுமதி அவர்கள் எழுதியது.


என் பேனாவிலும்
மை உண்டு
நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…
நீ இன்னும்
எழுதிக் கொண்டிருக்கிறாய்.

காதல் – கொடுப்பதன்று. எடுப்பதன்று. ஈர்த்துக் கவிழ்ப்பதன்று. மடக்குதல் அன்று. மடங்குதல் அன்று. எதிர்பார்த்த வெறியில்… எதிர்பாராத சொடுக்கில் கிடத்துதல் அன்று. இரக்கத்தில் கசிந்து இருளில் தேங்குதல் அன்று.

தேடல்கள்… தம் காத்திருத்தலின் தற்செயல் நிமிடத்தில் திகைத்துச் சந்தித்து… உள்திரும்பித் திருப்தியுறுவது. இரு ஞாபகங்கள் விரும்பி, ஒற்றை மறதிக்குள் அமிழ்வது.

அதை அறிய மனசு பூத்திருக்க வேண்டும். நிலா… மொட்டின் மீது வழிந்து விடுகிறது. பூதான் விந்துவாய் வாங்கிக் கொள்கிறது. காதலை வாங்கிக் கொள்ள எத்தனை பேருக்கு வாய்க்கிறது? காதலால் வாழ்ந்துகொள்ள எத்தனை பேருக்கு நேர்மை இருக்கிறது?

அது ஆணுக்கும் பெண்ணுக்குமாக நிகழ்வதா? ஆணுக்குள் இருக்கிற பெண்ணுக்கும் பெண்ணுக்குள் இருக்கிற ஆணுக்குமாக… எதிரெதிர் கண்ணாடிக்குள் நீளும் தொடர் பதிவுகளாய் நிகழ்வது.

அஃறிணையில் உயிரோட்டமாக இருக்கிற அது… உயர்திணையில் வெறும் உடலோட்டமாகி விடுகிறது. கற்பிதங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிற சமூக விலங்குகளுக்குக் கூண்டின் கூரைதானே வானம்! வானமற்றுப் போன வாழ்வில் சிறகுகளின் பாடல்கள் ஏது?

இந்தப் பிறவியில் சேர முடியாவிட்டால் என்ன… அடுத்தப் பிறவியில் சேர்ந்து வாழ்வோம் என்பதுவும்…உடல்களால் இணையாவிட்டால் என்ன… உயிர்களால் இணைந்து வாழ்வோம் என்பதுவும் ஏமாற்று. பொய்!

அது உடல் கடந்து நடப்பதா? உடல்களால் நடப்பது. சம அதிர்வுகளாலான மின்சேர்க்கை அது.

உடல்தொட்டதும் காதலை இழந்துவிடுகிறவர்கள் அதிகம். காதலைத் தொட்டு உடலை அடைபவர்கள் குறைவு – மிக மிக குறைவு.

ஸ்பரிசமும்…புணர்தலும் காதலின் நெருங்கிய மொழிகள். அவற்றைப் பேசாதே எனச் சொல்லும் தத்துவங்கள் யாவும் பொய் பேசும். வாழ்வின் வழிகள் முறித்துக் குளிர்காய்கிற எந்தச் சடங்கும் காதலைச் சிதைக்கும். பொருந்த நெருங்கும் முழுமைக்குள் சந்தேகங்கள் திணித்துச் சிரமம் செய்யும்.

அதனால்தான்… அடிமைச் சமூக அமைப்பில் வரலாற்று வழிநெடுக வாழ்ந்து பழகிவிட்ட நமக்கு, வாழ்க்கை மட்டுமல்லாது காதலும் போராட்டமாகிவிட்டது. அடுத்தவர்களிடமிருக்கிற நம்மை மீட்பதும்…நமக்குள் இருக்கிற அடுத்தவர்களை வெளியேற்றுவதுமான சிக்கல்கள் நிறைந்த போராட்டமிது!

இத்தகைய நெருடல்கள் நிறைந்த வாழ்வில்… காதலைச் சந்தித்ததாக யாரேனும் கூறினால் நம்ப மாட்டேன்! காதலிகளைச் சந்தித்திருக்கலாம். காதலன்களைச் சந்தித்திருக்கலாம். காதலை மட்டும் சந்தித்திருக்கவே முடியாது!

சூழ்ந்தார் துயரங்களை வீழ்த்தி எழாத எவருக்குள்ளும் காதல் எழாது – எழ முடியாது. காதலைப் போல ஒன்று எழலாம். அதுவே காதல் ஆகாது.

காதலென்பது என்ன… இழந்துவிட்டு வருந்துவதா? பிரிந்துகொண்டு அழுவதா? இல்லை…இல்லை.. ‘காதல்… காதல்… காதல்… காதல் போயின் சாதல்… சாதல்… சாதல்…’ சொன்ன பாரதியின் காதல் என்ன ஆனது? அவனது தொகுப்பில் பதினாறு விருத்தங்கள் ஆனது. ஆனாலும் சொல்கிறேன்…அவனது பிள்ளைக் காதல்தான் அவனைப் பிரபஞ்ச காதலனாக்கியது. அந்தத் தனிமனிதனை அதுதான் சமூக மனிதனாக்கியது. அதுதான் அவனிலிருஎந்து எழுந்து இன்னும் நித்திய நெருப்பாக நின்று எரிகிறது. அவனது போராட்ட உணர்வுக்குள் ஒன்பது வயதுச் சிறுமி ஒருத்தி ஊடுருவியிருக்கிறாள் என்கிற உண்மையை உணர்ந்தவர்களுக்குத் தான் தெரியும் – காதலின் பெருமை!

என்னை
எல்லோருக்கும்
பிடித்திருக்கிறது.
அவனையும்
எல்லோருக்கும்
பிடித்திருக்கிறது.
எங்களைத்தான்
யாருக்குமே
பிடிக்கவில்லை

மற்றபடி இங்கே காதல் கடிதங்கள் எழுதிக் கொள்பவர்களையும்… பரிசுப் பொருட்களை மற்றிக் கொள்பவர்களையும்.. எச்சில் இனிப்புகளை ருசிபார்ப்பவர்களையுமா காதலர்கள் என்கிறீர்கள்?

ஸ்கூட்டரில் அணைத்துப் போவதையும்… திரையரங்குகளில் உரசிப் படம் பார்ப்பதையும்…கடற்கரை இருளில் மடியில் படுத்துக் கிடப்பதையும் காதல் என்று நம்பச் சொல்கிறீர்கள்?

காதலின் எல்லை திருமணம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளவும் உரத்துச் சொல்லவும் இங்கே எத்தனை பேருக்குத் தெம்பு இருக்கிறது? தம் காதலை வெற்றி கொள்ளவும் தம் பிள்ளைகளின் காதலுக்கு வரவேற்புச் சொல்லவும் இங்கே எத்தனை பேருக்குப் பக்குவம் இருக்கிறது?

அதற்குக் காரணம் அவர்களல்ல; நீங்களுமல்ல. நானுமல்ல. குற்றமற்ற விலங்குகளை நமக்குள் நாமே வளர்த்துப் பழக நாட்கள் இன்னும் நமக்கு அமையவில்லை. நமது மனம் என்பது தொலைதூரத் தலைமுறைகளைத் தாண்டிய வேட்டைக் கால வாழ்வியற் கருத்துருவாக்கங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கற்பிக்கப்பட்ட மனோபாவங்களுக்குள் வாழப்பழகிவிட்டதனாலேயேயே, காதல் செய்தலும் மிகப்பெரிய சமூக குற்றமென நமக்குள்ளாகவே ஒருவன் எழுந்து நம்மை எச்சரிக்கிறான்.

காதல் குற்றமா? சமூக குற்றமா? நமக்குள் இருக்கிற புற மிருகங்களையும் அக மிருகங்களையும் உசுப்பிவிட்டு கடித்துக் குதற்ச்சொல்லி ரத்தம் ரசிப்பவனே அப்படிச் சொல்வான். சமூகச் சூழல்களின் சிலந்தி இழைகளிலிருந்து விடுபட்டு… வாழ்வின் இயல்புத் தளத்தில் இயற்கையின் இயக்கமாகிவிடச் சம்மதிக்கிற எவனும், அதனை அப்படி சொல்ல சம்மதிக்க மாட்டான்!

நாம் பிளந்து கிடக்கும் பிரபஞ்ச பிசிறுகள். காதலில் இணைகிற ஆணும் பெண்ணும் பிரபஞ்ச இயக்கத்தின் ஆணி வேருக்குள் நெகிழ்ந்து இறங்குகிறார்கள். அது இருவரின் முழுமையடைதல் இல்லை. முழுமைக்கான அடுக்குகளின் ஒழுங்கமைவில் அது ஒரு பகுதி.

இருட்டிக் கொண்டு வருகிற ஏதோ ஒரு மழைக்காலத்தில்… பாறையின் மீது வந்து ஒரு பெண் படுக்கிறாள் என்பது…அந்தப் பாறையிலிருந்து என்றோ தெறித்துச் சிதறிய ஒரு பகுதி மீண்டும் வந்து அதே இடத்தில் பொருந்துவதாக அர்த்தம். அந்தப் பெண்மீது அவலது அந்தக் கணத்தின் முழுச்சம்மதத்தில்…அவளது ஆண் கவிழ்ந்து இயங்கப் போகிறான் என்கிறபோது அவர்கலள் மட்டுமல்ல… அவர்களைச் சுமந்துள்ள பாறையும் சூழ்ந்துள்ள செடிகளூம்…செடிகளில் அமர்ந்துள்ள வண்ணத்துப் பூச்சிகளும் கூட அவர்களோடு சேர்ந்து இயங்கப் போகின்றன என்று அர்த்தம். காதலின் மையத்தில் குனிந்து முகம் பார்க்கிற எவரும் உலகச் சுழற்சியின் ஏதோ ஓர் ஒழுங்கின்மையைச் சரிசெய்கிறவர்களாகவே இருப்பார்கள்.

மேல் இமைகளில்
நீ இருக்கிறாய்.
கீழ் இமைகளில்
நான் இருக்கிறேன்.
இந்தக் கண்கள் கொஞ்சம்
உறங்கி விட்டாலென்ன?

வாழ்வின் இடையில் வந்து இடையில் போய்விடுகிற தற்காலிக அதிர்வு அல்ல அது. ஆயுளைக் கடந்தும் உடல்மாறிக்கொள்கிற நிரந்தர அதிர்வு.

காமத்துக்கான முன் ஒத்திகையாக அதனைக் கருதுகிறவர்களூக்கே அது தற்காலிகம். உடல்களால் காமம் பேசிமுடித்த திருப்தியில் உயிர்களால் காதல் பேச முடிகிறவர்களூக்கு மட்டுமே அது நிரந்தரம். அப்படிப் பேசிப் பழகப் பயிற்சி வேண்டும்.

எவரும் எவருக்கும் நன்றி சொல்ல நினைக்காத தருணங்களால் பேச வேண்டும், அதனை. உதடுகளின் மெல்லிய அதிர்வுகள் சாட்சியாக… ஈரத்தில் நனைந்த விழிகள் சாட்சியாக… அக்குளில் பூக்கும் வியர்வையின் வாசம் சாட்சியாக…ஏன் கூச்சங்கழிந்த நிர்வாணம் சாட்சியாக… இழையும் பெருமூச்சுக்களால் பேச வேண்டும் அதனை. பேசப் பேசப் பேசத் தெவிட்டாத பேச்சு அது. பேசியிருக்கீர்களா நீங்கள்?

நான் பேசியிருக்கிறேன். ஆணாக இருந்தல்ல. பெண்ணாக இருந்துதான் பேசியிருக்கிறேன். என்ன சிரிக்கிறீர்கள்? பெண்ணாகித்தான் பேசமுடியும். அதனை!

பெண்ணாகத் தெரியாத எந்த ஆணுக்கும் காதலின் தரிசனம் வாய்க்குமென்று நான் நம்பவில்லை. ஆயிரம் பெண்களுக்குரிய தாய்மையைத் தன் இதயத்துக்குள் ஏற்றுக்கொள்கிற ஆண்தான், ஒரு பெண்ணின் இதயத்துக்குள் இடம்பெறுகிற அருகதையுள்ளவனாகிறான்.

இருவராய் இணைந்து இருக்கையில் கூடத் தனிமையாய் இருக்கிற சுந்தந்திர சுகத்தை ஒரு பெண்ணுக்கு எவன் தருகிறானோ, அவண்தான் ஆண் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறான்!

அழகியக் கூண்டு செய்து… அதற்குள் அடக்கி வைத்து… ‘இது என் பறவை.. இது எனக்கு… எனக்கு மட்டுமே’ என்று எந்தப் பெண்ணையும் சொல்ல எந்த ஆணும் வெட்கப் படவேண்டும். விரும்பி வந்து ஒரு பறவை எவ்விதம் அமர்ந்ததோ அவ்விதமே விரும்பியவண்ணம் அது பறந்து செல்லுதலுக்கும் சிரமமற்றபடி கிளையாக இருக்கச் சம்மதித்தலே அணுக்கு அழகு.

உரிமை கொண்டாடுதல் அன்று உரிமை தருதலே காதல். தருதல் என்ற சொல்லுக்குள்ளும் ஓர் ஆதிக்கத்தனம் தெரிகிறதே! தருவதற்கு ஆண் யார்? தருதலும் பெறுதலுமற்ற கருனைப் பெருவெளியில் சிறகுச் சிக்கலின்றிப் பறத்தலே காதல்!

முழுவிடுதலையைச் சுவாசித்துப் பூப்பதுதான் காதல். எந்தச் சிறைக்குள்ளும்… எந்த விலங்குக்குள்ளும்… அடைபட்டு கட்டுப்பட்டு இருக்க சம்மதிக்காது அது.

என்னைச் செதுக்கியது பெண்மை. என்னில் சிற்பமானது காதல். எனக்குள் எல்லாமும் அதுதான். எல்லாமும் கற்றுத் தந்ததும் அதுதான்!

பூவைப் பறித்துவிடாமல் அதன் செடியிலேயே பார்த்து ரசிக்க… கைகளின் முடிப்பிசிறுகளில் சிக்கி நகரும் எறும்பை நசுக்கிவிடாமல் மெல்ல எடுத்து ஊதிவிட…அசையும் ஊதுவத்திப் புகையில் இசை கேட்க… பயணங்களூடே உடைக்கப்படும் பாறைகள் பார்த்து அழ… இறந்து கிடக்கும் வண்ணத்துப் பூசியை எடுத்துப் போய் அடக்கம் செய்ய… போக்குவரத்து மிகுந்த சாலையில் கிடந்து நசுங்கும் ஏதோ ஒரு குழந்தையின் ஒற்றைச் செருப்பைத் தவித்து எடுத்து ஓரமாய் வைக்க… அதுதான்… ஆம் … அதுதான் எனக்குக் கற்றுத் தந்தது. காதல் கற்றுத் தரும். காதல் எல்லாம் தரும். காதலியுங்கள். புரிந்துகொள்வதை அதிகம் பேசலாம். உணர்ந்து கொள்வதை?

அணுஅணுவாய்
சாவதற்கு
வாழ்வதற்கு
முடிவெடுத்துவிட்ட பிறகு
காதல்
சரியான வழிதான்.

ஹைக்கூ கவிதைகள்

அகதி முகாம்

மழையில் வருகிறது
மண் மணம்.

*****************

அவசரக் காற்று
முதல் மழை
புளியம் பூக்கள்.

*****************

மழைவிட்ட நேரம்
தேங்கிய நீரில்
முகம் பார்த்தது
தெருவிளக்கு.

*****************

விற்பனையில்
வண்ணத்துப் பூச்சி
துடிக்கிறது பூச்செடி.

*****************

தாய்க்காகக் காத்திருக்கிறேன்
மரத்தில் சாய்ந்தபடி.

*****************

இறந்த வீரன்
மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது
பாதி எழுதிய மடல்.

*****************

விடிந்துவிடு இரவே
விழித்திருக்கிறான்
கூர்க்கா.

*****************
வாழ்த்து அட்டை
முகவரியில் வருடினேன்
எழுதிய கையை.

*****************

எப்படிப் பாதுகாக்க
குடைக் கம்பியில்
உன் கைரேகை.

*****************

தொட்ட நினைவு
புரட்டிய பக்கத்தில்
கூந்தல் முடி.

*****************

பாவம் தூண்டில்காரன்
தக்கையின் மீது
தும்பி.

*****************

மரக்கிளையில் குழந்தை
வரப்பில் பண்ணையார்
பயிரில் சிந்துகிறது பால்.

*****************

வாழ்க்கை என்னடா வாழ்க்கை
கருவேலங் காட்டிற்குள்
வண்ணத்துப் பூச்சி!

*****************

எவன் நிலம்!
எவன் நாடு!
இலவச மனைப் பட்டா!

*****************

நந்தனைக் கொன்றதே சரி
குலதெய்வம் மறந்த
குற்றவாளி.

*****************

நொறுக்குவான் பண்ணையாரை
எல்லாக் கோபங்களோடும்
சுடுகாட்டில்.

*****************

தேவர் படித்துறை
பறையர் படித்துறை
அலைகள் மீறின
சாதி!

*****************

பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக
ஒரே ஆறு.

*****************

ஊருக்கு ஊர் வட்டிக்கடை
பொது இடங்களில்
தண்ணீர்த் தொட்டி
காறித்துப்புகிறான்
கணைக்கால் இரும்பொறை.

*****************

குருட்டுப் பாடகன்
தொடர்வண்டி சக்கரத்தில்
நசுங்கியது
புல்லாங்குழல்.

*****************

அன்று அதனை அடித்தாள்
இன்று அதுவாகி வெடித்தாள்
தாய் வழிச் சமூகம்.

*****************

ஒரே தலையணை
வெண்சுருட்டுப்
புகைக்குள்
திணறும்
மல்லிகை மணம்.

*****************

இரண்டு அடி கொடுத்தால்தான்
திருந்துவாய்!
வாங்கிக்கொள்
வள்ளுவனிடம்.

*****************

எங்கு தூங்குகிறதோ
என் கால்சட்டை காலத்தின்
குத்துப்படாத பம்பரம்.

*****************

கல்லூரி மணிக்கூண்டு
பழைய மாணவன்
விசாரிக்கும் மணியோசை.

*****************

ஒரு மரத்தை வெட்டுபவன்
மழையைக்
கொலை செய்கிறான்

*****************

கண்ணில் ஓவியம்
காதில் இசை
மழைப் பாட்டு

*****************

'இந்தியா டுடே'யில்
தமிழச்சி மார்புகள்!
கண்ணீரால் போர்த்தினேன்.

*****************

இரண்டு ஊதுபத்தி
புகையின் அசைவில்
நீ... நான்

*****************

நட்புக்காலம்

புரிந்து கொள்ளப்படாத
நாள்களின்
வெறுமையான
நாட்குறிப்பில்
தாமாகவே வந்து
அமர்ந்திருக்கிறது
எனக்குப்
பிடித்தமான
உன் புன்னகை.

பிழைக்கும் வழி

மொன்னைத் தமிழனே! முதலில் அன்னைத்
தமிழை
அறவே
மற! மற!
பிழைக்க வேண்டுமா?
ஆங்கிலம்கற்றுக் கொள்!
அது போதுமா என்றா
கேட்கிறாய்!
போதும்!
போதும்!
அது மட்டும்
போதும்!
ஆனால்
உயிர்
பிழைக்க வேண்டுமா?
மும்பை என்றால்
மராத்தி
கற்றுக் கொள்!
கர்நாடகம் என்றால்
கன்னடம்
கற்றுக் கொள்!
கொழும்பு என்றால்
சிங்களம்
கற்றுக் கொள்!

செம்மொழி‍ – காரணப் பெயர்

செல்லும் இடமெல்லாம்
செருப்படி
வாங்கி
சிவப்பாய் குருதி வழியும்
உதடுகளால்
பேசப் படுவதால்!

நீரோட்ட‌ம்!

கர்நாடகாவிலும்
இந்து!
தமிழ் நாட்டிலும்
இந்து!
இந்துக்கு இந்து
குடிநீர் த‌ர‌மாட்டாயா
இதுதானா இந்துத்துவா
உங்க‌ள்
தேசிய‌
நீரோட்ட‌ம்!

சிறைச்சாலைக்காக

இழந்த உயிர்களோ கணக்கில்லை


இருமிச் சாவதில் சிறப்பில்லை

இன்னும் என்னடா விளையாட்டு

எதிரி நரம்பிலே கொடியேற்று.

வீரத்தைக் குண்டுகள் துளைக்காது

வீரனைச் சரித்திரம் புதைக்காது

நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்

வாடகை மூச்சில் வாழாது.!

---------------------------------------------------------------

பிணப் பரிசோதனை

அய்யர் குடலிலும்

மலம்.

----------------------------------------------------------------

பறையர் சுடுகாடு

படையாட்சி சுடுகாடு

தலைமுழுக

ஒரே ஆறு.

-----------------------------------------------------------------

காதலித்துப் பார்!

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....

உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...

காதலித்துப்பார் !


தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...
காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...

காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...
இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...

வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...


இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்
காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்

காதலித்துப் பார்!

இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...

காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...

தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...

காதலித்துப் பார்!

சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...

அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...

காதலித்துப் பார்!

கவிதைக் காலங்கள்

1. சங்க காலம்


ஆற்றுத் தூநீர் ஆரல் உண்டு
குருகு பறக்கும் தீம்புனல் நாடன்
கற்றை நிலவு காயும் காட்டிடை
என்கை பற்றி இலங்குவளை ஞெகிழ்த்து
மேனி வியர்ப்ப மெல்லிடை ஒடித்து
வாட்கண் மயங்க உண்டதை மீண்டும்
பசலை உண்ணும் பாராய் தோழி

2. காவிய காலம்

பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார்
மின்னல் மிடைந்த இடையென்பார் - இன்னும்
கரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடிஉன் சொல்லில்
கரும்பிருக்கும் என்பார் கவி.

3. சமய காலம்

வெண்ணிலவால் பொங்குதியோ
விரக்தியால் பொங்குதியோ
பெண்ணொருத்தி நான்விடுக்கும்
பெருமூச்சாற் பொங்குதியோ பண்ணளந்த
மால்வண்ணன் பள்ளிகொண்ட பான்மையினால்
விண்ணளந்து பொங்குதியோ
விளம்பாய் பாற்கடலே!

4. சிற்றிலக்கியக் காலம்

தூக்கி நிறுத்திவைத்த கொண்டையாள் - மனம்
துள்ளி ஓடும்விழிக் கெண்டையாள் - நெஞ்சைத்
தாக்கி மறுநொடியில் தவிடுபொடியாக்கும்
சண்டையாள் - வெள்ளித் தண்டையாள்
முலை அதிரும்படி மணி உதிரும்படி
மனம் பதறும்படிஆடும் பாவையாள் - வில்
மாரன் பகைமுடிக்கத் தேவையாள்

5. தேசிய காலம்

சின்னஞ் சிறுகமலப் பூவினாள் - என்
சித்தத்திலே வந்து மேவினாள்
கண்ணில் ஜோதிஒன்று காட்டினாள் - என்
கவியில் காதல்ரசம்
விண்ணில் நிலவெரியும் வேளையில் - பொன்
வீணை கரம்கொண்டு மீட்டினாள்
மண்ணில் விண்ணகம் காட்டியே - அவள்
மறைந்தகதை எங்கு சொல்குவேன்?

6 .திராவிட காலம் - 1

இல்லாத கடவுள் போன்ற
இடைகொண்ட பெண்ணே உந்தன்
பொல்லாத அழகு பாடப்
பூவாடும் கூந்தல் பாட
சல்லாப விழிகள் பாடத்
தனித்தமிழ் கொண்டு வந்தேன்
நில்லாமற் போனால் கூட்டில்
நிற்குமோ எந்தன் ஆவி?

7. திராவிட காலம் -2

விண் - அப்பம் போன்ற நிலவுவந்து - காதல்
விண்ணப்பம் எழுதுகின்ற இரவு
முத்தமென்ற சொல்போல - நான்
இதழ்சேர வரும்போது உதடுஒட்டாத குறள்போல - நீ
தள்ளியா நிற்பது? விடையாட வேண்டும் வாடி என் கண்ணே
விடிவெள்ளி கண்ணயரும் முன்னே

8. புதுக்கவிதைக் காலம் -1

ஏப்ரல் சூரியன்
டீசல் புகை
பேருந்து நெரிசல்
அலுவலக எரிச்சல்
இவையெதிலும் வாடாமல்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
உனக்குத் தெரியாமல் உதிர்ந்து
யாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த
உன் கருங்கூந்தற் சிறுபூவை

9. புதுக்கவிதைக் காலம் - 2

உன்வீட்டு
ஆன்ட்டனாவிலும்
என்வீட்டு
நைலான் கொடியிலும்
தனித்தனியே காயும்
நேற்று
ஊருக்கு வெளியே நாம்
ஒன்றாய்
அழுக்குச் செய்த உள்ளாடைகள்

மெளனபூகம்பம்

அவளின் ஞாபகங்களே அவனுக்கு சுவாசம்

பன்னிரண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகு
அவளை அவன் பார்க்க நேருகிறது.
எங்கெனில்..
ஒரு ரயில் நிலையத்தில்.
எப்போதெனில்..
ஒரு நள்ளிரவில்.
எதிரெதிர் திசையில் செல்லும் ரயில்கள் இளைப்பாறிக்
கொள்ளும் அந்த இடைவெளியில்..
ரயில்களின் எதிரெதிர் பெட்டிகளில்
பழைய கண்கள் நான்கு பார்த்துக் கொள்கின்றன.

அப்பொழுது-
மனசில் எத்தனை மௌன பூகம்பம்!)
உன்னைப் பார்த்த
ஒரு நிமிஷத்தில்
இமைகளைக்
காணாமல் போட்டு விட்டன
கண்கள்.

நீதானா?
இல்லை-
வேறொருவன் கண்களால்
நான்
பார்ககிறேனா?

மனசின் பரப்பெங்கும்
பீச்சியடிக்கும் ஒரு
பிரவாகம்.
இதயத்தின்
ஆழத்தில் கிடந்த
உன்முகம்
மிதந்து மிதந்து
மேலே வருகிறது.

ஓ!
வருஷங்கள் எத்தனையோ
வழிந்த பிறகும்..
என்
மார்பு தடவும்
அதே பார்வை..
அதே நீ!
என் பழையவளே!
என்
கனவுகளில் அலையும்
ஒற்றை மேகமே!

உன் நினைவுகளில்
நான்
எத்தனையாவது பரணில்
இருக்கிறேன்?
அறிவாயா? என்
மீசைக்கும்
என்
காதலுக்கும்
ஒரே வயதென்று
அறிவாயா?

உன் பெயரை
மறக்கடிப்பதில்
தூக்க மாத்திரை கூடத்
தோற்றுப் போனதே!
ஓ!
நீ மாறியிருக்கிறாய்.
உன்
புருவ அடர்த்தி
கொஞ்சம்
குறைந்திருக்கிறது.

உன்
சிவப்பில் கொஞ்சம்
சிதைந்திருக்கிறது
உன்
இதழ்களில் மட்டும்
அதே
பழைய பழச்சிவப்பு.
இப்போதும்
நாம்
பேசப்போவதில்லையா?
வார்த்தைகள் இருந்தபோது
பிரிந்து போனவர்கள்
ஊமையான பிறகு
சந்திக்கிறோமா?

உன் நினைவுகள்
உன் கணவனைப் போலவே
உறங்கியிருக்கலாம்.
ஆனால்
என் நினைவுகள்
உன்னைப் போலவே
விழித்திருக்கின்றன.

ஓ!
இந்த
ரயில் வெளிச்சம்
நீ
அழுவதாய் எனக்கு
அடையாளம் சொல்கிறதே!
வேண்டாம்!

விழியில் ஒழுகும்
வெந்நீரால்
மடியில் உறங்கும்
உன்
கிளியின் உறக்கத்தைக்
கெடுத்து விடாதே!

இதோ
விசில் சத்தம் கேட்கிறது
நம்மில் ஒரு வண்டி
நகரப் போகிறது.
போய் வருகிறேன்!
அல்லது
போய்வா!
மீண்டும் சந்திப்போம்!
விதியை விடவும்
நான்
ரயிலை நம்புகிறேன்.
அப்போது
ஒரே ஒரு கேள்விதான்
உன்னை நான் கேட்பேன்!

"நீயும் என்னைக்
காதலித்தாயா?"

பூக்களும் காயம் செய்யும்

போடி போடி கல்நெஞ்சி! மார்புக்கு ஆடை
மனசுக்கு பூட்டு
ஒரே பொழுதில்
இரண்டும் தரித்தவளே!
காதல் தானடி
என்மீதுனக்கு?
பிறகேன்
வல்லரசின்
ராணுவ ரகசியம்போல்
வெளியிட மறுத்தாய்?
தூக்குக்கைதியின்
கடைசி ஆசைபோல்
பிரியும்போது ஏன்
பிரியம் உரைத்தாய்?
நஞ்சு வைத்திருக்கும்
சாகாத நாகம்போல்
இத்தனை காதல் வைத்து
எப்படி உயிர் தரித்தாய்?
இப்போதும் கூட
நீயாய்ச் சொல்லவில்லை
நானாய்க் கண்டறிந்தேன்
இமைகளின் தாழ்வில் -
உடைகளின் தளர்வில் –
என்னோடு பேசமட்டும்
குயிலாகும் உன்குரலில் –
வாக்கியம் உட்காரும்
நீளத்தில் -
வார்த்தைகளுக்குள் விட்ட
இடைவெளியில் –
சிருங்காரம் சுட்ட
பெருமூச்சில்
வறண்ட உதட்டின்
வரிப்பள்ளங்களில் –
நானாய்த்தான் கண்டறிந்தேன்
காதல் மசக்கையில
கசங்கும் உன் இதயத்தை.
சேமித்த கற்பு
சிந்தியா போயிருக்கும்?
நீயாக கேட்டிருந்தால்
நெஞ்சு மலர்ந்திருப்பேன்
உண்டென்றால்
உண்டென்பேன்
இல்லையென்றால்
இல்லையென்பேன்
இப்போதும் கூட
தேசத்துரோகமென்பதை
ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி
உள்ளாடும் காதலை
ஒளிக்கவே பார்க்கிறாய்
காதலில்
தயக்கம் தண்டனைக்குரியது
வினாடி கூட
விரயமாதல் கூடாது
காலப் பெருங்கடலில்
நழுவி விழும் கணங்களை
மீண்டும் சேகரிக்க
ஒண்ணுமா உன்னால்
இந்தியப் பெண்ணே!
இதுவுன்
பலவீனமான பலமா?
பலமான பலவீனமா?
என்
வாத்தியக்கூடம்வரை
வந்தவளே
உன் விரல்கள்
என் வீணைதடவ வந்தனவா?
இல்லை
புல்லாங்குழல் துளைகளைப்
பொத்திப்போக வந்தனவா?
என் நந்தவனத்தைக்
கிழித்துக்கொண்டோடிச்
சட்டென்று வற்றிவிட்ட நதி நீ
உன் காதலறிந்த கணத்தில்
என் பூமி பூக்களால் குலுங்கியது
நீ வணங்கிப் பிரிந்தவேளை
என் இரவு நடுங்கியது
பிரிவைத் தயாரித்துக் கொண்டுதானே
காதலையே அறிவித்தாய்
இருபதா? முப்பதா?
எத்தனை நிமிடம்?
என் மார்பு தோய்ந்து நீ
அழுததும் தொழுததும்
என் பாதியில்
நீ நிறையவும்
உன் பாதியில்
நான் நிறையவும்
வினாடித்துகள் ஒன்று
போதுமே சிநேகிதி
நேரம் தூரம் என்ற
தத்துவம் தகர்த்தோம்
நிமிஷத்தின் புட்டிகளில்
யுகங்களை அடைத்தோம்
ஆலிங்கனத்தில்
அசைவற்றோம்
உணர்ச்சி பழையது
உற்றது புதியது
இப்போது
குவிந்த உதடுகள்
குவிந்தபடி
முத்தமிட நீயில்லை
தழுவிய கைகள்
தழுவியபடி
சாய்ந்து கொள்ள நீயில்லை
என் மார்புக்கு வெளியே
ஆடும் என் இதயம்
என் பொத்தானில் சுற்றிய
உன் ஒற்றை முடியில்
உன் ஞாபக வெள்ளம்
தேங்கி நிற்குது
முட்டி அழுத்தி நீ
முகம்பதித்த பள்ளத்தில்
தோட்டத்துப் பூவிலெல்லாம்
நீ விட்டுப்போன வாசம்
புல்லோடு பனித்துளிகள்
நீவந்துபோன அடையாளமாய்க்
கொட்டிக் கிடக்கும்
கொலுசுமணிகள்
நம் கார்காலம்
தூறலோடு தொடங்கியது
வானவில்லோடு நின்றுவிட்டது
உன் வரவால்
என் உயிரில் கொஞ்சம்
செலவழிந்து விட்டது
இந்த உறவின் மிச்சம்
சொல்லக்கூடாத
சில நினைவுகளும்
சொல்லக்கூடிய
ஒரு கவிதையும்.

மேகங்கள் எனைத்தொட்டுப் போனதுண்டு…..

மேகங்கள் எனைத்தொட்டுப் போனதுண்டு – சில
மின்னல்கள் எனை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு – மனம்
சில்லென்று சிலபொழுது சிலிர்ததுண்டு
மோகனமே உன்னைப்போல என்னையாரும் – என்
மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆகமொத்தம் என்நெஞ்சில் உன்னைப்போல – எரி
அமிலத்தை வீசியவர் எவரும் இல்லை

கண்மணியே உன்னைக்காண வைத்ததாலே – என்
கண்களுக்கு அபிஷேகம் நடத்துகின்றேன்
பொன்மகளே நீ போகும் பாதையெல்லாம் – தினம்
பூஜைக்கு ஏற்பாடு செய்துவிட்டேன்
விண்வெளியின் மேலேறி உந்தன் பேரை – காதல்
வெறிகொண்டு கூவுதற்கு ஆசை கொண்டேன்
பெண்ணழகே உனைத்தாங்கி நிற்பதாலே – இந்தப்
பிரபஞ்சம் வாழ்கவென்று பாடுகின்றேன்

விதையோடு தொடங்குதடி விருட்சமெல்லாம் – துளி
விந்தோடு தொடங்குதடி உயிர்கள் எல்லாம்
சதையோடு தொடங்குதடி காமம் எல்லாம் – ஒரு
தாலாட்டில் தொடங்குதடி கீதமெல்லாம்
சிதையோடு தொடங்குதடி ஞானமெல்லாம் – சிறு
சிந்தனையில் தோன்றுதடி புரட்சியெல்லாம்
கதையோடு தோன்றுமடி இதிகாசங்கள் – உன்
கண்ணோடு தொடங்குதடி எனது பாடல்

உலகத்தின் காதலெல்லாம் ஒன்றே ஒன்றே – அது
உள்ளங்கள் மாறிமாறிப் பயணம் போகும்
உலகத்தின் முத்தமெல்லாம் ஒன்றே ஒன்றே – அது
உதடுகளில் மாறிமாறிப் பயணம் போகும்
உலகத்தின் உயிரெல்லாம் ஒன்றே ஒன்றே – அது
உடல்கள் மாறிமாறிப் பயணம் போகும்
உலகத்தின் சுகமெல்லாம் ஒன்றே ஒன்றே – என்
உத்தரவுக் கிணங்கிவிடு புரிந்து போகும்

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே – அடி
தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் – உன்
செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் – அது
தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்?
எவ்வாறு கண்ணிரண்டில் கலந்து போனேன் – அடி
எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்
இவ்வாறு தனிமையிலே பேசிக் கொண்டே – என்
இரவுகளைக் கவிதைகளாய் மொழிபெயர்த்தேன்

பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே – என்
பிரியத்தை அதனால்நான் குறைக்கமாட்டேன்
சரிந்துவிடும் அழகென்று தெரியும் பெண்ணே – என்
சந்தோஷக் கலைகளைநான் நிறுத்த மாட்டேன்
எரிந்துவிடும் உடலென்று தெரியும் பெண்ணே – என்
இளமைக்குத் தீயிட்டே எரிக்க மாட்டேன்
மரித்துவிடும் உறுப்பென்று தெரியும் பெண்ணே – என்
வாழ்வில் நான் ஒரு துளியும் இழக்கமாட்டேன்

கண்ணிமையின் சாமரங்கள் வீசும் காற்றில் – என்
காதல்மனம் துண்டுதுண்டாய் உடையக் கண்டேன்
துண்டுதுண்டாய் உடைந்த மனத்துகளை எல்லாம் – அடி
தூயவளே உனக்குள்ளே தொலைத்து விட்டேன்
பொன்மகளே உனக்குள்ளே தொலைத்ததெல்லாம் – சுக
பூஜைகொள்ளும் நேரத்தில் தேடிப் பார்த்தேன்
கண்மணிஉன் கூந்தலுக்குள் கொஞ்சம் கண்டேன் – உன்
கால்விரலின் பிளவுகளில் மிச்சம் கண்டேன்

கோடிகோடி ஜீவன்கள் சுகித்த பின்னும் – இன்னும்
குறையாமல் வீசுதடி காற்றின் கூட்டம்
கோடிகோடி ஜீவன்கள் தாகம் தீர்த்தும் – துளி
குறைந்தொன்றும் போகவில்லை காதல் தீர்த்தம்
மூடிமூடி வைத்தாலும் விதைகள் எல்லாம் – மண்ணை
முட்டிமுட்டி முளைப்பதுதான் உயிரின் சாட்சி
ஓடிஓடிப் போகாதே ஊமைப்பெண்ணே – நாம்
உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி

நெஞ்சிரங்க மாட்டீரா?………

நெஞ்சிரங்க மாட்டீரா?………


சொந்தநாய்களுக்குச்
சொத்தெழுதிவைக்கும் தேசங்களே!
ஓர் இனமே
நிலமிழந்து நிற்கிறதே
நெஞ்சிரங்க மாட்டீரா?

பூனையொன்று காய்ச்சல் கண்டால்
மெர்சிடீஸ் கார் ஏற்றி
மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!
ஈழத்து உப்பங்கழியில்
மரணத்தின் வட்டத்தில்
மனித குலம் நிற்கிறதே!
மனம் அருள மாட்டீரா?

வற்றியகுளத்தில் செத்துக்கிடக்கும்
வாளை மீனைப்போல்
உமிழ்நீர் வற்றிய வாயில்
ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு
ரொட்டி ரொட்டி ரொட்டியென்று
கைநீட்டும் விரல்கள்
கண்குத்தவில்லையோ அமெரிக்க அதிபரே!

தமிழச்சிகளின் மானக்குழிகளில்
துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்
சிங்களவெறிக் கூத்துகளை
அறிந்தும் அறியாயோ ஐ.நாவே?

வாய்வழி புகட்டிய தாய்ப்பால்
காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு
கண்வழி உகுக்கக் கண்ணீரின்றிக்
கதறும் தாய்மார் மறந்தொழிந்தாயோ
அழத்தெரியாத ஐரோப்பாவே!

அடுக்கிவைத்த உடல்களில்
எந்த உடல் தகப்பன் உடல் என்று தேடி
அடையாளம் தெரியாத ஒரு பிணத்துக்கு
அழுது தொலைக்கும் பிள்ளைகளின்
பெருங்குரல் கேட்டிலையோ பிரிட்டிஷ் அரசே!

எனக்குள்ள கவலையெல்லாம்
இனம் தின்னும்
ராட்சசபக்ஷே மீதல்ல

ஈழப்போர் முடிவதற்குள்
தலைவர்கள் ஆகத்துடிக்கும்
தலையில்லாப் பேர்வழிகள் மீதல்ல

எம்மைக்
குறையாண்மை செய்திருக்கும்
இறையாண்மை மீதுதான்
குரங்குகள் கூடிக்
கட்டமுடிந்த பாலத்தை
மனிதர்கள் கூடிக்
கட்ட முடியவில்லையே

ஆனாலும்

போரின் முடிவென்பது
இனத்தின் முடிவல்ல
எந்த இரவுக்குள்ளும்
பகல் புதைக்கப்படுவதில்லை
எந்த தோல்விக்குள்ளும்
இனம் புதைக்கப்படுவதில்லை

அங்கே
சிந்திய துளிகள்
சிவப்பு விதைகள்
ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்

பீரங்கி ஓசையில்
தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்
ஈழப்பனைமரத்தில்
என்றேனும் கூடுகட்டும்..

———————————————————————————————–

என் தலைவன்... - விவேக்; மனிதகுலத்துக்கே குரு- சரத்குமார்

என்ன இது... யாரைப் பற்றி இவ்வளவு புளகாங்கிதப்பட்டு புல்லரித்துள்ளார்கள் சினிமாக்காரர்கள் என்ற கேள்வி எழுகிறதா...


வேறு யார்.. நித்யானந்தாவைப் பற்றித்தான் இப்படி இமாலய ரேஞ்சுக்கு புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள் நடிகர்கள் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் நித்யானந்தர் எழுதிய 'ஜீவன் முக்தி' என்ற புத்தக வெளியீடு நடந்தது. ஏதோ எல்ஐசி பாலிசி மாதிரி இருக்கே என்று சுலபமாக நினைத்துவிட வேண்டாம். இந்தப் புத்தகத்தின் விலை ரூ 500க்கும் மேல்!

ரொம்ப கிராண்டாக இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தனர் நித்யானந்தாவின் தியான பீடத்தினர். இந்த விழாவில் ஆன்மீக உலகைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கவில்லை. ஆனால் சினிமாக்காரர்கள்தான் திரளாகக் கலந்து கொண்டனர்.

புத்தகத்தை வெளியிட்டதே நடிகர் சங்கத் தலைவர் சரத் குமார்தான்.

இவரைத் தவிர எஸ்ஏ சந்திரசேகரன், நடிகர்கள் விவேக், பார்த்திபன், இயக்குநர் பாலுமகேந்திரா, நடிகை மனோரமா என பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

சாம்பிளுக்கு சிலரது பேச்சுகள்:

எஸ்ஏ சந்திரசசேகரன்...
"இந்துக்களுக்கு கீதை, முஸ்லிம்களுக்கு குரான், கிறிஸ்தவர்களுக்கு பைபிள்... ஆனால் மனித குலத்துக்கே புனித நூல் இந்த ஜீவன் முக்தி!"

விவேக்...
"30 வயதில் கலைஞர் பராசக்தி படத்துக்கு வசனம் எழுதினார். ஆனால் இங்கே பராசக்தியே (நித்யானந்தா!!) 30 புத்தகங்களை எழுதியிருக்கிறது...
கதவைத் திறந்த வச்சா திருடன் வந்துடறான், ஜன்னலைத் திறந்து வச்சா பீரோ புல்லிங்... ஆனால் மனசைத் திறடா மகிழ்ச்சி பொங்கும்னு சொன்னாரே என் தலைவன் (நித்யானந்தன்)... அதற்கு இணையான எளிய தத்துவத்தை யாராவது சொல்ல முடியுமா... வாழ்க்கையின் தத்துவங்களை டிசைன் டிசைனா சொல்லியிருக்கும் அரிய பொக்கிஷம் இந்தப் புத்தகம்...."

பார்த்திபன்...
"மனித குலத்துக்கே ஒளிதரும் அரிய ஆன்மீகப் பேரொளி... இந்தப் புத்தகத்தில் இல்லாத விஷயங்களே இல்லை... இந்த ஒரு புத்தகம் வாங்கினால் போதும், ஒரு லைப்ரரியே நம் வீட்டுக்குள் வந்த மாதிரி..."

சரத்குமார்...
"மனிதகுலத்தின் மிகச் சிறந்த குரு நித்யானந்தர்..."

மேலே நீங்கள் படித்தவை சாம்பிள்கள்தான்.
 
- தட்ஸ்தமிழ்

'இலக்கணப் பிழை' யாகும் நித்யானந்தன்-ரஞ்சிதாவின் லீலை

சைக்கிள் கேப்பில் லாரியே ஓட்டும் சினிமாக்காரர்களுக்கு, தேசிய நெடுஞ்சாலை கிடைத்தால் விடுவார்களா...


நித்யானந்தா- ரஞ்சிதா விவகாரத்தை சுறுசுறுப்பாக சுட்டு சூடான சினிமாவாகத் தர முடிவு செய்துவிட்டது ஒரு குழு. அதுதான் 'இலக்கணப் பிழை' என்ற பெயரில் படமாகிறது!.

சாமானியன் முதல் சாமியார்கள் வரை சபலப்பட்டு தங்களின் எல்லைகளை மீறும்போது ஏற்படும் பிழையால் அவர்களின் வாழ்க்கை எப்படி புரட்டிப் போடப்படுகிறது என்பதுதான் இலக்கணப்பிழை படத்தின் கதை.

யுவா எண்டர்டெய்ண்மெண்ட்ஸ் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் திரைக்கு வரத் தயாராகயிருக்கும் இலக்கணப் பிழை படத்தில் ஆட்டோகாரனான கதாநாயகன் தனது கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்கும் படுக்கையறைக் காட்சி ஒன்று இடம்பெற்று இருக்கிறது.

சமீபத்தில் ஊடகங்களில் வெளியான சாமியார் நித்யானந்தாவின் படுக்கையறைக் காட்சிகள் மக்களிடையே மிகவும் பிரபலமாகி தொடந்து பேசப்பட்டு வருவதால், ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள படுக்கறைக் காட்சியை நீக்கிவிட்டு, கொஞ்சமும் மாற்றமில்லாமல், சாமியாரின் படுக்கையறைக் காட்சிகள் போல அதே கோணத்தில் படமாக்கவுள்ளாராம் இயக்குநர் ஜோ.

இதில் கதாநாயகன் காலை கள்ளக் காதலி அமுக்கி விடுவது, உணவு அளிப்பது, மாத்திரை வழங்குவது, தண்ணீர் கொடுப்பது உள்பட, தமிழர்களுக்கு 'நன்கு பரிச்சயமான' அத்தனை காட்சிககளும் இந்தப் படத்தில் உண்டாம்.

இந்தப் படத்தில் நடிக்கும் நாயகன் மற்றும் நாயகி புதுமுகம்.

இலக்கணப் பிழை படத்தின் சில காட்சிகளை எடிட்டிங்கில் பார்த்த தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர், பெரிய தொகை கொடுத்து தெலுங்கு உரிமையை வாங்கிக் கொண்டார் என்றார் இயக்குநர்.

தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளிவருகிறதாம் இலக்கணப் பிழை!

- தட்ஸ்தமிழ்

பேரபாயம் காத்திருக்கிறது...!

இது இன்றைய தினமணி இதழில் வெளியாகியிருக்கும் தலையங்கம்!

பேரபாயம் காத்திருக்கிறது...!

அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக.


மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. அதற்கு என்ன காரணமாம்?

அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.

உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா? இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது. அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது.

இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை?

இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பே விதிக்கப்பட்டதா, அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை.

இந்தச் சட்ட முன்வரைவைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. அணுக் கசிவாலோ, விபத்தாலோ மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயம் என்பது ஏதோ வாகன விபத்தாலோ, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளாலோ ஏற்படுவதுபோல, அப்போது ஏற்பட்டு முடிவடைவதல்ல. இதன் பின்விளைவுகள் தலைமுறைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்து இப்போதும் அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்போதும் பின்விளைவுகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. செர்னோபில் அணுஉலை விபத்தின் கோரம் இப்போதும் தொடர்கிறது.

இந்தச் சட்ட முன்வரைவு பொத்தம் பொதுவாக இழப்புத் தொகை இவ்வளவு என்று வரையறுக்கிறதே தவிர, அணுஉலை நிறுவுபவரின் நலனைப் பாதுகாக்கிறதே தவிர, இதனால் பாதிக்கப்படும் தனி நபருக்கும், அவரது வாரிசுகளுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன இழப்புத் தொகை என்பதைச் சொல்ல மறுக்கிறதே, ஏன்?

நிதியமைச்சகம் முன்வைத்த நியாயமான எதிர்ப்பு என்ன தெரியுமா? அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கவனக் குறைவாலோ, தொழில்நுட்பத் தவறாலோ ஏற்படும் விபத்துக்கு சராசரி இந்தியக் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து இழப்புத்தொகை தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான். அணு வியாபாரத்தில் ஈடுபட்டு லாபமடையத் துடிப்பவர்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி?

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் முன்வைத்த எதிர்ப்புகளைப் புறம்தள்ளி பிரதமரின் நேரடித் தலையீடு இந்தச் சட்ட முன்வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வைத்துவிட்டது.

இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீதான அமளி என்கிற சந்தடி சாக்கில் விவாதத்துக்கு உள்படுத்தப்படாமலே நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் அபாயம் காத்திருக்கிறது.

இந்தியக் குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பைத் தர வேண்டிய அரசு, அணுமின்சக்தி நிலையங்களின் நன்மைக்காகத் தனது கடமையைக் கைகழுவுகிறது. நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனிமனித உயிரின் மதிப்புத் தெரியாதவர்கள், தாய்நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஏவலாளிகள் என்றெல்லாம் நமது முன்னோர்கள் வர்ணித்த காலனி ஆட்சி போய், நம்மை நாமே ஆட்சி செய்யும் லட்சணம் இதுதானா?

ஆஸ்கர் 2010: தி ஹர்ட் லாக்கருக்கு 6; அவதாருக்கு 3 விருதுகள்!

ஆஸ்கர் 2010: தி ஹர்ட் லாக்கருக்கு 6; அவதாருக்கு 3 விருதுகள்!


2009-ம் ஆண்டின் சிறந்த படம், சிறந்த இயக்கம் உள்ளிட்ட 6 விருதிகளை தட்டிச் சென்றது தி ஹர்ட் லாக்கர் திரைப்படம்.

9 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்துக்கு மூன்று விருதுகள் மட்டுமே கிடைத்தன.

தி ஹர்ட் லாக்கரை இயக்கிய கேதரின் பிக்லோ, அவதார் இயக்குநர் கேமரூனின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆஸ்கர் விருது வரலாற்றில் முதல் முறையாக சிறந்த இயக்குநர் விருது வென்ற பெண் கேதரின் பிக்லோதான் என்பது மிக முக்கியமானது.

சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த எடிட்டிங், சிறந்த சவுண்ட் எடிட்டிங், சிறந்த சவுண்ட் மிக்ஸிங், சிறந்த ஒரிஜினல் ஸ்கிரீன்பிளே ஆகிய 6 பிரிவுகளில் தி ஹர்ட் லாக்கர் விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்கம் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸுக்கான விருதுகள் மட்டுமே அவதாருக்கே கிடைத்தன.

சிறந்த நடிகருக்கான விருது க்ரேஸ் ஹார்ட் படத்தின் நாயகன் ஜெஃப் பிரிட்ஜஸுக்குக் கிடைத்தது.

சிறந்த நடிகைக்கான விருது தி ப்ளைண்ட் சைட் பட நாயகி சான்ட்ரா புல்லக்குக்கு வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகைக்கான விருது நோ நிக்கிக்கும், சிறந்த துணை நடிகருக்கான விருது கிறிஸ்டோபர் வால்ட்ஸுக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த படத்துக்கான விருதுகள் அவதாருக்கே கிடைக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவை தி ஹர்ட் லாக்கருக்கு கிடைத்தது பார்வையாளர்களை அதிர வைத்தது. ஜேம்ஸ் கேமரூனுக்கும் இது அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.

இத்தனைக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கூட சொல்லிக் கொள்ளும்படியான வசூலை அந்தப் படம் பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது குறித்த சர்ச்சை கிளம்பியுள்ளது.

2009ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் முழு விவரம்:


சிறந்த நடிகர்: ஜெப் பிரிட்ஜஸ், படம்: க்ரேஸி ஹார்ட்

சிறந்த நடிகை: சான்ட்ரா புல்லக், படம்: தி ப்ளைண்ட் சைட்

சிறந்த படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த இயக்கம்: கேதரின் பிக்லோ, படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த எடிட்டிங்: பாப் முராவ்ஸ்கி – கிறிஸ் இன்னிஸ், படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த சவுண்ட் எடிட்டிங்: பால் என்ஜோ ஒட்டோசன், படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த சவுண்ட் மிக்ஸிங்: பால் என்ஜோ ஒட்டோசன் – ரே பெக்கட், படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த ஒரிஜினல் ஸ்க்ரிப்ட்: மார்க் பால், படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த கலை இயக்கம்: ரிக் கார்ட்ர், ராபர்ட் ஸ்ட்ராம்பர்க் (கலை இயக்கம்), கிம் சின்க்ளேர் (செட் அலங்காரம்), படம்: அவதார்

சிறந்த ஒளிப்பதிவு: மோரோ பியரோ, படம்: அவதார்

சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ்: ஜோ லெட்டரி, ஸ்டீபன் ரோஸன்பாம், ரிச்சர்ட் பென்ஹேம் மற்றும் ஆண்ட்ரூ ஆர் ஜோன்ஸ், படம்: அவதார்

சிறந்த துணை நடிகர் – கிறிஸ்டோபர் வால்ட்ஸ். படம்: இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்

சிறந்த துணை நடிகை – மோ நிக்கி, படம்: பிரிஸியர்

சிறந்த அனிமேஷன் படம்: அப்

சிறந்த இசை: மைக்கேல் ஜியாசினோ, படம்: அப்

சிறந்த இசை (ஒரிஜினல் ஸ்கோர்): இசை – பாடல்: ரையன் பிங்காம் மற்றும் டி போன் பர்னட், படம்: க்ரேஸி ஹார்ட்

சிறந்த டிசைனிங்: சாண்டி பாவல், படம்: தி யங் விக்டோரியா

சிறந்த டாகுமெண்டரி படம்: தி கோவ் (லூயி ஸியோஸ் மற்றும் பிஷர் ஸ்டீவன்ஸ்)

சிறந்த டாகுமெண்டரி (குறும்படம்): மியூசிக் பை ப்ரூடென்ஸ் (ரோஜர் ரோஸ் வில்லியம்ஸ் மற்றும் எலினார் பர்கெட்)

சிறந்த வெளிநாட்டு மொழிப் படம்: தி ஸீக்ரெட் இன் தேர் ஐஸ் (El Secreto de Sus Ojos), அர்ஜன்டைனா, இயக்கம்: ஜான் ஜோஸ் காம்பெனல்லா

சிறந்த மேக்கப்: பார்னி பர்மன், மின்டி ஹால் மற்றும் ஜோயல் ஹர்லோ

சிறந்த குறும்படம்: தி நியூ டெனன்ட்ஸ், இயக்கியவர்: ஜோக்கிம் பேக் – டிவி மேக்னஸ்ஸன்

சிறந்த அனிமேஷன் குறும்படம்: லோகரோமா, இயக்கம்: நிகோலஸ் ஷ்மெர்கின்.

- தகவல் > என் வழி

நல்வழி

கடவுள் வாழ்த்து


பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.

நூல்

1.

புண்ணியம் ஆம் பாவம் போம் போன நாள் செய்த அவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் - எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்.

2.
சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார்இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.

3.
இடும்பைக்கு இடும்பை இயல்பு உடம்பு இது அன்றே
இடும் பொய்யை மெய் என்று இராதே - இடும் கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு.

4.

எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்ய ஒண்ணாது
புண்ணியம் வந்து எய்த போது அல்லால் - கண் இல்லான்
மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே
ஆங்காலம் ஆகும் அவர்க்கு.

5.

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றால் போகா - இருந்து ஏங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.

6.

உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர் சுகம்
கொள்ளக் கிடையா குவலயத்தில் வெள்ளக்
கடல் ஓடி மீண்டு கரையேறினால் என்
உடலோடு வாழும் உயிர்க்கு.

7.

எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை - நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல்
பிரிந்திருப்பர் பேசார் பிறர்க்கு.

8.

ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்
கூட்டும்படி அன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணும் தனம்.

9.

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்ஆறு
ஊற்றுப் பெருக்காம்உலகு ஊட்டும் - ஏற்றவர்க்கு
நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து.

10.

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ? மாநிலத்தீர் - வேண்டாம்
"நமக்கும் அது வழியே; நாம் போம் அளவும்
எமக்கு என்" என்று இட்டு உண்டு இரும்.

11.

ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!
உன்னோடு வாழ்தல் அரிது.

12.

ஆற்றங் கரையின் மரமும் அரசு அறிய
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்
உழுது உண்டு வாழ்வதற்கு ஒப்பு இல்லை கண்டீர்
பழுது உண்டு வேறு ஓர் பணிக்கு.

13.

ஆவாரை யாரே அழிப்பார்? அது அன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்? ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்?
மெய் அம்புவி அதன் மேல்.

14.

பிச்சைக்கு மூத்தகுடி வாழ்க்கை பேசுங்கால்

இச்சை பல சொல்லி இடித்து உண்கை - சீச்சி
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர் விடுகை சால உறும்.

15.

சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை - உபாயம்
இதுவே; மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.

16.

தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால்
கண் நீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை
கற்பு அழியா ஆற்றல்; கடல் சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி.

17.

செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம்? - வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்!

18.

பெற்றார் பிறந்தார் பெரு நாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் என வேண்டார் - மற்றோர்
இரணங் கொடுத்தால் இடுவர்; இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்.

19.

சேவித்தும் சென்று இரந்தும் தெண் நீர்க்கடல் கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டு இசைத்தும் போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்.

20.

அம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும்
கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம் - இம்மை
மறுமைக்கும் நன்று அன்று மாநிதியம் போக்கி
வறுமைக்கு வித்தாய் விடும்.

21.

நீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும்
பேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான்.

22.

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்; - கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்?

23.
வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை.

24.

நீறில்லா நெற்றிபாழ்; நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ்; பாழே
மடக்கொடி இல்லா மனை.

25.

ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.

26.

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்.

27.

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்.

28.

உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண் புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்.

நித்யானந்தர் பெட்ரூமில் கேமரா வைத்த லெனின் பேட்டி...

""நக்கீரனால்தான்இந்த துணிச்சலான செயலை செய்யமுடியும். ஆன்மீகப் போர்வையைப் பொத்திக்கொண்டுசல்லாப ஆட்டம் போடுபவர்களை முகம் மறைக்காமல் வெளிப்படுத்த உங்களால்மட்டும்தான் முடியும்'' -தமிழகம் முழுவது மிருந்து வாசகர்களும்பொதுமக்களும் தொடர்புகொண்டபடியே இருக்கிறார்கள்.பரமஹம்ஸ(!) நித்யானந்தருடன் நடிகை ரஞ்சிதாநெருங்கியிருக்கும் காட்சிகளுக்காகத்தான்மக்களிடமிருந்து இந்த பாராட்டு.

உலகம் முழுவதும் பிரபல மான நித்யானந்தாவை சிக்க வைக்கும் வீடியோவை எடுத்த நபர் யார்?
கடந்த 6 மாத காலமாக நம்முடன் தொடர்பில் இருந்தவர். தற்போது தலைமறைவான அவரது இருப்பிடம் அறிந்து நேரில் சென்று சந்தித்தோம்.

முன்புபார்த்தபோது காவி உடை, உத்திராட்சம், நெற்றிப் பொட்டு என நித்யானந்தாபோலவே ஸ்ரீநித்ய தர்மானந்தாவாக (ஆசிரமத்தில் நித்யானந்தர் வைத்தபெயர்)இருந்தவர், இப்போது ஜீன்ஸ் பேண்ட்- ஷர்ட்டில் "உன்னைப்போல்ஒருவன்'கமலஹாசன் போல லேப்-டாப் சகிதம் இருந்தார். அவருடைய பழைய சிரிப்புமட டும்மாறவில்லை.

""மிகப்பெரியசாதனையைச் செய் திருக்கீங்க'' என்று கை கொடுத்தோம். அவர் அடக்கமாகப் புன்னகைத்தார். அந்த இளைஞரின் பெயர், லெனின். கம்யூனிஸ்ட்குடும்பத்தைச்சேர்ந்த தமிழ் இளைஞர். என்ன நடந்தது என்பதை விவரிக்கத்தொடங்கினார். அவர்உண்மைதான் பேசுகிறார் என்பதை தீர்க்கமான கண்கள்உணர்த்தின. (பாதுகாப்புகாரணங்களுக் காக அவரின் படம் வெளியிடப்பட வில்லை.)

""நான்கடவுள் நம்பிக்கையில்லாதவனாகத்தான் இருந்தேன். நித்யானந்தாவின்பிரசங்கங்களைக் கேட்க ஆரம் பித்ததும், அவர் மீது ஒரு ஈர்ப்புஏற்பட்டது.இத்தனை சின்ன வயதில், மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில்ஆன்மீகச் சேவைசெய்கிறாரே என்று ஆச்சரியப்பட்டேன். நாம் வாழ்ந்ததற்குஅடையாளமாக இந்தசமுதாயத்திற்கு ஏதாவது நன்மை செய்யவேண்டும்ங்கிற விருப்பத்தோடுதான் பெங்களூரில் உள்ள நித்யானந்தர் ஆசிரமத் தில் சேர்ந்தேன். இந்து மதவளர்ச்சிக்கு அவர் மூலம் என்னை அர்ப்பணித்துக்கொள்ளும் வகையில் தலையில் , சிறு குடுமியளவுக்கு முடியை விட்டுவிட்டு, மற்ற பகுதி களை மொட்டையடிச்சிக்கிட்டேன். காவி கட்டிக் கிட்டேன். ஜட்டி அணியக் கூடாதுஎன்பதால்லங்கோடுக்கு மாறினேன்.

முஸ்லிம்,கிறிஸ்டியன் என்ற பேதமில்லாமல் எல்லோருக்கும் நம்பிக்கையளிக்கும்விதத்தில் நித்யானந்தா பிரசங்கம் செய்தார். தியானம், யோகா,ஹீலிங் என்றுஉளவியல் சார்ந்த அவரோட செயல் பாடுகள் மன ஆற்றலைமேம்படுத்திக்கொள்வதற்குஊக்கமளித்தது. சரியான இடத்திற்கு வந்திருக்கிறோம்என்ற நம்பிக்கையுடன்ஆசிரமத்தில் இன்னும் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தேன். பல நாடுகளிலும்கிளைகள் விரிந்து, டாலர்களும் யூரோக்களும்கொட்ட ஆரம்பித்ததும் நான்தான்கடவுள் என்றும் சிவனின் அவதாரம் என்றும்பக்தர்களிடம் பிரசங்கம் செய்யஆரம்பித்துவிட்டார். அவர் உட்கார்வதற்குதங்க சிம்மாசனம் உருவாக்கப்பட்டது. ஒன்றல்ல, 10 தங்க சிம்மாசனம்.ஒவ்வொன்றும் தலா 25 லட்ச ரூபாய்மதிப்புடையது.

தன்னைசந்திக்க வரும் பக்தர்களைக் கட்டிப்பிடிக்கும் பழக்கத்தையும்ஆரம்பித்தார்.வசூல்ராஜா படத்தில் வருவதுபோல இதுவும் ஒரு கட்டிப்பிடிவைத்தியம்தான் என்றுஆசிரமத்தில் உள்ளவங்க சொன்னாங்க. அதாவது,நித்யானந்தரிடம் உள்ள எனர்ஜி,பக்தர்களுக்கு கிடைப்பதற்காகத்தான் இந்தகட்டிப்பிடி ஃபார்முலா என்றார்கள்.

அப்படின்னா, எல்லா பக்தர்களுக்கும் எனர்ஜி தரலாமே, ஏன் இளம்பெண்களுக்கு,அதிலும் பணக்காரபெண்களுக்கு மட்டும் இந்த கட்டிப்பிடி ஃபார்முலா என்றுஅவர்களிடம்கேட்டேன். சாமி, எது செய்தாலும் அதில் அர்த்தம் இருக்கும்னுசொன் னாங்க.

மாற்றங்கள்ஏற்படுவதை நான் புரிந்துகொண்டேன். இருந்தாலும், நம்பிக்கைகுறைய வில்லை.ஆசிரம சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தேன். நித்யானந்தாதங்கியுள்ளகுவார்ட் டர்சுக்கு அவரோட அனுமதி யில்லாம ஈ-காக்கைகூட நுழையமுடியாது. அந்தஇடத்துக்கு பெண் சாமியார்கள் போயிட்டு வருவதையும்அவங்களில் சிலர்கலங்கியிருப்பதையும் பார்த்தப்ப, ஏதோ மனக் குழப்பத்தில் இருக்காங்கன்னும்,அதற்காகத்தான் நித்யானந்தாகிட்டே போய் எனர்ஜிபெற்றுக்கிட்டுவர்றாங்கன்னும் நினைச்சேன். அதில் ஒரு பெண் சாமியார்ரொம்பவும் கலங்கியிருந்ததைப் பார்த்து அவர்கிட்டே பேசியப்பதான், தவறானஇடத்தில் வந்துமாட்டிக் கொண்டு, ஒரு அயோக்கியனை நம்பி இத்தனை நாளாசேவைபண்ணிக்கிட்டிருக்கோம்ங்கிற உண்மை தெரியவந்தது.

அந்தபெண் சீடர் சொன்ன விஷயங்கள் பகீரென்றிருந்தது. யாரையும் தன்குவார்ட்டர்சுக்குள் அவ்வளவு எளிதாக அனுமதிக்காத சாமியார், பெண்சீடர்களில்இளமையான- கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த அழகான பெண்களைமட்டும்அனுமதிக்கிறார் என்றும், இதற்கு அந்த ஆசிரமத்தில் உள்ள ஒருகேரக்டரேஉதவுகிறது என்றும் அந்த பெண் சாமியார் கண்கலங்கினார். (அந்தகேரக்டரைப்பற்றி அப்புறம் சொல்கிறேன்) பிரசங்கம், ஹீலிங், மெடிடேஷன் என்றபெயரில்அவர்களை வசியம் செய்தபிறகு, அவர்களை குவார்ட்டர்சுக்குள்வரச்சொல்வார். பணிவிடை என்ற பெயரில் இப்படி பல பெண்கள் சென்றாலும், ஒருவர்செல்வது இன்னொரு வருக்குத் தெரியாது. அந்தளவுக்கு நித்யானந்தர்மெயின்டெய்ன்செய்தார்.

தியானமண்டபத்துக்கு பக்கத்திலிருக்கும் அவருடைய அறைக்கோ அல்லதுஆசிரமத்தில் அவருக்கென்று இருக்கும் பிரத்யேகமான தங்குமிடத்திற்கோபணிவிடைப் பெண்கள்போக வேண்டும்.

எப்போதும்யாராவதுஒரு பெண்ணை பக்கத்தில்வைத்து தடவிக்கொண்டேதான்இருப்பார். ஒவ்வொருபெண்ணிடமும் தனித்தனியாக கவுன்சிலிங் செய்வார். ஹீலிங்என்ற பெயரில்சகஜமாகத் தொடுவார். தன்னை கிருஷ்ணருடைய அவதாரம் என்றும், தன்னுடன் உள்ளபெண்களை கோபியர்கள் என்றும் சொல்லிக் கொஞ்சுவார். அவர்மீதுள்ளபக்தியினாலும், அவரது மெடிடேஷன் திறமையாலும், குவார்ட்டர்சுக்கு செல்லும்பெண்கள் ஒரு கட்டத்தில், நித்யானந்தரின் எந்த விருப்பத்தையும்நிறைவேற்றும்மனநிலைக்கு வந்துவிடுவார்கள்.

உணவுபரிமாறுவது, கால் அமுக்கிவிடுவது, மாத்திரை கொடுப்பது என்றுதொடங்குகிறபணிவிடை அப்படியே செக்ஸ் பக்கம் திரும்பும். காமசூத்ரா போன்றபுத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொல்லு வார். ஆசிரமத்தில் யாரும்டி.வி.பார்க்கக்கூடாது என்று கட்டுப்பாடு உண்டு. நித்யானந்தர் அறையில்டி.வி,டி.வி.டி.பிளேயர் மட்டுமில்லாமல் அந்த மாதிரியான கேசட்டுகளும்இருக்கும்.கிருஷ்ண அவதாரமான தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளும் கோபியர், சீக்கிரமாக ஞானம் பெறலாம் என்று சொல்லியே படுக்கைக்கு உடன்படச் செய்துவிடுவார். அப்படித் தான் என்னிடம் பேசிய பெண் சீடரையும்உடன்படவைத்திருக்கிறார். இதையெல்லாம் அவர் என்கிட்டே சொன்னப்ப, இந்தஆசிரமம் ஒருடைட்டானிக் கப்பல். இது மூழ்க ஆரம்பிச்சிடிச்சி. கேப்டன்மட்டுமில்ல, இதிலபயணிக்கிறவங்களும் மூழ்க வேண்டியதுதான். தப்பிக்கமுடிஞ்சவங்கதப்பிச்சுக்குங்கன்னு சொன்னேன். ஏன்னா, அப்பவே என் மனசில் ஒருதிட்டம்உருவாயிடிச்சி. ஆன்மீக சேவைன்னு நம்பி இந்த ஆளால் என்வாழ்க்கையையே தொலைத்துவிட்டேனேங்கிற ஆத்திரம் மனதில் உருவானது. அதைஅடக்கிக்கிட்டு, இந்த அக்கிரமங்களை அம்பலப்படுத்த முடிவு செய்திட்டேன்.அதற்காக 3 மாசம்ப்ளான் பண்ணி, இந்த வீடியோவை எடுத்து முடித்தேன். இதில்எனக்கு ஆசிரமத்துக்குள்ளேயே பலர் ஒத்துழைச்சாங்க. எப்படி எடுத்தோம்ங்கிறதைஅப்புறம்சொல்றேன்.

ரஞ்சிதாவும்நித்யானந்தாவும் இருக்கிற வீடியோ காட்சிகளை நாடே பார்த்திருக்குது.நித்யானந்தர் குவார்ட்டர்சுக்குள் ஒரு பெண் நுழையணும்னாஅதற்கு எவ்வளவுகாலமாகும்னு ஏற்கனவே சொல்லியிருந்தேன்.ஆனா, நடிகை ரஞ்சிதாவிஷயம்அப்படியல்ல. 2009ல் சென்னையில் நடந்த நித்யானந்தாவின்கல்பதருநிகழ்ச்சிக்கு வந்தார் ரஞ்சிதா. அப்போதே அவருக்கு ஈர்ப்புவந்துவிட்டது. கல்யாண வாழ்க்கையில் நிம்மதியில்லாத ரஞ்சிதா, நித்யானந்தாவை சென்னையில் ஒரு வீட்டில் சந்தித்தார். 10 நிமிஷம் பேசினால் ப்ரெய்ன்வாஷ்பண்ணிவிடும்சக்தி நித்யானந்தாவுக்கு உண்டு. அதில் ரஞ்சிதாகிறங்கிப்போயிட்டார். ரொம்பபவ்யமான பக்தையாக நடந்துக்கிட்டார். அதனால,ரொம்ப சீக்கிரமாஆசிரமத்துக்குள் நுழைஞ்சு, நித்யானந்தாவின் குவார்ட்டர்சுக்குப்பக்கத்திலேயே தங்குற அளவுக்கு ரொம்ப சீக்கிரமா முன்னேறிட்டார். நித்யானந்தாவுக்கும் ரஞ்சிதாவின் பணிவிடைகள் பிடிச்சுப்போனதால, குறுகியகாலத்திலேயே தன்னோட குவார்ட்டர்சுக்குள் அனுமதிச் சிட்டார்.அவங்கஅன்னியோன் யத்தைத்தான் வீடியோவில் பார்த்தீங்க.

ஒருரஞ்சிதா மட்டுமல்ல... சாமியாரால் கட்டிலில் தள் ளப்பட்டு, வெளியே தெரியாதபல ரஞ்சிதாக்கள் ஆசிரமத்தில் இருக்கிறார்கள். ஆனால், நடிகைஎன்றுபார்த்தால் ரஞ்சிதா மட்டும்தான்'' என்று சொன்ன லெனின் என்கிற நித்யதர்மானந்தா, ஆசிரமத்தில் நடக்கும் மற்ற விஷயங்களையும் சொல்ல ஆரம்பித்தார்.

""பிடாடிஆசிரமத்தில் இன்னர் அவேக்கனிங் என்ற புரோகிராம் நடக்கும்.அதாவது, மனதுக்குவிழிப்புணர்ச்சி ஏற் படுத்தும் வகையில் நித்யானந்தர்அருளுரை வழங்குவார்.இது போன்ற ஒரு நிகழ்ச்சிக்கு கனடா நாட்டிலிருந்து ஒருபிரஜை வந்திருந்தார்.ஆசிரமத்தில் உள்ள அனந்தபுரி அபார்ட்மென்ட்டில்தங்கவைக்கப்பட்டிருந்த அவர்காலை 6 மணியளவில் அந்த அபார்ட்மென்ட்டுக்கு கீழே விழுந்துகிடந்தார். பலத்தஅடி பட்டிருந்த அவரை நாங்களெல்லாம் பார்த்தபோது, இரண்டாவது மாடி யிலிருந்துவிழுந்திருக்கிறார் என்றுதெரிந்தது. உடனடியாக அவரை பக்கத் தில் இருந்தபி.ஜி.எஸ்.மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். பரிசோதித்த டாக்டர்கள்,கொண்டுவரும் வழியி லேயே அவர் இறந்து விட்டார் என்று சொல்லிவிட்டார்கள்.

இறந்துவிட்டார்என்று உறுதி செய்யப் பட்டபிறகும், அந்த மருத்துவமனையின்ஓனரான கர்நாடகாவைச்சேர்ந்த பிரபல சாமியார் பாலகங்காதர் சாமி மூலம்டாக்டருக்குப் பிரஷர்கொடுத்து, பாடியை ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்துட்ரீட் மெண்ட் தர வைத்தார்நித்யானந்தர். அதோடு, ஹார்ட் அட்டாக்கினால்தான்அந்த கனடா நாட்டுக் காரர்இறந்துபோனார் என்று சர்டிபிகேட் கொடுக்கவும்பிரஷர் செய்தார் நித்யானந்தா.அப்படியே சர்டிபிகேட்டும் கொடுக்கப்பட்டது.கீழே விழுந்து அடிபட்டு, ரத்தம் கொட்டி, இறந்து போன வரின் உடலை போஸ்ட்மார்ட்டம்கூட செய்யாமல், ஹார்ட்அட்டாக் என்று சர்டிபி கேட் கொடுக்கவைத்தார் நித்யானந்தா.

இந்தவிஷயம் லோக்கல் போலீசுக்கும் தெரிந்துவிட்டது. அவர்கள் விசாரணைக்குவரும்முன்பே, வெயிட்டாக பணம் அனுப்பப்பட்டு விட்டது.விசாரணைமுடக்கப்பட்டுவிட்டது.

அதோடு இந்த செய்தி வெளியே வராதபடி சர்வ ஜாக்கிரதையாக மூடி மறைத்து விட்டார்கள் எங்கள் பீடத்து ஆட்களும் போலீசாரும்.

இறந்தவர்கனடா நாட்டுக்காரர் என்ற போதும், அவரது உடலை பெங்க ளூரிலேயேரகசியமாக எரித்து விட்டார்கள்'' என்ற லெனின், எல்லா மட்டங்களிலும் நித்யானந்தரின்தொடர்புகள் விரிந்திருப்பதையும் விளக்கி னார்.

""மெடிடேஷன்ங்கிறதுஒரு கலை. என்னைப்போன்ற பலர் அதை கற்றிருக்கிறார்கள்.ஆனா, நித்யானந்தா அதைஆன் மீகத்தோடு சேர்த்து வசியம் செய்ய ஆரம்பித்துவிட்டார். அவருடைய மெடிடேஷன், ஹீலிங் மூலம் உடல்நலன் குணமாவதாபலருக்கும் நம்பிக்கை வந்தது.இதன் மூலம் 60% பேருக்கு உடல் நலன்சரியாகும் என்பது உண்மை தான்.

நித்யானந்தர் அதையே தன்னோட பவரா காண்பிச்சிக் கிட்டார். அதனால பல வி.வி. ஐ.பிக்கள் அவரோட டிவோட்டி ஆயிட்டாங்க.

கர்நாடகமுதல்வரில் தொடங்கி, அமைச் சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள்,அரசு அதிகாரிகள் என்று பலரும் நித்யானந்தரின் பிறந்த தினகொண்டாட்டங்களுக்காகஆசிரமத் திற்கு வந்து போவதால், போலீசார் எப்போதுமேஆசிரம விஷயத்தில் அடக்கியே வாசிப்பார்கள். கர்நாடக முன்னாள் முதல்வர்எஸ்.எம் கிருஷ்ணாவின்மனைவிக்கு ஹீலிங் மூலம் சிகிச்சை தந்தார்நித்யானந்தா. அதனால கிருஷ்ணாஆட்சியில் நித்யானந்தா ஆசிரமம் ஓஹோன்னு வளர்ந்திடிச்சி. மத்திய மந்திரிகள்பலரும் நித்யானந்தருக்குப் பக்தர்கள்.உங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருசில மந்திரிகளையும் உயரதிகாரிகளையும்கூட எங்கள் ஆசிரமத்தில் பார்த்திருக்கிறோம். ஸ்டேட், சென்ட்ரல் என்றுஎல்லா இடத்திலும் தனது பக்தர்கள்இருப்பதால், எல்லா அக்கிரமத்தையும்துணிச்சலாகவே செய்வார் நித்யானந்தா.இங்கே நடக்கிற குற்றங்களையெல்லாம் மறைப்பதுதான் நித்யானந்தரின் செயலாளர்ஸ்ரீநித்ய சதானந்தா, பி.ஆர்.ஓ.நித்ய சேவானந்தா ஆகியோருக்கு முழுநேர வேலை.ஆசிரமத்தில் நடக்கும் குற்றங்களால் அதிக பாதிப்புக் குள்ளாகிறவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண்கள்தான்'' என்ற பகீர் தகவலையும் சொன்னார்லெனின்.

""லைஃப் ப்லிஸ்டெக்னாலஜி என்ற இலவச வகுப்பு இந்த ஆசிரமத்தில் ரொம்பபாப்புலர். அதில்கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டி லிருந்தும் மற்றமாநிலங்களிலிருந் தும்ஏராளமான இளம்பெண்களும் இளைஞர்களும் வருவார்கள்.இலவச வகுப்புமுடித்துவிட்டுப் போய் விடலாம் என்றுதான் அவர்கள்நினைத்திருப்பார்கள்.ஆனால், அவர்களை மூளைச் சலவை செய்து ஆசிரமத்திலேயேதங்கவைத்து விடுவார்கள்நித்யானந்தாவும் அவரது சீடர்களும். இப்படி இந்தஆசிரமத்தில் தற்போது சுமார்70 பிரம்மச்சாரிகளும் 50 பிரம்மச்சாரினிகளும்இருக்கிறார்கள். இதில் பலர்தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

இலவசவகுப்புக்குப் போன தங்கள் பையனோ பெண்ணோ திரும்பி வருவார்கள் எனக்காத்திருக்கும் பெற்றோர், பிள்ளைகள் வரவில்லை என்றதும் பதறியடித்துக் கொண்டுஇங்கே வருவார்கள். ஆனால், அவர்களை ஆசிரமத்து ஆட்கள் மதிக்கவேமாட்டார்கள்.சரியாகப் பதில் சொல்ல மாட் டார்கள். பிள்ளைகளை ஆசிரமத்திலேயே தங்க வைக்கபெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாதாடினால், அவர்களின்பையனையோ பெண்ணையோ ஆசிரமக்காரர்கள் அழைத்துக்கொண்டு வருவார்கள். அந்தப்பிள்ளைகள் வாயா லேயே,நாங்க இங்கதான் இருப்போம் என்று சொல்ல வைப்பார்கள். அந்தளவுக்குநித்யானந்தாவின் வசிய வேலைகள் நடந்திருக்கும். வீட்டுக்கு வரமறுக்கும்பிள்ளைகளை அவர்களது பெற்றோரோ, உறவினர்களோ வற்புறுத்தி அழைத்தால், அவர்களைஆசிரமக்காரர்கள் அடித்து விரட்டி விடுவார்கள். இந்தசம்பவங்கள்பற்றியெல்லாம் நிறைய புகார்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தமிழக ஸ்டேஷன்களிலும் கம்ப்ளைண்ட் கொடுக் கப்பட்டிருக்கிறது. ஆனால், தன்பவர்மூலம் எல்லாவற்றையும் சமாளித்து விட்டார் நித்யானந்தா.

தமிழ்நாட்டைச்சேர்ந்த 22 வயது பிரம்மச்சாரினி, தற்கொலைக்கு முயன்றசம்பவம் ஆசிரமத்தில்உள்ள எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்துவிட்டது.ரொம்பவும் வெகுளியான அந்தப்பெண்ணால், நித்யானந்தாவின் செக்ஸ்டார்ச்சர்களைத் தாங்க முடியலை. நடந்ததைநினைத்து நினைத்துஅழுதிருக்கிறார். இனிமேல் இங்கிருந்து தப்பிக்க முடியாதுஎன்றுதான் அந்தப்பெண் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்.

இந்தவிவகாரத்தையும் அமுக்கி, அந்தப் பெண்ணை சத்தமில்லாமல் அவளுடையவீட்டுக்குஅனுப்பிவைத்துவிட்டார்கள். வழக்கம்போல, போலீஸ் கேஸ்வராமலும்பார்த்துக்கொண்டது ஆசிரம நிர்வாகம்.

கனடாநாட்டைச் சேர்ந்தவர் மாடியிலிருந்து விழுந்து மர்மமான முறையில்மரணமடைந்தஒரு வாரத்தில், 18 வயது பெண் சந்நியாசி பூச்சி மருந்துகுடித்துதற்கொலைக்கு முயன்றார். இவரையும் பி.ஜி.எஸ்.மருத்துவமனைக்குத்தான் கொண்டுசென்றார்கள். மூச்சு பேச்சில்லாமல் 10நாட்கள் கோமாவில் கிடந்தார் அந்தப்பெண். இது சம்பந்தமாக பிடாடி, கெங்கேரிஇரண்டு காவல் நிலையங்களிலும்வழக்குப் பதிவு செய்யப் பட்டபோதும் எந்த நடவடிக்கையும் எடுக் கலை.

போனடிசம் பர் 24ந் தேதிகூட ஒரு சந்தியாசி இளைஞர் 14 தூக்கமாத்திரைகளைச்சாப்பிட்டு தற் கொலைக்கு முயன்றார். என்ன காரணம் என்றால்,டிசம்பர் 23ந்தேதி முதல் ஜனவரி 1ந் தேதி வரை ஆசிரமத்தில் பிரம்மோத்சவத்தைநித்யா னந்தாநடத்துவார்.

அதற்கானதொடக்க ஏற்பாடுகளை சரியாகச் செய்யவில்லை என்று, அந்த இளைஞரை கடுமையாகத்தாக்கிவிட்டார் நித்யானந்தா. அதனால்தான் அந்த இளைஞர், மாத்திரைகளைச் சாப்பிட்டார்.

வழக்கம்போலபி.ஜி.எஸ். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு போலீஸ் கேஸ்இல்லாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது என்று நம்மிடம் விரிவாக விளக்கியலெனின், ஆசிரமத்தில் உள்ள இளம் பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் என்றால்,இளைஞர்களுக்கு அடி-உதைதான். நித்யா னந்தாவே ஒரு மூங்கில் குச்சியைஎடுத்துவந்து,இளைஞர் களைக் கடுமையாகத் தாக்கு வார். அடி வாங்கினால் அந்தஇளைஞர் கொடுத்துவைத்தவர், சாமியே அடித்துவிட்டார் நமக்கு அந்த வாய்ப்புகிட்ட வில்லையேஎன்று மற்றவர்கள் ஏங்குவார்கள். அந்தளவுக்கு அவரை கடவுளாகஎல்லோரும் நினைத்தார்கள்.

ஒருசிலர்முகம் சுளித்தால், அந்த இளைஞர் குரு துரோகம் செய்துவிட்டதாகவும்,பாவத்திலேயே பெரிய பாவமே குரு துரோகம் தான் என்றும் ஆசிரமத்திலிருந்துபதில் வரும். ஆனால், குரு செய்கின்ற பெரிய பாவம் எதற்கும்எந்தத்தண்டனையும் கிடையாது. குருதுரோகத் திற்கான தண்டனையை இந்தஜென்மத்தில் மட்டுமல்ல, அடுத்தடுத்த ஜென் மங்களிலும் அனுபவிக்க வேண்டும்என்று தன்னுடையசீடர்களையும் பக்தைகளையும் மிரட்டி வைப்பார் நித்யானந்தா.

இவர்களிடம் பல பெண்களும் ஆண்களும் சிக்கிக்கொண்டு இருக்கிறார் கள்.

உண்மைகளை வெளியே சொன்னால் உயிருக்கு உத்தரவாதமில்லை என்ப தால்தான் எல்லோரும் பேசாமல் இருந்தோம்.

இப்போது,சாமியாரின் லீலைகள் வீடியோவாக வெளியாகி, அவருடைய யோக்கியதையை எல்லோரும் பார்த்து விட்டார்கள். இன்னும் பல பெண் சீடர்களுடன் நித்யானந்தாபரமானந்தமாகஇருக்கும் ஆதாரங்கள் இருக்கின் றன.

இனிமேலாவதுநடவடிக்கை எடுத்து, ஆசிரமத்தில் சிக்கியிருக்கும்நூற்றுக்கும் அதிகமானவர்களை மீட்க வேண்டும். நக்கீரனால் அது முடியும்''என்ற லெனின்என்கிற ஸ்ரீநித்ய தர்மானந்தாவின் கண்களில் நம்பிக்கை தெரிந்தது.

""இன்னும் பல விஷயங்கள் இருக்கு. அடுத்த சந்திப்பில் சொல்கிறேன்'' என்று விடைபெற்றார்.

- நன்றி - நக்கீரன்