திருக்குறள்

மத்திய பட்ஜெட் 2010-11... முக்கிய அம்சங்கள்!

2010-11-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.


அதன் முக்கிய அம்சங்களாவன:

* ஒருங்கிணைந்த வளர்ச்சி, முதலீட்டுக்கு ஏற்ற சூழ்நிலையை மேம்படுத்துவது, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வெளிப்படையான தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம்

* பட்ஜெட்டில் ரூ.11,08,749 கோடி செலவினம் திட்டமிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.6 சதவீதம் கூடுதலாகும்.

* திட்டச் செலவுகள் ரூ.3,73,092 கோடியாக, திட்டமில்லாச் செலவுகள் ரூ.7,35,657 கோடியாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டச் செலவுகள் 15 சதவீதமும், திட்டமில்லாச் செலவுகளுக்கான ஒதுக்கீடு 6 சதவீதமும் உயர்ந்துள்ளது.

* நிதி பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.5 சதவீதமாக இருக்கும். இது ரூபாய் மதிப்பில் ரூ.3,81,408 கோடியாக இருக்கும்.

* 2011-12-ம் ஆண்டில் நிதி பற்றாக்குறை 4.8 சதவீதமாகவும், 2012-13-ல் 4.1 சதவீதமாக இருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* நிகர சந்தைக்கடன் ரூ.3,45,010 கோடியாக இருக்கும்.

* நிகர வரி வருவாய் ரூ.7,46,651 கோடியாகவும், வரியில்லா வருவாய் ரூ.1,48,118 கோடியாகவும் இருக்கும்.

* பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் ரூ.25 ஆயிரம் கோடி திரட்டப்படும்.

* பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.16,500 கோடி அளிக்கப்படும்.

* டிசம்பர் 2009 வரை சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருந்து ஏற்றுமதி 127 சதவீதம் அதிகரித்துள்ளது.

* வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்காக நான்கு அம்ச யுக்தி கையாளப்படும். வேளாண் உற்பத்தியை அதிகரிப்பது, சேதத்தை குறைப்பது, கடன் ஆதரவு மற்றும் உணவுப்பதப்படுத்துதல் துறைக்கு முக்கியத்துவம் ஆகியவை இதில் அடங்கும்.

* வேளாண் கடனுக்கான இலக்கு ரூ.3,25,000 கோடியிலிருந்து ரூ.3,75,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

* குறித்த காலத்தில் கடனை திருப்பி செலுத்துவோருக்கு வரி தள்ளுபடி ஒரு சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

* அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.1,73,552 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீட்டில் 46 சதவீதமாகும். சாலை கட்டமைப்புக்கான ஒதுக்கீடு 13 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

* இந்திய அடிப்படை கட்டுமான நிதி நிறுவனம் மார்ச் 2011-ல் ரூ.20 ஆயிரம் கோடியை எட்டும்.

* மின்துறைக்கான ஒதுக்கீடு இரண்டு மடங்கிற்கு அதிகமாக உயர்த்தப்பட்டு ரூ.5130 கோடியாக உள்ளது.

* அடிப்படை கட்டுமானத் துறைக்கு கூடுதல் வரிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளன

* தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்களை கண்டறியும் ஆய்வுக்கு உதவ தேசிய தூய்மை எரிசக்தி நிதியம் அமைக்கப்படும்.

* சமூக மேம்பாட்டிற்கான செலவினம் ரூ.1,37,674 கோடியாகும். இது ஒட்டுமொத்த திட்டச் செலவில் 37 சதவீதமாக உள்ளது.

* கிராமப்புற மேம்பாட்டுக்கான ஒதுக்கீடு ரூ.66,100 கோடி ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

* தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ.40,100 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

* பாரத் நிர்மாண் திட்டத்திற்கான ஒதுக்கீடு ரூ.48 ஆயிரம் கோடி

* பின் தங்கிய பகுதிகளுக்கான மானிய நிதி ரூ.7300 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

* குடிசைகளில் வாழ்வோர் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கான ராஜீவ் வீட்டு வசதி திட்டத்திற்கான ஒதுக்கீடு 700 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.1270 கோடியாக உள்ளது.

* அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தேசிய சமூக பாதுகாப்பு நிதி ரூ.1000 கோடி முதலீட்டில் அமைக்கப்படவுள்ளது.

* ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் மகளிர் விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம்

* சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கல் அமைச்சகத்திற்கான ஒதுக்கீடு 80 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.4500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

* சிறுபான்மையினருக்கான ஒதுக்கீடு 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ.2600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* ஒட்டுமொத்த பொது கடன் நிலை மற்றும் அதனை குறைப்பதற்கான வழிகாட்டுதல்களுடன் கூடிய அறிக்கை ஆறு மாதத்தில் வெளியிடப்படும்

* அன்னிய நேரடி முதலீடுகளை எளிமைப்படுத்தும் வகையில் முதல் முறையாக உரிமை மற்றும் கட்டுப்பாடு ஆகியவை அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் மையப்படுத்தப்படும்.

* 2008-09-ல் எண்ணெய் மற்றும் உர பத்திரங்களுடன் 7.8 சதவீதமாக இருந்த நிதி பற்றாக்குறை 2009-10-ம் ஆண்டில் 6.9 சதவீதமாக உள்ளது.

* நிதித்துறை சட்டங்கள் மாற்றியமைக்கப்படும். நிதித்துறை சட்ட சீர்திருத்தங்கள் ஆணையம் அமைக்கப்படும்.

* பிரத்யேக அடையாள அட்டை வழங்கும் ஆணையத்திற்கு ரூ. 1,900 கோடி நிதி ஒதுக்கீடு. இந்தத் திட்டத்திற்கு தொழில்நுட்ப ஆலோசனைக்குழு அமைக்கப்படும்.

* பாதுகாப்பு துறைக்கான ஒதுக்கீடு ரு.1,47,344 கோடியாக அதிகரிப்பு.

* உரிய காலத்திற்குள் நீதி வழங்குவதற்காக தேசிய நீதி வழங்கல் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் இயக்கம் அமைப்பு.

* வருமான வரி முறை:

தனி நபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றமில்லை. இதனால், ரூ.1.6 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.

> ரூ.1.6 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை - 10 சதவீத வருமான வரி (இதுவரை 1.6 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை மட்டுமே 10 சதவீத வருமான வரி இருந்தது. இப்போது, ரூ.5 லட்சம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.)

> ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை - 20 சதவீத வருமான வரி (இதுவரை ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 20 சதவீதமாக இருந்தது. ரூ.8 லட்சம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

> ரூ.8 லட்சம் மற்றும் அதற்கு மேல் - 30 சதவீத வருமான வரி (இதுவரை ரூ.5 லட்சத்துக்கு மேலாக வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீத வருமான வரி இருந்தது.)

> மேலும், உள் கட்டமைப்பு பத்திரங்களில் முதலீடு செய்தால் ரூ.20 ஆயிரம் கூடுதலாகக் குறைப்பு.

இந்தப் புதிய தனிநபர் வருமான வரி விதிப்பின் மூலமாக, வருமான வரி செலுத்துவோரில் 60 சதவீதத்தினர் பயனடைவர் என பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

* உள்நாட்டு நிறுவனங்களுக்கு உபரி வரி 10 சதத்திலிருந்து 7.5 சதமாகக் குறைப்பு.

* குறைந்தபட்ச மாற்றுவரி 15லிருந்து 18 விழுக்காடாக அதிகரிப்பு.

* சிறிய தொழில்களுக்கு உத்தேச வரிக்கான டர்ன்ஓவர் வரையறை ரூ.60 லட்சமாக அதிகரிப்பு.

* தொழில்களுக்கு ரூ.60 லட்சம், பிரொஃபஷன் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சமாக தணிக்கைக்கான டர்ன்ஓவர் வரையறை நிர்ணயிப்பு.

* நேரடி வரி விதிப்பு திட்டம் வருவாயில் ரூ.26 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். ஆனால் மறைமுக வரி விதிப்பு மூலம் ரூ.46,500 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

* சேவை வரி விதிப்பு திட்டம் மூலம் நிகர வருவாயில் ரூ.3,000 கோடி லாபம்.

* செய்திகளை ஆன்லைனில் வழங்கும் அங்கீகரிக்கப்பட்ட செய்தி நிறுவனங்களுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு.

* தனி நபர் வரி செலுத்துபவர்களுக்கான சரல் 2 தயார்.

* சேவை வரி 10 விழுக்காடாகத் தொடரும்.

* சில குறிப்பிட்ட புதிய சேவைகளுக்கு சேவை வரி விதிப்பு.

* மைக்ரோ வேவ்வன், இறக்குமதி சரக்குகள், மொபைல் தொலைபேசிகள், கடிகாரங்கள், ஆயத்த ஆடைகள், விளையாட்டு பலூன்கள், மிளகு, வீடுகளில் பயன்படுத்தப்படும் குடிநீர் வடிகட்டி ஆகியவற்றின் விலை குறைப்பு.

* பொழுதுபோக்கு துறைக்கு சுங்கத் தீர்வில் சலுகை.

* இந்திய ரூபாய்க்கு முத்திரை.

* சுத்தமான சுற்றுச்சூழலை மேம்படுத்த சிறப்பு சலுகை தீர்வை. ஒரு டன் நிலக்கரிக்கு ரூ.50 என்ற விகிதத்தில் எரிபொருள் தீர்வை.

* மருத்துவ கருவிகள் இறக்குமதிக்கு ஒரே மாதிரியான அடிப்படை தீர்வை - 5 விழுக்காடு

* எலும்பு சிகிச்சையில் பயன்படும் செயற்கை மூட்டு, தட்டுகள் போன்றவை தயாரிக்கப் பயன்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு.

* பெட்ரோல், டீசலுக்கான கலால் தீர்வை லிட்டருக்கு ஒரு ரூபாய்.

* வேளாண்மை அது சார்ந்த துறைகளில் பெருமளவு வரிச் சலுகை.

* ட்ரெய்லர்கள், செமி ட்ரெய்லர்களுக்கு கலால் தீர்வையிலிருந்து முழு விலக்கு.

* செல்போன்கள், மருத்துவ உபகரணங்கள், செட்டாப் பாக்ஸ்கள், சி.டி., பொம்மைகள், மற்றும் புத்தகங்கள் மீதான வரி குறைப்பு.

* குளிர்ப்பதன நிறுவனங்களை அமைக்க இறக்குமதி திட்டங்களுக்கு சலுகை.

* சிகரெட், கார்கள், சிமெண்ட், எரிபொருட்கள், ஏர் கண்டீஷன், டி.வி.க்கள், இரும்பு, தங்கம், வெள்ளி, விலை மதிப்புள்ள கற்கள், மதுபான வகைகள் மீதான சுங்க வரி உயர்வு.

கழகங்களின் கமுக்கக் கணக்கு - யார் சுகவாசி?

அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று தன் தொண்டர் களுக்கு அறிக்கை விட்டதோடு... 'விலைவாசி குறித்த அக்கறை 'சுகவாசி' கருணாநிதிக்கு அறவே இல்லை!' என்று ஒரு சீற்றமும் காட்டியிருந்தார்! இது தி.மு.க. வட்டாரத்தை ரொம்பவே உசுப்பேற்ற... 'எங்கே போனாலும் ஹெலிகாப்டரில் பறக்கும் 'சுகவாசி' அந்த ஜெயலலிதா தான்... எங்கள் தலைவர் இல்லை!' என்று பதில் தகிப்பு காட்டினர்!


''கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக விழுப்புரத்தில் அ.தி.மு.க. நடத்திய போராட்டத்துக்கு தனி ஹெலிகாப் டரில்தான் வந்தார் ஜெயலலிதா. தேர்தல் கமிஷனின் பவளவிழாவுக்கும் தனி விமானத்தில்தான் டெல்லிக்குப் போனார்...'' என்றும் அறிவாலய வட்டாரம் தொடர்ந்து சொல்ல... 'சரி, கணக்கில் வராத - கணக்கு போட முடியாத செலவுகள் ஒருபக்கம் இருக்கட்டும்... இந்த இரண்டு திராவிடக் கட்சிகளும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிகாரபூர்வமாக எவ்வளவுதான் செலவழித் திருக்கின்றன?' என்ற கேள்வியோடு, தேர்தல் ஆணைய வட்டாரங்களில் விசாரித்தோம்.

''கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் இரு திராவிட கட்சிகளும் கோடிக்கணகான ரூபாய்களை செலவிட்டன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 2009 மார்ச் 2-ம் தேதி அன்று வங்கியிலும் கையிலும் 30 கோடியே 59 லட்சத்து 36 ஆயிரத்து 411 ரூபாய் ரொக்கமாக அ.தி.மு.க-விடம் இருந்தது. தேர்தல் செலவுக்காக கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடமும் பணம் வசூல் செய்தது கட்சியின் தலைமை. அந்த வகையில் 17 கோடியே 97 லட் சத்து 77 ஆயிரத்து 477 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இந்த நன்கொடையை சேர்த்தால் மொத்தமாக 48.57 கோடி ரூபாய்க்கு மேல் வைத்திருந்தது!

தேர்தல் அறிக்கை தயாரிப்பு, துண்டறிக்கை, போஸ்டர் கள், நோட்டீஸ்களுக்கு 93 லட்சத்துக்கு மேல் செலவு. தேர்தல் அறிக்கை, பென்டிரைவ் மூலமாகத்தான் பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டது. அதற்கான செலவு சுமார் 40 ஆயிரம் ரூபாய்! பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்த வகையில் 51 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயும் கட் அவுட், ஹோர்டிங், பேனர்கள், கொடிகள், வளைவு கள் ஆகியவற்றுக்காக மூன்று லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டது.

தேர்தலின்போது செல்போனில் தன் குரலை 'வாய்ஸ் மெஸேஜாக' ஒலிக்கச் செய்தும் ஜெயலலிதா ஓட்டுக் கேட்டார். இதற்காக 11.5 லட்சம் ரூபாய் செல்போன் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 40 தொகுதிகளிலும் ஜெயலலிதா பிரசாரம் செய்ய, விமானத்திலும் ஹெலிகாப்டரிலும் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஜெக்சன், ஏர் லிமோஸின்ஸ், இன்டர்நேஷனல் ஏர் சார்ட்டர் ஆகிய நிறுவனங்களுக்கு ஒரு கோடியே 89 லட்சத்து 17 ஆயிரத்து 171 ரூபாய் செலவானது. இதர செலவுகளையும் சேர்த்து தேர்தலுக்காக மட்டும் 4.10 கோடி ரூபாய்க்கு மேல் செலவானது!'' என்று மலைக்கவைத்தவர்கள், தி.மு.க. செலவை சொல்ல ஆரம்பித்தார்கள்.

''தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது தி.மு.க-விடம் 28.77 கோடி ரூபாய் கைவசம் இருந்தது. நன்கொடை, வேட் பாளர்கள் விண்ணப்பக் கட்டணம், வட்டி என்று வரவுகளையும் கணக்கு வைத்தால், சுமார் 36 கோடி ரூபாய் தேர்தலுக்கு முன்பு இருந்தது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு, துண்டறிக்கை, போஸ் டர்கள், ஆகியவை அச்சடித்ததற்காக சுமார் 35 லட்சம் ரூபாயும் பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுத்த வகையில் 4.19 கோடி ரூபாயும்... கட் அவுட், பேனர்கள், ஹோர்டிங், கொடிகள், வளைவு கள் ஆகியவற்றுக்காக 1.62 கோடி ரூபாயும், வாகனங் களை விமானத்தில் கொண்டுவந்த வகையில் 1.44 கோடி ரூபாயும் செலவழிக்கப்பட்டிருக்கிறது. இதர செலவுகளையும் சேர்த்து மொத்தமாக 7.76 கோடி ரூபாயை தேர்தலுக்கு தி.மு.க. செல வழித்திருக்கிறது.

இதெல்லாமே இந்தக் கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த கணக்குதான்! உதாரணத்துக்கு, பொதுக்கூட்டங்கள் நடத்த மட்டும் 53 லட்சத்துக்கு மேல் செலவெனக் கூறியது அ.தி.மு.க.! ஆனால், ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களை பார்த்தவர்களுக்கு அவை எவ்வளவு பிரமாண்டமாக இருந்தன என்பது புரியும். டி.வி-களில் இரண்டு கட்சிகளுக்கும் எவ்வளவு விளம்பரம் செய்தன என்பதையும் மறக்க முடியாது. எனவே, இந்தக் கணக்குகள் எல்லாம் ஒப்புக்கும், ஊருக்கும்தான்! ஒரு இடைத் தேர்தல் நடக்கும் தொகுதியிலேயே சரளமாகப் பணம் விளையாடும்போது, பொதுத்தேர்தலுக்கு எவ்வளவு பணம் இறைக்கப்பட்டிருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியுமே!'' என்றார்கள்.

- எம்.பரக்கத் அலி

வி

  1. விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
  2. விதி எப்படியோ மதி அப்படி.
  3. வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?
  4. விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
  5. விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
  6. வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.
  7. விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?
  8. விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.
  9. விளையும் பயிர் முளையிலே தெரியும்.வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்

வா

  1. வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்
  2. வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
  3. வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
  4. வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
  5. வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.
  6. வாழ்வும் தாழ்வும் சில காலம்.

  1. வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
  2. வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
  3. வடக்கே கருத்தால் மழை வரும்.
  4. வட்டி ஆசை முதலுக்கு கேடு.
  5. வணங்கின முள் பிழைக்கும்.
  6. வந்த விதி வந்தால் வாய் திறக்க வழியிருக்காது!
  7. வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.
  8. வருந்தினால் வாராதது இல்லை.
  9. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
  10. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு
  11. வல்​லான் வகுத்​ததே வாய்க்​கால்
  12. வளவனாயினும் அளவறிந் தளித்துண்
  13. வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.

மி, மீ, மு, மூ

மி
  1. மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.
  2. மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?
  3. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.
 மீ
  1. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
  2. மீ தூண் விரும்பேல்.
 மு
  1. முகத்துக்கு முகம் கண்ணாடி
  2. முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?
  3. முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.
  4. முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா
  5. முதல் கோணல் முற்றுங் கோணல்
  6. முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்.
  7. முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.
  8. முருங்கை பருத்தால் தூணாகுமா?
  9. முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.
  10. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
  11. முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?
  12. முன் ஏர் போன வழிப் பின் ஏர்
  13. முன்கை நீண்டால் முழங்கை நீளும்.
  14. முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?
  15. முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
  16. முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன்
  17. முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு

 மூ
  1. மூட கூட்டுறவு முழுதும் அபாயம்.
  2. மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.
  3. மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்.

மு

  1. முன் ஏர் சென்ற வழியே, பின் ஏர் செல்லும். (பெற்றோர் வழிதான், குடும்பம் செல்லும்.)
  2. முடிச்சு போட்டு பேசறவங்க, முட்டாள்.( நன்கு அறியாமல் பேசக்கூடாது.)

மா

  1. மாடம் இடிந்தால் கூடம்.
  2. மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
  3. மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா?
  4. மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது.
  5. மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.
  6. மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.
  7. மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.
  8. மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.
  9. மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.
  10. மாரடித்த கூலி மடி மேலே.
  11. மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.
  12. மாரி யல்லது காரியம் இல்லை.
  13. மாவுக்குத் தக்க பணியாரம்.
  14. மாற்றானுக்கு இடங் கொடேல்.
  15. மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?
  16. மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.

  1. மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கனும்.
  2. மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.
  3. மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.
  4. மண் குதிர்யை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
  5. மண்டையுள்ள வரை சளி போகாது.
  6. மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.
  7. மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.
  8. மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும்..., மண் தோடுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
  9. மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான்.
  10. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
  11. மருந்தும் விருந்தும் மூன்று வேளை.
  12. மருந்தே யாயினும் விருந்தோடு உண்.
  13. மலிந்த சரக்குக் கடைத் தெருவுக்கு வரும்.
  14. மலை அத்தனை சாமிக்குக் கடுகு அத்தனை கர்ப்பூரம் .
  15. மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
  16. மயிரை கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிர்
  17. மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.
  18. மவுனம் கலக நாசம்
  19. மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.
  20. மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
  21. மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.
  22. மனமுரண்டிற்கு மருந்தில்லை.
  23. மனம் உண்டானால் இடம் உண்டு.
  24. மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
  25. மனம் போல வாழ்வு.
  26. மன்னன் எப்படியே மன்னுயிர் அப்படி.
  27. மண்னுயிரை தன்னுயிர்போல் நினை.

பொ, போ

  1. பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்.
  2. பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
  3. பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.
  4. பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார்.
  5. பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
  6. பொறுமை கடலினும் பெரிது.
  7. பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.
  8. பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
  9. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
  10. போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?
  11. போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.

பெ, பே

  1. பெண் என்றால் பேயும் இரங்கும்.
  2. பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.
  3. பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
  4. பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.
  5. பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.
  6. பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.
  7. பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
  8. பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.
  9. பேசப் பேச மாசு அறும்.
  10. பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.
  11. பேராசை பெருநட்டம்.
  12. பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்

பூ

பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது

பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
பூவிற்றகாசு மணக்குமா?
பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.

பு

  1. புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
  2. புத்திமான் பலவான்.
  3. புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
  4. புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.

பா

  1. பாம்பு தின்கிற ஊர் போனால், நடுமுறி தமக்கு என்று இருக்க வேண்டும்!
  2. பாம்பின கால் பாம்பறியும்.
  3. பாம்பாடிக்குப் பாம்பிலே சாவு , கள்ளனுக்கு களவிலே சாவு .

  1. பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.
  2. பகுத்தறியாமல் துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.
  3. பகைவர் உறவு புகை எழு நெருப்பு.
  4. பக்கச் சொல் பதினாயிரம்.
  5. பசியுள்ளவன் ருசி அறியான்.
  6. பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்
  7. பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை.
  8. பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?
  9. பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
  10. படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.
  11. படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.
  12. படையிருந்தால் அரணில்லை.
  13. படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
  14. பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.
  15. பட்டவருக்கு பலன் உண்டு; பதவியும் உண்டு!
  16. பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.
  17. பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.
  18. பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
  19. பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.
  20. பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?
  21. பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும்.
  22. பணம் உண்டானால் மணம் உண்டு.
  23. பணம் பந்தியிலே குலம் குப்பையிலே.
  24. பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்
  25. பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.
  26. பதறாத காரியம் சிதறாது.
  27. பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.
  28. பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.
  29. பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.
  30. பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.
  31. பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
  32. பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.
  33. பல்லக்கு ஏய யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை.
  34. பல்லுப் போனால் சொல்லுப் பேச்சு.
  35. பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
  36. பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.
  37. பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.
  38. பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?
  39. பழம் பழுத்தால் , கொம்பிலே தங்காது.
  40. பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
  41. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
  42. பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.
  43. பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?
  44. பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.
  45. பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.
  46. பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி.

நெ

  1. நெய் முந்தியோ திரி முந்தியோ.
  2. நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?
  3. நெருப்பு என்றால் வாய்வெந்து போமா?
  4. நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ?
  5. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.

நு

  1. நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?
  2. நூலளவே யாகுமாம் நுண்ணறிவு.
  3. நூல் கற்றவனே மேலவன்.
  4. நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.
  5. நூற்றைக் கொடுத்தது குறுணி.

நீ

  1. நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம்.
  2. நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.
  3. நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
  4. நீர் மேல் எழுத்து போல்.
  5. நீலிக்குக் கண்ணீர் இமையிலே.
  6. நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.

நி

  1. நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.
  2. நித்திய கண்டம் பூரண ஆயிசு.
  3. நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு?
  4. நித்திரை சுகம் அறியாது.
  5. நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.
  6. நிழலின் அருமை வெயிலிற் போனால் தெரியும்.
  7. நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.

நா

  1. நா அசைய நாடு அசையும்.
  2. நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.
  3. நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் அவசியமா ?
  4. நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்.
  5. நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம்.
  6. நாய் இருக்கிற சண்டை உண்டு.
  7. நாய்க்கு வேலையில்லை நிறக நேரமும் இல்லை.
  8. நாய் விற்ற காசு குரைக்குமா?
  9. நாலாறு கூடினால் பாலாறு.
  10. நாள் செய்வது நல்லார் செய்யார்.
  11. நாற்பது வயதுக்கு மேல் நாய் குணம்.

  1. நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான்.
  2. நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி.
  3. நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
  4. நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா !
  5. நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது.
  6. நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்
  7. நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும்.
  8. நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.
  9. நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?
  10. நயத்திலாகிறது பயத்திலாகாது.
  11. நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.
  12. நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.
  13. நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை.
  14. நல் இணக்க மல்லது அல்லற் படுத்தும்.
  15. நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது.
  16. நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ?
  17. நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.
  18. நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
  19. நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.

து

  1. துட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ , திட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ?
  2. துணிகிறவருக்கு வெட்கம் இல்லை; அழுகிறவருக்கு துக்கம் இல்லை

தா

  1. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்
  2. தாய்வீடு ஓடிய பெண்ணும் பேயோடு ஓடிய கூத்தும் ஒன்று
  3. தாயிற் சிறந்ததோர் கோவிலுமில்லை. (அம்மாவை விட, சிறந்த தெய்வம் எங்கும் இல்லை)
  4. தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்
  5. தானத்தில் சிறந்தது நிதானம்
  6. தானிருக்கும் அழகுக்குத் தடவிக்கொண்டாளாம் வேப்பெண்ணெய்

  1. தங்கம் தரையிலே தவிடு பானையிலே.
  2. தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
  3. தடி எடுத்தவன் தண்டல்காரனா ?
  4. தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே.
  5. தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
  6. தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
  7. தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
  8. தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.
  9. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் .
  10. தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.
  11. தந்தையோடு கல்விபோம்; தாயோடு அறுசுவை உண்டிபோம்.(பெற்றோர் தரும் கல்வியும், உணவுமே சிறந்தவை)
  12. தந்தை சொல் மிக்கதொரு மந்திரமில்லை. (அப்பா கூறும் அறிவுரைகளே, அறங்களில் உயர்ந்தவை ஆகும்.)
  13. தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
  14. தருமம் தலைகாக்கும்.
  15. தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
  16. தலை இருக்க வால் ஆடலாமா ?
  17. தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?
  18. தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?
  19. தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
  20. தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.
  21. தவளை தன் வாயாற் கெடும்.
  22. தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்.

சோ

  1. சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
  2. சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே..
  3. சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.

சொ

  1. சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
  2. சொல் அம்போ வில் அம்போ?
  3. சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.
  4. சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.
  5. சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.
  6. சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.
  7. சொல்வல்லவனை வெல்லல் அரிது.
  8. சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.
  9. சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.
  10. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.

செ, சே, சை

செ
  1. செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?
  2. செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
  3. செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?
  4. செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.
  5. செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.
  6. செயவன திருந்தச் செய்.
  7. செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
  8. செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?
  9. செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.
  10. சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.

 சே
  1. சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.
  2. சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
  3. சேற்றிலே செந்தாமரை போல.
சை
  1. சைகை அறியாதவன் சற்றும் அறியான்.

சு, சூ

  1. சுக துக்கம் சுழல் சக்கரம்.
  2. சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
  3. சுட்ட சட்டி அறியுமா சுவை.
  4. சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
  5. சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.
  6. சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.
  7. சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
  8. சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே
  9. சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
  10. சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.
  11. சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
  12. சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.
  13. சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.
  14. சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.

சா

  1. சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.
  2. சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
  3. சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.
  4. சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
  5. சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
  6. சாண் ஏற முழம் சறுக்கிறது.
  7. சாது மிரண்டால் காடு கொள்ளாது.
  8. சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம்.
  9. சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.
  10. சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.

  1. சங்கு ஆயிரம் கொண்டு வங்காளம் போனால், பொன்பாளம் வந்தாலும் வரும்; மண்பாளம் வந்தாலும் வரும்!
  2. சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி
  3. சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
  4. சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
  5. சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
  6. சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா
  7. சர்க்கரை என்றால் தித்திக்குமா?

கோ

  1. கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.
  2. கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
  3. கோடி வித்தையும் கூழுக்குத்தான்
  4. கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
  5. கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
  6. கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
  7. கோபம் சண்டாளம்.
  8. கோபுரம் தாண்டுகிற குரங்குக்கு குட்டிச் சுவர் என்ன பிரமாதம்!
  9. கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
  10. கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
  11. கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
  12. கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்
  13. கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
  14. கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.

கொ

  1. கொடிக்கு காய் கனமா?
  2. கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
  3. கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
  4. கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.
  5. கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
  6. கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
  7. கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
  8. கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
  9. கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
  10. கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
  11. கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் .
  12. கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.

கை

  1. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
  2. கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா
  3. கைத் துப்பைக் கொண்டு காரியம் இல்லை; வாய்த் துப்பைக் கொண்டு வாழ வந்தேன்
  4. கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
  5. கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்
  6. கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்
  7. கையிலே காசு வாயிலே தோசை
  8. கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
  9. கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
  10. கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலம்

கே

  1. கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
  2. கேட்ட தெல்லாம் நம்பாதே? நம்பிந்தெல்லாம் சொல்லாதே?
  3. கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
  4. கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.

கெ

  1. கெடுக்கினும் கல்வி கேடுபடாது
  2. கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது
  3. கெடுவான் கேடு நினைப்பான்
  4. கெட்டாலும் செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
  5. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
  6. கெட்டும் பட்டணம் சேர்
  7. கெண்டையைப் போட்டு வராலை இழு.
  8. கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
  9. கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.

கூ

  1. கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
  2. கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
  3. கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
  4. கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
  5. கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.

கு

  1. குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
  2. குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
  3. குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
  4. குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
  5. குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
  6. குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
  7. குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.
  8. குணத்தை மாற்றக் குருவில்லை.
  9. குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
  10. குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
  11. குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
  12. குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
  13. குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
  14. குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
  15. குப்பை உயரும் கோபுரம் தாழும்.
  16. குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
  17. குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
  18. குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
  19. குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே
  20. குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
  21. குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
  22. குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
  23. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
  24. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
  25. குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
  26. குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
  27. கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
  28. குரங்கின் கைப் பூமாலை.
  29. குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
  30. குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை

கீ

  1. கிரீடத்தை பிடிக்க, கிராமத்தை பிடி
  2. கீர்த்தியால் பசி தீருமா?
  3. கீறி ஆற்றினால் புண் ஆறும்.

கி

  1. கிட்டாதாயின் வெட்டென மற
  2. கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
  3. கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?

கா

  1. காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
  2. காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
  3. காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
  4. காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
  5. காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
  6. காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
  7. காணி ஆசை கோடி கேடு.
  8. காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
  9. காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
  10. காப்பு சொல்லும் கை மெலிவை.
  11. காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
  12. காய்த்த மரம் கல் அடிபடும்.
  13. காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
  14. காரண குருவே காரிய குரு!
  15. காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
  16. காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
  17. கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
  18. காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
  19. காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்
  20. காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்!
  21. காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
  22. காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
  23. காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
  24. காவலுக்கு பொம்மை இருக்கேன்னு நம்பி களம் நிறைய நெல்லு காய வச்சாங்களாம்!
  25. காற்றில்லாமல் தூசி பறக்குமா?
  26. காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
  27. காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.

  1. கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?
  2. கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
  3. கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
  4. கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
  5. கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
  6. கடல் திடலாகும், திடல் கடலாகும்.
  7. கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
  8. கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
  9. கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.
  10. கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
  11. கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
  12. கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
  13. கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
  14. கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
  15. கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.
  16. கடுகு களவும் களவுதான் , கற்புரம் களவும் களவு தான்.
  17. கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
  18. கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
  19. கடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவான்
  20. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
  21. கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
  22. கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
  23. கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
  24. கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
  25. கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.
  26. கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
  27. கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
  28. கண் உள்ள போதே காட்சி; கரும்பு உள்ள போதே ஆலை!
  29. கண் கண்டது கை செய்யும்.
  30. கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
  31. கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
  32. கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
  33. கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
  34. கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
  35. கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
  36. கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது
  37. கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு
  38. கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள்மணை குற்றம் என்கிறாள்
  39. கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
  40. கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
  41. கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி
  42. கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
  43. கரணம் தப்பினால் மரணம்.
  44. கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
  45. கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
  46. கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
  47. கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
  48. கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?
  49. கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்
  50. கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
  51. கல்லாடம் [ நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.
  52. கல்லாதவரே கண்ணில்லாதவர்.
  53. கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
  54. கல்வி அழகே அழகு.
  55. கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
  56. கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.
  57. கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
  58. களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
  59. கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
  60. கள்ள மனம் துள்ளும்.
  61. கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
  62. கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
  63. கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
  64. கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
  65. கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
  66. கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
  67. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
  68. கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
  69. கனிந்த பழம் தானே விழும்.
  70. கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
  71. கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.

உங்களை நீங்களே காதலி‌க்கலாமே...



காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் இரண்டுமே இனிமையான உணர்வுகள் தான். ஒருவரிடம் நமக்குப்‌ ‌பிடித்த குணங்கள் இருந்தாலோ ல்லது ஒருவருடைய குணங்கள் நமக்குப்பிடித்திருந்தாலோ அவரை நாம் காதலிக்கத் துவங்குவோம்.

ற்றவர்கள் ம்மை காதலிப்பதற்கும் அதுதான் காரணமாக இருக்கும். ஆனால் ம்மிடம் இருக்கும் ல்ல குணங்களுக்காக ம்மை நாம் காதலித்திருக்கிறோமா? பலரும் ல்லை ன்று கூறலாம் ல்லது து ‌‌ப்படி ன்று கேள்வி எழுப்பலாம்.‌‌ம்மை நாமே காதலிப்பது எப்படி என்பதை பற்றி பார்க்கலாமா?


நம்மை நாமே காதலிக்க தொடங்கும் போது அடுத்தவர்களுடைய உணர்வுகளை நம்மால் விரைவில் உணர முடியும். அதனால் முதலில் நம்மை நாமே காதலிக்க வேண்டும்.


ம்முடைய வ்வொரு ல்ல குணங்களையும் ட்டியலிட்டு ந்த ட்டியலை பெரிதாக்க முனைய வேண்டும்.

ங்களைப் ற்றி ங்களைவிட ங்கள் ண்பர்களுக்கும், ங்களுக்குப்பிடித்தவர்களுக்கும் தான் ன்கு தெரிந்திருக்கும். எனவே உங்களுக்கு விருப்பமானவர்களிடம் சென்று உங்களிடம் அவர்களுக்கு பிடித்தமான விஷயங்கள் என்னென்ன என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.


அடுத்து உங்களிடம் உங்களுக்கே பிடித்தமான விஷயங்கள் ன்றுநீங்கள்ன்ன நினைக்கின்றீர்கள் என்பதைப் பற்றியும் பட்டியல் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.


உங்களையே ஒரு நல்ல நண்பனாக நினைத்துக் கொண்டு ங்களையேநீங்கள் விரும்ப ஆரம்பியுங்கள். இது போன்ற ஆத்மார்த்தமான அன்புணர்வு உங்களுக்குள் ஏற்படும் போது அது உங்களின் மனதை இலகுவாக்கும்.

அதற்காக ங்களிடம் இருக்கும் கெட்டவிஷயங்களை வசதியாக மறந்துவிட வேண்டாம். ங்களிடம் இருக்கும் கெட்டவிஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி அதையும் ல்ல குணங்கள் ட்டியலில் சேர்க்க முனையுங்கள்.


மனரீ‌‌தியான சுய ‌‌ரிசோதனை, கேள்விகள் கேட்டுநீங்களே ங்களை தெளிவுபடுத்துதல், ங்களுக்குநீங்களே ஆலோசனைக் கூறுதல், ஒருசில முடிவுகளைதீர்க்கமாக யோசித்து உணர்ந்து முடிவெடுத்தல் போன்றற்றின் மூலம் ங்களது ஆளுமை வெளிப்படும்.


இதனால் ங்கள்மீதான ன்னம்பிக்கை, தைரியம் போன்றவை திகரித்து பேச்சில் ஒரு ம்பீரம்பிறக்கும். அது ர்வமாக வெளிப்பட்டுவிடக் கூடாது ன்பதைநினைவில் கொள்ளுங்கள்.


உங்களின் ஆழ்மனதில் இருந்து உருவாகும் அன்பை உணர முற்படுங்கள். உங்கள் மனதில் எழும் எதிர்மறையான சிந்தனைகள், குழப்பமான எண்ணங்கள் இவற்றையும் பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள். அதற்கு காரணம் ன்ன ன்பதை ண்டறிந்து ன்று தனைக் களையுங்கள். ல்லது தேவையில்லாத ண்ணங்களாக இருந்தால் ந்தசிந்தனையை மாற்றுங்கள்.


ண்ணமும், செயலும்சிறப்பாக இருக்கும் போது ங்களைவிட ங்களை திகமாக நேசிப்பவர் யாராக இருக்க முடியும். ங்களது ல்ல செயல்களுக்கு ல்லாம்நீங்களே ஒரு சபா போட்டுக் கொள்ளுங்கள். வ்வொரு செயலையும் முழுதாக உணர்ந்து செய்யுங்கள்.


வற்றை எல்லாம் முறையாக செயல்படுத்திய பிறகு, உங்களுடைய தேவை என்ன? அதை எவ்வாறு செய்ய வேண்டும். ங்களது ட்சியம், பாதை போன்றவற்றைதீ‌‌ர்மானித்து அதன்படி வாழ்க்கையை மாற்றுங்க‌‌ள். உலகின் தலைசிறந்த காதலராகஇருப்பீர்கள்.


- நன்றி வெப்துனியா

மொட்டுக்கள் மலர்வதற்காக


-அனுகிரஹா

வாசமற்றுக் காத்திருக்கிறது
தோட்டம்;
வண்ணங்களற்று வெறித்திருக்கின்றன
விழிகள்;
விளையாட களமற்று
திரிகின்றன பட்டாம் பூச்சிகள்;
அலங்காரமற்று வழிபாட்டினில்
தெய்வங்கள்;
உவமைகளற்ற வறட்சியில்
கவிஞர்கள்;
இன்னும் தியானத்தில்மலர
மறுக்கும் மொட்டு;
அது விரிந்து மலர்ந்ததும்
வாடி உதிரலாம்
மலரும் நொடிகளின்
வாசத்தில் இல்லாது
மூடிய மொட்டின்
அமைதியில் இல்லை
அமரத்துவம்.

அபுதாபி ஷேக் அரண்மனை



























































































































































ஒளிரும் இந்தியாவும் ஒழியும் கூந்தல்களும்

பெண்களின் கூந்தலை வர்ணிக்காத பெரும் புலவர்கள் யாரேனும் உளரா என்று இலக்கிய உலகை எட்டிப் பார்த்தேன். மக்களைக் காப்பதற்கெனவே அவதாரமெடுத்த மகா புருஷனான பாண்டியன், நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி அறிவித்தும் நற்றமிழ் புலவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பளித்தும், கூந்தலின் மணம் குறித்த தன் அதி முக்கிய ஐயத்தைப் பறையடித்து வெளிப்படுத்தினான். மிகவும் சிக்கலான, மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை சேர்ந்த இப் பிரச்சினையை, திருவிளையாடல் நடத்தி` தீர்த்துவைத்த பரமசிவன் முதல் , ஹைக்கூ கவிதை என்று வெறுபேற்றும் இன்றைய cut and paste கவிஞர்கள் வரை, அதில் கைவைக்காதவர்களே இல்லை.

எதிலும் விமர்சனப் பார்வை கொண்ட பெரியார் கூட பெண்களின் நீள்முடி ஆசையை கண்டித்திருக்கிறார். 'அதற்கு செலவிடப்படும் தைலங்களுக்கான செலவு, விதவிதமாக அலங்கரிப்பதற்காக செலவிடப்படும் நேரம். இவையாவும் வீணே. எனவே பெண்கள்
யாவரும் ஆண்களைப்போலவே கிராப் வைத்துக்கொள்ளுங்கள். செலவு, நேரம், வேலை என யாவும் மிச்சம்' என்று தைரியமாகவும், அறிவுபூர்வமாகவும் விமர்சித்தார்.

கண்ணகியின் கற்புக் கூந்தல், ஜானகியின் கள்ளிருக்கும் மலர்க் கூந்தல், துரியோதனின் ரத்தம் பூசப்படக் காத்திருந்த துரெளபதியின் விரிந்த கூந்தல், மொட்டையடிக்கப் பட்ட மாதவியின் துறவுக் கூந்தல், இறந்த கணவனைக் கட்டிக் கதறும் மண்டோதரியின் சோகக் கூந்தல் எனப்பலவிதமான கூந்தல் கதைகள் சரித்திரத்திலும், இலக்கியத்திலும் கொட்டிக் கிடக்கிறது. அதில் இது புதுவிதமான கூந்தலிலக்கியம்.

கற்புக்கும், அழகுக்கும், சோகத்துக்கும், அடிநாதமாக கட்டமைக்கப்பட்டிருக்கும்
கூந்தலை, சென்னையை அடுத்த கிராமப் பெண்கள் அடிக்கு நூறு ரூபாய் வீதம் விற்று வருகின்றனர். வாழவழியற்ற பெண்களை இவ்விதம் மொட்டையடிப்பதற்கென்றே, பல தரகர்கள் பணியாற்றிவருகிறார்கள். சென்னையில் இம்முடிகள் தரம் பிரிக்கப்பட்டு, சாயமேற்றப்பட்டு, ஹாலிவுட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றனவாம் விதவிதமான விக்குகளாக. அடர்த்தியான ஒரு கிலோ முடியின் விலை 5000 ரூபாய்களாம் -அது முதலாளிகளுக்கு

கூந்தலுக்கு விதவிதமான தைலம், சாயம் - பலகோடி புழங்கும் வணிகம். விதவிதமான
அலங்காரம் - பலகோடி புழங்கும் வணிகம். முடிமுளைக்காத வழுக்கைத்தலையர்களுக்கு
உடன் நாற்று நட்டு முடி வளர்த்துத்தரும் சிகிச்சை - பலகோடி புழங்கும் வணிகம்.
மூன்றடி கூந்தலை முன்னூறு ரூபாய்க்கு விற்கிறாள் இன்றைய தமிழச்சி. உலகமயமாக்கலின்
மறுபக்கம் இது.

கங்கை நதிப்புறத்து கோதுமையை காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ள
பாரதி கண்ட கனவின் விரிவாக்கம் இது.

ஹாலிவுட்டில் திருவள்ளூர் மயிர். மக்களை மொட்டையடிப்பது என்பது இப்படித்தானோ?

கனவு காணுங்கள், கனவு காணுங்கள் இந்தியா வெகு சீக்கிரம் வல்லரசாகப் போகிறது என்று
வாணவேடிக்கை காட்டுகிறார் நமது முதல் இந்தியக் குடிமகன். உண்ண உணவும், ஒதுங்க
இடமும், பாதுகாக்கப்பட்ட குடிநீரும், அடிப்படைக் கல்வியறிவுமற்ற பல்லாயிரக் கணக்கான
இந்திய மக்களை ஒதுக்கி விட்டு, பல்லாயிரம் கோடி செலவு செய்து ஒற்றை இந்தியன், நிலவுக்கு போகப்போகிறானாம். இதுதான் இந்தியாவின் வல்லரசு ஜம்பம். இந்திய அழகிகள் உலக அரங்குகளில் அரைகுறை ஆடையுடன் பூனை நடை நடக்க, இந்திய விண் வெளி வீரன் நிலவில் வெற்றி நடை (தாவல்?) நடக்க, பூமியில் சாதாரண மனிதர்கள் தன் உடலிலிருந்து ரத்தம் முதல் சிறுநீரகம் வரை விற்க முடிந்ததனைத்தையும் விற்க நடையாய் நடக்கிறார்கள். நான் எல்லா உயிர்களையும் ஒன்று போல் நேசிப்பவன் என்று வாயாடுகிறார் ஜீவகாருண்யத்தின் சிம்பலான நமது நிதியமைச்சர்.

ஒரு பிராமணன் கொலை செய்து விட்டால், அவனுக்கு தரப்பட வேண்டிய அதிகபட்ச
தண்டனை அவன் தலையை (முடியை மட்டும்தான்) மொட்டையடிப்பதுதான் என்கிறது

மனுநீதி. போன உயிர் பிராமணனின் மயிருக்கு சமம் என்பது மனுவின் நீதி. மளிகைக்கடை பாக்கிக்காக மசுரை விற்கும் பெண்ணுக்கு எது நீதி?

- கு.சித்ரா

  1. ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
  2. ஓடி ஒரு கோடி தேடுவதிலும், இருந்து ஒரு காசு தேடுவது நலம்
  3. ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
  4. ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
  5. ஓட்டம் உள்ளவரை ஆட்டமும் அதிகம்!
  6. ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
  7. ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்
  8. ஓணான் வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது!
  9. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
  10. ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
  11. ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
  12. ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
  13. ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.

  1. ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
  2. ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
  3. ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
  4. ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
  5. ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
  6. ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
  7. ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
  8. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
  9. ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்
  10. ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
  11. ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
  12. ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
  13. ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
  14. ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
  15. ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!

  1. ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
  2. ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா? (சிறிய வயதில் தான், நன்கு கற்க முடியும்)
  3. ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
  4. ஐயர் வரவில்லை என்பதற்காக அமாவாசை நிற்குமா?
  5. ஐயருக்கு எதுக்கு ஆட்டுக்குட்டி வெயாபாரம்.

  1. ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை
  2. ஏரி நிறைந்தால் கரை கசியும்.
  3. ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
  4. ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
  5. ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
  6. ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.
  7. ஏழை என்றால் எவர்க்கும் எளிது
  8. ஏழைபேச்சு அம்பலம் ஏறாது
  9. ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.

  1. எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ?
  2. எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
  3. எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
  4. எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
  5. எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்கார கழுவில் இருக்க வேண்டும்!
  6. எட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது.
  7. எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்ந்தென்ன?
  8. எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
  9. எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது!
  10. எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
  11. எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்.
  12. எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
  13. எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
  14. எண்ணெய் முந்துதோ திரி முந்துதோ?
  15. எதார்த்தவாதி வெகுசன விரோதி.
  16. எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
  17. எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
  18. எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
  19. எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
  20. எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா
  21. எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
  22. எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
  23. எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
  24. எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
  25. எலி அழுதால் பூனை விடுமா?
  26. எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
  27. எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
  28. எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.
  29. எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
  30. எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
  31. எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
  32. எல்லாரும் கூடிக் குல்லாய் போட்டனர்!
  33. எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
  34. எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
  35. எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
  36. எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
  37. எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
  38. எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
  39. எள் என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
  40. எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
  41. எறும்பு ஊரக் கல்லுந் தேயும்.
  42. எறும்புந் தன் கையால் எண் சாண்

  1. ஊசி முனையில் தவமிருந்தாலும் உன்னதுதான் கிட்டும்
  2. ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
  3. ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
  4. ஊண் அற்றபோது உடலற்றது.
  5. ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.
  6. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
  7. ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
  8. ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
  9. ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.

  1. உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
  2. உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
  3. உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
  4. உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
  5. உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
  6. உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு.
  7. உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
  8. உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
  9. உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
  10. உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
  11. உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
  12. உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
  13. உப்​பைத் தின்​ற​வன் தண்​ணீர் குடிப்பான்
  14. உரம் ஏற்றி உழவு செய்
  15. உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
  16. உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
  17. உலோபிக்கு இரட்டை செலவு.
  18. உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
  19. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
  20. உளவு இல்லாமல் களவு இல்லை.
  21. உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
  22. உள்ளது போகாது இல்லது வாராது.
  23. உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.
  24. உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.
  25. உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]