திருக்குறள்

காந்தி நோட்டு

காந்தி நோட்டு

ஐந்தில் வளையாதது

ஐந்நூறில் வளைந்தது

அதிகாரியின் கை எழுத்து



*
தரிசனம்

பாலில் குளித்து

பஞ்சாமிர்தம் பூசி

சந்தனம் மணக்க

கல்லுக்கு அபிஷேகம்

பசியோடு நீட்டிய

பக்தனின் கையில்

சாம்பல்

*
உண்மை

வாய் கூசாமல்

பொய் சொல்கிறார்கள்

முள் குத்தியதாம்

செருப்பு கடித்ததாம்

கல் தடுக்கியதாம்

*
நிதர்சனம்

மாடு தாண்டி

குதிரை ஏறி

எந்திரங்களில் தொற்றிப்

பயணம் போன

மனிதன் மீதேறிப்

பயணிக்கும் காலம்
*

வால்

ஒரு காலத்தில்

மிருகங்களின் பின்னால்.

இன்னொரு காலத்தில்

மனிதருக்கு அறிவால்.

இந்தக் காலத்தில்

மதங்களின் பெயரால்


- அருணன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற