திருக்குறள்

கா

  1. காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
  2. காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
  3. காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
  4. காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
  5. காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
  6. காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
  7. காணி ஆசை கோடி கேடு.
  8. காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
  9. காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
  10. காப்பு சொல்லும் கை மெலிவை.
  11. காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
  12. காய்த்த மரம் கல் அடிபடும்.
  13. காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
  14. காரண குருவே காரிய குரு!
  15. காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
  16. காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
  17. கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
  18. காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
  19. காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்
  20. காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்!
  21. காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
  22. காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
  23. காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
  24. காவலுக்கு பொம்மை இருக்கேன்னு நம்பி களம் நிறைய நெல்லு காய வச்சாங்களாம்!
  25. காற்றில்லாமல் தூசி பறக்குமா?
  26. காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
  27. காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற