திருக்குறள்

பத்து முத்துக்கள்...


அவனன்றி...
கடவுள் இன்றி நீங்கள் செயல்பட முடியாது; நீங்கள் இன்றி கடவுள் செயல்பட மாட்டார்.


காது கொடு!
உங்கள் வாயினால் பெறுவதை விட அதிக நண்பர்களை உங்கள் காதுகளால் பெற முடியும்.


அதே தப்பு!
முழு முட்டாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகையில், அவரும் அதே தப்பைச் செய்யாமல் இருக்கிறாரா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


அந்தக் கேள்வி!
துன்பங்கள் நம்மைச் சூழும்போது, 'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?' என்று கேட்பதற்கு நமக்கு அருகதை இல்லை இன்பங்கள் சூழும்போதும் அப்படிக் கேட்காதவரை!


அம்பு அல்ல; அன்பு!
'உண்மை' என்கிற அம்பையே எய்தாலும், அதன் முனையை 'கனிவு' என்னும் தேனில் தோய்த்துக் கொள்ளுங்கள்.


வாழ்க்கை
குழந்தைகளுக்கு நாம் வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கிறோம்; அவர்கள் நமக்கு வாழக் கற்றுக் கொடுக்கிறார்கள்.


மாறும் இலக்கணம்
வெற்றி மற்றவர்கள் பெற்றால் அதிர்ஷ்டம்; நாம் பெற்றால், அது நம் திறமை!


தூய்மை
உடம்புக்கு சோப்பு; ஆன்மாவுக்குக் கண்ணீர்!


எல்லாம் நேரம்!
உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடியாதவன், நோய்க்கு நேரம் ஒதுக்குகிறான்.


நாக்கு அவுட்!
நாம் யாரைப் பெரிதும் நேசிக்கிறோமோ, பெரும்பாலும் அவரைத்தான் அடிக்கடி காயப்படுத்தி விடுகிறோம். பல் நாக்கைத்தானே கடிக்கிறது


'ஷெல்லி' ராணி

அவள் விகடன்

படித்ததில் பிடித்தது....





















நோன்பின் மாண்பு !


''மனிதர்களே! உங்களுக்கு ஒரு மகத்தான மாதம் வந்திருக்கிறது. இது பொறுமையின் மாதமாகும். பொறுமையின் பிரதிபலன் சொர்க்கமாகும். இது மனிதர்களுடன் கலந்துறவாடி அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்கிற மாதமாகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மைப் பார்த்து கூறுகிறார்.

அப்படிப்பட்ட சிறப்புமிக்க மாதம்தான் இப்போது நடந்து கொண்டிருக்கும் ரமளான் மாதம். இந்தப் புனிதமிகு ரமளான் மாதத்தில் முப்பது நாள் நோன்பு வைப்பதும், ஜகாத் (மார்க்க வரி) கொடுப்பதும் ஒவ்வொரு முஸ்லிமுக்குமான கட்டாய கடமையாகும்.

நோன்பு இருப்பதால் ஒரு மனிதனுக்கு அவனது மன இச்சைகள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிற திறன் வளர்வதோடு, பசித்திருந்து வறுமையில் இருப்போருடைய சிரமத்தை உணர்கிற வாய்ப்பும் உண்டாகிறது. தன் சகோதரன் பட்டினி யுடன் இருக்கும்போது, தன்னிடம் உள்ளதைப் பகிர்ந்தளிக்கிற பண்பு கூடுகிறது.

ஒருசமயம் ஸஹாபி (நபித்தோழர்) ஒருவர், தன் வீட்டுக்கு வறுமையில் வாடும் நோன்பாளி ஒருவரை நோன்பு திறக்க அழைத்து வந்தார். தன் மனைவியிடம், ''இவர் நபிகள் நாயகத்தின் விருந்தாளி. இவருக்கு எந்தக் குறையும் வந்து விடாமல் மரியாதையுடன் நடத்த வேண்டும்'' என்றார்

இதைக் கேட்ட ஸஹாபியின் மனைவி, ''வீட்டில் எதுவும் இல்லையே.. நம் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காக சிறிதளவு உணவு மட்டும்தான் இருக்கிறது.. என்ன செய்வது?'' என்று பதற்றமானார். உடனே அந்த ஸஹாபி, ''குழந்தைகளை தந்திரமாக தூங்க வைத்து விடு. உணவை எடுத்து வைத்ததும், நீ எழுந்து சென்று விளக்கைச் சரி செய்வது போல அதனை அணைத்து விடு'' என்றார்.

விருந்தாளி வந்ததும், எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்தனர். விளக்கும் அணைந்தது. இருந்த உணவை விருந்தாளிக்கு வைத்துவிட்டு அவர்கள் சாப்பிடுவது போல் பாவனை செய்தனர். திருப்திகரமாக சாப்பிட்டுவிட்டு எழுந்தார் விருந்தாளி.

தன் குடும்பம் பட்டினி கிடந்தாலும், அல்லாஹ் உடைய நோன்பாளிக்கு உணவளிப்பதையே பெரிதாகக் கருதினார் அந்த நபித்தோழர்.

நெருப்பில் சூடாக்கப்படும் இரும்பு சுத்தமாவது போல, நோன்பும் மனிதனை சுத்தமாக்குகிறது.

சுத்தமான இதயத்துடன் கொண்டாடுவோம் இந்த ரமளானை!

- தஸ்மிலா அஸ்கர்
அவள் விகடன்

''பஸ்ஸில் பிறந்தவன் இந்தக் கண்ணதாசன்!''

புதுக்கோட்டையிலிருந்து 'திருமகள்' என்னும் ஓர் இலக்கியப் பத்திரிகை வெளிவந்துகொண்டு இருந்தது। மாதம் இருமுறை வெளிவந்த அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர், பதினேழே வயதான ஓர் இளைஞர்.

அவர் அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியரானதே ஒரு கதை। அந்தப் பத்திரிகைக்கு விளம்பரம் சேகரிக்கும் வேலையில் போய்ச் சேர்ந்தார் அவர். ஒருநாள், பத்திரிகை ஆசிரியர் லீவில் இருந்தார். முதலாளி விளம்பர அதிகாரியைக் கூப்பிட்டு, ஏதாவது எழுதுமாறு பணித்தார். எழுத்து தாகம் கொண்ட அந்த இளைஞர், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, ஐ.என்.ஏ. படையைப் பற்றி அருமையான ஒரு தலையங்கம் தீட்டிவிட்டார். அது முதலாளிக்கு மிகவும் பிடித்துவிட்டது. அன்றே அவரைத் தம் பத்திரிகைக்கு ஆசிரியராக ஆக்கிவிட்டார். அந்த இளைஞரின் பெயர் முத்தையா.

ராமநாதபுரம் ஜில்லாவில் உள்ள சிறுகூடல் பட்டியில், தந்தைக்கு எட்டாவது பிள்ளையாகப் பிறந்த முத்தையா, எட்டாவது வரைதான் படித் தார். இவரது உடன்பிறந்தவர்கள் ஆறு சகோதரி கள், மூன்று சகோதரர்கள். படத் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன், கண்ணதாசனின் தமையன்.
''பள்ளிக்கூடத்தை விட்டவுடன் அஜாக்ஸ் ஒர்க்ஸில் 'டெஸ்பாட்சிங் பாயா'கப் பணியாற்றி வந்தேன்। வாரம் ஐந்து ரூபாய் கூலி. என் அண்ணா, ஏ.எல்.எஸ். அங்கே பிரதம காஷியர். சின்ன வயதிலிருந்தே எனக்கு எழுத்து தாகம் உண்டு. அஜாக்ஸ் கம்பெனியிலேயே உட்கார்ந்துகொண்டு கதை எழுதுவேன். 'கிரகலட்சுமி' என்ற பத்திரிகையில் 'நிலவொளியிலே' என்ற தலைப்பில் எழுதிய கதைதான் என் முதல் கதை.


அஜாக்ஸ் ஸ்தாபனத்தில் வேலை பிடிக்காமல் விட்ட பிறகு, சில காலம் எந்த வேலையும் செய்யவில்லை நான்। பட்டினத்தார் சமாதியில் போய் உட் கார்ந்திருப்பேன். அங்கேயேதான் தூக்க மும். அதன் பிறகுதான் திருமகள் பத்திரி கையின் ஆசிரியரானேன். ஆனால், அதிலும் ஓராண்டுக் காலம்தான் நீடித் தேன். பின்னர் சென்னைக்கு வந்து 'திரை ஒலி' என்ற பத்திரிகையில் சில காலம் இருந்தேன். அதன் பின், மாடர்ன் தியேட்டர்ஸார் நடத்திய சண்டமாருதம் பத்திரிகைக்குப் போனேன். சண்டமாரு தம் சரியாக நடக்கவில்லை. பத்திரிகையை நிறுத்திவிட்டார்கள். அவர்களுடைய கதை இலாகாவில் என்னை எடுத்துக் கொண்டார்கள். இப்படித்தான் இலக் கிய உலகிலிருந்து சினிமா உலகுக்கு நான் வந்தேன்.''

இன்று தமிழ்நாட்டில் பிரபல கவிஞ ராக விளங்கி வரும் கண்ணதாசன், அந்தக் காலத்தில் அதிகமாக எழுதியது கதைகள்தான். கவிதை இரண்டாம் பட்சம்தான். மாடர்ன் தியேட்டர்ஸில் இவர் கதைகள்தான் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

''நீங்கள் முதன்முதலில் பாட்டு எழுதிய படம் எது?''

''டைரக்டர் ராம்நாத்। அவர்தான் என்னை ஏற்றுக்கொண்டார். ஜூபிட ரின் 'கன்னியின் காதலி'யில் ஆறு பாட்டு என்னுடையது. 'கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே' என்பதுதான் என் முதல் பாட்டு!''

'கண்ணதாசன்' பஸ்ஸில் பிறந்தவர். ஆமாம்! திருமகள் பத்திரிகைக்குக் கடிதம் எடுத்துக்கொண்டு போகிறபோது, தம்மை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்வது என்று புரியாமல் குழம்பினார் அவர்.
''வெறும் முத்தையா என்றால் மதிப்பிருக்காது என்று தோன்றியது। கவிஞன் என்பவனுக்கு ஒரு தனிப் பெயர், 'கவிதைப் பெயர்' தேவை என்று பட்டது. பஸ்ஸில் போகும் போது யோசித்தேன். எட் டாவது மகன் கண்ணன். நானும் எட்டாவது மகன். ஏன் கண்ணன் என்றே வைத்துக்கொள்ளக்கூடாது? அது, நல்ல பெயர்தான். ஆனால், வெறும் கண்ணனா? அந்தக் காலத்தில் பிரபல மான கவிஞர்கள் எல்லோ ரும் ஏதாவது தாசனாகவே இருந்தார்கள் - பாரதி தாசன், கம்பதாசன்... அவ்வளவுதான்! கண்ண தாசன் பிறந்துவிட்டான்.''

கல்லக்குடி போராட்டத்தில் சிறை சென்றுள்ள கண்ணதாசன், சிறைச்சாலை யிலிருந்தே திரைப்படத்துக் குக் கதை எழுதித் தந்திருக் கிறார். அப்படி அவர் எழுதி வெளிவந்த படம் தான், 'இல்லறஜோதி'.
1954 வரை கவிஞராகவும், அரசியல்வாதியாகவும் மட்டுமே இருந்த கவிஞர், 'தென்றல்' பத்திரிகை மூலம் தமிழ் மக்களுக்குப் பத்திரிகை ஆசிரியராக அறிமுகம் ஆனார்.

அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி போட்டவர், சினிமாத் துறையில் முழு மூச்சுடன் இறங்கினார்। சொந்தமாகப் படம் தயாரித்தார். முதல் படம் 'மாலை யிட்ட மங்கை' நல்ல வெற்றி தந்தது. தொடர்ந்து பல படங்கள். சிவகங்கைச் சீமை, கவலையில்லாத மனிதன் எல்லாம் தோல்விகள்.

''இது ஒரு தொழிலே இல்லை. மற்ற தொழிலில் சம்பளம் கொடுப்பவன் முதலாளி, சம்பளம் வாங்குபவன் தொழிலாளி; இதில் நேர்மாறு. இந்த அவல நிலைக்குக் காரணம் ஜனங்கள் தான். நட்சத்திர மோகம் குறைந்தால்தான் சினிமாத் தொழில் உருப்படும்!'' என்கிறார் கண்ணதாசன்.

இவரே எழுதியதில் இவருக்கு மிகவும் பிடித்த சினிமாப்பாட்டு - 'போனால் போகட்டும் போடா!'
ஆனந்தவிகடன்
30.05.1965

தலித் பிரம்மாக்கள்...

''பதினைந்து வருடங்களுக்கு முன்பு இசைஞானி இளையராஜா எனது சிற்ப மையத்துக்கு வந்திருந்தார்। அப்போது நான் செதுக்கிக்கொண்டு இருந்த விநாயகர் சிலை யைத் தொட்டுப் பார்க்கலாமா என்று கேட் டார்। 'இப்போதுதான் தொட முடியும். கோயில் கருவறைக்குள் சென்றுவிட்டால் பக்தனாகிய உங்களாலும் தொட முடியாது. சிலையைச் செய்த என்னாலும் தொட முடியாது' என்றேன். சிரித்துக்கொண்டார்!''- தனது உளியைப் போலவே சிற்பி ராஜனின் வார்த்தைகளிலும் கூர்மை!

இந்தியாவின் மிகச் சிறந்த சிற்பிகளில் ஒருவர் ராஜன்। சுவாமிமலை அருகே திம்மக்குடியில் இருக்கும் 'ராஜன் சிற்ப மையத்'தில் ஏதோ ஒரு தாளகதியில் இசை மீட்டுகின்றன நூற்றுக்கணக்கான உளிகள். தாமரைப்பூ சரஸ்வதி, காசுகளை அள்ளி இறைக்கும் லட்சுமி, ரதி, மன்மதன், திருப்பதி வெங்கடாசலபதி, ஆஞ்சநேயர், விநாயகர், வள்ளி தெய்வானையோடு முருகன், ஊழித்தாண்டவமாடும் நடராசர் என பஞ்சலோக மற்றும் வெண்கல வடிவங்களில் மினி தேவலோகச் சூழல்! இந்தியாவின் சார்பாக லண்டன், ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து சிற்பக் கண்காட்சிகளில் கலந்துகொள்ள மத்திய அரசு தேர்ந்தெடுப்பது இவரைத்தான். பிரான்ஸ் நாட்டுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் பாடமாக சிற்பி ராஜனின் வாழ்க்கைக் குறிப்பு இடம்பெற்றிருக்கிறது.

இவற்றைத் தாண்டியும் ராஜனுக்கு இருக்கிறது சில தனிச் சிறப்புகள்। சுவாமி சிலைகளைத் தெய்வாம்சமாக வடித்துத் தரும் ராஜன், ஒரு பழுத்த நாத்திகவாதி. பெரியார் கொள்கைகளுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தவர். இவரது சிற்ப மையத்தின் இன்னொரு சிறப்பு தலித் சிற்பிகள்! தாழ்த்தப்பட்டவர்கள் என ஒதுக்கப்படும் தலித்களால் உருவாக்கப்பட்ட எண்ணிலடங்கா கடவுள் சிலைகள் இந்தியாவைத் தாண்டி உலகெங்கிலும் உள்ள முக்கியக் கோயில்களில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றன. புரொஃபஷனல் கலைக்கூடம், லேப்-டாப் மூலம் வாடிக்கையாளர்களுடன் தகவல் பரிமாற்றம் என சிற்பக் கலையை அடுத்த நூற்றாண்டுக்குக் கை பிடித்து அழைத்துச் செல்கிறார் ராஜன். கலவையான உலோக மணம் நாசியைத் தீண்ட அங்கிருந்த வித்தியாசமான 'பறையடிக்கும் விநாயகர்' என்னோடு நின்றிருந்த வின்சென்ட்டின் கேமராவை ஈர்த்தது.

''அனைவருக்கும் பொதுவான கடவுள், தலித் மக்களின் கலாசாரத்தையும் பிரதிபலிக்க வேண்டும் இல்லையா? அதற்காகத்தான் இந்தப் பறையடிக்கும் விநாயகர் சிலை! பதின்மூன்று வயதிலிருந்தே கடவுள் மறுப்பாளனாக இருந்தாலும், எனக்கிருந்த சிற்பக் கலைநயத்தைக் கடவுள் சிலை செய்வதன் மூலம்தான் ஆழமாக வெளிப்படுத்த முடியும் என்று நம்பினேன்। வெறும் கல்லை, உலோகத்தை கலைநயம்மிக்க கடவுளர்களாகத் தங்கள் உழைப்பின் மூலம் உருவாக்கித் தரும் மக்களைக் கோயிலின் உள்ளேயே விட மறுப்பது மானுட விரோதம் இல்லையா? பெரியார் தொண்டனாக இதற்கு நான் ஏதாவது செய்ய வேண்டியிருந்தது.

முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும்? மூலவர் சிலைகளையே தலித்துக்களைக்கொண்டு உருவாக்கி கோயில் கருவறைக்குள் வைக்கத் தீர்மானித்தேன்। சிற்பக்கலையில் ஆர்வமுள்ள தலித் இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு இலவசமாகத் தங்குமிடம், பயிற்சிகள் அளித்து என் சிற்ப மையத்தைக் குருகுலமாகவே மாற்றினேன். எதிர்பார்த்ததை விடவும் இந்த முயற்சிக்குக் கடும் எதிர்ப்புகள். 'சாமி சிலையைக் கீழ்ச் சாதியினர் செய்வதா?' என்று கேள்வி எழுப்பியவர்கள் எல்லாம் அவர்களால் உருவாக்கப்பட்ட கலைநயம்மிக்க கடவுள் சிலைகளைப் பார்த்து அசந்து போனார்கள். ஆரம்ப காலங்களில் கோயில் நிர்வாகிகள் தலித்து களால் உருவாக்கப்பட்ட கடவுள் சிலைகளை வாங்க மறுத்தார்கள். கடைசியில் அவர்களைக் கலை வென்றது. அந்த அளவுக்கு தலித் இளைஞர்களின் சிற்ப நுட்பம் ஒவ்வொரு அங்குலத்திலும் வெளிப்பட்டது.

இந்த நாட்டின் ஆதிக்குடிகள் தலித்துகள்। நமக்கான கலையை, நாகரிகத்தை உருவாக்கித் தந்தவர்கள். சாமி சிற்பங்கள் மட்டும் அந்தக் கலைக்குடிகளின் கரங்களிலிருந்து தப்ப முடியுமா? எனது சிற்ப மையத்தில் அவர்களால் உருவாக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் நியூ ஜெர்ஸி சிவன் கோயில், க்ளீவ்லேண்டிலுள்ள இந்து மிஷன் கோயில்களை அலங்கரிக்கின்றன. இதே சுவாமிமலைக்கு அருகில் காவிரிக் கரையில் அமைந்துள்ள ஐயப்பன் சிலையை நானும் எனது மாணவர்களும்தான் உருவாக்கினோம். அதன்பிறகு, அந்த ஐயப்பன் சிலைக்கு வெள்ளிக் கவசம் வேண்டுமென கோயில் நிர்வாகத்தினர் கேட்டனர். கவசத்துக்கு அளவெடுக்க வேண்டுமானால் கருவறைக்குச் செல்ல வேண்டும். ஆனால், கோயில் நிர்வாகம் என்னையும் எனது தலித் மாணவர்களையும் கருவறைக்குள் விடாமல் தடுத்தது. கோபப்பட்டு திரும்பிவந்துவிட்டோம். பிறகு, அவர்களே தேடிவந்து அழைத்ததால் அளவெடுத்துக் கவசம் சாத்தினோம்.

அவ்வளவு ஏன்॥? காஞ்சி சங்கரமடத்தில் உள்ள காமாட்சி அம்மனின் அவதாரமாகிய மகாமேரு சிலையை உருவாக்கியவர்களும் என் தலித் மாணவர்கள்தான்'' என்கிற ராஜனும், அவரது மாணவர்களும் இதுவரைக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சாமி சிலைகளை உருவாக்கி உள்ளனர்

சுவாமிமலையில் இயங்கும் சிற்ப மையத்தை அண்மையில் விற்றுவிட்டார் ராஜன்। அதை வாங்கியவர்கள், 'ராஜன் சிற்ப மையம்' என்ற பெயரையே தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள ஒரு பெரும் தொகையை ராயல்டியாக வழங்கியுள்ளனர். இப்போது கும்பகோணம் அருகே ஆலங்குடியில் பரந்துவிரிந்த பிரமாண்ட சிற்ப மையத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார். ''அங்கும் தலித் இளைஞர்களுக்கே முன்னுரிமை'' எனும் ராஜன் சிற்பக் கலையின் மீதுள்ள ஈடுபாடு காரணமாகத் திருமணமே செய்துகொள்ளவில்லை.

ராஜனின் சீடரான சிற்பி பாண்டுரங்கன், ''ஒளிவுமறைவின்றி சிற்பக் கலையின் ரகசிய நுட்பங்கள் அனைத்தையும் ராஜன் ஐயாதான் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்। வருமானம், வெளிநாட்டுக்காரர்களின் பாராட்டுக்கள் பெரிய விஷயமில்லை. உள்ளூரிலேயே சாதியின் பெயரைச் சொல்லி எங்களை ஒதுக்கியவர்கள்கூட இன்று மரியாதையோடு பார்க்கிறார்கள்.'' ஏழரை அடி உயரமும் நானூறு கிலோ எடையும் கொண்ட லட்சுமி சிலையை உயிரோட்டமாகச் செதுக்கி யபடியே பேசுகிறார்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இறுகி கெட்டிப்பட்டுக் கிடக்கும் சாதி என்னும் கடும்பாறையின் மீது ராஜனின் உளி தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருக்கிறது!

- ஆனந்த விகடன்

३ வகை உதவிகள்

பிறர் கேட்கும் உதவிகளை மறுக்கத் தெரியாமல் மாட்டிக்கொண்டு விழிப்பவரா நீங்கள்? மாறுங்கள்।

நம்மைப் பாதிக்கும் உதவிகள்; நம்மைப் பாதிக்காத உதவிகள்; பாதித்தாலும் பரவாயில்லை எனும்படியான உதவிகள் என்று உதவிகளை மூன்றாக இரகம் பிரியுங்கள்। இப்படிப் பிரிக்கத் தெரிந்து கொண்டால் உதவுவதா? வேண்டாமா? என்பதில் தெளிவு பிறந்து விடும்.

வேறுவழியின்றித் தலையாட்டிவிட்டுப் பிறகு மன உளைச்சலுக்கு ஆளாகிறவர்கள் உண்டு। இவர்கள் இதிலிருந்து விடுபட ஒரே வழி, மறுப்பது எப்படி என்கிற கலையைக் கற்றுக்கொள்வதுதான்.

அமெரிக்காவில் நூறு வெற்றியாளர்களை டான் டெக்கர் என்கிற பத்திரிகையாளர் பேட்டி கண்டார்। ``உங்கள் வெற்றியின் இரகசியம் என்ன?'' என்று ஒரே ஒரு கேள்வியைத்தான் அத்துணைப்பேரிடமும் கேட்டார். பலரும் புளித்துப்போன காரணங்களையே சொன்னார்கள். ஒருவர் சொன்னார், ``I know how to say no’'என்று.

ஒரு வெள்ளையரிடம் 100 டாலர் கடன் கேட்டால் ‘‘I doubt very much whether I can give you this time; may be next time என்று பிரமாதமாக இழுத்து அழகுற மறுப்புச் சொல்லி விடுவார்।

நம்மிடம் உதவி கேட்பவர்களிடம், முடியாது; நடக்காது; சாத்தியமில்லை; மாட்டேன் என்று ஒரே சொல்லில் மறுப்பைச் சொல்லக்கூடாது। உறவும் நட்பும், தொழில் தொடர்பும் விட்டுப் போகும்.

வீரிய மருந்தில் நீர் கலப்பது போல் அந்த மறுப்பைப் பல வார்த்தைகளின் ஊடே பதித்து நீண்ட நீண்ட வாக்கியங்களாக ஆக்கி, ஏன் மறுக்க நேரிடுகிறது என்கிற விளக்கத்துடன் ஒரு நிமிடக் கலவையாகத் தாருங்கள்.
இப்படி நீளமாக மறுப்புச் சொன்னால், உங்கள் மறுப்பின் நியாய வாதங்கள் எதிராளிக்கும் பிடிபடும்। எதையும் இழக்க வேண்டாம் என்பதோடு வெற்றியும் சாத்தியம்!

- லேனா

நம் தமிழ் சினிமாவில் மாறாதவை...

நம் தமிழ் சினிமாவில் மாறாதவை என்று சில உண்டு। சேட்டுகள் சரளமாக தமிழ் பேசக் கற்று பல காலம் ஆகிறது. ஆனால் இந்த சேதி இன்னும் தமிழ் சினிமாவைப் போய்ச் சேரவில்லை
தலையில் குல்லா மாட்டி, கையில் கோலுடன் நம்பள், நிம்பள் என்று தமிழை மென்று துப்பினால் மட்டுமே தமிழ் சினிமாவில் அவர் சேட்। மலையாளிகள் குறித்த தமிழ் சினிமாவின் பார்வை இன்னும் கொஞ்சம் காமெடி। ஒரு டீக்கடை, அதில் வத்தலாக ஒரு நாயர், சாயா எடுத்துக் கொடுக்க ஷகிலா சைஸில் நாயரின் மனைவி! திருமதி நாயர் லேசாக உதட்டை அழுத்தி, `புட்டு வேணுமா...' என்று கேட்கும் டயலாக் கண்டிப்பாக உண்டு.

திருமதி நாயரின் முண்டோடும், மாராப்பு இல்லாத ஜாக்கெட்டோடும் தமிழ் சினிமாவினர் தங்களது லொள்ளுத்தனத்தை நிறுத்திக் கொண்டார்கள்.
மலையாளிகள் அப்படி அல்ல। தமிழர்கள் பற்றிய காட்சியமைப்புகளும் நம்மைப் போல், முண்டு, ஜாக்கெட் என ஆடையோடு முடிந்துவிடும் ஒரு ரகம் அல்ல. சூலம் மாதிரி பலமுனைகள் கொண்டது! (குத்தினால் ஆள் குளோஸ்)

மலையாளத் திரைப்படங்களில் தமிழர்களைக் குறிக்கும் விசேஷப் பெயர், பாண்டி! மூன்றெழுத்துப் பெயர் என்றாலும் பாண்டிக்கு அர்த்தங்கள் முந்நூறு। குளிக்காதவன்... அசிங்கம் பிடிச்சவன்... இப்படி! ஏதாவது ஒரு மலையாளியை, பாண்டி மாதிரி இருக்கிறியே என்றால் போதும்; லாரியில் அடிபட்ட மாதிரி சிதறிப் போவார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு, `அக்கரை அக்கரை அக்கரை' என்றொரு படம்ப்ரியதர்ஷன் இயக்கியது। கடத்தல்காரன் ஒருவனைக் கண்டுபிடிக்க அமெரிக்கா செல்லும் மோகன்லால், அங்குள்ள உயரமான கட்டடங்களைப் பார்த்து பிரமித்தவாறு, அருகிலிருக்கும் சீனிவாசனிடம் இப்படிச் சொல்வார்; ``எல்.ஐ.சி. பில்டிங்கைப் பார்த்து வாய் பிளக்கும் தமிழர்கள், இதைப் பார்த்தால் நெஞ்சு வெடிச்சு செத்திடுவான்களே!''

எல்।ஐ.சி. போலொரு கட்டடம் அன்று கேரளாவில் இல்லை. அந்த நெஞ்செரிச்சலில் அவலை நினைத்து இடித்த உரல்தான் மேலே உள்ள மோகன் லாலின் பேச்சு.

மற்றொரு படம், சுரேஷ் கோபி நடித்தது। பெரிய பீப்பாய் போலிருக்கும் நடிகர் ராஜூதான் போலீஸ் அதிகாரி। வழக்கம் போல கீழ்மட்ட அடியாளாக ஒரு தமிழ்வில்லன். ``நீ பொன்னுசாமி இல்லையா?'' ராஜூவைப் பார்த்து நம் தமிழ் ஆளு கேட்கிறார். தெரியாமல் சாணியை மிதித்த தொணியில் ராஜூ சொல்வார்; ``என்னது... பொன்னுச்சாமியா? நான் நல்ல ஐயங்கார் குடும்பத்துல பிறந்தவனாக்கும்.''

தமிழ்ப் பெயர்களான குப்புசாமி, பொன்னுச்சாமியெல்லாம் மலையாளிகளைப் பொறுத்தவரை தரக்குறைவானவை. தமிழர்களுக்கு மட்டுமே பொருத்தமானவை... அப்படியொரு ஆதிக்க மனோபாவம்.

திரைப்படங்களில் அரசியல் பேசுவது மலையாளிகளுக்கு கள்ளும், கருமீனும் ஒன்றாக கிடைத்த மாதிரி. அதுவும் முல்லைப் பெரியாறு என்றால் கொள்ளை இன்பம். கூத்தாடி விடுவார்கள்!

மோகன்லாலின் `உடையோன்' படத்தின் வில்லன் சலீம்கௌஸ் ஒரு தமிழன். தமிழன் சொல்வான்: ``தமிழ்நாட்டுல மழை பெஞ்சாதான் உங்க கிணத்துல தண்ணி'' மோகன்லாலுக்கு நக்கல் அதிகம். அவர் சொல்வார்: ``அதுக்கு உங்க ஊர்ல மழை பெஞ்சாதானே!'' இன்னொரு காட்சி. தமிழ் வில்லன் சொல்வார்: ``தமிழ்நாட்டு கரும்பு சாப்பிடுங்க, தேன் மாதிரி.'' பதிலடி பின்னாலேயே வரும். ``எங்க ஊர் தண்ணியே தேன் மாதிரிதான்!''

இது பரவாயில்லை. தமிழனால் கேரளாவுக்கு குலநாசம் என்றொரு மனப்பிராந்தி மலையாளிகளுக்கு ரொம்பவே உண்டு. பல மலையாளத் திரைப்படங்களில் மெயின் திரைக்கதையே இந்தப் பயங்கர கற்பனைதான்.

இதுவும் மோகன்லால் படம். அவரது அண்ணனாக நெடுமுடிவேணு. அக்மார்க் சுதேசியான அவர் கோக், பெப்சி முதலான தயாரிப்புகளை ஊரில் நுழையாமல் தடுத்து நிறுத்துவார். அவரது சுதேசிக் கனவைத் தகர்க்கும் விதமாய் அயல்நாட்டுப் பொருட்களின் விற்பனையாளராக வருகிறவர் ஒரு தமிழர். சில பல சண்டைகளுக்குப் பிறகு தமிழனைத் துரத்தியடித்து சொந்த தேசத்தின் கலாச்சாரத்தை மீட்டெடுப்பார் மோகன்லால்.

`லாலேட்டன்' எனச் செல்லமாய் அழைக்கப்படும் மோகன்லாலின் பெரும்பாலான படங்களில் தமிழர்களுக்கு எதிராய் இப்படி வாலாட்டும் காட்சிகள் மிக அதிகம்.

``இதெற்கெல்லாம் நேர்மாறாக அங்கே எல்லா காலேஜ் ஃபங்கஷன்லயும் நம்ம ஊரு சினிமாப் பாடல்கள் வெகு பிரபலம். எழுந்து நின்று ஆட்டம் போடுவாங்க. கூடவே தமிழ் சினிமாவினால மலையாளிகளுக்கு வர்த்தக ரீதியாக நிறைய லாபமும் கிடைக்குது.

சொற்ப சம்பளம் வாங்குற மலையாள நடிகர், நடிகைககூட தமிழ் சினிமாவுக்கு வந்தா லட்சக்கணக்குல சம்பளம் வாங்குறாங்க. நயன்தாரா முதல் நரேன் வரை பல உதாரணம்.... எல்லாரையும் தூக்கி வச்சு கொண்டாடறது தமிழன்தான்.

தமிழ்நாட்டுல இருக்கற நிறைய டீக்கடைகளை நடத்தறது மலையாளிகள். அவ்வளவு ஏன், அரிசி, பருப்பு வகையறாக்கள்கூட இங்கே இருந்துதான் கேரளாவுக்குப் போகுது. அப்படியிருக்க, தொடர்ந்து தமிழர்களை தங்களோட சினிமாக்களில் கேவலமா காட்டறாங்கன்னா மனதளவுல அவங்க குறைபாடா இருக்காங்கன்னு அர்த்தம்'' என்கிறார் தமிழ் சினிமா பிரபலம் ஒருவர்..

தொகுப்பு: மா.மணிவண்ணன்(தட்ஸ் தமிழ்)

இவரும் அகதி தான்

- சின்னக்குட்டி
அந்த நீண்டு இருக்கும் வயல் வரப்போடு ஒட்டிய குறுகலான பாதை அதோடு ஒட்டி இருக்கும் தாமரைக்குளத்தை தாண்டியவுடன் அந்த பாதை விரிந்து ஊரி றோட்டில் ஏறுகிறது। மழை அடிச்சு வெள்ளம் வந்தால் குளத்துக்கும் வயலுக்கும் வித்தியாசம் தெரியாது. இந்த மெயின் றோட்டில் இருந்து இந்த பரந்த வயல் வெளியூடாக ஊரி றோட்டில் தொடங்கும் இடத்தில் இருக்கும் ஊர் மனைகளை பார்த்தால் மிகவும் தூரத்தில் இருப்பது மாதிரி தான் தெரியும்.


வயல் விளைச்சல் இல்லாத காலங்களில் குளமும் வற்ற வயலும் சும்மா கிடக்க அதனூடாக குறுக்கலாக நடந்து சிலர் தூரத்தை குறுக்க முனைய, வேறு சிலர் அதை தொடர அங்கு பாதை ஒன்று புதிதாக மலர்ந்து விடும்.

அதனூடாக தான் கொஞ்ச நாளாக, கொஞ்ச நாளாக என்ன, கொஞ்ச காலமாக அவர் தினமும் வந்து அந்த ஊர் மனைகள் தொடக்கத்தில் உள்ள மாமரங்கள் தென்னை மரங்கள் நிறைந்த தொடர்ச்சியாய் அச்சொட்டாக ஒரே மாதிரி தோற்றத்துடன் இருக்கும் மூன்று வீட்டு தொடருக்கு வந்து நோட்டம் விட்டு திரும்புகிறார். வேவு பார்க்க வருகிறார் என்றும் சிலர் நினைக்கலாம் அல்லது முந்தி வாழ்ந்த இடத்தை பார்த்து விட்டு போறார் என்றும் நினைக்கலாம். அவற்றுக்காக தான் வந்து போறார் என்று நிச்சயம் சொல்ல இயலாத மாதிரியும் இருக்கும். ...

இவருக்கு மனிதர் மாதிரி இப்படி சிந்திக்கும் பழக்கம் இருக்கோ என்று நிச்சயமாக தெரியாது. ஒரு காலத்தில் அந்த வீட்டு தொகுதியுனுடைய முடிசூடா மன்னர் என்று சொல்ல இயலாது. வேணும் என்றால் இவரை இப்படி சொல்லலாம். அந்த வீட்டு முடிசூடா காவல் செல்ல பிராணி வீமன் என்று அழைக்கப்பட்ட நாய் என்றுஅவரை அவர் என்று சொல்லக் கூடிய முறையில் தான் அந்தக் காலம் முதல் நடந்து கொண்டு இருக்கிறார். அந்த வீட்டுக்கு மட்டுமல்ல அந்த வீதியில் தொடக்கத்தில் தொடங்கி கொஞ்சம் தூர பகுதி வரை பிரதேசத்துக்கு நாட்டாமை போல் திகழ்ந்திருக்கிறார். அந்தக் காலம் அந்த தெருவின் தொடக்கத்தில் தொடங்கி அந்த தெருக்கோடி முடிவு வரை எந்த பிராணிகள் பறவைகள் ஊர்வன தொடக்கம் புதிய மனிதர்கள் வாகனங்களில் போவோர் வரை, எவரும் இவருடைய எச்சரிக்கை கனைப்புக்கு செருமலுக்கு குரைப்புக்கு அடங்கி ஒடுங்கி நடுங்காமால் போக முடியாது.அந்த வீட்டு தொகுதியில் வாழ்பவர்களின் மத மதப்பும், குணமும், திமிரும் இவரிடம் இருந்திருக்கிறதால் இவருக்கு மனிதர் மாதிரி சிந்திக்கும் குணமும் சில வேளை இருக்கலாம் என்றும் நினைக்கலாம்

இப்பொழுது அவரை அது என்று கூட சொல்ல முடியாத தோற்றம். அரைவாசி உடம்பு முழுவதும் உண்ணிகள். எங்கும் சொறி பட்ட புண்கள். அதனால் இவர் எங்கு சென்றாலும் இவரை பின் தொடர்ந்து இவரின் உடம்பை மொய்க்கும் இலையான் பூச்சிகளின் தொல்லை தாங்க முடியாமால் ஏற்பட்ட வேதனை படர்ந்த முகம், நாயின் ஆயுட்காலம் குறைவாக இருப்பதனால் விரைந்து வந்த முதுமை ஒரு புறம்.

இந்த வீட்டு தொகுதியிலுள்ளவர்கள் எந்த நாட்டில் என்று தெரியாத மாதிரி இவரும் எங்கு படுத்து எழும்புகிறார் எங்கு தின்று கழிக்கிறார் என்ற இரகசிய குறிப்புகள் ஒன்றும் தெரியாது. ஆனால் இவரின் முன்னாள் எஜமானர்கள் அகதியாக தேசாந்திரம் போயிட்டினம் என்ற மாதிரி. இவருக்கு உடனடியாக அந்த அந்தஸ்து கொடுக்கால் முதலில் காணாமல் போனோர் பட்டியலில் தான் போட்டார்கள் .

இப்ப கொஞ்சக் காலம் இவரின் நடமாட்டம் கண்ட பின் தான் அகதி பட்டம் கிடைத்திருக்கிறது..இப்ப இவரும் ஒரு அகதி தான்.இன்றும் அந்த பாதையூடாக குளத்து கட்டை சுற்றி வீச்சு நடை போட்டு வந்தவர், தூரத்தில் சொகுசு பஸ் தோசை கடை பொன்னம்மாக்கா வீட்டுக்கு முன்னால் நிற்க கண்டு இவ்வளவு நாளும் காணதா அந்த ஆள் அரவம் கண்டு கேட்டு நிதானமாக நின்று யாரையோ தேடும் பாவனையில் கவனிக்கிறார்.

கொஞ்ச காலங்களாக இந்த ஊரில் வெடிச்சத்தங்கள் கேட்கால் விட்டவுடன் வெளிநாட்டிற்க்கு சொல்லிக் கொள்ளமால் ஓடிப் போனவர்கள் சொகுசு பஸ்ஸில் தீடிரென சொல்லிக்கொள்ளாமல் வந்து இறங்கி ஊரை வந்து பார்க்கிறதோடு கலர் காட்டி சென்று கொண்டு இருக்கிறார்கள். இந்த நாய் பெருமானாரும் ஏதோ விதத்தில் மோப்பம் பிடித்து மணந்து கொண்டு எப்படியோ தெரிந்து கொண்டாரா என்னவோ. அதனால் தான் இப்ப கொஞ்ச காலமாக எங்கையோ படுத்து எழும்பி விட்டு இந்த வீட்டடிக்கு விஜயம் செய்யிறதும் திரும்புறதுமாக இருக்கிறார் என்பது மனித புத்தியூடாக விளங்கிறது கஸ்டம தான். அதுக்காக நாயை மாதிரி சிந்திக்க புரிய மனிதர்களும் இருக்க வேண்டுமா என்ன?

இது சண்டைக்காலம், இது சமாதான காலம் என்று அவராலும் மனிதர் மாதிரி பிரித்து கணிக்க முடியுமா? அவருக்கு தெரிந்தது எல்லாம் வெடிசத்தம் நல்லாய் கேட்கும் காலம் சத்தம் கேட்காத காலம். அந்த காலங்களில் கொண்டாட்ட நாட்களில் தான் வெடிச்சத்தம் கேட்கும் அந்த நாட்களில் தான் வெளியிலிருந்து ஆட்கள் வருவார்கள். இப்ப வெடிச்சத்தம் கேட்காத நேரத்தில் கேட்காத காலங்களில் வருகிறார்கள் என்ற குழப்பம் இருந்தாலும் அந்த ஆராய்ச்சியில் எல்லாம் ஈடுபடாமல் அந்த சொகுசு பஸ் அருகில் இருந்த கூட்டத்தில் தான் தேடும் யாரும் நிற்க மாட்டார்களா என்ற ஏக்கத்துடன் நாக்கை தொங்க போட்டுக் கொண்டு உற்று பார்த்து கொண்டிருந்தது.

கால வெள்ளத்தில் மறைந்த நினைவுகளை மீட்டு பார்த்தது. இந்த வயலில் வெள்ளம் குளம் போல வழிய அதுக்குள் தன்னை போட அதுக்குள் நீந்தி மகிழ அவர்களும் மகிழ்ந்தது .அந்த மூலை வீட்டு சின்ன மகளோடு பந்து விளையாடியது, சிரித்து சந்தோசமடைந்தது எல்லாம் திரும்ப திரும்ப வந்து நினைவுகள் சந்தோசமடைந்திருக்க வேண்டும். நாய் சிரிக்க முனைந்தது. முடியவில்லை போலும். நாய் சிரித்தது என்று சொன்னால் நம்புவது கஸ்டம் தான். வேணும் என்றால் அவர்களை கேட்டுப் பாருங்கள் அதுவும் அவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தால் தான் முடியும்.

அவர்கள் தான் வந்து விட்டார்கள் அந்த வீட்டுக்குள் ஆட்கள், என அசுமாத்தம் பட்டு விட்டதோ என்னவோ துள்ளிக் குதித்து அந்த வீட்டு பின்புறத்தில் உள்ள வேலியில் உள்ள துளையூடாக நுழைந்தது, அந்த காலம் அது போட்ட துளை தான் அதனால் அதுக்கு அதனூடாக இப்ப நுழைவது இரட்டிப்பு சந்தோசம்.இளைய மகள் சூட்டி தான் வந்திருந்தாள் தனது மகள்கள் இருவருடன் வந்திருந்தாள், மகள்களை பார்த்த அந்த காலத்தில் சூட்டியை பார்த்த மாதிரி இருந்தார்கள், மனிதர்கள் பேசும் மொழி விளங்காவிட்டாலும் இவர்கள் மொழி வழக்கமாக இங்கை ஒலித்த சத்தம் இல்லை என்று மட்டும் விளங்கியது.

சிரிக்க முடியா விட்டாலும் அழுது கனைத்து காட்டி தன்னை அடையாளம் காட்ட முனைந்தது. கனைப்பு சத்தம் கேட்ட சூட்டி பிள்ளைகளை எச்சரிக்கை செய்தாள் விச நாய் ஓன்று வந்திருக்குது என்றுதன்னை அடையாளம் காணமால் அலட்சியம் செய்து தனது ஆவல்களை எல்லாம் ஒரு நிமிடத்தில் தவிடு பொடியாகிவிட்ட ஆத்திரத்தில் மீண்டும் வேறு விதமாக ஊளையிட்டு குரைத்தது.

என்ன நன்றி கெட்ட மனிதர்கள் என்ற மாதிரி இருந்தது. இவரை தான் நன்றியுள்ள மிருகம் என்று சொல்லி இருக்கினம்.மனிசரை எப்பொழுதாவாது நன்றியுள்ளவர்கள் என்று யாரும் சொல்லி இருக்கினமா? இப்ப இதுக்கு இவர் கோபிப்பதில் அர்த்தம் இல்லை தானே. அதோடு இவர் தன்னை அடையாளம் காணவில்லை என்று தங்களுடைய அடையாளத்தை தொலைத்த இந்த பாவப்பட்டவர்களை கோபித்து இவர் என்ன காணப்போறார்பாவப்பட்டவர்கள் என்று தெரியவா போகுது இந்த நாய்க்கு. .

இந்த ஊரில் உள்ளவர்களே இவர்களின் பவுஸுகளை கண்டு அவர்கள் அப்படி இல்லை என்று நினைக்கும் போது. திரும்பி பாராமாலே வந்த வேலி துளை வழியே திரும்பிவிட்டது. இப்ப இந்த பாதைக்கு வருவதில்லை. இப்ப போக்கிடம் இல்லாமால் திசை தெரியாமல் ஓடி கொண்டிருக்கிறது. அவர்களும் அப்படித்தான் என்று உதுக்கு விளங்கவா போகிறது.

என் பாக்கியம்....

-அனாமிகா பிரித்திமா

கண்கள் முன் உங்களை...
வைத்திருக்கிறேன்...
ஒரு நொடி கூட முட மனதில்லை..
।நீங்கள் மறையக்கூடாதே !...

நாசியில் இழுக்கிறேன் சுவாசம்...
நீங்கள் இருக்கும்...
இதயத்திற்கு...
இரத்த ஓட்டம் வேண்டுமே !...

செயற்கை புன்னகையை ...
ஒட்டி கொண்டு சிரிக்கிறேன்...
தங்கள் சிந்தனையால் சிரிக்க...
உதடுகள் மறுக்கிறதே !...

விரல்கள் உணவை எடுக்க மறக்கிறது !
வாய் அதை ஏற்க மறுக்கிறது !
என் நாவு ருசி இழந்து...
வருடங்கள் ஆனது !

உயிர் (நிங்கள்) இல்லா உடம்பு...
இருந்து என்ன பயன்?...
உங்கள் மடியில் உயிர் பிரியும்...
பாக்கியம் இல்லை...
உங்கள் கையிலாவது...
அது போகட்டுமே ...

அனு அனுவாய் சாவதை விட...
என்னை முழுதாய்...
கொன்றுவிடுங்களேன்...
அது என்...பாக்கியமாக இருக்கட்டுமே...
என் பாக்கியம் ...
பாக்கியம் ...

எது உண்மை ???

மணக்கும் வரை மலர் என்பார்
மடிந்த பின்னே குப்பை என்பார்
எரியும் வரை விறகு என்பார்
எரிந்த பின்பு சாம்பல் என்பார்
கட்டில் நாடகம் அதிசயம் என்பார்
தொட்டில் குழந்தையோ ரகசியம் என்பார்
இறக்கும் வரை இவன் என்பார்
இறந்த பின் பிணம் என்பார்
இதில் எது உண்மை?

- தினந்தந்தி மாணவர் மலர்

அண்ணா சில நினைவுகள்


அண்ணா முதலில் கல்வி கற்கச் சேர்ந்ததும் பச்சையப்பன் ஆரம்பப் பாடசாலை; அவர் பட்டம் பெற்றதும் பச்சையப்பன் கல்லூரிதான்.
அந்தப் பச்சையப்பன் கல்லூரி இப்போது சேத் துப்பட்டில் இருக்கும் கல்லூரி அல்ல! சைனாபஜாரில் கூச்சலும் சந்தடியும் நிறைந்த இடத்தில் அந்தப் பச்சையப்பன் கல்லூரி இருந்தது।

பொருளாதாரப் பேராசிரியர் 'மால்துஷியஸ்', தத்துவப் பாடத்தை விளக்கிக்கொண்டு இருப்பார்। வெளியே ''ஒன்றரையணா, ஒன்றரையணா... எதை எடுத்தாலும் ஒன்றரையணா!'' என்ற கூச்சல் கேட்கும்। இருப்பினும், அண்ணா பாடத்திலேயே கவனமாக இருப்பார்। உலகத்தில் எத்தகைய கூச்சலும் குழப்பமும் அமளியும் ஏற்பட்டாலும், அமைதியாக மனத்தை ஒருமுகப்படுத்தி விஷயத்தில் செலுத்தும் பண்பை அண்ணா இங்கிருந்தே பெற்றார்.
சென்னையில், பெத்துநாயக்கன் பேட்டைப் பகுதியில், ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தது அண்ணாவின் குடும்பம். அந்த வீடு பல குடித்தனங்கள் இருந்த பெரிய வீடு. குழந்தைகளும் குட்டிகளும் ஏராளமாக இருந்தன. அண்ணா படிப்பதற்கேற்ற சூழ்நிலை அங்கில்லை. இருந்தாலும், அண்ணா எல்லாவற்றையும் சகித்துக்கொண்டே படிக்கத் தொடங்கினார்.

கல்லூரியில் இன்டர் வகுப்பு முடிந்து, குடும்பத்திலுள்ள வசதிக் குறைவு காரணமாக அண்ணா தமது படிப்பைத் தொடருவ தில்லை என்று முடிவு செய்து விட்டார்। இந்தச் செய்தி, அன்றைய பச்சையப்பன் கல்லூரி முதல்வர் சின்னத்தம்பிப் பிள்ளை யவர்களின் காதில் விழுந்தது। அண்ணாவை அழைத்து வரச் சொன்னார்.

''இன்டரில் முதல் வகுப்பில் பாஸ் செய்த நீயெல்லாம் இப்படிப் படிப்பைத் தொடராது விட்டால் எப்படி? நீ, பி।ஏ। ஆனர்ஸ் படிப்பைத் தொடர்ந்து படிக்க வேண்டும். அந்த மூன்று வருடங்களுக்குரிய புத்தகச் செலவை நான் ஏற்றுக்கொள் கிறேன்'' என்றார்.

எந்த அண்ணாவுக்காக லட்சோப லட்சம் மக்கள் தங்கள் ஐஸ்வரியங்களையெல்லாம் கொட்டித் தரத் தயாராக இருந் தார்களோ, அந்த அண்ணா வறுமை காரணமாகக் கல்லூரி முதல்வரின் கருணையினால் புத்தகங்கள் பெற்றுத் தமது படிப்பைத் தொடங்கினார்।
கல்லூரியில் படிக்கும்போது தான் அண்ணா அவர்கள் ராணி அம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார்। பிற்காலத்தில் சுயமரியாதை இயக்கத் தளபதி யாக இருந்தவர், சுய மரியாதைத் திருமணச் சட்டம் கொண்டு வந்த முதலமைச்சராக இருந்தவர், ராணி அம்மையாரைப் பழைய சம்பிரதாய முறைப்படிதான் திருமணம் செய்துகொண்டார்.

கல்லூரிப் படிப்பை முடித்த தும், அண்ணா எல்லோரையும் போலவே வேலை தேடும் படலத் தில் இறங்கினார்।
காஞ்சி நகராட்சியில் கிளார்க் வேலை, காஞ்சிபுரம் பள்ளிக்கூடத் தில் (தனியாருடையது) ஆசிரியர் வேலை, சென்னையில் கோவிந் தப்ப நாயக்கன் பள்ளியில் ஆசிரியர் வேலை என்று சிறிது காலம் வேலை பார்த்தார்।

அப்போதுதான் 'சண்டே அப்சர்வர்' என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியரான பால சுப்பிரமணியம் அவர்களின் நட்பு அண்ணாவுக்குக் கிடைத்தது।

இன்று உலகிலுள்ள எல்லாத் தமிழர்களாலும் 'அண்ணா' என்று அழைக்கப்படும் அண்ணா, தன் வாயால் 'அண்ணா' என்று அழைத்த ஒரே ஒருவர் சண்டே அப்சர்வர் பாலசுப்பிரமணியம் அவர்கள்தான்।

எப்படியாவது அண்ணாவைத் தமது அணியில் சேர்த்து விட வேண்டும் என்று யோசித்த பெரியார், மெதுவாக அண்ணா விடம் தமது பத்திரிகையான 'விடுதலை'யில் பணியாற்ற வருமாறு கேட்டார்। யோசித்துச் சொல்வதாக அண்ணா வழக்கம் போல் பதில் சொன்னார்।

''நீங்க எப்பவும் இப்படித்தான்! என்ன யோசனை... வெங்காயம்... 'சட்டுபுட்டு'னு ஒத்துக்கவேண்டி யதுதானே!'' என்று சலித்துக் கொண்டார் பெரியார்।

சேலம் பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்த அண்ணா அவர்களை மிகவும் வற்புறுத்திப் பெரியார் தமது 'விடுதலை' பத்திரிகையில் பணியாற்றுமாறு செய்துவிட்டார்। 'விடுதலை'யில் பரதன், வீரன், சௌமியன் என்ற புனைபெயர் களில் பல கட்டுரைகளை எழுதி, வாலிப உள்ளங்களுக்கு வேகம் ஊட்டினார் அண்ணா.

ஈரோட்டில் அண்ணா இருந்த போது ஏற்பட்ட கலைப் பற்று, நாளாக ஆக வளரத் தொடங்கி, அவரைக் கலையுலகில் ஒரு மறு மலர்ச்சியைத் தோற்றுவிக்கிற அளவுக்கு வளர்த்தது।

சந்திரமோகன், நீதிதேவன் மயக்கம், சந்திரோதயம், ஓர் இரவு, காதல் ஜோதி, வேலைக் காரி போன்ற ஏராளமான நாடகங்களை எழுதினார்। எழுதியது மட்டுமல்ல; சில நாடகங்களில் நடிக்கவும் செய்தார். எம்.ஏ. படித்தவர் - ஓர் இயக்கத் தின் தளபதி அரிதாரம் பூசி நடிக்க ஆரம்பித்ததும்தான், கலையுலகம் பற்றியும் கலைஞர்கள் பற்றியும் இருந்து வந்த கேவலமான எண்ணம் மாறத்தொடங்கியது.

ஒரு முறை அண்ணாவின் நாட கத்தைப் பார்த்த பெரியார், ''நாம் பேசும் நூறு கூட்டங்களும் சரி, அண்ணாதுரையின் ஒரு நாடகமும் சரி!'' என்று வாய் விட்டுப் பாராட்டினார்।


'நீதிதேவன் மயக்கம்' என்ற நாடகத்தில் ராவணனாக நடிப் பார் அண்ணா.
நீதிதேவனைப் பார்த்துச் சரமாரியாகக் கேள்வி கேட்பார்। அப்போது நீதிதேவன் வேடம் போட்டிருந்தவர் பேராசிரியர் அன்பழகன். ஒரு முறை, அண்ணா வெகு வேகமாக சரளமாகப் பேசுவதைப் பார்த்து மயங்கிப் போயிருந்த அன்பழகன், தனது பாடத்தை மறந்துவிட்டு, அடுத்துப் பேச முடியாமல் விழித்தார்.

உடனே அண்ணா சமாளித்துக் கொண்டு, ''பேசமாட்டீர் நீதி தேவனே! நீர் பேசமாட்டீர்! உமக்கு மறந்து போய்விட்டது - நீதியும் நெறிமுறையும்!'' என்று பேச ஆரம்பித்தார்।

நாடகம் பார்க்க வந்த மக்கள் புரிந்துகொண்டு, நீண்ட கையலி எழுப்பினர்.
1949 ஜூன் 18-ம் தேதி... பெரியாருக்கும் மணியம்மைக்கும் சென்னை ரிஜிஸ்தரார் முன்னிலை யில் திருமணம் நடந்தது।

அந்தத் திருமணத்தை ரத்து செய்துவிடும்படி அண்ணாவும் கழகப் பிரமுகர்களும் கையெழுத் திட்டு ஓர் அறிக்கை விடுத்தனர்। பயன் ஏதும் ஏற்படவில்லை.

திராவிடர் கழகத் தோழர்களின் எதிர்காலத் திட்டம் பற்றி ஆராய 17-9-49 அன்று சென்னை பவழக் காரத் தெருவிலுள்ள ஒரு சிறிய அறையில் அண்ணா ஒரு கூட்டத் தைக் கூட்டினார். புதிய கழகம் அமைப்பதெனத் தீர்மானமாகியது. அதுவே திராவிட முன்னேற்றக் கழகம்.
தி।மு.கழகம் அமைந்ததை யட்டி அன்று ராபின்சன் பூங்காவில் கூட்டம். ஏராளமான மக்கள்!

''நாம் திராவிடர் கழகத்தாருடன் மோதுவதோ, சாடுவதோ கூடாது। திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்'' என்று பேசத் தொடங்கினார் அண்ணா।

ஒரு நாள் அண்ணாவின் இல்லத்திற்கு மாநகராட்சி தி।மு.கழகத்தினர் வந்தனர்.

''உங்களுக்கு ஒரு சிலை வைக்கலாமென்றிருக்கிறோம்'' என்றனர்.
''எனக்கேன் சிலை? வேண் டாம்'' என்றார் அண்ணா.
''இல்லை, சிலை வைத்துத்தான் ஆகவேண்டும்'' என்றனர்.
''அப்படியானால் நான் சொல் வதைக் கேளுங்கள்। தமிழ்நாட்டின் புகழை உயர்த்தியுள்ள காமராச ருக்கும் சத்தியமூர்த்திக்கும் சிலை வையுங்கள்'' என்றார் அண்ணா.

பெருந்தன்மையும் நாகரிகமும் கலந்த அந்தத் தலைவரின் உத்தரவுப் படியே காமராசருக்கும் சத்திய மூர்த்திக்கும் சிலைகள் வைக்கப்பட்டன.
அண்ணாவுக்கு முதன்முதலாக 'அறிஞர்' பட்டம் தந்தது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்தான்।
- அடியார்




அண்ணாவின் கோபம்...அய்யாவின் தந்திரம்...


திராவிடர் கழகத்தில் பெரியா ரிடம் அண்ணா செயலாளராகப் பணிபுரிந்துகொண்டிருந்த காலம் அது திராவிடர் கழகக் காரியாலயத் துக்கு வெள்ளையடிக்க வேண்டும் என்று பெரியாரிடம் அண்ணா தெரிவித்தார்.

''சரி! நாளை ஒரு நல்ல ஆளாகப் பார்த்து அழைத்து வா!'' என்றார் பெரியார்। அது போல், அண்ணா மறுநாள் ஒருவருடன் பெரியார் முன் போய் நின்றார்।

வெள்ளையடிக்க வந்தவருக்கு முதலில் கட்டடத்தை முழுவதுமாகச் சுற்றிக் காண்பித்துவிட்டு, ''என்ன கூலி கேட்கிறாய்?'' என்றார் பெரியார்।

''ஐந்து ரூபாய் தாருங்கள்!'' என்றவுடன் பெரியார் மிகவும் கோபமடைந்து, ''நீ என்ன படித்திருக்கிறாய்?'' என்று கேட்டார்.

''படிச்சிருந்தா நான் ஏங்க இந்த வேலைக்கு வர்றேன்? பேனால்ல பிடிச்சிருப்பேன்... படிச்சுத் தொலைக்கலீங்க!'' என்றார் அவர்।

உடனே பெரியார் அண்ணா வைக் காட்டி, ''இதோ நிற்கி றாரே, இவர் எம்.ஏ. படித்திருக் கிறார். இவருக்கே நான் மாதச் சம்பளம் ஐம்பது ரூபாய்தான் தருகிறேன். கூலியைப் பார்த்துக் கேள்!'' என்றார்.

பிறகு, ''இரண்டு ரூபாய் தருகிறேன்!'' என்றார். ''கட்டாதுங்க!'' என்று கூறிப் போய்விட்டார் வெள்ளை அடிக்க வந்தவர்.

அதன்பின், அண்ணா வேறு சிலரை அழைத்து வந்தும் கூலித் தகராறினால் காரியா லயத்துக்குப் பல மாதங்களாக வெள்ளையடிக்க முடியாம லேயே போயிற்று. காரியாலயம் மிகவும் அவலட்சணமாகி வருவது சகிக்கமுடியாமல், அண்ணா ஓர் உபாயம் மேற்கொண்டார்.
ஒருவரிடம் போய், ''ஐயா, ஒரு பெரியவரிடம் உங்களை அழைத் துச் செல்வேன்। அவர் கொடுக்கும் கூலிக்கு ஒப்புக்கொள்ளுங்கள். உங்களுக்கு வேண்டிய மீதிப் பணத்தை, வேலை முடிந்ததும் வெளியே வந்து என்னிடம் பெற்றுக் கொள்ளுங்கள்!'' என்று கூறி அழைத்து வந்தார்.

அவரும் அண்ணா கூறியபடி செய்து, காரியாலயத்துக்கு வெள்ளையடித்துக்கொண்டு இருந்தார். அண்ணா உணவு அருந்தச் சென்றிருந்த சமயம், அங்கே பெரியார் வந்தார். வெள்ளை அடித்துக்கொண்டிருந்தவரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ''ஏம்பா! நீ நன்றாக வெள்ளையடிப்பாயா?'' என்று கேட்டார்.

''ஏன் ஐயா இப்படிக் கேட் கிறீர்கள்?'' என்று திடுக்கிட்டார் அவர்.

''வேறொன்றுமில்லை; உனக்கு முன் இங்கே வந்த பலர் இந்தக் கூலிக்கு முடியாது என்று போய் விட்டார்கள்। நீ மட்டும் எப்படி ஒப்புக்கொண்டாய்? அநேகமாக உனக்குச் சரியாகத் தொழில் தெரியாது என்று நான் நினைக் கிறேன்!'' என்றார் பெரியார்.

உடனே அவர் தன்மான உணர்வு மேலிட, ''ஐயா! நீங்கள் நினைப்பது போல் நான் ஒன்றும் கத்துக்குட்டிப் பயல் இல்லே! என்னை அழைத்து வந்தவர் நீங்கள் தரும் கூலிக்கு ஒப்புக் கொள் ளும்படியும் மீதிப் பணத்தைத் தான் தருவதாகவும் சொன்னார். அதனால்தான் இந்த வேலைக்கு ஒப்புக்கொண்டேன்!'' என்று உள்ளதைக் கக்கிவிட்டார்.

இதைக் கேட்டதும் மிகுந்த கோபம் அடைந்த பெரியார், ''அப்படியா விஷயம்! சரி, நீ வேலை செய்தது போதும். பூச்சு மட்டையைக் கீழே வைத்துவிட்டு முழுப் பணத்தையும் அவரிடமே வாங்கிக் கொண்டு போ!'' என்று கூறி, அவருடன் அண்ணாவையும் சேர்த்து வெளியே அனுப்பிவிட்டார்.

இந்தச் சம்பவம் நடந்து, வெகு நாட்களுக்குப் பிறகுதான் அண்ணாவை மன்னித்துத் திரும்பவும் சேர்த்துக்கொண்டார். அதன் பின், பெரியார் கிழித்த கோட்டை இம்மியும் தாண்டாத லட்சுமணன் ஆனார் பேரறிஞர் அண்ணா!

- 'பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும்' என்ற நூலிலிருந்து...

நினைவலைகள்

கடலலைக்கு வேண்டுமானால்
கரைக்கு வந்து போவது
பழகிப்போயிருக்கலாம் - ஆனால்
கரைக்கு வந்து போவது
பழக்கமில்லையடி
அது என்றும் அதே இடத்தில்தான்
இருக்கும்।
உனக்கு வேண்டுமானால்
நம் பிரிவு சந்தோஷம் தரலாம்
ஆனால் எனக்கு வேதனையடி
உனக்குத் தெரியுமா
திறந்தவுடன் உன்னைக் காட்டும்
மணிப்பர்ஸ்,
உனது குரலைக் கேட்க மட்டுமே
காத்திருக்கும்
எனது செல்போன்,
உனக்காக மட்டுமே மீண்டும் மீண்டும்
எழுதத் துடிக்கும்
விரல்கள்
உன்னை மட்டுமேசிந்திக்கச் செய்யும்
சிந்தனைகள்
உனது வருகைக்காய்காத்திருக்கும்
எனது கால்கள்
உன்னிடம் மட்டுமே பேசத் துடிக்கும்
எனது உதடுகள்.
இப்படி சொல்லப் போனால்
அநேகம்எனக்குள்ளே
இயங்கிக் கொண்டிருக்கும்உனது
நிலைவலைகளைஎன்னைவிட்டு
பிரிந்து போகச் சொல்லடி
பிறகு -
நான் உன்னை பிரிந்து போவதை
யோசிக்கிறேன்।

- ஜோயில்

அனுசரித்து வாழப் பிறந்தவனே மனிதன்!

கா. அ‌ய்யநாத‌ன்

ஆறும் நீரும் உனக்குச் சொந்தமென்றால்
வானும் மேகமும் யாருக்குச் சொந்தம்?

வயலும் விளைச்சலும் உனக்குச்
சொந்தமென்றால்
வான் மழையும் பருவமும் யாருக்குச்
சொந்தம்?

நிலமும் நாடும் உனக்குச்
சொந்தமென்றால்
இப்புவியும் வளியும் யாருக்குச் சொந்தம்?

விழிப்பும் உறக்கமும் உன்னுடையதென்றால்
இரவும் பகலும் யாருக்குச் சொந்தம்?

வாழ்வும் பயனும் உன்னுடையதென்றால்
உன் பிறப்பும் இறப்பும் யாருக்குச் சொந்தம்?

ரத்தமும் சதையும் மூச்சும் நீயென்றால்
உன் உயிரும் ஆத்மனும் யாரென்று கூறு।

என்னுடையது என்னுடையது என்கின்றாயே
நீ இல்லையென்றாலும் அனைத்தும் இருக்குமடா

இருப்பதெல்லாம் உன்னால் வந்ததுமல்ல நீ
இல்லாமல் போனால் மறையப்போவதுமல்ல

ஏனென்று தெரியாமல் வாழப் பிறந்துள்ள நீ
எனக்கென்று இவ்வாழ்கை எதற்கென்று பொருள்தேடு

சுகபோகியாய் அனுபவிக்கும் உனக்கென்று உள்ளதெது?
கட்டையில் எரித்தாலும், குழி தோண்டிப் புதைத்தாலும்
அடுத்த ஆறு மாதத்தில் அடையாளம் அற்றுப்போகும் நீ
உன்னுடையதென்று ஒன்றுமில்லை என்றுணர்

இருக்குமனைத்தும் அனைவருக்குமேயெனும்
உண்மையறிந்து ஒன்றாய் வாழ்ந்திட
இறைவன் பங்கிட்டு அளித்ததேயெல்லாம்
அதிலென்ன உன் பங்கு என் பங்கு?

காவிரி கங்கை சிந்து நதிகளெல்லாம்
நம் பிறவியைக் கொடுத்த இறைவனுடையது
தாயின் முலைப் பாலையொத்தது
நதி நீர்பு‌னிதம் அதுவென்று போற்றிப் பகிர்ந்துகொள்

அடித்துக் கொண்டு வாழலாம் மிருகங்கள்
அனுசரித்து வாழப் பிறந்தவனே மனிதன்!

நன்றி - வெப்துனியா

பொன் விழா காணும் சென்னை எல்.ஐ.சி. கட்டடம்!

சென்னையின் அடையாளமாக இன்றும் எழிலுற விளங்கிக் கொண்டிருக்கும், அண்ணா சாலை எல்।ஐ.சி கட்டடத்திற்கு 50 வயதாகிறது.அந்தக் காலத்து கருப்பு வெள்ளைப் படங்களில் பட்டணத்தைக் (சிங்கார சென்னைதான்) காட்டும் காட்சிகளில் முதலில் வருவது எல்.ஐ.சியின் 14 மாடி கட்டடம்தான். அந்த அளவுக்கு சென்னையின் அடையாளமாக பல காலமாக திகழ்ந்து வருகிறது எல்ஐசி கட்டடம்.

இந்த நீண்டு நெடிதுயர்ந்த கட்டடத்திற்கு வயது 50 ஆகிறது என்றால் சத்தியமாக நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு புது மணப் பெண் போல, புதுக் கருக்கு மாறாமல் அப்படியே ஸ்லிம்மாக நின்று கொண்டிருக்கிறது எல்.ஐசி. கட்டடம்.இன்றும் சென்னைக்கு வருபவர்கள் வந்து வேடிக்கை பார்க்கும் இடமாக எல்.ஐ.சி. திகழ்கிறது. சென்னை நகரவாசிகளுக்குப் பெருமையாகவும், இதர ஊர்க்காரர்களுக்கு ஆச்சரியமாகவும் திகழும் எல்.ஐ.சி கட்டடத்தின் கதை சுவாரஸ்யமானது, ஆச்சரியமூட்டக் கூடியது.

சென்னையின் முதல் உயரமான கட்டடம் என்ற பெருமை எல்.ஐ. சி கட்டடத்திற்கு உண்டு. அதுமட்டுமல்ல இந்தியாவின் முதலாவது உயரமான கட்டடமும் இதுதான். 1959ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி எல்.ஐ.சி கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.தனது எம்.சி.டி குரூப் நிறுவனத்திற்கு பிரமாண்ட அலுவலக கட்டடம் தேவை என்று கருதினார் பிரபல தொழிலதிபர் எம்.சிதம்பரம் செட்டியார். இந்த குருப்பீல் இடம் பெற்றிருந்த நிறுவனங்கள் - யுனைட்டெட் இந்தியா லைப், யுனைட்டெட் இந்தியா பயர் அன்ட் ஜெனரல் மற்றும் நியூ கார்டியன் லைப் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இடம் பெற்றிருந்தன.

சிதம்பரம் செட்டியாருக்கு நியூயார்க்கில் உள்ள ஐ.நா. கட்டடம் பெரும் உந்துதலாக இருந்தது. அதே போல சென்னையில் பிரமாண்ட, உயரமான கட்டடத்தைக் கட்ட அவர் திட்டமிட்டார். அதுதான் தற்போது அண்ணா சாலையில் கம்பீரமாக நிற்கும் எல்.ஐ.சி கட்டடம்.இந்தக் கட்டடத்தை வடிவமைக்கும் பொறுப்பை லண்டனைச் சேர்ந்த பிரபல கட்டடக் கலை வல்லுனர்களான பிரவுன் அன்ட் மவுலினிடம் விட்டார். 1953ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கின. 1957ம் ஆண்டு திடீரென பிரவுனும், மவுலினும் விலகிக் கொண்டனர். இதையடுத்து சென்னையைச் ேசர்ந்த சித்தாலே நிறுவனத்தினர் மிச்சப் பணிகளை மேற்கொண்டு கட்டி முடித்தனர்.

இந்த நிலையில், 1956ம் ஆண்டு நேரு அரசாங்கம் நாட்டில் இருந்த தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களையெல்லாம் நாட்டுடமையாக்கியது. அவற்றின் சொத்துக்களையும் தன் வசம் எடுத்துக் கொண்டது.இதனால் 1959ம் ஆண்டு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டபோது அது அரசு கட்டமடாக மாறியிருந்தது.

சிதம்பரம் செட்டியாரின் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் அரசின் லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் இந்தியாவின் (எல்.ஐ.சி) ஒரு அங்கமாக மாறிப் போயிருந்தது.1.40 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஆயிரம் டன் எஃகு, 3,000 டன் சிமெண்ட் கொண்டு இந்தக் கட்டடம் கட்டப்பட்டது. இதன் உயரம் 177 அடியாகும்.கட்டடத்தின் மொத்தப் பரப்பளவு 13 லட்சத்து 6 ஆயிரத்து 100 சதுர அடியாகும். அதாவது 56.5 கிரவுண்டு ஆகும். தரைப் பகுதி மட்டும் 14.5 கிரவுண்டு ஆகும்.கட்டடத்தின் அடித்தளத்தின் உயரம் 11 அடி 6 இன்சுகள் ஆகும். தரைத்தளத்தின் உயரம் 14 அடியாகும். அடுத்த 12 மாடிகளும் தலா 11 அடியாகும். மொட்டை மாடியில் உள்ள மெஷின் ரூம் 19 அடி உயரம் கொண்டது. கட்டடத்தில் மொத்தம் 5 லிப்ட்டுகள் உள்ளன.எல்.ஐ.சி கட்டடம், தென் மண்டல தலைமையகமாக திகழ்கிறது. இங்கு ஒரு கோட்ட அலுவலகம், கிளை அலுவலகம் ஆகியவையும் உள்ளன. வேறு சில நிறுவனங்களும் கட்டடத்தின் சில பகுதிகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.1959ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி அப்போதைய நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் இக்கட்டடத்தைத் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள எல்.ஐ.சி. பொன் விழா காண்பதால், அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பெருமை அடைந்துள்ளனர் - தமிழக மக்களும்தான்.

'இல்லாத வெளிச்சம்'

உலகம் ஒரு நிழல்
நானுமொரு நிழல்
தென்னை ஒரு நிழல்
வெளிச்சத்தின் மறுபக்கத்தில்
நிழலுடன் நிழலாக
வடிவங்கள்
காற்றின் காலடி
சப்தங்களுடன்
தென்னை சிலிர்க்கிறது
விரிந்த இரவின் மேல்
ஒற்றை நிலவு
எதிர்பாராத மின்வெட்டு
மனதில் உரிமையற்ற ஏக்கம்

- அனு

என் நினைவுகளை எடுத்துப்போனாய்...

உன் செல்ல கோபத்திற்காக
எத்தனை முறை வேண்டுமானாலும்
முட்டாளாகத் தயார்....

என் உயிரில் பாதி
உன்னிடமும் மீதியை
உன் வீட்டோர தும்பைப்பூக்களை சுற்றிவரும்
பாட்டாம்பூச்சிகளிடமும் வைத்திருக்கிறேன்....

நீ நட்சத்திரங்களை ரசித்திருக்கும்
ஓர் மொட்டைமாடிப் பனியிரவில்
நான் உன்மீதான காதலை சொன்னேன்....
நீ நட்சத்திரங்களை பூவாக்கித் தலைசூடி
நிலவாய் சிரித்தாய்...
நான் பைத்தியமானேன்...

நீ கனவுகளை கொடுத்து
என் நினைவுகளை எடுத்துப்போனாய்...

என் உறவுகள் என்னை ஆச்சர்யமாய் பார்க்கிறது
நான் உன்னைக் காதலித்துக் கொண்டிருக்கிறேன்...

நீ என் நாட்களை நிரப்பிவிடுகிறாய்
நான் தேன் குடித்த வண்டாய்
சுற்றிக் கொண்டிருக்கிறேன்....

நீ எதார்த்தமாய் திரும்பினாலும்
நான் என்னை பார்ப்பதாய்
நினைத்துக் கொள்வேன்
அது என்னை வாழவைக்கிறது....

- ரிஷி சேது

அவசரம்


அவசர உலகின் அலங்கோலம்
ஆண் போனால் என்ன ?
பெண் போனால் என்ன ?
என் அவசரம் எனக்கு…

நாங்கள் மூத்த குடிமக்கள்-சொன்ன
சொல்லை தட்டாதவர்கள்
ஆம்

ஆத்திரத்தை அடக்கினாலும்
-------------அடக்க முடியாது

வெண்ணிலவை உங்களுக்கு.

வெண்ணிலவை உங்களுக்கு
கண்ணியரே எதற்காக
உவமையாக சொல்லி வைத்தான் - புலவன்
எதைக்கொண்டு புலம்பிச் சென்றான்

ஓர் உருவாய் நிலைக்காமல்
ஓரிடத்தில் நில்லாமல்
நாளும் ஓர் உருவம் கொண்டு
நாழிக் கொருதிசை மாறும்

குணம் போன்றே நீங்களும்
எண்ணம் ஒன்றாய் இல்லாமல்
உண்மை ஏக்கம் கொள்ளாமல்
கண்கள் காணும் காளையிடம்

எண்ணம் கொடுத்து அதுவும் கொஞ்ச
நாளில் வேறு அழகு மனிதன்
கண்டதும் பாதை மாறி
பழைமை மறந்து புதிய மனிதன்

பாதை செல்லும் குணத்துக்காக
பாவையரே உங்களையே
பாரில் இந்த புலவனிவன்
பால் நிலவிற்குரைத்தானா ?

கலாநிதி மாறனின் ஆண்டு சம்பளம் 11 கோடி

ஒருவரின் அதிகப்பட்ச ஆண்டு வருவாய் ரூ। 25 கோடி
ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி 9।14 விழுக்காடு
ரூ 5 கோடிக்கும் அதிகச் சொத்து வைத்திருப்போரின் எண்ணிக்கை 1 லட்சம்
படித்து முடித்ததுமே மாதம்ரூ 2 லட்சத்தில் வேலை
ஆண்டுக்கு 50 வகையான ஆடம்பரக் கார்கள் அறிமுகம்

3 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 79 விழுக்காட்டினர் போதிய சத்தில்லாமல் நலிவடைந்தவர்களாக இருப்பவர்கள்
கருவுற்ற பெண்களில் 48 விழுக்காட்டினருக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை கூட சத்தான உணவு கிடைப்பதில்லை
40 கோடிப் பேரின் வருமானம் ஒரு நாளைக்கு ரூ 20க்கும் குறைவு
10 கோடிப் பேருக்கும் மேல் வேலையின்றித் தவிக்கின்றனர்।
சுமார் 2 லட்சம் கிராமங்களுக்கு நடந்து போவதற்குக் கூடச் சரியான பாதை இல்லை.

மேலே குறிப்பிட்ட இரண்டு புள்ளி விவரங்களையும் படிப்பவர்களுக்கு முதலில் கூறப்பட்ட தகவல்கள் அமெரிக்காவைப் பற்றியதெனவும் இரண்டாவதாகக் கூறப்பட்ட செய்திகள் சோமாலியாவைப் பற்றிதெனவும் தோன்றினால் வியப்பில்லை. ஆனால் இந்த இருவிதமான புள்ளி விவரங்களுமே இந்தியா வைப் பற்றியவை என்பதுதான் அதிர்ச்சியும் சோகமும் கலந்த உண்மை.

இந்தியர்கள் அனைவரின் பொருளாதார நிலையையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டு, அனைவரையும் இந்நாட்டு மன்னர்களாக்குவதே எங்கள் குறிக்கோள் என்ற சவாலுடன் 1990களில் கொண்டுவரப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள், உள்ளபடியே அனைவரின் பொருளாதார நிலையையும் தலைகீழாகப் புரட்டித்தான் போட்டுவிட்டன. ஆம்... அதுவரை இலட்சாதிபதிகளாக இருந்தவர்கள் பொருளாதாரக் கொள்கையின் விளைவாக கோடீசுவரர்களாக மாறிவிட்டனர். சில ஆயிரங்களையாவது வருவாயாகப் பார்த்துக் கொண்டிருந்தவர்களோ தெருக்கோடியில் நிற்கும் ஈசுவரர்களாகி விட்டனர்.

அதன்பிறகும் புதிய பொருளாதாரம் என்ற இந்தப் புயலில் சிக்கி ஏழைகளின் கூரைகள்தான் பறக்கின்றவே தவிர, பணக்காரர்களின் மாளிகைக்கு எதுவுமே நேர்வதில்லை. இந்தியாவின் முதல் பணக்காரக் குடும்பமாக இருந்த அம்பானி குடும்பம் இரண்டாக உடைந்தாலும், இருவருமே இந்தியாவின் முதல் இரண்டு பணக்காரர்களாகி விட்டனர். இந்தியா வில் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த டாடா நிறுவனம் இப்போது உலக நிறுவனங்களையெல்லாம் வாங்கிக் குவித்து வருகிறது. ஒரு காலத்தில் அமெரிக்க நிறுவனங்களில் வேலை கேட்டு இந்திய நிறுவனங்கள் அலைந்த நிலை மாறி இப்போது இந்திய நிறுவனங்களில் வேலைக்குச் சேர அமெரிக்கர்கள் ஆலாய்ப் பறக்கிறார்கள் என்று புதிய பொருளாதாரப் புராணம் பாடும் வல்லுநர்களுக்குக் கிராமங்களில் வாழும் ஏழைகள் கீற்றுக் கொட்டகையையும் விற்றுவிட்டு வீதிக்கு வந்துவிட்ட நிகழ்ச்சி மட்டும் உறைக்கவே இல்லை.

சரி... அப்படி என்னதான் மிகப் பெரிய தவற்றைப் புதிய பொருளாதாரக் கொள்கை செய்துவிட்டது?. அதுவா ஏழைகளிடமிருந்த சொத்து களையெல்லாம் பிடுங்கிப் பணக்காரர் களிடம் தந்தது? என்ற கேள்வி உங்களின் மனத்தில் எழலாம். அப்படி ஓர் ஐயம் ஏற்பட்டவர்களுக்கு இதோ ஓரு விளக்கம்.

ஒரு தந்தை ஒரு நாளைக்கு ரூ 100 வருமானம் ஈட்டுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த வருமானத்தைத் தனது இரு மகன்களுக்கும் பிரித்துத்தர அவர் விரும்பினால் ஆளுக்கு ரூ50 என பிரித்துத் தந்தால் தான் சரியாக இருக்கும். அதை விடுத்து முதல் மகனுக்கு 90 ரூபாயும், இரண்டாவது மகனுக்கு 10 ரூபாயும் கொடுத்து வந்தால் ஓராண்டுக்குப்பிறகு முதல் மகனின் பொருளாதார நிலை எப்படி இருக்கும், இரண்டாவது மகனின் பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்பதைச் சற்றுக் கற்பனை செய்து பாருங்கள். அதுதான் இப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. தொழில் வளர்ச்சியைப் பெருக்குகிறோம் எனக் கூறி தொழிலதிபர்களுக்கே தொடர்ந்து சலுகைகள் வழங்கப்படுவதால் அவர்கள் வளர்ந்து கொண்டே செல்கிறார்கள். மறுபுறம் ஏழை உழவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உரமானியம் போன்ற சலுகைகள் கூட பறிக்கப்படுவதால் உழுதவனின் கைகளே உணவுக்காகப் பிறரிடம் கையேந்த வேண்டியிருக்கிறது.

அப்படியென்றால் பொருளாதாரக் கொள்கையினால் ஒரு பயனுமே இல்லையா? என்று கேட்கத் தோன்றுகிறதா? நிச்சயமாகப் பயன் உண்டு, ஆனால் அது முழுக்க முழுக்க பணக்காரர்களையே சென்றடையும் வகையில் செயல்படுத்தப்படுவதுதான் தவறு, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக சேவைத் துறைக்கும், தொழில்துறைக்கும் சலுகைகளைக் கொட்டிக்கொடுத்த அரசு, அடிப்படைத் துறையான வேளாண்துறையைக் கண்டு கொள்ளாததால் பொருளாதார அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துவிட்டன.

சான்றாகச் சொல்ல வேண்டுமானால், அரசு கொடுக்கும் சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வெகுவேகமாக வளர்ந்து வருகின்றன, இதனால் அதில் வேலைக்குச் சேர்வோருக்கு 25 வயதிற்குள்ளாகவே இயல்பை மீறி மாதத்திற்குக் குறைந்த பட்சம் ரூ, 30 ஆயிரம் முதல் அதிகப்பட்சம் ரூ, 3 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இந்தத் துறைகளில் வல்லுநர்களாக இருப்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.20 கோடி வரை கொட்டித் தரப்படுகிறது.

அடிப்படைத் தேவைகளில் தொடங்கி வீட்டு வாடகை வரை எல்லாமே அதிக வருவாய் ஈட்டுவோரின் வசதியைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுவதால் ஏழைகளால் வாழவே முடியாத நிலை உருவாகியுள்ளது.

கடந்த சூலை மாத நிலவரப்படி இந்தியாவில் ஆண்டுவருமானம் ஐம்பது லட்சத்திற்கும் மேல் இருப்போரின் எண்ணிக்கை 850. முதலாளிகளாக இருக்காமல் தொழிலாளியாக இருந்து இவ்வளவு ஊதியம் பெறும் நிலையை உருவாக்கியது பொருளாதாரக் கொள்கையின் சாதனைதான். ஆனால், ஒரு நாளைக்கு ரூ. 20 கூட சம்பாதிக்க முடியாமல் திண்டாடும் அமைப்பு சாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?... 39 கோடியே 50 லட்சம் பேர். இவர்களில் எவருக்குமே எந்தச் சமூகப் பாதுகாப்புமே இல்லை என்கிறது இது பற்றி ஆய்வு நடத்திய அமைப்பு சாரா தொழில்களுக்கான தேசிய ஆணையத்தின் அறிக்கை.

ஏற்றுமதியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வரிச் சலுகையும், தொழில் துறையினருக்கு பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடனும் வழங்கும் மத்திய அரசுக்கு, 60 வயதைத் தாண்டிய அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.400 ஓய்வூதியம் வழங்க வகை செய்யும் சட்டத்தை, அது தயாரிக்கப்பட்டு 8 ஆண்டுகளாகியும் நிறைவேற்ற மனம் வரவில்லை.

புதிய பொருளாதாரக் கொள்கைகளின் பயனாக வருவாய் அதிகரித்து இந்தியாவில் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சொத்து வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டி விட்டதாகவும், ஆசியாவிலேயே அதிக பணக்காரர்களைக் கொண்ட நாடு இந்தியாதான் என்றும் மத்திய அரசு கடந்த மாதம் பெருமைப் பட்டுக்கொண்டது.

ஆனால் மறுபுறமோ, இந்தியாவில் 6 முதல் 35 மாதம் வரை உள்ள குழந்தைகளில் 70% பேர் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தியக் குழந்தைகளில் 45% பேர் எடை குறைவாகவும், 38% பேர் வளர்ச்சிக் குறைவாகவும் உள்ளனர். இந்தியக் குழந்தைகளில் 56% பேர் தடுப்பூசி கூட போட்டுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். கருவுற்ற பெண்களில் 48% பேருக்கு ஒருவேளை சத்தான உணவு கிடைக்கவில்லை. இந்த நிலையை மாற்றுவதற்காக ஒவ்வொரு குடியிருப்பிலும் ஓர் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவை மையத்தை (அங்கன்வாடி) தொடங்கவேண்டும் என நாங்கள் பிறப்பித்த உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை? என்று உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

முதலாளிகளும் இவர்களே... தொழிலாளிகளும் இவர்களே...!
இந்தியாவின் புகழ்பெற்ற ஆங்கில நாளேடுகளில் ஒன்று அண்மையில் நடத்திய ஆய்வில், அதிக ஊதியம் பெறும் தனியார் நிறுவன நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது தெரிய வந்துள்ளது। இந்தியாவில் 850 தனியார் நிறுவன நிர்வாகிகள் ஆண்டுக்கு ரூ. 50 லட்சத்துக்கும் அதிகமாக ஊதியம் பெறுகிறார்களாம்.குறிப்பாக நாட்டிலேயே அதிக ஊதியம் பெறும் 10 நிர்வாகிகளின் பட்டியலும், அவர்களின் ஆண்டு வருமானமும்:

1. முகேஷ் அம்பானி - ரூ. 24.51 கோடி
ரிலையன்ஸ் நிறுவனத்தலைவர்
2. லால் முஞ்சால் - ரூ. 15.58 கோடிதலைவர்.
ஹீரோஹோண்டா
3. பவன் முஞ்சால் - ரூ. 15.22 கோடி
நிர்வாக இயக்குநர், ஹீரோஹோண்டா
4. நவின் ஜிண்டால் - ரூ. 13.54 கோடி
தலைவர் ஜிண்டால் நிறுவனம்
5. சுனில் பார்தி மிட்டல் - ரூ. 12.61 கோடி
தலைவர் பார்தி நிறுவனம் (ஏர்டெல்)
6. மிக்கி யமாமோட்டோ - ரூ. 12.60 கோடி
நிர்வாகி, ஹீரோ ஹோண்டா
7. டாகோ எகுச்சி - ரூ. 12.55 கோடி
நிர்வாகி, ஹீரோ ஹோண்டா
8. கலாநிதி மாறன் - ரூ. 11.13 கோடி
தலைவர், சன் தொலைக்காட்சி
9. காவேரி கலாநிதிமாறன் -ரூ. 10.26 கோடி
நிர்வாக இயக்குநர், சன் தொலைக்காட்சி
10. ஏ.ஜே.அகர்வால் - ரூ. 10.00 கோடி
நிர்வாக இயக்குநர், எமர்கேடர்லைன்ஸ் கப்பல் நிறுவனம்
11. அனில் அம்பானி - ரூ. 7.32 கோடி
தலைவர், திருபாய் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனம் 

நன்றி
கீற்று

சென்னை நகரின் 369 வது நிறுவன நாள்...

இன்றைய சென்னை மாநகரம், 1639ஆம் ஆண்டில் மதராசா பட்டிணமாக இருந்தபோது, இந்தியாவில் தங்களின் வணிக சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த வெள்ளையர்கள், தாங்கள் நிலையாக காலூன்ற இந்த மதராசா பட்டிணம் என்ற கடலோர கிராமத்தை வாங்கினர்।இதற்கான பத்திரம் 1639ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதியிட்டு எழுதப்பட்டிருந்தாலும்,

அப்போது வெள்ளையரின் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகி பிரான்சிஸ் டே இந்தியா வந்து சேராததால் அந்த விற்பனை பத்திரம் ஒரு மாத காலத்திற்குப் பிறகே கையெழுத்திடப்பட்டது என்று நம்பப்படுகிறது. பிரான்சிஸ் டே இந்தியா வந்தபிறகு மதராசா பட்டிணத்திற்குச் சொந்தக்காரர்களான நாயக்கர் ஆட்சியாளர்களின் சந்திரகிரி கோட்டையில் ப‌த்‌திர‌ம் கையெழுத்தானது. எனவே இந்த நாளே சென்னை நகரம் உருவான நாளாக கருதப்படுகிறது.கிழக்கிந்தியக் கம்பெனி வாங்கிய அந்த இடத்தில்தான் இன்றுள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை கட்டப்பட்டபோது கடல் மிக அருகிலிருந்தது. அங்கு ஒரு இறங்குதுறையும் இருந்தது. அதை வெள்ளையர் மேம்படுத்தி, தூரத்தில் கப்பல்கள் நிற்க, சரக்குகளும் பயணிகளும் கப்பலில் இருந்து இறங்கி படகுகளில் சிறிது தூரம் பயணித்து இந்த இறங்குத் துறையை அடைவார்கள்.1639இல் வாங்கிய அந்த இடத்தில்தான் பின்னாளில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அதனை மையமாகக் கொண்டே சென்னை நகரம் உருவானது. இக்கோட்டையில் பணியாற்ற வந்த தொழிலாளர்கள் தங்குவதற்காக கோட்டையின் மேற்குப்பகுதியில் ஒரு குடியிருப்புப் பகுதி உருவாக்கப்பட்டது.
ஜார்ஜ் டவுன் ஆகும். அந்தப் பகுதியில்தான் சென்னை மாநகராட்சி இயங்கும் ரிப்பன் கட்டடம் கட்டப்பட்டது (அதற்கும் 300 வயது முடிந்துவிட்டது). இதற்குப் பிறகுதான் கடற்கரையில் இருந்த அந்த இறங்குத்துறையை ஒரு துறைமுகமாக மாற்றும் திட்டம் துவங்கியது. வெள்ளையரின் கிழக்கிந்தியக் கம்பெனியின் செல்வாக்கும் வணிகமும் அதிகரிக்க மதராஸ் பட்டணம் வளர ஆரம்பித்தது.18வது நூற்றாண்டில் வெள்ளையரின் ஆதிக்கம் முழுமையாக நிலைப்பெற்றுவிட்ட நிலையில், மேய்ச்ச‌ல் நிலமாக இருந்த மந்தவெளி (அடையாறு வரை), மைலாப்பூர், மாம்பலம் ஆகிய கிராமங்கள் மதராஸ் பட்டண விரிவாக்கத்திற்குள் கொண்டுவரப்பட்டன. இதேபோல செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் மேற்கிலும், வடக்கிலும் இருந்த கொண்டித்தோப்பு, ராயபுரம், திருவொற்றியூர், பெரம்பூர் பகுதிகளும், சிந்தாதிரிப்பேட்டையும் இணைய மதராஸ் பெரும் பட்டணமானது. மதராஸை நிர்வகிக்க ரிப்பன் கட்டடம் கட்டப்பட்டது.
இப்படி படிப்படியாக 4 நூற்றாண்டுக்காலமாக வளர்ந்து பெருகி இன்று மாநகரமாக திகழ்ந்துவரும் சென்னை, ஒரு வரலாற்று நகரமாகவும், முன்னேறிய முதல் நிலை நகரங்களில் ஒன்றாகவும் உள்ளது
- நன்றி
தட்ஸ் தமிழ்

இரண்டும் இருப்பது..

ஒரு புறம் இனிக்கும
மறு புறம் கசக்கும்
இரண்டும் இருப்பது
ஒரிடம் என்றால்
எனக்கு உண்மையில்
எப்படி இருக்கும் ?
கரும்பின் அடிப்புறம்
அதிகமாய் இனிக்கும்
அதன் இள நுனிப்புறம்
உவர்ப்பாய் கரிக்கும்
அதுபோல் என் மனம்
பார்ப்பவள் முகமும்
ஒருமுறை இனித்து
மறுமுறை சுளித்து
திரும்பும் பார்வையில்
பாவங்கள் நூறு॥
நாளும் காட்டி
பார்க்கும் மனதை
நோகச் செய்தால்
புலம்பும் இதயம்
எதையெண்ணி ஆறும் ?

ஆத்மா அடங்க வைப்பதேன் ??

குளிர் மழை பொழியுமுன்னே
கூம்பி நிற்கும் மேகக் கூட்டம்
அன்பு மழை பொழிவதற்கோ
அமைதி காக்குதுன் முகம்?

அலைபாயும் விழியெங்கே?
களைசொட்டும் நகை எங்கே?
பார்த்தவுடன் இதழ் விரிக்கும்
முத்துப் பல் வரிசை யெங்கே?

காவியுடை அணிந்த மனிதன்
கோலம் உனக்கு வந்ததேன்?
தரைபதியா உன் கால்கள்
தடம் பார்த்து நடப்பதேன்?

எள்ளி நகையாடும் விழி
துள்ளியோடும் உந்தன் சுழி
கள்ளியென பெற்ற பெயர்
தள்ளி வைத்து செல்வதேன்??

ஓடும் மானை ஒத்தகால்கள்
ஆட்டம் சிறிதும் காட்டாதிங்கு
அடங்கி நடை போட்டு என்
ஆத்மா அடங்க வைப்பதேன் ???

நீ பூக்களை காதலி்த்துக் கொண்டிருக்கலாம்....



உன் கொலுசுகள்

முத்தமிட்டால் கூட

வெட்கப்படுகிறாய்...


மேகங்கள் நிலவைக் கடக்கும்போதெல்லாம்

நீ என் நினைவுகளைக் கடக்கிறாய்...


நீ உன் வீட்டில் வீழ்ந்து கிடக்கும் மலர்களை

பொறுக்குகிறாய்

என் மனமெல்லாம் வாசனைகள்


உயிருக்குள் ஊடுருவுகிறது உன்

சிரிப்பொலி-மரணம்வரை பத்திரமாய் வைத்திருப்பேன்


நான் மர நிழலில் ஒதுங்கும்போது

நீ மரக்கன்றுகள் நட்டுக் கொண்டிருக்கிறாய்

ஓர் மழையிலோ ஓர் வெயிலிலோ மீண்டும் ஒதுங்குவேன்

அப்போது நீ பூக்களை காதலி்த்துக் கொண்டிருக்கலாம்....


உலகில் காற்றும் நீரும் தீர்ந்தபின்னும்

உயிர்வாழ்வேன் உன் நினைவுகளை

சுவாசித்தபடி...


கனவுகள் சுகமானவை-வரும்

எல்லா கனவுகளிலும் நீ

பூங்கொத்தோடு என்னைக் கடக்கிறாய்

சிறுகுழந்தையாய் சிரித்திருக்கிறேன்- நான்...


-ரிஷி சேது
( நன்றி தட்ஸ் தமிழ்)
நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும் என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து நன்றியுடன்

(ஈரோடு தமிழன்பன்)


அகல் விளக்காக
இரு;
அது முடியாவிட்டால் பரவாயில்லை।
சூரியன் மேல் சாணி அடிக்காதே!

பாதை போட
வர மறுத்தாய்; பாதகமில்லை,
பாதையில்
முள்ளையும், கண்ணாடித்
துண்டையும் தேடாதே.

சத்தியத்தின்
பாதவிலங்கை உடைத்தெறிய
முடியவில்லையா?
சங்கடப்படாதே!
பொய்யின் உதட்டுக்கு
புன்னகை தயாரிக்க
உலகை உருக்காதே!

அறத்திற்கு ஆதரவாகப்
பேசத்தவறினாய்;
அது குற்றமில்லை.

ஊளையிட்டபடி
ஓடி வராமல் உன் வார்தைகளைச்
சங்கிலியால்
கட்டிபோடக் கூடாதா?

கொடுமைக்கு எதிராக
இரத்த முழக்கம் செய்!
முடியவில்லையா?
தப்பில்லை.

அநியாங்களின்
படுக்கை அறைக்கு
ஆள் அனுப்பும் வேலை உனக்கு
நல்லதா?

மகத்தான
மானுட இசை பெருக்கில்
உன் குரலை சங்கமிக்கச் செய்!.
ஒப்பவில்லையா?
ஒதுங்கிக் கொள்.

ஒளிந்திருந்து
அபஸ்வரங்களை விட்டெறிந்து
காயங்களைக் கண்டு
கை கொட்டிச் சிரிக்காதே!

மாறாக----
குயிலோடு
உனக்குக் கோபம் என்பதால்
கழுதையிடமா போய்ச்
சங்கீதம் கேட்பாய்?

புலியோடு
முற்றிவிட்டது பகை என்றால்
போராடு! அதை விட்டு விட்டு
ஓடிப்போய்
நரியிடம் நட்புக் கொள்ளாதே.

கடலிடம்
ஒரு முறை தோற்றால்
மறு முறையும் மோது.
ஒடைகளோடு சேர்ந்துகொண்டு
அறிக்கை விடாதே!

நீ உயர முடியவில்லை
என்பதற்காக மலை மீது
கற்களை விட்டெறியாதே!

மற்றவர்களின்
மகுடங்களை மட்டம் தட்டக்
குப்பைக் கூடையைச்
சூட்டிக் கொள்ளாதே
உன் தலையில்.

உனக்கும்
உண்மைக்கும் ஊடல் என்றால்
பொய்யின் கன்னத்திலா
போய் முத்தமிட்டுக் கொண்டிருப்பாய்?

வாழ்க்கை உனக்கு
அறைகூவல் விட்டால் நீயே சமாளி!
சாவிடம் போய்
யோசனை கேட்காதே!

எது தேசபக்தி?

- ஈரோடு தமிழன்பன்

பூமி மங்கையின்
பூங்கன்னத்தில் முத்தம் போடும்
புலவன் நான்...
சூரியனுக்கும் சந்திரனுக்கும்
சொந்தக்காரன்...
கண்மணி கருகிய
மின்மினிக் கூட்டம்
இந்தவெளிச்சத்தின்
புதல்வனைவிமர்சிக்கிறது।

என் தமிழ்மேல்
தமிழ் நாட்டின் மேல்
அன்பு வைப்பது என் பிறப்புரிமை.
இந்தியத் திருநாட்டின்மேல்
இதயத்தில் போடும்
பாசப் பதியம் என் சிறப்புரிமை.

புத்தரும் பெரியாரும்
என் அறிவு நரம்புகளில்!
மகாவீரரும் இராமானுசரும்
என்
இரத்த அணுக்களில்!
என்னைக்
கோடி அலைகளாக்கிக்
கங்கைக்கும் காவிரிக்கும்
பங்கிட்டுக் கொடுப்பே.
உறிஞ்சப்படுபவன்
ஒரிசாவில் இருந்தாலும்
உள்ளூரில் இருந்தாலும்
அவன் என்தோழன்!

அபகரிக்கப்பட்ட வைகறைக்காக
ஆர்த்தெழுபவன்
ஆப்பிரிக்காவில் இருந்தால் என்ன?
ஈழத்தில் இருந்தால் என்ன?
அவன் என் வர்க்கம்.
கொடியை உயர்த்திவிட்டுப்
பாரத தேவியின் பாதச் சிலம்பைத்
திருடுவதுதான் தேச பக்தியா?

அவளை
அடகு வைத்துத்
தங்கள் வீட்டுக்குத்
தங்கச் சாளரம் போடுவதுதான்
தேச பக்தி என்றால் - அந்தத்
தேச பக்தி,
எனக்குத் தேவையில்லை!

கள்ள வாக்குகளால்
ஜனநாயகத்தைக் கற்பழிக்கும்
பதவிக் காமம்தான் தேச பக்தி என்றால்
ஒப்புக் கொள்கிறேன். அந்தத்
தேச பக்தியில்லாக் குற்றவாளி நான்!
தேச பக்தியின் முன்னோடிகள்
நரிகளின் மூதாதையர் ஆனதுஎப்போது?

(நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும் கவிதைத் தொகுப்பிலிருந்து)

விதைகளும் வேர்களும்

- ஹேமமாலினி

விதை-
பூமிக்குள்
புதையுண்டு
தன்னைத் தானே
சிறைப்படுத்த,
புதிய செடியொன்று
பூத்து எழுந்தது,
மண் மேலே !

இலைகளும் கிளைகளும்
காற்றோடு கைகுலுக்கினாலும்
வேர்களுக்கு மட்டும்
உலகம் என்றும்இருட்டறை!

திருமணத் தோட்டத்தில்
பெண்ணும் ஒரு விதைதான்!

தனிப்பட்ட விருப்பங்களை
தனக்குள்ளே புதைத்து
தாயான பின்னர் தன்
தனித்துவத்தை மறந்து...
குடும்பத்தின் வாரிசுகள்
வானில் வலம் வந்தாலும்
அம்மாவின் உலகம்
அடுப்படி தாண்டுவதுண்டா?

கனிகளை மட்டுமே
கண்டு பாராட்டும் நாம்,
வேர்களை இனம் கண்டு
வாழ்த்துவது எப்போது?

நீ வந்த பின்பு...-

- ரா. மகேந்திரன்

விழித்த பின்பும்
விட்டு விடாத
எனது காலை சோம்பல்!
பலமுறை முயன்றும்
நான் வெல்லாத
என் தோல்விகள்!
எப்போதும் நிறைவேறாமல்
போகும் என் கனவுகள்!
சோகம் சுமந்து திரியும்
என் தினசரி நினைவுகள்!
இவை அத்தனையும்
கதிரவன் முன் பனி போல
காணாமல் போயின...
முன்பு என்னிடம் துளியும் இல்லாத
தன்னம்பிக்கை
என்னை வந்தடைந்த மறுகணமே!

நட்பின் இலக்கணம்...

'உடுக்கை இழ‌ந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு' என நட்பிற்கு இலக்கணம் வகுக்கிறார் வள்ளுவர்।

எரிமலை இல்லாத, ஆறுகள் இல்லாத ஏன் திரையரங்குகள் கூட இல்லாத நாடுகள் இருக்கின்றன। ஆனால், நண்பர்கள் இல்லாத நாடுகள் என்று ஏதும் இல்லை.

அத்தகைய மகத்துவம் வாய்ந்த நட்பினை, நட்பின் உயர்வினை கொண்டாட, கூடி மகிழ அன்பினைப் பரிமாறி ஆரவாரம் செய்ய எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினமே 'ந‌ட்பு தினம்'.

வயது வரம்பு இல்லாமல், பாலினம் பாராமல் பலராலும் பருகப்படுவதும், பாராட்டப்படுவதும் தொட்டுத் தொடரும் இந்த தோழமைதான்.ஒவ்வொரு ஆ‌ண்டு‌ம் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை நட்பை‌ப் போற்றும் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

அந்நிய இறக்குமதியால் ஆயிரமாயிரம் தினங்கள் அவ்வப்போது வந்து போனாலும், நண்பர்கள் தினத்திற்கு மட்டும் என்றுமே நல்ல வரவேற்பு இருப்பதை மறுக்க முடியாது. காதலர் தினத்தை கணிசமாக எதிர்க்கும் நம கலாச்சாரக் காவலர்கள், நண்பர்கள் தினத்திற்கு மட்டும் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து சிம்மாசனத்தில் அமர வைக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

நாடு போற்றும் நல்ல நட்பினை நம் இதிகாசங்களும், புராணங்களும் சிறப்பிக்கத் தவறவில்லை.நட்பினை நேரில் பார்த்துத்தான் நம் நேசத்தை தெரிவிக்க வேண்டுமென்று இல்லை. பேசிப் பழகி பிரிந்து வருந்த வேண்டும் என்றும் இல்லை. இதனை நம் புராண கதைகளில் இருந்து தெரிந்து கொள்ள முடியும்.

ஆம்! நமக்கெல்லாம் தெரிந்த உதாரணம் கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பைக் கூறலாம். அன்று, புரவலரும், புலவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளவில்லை, பேசிக் கொள்ளவில்லை என்றாலும் நட்பின் உச்சாணிக் கொம்பில் ஏறிக் கொண்டு எல்லோருக்கும் பாடாமாய் அமைந்தார்கள்.

ஒருவரின் புகழ் பற்றி மற்றொருவர் அறிந்து நட்பு பாராட்டினார்கள். தனது நண்பர் கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிரிழப்பதைக் கேள்விப்பட்டு தாமும் வடக்கிருந்து உயிர் துறந்தார் பிசிராந்தையார்.

நமது இதிகாசம் கூறும் நட்பு : கர்ணன் - துரியோதனன். தோழமை என்ற ஒரே வலிமையான ஆயுதத்திற்காக, சொந்தம் என்று தெரிந்தும் பாண்டவர்களை போரில் எதிர்த்து நின்றான் கர்ணன்.

ஒருமுறை துரியோதனின் மனைவியும், கர்ணனும் பகடை விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது துரியோதனின் மனைவி அணிந்திருந்த முத்துமாலையை கர்ணன் பற்றி இழுக்க அது அறுந்து சிதறி கீழே விழுந்தது.

அத்தருணம் அங்கே துரியோதனன் வர, நண்பனின் மனைவியிடம் தவறாக நடந்து விட்டோமோ என்ற பதைபதைப்பில் கர்ணன் நிற்க, செய்வதறியாது திகைத்து நின்றாள் துரியோதனன் மனைவி.

தனது நண்பனை சிறிதும் சந்தேகப்படாத துரியோதனன்,.....
சிதறிய முத்துக்களை 'எடுக்கவோ, கோர்க்கவோ' என தன் மனைவியைப் பார்த்துக் கேட்டான்.

நட்பு என்றால் இப்படி இருக்க வேண்டும்,என்பதற்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள் இவர்கள்.ஆனால்... ஆண்-பெண் நட்பு என்றால் அங்கு காதல் புகுந்து விடுகிறது. இல்லையேல் காமம் தலைதூக்குகிறது என்ற அவலமான சமூகப் பார்வை இன்றைய இளைய சமுதாயம் மீது படர்ந்துள்ளது.

துளியே கடல்
என்கிறது
காமம்

கடலே துளி
என்கிறது
நட்பு
என்றார் புதுக்கவிஞர் அறிவுமதி.

அன்பு... காதல்... நட்பு என்ற மூன்றிற்கும் வித்தியாசம் தெரியாமல் இன்றைய நம் தலைமுறை குழம்பிக் கிடக்கிறது.இவை ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்திருந்தாலும், ஒவ்வொன்றிற்கும் இடையே ஒரு மெல்லிய நூலிழை இடைவெளி இருக்கத்தான் செய்கிறது.

இதனை கவனமாய் கையாள்கிறவனுக்கு மட்டுமே காதலியுடனும், தோழியுடனும் நெருடல் இல்லாத நெருக்கம் ஏற்படும்.

நகுதல் பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு - என்றார் வள்ளுவப் பெருந்தகை.

சிரித்து மகிழ, நல்லன சொல்வதற்கு மட்டுமே அல்ல நட்பு. சிறந்த நட்பு என்பது தவறு செய்கிற போது, தடுத்து நிறுத்தி கண்டிப்பதே ஆகும் என்கிறார் வான் புகழ் கொண்ட வள்ளுவர்.

எனவே வள்ளுவரின் வாக்கிற்கேற்ப வாழ்ந்து காட்டுவோம்!
வாருங்கள் நண்பர்களே! ஆகஸ்ட் 3 நண்பர்கள் தினம்!

- நன்றி
வெப்துனியா

இறைபோல் எங்கும் இருப்பது நட்பு!


மானுட மனத்தின் தூய்மை

இரக்கம் சுரக்கும் சுணை

இன்பத்தை அள்ளித்தரும் கற்பகத் தரு

துயரத்தில் பங்கேற்கும் துணிவு

துன்பத்தை தாங்கிடும் சுமைதாங்கி

பரந்த சிந்தனையின் ஊற்றுக்கண்

உண்மையை அறியும் உரைகல்

வஞ்சத்தை வதைக்கும் சூரியன்

நியாயத்தைக் காக்கும் அரண்

நேர்மையாளனின் உடை வாள்

பொய்மையை பொசுக்கும் யாகத் தீ

பேருண்மையைக் காணத் தூண்டும் ஞானக் கண்

தூய அன்பின் ஒளிக் கதிர்... நட்பு


வானமும் பூமியும் தொடுவது நட்பு

வயலும் மழையும் கலப்பதும் நட்பு

நிலமும் நெல்லும் வளர்வதும் நட்பு

வேராயும் விழுதாயும் படர்வதும் நட்பு

நாடு மொழிகளைத் தாண்டியது நட்பு

உலகளாவிய அமைதிக்கு வேண்டும் நட்பு

உன்னத வாழ்விற்கும் தேவை... நட்பு


- நன்றி

வெப்துனியா

தந்தை பெரியாரும், அவரது நண்பர்களும்!

-மு।பெருமாள்



தந்தை பெரியாரை நாம் எப்படி அறிந்து வைத்திருக்கிறோம்...?

ஓர் ஜாதி மறுப்பாளராக, சமூகப் போராளியாக, மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவராக தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக, சமூக சீர்திருத்தவாதியாக, இன்றைய அரசியல் கட்சிகளுக்கு அடித்தளம் இட்டவராக.... இப்படி பல்வேறு அவதாரங்கள் பெரியாருக்கு மட்டுமே உள்ள சிறப்பம்சங்கள்।

யாருக்காவும், எதற்காகவும் தனது எண்ணங்களை மாற்றிக்கொள்ளாத கொள்கை வீரராக திகழ்ந்ததன் காரணமாகவே பலரது கண்களுக்கும் அவர் ஓர் கலகக்காரராக தெரிந்தார்

ஆனால், தனது கொள்கைகள் ஒரு பக்கம் இருந்தாலும் ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு தலைவர்களிடமும் நெருங்கிய நட்பு பாராட்டிய ஒரு மாபெரும் தலைவர் பெரியார் மட்டுமே।

அன்புக்குரிய அய்யங்கார்:
பெரியாரின் நெருங்கிய நண்பர்களில் மிக முக்கியமானவர் ஏ।எஸ்.கே.அய்யங்கார். தமிழ்நாடு கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் ஒருவரான இவர், சென்னைத் துறைமுக தொழிற்சங்கத் தலைவராகவும் பணிபுரிந்தவர்.

பெரியாருடன் மிக நட்பு வைத்திருந்த இவர், பெரியாரின் எண்ணங்கள், கொள்கைகள், விருப்பங்கள் என அனைத்தையுமே அறிந்து வைத்திருந்தார்.

“பிராமணர்கள் மீது பெரியாருக்கு எந்த வெறுப்போ, கோபமோ கிடையாது. ஆனால், பெரும்பாலான பிராமணர்கள் அவரைப் பற்றி தவறாகவே நினைத்து கொண்டிருகிறார்கள். பிராமணீயம் என்ற பெயரில் கடவுள், புராணங்கள், இதிகாசங்களை போற்றும் அந்த கொள்ளையைத்தான் எதிர்த்தார்" என்று தனது நண்பர் பற்றி உலகுக்கு உரக்க சொன்னவர் இவர்தான். அதுதான் உண்மையும் கூட.

ராஜாஜியின் சினேகிதன்:

பெரியார் ஒரு நட்புக்கடல்। அவரது பிராமண நண்பர்களில் மிக முக்கியமானவர் மூதறிஞர் ராஜாஜி.

தனிப்பட்ட முறையில் பிறரது மனம் புண்படும் அளவுக்கு எதுவும் பேசிவிடக்கூடாது, எதையும் செய்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தவர் பெரியார்.

அதனால்தான், கொள்கை ரீதியாக முரண்பட்டவர்கள் கூட, நட்பு ரீதியாக அவருடன் கடைசி காலம் வரை இணைந்திருந்தனர். அவர்களில் முக்கியமானவர் ராஜாஜி.

பெரியார் மிக கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நேரம்; இயற்கை எய்தினார் ராஜாஜி. தனது நண்பனின் மறைவை எண்ணி, சிறு பிள்ளை போல் தேம்பி, தேம்பி அழுதார் பெரியார். எந்த ஒரு துயரத்திலும் அவர் அப்படி அழுது, எவரும் பார்த்தது இல்லை.

ராஜாஜியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக அன்றைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரியும் வந்திருந்தார். எக்கச்சக்கமான பிரமுகர்கள் அமர்ந்திருந்த நிலையில், தள்ளாத வயது; நிற்கக்கூட காலில் வலு இல்லாத நிலை. சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வந்திருந்தார் பெரியார்.

அப்போது, அங்கு வந்த குடியரசுத் தலைவர் கிரிக்கு இருக்கை இல்லை. இதை கவனித்த பெரியார், சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து, தனது சக்கர நாற்காலியில் உட்காரும்படி கிரியை வேண்டினார்.

எனது நண்பருக்கு மரியாதை செலுத்த வந்தவர் நிற்பதா என்று பெரியார் தனது இருக்கையை அளித்தது கண்டு கிரி ரொம்பவே அதிசயித்துப் போனார். இதன் மூலம் தான் நட்புக்கடல் மட்டுமல்ல; பண்பாட்டுக் காவலரும் கூட என்பதை பெரியார் நிரூபித்தார்.

திரு.வி.க.வின் நண்பன்:

பெரியாரின் அன்புக்கு பாத்திரமான நண்பர்களில் ஒருவர் 'தமிழ் தென்றல்' திரு.வி.கல்யாண சுந்தரானார். ஒருமுறை பெரியாரின் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்தார் திரு.வி.க॥ இரவு நீண்ட நேரம் இருவரும் உரையாடி மகிழ்ந்தனர்.

மறுநாள் காலை திரு.வி.க. எழுந்து குளித்து, உடை மாற்றி அவரது அறையிலிருந்து வெளியே வந்தபோது, அவரது முன்பு திருநீற்று சம்படத்தை நீட்டியபடி நின்றிருந்தார் பெரியார்.

இதை சற்றும் எதிர்பாராத திருவிக. ஆச்சரியத்தின் விளிம்புக்கே போய்விட்டார்.“கடவுள் நம்பிக்கை இல்லாதவர் நீங்கள். உங்கள் வீட்டில் திருநீறு சம்படமா...?” என்று திகைப்பு மாறாமல் கேட்டார் திரு.வி.க.

அதற்கு பெரியார் அளித்த பவ்யமான பதில் இதுதான். “நான்தான் கடவுளை நம்பாதவன்தான். ஆனால் எனது நண்பரான தாங்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவராயிற்றே. எனது விருந்தாளியாக வந்திருக்குக்ம் உங்களது தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வது எனது கடமை.

பெரியாரின் திருஉள்ளம் கண்டு மெய்சிலிர்த்துப் போன திருவிக அப்படியே ஆர தழுவிக்கொண்டாராம்.

பெரியாரின் நட்புள்ளத்துக்கு மற்றொரு உதாரணம் இதோ.திரு.வி.க. காலமான செய்தி கேட்டு, ஈரோட்டில் இருந்து விரைந்து வந்தார் பெரியார். இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார்.

ஆனாலும், தொழிலாளர்களின் தோழராகவும், பொதுத்தொண்டுக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவருமான திரு.வி.க மறைவுக்கு மிக குறைந்தளவு கூட்டமே வந்திருப்பது கண்டு வேதனை அடைந்தார்.

உடனடியாக தனது திராவிடர் கழகத் தொண்டர்கள் பலரும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வரும்படி தகவல் அனுப்பினார். அவ்வளவுதான் சில மணி நேரத்தில் அந்த பகுதியே கூட்ட நெரிசலில் திணற ஆரம்பித்தது. அதோடு, திரு.வி.க.விற்குப் பிடித்தமான பதிகத்தையும் உரத்துக் கோஷம் போடவைத்தார் பெரியார்.

அன்புள்ள அண்ணா:

பேரறிஞர் அண்ணா, சுமார் 40 ஆண்டு காலம் பெரியாருடன் பழகியவர். பெரியாரின் மனைவி நாகம்மையார் இறந்து பின்பு, திராவிடக் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட மணியம்மை என்ற பெண்மணியை 1949ம் ஆண்டு மணந்து கொண்டார் பெரியார். அப்போது பெரியாருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 26 மட்டுமே.

பெண் உரிமை, பெண் விடுதலை என்று பேசும் பெரியார் தள்ளாத வயதில் ஒரு இளம்பெண்ணை மணம் முடித்தது கழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் கழகத்தை விட்டு வெளியேறினார்கள்.பெரியாருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த பேரறிஞர் அண்ணாவும் விலகிச் சென்று திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்தார்.

தற்போதைய முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் அண்ணாவுடன் சென்றனர். திராவிடர் கழகத்தின் சொத்துக்களைப் பாதுகாக்கவே பெரியார் திருமணம் செய்துகொண்டார் என்பது புரியாமல் பிரிந்து சென்றவர்கள் பற்றி கவலைப்படவில்லை.

ஆனால், காலங்கள் பல சென்ற பின்னரும் அண்ணா-பெரியார் நட்பு, கலைஞர்-பெரியார் நட்பு முறியவே இல்லை. முன்பை விட நெருக்கமான நட்பாகவே அது வலுவடைந்தது. கடந்த 1967ல் திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது, முதல்வராக இருந்த அண்ணா சொன்னது இது. 'தி.மு.கழகத்தின் ஆட்சியை பெரியாரிடம் காணிக்கையாக அளிக்கிறேன்”.

பெரியாருடன் நட்புக் கொண்ட பலர் வரலாற்று நாயகர்களாக இடம் பெற்றது இப்படித்தான். பெரியாரின் நட்பு வட்டத்தில் இடம் பெற்றிருந்த நண்பர்களை பட்டியலிட எத்தனை பக்கங்கள் எழுதினாலும் தீராது. அந்த அளவுக்கு பரந்து விரிந்த மனம் கொண்டிருந்தார் பெரியார்.

அரசியலாகட்டும்; சமூக சேவையாகட்டும்; கொள்கை முடிவாகட்டும்; இன்றைய காலக்கட்டத்தில் பெரியார் போல் நட்புள்ளம் கொண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா, சொல்லுங்கள்...?

நன்றி
வெப்துனியா

காதல், கல்யாணம் என்றால் என்ன?

ஒரு வகுப்பறையில் ஆசிரியரிடம் மாணவன் கேட்டான் காதல் என்றால் என்னவென்று?

அதற்கு அந்த ஆசிரியர், உனது கேள்விக்கு பதில் அளிப்பதற்கு முன்பு, அங்கு சோளம் விளைந்திருக்கும் வயலில் சென்று இருப்பதிலேயே மிகப்பெரிய சோளத்தை எடுத்துக் கொண்டு வா। ஆனால் ஒரு விதிமுறை உள்ளது।நீ கடந்து விட்டப் பகுதிக்கு திரும்பி வந்து சோளத்தை எடுக்கக் கூடாது। ஒரு முறை கடந்து சென்றுவிட்டால் அவ்வளவுதான். முன்னோக்கிச் செல்லலாமேத் தவிர மீண்டும் பின்னோக்கு வந்து சோளத்தை எடுக்கக் கூடாது.

அதன்படியே அந்த மாணவரும் சோளம் விளைந்திருக்கும் வயலுக்குச் சென்றான்।முதல் வரிசையிலேயே ஒரு பெரிய சோளத்தைக் கண்டான். ஆனால் அவனுக்குள் ஒரு எண்ணம், உள்ளே இதை விடப் பெரிய சோளம் இருந்தால் என்ற எண்ணத்துடன் உள்ளேச் சென்றான். ஆனால் உள்ளே பாதி வயல் வரை தேடிவிட்டான். அவன் கண்ட எந்த சோளமும் முதலில் கண்ட சோளத்தைவிட பெரிதாக இருக்கவில்லை.

முதலில் கண்ட சோளம்தான் பெரியது. அதைவிட பெரியது இல்லை என்ற தீர்மானத்திற்கு வந்த அவன் வெறுங்கையுடன் வகுப்பிற்குத் திரும்பினான்.அப்போது ஆசிரியர் கூறினார். காதலும் இதுபோலத்தான்.

ஒருவரைப் பார்த்ததும் பிடித்து விடும். ஆனால் இதை விடச் சிறந்தவர் கிடைப்பார் என்ற எண்ணத்துடன் நீங்கள் போய்க் கொண்டே இருந்தால் கடைசியாகத்தான் உணர்வீர்கள் உங்களுக்கானவரை ஏற்கனவே நீங்கள் இழந்துவிட்டீர்கள் என்பதை.

க‌‌ல்யாண‌ம் எ‌ன்றா‌ல் எ‌ன்ன?........
அந்த மாணவன் மீண்டும் கேட்டான் கல்யாணம் என்றால் என்ன?

அதற்கு அந்த ஆசிரியர், இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் முன் நீ அங்குள்ள கம்பு வயலுக்குச் சென்று அதே போல் பெரிய கம்பு ஒன்று எடுத்துவா। பழைய விதிமுறையே இதற்கும் பொருந்தும். முன்னோக்கி மட்டுமேச் செல்ல வேண்டும்.

அந்த மாணவன் கம்பு வயலுக்குச் சென்றான். இம்முறை மாணவன் அதிக கவனத்துடன் நடந்து கொண்டான். கடந்த முறை செய்த தவறை மீண்டும் செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான். வயலுக்குச் சென்று அவனுக்கு பெரிது என்று பட்ட ஒரு நடுத்தரமான கம்பை மிகவும் திருப்தியுடன் எடுத்துக் கொண்டு வந்து ஆசிரியரிடம் காண்பித்தான்.

இந்த முறை நீ வெற்றியுடன் வந்துள்ளாய். நீ பார்த்த ஒன்றே உனக்கு பெரிதாக தெரிந்தது. இதுவே நமக்கு சரி என்று அதனை தேர்வு செய்து கொண்டு திருப்தியோடு வந்திருக்கிறாய். இதுவே கல்யாணம் என்று ஆசிரியர் பதிலளித்தார்.

நன்றி
வெப்துனியா

தூங்குவதில் விசித்திரங்கள்

தூ‌ங்காத உ‌யி‌ரின‌ம் உ‌ண்டா? இ‌ல்லை எ‌ன்றே சொ‌ல்லலா‌ம்। ஆனா‌ல் ஒ‌வ்வொரு ‌உ‌யி‌ரினமு‌ம் தூ‌ங்குவ‌தி‌ல் எ‌த்தனை ‌வி‌சி‌த்‌திர‌ங்க‌ள் உ‌ள்ளன‌த் தெ‌ரியுமா?
வாத்துக்கள் நீரில் வட்டமடித்துக் கொண்டே தூங்கும்.

ராபின் இனப்பறவை பாடிக் கொண்டே தூங்கும்।

பாம்புகள் கண்களைத் திறந்து கொண்டேக் கூட தூங்கும்।

டால்பின்கள் ஒரு கண்ணை மட்டும் திறந்து கொண்டேத் தூங்கும்।

மனிதனால் மட்டுமே முதுகை பூமியில் படும்படி படுத்துத் தூங்க முடியும்।

வரிக்குதிரை நின்று கொண்டேத் தூங்கும்।

மாடுகள், ஒ‌ட்டக‌ங்க‌ள் அசை போட்டுக் கொண்டேத் தூங்கும்

கோழிகள் நின்று கொண்டேத் தூங்கும்।

மனிதனால் கண்களை பா‌தி திறந்து கொண்டேத் தூங்க முடியாது।

கோ‌ழிக‌ள் ஒரு‌ சில ‌நி‌மிட‌ங்க‌ள் ம‌ட்டுமே‌க் கூட தூ‌ங்‌கி ‌வி‌ழி‌க்க முடியு‌ம்।

கு‌ர‌ங்குக‌ள் மர‌த்‌தி‌ல் தொ‌ங்‌கியபடியே‌த் தூ‌‌ங்கும‌்।
நன்றி
வெப்துனியா

ஓட்டமும்...ஓய்வும்... ( பில்கேட்ஸ் )


வெற்றியாளர்களில் இரண்டு வகை... உலகின் எதிர்காலப் பாதையைச் சரியாகக் கணித்து, அந்தத் திசையில் எல்லோரையும்விட வேகமாக ஓடி முதலிடத்தைப் பிடிப்பவர்கள் ஒரு வகை... அப்படி இல்லாமல் தானே ஒரு திசையைத் தீர்மானித்து, ஒட்டுமொத்த உலகத்தையும் அந்தத் திசையில் தன் பின்னால் ஓடிவரச் செய்பவர்கள் இரண்டாவது வகை... பில்கேட்ஸ் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்।
'உழைக்க மட்டுமல்ல... உழைப்பை விட்டு விலகியும் இருக்கத் தெரிய-வேண்டும்...' - இதுதான் பில்கேட்ஸ் நமக்கு உணர்த்தியிருக்கும் சமீபத்திய பாடம். அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஒரு பொருள் இருக்கிறது. ஒரு எம்.பி.ஏ. பாடத் திட்டத்துக்கு நிகரான வாழ்க்கைமுறை அவருடையது.
பள்ளிக்கூட காலத்திலேயே பில்கேட்ஸ் 'பாட'த்தைத் தொடங்கிவிட்டார்।

கொடுக்கிற பாடத் திட்டத்தைப் படிப்பதைவிட விருப்பமானதைப் படிப்பதுதான் சிறந்தது என்பதை நம்பினார்। மற்ற மாணவர்களிடமிருந்து வேறுபட்டு, படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்த பில்கேட்ஸை, சியாட்டில் நகரின் 'லேக்சைட் (Lake Side) பள்ளி'யில் அவருடைய பெற்றோர் சேர்த்தனர். அங்கே பில்கேட்ஸை ஈர்த்தது ராட்சத சைஸில் பூதம் போல இருந்த கம்ப்யூட்டர். அந்தக் காலத்தில் கம்ப்யூட்டரை விஞ்ஞானக் கூடங்களில் மட்டுமே பயன்படுத்தினார்கள். இரவு பகலாக அதன் முன் தவமாகக் கிடந்த பில்கேட்ஸ், தானாகவே புத்தகங்களையும், கையேடுகளையும் படித்து கம்ப்யூட்டர் மொழியான 'பேசிக்'கில் (BASIC) புரோகிராம் எழுதத் தொடங்கினார். அவருடைய பள்ளித் தோழர் பால் அலெனுக்கும் அதே ஆர்வம். திடீரென்று ஒருநாள், 'இனிமேல் மாணவர்கள் கம்ப்யூட்டரை இலவசமாகப் பயன்படுத்த முடியாது' என்ற அறிவிப்பு வந்தது. இருவரும் கவலைப்பட்டனர்.
அந்தக் காலகட்டத்தில் கம்ப்யூட்டரை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தும் பழக்கம் அதிகமாக இருந்தது। 'அந்த கம்ப்யூட்டரில் ஏதாவது குறைபாடு இருந்தால் வாடகை கொடுக்கத் தேவையில்லை' என்று வாடகைக்குக் கொடுக்கும் நிறுவனங்கள் அறிவித்திருந்தன. குறைபாடுகள் அதிகம் இருக்கவும் செய்தன.

பில்கேட்ஸ் நினைத்திருந்தால் வாடகைக்கு கம்ப்யூட்டர் எடுத்து, அதில் உள்ள குறைபாடுகளைச் சொல்லி, வாடகை கட்டாமல் பயன்படுத்தியிருக்க முடியும்। ஆனால், அவர் கம்ப்யூட்டர் வாடகைக்குத் தரும் நிறுவனங்களில் ஒன்றான 'கம்ப்யூட்டர் சென்டர் கார்ப்பரேஷனு'க்குச் சென்று அவர்கள் கம்ப்யூட்டரில் உள்ள குறைபாடுகளைக் கண்டுபிடித்துத் தருவதாக ஒப்பந்தம் செய்துகொண்டார். அதனால், அந்தக் குறைபாடுகள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு வாடகைப் பணம் பெருகியது. பில்கேட்ஸ் சம்பளமாகப் பெற்றுக்கொண்டது இலவசமாக கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் உரிமையை!

கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துவதைவிட, புதிய திசையில் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளும் கலை அவரிடம் நிறையவே இருந்தது। வாகனப் போக்குவரத்து விவரத்தை கம்ப்யூட்டரில் உள்ளிடும் 'டேட்டா என்ட்ரி' வேலை 17 வயது பள்ளி மாணவன் பில்கேட்ஸூக்குக் கிடைத்தது. ஒவ்வொரு வாகனமும் கடந்து செல்லும்போது காகிதச் சுருளில் ஒரு துளை போடப்படும். அந்தத் துளைகளை எண்ணி கம்ப்யூட்டரில் என்டர் செய்வதுதான் வேலை. துளைகளை எண்ணிச் சொல்வதற்கு சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்து, 'டிராஃப்- ஓ -டேட்டா' (Traf-O-Data) என்று பெயரிட்ட பில்கேட்ஸூக்கு, இந்தத் தொழிலில் நல்ல லாபம்! போக்குவரத்து விவரங்களை அலசி அதை நெறிப்படுத்துவதற்காக பல நகராட்சிகள் அந்தக் கருவியை நாடியபோது, 'இனிமேல் நாங்களே அந்த வேலையை நகராட்சிகளுக்குச் செய்துதருவோம்' என்று அமெ-ரிக்க மத்திய அரசு அறிவித்துவிட்டது. பில்கேட்ஸின் பிஸினஸ் படுத்துவிட்டது.

இந்தச் சமயத்தில் அவர் ஹார்வர்ட் கல்லூரியில் இணைந்தார்। அதற்குப் பக்கத்திலேயே பால் அலெனுக்கு ஒரு வேலை கிடைத்தது. இருவரும் அடிக்கடி சந்தித்தனர். 1975 ஜனவரி மாதம் 'பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ்' இதழில் 'உலகின் முதல் மைக்ரோ கம்ப்யூட்டர் அல்டெய்ர் 8800' என்று வந்த கட்டுரையை எடுத்துக்கொண்டு பில்கேட்ஸிடம் ஓடிவந்தார் அலென். அதைத் தயாரித்த எம்.ஐ.டி.எஸ். (MITS) நிறுவனத்தைத் தொடர்புகொண்ட கேட்ஸூம் அலெனும், 'உங்கள் கம்ப்யூட்டரில் பேசிக் புரோகிராம் பயன்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும். அதைச் செயல்படுத்த உதவும் பேசிக் இன்டர்பிரட்டர் (புரோகிராமை கம்ப்யூட்டர் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றித்தரும் இடைநிலை சாஃப்ட்வேர்) எங்களிடம் இருக்கிறது' என்று அள்ளிவிட்டனர். உண்மையில் அவர்களிடம் 'அல்டெய்ர்' ரக கம்ப்யூட்டர் ஒன்றுகூட கிடையாது.

'எம்.ஐ.டி.எஸ்-ஸின் ஹார்ட்வேர், தனது சாஃப்ட்வேர் இரண்டும் சேர்ந்து முழுமையான கம்ப்யூட்டராக இயங்கும்' என்ற ஒப்பந்தம் போட்டார் பில்கேட்ஸ். இனி இங்கு என்ன வேலை என்று ஹார்வர்டில் இருந்து வெளியேறினார். 1975 ஏப்ரலில் 'மைக்ரோசாஃப்ட்' நிறுவனம் உருவானது.
இனி எதிர்காலம் மைக்ரோ கம்ப்யூட்டருக்குத்-தான் என்பதை உணர்ந்த பில்கேட்ஸ், தன்னுடைய சாஃப்ட்வேர் உரிமையை கம்ப்யூட்டர் தயாரிக்கும் பிற நிறுவனங்களுக்கும் விற்பனை செய்தார்।

இதில் எம்.ஐ.டி.எஸ். அதிருப்தி அடைந்ததைப் பற்றியோ, கோர்ட்டுக்கு இழுத்ததைப் பற்றியோ கவலைப்படவில்லை. வெறும் 'பேசிக்' புரோகிராமோடு நிற்காமல் 'ஃபோர்ட்ரான்', 'கோபால்' ஆகிய மொழிகளுக்கும் இன்டர்பிரட்டர் உருவாக்கினார். அவற்றை கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களிடமே கொடுத்து கம்ப்யூட்டரோடு பொட்டலம் கட்டி விற்கும்படி ஒப்பந்தம் போட்டார். பில்கேட்ஸின் சாஃப்ட்வேர் இல்லாமல் கம்ப்-யூட்டர் முழுமையடையாது என்ற நிலையை உருவாக்கிவிட்டார்.
மிகப்பெரிய கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ।பி।எம்। மைக்ரோசாஃப்ட் நிறுவனக் கதவுகளைத் தட்டியதுதான் பில்கேட்ஸின் வாழ்வில் திருப்பு-முனை! அப்படியரு சூழ்நிலையைக் கையாள்-வது எப்படி என்ற பாடத்திட்டம் உருவானது.

குட்டி கம்பெனிகள் மைக்ரோ கம்ப்யூட்டர் தயாரிக்கும்போது, தான் பின் தங்கிவிடக்கூடாது என்று தாமதமாக விழித்துக்கொண்ட ஐ।பி।எம்., நெருக்கடியான காலக்கெடுவோடு பில்கேட்ஸிடம் வந்தது. அந்தக் காலக்கெடுவுக்குள் ஹார்ட்வேரை உருவாக்குவது சிரமமில்லை. ஆனால், அதைச் செயல்பட வைக்கும் சாஃப்ட்வேர்... அந்த சாஃப்ட்-வேரை ஹார்ட்வேருக்குப் புரியவைக்கும் ஆப-ரேட்டிங் சிஸ்டம்... இதையெல்லாம் உருவாக்குவது அத்தனை எளிதில்லை.

சாஃப்ட்வேருக்கு ஓகே சொன்ன மைக்ரோசாஃப்ட், இன்னொரு நிறுவனத்தின் ஆபரேட்டிங் சிஸ்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள சிபாரிசு செய்தது। ஆனால், அந்த இன்னொரு நிறுவனத்-துடன் ஐ।பி.எம்மால் உடன்பட முடியவில்லை. பந்து திரும்பவும் பில்கேட்ஸ் கோர்ட்டுக்கே வந்தது.

இந்தமுறை “சரி” என்றார் கேட்ஸ்। அதுதான் அவரை உலகின் முதல் பணக்காரர் ஆக்கிய வார்த்தை!
இத்தனை குறுகிய காலத்தில் 'ஆபரேட்டிங் சிஸ்ட'த்தை புதிதாக உருவாக்க முடியாது என்பது பில்கேட்ஸூக்கு தெரியும்। 'சியாட்டல் கம்ப்யூட்டர் புராடக்ட்ஸ்' (SCP) என்ற நிறுவனம் உருவாக்கியிருந்த 'க்யூடாஸ்' (QDOS) என்ற 'ஆபரேட்டிங் சிஸ்ட'த்தை, வெறும் இருபத்தைந்தாயிரம் டாலர் என்ற விலைக்கு வாங்கி-னார்। அதில் மராமத்து வேலைகள் செய்து,
தன்னுடைய கைவண்ணத்தைக் கொஞ்சம் காட்டி 'டிஸ்க் ஆபரேட்டிங் சிஸ்டம்' (ஞிளிஷி) என்ற பெயரில் ஐ।பி.எம். கம்ப்யூட்டரோடு சேர்ந்து உலகமெங்கும் பரப்பினார். 'பர்சனல் கம்ப்யூட்டர் புரட்சி' என்று சொல்லும் நிகழ்வாக இது 1981-ல் அமைந்தது. தன் தயாரிப்புதான் பவுடர் பூசி 'ஐ.பி.எம்'- கம்ப்யூட்டரோடு சக்கைபோடு போடுகிறது என்று 'சியாட்டல் கம்ப்யூட்டர் புராடக்ட்ஸ்' நிறுவனம் குய்யோ, முறையோ என்று கூவியபோது, பில்கேட்ஸ் பணத்தால் அடித்து, அந்த நிறுவனத்தின் வாயை அடைத்தார்.

உன்னால் ஒரு செயல் முடியாதபோது, யாரால் முடியுமோ அவரை உன்னுடையதாக்கு என்ற தத்துவம் அவருக்குக் கைவந்ததானது!
ஐ।பி।எம். நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தில் இருந்த சாமர்த்தியம்தான் பில்கேட்ஸிடம் கற்றுக்கொள்ள வேண்டிய அடுத்த முக்கியமான பாடம்.
என்னதான் 'ஐ।பி.எம்.' நிறுவனம் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் பாகங்களை உருவாக்கியிருந்தாலும், மற்ற யார் வேண்டுமானாலும் அதை காப்பியடிக்க முடியும். ஆனால், அதில் இயங்கும் சாஃப்ட்வேர் மைக்ரோசாஃப்டிடம் மட்டுமே இருந்தது. ஐ.பி.எம்-க்குப் போட்டியாக பல கம்பெனிகள் இறங்கியபோது அவை சாஃப்ட்வேருக்காக பில்கேட்ஸை நாடின. பிற நிறுவனங்களுக்கு விற்கக்-கூடாது என்று ஒப்பந்தம் போடாததால் 'ஐ.பி.எம்.' கையைப் பிசைந்துகொண்டு நிற்க, பில்கேட்ஸ் டாலர் மழையில் நனையத் தொடங்கினார். தூறல், மழையாகி, அதுவே அடைமழையாகக் கொட்டத் தொடங்கியது.

கீ போர்டு மூலம் மட்டுமே கட்டளைகளை உள்ளிடக்கூடிய 'டாஸ் சிஸ்ட'த்தில் 'மைக்ரோசாஃப்ட்' இருந்த நேரத்தில் 'மவுஸை' வைத்து திரையில் தெரியும் கட்டளைகளை 'க்ளிக்' செய்து செயல்படுத்தும் புதிய தளத்துக்குப் போயிருந்தது போட்டி நிறுவனமான 'ஆப்பிள்'. 1984-ல் அதன் 'மேகின்டாஷ்' கம்ப்யூட்டர் 'மவுஸ்' உடன் வெளிவந்தது.

'மேகின்டாஷ்' கம்ப்யூட்டரில் இயங்குவதற்கு ஏற்ப 'எம்.எஸ்.வேர்ட்'டை (MS word) மட்டும் உருவாக்கிக் கொடுத்தது. ஆனால், அந்த முயற்சியின்போது மவுஸால் கம்ப்யூட்டரை இயக்கும் சிஸ்டத்தின் நுணுக்கங்களை காப்பியடித்து, அதை வைத்து 'விண்டோஸ்' என்ற 'ஆபரேட்டிங் சிஸ்ட'த்தை தயாரித்ததாக 'மைக்ரோசாஃப்ட்' மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதை நீதிமன்றம் உறுதிப்படுத்தவும் செய்தது.
ஆனால், எதுபற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து நடைபோட்ட 'மைக்ரோசாஃப்ட்'டில் இருந்து, 1990-ல் 'விண்டோஸ்- 3।0' வெளியானது. அதைப் பிரபலப்படுத்த 'மைக்ரோசாஃப்ட்' தயாரித்து அளித்த 'எக்ஸெல்', 'வேர்ட்', 'பவர் பாயின்ட்' ஆகியவற்றை உள்ளடக்கிய 'மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்' மென்பொருட்கள் பெரிதும் பயன்பட்டது. 'ஆப்பிள்' கம்ப்யூட்டரில் கூட 'மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்' வெற்றிகரமாக இயங்கியது. 'விண்டோஸ்- 3.0' நல்ல வெற்றி. 1995-ல் வந்த 'விண்டோஸ் -95' அதை விடக் கூடுதல் வெற்றி. அதற்குள்ளாக அவர் உலகப் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்துக்குச் சென்றிருந்தார். 'விண்டோஸி'ன் நதிமூலம் 'ஆப்பிள்'தான் என்பது மறந்தே போயிற்று.

இப்படி 'ஆபரேட்டிங் சிஸ்டம்' பந்தயத்தில் கவனம் செலுத்திய பில்கேட்ஸ், இணையப் புரட்சியைத் தவறவிட்டார்। இணையதளங்களை மேய்வதற்கு 'நெட்ஸ்கேப் நேவிகேட்டர்' என்ற உலாவி பிரபலமாக இருந்தது. சுமார் 85 சதவிகிதம் பேர் இந்த உலாவியைப் பயன்படுத்தியே இணையத்தில் உலாவினார்கள்.

அதனால் என்ன... பில்கேட்ஸ் கையில்தான் ஒரு வெற்றி ஃபார்முலா இருக்கிறதே... உருவாக்கத் தவறினால் உருவாக்கியவனை அழுத்து என்று!
'இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்' என்ற உலாவியைத் தயாரித்தார்। மக்கள் கவனத்தை இந்தப் பக்கம் திருப்ப அவர் எடுத்த ஆயுதம்... இலவசம்! 'விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்ட'த்தோடு 'இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை' இலவசமாகக் கொடுத்தார். விளைவைச் சொல்லவேண்டுமா... கொஞ்ச நாளில் 'நெட்ஸ்கேப்' பின்னுக்குத் தள்ளப்பட்டது.

'விண்டோஸ்' என்ற அரக்கனை வைத்துகொண்டு எல்லா சாஃப்ட்வேர் நிறுவனங்களையும் நசுக்குவதாக பில்கேட்ஸ் நீதிமன்றத்துக்கு இழுக்கப்பட்டார். மைக்ரோசாஃப்டின் சட்ட விரோத நடவடிக்கை நிரூபிக்கப்பட்டது. மைக்ரோசாஃப்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும். ஒன்று 'ஆபரேட்டிங் சிஸ்டம்' தயாரிக்க. மற்றது பிற சாஃப்ட்வேர்களைத் தயாரிக்க என்று நீதிமன்றம் சொன்னது. ஆனால், சாஃப்ட்வேருக்கு முன்-னால் சட்டம் கொஞ்சம் பலவீனமாகத்-தான் பேசி-யது. பிறகு, அந்தத் தண்டனை வெகுவாகக் குறைக்கப்-பட்டது.

இன்றும் சாஃப்ட்வேர் கொடி உயரத்தான் பறக்கிறது... பில்கேட்ஸ் சொல்லும் தெளிவான பாடம் இதுதான்... 'உழைக்கத் தயங்காதே... ஒரு கட்டத்துக்கு மேல் போனபிறகு உண்மையாக உழைப்பவனுடைய உழைப்பை தனதாக்கிக் கொள்ளவும் தயங்காதே...' இதுதான் சக்சஸ் ஃபார்முலா! அதற்கு வாழும் உதாரணமாக இருக்-கிறார் பில்கேட்ஸ்!

2006-ல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முழுநேர தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார்। அதன்பின் 'சேர்மன்' என்ற அளவில் மற்றவர்களை வைத்து கம்பெனியை நடத்தி, மேற்பார்வை செலுத்திவந்த பில்கேட்ஸ், தற்போது முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்। பல முனைகளிலும் இருந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சவாலைச் சந்திக்கும் நேரத்தில், இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார். ஆனால், பில்கேட்ஸ் எனும் மனிதரும், அவர் உலக மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கமும் வரலாற்றின் பக்கங்களில் நிரந்தரமாகப் பொறிக்கப்பட்டிருக்கும், சாஃப்ட்வேர் சாம்ராஜ்ஜியத்தின் நிகரில்லாச் சக்கரவர்த்தி என்ற அடையாளத்தோடு
- நன்றி
விகடன் குழுமம்