திருக்குறள்

பத்து முத்துக்கள்...


அவனன்றி...
கடவுள் இன்றி நீங்கள் செயல்பட முடியாது; நீங்கள் இன்றி கடவுள் செயல்பட மாட்டார்.


காது கொடு!
உங்கள் வாயினால் பெறுவதை விட அதிக நண்பர்களை உங்கள் காதுகளால் பெற முடியும்.


அதே தப்பு!
முழு முட்டாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகையில், அவரும் அதே தப்பைச் செய்யாமல் இருக்கிறாரா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.


அந்தக் கேள்வி!
துன்பங்கள் நம்மைச் சூழும்போது, 'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?' என்று கேட்பதற்கு நமக்கு அருகதை இல்லை இன்பங்கள் சூழும்போதும் அப்படிக் கேட்காதவரை!


அம்பு அல்ல; அன்பு!
'உண்மை' என்கிற அம்பையே எய்தாலும், அதன் முனையை 'கனிவு' என்னும் தேனில் தோய்த்துக் கொள்ளுங்கள்.


வாழ்க்கை
குழந்தைகளுக்கு நாம் வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கிறோம்; அவர்கள் நமக்கு வாழக் கற்றுக் கொடுக்கிறார்கள்.


மாறும் இலக்கணம்
வெற்றி மற்றவர்கள் பெற்றால் அதிர்ஷ்டம்; நாம் பெற்றால், அது நம் திறமை!


தூய்மை
உடம்புக்கு சோப்பு; ஆன்மாவுக்குக் கண்ணீர்!


எல்லாம் நேரம்!
உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடியாதவன், நோய்க்கு நேரம் ஒதுக்குகிறான்.


நாக்கு அவுட்!
நாம் யாரைப் பெரிதும் நேசிக்கிறோமோ, பெரும்பாலும் அவரைத்தான் அடிக்கடி காயப்படுத்தி விடுகிறோம். பல் நாக்கைத்தானே கடிக்கிறது


'ஷெல்லி' ராணி

அவள் விகடன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற