திருக்குறள்

உஞ்சை அரசன் - கவிதைகள்

இருப்பு

வற்றிய முலைகளைச்
சப்பியபடியே
அயர்ந்து தூங்கிவிட்டது
குழந்தை

பால் சுரக்காத மார்புகளோடு
ஒருக்களித்துப் படுத்திருப்பாள்
ஒருத்தி
தன் சதையைப் பிய்த்துத் தின்னும்
சண்டாளனுக்குப் பயந்து

காமத்தின் கொடிய
இரவுகளில்
எழுதப்படுகிறது
உயிர் வதைக்கும் ஒரு கவிதை
எவருக்கும் தெரியாதபடி

வீசும் காற்றின்
வெப்பப் பெருமூச்சில்
உருகிப்போய்
பாதியாய்த் தேய்ந்து கிடக்கிறது
பால் நிலவு

இருட்டின் வெளிச்சத்தில்
கண்ணயர முடியாத
புரண்டு படுக்கும்
பூமி பார்த்து
நட்சத்திரங்களும்
தூரப் போயின

பாழடைந்த
மனப் பிரகாரத்தின்
உள் வெளிகளில்
நினைவின் வெளவால்கள்
பறந்தபடியிருக்க
எங்கும் நிசப்தம்

எல்லாம்
அதனதன் இயல்பில்
அதன்படியே இருக்க
எதைப் பற்றியும் கவலைப்படாமல்
விடிகிறது பகல்
ஒவ்வொரு நாளும்
ஒரே சூரியனைச் சுமந்தபடி.

*****************

போரிடு பெண்ணே!

பெண்ணே...
நீ பெண்ணாயிரு.

முடியோ...
புடவையோ...
பூவோ...
பொட்டோ...
இளக்காரமல்ல
என்பதுணர்.

கூந்தலைக் குறைப்பதும்
சேலையைத் தவிர்ப்பதுமே
மீறல் என்றெண்ணாதே.

அடங்க மறுப்பதும்
ஆளுகை புரிவதும்
உடைமை பெறுவதும்
உளமைதுறப்பதும்
மீறலென்றெண்ணு.

சமைப்பதும்
துவைப்பதும்
பெறுவதும்
உற்றார்க்கேயல்லாமல்
உற்பத்தியோடு இணை.

சகலமும் சமமென்று
சண்டைக்கு நில்...
அதிகாரம் பறிக்க
ஆர்த்தெழு... பெண்ணே...
ஆணுக்கு நிகரென்று போடு.

கண்ணகி கோட்டம்: பறிக்கும் மலையாளிகளும் தவிக்கும் தமிழர்களும்

கோ.மாரிமுத்து

“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என அறத்தை வலியுறுத்தி கண்ணகியின் வாழ்க்கையை சிலப்பதிகாரம் என்ற பெயரில் இளங்கோவடிகள் எழுதினார். தமிழ்த்தேசியர்கள் தமிழ்த்தேசியத்தின் பண்பாட்டு வடிவமாக கண்ணகியை அடையாளங் காண்கின்றனர். காப்பிய நாயகியாக போற்றப்பட்ட கண்ணகியைக் காணவும், வழிபடவும் இப்போது மலையாளிகளின் அனுமதி தேவை என்ற அவலம் ஏற்பட்டுவிட்டது. உண்மையில் கண்ணகிக் கோட்டம் கேரள எல்லையில் தான் உள்ளதா என்ற கேள்விக்கு முன் கண்ணகிக்கோட்டம் கட்டப்பட்ட கதையைப் பார்ப்போம்

தன் கணவன் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனால் கள்வன் எனக் குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப்படுகிறான். இதையறிந்த கண்ணகி கோபக் கனலோடு பாண்டியனிடம் நீதி கேட்கிறாள். உண்மையையறிந்த பாண்டியன் “நானே கள்வன்” எனத் தன்னுயிரைத் துறக்கிறான். சினம் தனியாத கண்ணகி மதுரையை எரித்துவிட்டு வைகை ஆற்றுத் தென்கரை வழியாக 14 நாட்கள் நடந்து விண்ணேந்திப் பாறைக்கு (தற்போது வண்ணாத்திப் பாறையாகிவிட்டது) வந்தடைகிறான். அங்கு தேவர்களுடன் பூப்பல்லக்கில் வந்த கோவலன் கண்ணகியை விண்ணுலகிற்கு அழைத்துச் செல்வதாக கதை முடிகிறது.

இச்செய்தியறிந்த சேரன் செங்குட்டுவன் சேரநாட்டு எல்லையில் கண்ணகிக்கு கோயில் கட்ட முடிவு செய்து இமயத்திலிருந்து கல் கொண்டு வந்து கட்டப்பட்ட கோயில்தான் கண்ணகிக் கோட்டம் என்றழைக்கப்படுகிறது. இது தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் கூடலூருக்கு தெற்கே பளியன் குடியிலிருந்து 5000 அடி உயரத்தில் விண்ணேந்திப் பாறையில் அமைந்துள்ளது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டு பின்னாளில் இது சேதமடைந்தது. பின்பு சோழப் பேரரசன் முதலாம் இராச இராசனால் மீட்டமைக்கப்பட்டது. (இக்கோயில் உள் அமைப்பு சோழர் பாணியில் நீள் சதுர வடிவில் அமைந்துள்ளது) கி.பி.11ஆம் நூற்றாண்டு வரை ‘பளியர்’ என அழைக்கப்படும் மன்னர்களால் தொடர்ந்து தினசரி பூசை செய்யப்பட்டதற்கான ஆதாரம் இக்கோவில் வளாகத்திலேயே உள்ளது. அதன்பின் கவனிப்பாரற்றுப் போனதால் இடிந்தும் சிதிலமடைந்தும் கிடக்கிறது.

50 ஆண்டுகளுக்கு முன்னர் ‘மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை’ அமைப்பு தொடங்கப்பட்டு கோயிலைச் சீரமைக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் மனுக் கொடுத்தனர். கோயில் சிதிலமடைந்து கிடந்தாலும் 1975 வரை எந்த சிக்கலும் இல்லாமல் தமிழர்கள் வழிபட்டு வந்தனர். கண்ணகி கோயில் தமிழகத்திற்குச் சொந்தமா என்ற சர்ச்சை ஏற்பட்டபோது 1975இல் தமிழக அரசின் வருவாய்த்துறை அதிகாரி ஆனந்த பத்மநாபன் அறநிலையத்துறை ஆணையர் ஆர்.சி.பண்டா ஆகியோர் நில அளவை அதிகாரிகளுடன் கோயிலுக்குச் சென்று அளந்து தமிழக எல்லையில்தான் கோயில் உள்ளது என உறுதிப்படுத்தினர்.

சி.பி.எம். முதல்வராயிருந்த ஈ.கே.நாயனார் குமுளியில் இருந்து தேக்கடி வழியாக கண்ணகி கோயிலுக்குச் சாலை அமைத்தார். அந்தச் சாலை கேரளாவிற்குள் போனதால் கேரள அரசின் அனுமதி பெற வேண்டியதாகிவிட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே தமிழக பக்தர்கள் கூடலூரிலிருந்து பளியன்குடி வழியாக கோயிலுக்கு எப்போதும் சென்று கண்ணகியை வழிபட அன்றைய ஆங்கிலேய வனத்துறை அனுமதித்துள்ளது. எனவே நமது வனப்பாதையை நாம் பயன்படுத்துவதற்கு இன்றைய இந்திய வனத்துறையிடம் கூட அனுமதி பெற வேண்டிய தேவை இல்லை. தமிழக அரசு பளியன்குடி வனப்பாதையை உடனே போடுவதற்கு எந்தத் தடையும் இல்லை.

1976இல் கேரள தமிழக அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய அளவையிலும் கோயில் தமிழக எல்லையில் தான் உள்ளது என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு முன் சித்திரை முழுநிலா விழா ஒரு வாரகாலம் கண்ணகிக் கோட்டத்தில் சிறப்பாக நடைபெற்று வந்தது. பின் கேரள வனத்துறையின் கெடுபிடியால் 1951வரை மூன்று நாட்களாக குறைக்கப்பட்டது. இதுவும் பொறுக்காமல் 1982இல் கோவிலுக்கு வந்த 200 பக்தர்களை கேரள வனப்பகுதியில் மரம் வெட்டினார்கள் என்று பொய் கூறி திருவனந்தபுரத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இதில் தலையிட்ட இந்திய அரசு 1984இல் திருவிழாவிற்கு முன்பு தமிழக கேரள அதிகாரிகள் கூட்டாகச் சேர்ந்து திட்டமிட்டு, தீர்மானம் செய்து அதன்படி விழா நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதுதான் கண்ணகி கோயில் மீது கேரளாவிற்கு ஒரு ‘பிடியை’க் கொடுத்தது.

1984 இந்திய அரசின் உத்தரவிற்கு முன்பு கண்ணகி கோயில் மீது உரிமை கோருவதற்கு எந்தவித அடிப்படையும் கேரளாவிற்கு இல்லை. எப்போதும் தமிழர்களுக்கு எதிரõகவே சாட்டையைச் சுழற்றும் இந்திய அரசு இதிலும் இரண்டகம் செய்தது. கம்பம் சட்டமன்ற உறுப்பினர் கோபால் 1976இல் தமிழக எல்லை வழியாக கண்ணகி கோயிலுக்கு பாதை போட வலியுறுத்திப் பேசினார். அதன்படி முதல்வர் கருணாநிதி 20 இலட்சம் நிதி ஒதுக்கி பாதை போட உத்தரவிட்டார். அந்த சமயம் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. போடவேண்டிய பாதையும் நின்று போனது.

1984லிலிருந்து இன்றுவரை கண்ணகிகோட்டம் செல்லும் தமிழர்கள் பல்வேறு வகையான துன்பங்களை மலையாளிகளால் எதிர்கொள்கின்றனர். மோதல் நடந்துவிடுமோ என்ற பதட்டத்துடன் தமிழர்கள் செல்ல வேண்டியுள்ளது. மலையாளிகளின் அச்சுறுத்தல் எவ்வளவு இருந்தாலும், பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய தமிழகக் காவல் அதிகாரிகள் தயங்கினாலும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பக்தர்களாகவும் தமிழுணர்வாளர்களாகவும் செல்வது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்த வரவு என்பது கண்ணகிக்கோட்டம் தமிழர்கள் சொத்து. எனவே கண்ணகி கோட்டத்தை ஆக்கிரமிக்கத் துடிக்கும் மலையாளிகளிடமிருந்து மீட்க வேண்டும் என்ற இன உணர்வின் வெளிப்பாடாக ஆகிவிட்டது

தமிழர்கள் தங்கள் இன உணர்வோடு பக்தர்களாக வருகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட மலையாளிகள் இராசஇராசனால் கட்டப்பட்ட கட்டிடத்திற்குள் திடீöரன்று ‘துர்காதேவி’ என்றொரு சிலையை வைத்து விட்டார்கள். வருடந்தோறும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களை அழைத்துவந்து “பாரத மாதாகி ஜே” என்று முழங்குகிறார்கள். கண்ணகி கோட்டம் முக்கியத்துவம் பெறுவதைத் துல்லியமாக, நுட்பமாக முறியடிக்க மலையாளிகள் செய்கிற சூழ்ச்சி இது. துர்கா தேவியை வழிபடும் பக்தர்களுக்கு பந்தல் போடப்படுகிறது.

மாவிலை, தென்னை ஓலை தோரணங்கள் கட்டப்படுகிறது. வாழை மர வளைவு செய்யப்பட்டிருக்கிறது. கண்ணகியை வழிபட வரும் பக்தர்களுக்கு பந்தல் இல்லை. வளர்ந்து வெயிலில் காய்ந்துபோன கோரைப்புற்களால் காலில் காயம் ஏற்படுகிறது. அலங்காரம் ஏதுமில்லை. எல்லாவற்றையும் விட கண்ணகி சிலையே இல்லை. மங்கலதேவி அறக்கட்டளையினர் முயற்சியில் சித்திரை முழுநிலவு நாளில் சந்தனத்தால் கண்ணகி முகம் வடிவமைக்கப்பட்டு பூசை செய்யப்படுகிறது.

இவ்வளவிற்குப் பிறகும் இந்தாண்டு பெரும் எண்ணிக்கையில் தமிழின உணர்வோடு இளைஞர்கள் ஏராளமானோர் கண்ணகிக் கோட்டம் சென்றனர். கோயிலுக்கு வந்த 40 பெண் பக்தர்கள் உள்ளிட்ட 500 பேரை மாலை 5 மணிக்கு மலையில் விட்டு விட்டு அனைத்து வாகனங்களையும் கீழே கொண்டு போய் விட்டனர் மலையாள அதிகாரிகள். கும்பகோணத்திலிருந்து ஒரு பேருந்தில் குடந்தை தமிழ்க் கழகத்தலைவர் தோழர் பேகன் தலைமையில் வந்தவர்கள் குளிரில் மலையில் தவித்தனர். கொந்தளிப்பு ஏற்பட்டது. பின்பு தமிழக அதிகாரிகள் மலையாள அதிகாரிகளிடம் பேச்சு நடத்தி வாகனங்கள் அனுப்பி அனைவரையும் மீட்டனர்.

ஏதோ இந்த ஆண்டு மட்டும் இந்த சம்பவம் நடந்தது என்பதல்ல. 1984க்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வகையான துன்பத்தை மலையாளிகளால் சந்திக்க வேண்டியிருக்கிறது. இது மட்டுமின்றி வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில் சுவரில் உள்ள கற்கள் காணாமல் போய்க் கொண்டே இருக்கின்றன. கோயிலுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள தூண்கள் ஒன்றுகூட இல்லை. இப்படியே போனால் கண்ணகி கோயில் முற்றிலுமாக அழிந்து துர்காதேவி வழிபாடு மட்டுமே நடக்கும். மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் ஆண்டு தோறும் தமிழக எல்லை வழியாக பாதை கேட்டு அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். சென்ற ஆண்டு தேனி மாவட்ட ஆட்சியர் ஹர்சகாய் மீனா உடனடியாக பாதை அமைக்க நிதி ஒதுக்கவேண்டும் என முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார். ‘தமிழாய்ந்த தலைமகன்’ முதல்வர் கருணாநிதி இக்கோரிக்கையை காதில் போட்டுக் கொள்ளவில்லை.

காலந்தாழ்த்தாமல் தமிழக அரசு பாதை போட நிதி ஒதுக்கி உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் கேரளா வழியாகச் செல்ல வேண்டிய நிலையைப் பயன்படுத்தி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நோய்க்கிருமி போன்று தமிழர்களின் மீது இனப்பகையைக் கக்கிவரும் மலையாளிகளின் கொட்டமும் சூழ்ச்சிகளும் மோதலைத்தான் உருவாக்கும். எப்போதும் தமிழர்கள் குனிந்து கொண்டே இருக்க மாட்டார்கள். கண்ணகி கோட்டத்தைத் தமிழக அரசு சீரமைக்க வேண்டும். பாதை அமைக்க வேண்டும் இல்லாது போனால் இப்பணியைத் தமிழர்கள் தாங்களே நிறைவேற்றிக் கொள்ளும் நிலை ஏற்படும்.

கவிதைகள் - எஸ்.விஜயன்

கசாப்பு கடையிலிருந்து
பறந்து வந்த
இறகுகளைக்கண்ட குருவிகள்
சமாதானமடைந்தன

அலைந்து திரியும்
வாழ்க்கை மேலென்று

கிளை ஒடிந்து
சிறுவன் விழுந்ததும்
மரத்தை சபித்தார்கள்
மரமோகைகள் துண்டானதால்
வலியில்
முனகிக் கொண்டிருந்தது

இக்கரைக்கும்
அக்கரைக்கும்
வழியனுப்பிய
பரிசல்கள்

வழி தொலைந்து நின்றன
நீர் வற்றியதால்.

குட்டி ரேவதி கவிதைகள்

விதையுறக்கம்

ஆகவே விளிம்புநிலையைப் பற்றிக்கொண்டுத்
தொங்குகிறேன்

இனி ஒரு பொழுதும் உனைத் தேடாதிருப்பேனாக
நீர்நிலையைத் தேடும் பறவையைப்போல்
இரவின் உச்சத்தில் கனவு
கல்லெறிந்ததால் உண்டான வட்டங்களாய் விரிகிறது
அதன் ஒளிபரப்பில் உன் புன்னகையால்
எனைத் தேற்றுகிறாய்; தேற்றுகிறாய்

சிறார்கள் தமது உறுப்புகளை
மறைவுகளில் கண்டறிவதுபோல்தான்நான்
உன்னைக் கண்டறிந்தேன்
உடல், விதைக்கவோ வளர்க்கவோ
யாருமேயிலாது
பாழ்நிலமாய் உலர்ந்து வெடிக்கிறது
எச்சத்தில் ஊறிய விதையைப்
பறவைகள் வெளிக்கிட்டுப் பறக்கின்றன
ஒரு மழையின் ஸ்பரிசத்தால் குளிராதவரை
வெடிப்பில் வீழ்ந்த விதை
உறக்கம் தழுவிக்கொண்டிருக்கும்

இனி ஒருபொழுதும் உனைத் தேடாதிருப்பேனாக

கவிதை - யாழன் ஆதி


உழைப்பின் நரம்புகளில்

திரள்கிறது குருதி

வியர்வை சுரப்பிகள்

வற்றாத வடிகால்களாகின்றன

சம்மட்டி எடுத்து அடித்தும்

கடப்பாரை கொண்டு நெம்பியும்

புரள்கிறது வாழ்க்கை

தொண்டைக்குழி வறளும்

வெயிலும்

மூச்சுக்குழல் அடைக்கும்

துர்நாற்றமும்

உயிரின் நிழலென தொடர்கின்றன

பசிமேயும் வயிறுகள்

கட்டாந்தரைகள்

காய்த்த உள்ளங்கைகளில்

கோடை வெடிப்புகள்


செல்போன் சாட்டிலைட்

அய்.டி. இன்டெர்நெட்

ஆயிரம் வந்தாலென்ன

அப்படியேதான் கிடக்கின்றன

உழைப்பவர் கைகளில்

வறுமையும் துயரமும்

தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!

தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!
தலை மீது சுமக்கின்றான்
அடிமை என்னும் சொல்லை!

எதிரியைத் தலைவனாய் எண்ணுகின்றான்!
எச்சிலை அவன் போடத் தின்னுகின்றான்!
எவனுக்கும் பல்லையே காட்டுகின்றான்
இசை தெலுங்கானது பாட்டினிலே!
இந்தி கோல் ஓச்சுது நாட்டினிலே!

திசைதோறும் ஆங்கிலம் வாயினிலே!
தீந்தமிழ் எரியுது தீயினிலே

ஒடுங்கி ஒடுங்கி இவன் ஆமையானான்!
உதைத்தாலும் வதைத்தாலும் ஊமையானான்!
நடுங்கி நடுங்கி இவன் வாழ்ந்துவிட்டான்!
நாளுக்கு நாளிவன் தாழ்ந்துவிட்டான்!
உலகெல்லாம் நேற்றிவன் ஆண்டதென்ன?
ஊர் ஊராய் இன்றிவன் மாண்டதென்ன?
மலைபோல நேற்றிவன் எழுந்ததென்ன?
மரம்போல வீழ்ந்தானே வீழ்ந்ததென்ன

சிந்திக்க வைக்கும் இந்தப் பாடலைப கலைமாமணி குப்புசாமி தனது தேனான குரலில்; பாடும்போது மனதுக்கு தெம்பாக இருக்கும்.

வேதங்கள் - தமிழர் மரபுக்கு முரணானது = சாருநிவேதிதா

(‘இன்னார் செய்தாரை ஒறுத்தல்’ எனும் நாகரிகமான தமிழர் மரபுக்கு - சாராயத்தைக் குடித்துவிட்டு எதிரியின் கண்களைத் தோண்டு என்று கூறும் வேதங்கள் நேர் முரணானது என்று, எழுத்தாளர் சாருநிவேதிதா, எழுதியுள்ளார். ராஜமுத்திரை வார இதழில் - (மார்ச் 22) வெளிவந்த கட்டுரை இது.)

பெரியார் மீது எனக்குக் கொஞ்சம் மனஸ்தாபம் இருந்தது. மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக தன் வாழ்நாள் முழுவதும் அவர் நடத்திய போராட்டத்தில் கலாச்சாரம் சம்பந்தப் பட்ட பல செழுமையான பகுதிகளும் அடித்துக் கொண்டு போய்விட்டனவே என்பதுதான் என் மனஸ்தாபத்திற்குக் காரணம்.

உதாரணமாக, பிராமணீயத்தை எதிர்ப்பதற்காக சமஸ்கிருத மொழியை எதிர்த்தார். அதனால் காளிதாசன் எழுதிய அதி அற்புத காவியங்களை நாம் படிக்க முடியாமல் போயிற்று. வருண பேதத்தை முன்னிறுத்துகின்றன என்பதால் புராணங்களையும், இதிகாசங் களையும் எதிர்த்தார். அதனால் உலக இலக்கியங்களிலேயே தலைசிறந்த காவியம் என்று உலக எழுத்தாளர்களால் போற்றப்படும் மகாபாரதத்தைப் படிக்காமல் விட்டோம்.

இப்படியெல்லாம் இவ்வளவு காலம் நினைத்துக் கொண்டிருந்தேன். அதனால் சமஸ்கிருதத்தில் உள்ள முக்கிய நூல்களை நானே படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது, முக்கியமாக வேதத்தைப் படித்தபோது. ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களே இந்து மதத்தின் ஆகப் பெரிய புனித நூல்களாகக் கருதப்படுபவை. வேதம் படித்தவனே அறிஞனாகக் கருதப்படுகிறான். மேலும், சூத்திரனோ அல்லது நான்கு வருணங்களுக்கு அப்பாற்பட்ட விளிம்பு நிலையில் தள்ளப்பட்டு, இழி தொழிலைச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட அடிமை மக்களோ வேதத்தைக் கேட்டாலே போதும், அவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொல்கிறது மனு தர்மம். வேதத்தை முற்றாக அறிந்தவன், வேதாந்தி என அழைக்கப்பட்டான்.

வேதத்தில் இல்லாததே இல்லை யென்று இன்றளவும் கருதப்படுகிறது. நான்கு வேதங்களையும் ஆரம்பத்திலிருந்து முடிவு வரையும், பின்னர் முடிவிலிருந்து ஆரம்பம் வரை தலைகீழாகவும் ஓதத் தெரிந்தவர்கள் கனபாடிகள் என்று அழைக்கப்படுகின்றனர். இக்காரணங்களால் வேதத்தை நான் மிகுந்த மரியாதையுடனேயே வாசிக்க ஆரம்பித்தேன். பிறகுதான் தெரிந்தது, தெருவில் நடக்கும்போது காலில் அசிங்கத்தை மிதித்து விட்டேன் என்று. ஆம்! வேதத்தில் அவ்வளவு அசிங்கமும் ஆபாசமும் உள்ளன. இந்துக்களில் அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் வீட்டில் எந்த சுபகாரியங்கள் நடந்தாலும் அங்கே தவறாமல் அழைக்கப்படுகவர்கள் புரோகிதர்கள். ‘வாத்தியார்’ என்று பிராமணர்களின் பேச்சு மொழியால் அழைக்கப்படும் அப்புரோகிதர்கள் அந்த சுபகாரியத்தின் போது ஹோமம் வளர்த்து பல மந்திரங்களை மணிக்கணக்கில் ஓதுவார்கள்.

அந்த மந்திரங்களின் அர்த்தத்தைக் கேட்டால் நீங்கள் எல்லோரும் பயந்து ஓடி விடுவீர்கள். ஆம்! ஒரு சுப தினத்தின் போது ‘என்னை எதிர்ப்பவர்கள் நாசமாய்ப் போக; அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்க! புல் பூண்டு இல்லாமல் அவர்கள் வம்சம் அழிந்து போக!’ என்ற ரீதியில் மணிக் கணக்கில் ஒருவர் சாபம் விட்டால், அவ்வார்த்தைகள் அந்தச் சூழலை எவ்வளவு அருவருப்பாக மாற்றும்? வேதம் முழுக்கவும் இம்மாதிரி அருவருப்பான வசைகளே நிறைந்திருக்கின்றன. இடையிடையே கவித்துவம் நிரம்பிய சில அற்புதமான பகுதிகளும் உண்டு. உதாரணமாக:

நான் தேனைவிட தேனாயுள்ளேன். மதுரத்தைவிட மதுவாயுள்ளேன். நீ என்னையே தேன் மிகும் சாகையாக விரும்பு.’‘எனது சலனம் தேன் மயம். என் மனம் தேன் மயம். நான் மொழியால் தேன் மயமாய் மொழிகிறேன். நான் தேன் தோற்றமாக வேண்டும்.’ (அதர்வ வேதம்; காண்டம்: 1.34 தேன் மயம்)

ஆனால், இந்தக் கவித்துவத்தையும் மீறி வேதம் முழுக்கவும் நிரம்பியிருப்பது: துவேஷம். எதிரிகள் மீதான துவேஷம். எதிரிகள் யார் என்று பார்த்தால் பிராமணர்களுக்கு அடிமையாகத் தங்களை ஒப்புக் கொடுக்காதவர்கள். அவர்கள் மீதான சாபத்தைப் பாருங்கள்.

‘இந்திரன் தனது வச்சிராயு தத்தால் அவர்களால் சிரங்களைத் துண்டித்திடுக.’‘எங்கள் பசுவை நீ இம்சித்தால் நாங்கள் உன்னைக் குத்திக் கொல் வோம்’. (அத்தியாயம்: சம்ஹாரம்)‘எங்கள் எதிரிகளை ருத்திரன் நாசம் செய்க’‘சாபத்தால் சபிப்பவள், தன் மக்களையே புசிப்பாளாக’‘தனது மகனையும், சகோதரியையும் பெண்ணையுமே புசித்திடுக.’‘அக்னியே! எங்களைத் துவேஷிப் பவனை உனது சுடரால் எரித்து விடு.’‘இம்சை செய்பவனே! உங்களது புன்மைகள் மறுபடியும் பின்புறமே வீழ்க! உங்கள் தோழனைப் புசியுங்கள்; உங்களது மாமிசத்தைப் புசியுங்கள்’.‘இந்திரா! சத்துரு சேனையை மயக்கம் செய். அதன் கண்களைப் பிடுங்கு.’‘அவனைக் கொல்லு; அவனது விலா எலும்புகளை நொறுக்கு. அவன் சீவனற்றவனாகுக. அவன் சுவாசம் நீங்குக.’‘இந்திரா! இதோ பிழிந்த சோமன். மதத்துக்கு இதனைப் பருகு. விரிந்து விசாலமாயுள்ள உனது வயிற்றில் அச்சோமனைப் பொழிந்து கொள். எங்கள் எதிரிகளைக் கொன்று அவர்களின் பசுக்களைப் பாழாக்கு.’ இப்போது புரிகிறதா, சில சாமியார்கள் கொலை கொள்ளைகளில் ஈடுபடுவது ஒன்றும்
சாஸ்திரங்களுக்கு விரோத மானதல்ல என்பதும், வேதங்களைப் பின்பற்றியே அவர்கள் அக்காரியங்களில் ஈடுபடுகின்றனர் என்பதும்? ஆனால் என்ன செய்வது? 3000 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது இருப்பது போல நீதிமன்றங்கள் இல்லை என்பதை சாமியார்கள் மறந்து விடுகின்றனர். மேலே கூறியுள்ள சுலோகங்கள் அனைத்தும் அதர்வண வேதத்தில் உள்ளவை. இப்படியே அந்த வேதத்தில் 20 காண்டங்கள் உள்ளன.

எதிரிகளும் தங்களுக்கு அடிமையாக மறுப்பவர்களும் அழிய வேண்டும் என்ற ‘அரிய’ கருத்துக்கு அடுத்தபடியாக வேதங்களில் தெரியும் மற்றொரு ‘உன்னத’ குணாம்சம்: சுயநலம். நானும் என் இனத்தைச் சார்ந்தவர்களும் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்ற சுயநலம். இந்த சுயநலத்திற்காக தேவர்களுக்கு வேள்வி வளர்த்து அதில் நெய்யையும் குதிரைகளையும் போட்டு எரித்து, சொர்க்கத்திலிருக்கும் அவர்களை பூலோகத்துக்கு வரவழைத்து, சோம பானம் என்ற லஞ்சத்தைப் படையல் செய்து எதிரிகளை அழித்து விட்டு, எங்களை மட்டும் வாழவை என்று அவர்களை வேண்டுவதே வேதம்! வேதமந்திரங்கள் முழுக்கவும் இத்தகைய சுயநலத்தையும், துவேஷத்தையும்தான் முழங்குகின்றன.

இன்றைய சாமியார்கள் ரவுடிகளுக்குப் பணம் கொடுத்து தங்கள் எதிரிகளைக் கொலை செய்கிறார்களே, அதே கதை தான் வேதங்கள் முழுக்கவும் விரவிக் கிடக்கிறது.‘ஜயித்த பொருள் நம்முடையது. தோன்றுவது நம்முடையது. ரிதம் நம்முடையது. தேஜஸ் நம்முடையது. பிரம்மம் நம்முடையது. சுவர்க்கம் நம்முடையது. யக்ஞம் நம்முடையது. பசுக்கள் நம்முடையது.’அதர்வண வேதத்தில் ஜயகோஷம் என்ற அத்தியாயம் ‘நான் சொல்வதை ஜயிக்க வேண்டும். நான் செல்வம் மிகுந்தவனாக வேண்டும்; நீ என்னில் செல்வத்தை அளி.’அதர்வண வேதம் செல்வம் என்ற அத்தியாயம்.

அடுத்தவன் அழிய வேண்டும்; நான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும்’ என்ற ‘உயரிய’ கருத்தை வலியுறுத்தும் வேத மந்திரங்களை இங்கே மேற்கோள் காட்டுவது மிகவும் சிரமமானது. ஏனென்றால் எல்லா மந்திரங்களுமே அப்படித்தான் உள்ளன.

நான்கு வேதங்களில் அதர்வண வேதம் மட்டும் சிறிது பரவாயில்லை என்று கூறலாம். ஏனென்றால், அதில் காமம் பற்றிய சில கவித்துவமான பகுதிகள் உள்ளன.

ரிக் வேதமோ முழுக்க முழுக்க துதிப் பாடல்கள் ‘இந்திரனே இங்கே வா, சோமத்தைப் பருகு. தலைவனான நீ, வழிபடும் மற்றவர்களையெல்லாம் கடந்து எங்களிடம் துரிதமாகவும், எங்களுக்கு மிக்க உணவை அளிக்கவும்.’ இப்படி ரிக் வேதத்தில் உள்ள மொத்த மந்திரங்களின் எண்ணிக்கை 10,552. விஞ்ஞான வளர்ச்சியுற்ற இன்றைய காலகட்டத்தில் இத்தகைய வெற்றுச் சொற்களுக்கு எந்த அர்த்தமுமே இருக்க முடியாது.

நாகரிக வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியிருந்த ஒரு இனம் எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக இயற்கையையும் வானுலகில் வசிப்பதாக அவர்கள் நம்பிய தேவர்களையும் துணைக்கு அழைத்த பிரார்த்தனைப் பாடல்களே வேதங்கள். அந்நியர்களைக் குறித்த இவர்களது பயமே சுயநலமாகவும் துவேஷமாகவும் மாறியுள்ளது.

ஆனால் தமிழ்ப் பாரம்பரியமோ ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்கிறது நமக்குத் தீமை புரிந்த ஒருவனைத் தண்டிக்கும் வழி. என்னவென்றால், அவன் வெட்கப்படும் விதத்தில் அவனுக்கு நன்மை புரிவதே. இதுவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதுதான். இப்படிப்பட்ட சிந்தனையின் ஒரு கீற்றைக்கூட நான்கு வேதங்களிலும் காண முடியவில்லை.

எனவே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சீரிய தமிழ் மரபுக்கு ‘இந்திரனே! நான் அளிக்கும் சாராயத்தைக் குடித்து விட்டு என் எதிரியின் கண்களைத் தோண்டு’ என்று உபதேசிக்கும் வேதங்கள் நான்கும் முற்றிலும் மாறுபட்டது. எனவே, வேதங்களைப் பற்றிய ‘ஜீம்பூம்பா’ கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவை;

-சாரு நிவேதிதா -

மதங்களும், சாதிகளும் - பாலபாரதி எம்.எல்.ஏ.

இந்து மதத்திலிருந்து, கிறிஸ்துவ மதத்திற்கோ, இஸ்லாமிய மதத்திற்கோ ஒருவர் மாறிவிட முடியும். ஆனால், இஸ்லாமிய கிறிஸ்துவ மதங்களிலிருந்து ஒருவர் விலகி இந்து மதத்தில் இணைய முடியுமா?. இணைய முடியும் என்றால் எந்த சாதியில் இணைத்துக் கொள்வார்கள்?. வர்ணாசிரம 4 பிரிவுகளில் எந்த பிரிவுக்கு கீழ் அவர் கொண்டு வரப்படுவார்?

மேற்காணும் கேள்விகளுக்கான பதில் சிக்கலும் சிரமமும் நிறைந்ததாக உள்ளது. அதற்கு காரணம், இந்து மதம் என்பது ஒரே பிரிவை மட்டுமே கொண்டதாக அமையவில்லை. பிரம்மாவின் நெற்றி, தோள், கால், பாதங்களிலிருந்து பிறந்தவர்கள் எனவும், அவர்கள் முறையே பிராமணன், சத்ரியன், வைஷியன், சூத்திரன் என பிரிக்கப்பட்டும், பாதத்திலிருந்து பிறந்தவர்கள் சண்டாளர்கள் (தாழ்த்தப்பட்ட மக்கள்) எனவும் அழைக்கப்படுகிறார்கள்.

தர்மங்களுக்கு ஆதாரமாக இருப்பவை வேதமும், ஸ்மிருதிகளும், தொன்றுதொட்டு வந்த ஒழுக்க மரபும், மனநிறைவுமாகும். சுருதி, ஸ்மிருதிகளில் சொல்லப்படாமல் நின்ற அறங்களை மேற்கொண்டு ஒழுகுவோன் யாரோ, அவனே இம்மையில் புகழையும், மறுமையில் அதீதமான சுகத்தையும் பெறுவான் என மனு ஸ்மிருதியின் விதிகளில் கூறப்படுகிறது. நால் வருண முறையில் யாரும் எந்த படிக்கல்லையும் தாண்டிச்செல்ல இயலாது. கவுண்டர், பிராமணர் சாதிக்கு மாற இயலாது. பிராமணர் நாயுடு சாதிக்கு மாற மாட்டார். அவரவர் சாதிகளில், அவரவர் குல உட்பிரிவுகளில் உடைக்கப்பட முடியாத கோட்டைச் சுவர்களோடு 'சாதியம்' பாதுகாப்பப்படுகிறது இந்து தர்மத்தில் (?!).

வேறு மதத்திலிருந்து இந்த மதத்திற்கு வருபவர் எந்த சாதிக்குள்ளும், எந்த குலப் பிரிவுக்குள்ளும் அத்தனை சுலபமாக அனுமதிக்கப்பட மாட்டார்.

வெளியேற்றம் ஏன்?''மநுவினால் கட்டளையிடப்பட்ட நீதிகள் அனைத்தும் வேதத்தில் விதிக்கப்பட்டவையே. ஏனெனில், அவர் வேதசாரமுணர்ந்த பிரம்ம ஞானி'' எனப் போற்றப்படுகிறார்.

''வேதசாரமுணர்ந்த பிரம்ம ஞானியான'' மநுவின் கட்டளைகள் தீண்டத்தகாதவர் என தள்ளிவைக்கப்பட்ட தலித் மக்கள் மீது எவ்வாறு இருக்கிறது?

ஊருக்கு வெளியில் 'சண்டாளன்' குடியிருக்க வேண்டும்! உலோகத்திலான பாத்திரங்களை பயன்படுத்த கூடாது! இவர்கள் தீண்டிய பாத்திரங்களை துலக்கினாலும், தூய்மையாகாது! நாய், கழுதை இவற்றை இவர்கள் வளர்க்கலாம். மாடு முதலியவை வைத்து பிழைக்க கூடாது. இவர்கள் பிணத்தின் ஆடையை அணிய வேண்டும். உடைந்த சட்டியில் சோறுண்ண வேண்டும். இரும்பு, பித்தளைதான் அணியவேண்டும். நற்கருமங்கள் நடக்கையில், இவர்களை காண்பதோ, பேசுவதோ கூடாது. தங்கள் வகுப்பிலேயே பெண் எடுக்கவும், கொடுக்கவும் வேண்டும். மரண தண்டணை பெற்றவர்களை கொல்லுதல் இவர்கள் தொழில். அனாதைப் பிணத்தை அகற்றுதல் இவர்கள் கடன்.''

மேற்காண்பவையாவும் இழி பிறப்பாளர்க்காம்!. (தாழ்த்தப்பட்ட மக்கள்)அந்தணர்களுக்கு ஓதுவித்தல்; சத்திரியனுக்கு உலகாளுதல்; வைசியருக்கு வாணிபம் புரிதல் குலத்தொழிலாம்!இத்தகைய வேறுபாடுகளையும், முரண்பாடுகளையும் கொண்ட மனு தர்மம். இன்று வரை கட்டி காக்கப்படுகிறது. இந்த அதர்மம் தாளமுடியாமல் சூத்திரர்களில் ஒரு சில பிரிவும், சண்டாளர்கள் எனப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் சில பிரிவும்,

இந்து மதத்திலிருந்து விலகி, வேறு மதங்களை நோக்கி செல்கிறார்கள். அங்கேயும் தீண்டாமை இல்லாமல் இல்லை. ''தங்களை வேறுபடுத்தி பார்க்கிறார்கள்'' என்ற குரல் இன்று வெளிப்படையாக சில 'சபை'களில் எதிரொலிக்கிறது என்பதையும் காண்கிறோம்! தாழ்த்தப்பட்ட கிறிஸ்துவமக்களுக்கு கல்லறைகள் கூட தனிதான். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு சலுகைகள் இவர்களுக்கு இன்னமும் எட்டாக்கனிதான்.

சமூகத்தின் அங்கீகாரமற்று, எங்கு சென்றாலும் நிழல்போல் தொடர்கிற தீண்டாமையும், சாதியமும், மிகப்பெரிய சவாலாக இந்திய தேசத்தின் முன்னாள் உள்ளது. இவற்றையே மூலப் பொருளாக்கிக் கொண்டு சாதிய சக்திகளும், மதவாத சக்திகளும், அரசியலுக்குள் புகுந்து அவதாரம் எடுக்கிறார்கள். எல்லாவற்றையும் மக்கள் புரிந்துதான் இயங்குகிறார்கள். எதிர்க்கிறார்கள்! முன்னேறுகிறார்கள். எப்படியோ, மக்களுக்கு மதங்களும் இருக்கின்றன! கூடவே வயிறும், பசியும் இருக்கின்றன!

சிட்டுக் குருவி...

‍இணையத்தில் ஒரு செய்தியை தேடிக்கொண்டிருந்தபோது ஒரு குட்டிக் கதையை வாசிக்க நேர்ந்தது. மனித வாழ்வை வளமாக்க, ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ளக் கூடிய நீதிகள் கதையில் உண்டு. படித்தேன், சுவைத்தேன் நண்பர்கள் உங்களுக்காக..


ஒரு ஊரில் ஒரு சிட்டுக் குருவி இருந்தது. அதற்கு வினோதமான பொழுதுபோக்கு இருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சேகரிப்பது போல அது வினோதமான உணர்வுகளை மனித இனம் போன்ற இதர இனங்களிலிருந்து சேகரிக்க ஆரம்பித்தது. இந்த உணர்வுகளைக் கலெக்ட் செய்வது தான் அதனுடைய ஹாபி!மனிதர்களுக்கு இடையே ஒரு இடத்தில் சண்டை நடப்பதைப் பார்த்தால் அங்குள்ள கோபத்தை அது சேகரிக்கும். இன்னொரு இடத்தில் இருக்கும் ஏமாற்றத்தை அது விரும்பி கலெக்ட் செய்து கொள்ளும். பொறாமையில் ஒருவன் தீயாக எரிந்ததைப் பார்த்தால் சிட்டுக்குருவிக்கு குஷி வந்து விடும். தன் பையில் பொறாமையை சேர்த்துக் கொள்ளும். இப்படி பார்க்கும் இடமெல்லாம் அபூர்வமான கலெக்ஷனாக அது வினோதமான உணர்வுகளைச் சேகரிக்க ஆரம்பித்தது.


மனிதர்களின் சண்டைகளில் தான் எத்தனை விதம்! பொறாமைகளில் எத்தனை புது மாதிரிகள்!!பேராசைகளின் அடிப்படையிலான வினோதமான உணர்வுளுக்கோ அளவே இல்லை.தனது கலெக்ஷனை எண்ணி மகிழ்ந்து போனது அது!இன்னும் சில நாட்களில் அதன் குட்டிப் பை வினோத உணர்வு கலெக்ஷனினால் நிரம்பித் தளும்பப் போகிறது!!


ஒரு நாள் அதற்கு பறப்பதற்கு சற்று கஷ்டமாக இருந்தது. இது வரை லகுவாக மயிலிறகு போல ஜம்மென்று வானில் சீறிப் பாய்ந்த அதனால் இன்று வேகமாகப் பறக்க முடியவில்லை.சோர்ந்து போன அது ஒரு மரத்தில் வந்து உட்கார்ந்தது. அதைப் பார்த்த அதனுடைய நண்பனான நாய், என்ன குருவி! வழக்கத்திற்கு மாறாக இப்படிச் சோர்ந்து உட்கார்ந்திருக்கிறாயே.உடம்புக்கு என்ன?" என்றது."நண்பனே! என்னால் பறக்க முடியவில்லை! வேகமாகச் செயல் பட முடியவில்லை. எனது ஆற்றல் போய் விட்டதைப் போல உணர்கிறேன்.காரணமும் புரியவில்லை" என்றது.நண்பனான நாய், "அது சரி, உன் பின்னால் ஒரு பை வைத்திருக்கிறாயே, அதில் என்ன இருக்கிறது?" என்று கேட்டது." அதுவா, என்னுடைய கலெக்ஷனான உணர்வுகளை வைத்திருக்கிறேன்",என்றது குருவி."அட, அப்படியா? என்ன என்ன உணர்வுகள். எனக்குச் சொல்லேன்" என்றது நாய்." எங்கு பார்த்தாலும் ஏமாற்றம், பொறாமை, சோகம், கோபம், பேராசை. இவையெல்லாம் வேறு வேறு ரூபத்தில் விதவிதமாக எனக்குக் கிடைத்தன. அனைத்தையும் கலெக்ட் செய்திருக்கிறேன்." என்றது குருவி. "அப்படியா!இந்த பை தான் உன்னைப் பறக்க விடாமல் செய்கிறது என நான் எண்ணுகிறேன். இதைக் கவிழ்த்துக் கொட்டிப் பாரேன்" என்றது நாய்."சே! புரியாமல் பேசுகிறாயே! இது மிகவும் சிறிய பை! இதில் கனமே இல்லை"என்றது குருவி. நாய் நண்பன் விடவில்லை. "எனக்காக நான் சொல்வதைச் செய்து பாரேன்" என்றது அது.ஒத்துக் கொண்ட குருவி தன் பையிலிருந்து ஒரு கோப உணர்வை எடுத்துக் கீழே போட்டது. அடுத்த கணம் வானில் ஜிவ்வென்று பறந்தது. அதிசயித்துப் போன அது இன்னொரு உணர்வான பொறாமையை எடுத்துக் கீழே போட்டது. என்ன அதிசயம், இன்னும் ஆற்றல் கூடி அதிக உயரத்தில் பறக்க ஆரம்பித்தது.ஒவ்வொன்றாக அது கீழே போடப் போட முன்பிருந்ததை விட லேசாக மாறி அதிக உயரத்தில் அதிக ஆற்றலுடன் அது பறக்க ஆரம்பித்து விண்ணையே தொட்டு விட்டது.


சிறிது காலம் சென்ற பின்னர் அது நாயைச் சந்தித்த போது சொன்னது:-"நண்பனே! ஒரு அரிய உண்மையை எனக்கு நீ உணர்த்தி விட்டாய். இந்த எதிர்மறை உணர்வுகளை கலெக்ட் செய்யவே கூடாது. அவை மிகச் சிறியவை போலத் தோற்றமளித்தாலும் அதன் பாரம் மிகவும் பெரிது. அது மட்டுமல்ல, அவை என்னுடைய சக்தியை உறிஞ்சி விட்டன!ஒவ்வொன்றாக அவற்றைக் கழட்டி விட கழட்டி விட எனது ஆற்றலும் வேகமும் முன்பை விடப் பல நூறு மடங்கு பெருகி விட்டது. விண்ணையே என்னால் இப்போது தொட முடிகிறது.மனிதர்களும் இது போன்ற உணர்வுகளைச் சுமக்காமல் அவ்வப்பொழுது இவற்றைக் கழட்டி விட்டால் அவர்களும் விண்ணைத் தொடலாமே!" சிட்டுக்குருவியின் உரையைக் கேட்ட நாய் மகிழ்ந்து. இருவரும் சிரித்த போது வானமே லேசாகி சிரித்தது போல இருந்தது.


இந்தக் கதைகள் கூறும் நீதி தான் வாழ்க்கையில் மேம்படுவதற்கான அஸ்திவாரமான உண்மைகள். எதிர்மறை உணர்வுகளை அவ்வப்பொழுது கழட்டி விட்டவாறே மனதை லேசாக ஆக்கிக் கொண்டு உழைத்துச் சம்பாதிப்பதன் மூலம் கிடைக்கும் உணவு கூழாக இருந்தாலும் கூடச் சுவையில் தேவாமிர்தத்தையும் தோற்கடிக்கும்; அத்தோடு பாரமில்லாத மனதோடு பறந்து பறந்து போய் விண்ணையே தொடலாம்; புதிய சிகரங்களைக் காணலாம்!

பழகினால்தானே இனிமை தெரியும்!-

மொழி: பழகினால்தானே இனிமை தெரியும்!-
- ரவிக்குமார்.

அம்மாவை "மம்மி' என்றும் அப்பாவை "டாடி' என்றும் அழைப்பதையே பெரிதும் விரும்புகின்றனர் தமிழ்நாட்டின் பெற்றோர்கள். குழந்தைகளைச் சொல்லிக் குற்றமில்லை. இந்தளவிற்கு நர்சரி மோகத்திலும், ஆங்கில மோகத்திலும் ஊறிப்போயிருப்பவர்கள் பெற்றோர்கள்தான். "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்' என்பது போல், அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளுக்குஇணையான தமிழ்ச் சொற்களை சென்னையின் பல பகுதிகளிலிருக்கும் குழந்தைகளுக்கும் மாதத்திற்கு இரண்டு முறை சென்று சொல்லிக் கொடுத்து வருகிறார் விஜய் பார்த்திபன் என்னும் தமிழ் ஆர்வலரும் அவரின் நண்பர்களான தமிழ் ஆர்வலர்களும். வரைகலை பணிபுரியும் விஜய் பார்த்திபன், இதற்காகவே "பழகு தமிழ் பயிலரங்கம்' என்னும் அமைப்பை கடந்த ஏப்ரல் 14 அன்று தொடங்கியிருக்கிறார். இனி தமிழ்ப் பேச்சு... அவரின் மூச்சு...

""பஸ், ஸ்டாப்பிங், ரோட், சைக்கிள்... இப்படி நாம் அன்றாடம் பேசும் ஆங்கில வார்த்தைகளையே பேருந்து, நிறுத்தம், சாலை, மிதிவண்டி... என்று தமிழில் பயன்படுத்த குழந்தைகளுக்குச் சொல்கிறோம். அவர்களும் சந்தோஷமாகப் பயன்படுத்துகின்றனர். பெற்றோர்களும் கூட இப்போது ஆர்வமாக இந்தப் பயிலரங்குகளுக்கு வரத் தொடங்கியிருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், அன்றாடப் பயன்பாட்டில்அதிகம் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தும் அடுக்ககங்களில் வாழும் பெற்றோர்கள் கூட அவர்களின் குழந்தைகளோடு எங்களின் இந்தப் பயிலரங்குகளில் பங்கெடுக்கின்றனர். யாராவது எங்களின் பகுதிகளில் இப்படியொரு பயிலரங்கை நடத்துங்களேன் என்று அழைத்தாலும், நாங்கள் அவர்களின் இடத்தில் சென்று நடத்துகிறோம். இதற்காகவே தமிழ்நாடு முழுவதுமிருக்கும் தமிழ் ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம். மாதத்தில் இரண்டாவது, நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் மாம்பலம் பகுதிகளிலிருக்கும் கிட்டு பூங்காவில் இந்தப்பயிலரங்கை நடத்துகிறோம். முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகிலிருக்கும் வரதராஜப் பேட்டை என்னும் குடிசைப் பகுதியிலிருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் நல்ல தமிழில் பேசுவதற்குப் பயிற்சியளிக்கிறோம். இதேபோல் ஒவ்வொரு பகுதிக்கும் நாங்களே நேரில் சென்று பயிற்சியளிக்க இருக்கிறோம்

சிறிது காலத்திற்குப் பிறகு அந்தப் பகுதியில் நீங்கள் கொச்சைத் தமிழே கேட்க முடியாது. தமிழ் அன்பர்களின் வீடு, பூங்கா, இப்படி எந்த இடத்திலும் இந்தப் பயிலரங்கு நடக்கும். ஒவ்வொரு கூட்டத்திலும் ஏறக்குறைய 25 லிருந்து 50 பேர் வரை கூடுகின்றனர். ஒவ்வொரு சந்திப்பிலும் 20 முதல் 50 ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தைகளைச் சொல்லித் தருகிறோம். இல்லை இல்லை, ஞாபகப்படுத்துகிறோம் அவ்வளவுதான்! ஏனென்றால், இதில் பெரும்பான்மையானவை நமக்குத் தெரிந்ததுதான். செவ்வியல் மொழியாக தமிழ் இருந்தாலும், அன்றாடம் மக்கள் செப்பும் மொழியாகவும் தமிழ் இருக்கவேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்

வீட்டிற்கு உள்ளேயும், பொது இடங்களிலும் நமது அன்றாட பயன்பாட்டு மொழியாக தமிழைத் தொடர்ந்து பேசிவந்தாலே போதும். ஏறக்குறைய 200 வார்த்தைகள் வரை தெரிந்தாலே போதும், நமது அன்றாட பயன்பாட்டில் முழுக்க முழுக்க நாம் தமிழில் பேசமுடியும். தமிழர்கள் தமிழில் பேசவேண்டும் என்று முதலில் நினைக்க வேண்டும். அதை நடைமுறையில் செயல்படுத்த வேண்டும். முன்னேறிய நாடுகளான சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் கணினிப் பயன்பாட்டில் கூட அவர்களின் மொழியைத்தான் பயன்படுத்தி முன்னேற்றம் கண்டுள்ளார்களே தவிர, ஆங்கில மொழியைப் பயன்படுத்தி அல்ல. இந்த உணர்வு தமிழர்களுக்கும் வேண்டும். அடுத்தமுறை நீங்கள் பேருந்தில் பயணிக்கும் போது, "பாரீசுக்கு ஒரு டிக்கட்' என்று கேட்பதற்குப் பதில், "பாரிமுனைக்கு ஒரு பயணச்சீட்டு' என்று கேட்டுப் பாருங்கள். நடத்துனர் நிச்சயம் கொடுப்பார். அதேபோல், தானி (ஆட்டோ) திருவல்லிக்கேணிக்கு வருமா? என்று ஓட்டுனரிடம் கேட்டுப் பாருங்கள். முதலில் நீங்கள் கேலி செய்கிறீர்களோ என்று அவர் நினைத்தாலும், அவரும் புரிந்து கொள்வார் உங்களின் நல்ல தமிழின் இனிமையை. பயன்படுத்தினால்தானே தமிழின் இனிமை தெரியும்..'' என்றார் விஜய் பார்த்திபன்.

நன்றி:தினமணி கதிர்.

முடிக்காத கோலங்கள்

கனவு என்னும் கப்பலேறி
கற்பனைக் கடலினிலே
காததூரம் வந்து விட்டேன்
கேளீரே என் நண்பரே

நினைவு எனும் புயலடித்து
நீந்த முடியா ஆழத்தினில்
நிர்க்கதியாய் தவிக்க விட்டு
கனவுக் கப்பல் கவிழ்ந்ததம்மா

சொற்பநேர நிம்மதியும் என்
சொந்தமில்லை என்றேதான்
சொல்லாமல் சொல்லிற்று
சுயநலமிக்க காலக்கணிதம்

மூழ்குகின்ற பொழுதிலும்
முட்டி நிற்கும் ஆசைகள்
மூடனிவன் நெஞ்சினில்
முடிக்காத கோலங்கள்

நீர்க்குமிழி வாழ்வினிலே
நிலையென்று நம்பி மனிதன்
நிஜமுணரா வேளைகள்
நிகழ்கின்ற வேதங்கள்

-சக்திதாசன்
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பது பழமொழி. அதாவது நமது உடல் ஆரோக்கியமாக இருந்தால் நம் எந்த பணியையும் செய்ய முடியும்.

தூக்கம் என்பது உடலுக்கு மிக இன்றியமையாதது. உடலுக்கும், மனதிற்கும் முழுமையான ஓய்வை அளிக்கும் உன்னதமான ஒரு விஷயம்தான் தூக்கம்.

தினமும் 3 வேளை உண்ணும் உணவும், குறைந்தபட்சம் 6 மணி நேர தூக்கமும் ம‌னிதனு‌க்கு‌த் தேவைப்படுகிறது.

இரவில் அதிகமாக தூங்குபவர்களை விட குறைந்த நேரமே தூங்குபவர்களுக்குத்தான் உடல் பருமன் பிரச்சினை ஏற்படுவதாக சமீபத்தில் கனடா நாட்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் நடத்திய ஆய்வு கூறுகிறது.

குறைவாக சாப்பிடுவதும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும், நேரம் தவறி சாப்பிடுவதும் உடலுக்கு கேட்டை உண்டாக்கும். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உணவுகளை உண்ணும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும். ஏனோ தனோ என்று உண்ணாமல் உடலுக்கு ஏற்ற உணவுகளை மட்டும் அளவோடு உண்பதும் நல்லது.

சரி ஏன் நேரத்திற்கு தூங்க வேண்டும், அது என்ன 6 மணி நேரம் தூக்கம், ஏன் அதிகாலையில் எழுந்திரிக்க வேண்டும், நேர‌ம் தவறாம‌ல் ஏ‌ன் சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம் என்று விதண்டாவாதமாக கேள்வி எழுப்புபவர்களுக்கு கீழ்க்கண்ட விளக்கத்தை தந்துதான் ஆக வேண்டும்.

நமது உட‌லி‌ல் உ‌ள்ள ஒ‌வ்வொரு உறு‌ப்புகளு‌ம் ஒரு ‌சில ம‌ணி நேர‌‌த்‌தி‌ல்தா‌ன் த‌ங்களது ‌ப‌ணிகளை‌ச் செ‌ய்‌கி‌ன்றன. அ‌ந்த நேர‌த்‌தி‌ல் அத‌ற்கே‌ற்ற வகை‌யி‌ல் நமது உட‌ல் ஓ‌ய்வாக இரு‌க்க வே‌ண்டியது அவ‌சிய‌ம்

இரவு 9 மணி முதல் 11 மணி வரை : இந்த நேரம் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்திகள் வேலை செய்யும் நேரம். அதாவது நமது உடலில் உள்ள தேவையற்ற, அதிகப்படியான ரசாயனங்களை வெளியேற்றும் பணியைச் செய்யும். எனவே இந்த சமயத்தில் நாம் படுக்கைக்கு படுக்கச் சென்று விட வேண்டும். இல்லையெனில் அமைதியாக அமர்ந்து பாடல் கேட்பதும் நல்லது.

இந்த நேரத்தில் ஓய்வெடுக்காமல் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து விடுகிறது.

இரவு 11 மணி முதல் 1 மணி வரை : ஈரல் தனது வேலையைச் செய்யத் துவக்கும். மேலும், இந்த நேரம்தான் ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் நேரமாகும். இந்த நேரத்தில் விழித்திருக்க நேரிட்டால் ஈரல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

நள்ளிரவு 1 மணி முதல் 3 ம‌ணி வரை : இந்த நேரத்தில் கல்லீரல் தனது சுத்திகரிப்புப் பணியைச் செய்கிறது. இந்த நேரமும் மிகவும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்போம்.

அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை : இந்த நேரத்தில் நுரையீரல் தனது சுத்திகரிப்புப் பணியைச் செய்யும். எனவேதான் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும், இந்த நேரத்தில் அதிகமாக கஷ்டப்படுவார்கள். இருந்தாலும் அதிகாலையில் ஆ‌ழ்‌ந்து உற‌ங்‌கினாலே இருமல் இயற்கையாகவே சரியாகிவிடும் என்கிறது மருத்துவம்.

காலை 5 மணி முதல் 7 மணி வரை : இந்த நேரத்தில் பெருங்குடல் தனது சுத்திகரிப்புப் பணியைச் செய்கிறது. எனவே இந்த நேரத்தில் நமது வயிறு காலியாக இருப்பதோ அல்லது தண்ணீர் மட்டும் பருகி இருப்பதோ நல்லது.

காலை 7 மணி முதல் 9 மணி வரை : தற்போது சிறுகுடல் தனக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளும். எனவே இந்த நேரத்திற்குள்ளாக காலை உணவை முடித்திருக்க வேண்டியது அவசியம். ஆனால் தொடர்ந்து

காலை 6.30 மணிக்குள் காலை உணவை எடுத்துக் கொண்டால் குடல் நோய் தாக்கும்.அதே சமயம் 7.30 மணிக்குள் காலை உணவை சாப்பிட்டால் நாம் திடகாத்திரமாக வாழலாம்.

மேலும் காலை உணவை தவிர்க்கும் பலர் உள்ளனர். அவர்கள் அந்த பழக்கத்தை கைவிட்டு குறைந்தபட்சம் 9 முதல் 10 மணிக்குள் தங்களது காலை உணவை முடிக்க வேண்டும்.

தாமதமாக உறங்கி, காலையில் வெகு தாமதமாக எழுந்திரிப்பதால் நமது உடலில் இருந்து தேவையற்ற ரசாயனக் கழிவுகளை வெளியேற்றும் பணி வெகுவாக பாதிக்கிறது. மேலும்

இரவு முதல் காலை 4 மணி வரைதான் எலும்பு மஞ்சையில் ரத்தம் உற்பத்தி செய்யும் பணி நடக்கிறது. எனவே நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டியது நமது உடலின் ரத்த உற்பத்திக்கும் அவசியமாகிறது.

ஆரோ‌க்‌கிய‌த்துட‌ன் வா‌ழ்வத‌ற்கான பழ‌க்க வழ‌க்க‌ங்களை இ‌ன்‌றி‌ல் இரு‌ந்தே கடை‌பிடி‌க்க முயலுவோ‌ம்.

- நன்றி
வெப்துனியா

மனித வாழ்க்கைப் பாதையும்... போதையும்...

கத்திரி வெயில் சுட்டெரிக்கும் கோடையில் பெரும்பாலான மக்கள் விரும்பிப் பருகுவது குளிர் பானங்களைத் தான். ஆனால் 'குடி'மகன்களின் பாரம்பரிய விருப்பம் 'பீர்'... இதன் பேரைக் கேட்டாலே நமது உடலில் மெல்லிய போதை தெரியும் என்று சில 'குடி'மகன்கள் கருத்து தெரிவித்ததை என்னால் மறுக்க முடியவில்லை என்பதையும் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறேன்.
'பீர்' குடிமகன்களின் பாரம்பரிய விருப்பம் என்ற மேற்கண்ட வாக்கியத்தில், அந்தப் பாரம்பரியம் என்ற சொல்லை நான் பயன்படுத்தியதற்கு காரணம் உள்ளது. மெல்லிய போதை தரும் பீர் போன்ற வஸ்துகள் மனிதர்களின் வாழ்க்கையுடன் நீ...ண்...ட... நெடுங்காலமாக தொடர்புடைவை என்பதற்கு இந்த கட்டுரையில் ஒரு முக்கிய உதாரணத்தையும் மேற்கோள் காட்டியுள்ளேன்.
கிறிஸ்து பிறப்பதற்கு முன் (அதாங்க BC) 3200ம் ஆண்டிலேயே உற்சாக பானம் குடிக்கும் வழக்கம், உலகின் ஒரு சில நாடுகளில் நடைமுறையில் இருந்துள்ளதாக சமீபத்தில் கிடைத்த அகழ்வாராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
சரி... உங்கள் வீட்டில் பூலோக உருண்டை அல்லது உலக வரைபடம் இருந்தால் அதில் மெஸபடோனியா நாட்டை கண்டுபிடித்து அங்கே செல்லுங்கள்... என்ன கிடைக்கவில்லையா... தற்போதைய ஈராக் தான் அப்போதைய மெஸபடோனியா... ஒ.கே கண்டுபிடித்து விட்டீர்களா?
சமீபத்தில் ஈராக்கில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பாட்டில் மூடிகளில் தற்போதுள்ள பன்னாட்டு உற்சாக பான கம்பெனிகள் பயன்படுத்தும் குறியீடுகளுக்கு (அதாங்க லோகோ) சவால் விடும் வகையில் சில சின்னங்களை கண்டுபிடித்துள்ளனர்.
இதிலிருந்து அந்தக் காலத்திலேயே உற்சாக பானங்களை புட்டியில் அடைத்து... இந்த மூடிகளை கொண்டு மூடி, அருகில் உள்ள பகுதிகளுக்கு மெஸபடோனிய மக்கள் விற்பனை செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை மேற்கொண்ட லண்டனில் உள்ள பல்கலைக்கழக கல்லூரியை சேர்ந்த டாக்டர் டேவிட் வென்குரோவ் கூறுகையில், "ஈராக்கின் (அப்போதைய மெஸபடோனியா) தெற்கு பகுதியில் உள்ள உருக் (Uruk) பகுதியில் 5,000 ஆண்டுகளுக்கு முன் சுமார் 20 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட களிமண் மூடி போன்ற பொருட்கள் தான் உலகளவில் முதன்முறையாக ஒரே மாதிரி தயாரிக்கப்பட்ட (அதாவது தற்போது லட்சக்கணக்கில் தயாரிக்கப்படும் உற்சாக பான பாட்டிலின் மூடிகள் போல்) பிராண்டட் பொருட்கள்," என்று கூறியுள்ளார்.
கற்களில் சின்னங்களை (லோகோ) தயார் செய்து களிமண்ணைக் கொண்டு மூடிகள் தயாரித்து அதில் லோகோவை பதித்து உற்சாக பானங்களை களிமண் பொருட்களில் (கிட்டத்தட்ட தற்போதைய கண்ணாடி பாட்டில் போல் வடிவம் கொண்டவை) விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. (இப்போதுள்ள பாட்டில் மூடிகளை திறக்க 'ஓப்பனர்' பயன்படுகிறது... அப்போது எப்படி என்பது மெஸபடோனிய மக்களுக்கே வெளிச்சம்...)
அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இதுபோன்ற களிமண் மூடிகளில் உள்ள சின்னங்களில், மக்கள் ஒன்றாகக் கூடி உற்சாக பானங்களை பருகுவது போலவும், அவர்களில் வளர்ப்புப் பிராணிகள் அருகில் அமர்ந்துள்ளது போலவும் வரையப்பட்டுள்ளது. (தற்போது திறந்தவெளி பாரில் நடக்கும் கேளிக்கை விருந்து போல...). இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், உற்சாக பானங்களை அவர்கள் 'ஸ்டிரா' போன்ற பொருட்களைப் பயன்படுத்தி உறிஞ்சியதுதான்
இதே போன்ற பிராண்டட் களிமண் மூடிகளைப் பயன்படுத்தி அப்பகுதி மக்கள் பல்வேறு வகை உணவுப் பொருட்கள், எண்ணெய் வகைகள் மற்றும் லேசாக போதையேற்றும் வஸ்துகளை அருகே உள்ள பகுதிகளிலும் விற்று வருவாய் ஈட்டியுள்ளனராம். அந்தந்த பொருட்களில் உள்ள ஓவியங்கள்/ சின்னத்தைக் கொண்டே அவற்றின் தரத்தை கண்டறிய முடியும் என்பது கூடுதல் தகவல்.
காலங்கள் மாறினாலும் உற்சாக பானம் மீதான மனிதனின் ஆசை மட்டும் மாறவே இல்லை. இதற்கு இந்த செய்தியே நல்ல உதாரணம்....
" தமிழகத்தில் பீர் தட்டுபாடு"....
-நன்றி
ஆர்.இராஜசேகர்

தியானத்திற்கும் ஒரு முனைப்பிற்கும் உள்ள வேறுபாடு என்ன?

அ‌ன்னை : தியானம் முற்றிலும் ஒரு மனச் செயல், மனோமய ஜீவனுக்கு மட்டுமே அதில் ஈடுபாடு. தியானிக்கும்போதே ஒருவன் ஒருமுனைப்படலாம், ஆனால் அது மனத்தின் ஒரு முனைப்பு; அதனால் ஒருவன் மோனம் பெறலாம், ஆனால் அது மனத்தின் மோனமாக மட்டுமே இருக்கும்; ஜீவனின் மற்றப் பாகங்கள் தியானத்திற்கு இடையூறு செய்யாதபடி செயலற்ற, அசைவற்ற நிலையில் வைக்கப்படுகின்றன. நீ ஒரு நாளில் இருபது மணி நேம் தியானம் செய்யலாம், ஆனாலும் மீதி நாலு மணி நேரத்தில் நீ முற்றிலும் சாதாரண மனிதனாகவே இருப்பாய். ஏனெனில் உன்னுடைய மனம் மட்டுமே தியானத்தில் ஈடுபட்டிருந்தது - ஜீவனின் மீதிப் பகுதிகள், பிராணனும் உடலுணர்வும், தியானத்திற்கு இடையூறு செய்யாத அளவில் அடக்கி வைக்கப்பட்டிருந்தன. தியானத்தில், ஜீவனின் மற்றப் பகுதிகளுக்கு நேரடியாக ஒன்றும் செய்யப்படவில்லை.

மறைமுகமாக தியானத்தின் பயன் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால்.... தியானஞ் செய்வதில் விசேஷத் திறமை உடையவர்களைப் பார்த்திருக்கிறேன்; தியானத்தில் இல்லாதபோது அவர்கள் சர்வ சாதாரணமான மனிதர்களாகவே இருந்தார்கள், சில சமயங்களில் அவர்கள் மோசமான சுபாவம் உடையவர்களாகக் கூட இருந்தார்கள், அவர்களுடைய தியானத்திற்கு இடையூறு உண்டாக்கிவிட்டால் அவர்களுக்குக் கடுஞ்சினம் உண்டாகிவிடும். ஏனெனில் அவர்கள் தங்களுடைய மனத்தை மட்டுமே அடக்கக் கற்றிந்தார்கள். ஜீவனின் மற்றப் பாகங்களை ஆளக் கற்கவில்லை.

தியானத்தைவிட ஒரு முனைப்பு அதிக சுறுசுறுப்பான நிலை. நீ மனத்தளவில், பிராணனளவில், சைத்திய அளவில், உடலளவில் ஒருமுனைப்படலாம், ஒருங்கிணைந்த முறையிலும் (integrally) ஒருமுனைப்படலாம். ஒருமுனைப்பு, ஒரு முனையில் உணர்வை ஒன்றாகத் திரட்டுவது, அது தியானத்தைவிடக் கடினமானது. நீ உன் உணர்வின் அல்லது ஜீவனின் ஒரு பகுதியை அவ்வாறு குவிக்கலாம் அல்லது உனது உணர்வு முழுவதையோ அதன் துண்டுகளையோ ஒன்றாகத் திரட்டலாம்; அதாவது உன்னுடைய ஒரு முனைப்பு அரைகுறையானதாகவோ, முழுமையாக அல்லது ஒருங்கிணைந்ததாகவோ இருக்கலாம்; அதன் பயனும் அதற்கேற்றபடி வேறுபடும்.

உன்னிடம் ஒரு முனைப்புத் திறன் இருக்குமானால் உனது தியானம் அதிகக் கவர்ச்சியுடையதாகவும் எளிதாகவும் இருக்கும். ஆனால் ஒருவன் ஒருமுனைப்படாமல் தியானம் செய்யலாம். சிலர் தியானிக்கும் போது ஒரு கருத்துத் தொடரைப் பின்பற்றிச் செல்வார்கள் - அது ஒரு முனைப்பு அன்று, தியானம்

ந‌ன்‌றி : அ‌ன்னை‌யி‌ன் நூ‌ல்
தொகு‌திகே‌ள்‌விகளு‌ம் ப‌தி‌ல்களு‌ம்

சமூக அ‌ந்த‌ஸ்‌தி‌ற்காக (லேசாக) குடி‌த்தாலு‌ம் ‌நினைவா‌ற்ற‌ல் பா‌தி‌க்கு‌ம்

சமூக அ‌ந்த‌ஸ்‌தி‌ற்காக ‘சுமாராக’ குடி‌ப்பவ‌ர்களு‌க்கு‌ம் ப‌த்து ஆ‌ண்டுகளு‌க்கு ‌பி‌ன்ன‌ர் மூளை வள‌ர்‌ச்‌சி பா‌தி‌ப்படையு‌ம் எ‌ன்று ஆ‌ஸ்‌திரே‌லிய அமை‌ப்பு எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளது. உதாரணமாக 35 வயதான ஒருவ‌ர் தன‌க்கு ஒது‌க்க‌ப்ப‌ட்ட ப‌ணியை‌த் த‌விர வேறு ப‌ணியை மே‌ற்கொ‌ள்ள இயலாத ‌நிலை உருவாகு‌ம் எ‌ன்று‌ம் அ‌ந்த அமை‌ப்பு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

ஆ‌‌ஸ்‌திரே‌லியாவை‌ப் பொறு‌த்தம‌ட்டி‌ல் த‌ற்போது அ‌ங்கு 20 இல‌ட்ச‌த்து‌க்கு‌ம் அ‌திகமானோ‌ர் மூளை மு‌ற்‌றிலு‌ம் பா‌தி‌க்க‌ப்படு‌ம் ஆப‌த்‌தி‌ல் இரு‌ப்பதாக, குடி‌ப்பதா‌ல் மூளை வள‌ர்‌ச்‌சி பா‌தி‌க்க‌ப் ப‌ட்வ‌ர்களு‌க்கு ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்கு‌ம் அ‌ர்பையா‌ஸ் அமை‌ப்‌பி‌ன் தலைவரு‌ம், லா டுரோ‌ஃ‌ப்‌ஸ் மனோ‌த்த‌த்துவ ‌சி‌கி‌ச்சை மைய‌த்‌தி‌ன் இய‌க்குநருமான மா‌ர்‌ட்டி‌ன் ஜே‌க்ஸ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்த பா‌தி‌ப்பு‌க்கு உ‌ள்ளானவ‌ர்களு‌க்கு ‌சி‌கி‌ச்சை வழ‌ங்க மரு‌த்துவ முகா‌ம்களை நட‌த்த அரசு அ‌திக ‌நி‌தி ஒது‌க்குவதுட‌ன், உ‌ற்சாக பான‌ங்க‌ளி‌ன் ‌விள‌ம்பர‌ங்களை குறை‌க்க அரசு நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர். மேலு‌ம் மூளை பா‌தி‌ப்‌பி‌ன் ஆர‌ம்ப ‌நிலைக‌ள், வேலை‌ப்பளு காரணமாக ஏ‌ற்படு‌ம் எ‌ரி‌ச்ச‌ல், கோப‌ம் ஆ‌கியவையாகு‌ம்.

நாளொ‌ன்று‌க்கு 6 சுமால் உ‌ற்சாக பான‌ம் (!) அரு‌ந்துபவராக இரு‌ந்தா‌ல், உடனடியாக மரு‌த்துவரை அணு‌கி உ‌ங்க‌ள் ‌நினைவா‌ற்றலை சோதனை செ‌ய்து பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். ஒருவேளை குடி‌ப்பதை ‌நீ‌ங்க‌ள் ‌நிறு‌த்‌தி‌வி‌ட்டா‌ல் இ‌ந்த ஆப‌த்‌தி‌லிரு‌ந்து ‌நீ‌ங்க‌ள் குணமடைவது எ‌‌ளிமையானதாக இரு‌க்கு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர். ஆ‌ல்கஹா‌ல் நமது உட‌லி‌ல் நே‌ரிடையாக ‌தீ‌ங்கை ‌விளை‌வி‌க்கு‌ம் ஆ‌ற்ற‌ல் கொ‌ண்டது. எ‌ப்படியெ‌ன்றா‌ல் மூளை‌யி‌ல் உ‌ள்ள வெ‌ள்ளை அணு‌க்க‌ளை எ‌ரி‌த்து‌விடு‌கிறது

அ‌ண்மை‌க் காலமாக ந‌ம்நா‌ட்டி‌ல் ஏ‌ற்ப‌‌ட்டு‌ள்ள ப‌ல்வேறு‌த் துறைக‌ளி‌ன் வள‌ர்‌ச்‌சி காரணமாக பண‌ப்புழ‌க்க‌ம் ஒரு ‌சில ம‌ட்ட‌த்‌தி‌ல் அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. இதனா‌ல் கலா‌ச்சார ‌சீ‌ர்கேடுக‌ள் அ‌திக‌ரி‌க்க‌த் தொட‌ங்‌கியு‌ள்ளன. இள‌ம் வய‌திலேயே அ‌திக வருவா‌ய் ஈ‌ட்டுபவ‌ர்க‌ள் எ‌ளி‌தி‌ல் புகை ‌பிடி‌த்த‌ல், உ‌ற்சாகபான‌ம் அரு‌ந்துத‌ல், போதை பொரு‌ட்களு‌க்கு அடிமையா‌கி வருவது அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது. இ‌தி‌ல் ஆ‌ண், பெ‌ண் அ‌ன்ற பாகுபாடு இ‌‌ல்லாத ‌நிலை ‌நிலவு‌கிறது.

சமூக அ‌ந்த‌ஸ்‌த்து‌க்காக குடி‌க்‌கிறே‌ன் எ‌ன்று கூ‌றி‌க் கொ‌ண்டு வருபவ‌ர்க‌ள் எ‌ச்ச‌ரி‌க்கையாக நட‌க்க முய‌ற்‌‌சி செ‌ய்யு‌ங்க‌ள். இ‌ல்லையெ‌ன்றா‌ல் வாழவே‌ண்டிய வய‌தி‌ல் வா‌ழ்‌க்கையை‌த் தொலை‌த்து‌வி‌ட்டு த‌னிமரமாக வாழ வே‌ண்டிய ‌நிலை உருவாகு‌ம். ‌சி‌ந்‌தி‌த்து செய‌ல்படு இளைய சமுதாயமே எ‌ன்‌கிறது மரு‌த்துவ ஆ‌ய்வு முடிவுக‌ள்.

- நன்றி
வெப்துனியா

வாழிய வாலி புகழ்!

கவிஞர் வாலி
கற்பனைத் திறனில் இவர் ஒர் ஆழி
இன்னும் நூறாண்டு வாழி
நீயும்தான் வாழ்த்தேன் தோழி

படித்தோம் நாம் இராமயணத்து
வல்லவன் வாலி அன்று
மறைந்துதான் தாக்கினான்
காவியத் தலைவன் இராமன் அன்று

பார்க்கிறோம் இன்று நாம் கவிஞர் வாலி
மறைந்தோ மறையாமலோ
தெரிந்தோ தெரியாமலோ
குறிவைத்தோ வைக்காமலோ
யாரும் தாக்க முடியுமோ இவரை?
காலம் தேய்க்க முடியுமா இவர் புகழை?

- சினிமா விரும்பி

துளிகள்

இரா. ‌சி‌‌ந்த‌ன் எ‌ன்ற இள‌ம் க‌விஞ‌ன் வெ‌ளி‌யி‌ட்ட நானாகவே... எ‌ன்ற பு‌த்தக‌த்‌தி‌ல் இரு‌ந்து இரா. ‌சி‌‌ந்த‌ன் எ‌ன்ற இள‌ம் க‌விஞ‌ன் வெ‌ளி‌யி‌ட்ட நானாகவே... எ‌ன்ற பு‌த்தக‌த்‌தி‌ல் இரு‌ந்து

வாழ்க்கை கடலுக்குள்
உயிர்த்துளியாய் விழுந்தோம்

அழகு மீன்களை
முத்துக்களை
காலைச் சூரியனை
நினைத்துக் கொண்டே..

ஆனால்
கால ஓட்டத்தில்
சாக்கடையாய்ப்
போனோம்

சிகரெட்...

இணையம் உலகை ஆளத் துவங்கியபின் இணையத்தின் மூலம் சிகரெட் வர்த்தகம் என்பது வியக்கத்தக்கவகையில் ஒருபுறம் வளர்ந்து வருகிறது.

http://www.who.int/tobacco/en/atlas23.pdf

இந்தப் பக்கத்தைச் சுட்டி இணைய வர்த்தகத்தில் எங்கே விலை மலிவாக, தரமுள்ள சிகரெட்டை வாங்கலாம் என்பதை தீர்மானித்து வர்த்தகம் செய்யலாம், இணைய உலகில் எந்த நாட்டில் விற்பனையாளர்கள்? எந்த நாட்டில் வாங்குபவர்கள் இருக்கிறார்கள் என்பதெல்லாம் சிகரெட் வர்த்த்கத்தை இன்னும் ஒரு படி மேலே கொண்டு செல்கிறது.

அமெரிக்காவில் மட்டும் 2000 இணைய வர்த்தகர்கள் இருக்கிறார்கள். இதற்கென்றே 88 இணைய்தளங்கள் இருக்கின்றன. பீடி விற்கும் தளங்கள் 8 இருக்கிறது என்பதும் இங்கே கவனிக்க வேண்டும். இணையம் மூலம் சிகரெட் வாங்குவதில் 50 விழுக்காட்டுக்கு மேல் வாலிபர்களும் வாலிபிகளும் இருப்பது அமெரிக்காவில்!

இணையம் மூலம் சிகரெட்டுக்கு ஆடர் செய்துவிட்டு வாங்காமல் தேங்கிய சிகரெட் மட்டும் இங்கிலாந்து சுங்கவரித்துறையினர் அழித்த சிகரெட்டுகள் 10மில்லியன்(10,000,000)கள்! இணையம் மூலம் சிகரெட் வாங்குவது எதோ இன்று நேற்று துவங்கியது அல்ல 1990களிலேயே துவங்கிவிட்டதாக இன்னுமொரு தகவல் அதிர்ந்து தெரிவிக்கிறது.

வியாதிகள் பலவிதம்....

நுரையீரல் வியாதி, நுரையீரல் புற்று நோய்(85சதம் குணப்படுத்த இயலாதது என்பது குறிப்பிடத்தக்கது),மூக்கடைப்பு, மூக்கு, தொண்டை சிவந்தும் தடித்தும் ஏற்படும் நோய் உட்பட பெயர் வாயில் நுழையா நோய்கள் 80முதல் 90 சதம் நோய் புகையுறிஞ்சுவதால் மட்டுமே வருகிறது.

சிகரெட் புகைப்பவர்களில் முப்பது விழுக்காடு இதய நோய் பாதிப்பால் விழுந்து அல்லலுறுகின்றனர். சிகரெட்டில் உள்ள கார்பன் மோனாக்சைடு என்ற நச்சுதான் இதற்கு முழு முதற்காரணம். உறிஞ்சுகின்ற புகைஇதயத்திலிருந்து இரத்தத்தை உடலெங்கும் எடுத்துச் செல்கிற இரத்தக் குழாய்ச் சுவரின் உட்பகுதியை தடிமனாக்கிவிடுகிறது. இதனால் இரத்த ஓட்டம் சீராகச் சென்றடைய முடியாமற் பிரளயத்தை ஏற்படுத்திமரணத்தின் அழைப்பு மணியை அடிநாதமாய் ஒலிக்க வைக்கின்றது.

நிகோடின் என்ற நச்சு, இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, பிராணவாயுத் தகராறு என்று மெல்லக் கொல்லுகின்ற பேராபத்துக்கு அடித்தளமிடுகிறது.

புகையுறிஞ்சல் அதிகரிக்கும்போது நெஞ்சுவலியும் திடீர் மாரடைப்பும் ஏற்படுகின்ற கொடூரம் நிகழும்.

இரத்தம் உறை நிலை (Blood clots) என்பது புகைப் பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்களுக்கு எளிதில் ஏற்படுகின்ற வாய்ப்பு அதிகமுண்டு.

புற்றுநோய்...

ஒருவர் புகைப்பதால்உதடு, நாக்கு, வாய், உமிழ் நீர்ச் சுரப்பிகள்(salivary glands), மூச்சுக்குழலின் மேற்பகுதி(larynx), தொண்டையிலிருந்து வயிற்றுக்கு உணவை எடுத்துச் செல்லும் குழாய் (esophagus)மற்றும் அதன் நடு இறுதிப் பகுதி புற்று நோய் தோன்றும் பகுதிகளாகும்.வயிற்றுப் புற்று நோய், சிறுநீரகப் புற்றுநோய், அறிகுறி தென்பட்டாலே அது புகையுறிஞ்சியால் வந்த வினை என்று தெரிந்துகொள்ளலாம். புகையுறிஞ்சலுக்கும் லுக்கேமியா என்ற வியாதிக்கும் மிகுந்த தொடர்புள்ளது.

பெண்களுக்கு...

புகைப்பழக்கமில்லாத பெண்ணை விட, புகையுறிஞ்சும் பெண்ணுக்கு 5 வருடங்களுக்கு முன்பாகவே மாதவிலக்குநின்றுவிடும் அபாயம் ஏற்படும். புகையுறிஞ்சும் பழக்கமுள்ள பெண்களுக்கு நிகோடின் நச்சு ஹார்மோன்கள்சுரப்பிகளைச் செயலிழக்க வைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது. எலும்பு உறுதியற்ற அல்லது எளிதில்உடைந்துவிடுகின்ற தனமையையும் (osteoporosis) ஏற்படுத்தும்.

கொடிது கொடிதுஅடுத்தவர்
ஊதும் புகையைச் சுவாசிப்பது....

நான் புகைப்பிடிக்கும் பழக்கமில்லதவன் என்று மார்தட்டிக் கொள்ளுபவர்களே! நீங்கள் கூட புகைப்பிடிப்பவரிடமிருந்து விலகி இருக்காவிடில் பிறர் ஊதித்தள்ளும் புகையை நீங்கள் சுவாசிக்க நேரும்சந்தர்ப்பங்கள் அதிகமானால் உங்களையும் நோய் நெருங்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாகும் என்பதை நீங்கள் அறிந்துகொள்வது காலத்தின் கட்டாயம்.

புகைப்பழக்கமில்லாத, ஆனால் பிறர் விடும் புகையை உள்ளிழுத்துக் கொண்டவர்களைச் சாவு அரவணைத்துக் கொண்டோரின் எண்ணிக்கை வருடந்தோறும் அமெரிக்காவில் 73,000 பேர்! இதில் மிக மோசமானகார்டியோவாஸ்குலர் நோய் தாக்கியிருந்ததாக அறியப்பட்டோர் மட்டும் 57,000 பேர்!!

புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு எவ்வளவு கெடுதல்களை ஏற்படுத்துமோ, அதைவிடக் கொடிது அவர்கள்ஊதித்தள்ளும் புகையை சுவாசிப்பதும் உறிஞ்சுவதும் ஆகும்.

வீட்டில் புகையை ஊதித்தள்ளுவதால், கைக்குழந்தைகளும், சிறார்களும் அந்தப் புகையால் அவர்களின் இளந் திசுக்களும் சீர்கெடுவதோடு, அவர்களும் பலவிதமான நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடும்.

ஒவ்வொருவருடமும் அடுத்தவர் ஊதித்தள்ளும் புகைக்குப் பலியாகிறவர்கள் நியூ மெக்சிக்கோவில் மட்டும் 2,700பேர் என்பது அமெரிக்க மாநிலங்களிலேயே மிக அதிகமாகும்!

வல்லமை படைத்த இனிய விரோதி....

நிகோடின் நஞ்சு வயோதிகத்தை வரவழைக்கும் வித்தைக்காரன். இரவுத் தூக்கத்தை குறைக்கும் மாபெரும் அரக்கன்இந்த நிகோடின். உண்ட உணவு செரித்துவிடக்கூடாது என்பதில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ளும் சுயநலவாதி! அடுத்தவர் உறக்கத்தை உண்டு இல்லையென்று செய்துவிடும் குறட்டையைப் பரிசாகத் தந்திடும் இனிய விரோதி!

புகை உங்கள் இனிய குரலை கரடுமுரடாக மாற்றிச் சாகசம் செய்ய வைக்கும்! அதிலும் பெண்கள் குரலை ஆண்குரலுக்கு இணையாக மாற்றி அற்புதச் சாதனை படைக்க வல்லது! புகைப்பிடிக்கும் பெண்களுக்கு,புகைபிடிக்காதவர்களை விட 7 மடங்கு முகத்தில் முடி வளருகின்ற அரிய வாய்ப்பை வழங்கும் வல்லமை படைத்தது.

இன்றைக்கு, புகையுறிஞ்சுவதும், புகையிலையை மென்று உள்ளே தள்ளுவதும் எவ்வளவு உயிராபத்து என்று அறிந்துகொள்ளுகின்ற வாய்ப்பை உலகில் அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அளப்பறிய பணியாற்றி வருவதைஅறியும் போது மனதிற்கு ஆறுதலளிப்பதாக இருக்கின்றது.

வெல்ல உயிரை வெல்லத் துடிக்கும்.....

ஆண்டொன்றுக்கு 42,,000 உயிர்ப் பலிகளை நிகழ்த்தும் எமனாக சிகரெட் அமெரிக்காவில் உள்ளது என்பது எந்தக் கலப்புமில்லா உண்மை. அதாவது ஒவ்வொருநாளும் 1,200 பேர் பலியாகின்றனர்.புகைப்பிடிப்பவர்களிடம் ஒரு கேள்வியை முன் வைக்கலாம். ஒவ்வொரு நாளும் விமான விபத்தில் 1,200 பேர்விழுந்து செத்துப் போகிறார்கள் என்றால் யாராவது விமானப் பயணத்துக்கு உடன்படுவார்களா?

அதைப் பிடிப்பதால் மரணம் நிச்சயம் என்று
நிர்ணயிக்கப்பட்ட நிதர்சனமான உண்மை!

பிடித்ததைப் பிடிக்காமல் செய்யுங்கள்; உங்களை உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டுள்ளதை கண்காணாத தூரத்திற்கு தூக்கி வீசுங்கள்; நல்ல காற்றைச் சுவாசிக்க உங்கள் சுவாசப் பைகளுக்கு சுதந்திரம் கொடுங்கள்.

உங்கள் கை விரலிடுக்கில் தப்பித் தவறி நுழைந்துவிடாமற் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு; புகை வலையங்களுக்குள்சிக்கிக் கொள்வதில்லை என்று நீங்கள் முடிவெடுத்துவிட்டால் உங்கள் வெல்ல உயிரை வெல்லத் துடிக்கும்எமனிடமிருந்து விலகிவிட்டீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கை வாழ்வதற்கே, வீழ்வதற்கல்ல என்று நிரூபியுங்கள்.

- ஆல்பர்ட்

ஆசை மகனின் அன்புக் கடிதம்

அன்புள்ள அப்பாவுக்கு,
ஆசை மகனின் அன்புக் கடிதம்.

இங்கு குளிரூட்டப்பட்ட அறை
கணிப்பொறி பணி எனினும்
நீ உழுத கரிசல்காட்டின்
மணமின்னும் மறக்கவில்லை.

ஏர்பிடித்துக் காய்த்துப்போன
உன் கரங்கள்இன்னும்
என் கைப்பிடியில்
என்னை வழிநடத்தி..

வெயில் மழையில் நீ நனைந்த காட்சிகள்
இன்னும் பொம்மலாட்டங்களாய்
என் கடைக்கண்ணில்..

நான் ஏற முதுகு தந்தாய்
வறுமையென்னும் கிணற்றிலிருந்து!
நான் எங்கும் நகர்வதில்லை,
உன் கைபற்றாமல்..

கூலிகளாய் தொடர்ந்துவந்த
தலைமுறைகள்.
மாறியது என்னில்,
மாற்றியவன் நீ.

எனக்குத் தெரியும்!
உன் ஒருவேளை கஞ்சியும்
என் பள்ளி நோட்டுகள்.

விடைகொடு அப்பா,
ஏருக்கும் கலப்பைக்கும்.
புறப்படு, இனி உலகம் சுற்றலாம்.

அறுவடைகள் ஆனந்தம்,
உந்தன் மொழிகளில்
இன்று அறுவடைக்குத்
தயாராய்நீ வளர்த்த பயிர்!

நிரப்பி வை,
மகிழ்ச்சி மட்டும்,
களம் முழுவதும்.

பட்டணத்தின் பகட்டுக்கே
விழிவிரிக்கும் உன்னை,
நான் அழைத்துச் செல்கிறேன்,
உலகின் அதிசயம் காண!

வானில் புள்ளியாய்
நீ கண்ட விமானங்கள்
உனை ஏற்றிப் பறக்கையிலே
நீ மகிழ ரசிக்க வேண்டும்.

கண்காணா தெய்வத்திற்கு
கன்னங்கள் கிழிக்கின்றான்!
கண்முன்னே தெய்வம்,
செருப்பாய் நான் ஆனால் என்ன?

எப்பொழுதும் கேட்டிருப்பேன்,
நீ சொல்வாய்
"காணி நிலம் உழுகாமல்
தின்ன சோறு செரிப்பதில்லை"

இப்பொழுது சொல்கிறேன்,
உனை கூட்டிப் பறக்காமல்
நான் சோறு தின்பதில்லை!

நட்புடன்,
கோகுலன்.

கடல் கடந்து ஒரு கண்ணீர் மடல்

கடல் கடந்து ஒரு கண்ணீர் மடல்
(இது சீத‌னக் கொடுமையால் க‌ற்பை இழ‌ந்து த‌விக்கும் ஏழைக் கும‌ரின் க‌ண்னீர்கடிதம்)

என் அன்பான‌ குடும்ப‌த்திற்கு..அஸ்ஸ‌லாமுஅலைக்கும்(வ‌ர‌ஹ்)த‌ம்பி! உம்மா! நீங்க‌ள் எப்ப‌டி? நான் ந‌ல்ல‌சுக‌ம்.நீங்க‌லெல்லாம் சுக‌த்தோடு வாழ‌ நான் அல்லாஹ்விட‌ம் பிரார்த்திற்கின்றேன்.

நான்குவைத்திற்கு வந்து சுமார் எட்டு மாதங்களாகின்றது. என்னால் இங்கு வாழ‌முடியாதுள்ள‌து. என்னை மிருக‌த்தை விட‌க் கேவல‌மாக‌வே ந‌டாத்துகின்றார்க‌ள்.என‌து முத‌லாலி ஒரு காட்டு மிராண்டி. என்னை ப‌ல‌ முறை த‌காத‌ உற‌வுக்குவ‌லுக்க‌ட்டாய‌மாக அழைத்து அனுப‌வித்துவிட்டான். ஒரு நாளைக்கு ப‌ல‌ பெண்க‌ளும்ஆண்க‌ளும் செய்யும் வேலைக‌ளை என‌க்கு ம‌ட்டும் த‌ருகின்றார்க‌ள். நான்வேலைக்குச் சென்றிருக்கும் இட‌த்தில் வ‌ய‌து போன‌ ஒரு பைத்திய‌ம் பிடித்த‌ஒருவ‌ன் இருக்கின்றான். என‌து ஆடைக‌ளையும் பொருட்க‌ளையும் நான் க‌வ‌னிக்காம‌ல்இருந்தால் நெருப்பால் எரித்துவிடுகின்றான். ஒவ்வெரு நாளும் துன்ப‌த்தோடுதான்என‌து வாழ்வை இங்கு க‌ழிக்கின்றேன்.

உம்மா! ஏன் என்னை வெளிநாடு வெளிநாடு என்று அனுப்பி வைத்தீர்க‌ள்? இங்குந‌ர‌க‌த்தையே நான் காணுகின்றேன். உம்மா! ஊரில் இருக்கும்போது என‌க்குத் தொழுகைஎப்போதும் த‌வ‌றுவதில்லை. உங்களுக்குத் தெரியும். ஆனால் நான் இங்கு ஒருவ‌க்துக் கூட‌த் தொழ‌ என‌க்கு அனும‌தி இல்லை.

ஒரு நாள் உங்க‌ளோடும் த‌ம்பிமார்க‌ளோடும் பேசுவ‌த‌ற்கு அர‌பியின் வீட்டு போனைநான் அழுத்திய‌ போது என‌து எஜ‌மானி என்னைக் க‌ண்டுவிட்டாள். உட‌னே என‌க்குப்ப‌ய‌ங்க‌ர‌மாக‌ அடித்து விட்டு சிறிதாக‌ துவார‌முள்ள‌ ஒரு ரூமுக்குள் என்னைக்க‌ட்டி வைத்தாள். சுமார் ஒரு இர‌வும் இர‌ண்டு ப‌க‌ல்க‌ளும் அந்த‌ ரூமுக்குள்நான் எவ்வித‌ உண‌வோ குடிநீரோ இன்றித் த‌வித்துக் கிட‌ந்தேன்.அப்போதுத‌ற்கொலையாவ‌து செய்து கொண்டால் என்ன‌ என்ற‌ சிந்த‌னைகூட‌ வ‌ந்த‌து. உம்மா!பிற‌கு உங்க‌ள‌து முக‌ங்க‌ள் என‌து ஞாப‌க‌த்திற்கு வ‌ந்த‌வுட‌ன் அதைநிறுத்திக்கொண்டேன்.

நான் இவ்வ‌ள‌வு மிருக‌த்த‌ன‌மாக‌ நடாத்த‌ப்ப‌டுவ‌து உங்க‌ளுக்கெல்லாம் வேத‌னைஅளிக்கும். ஆனால் என்னைப் போன்று மோச‌மாக‌ எத்த‌னையோ கும‌ருக‌ள் இங்குஅர‌பிக‌ளால் ந‌டாத்த‌ப்ப‌டுவ‌து உங்க‌ளுக்குத் தெரியாது.

உம்மா! என‌து கூட்டாளி பெள‌சியாவுக்கு போன‌ மாத‌ம் திருமண‌ம் ந‌ட‌ந்த‌தாக‌இங்கு ஒரு ட்ரைவ‌ர் சொன்னார். அல்ஹ‌ம்துலில்லாஹ். என‌க்கு இப்போது வ‌ய‌துஇருப‌த்தி எட்டு. நான் இங்கு வ‌ந்த‌தே என‌து திரும‌ண‌த்திற்கு வீடுக‌ட்ட‌த்தான். உங்களுக்குத் தெரியும்.

உம்மா! நான் ஒரு முடிவெடுத்துள்ளேன். என‌க்கு இனிமேல் திருமண‌ம் வேண்டாம்.என‌க்கு நீங்க‌ள் எந்த‌ ஆம்பிளையையும் திரும‌ண‌ம் பேச‌ வேண்டாம். ம‌ரியாதையும்மார்க்க‌மும் உள்ள‌ யாராவ‌து முன் வ‌ந்து வீடு காணி கைக்கூலி இல்லாம‌ல் என்னைமுடிக்க‌ வ‌ந்தால் அவ‌ரோடு வாழ‌ நான் விரும்புகின்றேன். இல்லாவிட்டால் நான்இப்ப‌டியே வாழ்ந்து கொள்கின்றேன்.

உம்மா! என‌து த‌ம்பிமார்க‌ளுக்கு திரும‌ண‌ம் செய்யும் போது யாரிட‌த்திலும் வீடோசொத்துக்க‌ளோ வாங்காதீர்க‌ள். அக்கொடுமையை நான் அனுப‌வித்துக் கொண்டுதான்இத‌னைக் கூறுகின்றேன்.

அல்லாஹ்வின் அச்சமில்லாத கோழைகளே பெண்களிட‌த்தில் வீடுவாக‌ன‌ம் சொத்துக்க‌ளை வாங்குவார்க‌ள். நம்ம‌ட‌ த‌ம்பிமார்க‌ளை அவ்வாறான‌‌ஆண்க‌ளாக‌ ஆக்கிவிடாதீர்கள்.

சீத‌ன‌க்கொடுமையால் இன்று முஸ்லிம் கும‌ருக‌ள் ப‌டும் க‌ஷ்ட‌ங்க‌ளை ஏன் உம்மாந‌ம்ம‌ட‌ உல‌மாக்க‌ள் புரிகின்றார்க‌ளில்லை???

உம்மா! ந‌ம்ம‌ட‌ வாப்பா ம‌ர‌ணித்து சுமார் மூன்று வ‌ருட‌ங்க‌ள்க‌ட‌ந்துவிட்ட‌ன‌. நாம் எங்கு வாழ்ந்தாலும் மான‌மும் ம‌ரியாதையும் தான்முக்கிய‌ம். இதை ம‌ற‌ந்துவிடாதீர்க‌ள்.எல்லாவ‌ற்றிற்கும் அந்த‌ நாய‌ன் இந்த‌ சீத‌ன‌ம் வாங்கும் ஆண்க‌ளை சும்மாவிட‌மாட்டான்.

உம்மா! இம்ம‌ட‌லில் என‌து க‌ஷ்ட‌ங்க‌ளில் ஒரு ப‌குதியைத் தான்கூறியுள்ளேன். மிக‌ விரைவில் நான் நாடு திரும்புவ‌த‌ற்கு துஆச் செய்யுங்க‌ள்.

சீத‌ன‌த்தை எதிர்த்து பிரச்சாரம் செய்யும் ந‌ம‌து ஊரிலிருக்கும் 'தாருல்அத‌ருக்கு' க‌ட்டாய‌ம் ஞாயிற்றுக் கிழ‌மைக‌ளில் பெண்க‌ளுக்கான‌ பயானுக்குபோங்க‌ள். இம்ம‌ட‌லை முடிக்கின்றேன்.

வ‌ஸ்ஸ‌லாம்.
க‌ண்னீருட‌ன்…
ஷ‌ர்மிலா

(அன்பின் இளைஞ‌ர்க‌ளே! இது க‌ற்ப‌னைக் க‌டித‌ம‌ல்ல‌. பெய‌ர்க‌ளை ம‌ட்டும்மாற்றியுள்ளோம். ந‌ம‌து ஏழைக்கும‌ருக‌ள் வெளிநாடுக‌ளுக்குச் செல்வ‌தால் ப‌டும்அவ‌ஸ்தைக‌ள் தான் நீங்க‌ள் க‌ண்ட‌து. க‌ட‌ல் க‌ட‌ந்து க‌ற்பையும் இழ‌ந்துந‌டுவீதியில் நிற்கும் இக்கும‌ருக‌ளுக்கு என்ன‌ தீர்வு???வீடுவாங்கும் சீத‌ன‌க்கொடுமைதானே கார‌ண‌ம்? அல்லாஹ் ஹ‌ராமாக்கிய‌ இக்கொடுமையைசெய்யும் அத்த‌னை இளைஞ‌ர்க‌ளும் அந்த‌ ம‌றுமைநாளில் அல்லாஹ்வின் முன்னால்நிச்ச‌ய‌ம் நிறுத்தப் படுவார்கள். சீத‌ன‌ம் எனும் இக்கொடுமையில் இருந்துஅல்லாஹ் ந‌ம்ம‌னைவ‌ர்க‌ளையும் பாதுகாத்து அருள்வானாக!‌)

லால்பேட்டை இனைய தளம்நன்றி : தாருல் அதர் அத்தஅவிய்யா

வைகோ-விற்கு ஒரு மடல்



'தலைவா!
நம்ம கட்சியோட ஜூன் 18 மண்டல மாநாட்டுக்குதான் பரபரப்பா தயாராகிட்டு இருக்கேன். 'ம.தி.மு.கவுக்கு இனி வசந்த காலம்'னு உங்க அழைப்பு உற்சாகமாத்தான் இருக்கு. ஆனா, இதுக்கு முன்னாடி குடவாசல் கூட்டம், திருச்சி திருப்புமுனை மாநாடுன்னு கிளம்பினப்போ இருந்த உற்சாகம் இல்லை தலைவா! சில விஷயங்களை உங்களோடு மனசுவிட்டுப் பேசணும்னுதான் இந்தக் கடிதம்.

'வைகோ எங்க தலைவர்'னு சொல்லிக்கிறதுல எங்களுக்கு எப்பவுமே பெருமைதான். இப்ப இருக்குற தலைவர்கள்ல உங்க அளவுக்குப் பேச்சாற்றல், எழுத்தாற்றல், கம்பீரம் இருக்கிறவங்களை ஒரு கை விரல்ல எண்ணி டலாம். உள்ளூர் கல்வெட்டுகளில் இருந்து உலக வரலாறுகள் வரை உங்களுக்குப் பரிச்சயம். எம்.ஜி.ஆர். தி.மு.க வில் இருந்து பிரிந்தபோதுகூடக் கலங்காத கலைஞர், நீங்க தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட பின்பு கட்சிக் கொடி மற்றும் சின்னத்துக்காகப் போராடவேண்டி வந்தபோது கலங்கித்தான் போனார்! எத்தனையோ போராட்டங்கள், சோதனைகளோடு ராமரின் வனவாசம் மாதிரி 14 வருஷத்தைக் கடந்திருச்சு ம.தி.மு.க. ஆனா, இத்தனை தகுதிகள்கொண்ட உங்களைத் தலைவராகப் பெற்ற நம்ம கட்சி, இந்த 14 வருஷத்துல எத்தனை வளர்ச்சி அடைஞ்சிருக்கணும்?!

இன அமைப்பாக இருந்து அரசியல் கட்சியாக உருமாறிய பா.ம.க. எட்டிய உயரத்தை பக்கா அரசியல் கட்சியாகத் தோன்றிய ம.தி.மு.கவால் ஏன் தலைவா எட்டிப் பிடிக்க முடியலை? தி.மு.கவில் இருந்து வந்தபோது நம்மோடு இருந்த ஒன்பது மாவட்டச் செயலாளர்கள்ல இப்ப எத்தனை பேர் நம்மகூட இருக்காங்க? தி.மு.கவின் மதுரை மாவட்டச் செயலாளரா தென் தமிழகத்தையே கையில் வெச்சிருந்த பொன்.முத்துராமலிங்கம் நம்ம கூட வந்தாரு. தி.மு.கவிலேயே இருந்திருந்தா ரொம்பச் சுலபமா அமைச்சர் ஆகியிருக்க வேண்டியவரோட இப்போதைய நிலைமை எத்தனை பேருக்குத் தெரியும்!

ம.தி.மு.க ஆரம்பிச்சுப் பத்து வருஷங்களுக்குப் பிறகு அரசியலுக்கு வந்த கீதா ஜீவன், தமிழரசி எல்லாம் இப்ப அமைச்சர்கள். ம.தி.மு.க-விலிருந்து மறுபடி தி.மு.கவுக்குப் போன மைதீன்கானும், செல்வராஜும் அமைச்சர்கள். ஆனா, தகுதிக்கும் திறமைக்கும் பஞ்சமே இல்லாத நாஞ்சில் சம்பத், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் சாதாரண தொண்டர்களாவே ம.தி.மு.கவில் முடங்கிட்டாங்களே! 'பதவியை எதிர்பார்ப்பவர்களுக்கு இங்கு இடமில்லை'னு நீங்க சொல்வீங்க. ஆனா, நாம அரசியல் செய்யறதே ஆட்சி அதிகாரத்தை அடைவதற்கான முயற்சிங்றதை உங்களால மறுக்க முடியுமா? அந்த ஆசையில் தானே 96 சட்டசபைத் தேர்தலில் எந்தப் பெரிய கட்சியுடனும் கூட்டணி சேராம தமிழகம் முழுக்கப் போட்டியிட்டோம். ஆனா, ஒரு ஸீட்கூட ஜெயிக்கலையே! 2001 பொதுத் தேர்தலிலும் கடைசி நேரத்தில் தி.மு.க. கூட்டணியிலிருந்து பிரிஞ்சு தேர்தலை எதிர்கொண்டோம். முழுத் தோல்வி! அப்புறம்தான் முதல்வர் பதவி அத்தனை சுலபமில்லைனு நமக்கு உறைச்சுது!

கூட்டணி அருமை உணர்ந்த பிறகும், 2006 தேர்தல்ல ஒரு தப்பான கூட்டணி வெச்சோம். பலமான தி.மு.க. கூட்டணியிலிருந்து கடைசி நிமிஷத்தில் விலகி, அ.தி.மு.கவோடு சேர்ந்தோம். ஆறு எம்.எல்.ஏ. ஸீட் ஜெயிச்சோம். ஆனா, அவ்வளவுக்குதான் ம.தி.மு.க. தகுதியா தலைவா..? தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறினாலும் சில கட்சிகளைப் போல நம்ம கட்சி வளரலையே..!

நீங்க தி.மு.கவில் இருந்து வந்தப்ப எப்பேர்ப்பட்ட ஆரவாரமான ஆதரவு உங்களுக்கு இருந்தது! நம்ம கட்சியின் முதல் பெரிய கூட்டம் குடவாசலில் நடந்தது. அந்தக் கூட்டத்துக்கு வந்தவங்க விடியிற வரை குடவாசலை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு மக்கள் வெள்ளம். உங்களோட நடைப்பயணங்களின் போதெல்லாம் ஊருக்கு ஊர் உங்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றாங்களே! ஆனா, இப்பவும் அதே நிலைமை நீடிக்குதா?

ஒருத்தரை வானளாவப் பாராட்டுறதும், கொஞ்ச நாள் கழிச்சு அவரையே வசைபாடுறதும் உங்க மீது ஜனங்களுக்கு இருக்கிற நம்பகத்தன்மையைக் குறைக்கும்கிறதை நீங்க புரிஞ்சுக்கணும். ஈழத்து அகதிகளுக்காகப் போராடுற நீங்க, ம.தி.மு.கவில் அகதிகள் போல இருக்குற எங்களையும் கொஞ்சம் கவனிங்க தலைவா! தமிழகத்தின் எந்தக் கட்சித் தொண்டனும் கொடுக்காத அளவுக்கு ம.தி.மு.க. தொண்டர்கள் ரத்த தானம் பண்ணியிருக்காங்க. அது பொதுநலம். கூடவே, கொஞ்சம் சுயநலமும் பாக்குறதுதானே தொண்டனுக்கு இயற்கை! இனிமேலும் கட்சிக்காக தொண்டர்களை ரத்தம் மட்டுமே சிந்த வைக்காதீங்க தலைவா! பளிச்சுனு கணக்குப் போட்டு, பதவியும் செல்வாக்கும் கிடைக்கிற மாதிரி காய் நகர்த்தினாதான், கொள்கையும் கூட்டமும்கூட தொடர்ந்து கூட இருக்கும்னு புரிஞ்சுக்கோங்க!

நீங்க அடிக்கடி சொல்வீங்க, 'நாங்கள் வெற்றியைத்தான் இழந்தோம். களத்தை இழக்கவில்லை'னு! நமக்கான வெற்றிகள் எதிர்காலத்தில் வரணும்னா, அதுக்கான களத்தைக் காப்பாத்திக்கணும். அதை மனசுல வெச்சு இந்த மாநாட்டுக் களத்தில் அதிரடியா ஏதாவது பண்ணுங்க தலைவா!

இப்படிக்கு,
உங்க உண்மையுள்ள தொண்டன்

- நன்றி
ஆனந்த விகடன்

தெளிந்த மனம் - சிறுகதை

ஒரு வாரமாக இப்படித்தான். எதுவுமே பிடிபடாமல் விட்டத்தை வெறித்தபடி மல்லாந்து படுப்பதும், எழுந்து உட்கார்வதும்,நேரத்திற்கு சாப்பிடுவதும் தூங்குவதுமாக பொழுது போய்க் கொண்டிருந்தது சண்முகத்திற்கு. வீடு விவரம் தெரியாமல் வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருந்தது. எத்தனை நாளைக்கு மனைவியிடமும் குழந்தைகளிடமும் மறைக்க முடியும்? நாடகம் ஆட முடியும்?

கலிமந்தானில் பத்தி எரியத் தொடங்கிய தீ இந்தோனேசியா ரூபியா நாணயத்தை சரிய விட்டதோடு அல்லாமல் மற்ற ஆசியநாடுகளையும் ஒரு கலக்கு கலக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் பொருளியல் மந்தம். பொருளியல் மந்தத்தால் ஆட்குறைப்பு.

சண்முகத்திற்கு மனதிற்குள் சிங்கப்பூர் நிலவரம் நன்றாகவே புரிந்தது. உற்பத்தி திறனையும், உலக வர்த்தகத்தையும் முழுமையாகநம்பியிருக்கும் நாடு. அப்படி இருக்கும் போது இங்கிருந்து ஏற்றுமதி செய்யும் பொருள்கள் இறக்குமதியாகும் அண்டை அயல்நாடுகளும் பொருளியல் சிரமத்தில் சிக்கி தவிக்கையில் ஆட்குறைப்பு அவசியமானதாக இருந்தாலும் தொழிலாளர் பாடுதிண்டாட்டம்.

அப்படித்தான் சண்முகத்திற்கும் வேலை போனது. ஒன்றுமே புரியாத மனக் குழப்பத்தில் இருந்தார். உயர்நிலை சான்றிதல்கூட இல்லாதநிலையில் தினமும் செய்திதாளைப் புரட்டி பார்த்து கண்களும் களைத்துவிட்டன.

தகுதிக்கு மீறி வாங்கிய கடன் பாறாங்கல்லாய் அழுத்தியது. வீடு வேறு புதிதாக வாங்கி சில மாதங்களே ஆகி இருந்தது. மகன்பேச்சிலர் டிகிரி முடித்திருந்தாலும் மேலே படிக்க போவதாக சொல்கிறான். நான் தான் படிக்காமல் இளமைக் காலத்தை வீணாக்கிவிட்டேன். பையனாவது பெரிய படிப்பு படித்து முன்னுக்கு வரட்டும் என்று நினைத்த சண்முகம் தடையேதும் சொல்லவில்லை

சின்னவள் உயர்நிலை மூன்றில் படிக்கிறாள். அப்பா வயதானவர். ஆனாலும் தன் கையை நம்பி வாழும் மனிதர். மனைவியோவரவுக்கு மீறி செலவு செய்யும் ரகம். தன் பர்ஸ் நிறைய பணம் இருப்பதாக தோழிகளிடம் பெருமை அடித்துக்கொள்ள விரும்பும்வர்க்கம்.

குடும்பம் அளவானது. ஆனால் தேவைகள் அதிகம். வீட்டில் ஒரு அறையை வாடகைக்கு விட்டிருந்தாலும் மனைவியின் அறுநூறுவெள்ளி வருமானத்தில் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும்?

மாடாய் உழைத்து ஓவர் டைம் செய்து பை நிறைய பணத்தோடு வரும்போதே சரியாக மதிக்காத மனைவி படுத்தே கிடந்தால்என்ன செய்வார் என்று சொல்லவே வேண்டாம். தகுதிக்கு தகுந்த வேலை கிடைக்கும் வரை மனைவியை அண்டி வாழ்வதைத் தவிரவேறு வழி தெரியவில்லை சண்முகத்திற்கு

சுறுசுறுப்புடன் எழுந்து உடைகளை மாற்றிக்கொண்டு சவரம் செய்யாத முகத்துடன் அறையை விட்டு வெளியே வந்த சண்முகம் கேட்டைதிறந்து தந்தையைப் பார்த்ததும் ஆமை போல மீண்டும் தன் அறைக்குள் சுருங்கி கொண்டார்.

கிழம் வேலைக்கு போயிட்டு வருது. வாலிபம் கால் மேல் கால் போட்டு படம் பார்க்குது. எல்லாம் நேரம் என்றுமுணுமுணுத்தபடி உள்ளே நுழைந்தார் ராமபத்ரன்.

ஏண்டா ஜீவா ...உங்கப்பன் வேலைக்கு போகலையா?

இல்லை தாத்தா..மெடிக்கல் லீவாம் ..தொலைக்காட்சியிலிருந்து கண்களை அகற்றாமல் பதில் சொன்னான் பேரன்.

படிச்சே..பட்டம் வாங்கினே..வாங்கின பட்டத்தை வைச்சு நாக்கு வழிக்கப்போறியா? உருப்படற வழியை விட்டுட்டு இந்தகண்றாவியெல்லாம் ரசிக்கத்தான் வீட்ல உக்காந்திருக்கியா?

என்ன தாத்தா நாட்டு நிலவரம் புரியாம பேசறீங்க...அனுபவம் உள்ள ஆளுங்களையே கழற்றி விட்டுட்டு இருக்காங்க...நான்இப்பதான் யுனிவர்சிடியில இருந்து வெளியே வந்து மாஸ்டர்ஸ் படிக்க கனடா போகப் போறேன். இப்ப போய் வேலைக்கு போன்னாஎன்ன அர்த்தம்?

டேய்..வீட்ல உட்கார்ந்திருக்கற நேரம் ஏதாவது பார்ட் டைம் வேலை பார்க்கலாம் இல்ல..?

தாத்தா..பாடின பல்லவியையே திரும்ப திரும்ப பாடாதீங்க..அலுத்துக்கொண்டான் பேரன்.

ஏண்டா..சாதிக்கிறவங்க ஒவ்வொருவருடய வாழ்க்கையைப் பத்தியும் உலக ஏட்டில் எதுக்கு பதிக்கிறாங்க தெரியுமா? உன்னைமாதிரி படிச்ச இளைஞர்களோட மூளைக்கு வேலை கொடுக்கத்தான். புகழ் பாடுறதுக்கு இல்லை. மேலை நாட்டு நாகரிகத்தாலவேண்டாததெல்லாம் கத்துக்கறீங்க

என்ன என்பது போல முறைத்தான் பேரன்.

முடியை கன்னாபின்னான்னு வெட்டிட்டு ஆடையை அலங்கோலமா பைத்தியக்காரன் மாதிரி கிழிச்சிக்கிறீங்க

அதுக்கு பேர் பேஸன் தாத்தா. நவீன உலகத்துல நாலு பேர் மாதிரி நாமும் இருக்க வேண்டாமா?

எதுடா நாகரிகம்? நாலு சுவத்துக்குள்ள ஆணும் பெண்ணும் அனுபவித்து கொடுக்க வேண்டிய முத்தத்தை நாலு பேர் முன்னால் வெளிச்சம்போட்டு தர்றக்கு பேர்தான் நாகரிகமா? பொது இடத்தில் சுத்தி இருக்கிறவங்க பார்க்க கட்டிப் பிடித்து கொஞ்சுறதுக்கு பேர்தான்நாகரிகமா? உடம்பை கெளரவமா மறைக்க உடை உடுத்துறது போய் எதிர்ல இருக்கிறவங்க கண்ணுக்கு விருந்து தர மாதிரிஅரைகுறையா உடம்பெல்லாம் தெரிய உடுத்தறதுதான் நாகரிகமா? கன்னி என்ற பட்டத்தில் இருந்து திருமதி ஆகாம தாய்மைபதவி அடையிறதுதான் நாகரிகமா...? ரொம்ப நாள் குமுறலை கொட்டித்தீர்த்தார் தாத்தா.மேலும் தொடர்வதற்குள் போன்வந்தது. தாத்தா எடுத்தார். பேரனுக்குத்தான் கொடுத்தார்

பதினைந்து நிமிடம் போனில் இனிக்க இனிக்க ஆங்கிலத்தில் தூக்கலான உச்சரிப்பு போட்டு ஏற்ற இறக்கத்துடன் அவள் அருகில்இருந்து பேசுபவனைப்போல் முகபாவங்களுடன் பேசினான்.

ஏன் தாத்தா..45 வருடமா சிங்கப்பூர்ல இருக்கீங்க..ஹோல்டான் சொல்லத் தெரியாது. இருங்கன்னா மொழி தெரியாதவங்களுக்குஎன்ன புரியும்? இனிமே போனை எடுத்து என் மானத்தை வாங்காதீங்க...என்று பொரிந்தான்.

தொலைக்காட்சியை பிரைம் 12க்கு மாற்றிவிட்டு தன் அறைக்குள் புயல் வேகத்தில் நுழைந்தான். ஐந்தே நிமிடத்தில் சென்ட்மணக்க வெளியே வந்தான். பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சுனேகா புத்தகப் பையை ஹாலிலேயே போட்டுவிட்டு முகம்அலம்பாமல் வியர்வை நாற்றம் வீடு முழுவதும் வீச சோபாவில் அமர்ந்து டிவி பார்க்கலானாள்.

ஏம்மா இவ்வளவு லேட்? என்று கேட்ட தாத்தாவிடம் சற்று எரிச்சலாக, கூட்டாளி வீட்டுக்கு போய் ப்ராஜக்ட் பண்ணிட்டுவர்றேன். காலையில அம்மாகிட்ட சொல்லிட்டுதானே போனேன். அப்பாகிட்ட கம்பியூட்டர் வாங்கித் தரச்சொல்லி எனக்குவாய் வலிச்சதுதான் மிச்சம் என்று அலுத்துக்கொண்டாள்.

எல்லாவற்றையும் தன் அறையினுள் இருந்து கேட்டுக் கொண்டிருந்த சண்முகம் இனியும் தாங்க முடியாது என்பது போல தன் அறையைவிட்டு வெளியே வந்தார்.

அடுத்த மாதம் வர பொறுத்துக்கம்மா. கட்டாயம் கணினி வாங்கித் தர்றேன் என்று பாசத்துடன் தன் மகளின் கூந்தலைத்தடவினார் சண்முகம்.

வேலை முடிந்து வீடு திரும்பிய அவர் மனைவியின் சந்தோசமான முகத்தை பார்த்ததும் அவருக்கு பகீரென்றது.

ஏதோ பெரிய திட்டத்தை போட்டு வந்து இக்கட்டான நிலையில் கழுத்தை அறுக்க போகிறாளோ..? அவள் பட்டியல்போடுவதற்கு முன்பே வேலை போனதை சொல்லி விடலாமா என்று நினைத்தார் சண்முகம்.

என்னம்மா..இன்னைக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கே போலிருக்கே? தாத்தா கலக்கி தந்த காபியை உறிஞ்சியபடி கேட்டாள்சுனேகா.

ஆமாம்மா..இன்னைக்கு நான் மன நிறைவோடு ஒரு காரியத்தைச் செஞ்சிட்டு வந்திருக்கேன். புதுப்பெண்ணைப் போல நாணத்துடன்சொன்னாள்.

25 வருட இல்லற வாழ்க்கையில் பேசிப் பேசிப் பழகிய பார்வை மொழியிலேயே என்ன என்று பொருள்படும்படி நிமிர்ந்து பார்த்தார்சண்முகம்.

என் தோழி லட்சுமிக்கும் அவ புருசனுக்கும் சேர்ந்தே வேலை போயிடிச்சி. பொடிப்பொடியா நாலு பசங்க. என்கிட்ட சொல்லி மனம்கஸ்டப்பட்டு அழுதா.. என்னமோ போல ஆயிட்டுது. அதனால என் வேலையை அவளுக்கு நானே விட்டுக் கொடுத்துட்டேன்.

அம்மான்னா அம்மாதான். இன்னிக்குதான் உங்க மகளா பிறந்ததுக்கு ரொம்ப பெருமைப் பட்றேன். நமக்காவது அப்பாஇருக்காரு...லட்சுமி ஆன்டிக்கு புருசன் இருந்தும் பலனில்லை..என்று மகள் அம்மாவை பாராட்டிக்கொண்டிருந்தாள்.

சண்முகம் பாராட்டுகிற நிலையிலா இருந்தார்? ஒரு பக்கம் தன் மனைவியின் பெருந்தன்மையை நினைத்து பெருமையாக இருந்தாலும்இன்னொரு பக்கம் இறைவன் கஸ்டத்தை முழுவதும் தன்னிடம் கொடுத்து சோதிக்கிறானே என்று வேதனையாக இருந்தது.

தன்மீது மனைவியும் மக்களும் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும் போது வேலை போனதை சொல்ல முடியுமா? நினைக்கவேகஸ்டமாக இருந்தது.

இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டுமானால் நண்பன் சொன்னதே சரியென்று தோன்றியது. காலையில் சேகர் தன்னிடம் அரைமணி நேரமாகப் பேசியதன் சாராம்சம் உறைத்தது.

சண்முகம்..இங்கே வேலை இல்லைன்னு சொன்னா நம்ப மாட்டேன். வயித்து பிழைப்புக்கு வழியைப் பார்க்காம படுத்தே கிடந்தாஎந்த பலனும் இல்ல. இன்னிக்கு நாடு இருக்கிற நிலைமையில கெளரவம் பார்க்காம கிடைக்கிற வேலையை தெய்வமா நினைச்சிசெய். பொருளாதார சரிவிலிருந்து மீண்டப்பறம் நம்ம இஸ்டப்படி வேலை தேடிக்கலாம்.

நண்பனின் வார்த்தைகள் மீண்டும் அசரீரிபோல் மனதில் ஒலித்தது. சண்முகத்தின் குழம்பிய மனம் தெளிந்தது.நண்பனின் வார்த்தைகள் மீண்டும் அசரீரிபோல் மனதில் ஒலித்தது. சண்முகத்தின் குழம்பிய மனம் தெளிந்தது.

- சுஜாதா சோமசுந்தரம், சிங்கப்பூர்.

சுனாமி...


சுனாமிக்குகூடஇடம்

பொருள் ஏவல்தெரிந்தே

இருந்ததோ


மேட்டுக்குடிகளை

மெட்டுகள் ரசிக்க வைத்துவிட்டு

குப்பங்களை அல்லவா

கொள்ளை கொண்டது


வந்ததும்

ஞாயிறன்றுதான்

திங்கள் முதல்வெள்ளி

வரைசின்னத்திரைத் தொடர்களுக்கு

தடையில்லாமல்


மகான் பிறந்த மறுநாள்

மகவுகளின் முகவரிகள்

கேள்விக்குறிகளாகாமல்

ஈன்றோரையும் சேர்த்துதானே

இழுத்துக்கொண்டது


கால்வருடி மீளும்போது

பள்ளம் விட்டுச் சென்ற அலைகள்

இன்றும்தான் பள்ளம் பறித்தன

புதைகுழிகளாய்


தவிப்போர்க்கு உதவ

நல்லோர் பலரைவிட்டும்

வைத்ததே


ஆறுதல்

அமைதி

ஆண்டவனிடம் வேண்டல்

இதுதானே நம்மால் முடியும்

இப்போதைக்கு
- அப்துல் கதீம்

வாசகர்களும் நுகர்வோர் தான் - ஞானி

திருச்சி: வாசகரை நுகர்வோர் இயந்திரமாகக் கருதுகிறது பத்திரிக்கைத் துறை என எழுத்தாளர் ஞானி கூறினார்.

திருச்சியில் மிட்-டவுன் ரோட்டரி சங்கம், மெட்ரோ ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற வாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,வெளியிலிருந்து பார்க்கும்போது பத்திரிகை துறை கவர்ச்சியாகத் தோன்றும். ஆனால், அதில் சகித்துக் கொள்ள முடியாத பல நிகழ்வுகள் இருக்கின்றன என்பதுதான் உண்மை.மக்கள் என்ன விரும்புகின்றனர் என்பது ஊடகத்துக்குத் தெரியாது.

அதேபோல, நமக்கு என்ன தேவை? என்பதும் வாசகர்களுக்குத் தெரிவதில்லை. இந்த இரண்டுப் பக்கமும் தெளிவில்லாத நிலையில், பத்திரிகை பிரமாண்டமாக இயங்குகிறது.ஆளும் கட்சிகள் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதுதான் பத்திரிகையின் நோக்கம் என 1800ம் ஆண்டுகளில் முதன்முதலாக நம் நாட்டில் வெளியான பத்திரிகை குறிப்பிட்டது.

வாசகர்களும் சமூகத்தில் நிலவும் தவறுகளையும், குறைகளையும் அறிய விரும்புகின்றனர். அதிகாரங்கள் சரியான வகையில் பயன்படுத்தப்படுகிறதா என்பதை செய்தியைக் கொடுக்கும் நிருபர்களும், படிக்கும் வாசகர்களும் பார்க்க வேண்டும்.பெரிய தலைவர்கள் பத்திரிகை நடத்தும் வழக்கம் அந்தக் காலத்திலிருந்தே இருக்கிறது.

காந்தி கூட ஒரு பத்திரிகையை நடத்தினார். தங்களுடைய கருத்துகளை மக்கள் படிக்க வேண்டும் என்பதே இதற்குக் காரணம். சுதந்திரத்துக்குப் முன்பே மக்களின் பார்வையைத் தங்கள் பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காக பெரிய பெரிய தலைவர்கள் பத்திரிகை நடத்தினர்.

எனவே, காந்தி பத்திரிகை நடத்தினால் சரி, கருணாநிதி நடத்தினால் தவறு என சொல்ல முடியாது.

ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பத்திரிகையின் பார்வை தற்போது மாறிவிட்டது. மக்களை வாசகர்களாகக் கருதாமல் நுகர்வோராகத்தான் பார்க்கிறது.இதனால் பத்திரிகைகள், டி.வி. நிறுவனங்களின் அணுகுமுறை குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் செய்திக் கொடுக்கும் வகையிலும், அனைத்துத் தரப்பினரையும் திருப்திபடுத்த அரசியல், சினிமா போன்றவற்றையும் கொடுக்கின்றன.

இவை எல்லாமே நுகர்வோரை மனதில் வைத்துத்தான் செயல்படுகின்றன.அதாவது, வாசகரை நுகர்வோர் இயந்திரமாகக் கருதுகிறது பத்திரிக்கைத் துறை.எனவே, பத்திரிகை என்பது இப்போது ஒரு தொழிலாகக் கருதப்படுகிறது.

இதைக் கட்டுப்படுத்துவது அமைப்புச் சாரா பிரிவைச் சார்ந்த வாசகர்களால் இயலாது.பத்திரிகை நிர்வாகிகள், அவர்களைச் சார்ந்த கட்சிகள், விளம்பரதாரர்கள் போன்றவர்கள்தான் கட்டுப்படுத்த முடியும் என்றார் ஞானி.

- நன்றி தட்ஸ் தமிழ்..

குறுங்கவிதைகள்

கூத்தும் மேளமும்
கொண்டாட்டமும்
தாளமும்
பிணம் மட்டும்
அமைதியாய்!
-------------------
கோடையின் கொடுமை
கசக்கவில்லை வேம்பு
இனிக்கிறது நிழல்!
-------------------
தோப்பில் பேய்!
திருடர் பயமில்லை
கனக்கிறது முதலாளிப் பை!
-------------------
பொதுவிடத்தில் கம்பம்
காலைத் தூக்கியபடி
நாயும் மனிதனும்!
-------------------
தண்ணீரில் கண்டம்
கோயில் குளத்தில்
சோதிடர் பிணம்!
-------------------
நேபாளத்திலும்
கொலை கொள்ளை
கூர்க்காக்கள் தூக்கம்!
-------------------
பிடித்தது புளியங்கொம்பு
தாங்கியது தூக்குக் கயிறு
வரதட்சணை!
-------------------
தொண்டரணிவகுப்பு
கட்சி ஊர்வலம்
பலியாடுகள்!
-------------------
பூகம்பமா?சூறாவளியா?
தொலைநோக்குச் சிந்தனை
எறும்பு விஞ்ஞானிகள்!
-------------------
முரசின் முழக்கம்
வாண வேடிக்கை
மழையழகு!

-இமாம்.கவுஸ் மொய்தீன்

குறுங்கவிதைகள்

கூத்தும் மேளமும்
கொண்டாட்டமும்
தாளமும்
பிணம் மட்டும்
அமைதியாய்!
-------------------
கோடையின் கொடுமை
கசக்கவில்லை வேம்பு
இனிக்கிறது நிழல்!
-------------------
தோப்பில் பேய்!
திருடர் பயமில்லை
கனக்கிறது முதலாளிப் பை!
-------------------
பொதுவிடத்தில் கம்பம்
காலைத் தூக்கியபடி
நாயும் மனிதனும்!
-------------------
தண்ணீரில் கண்டம்
கோயில் குளத்தில்
சோதிடர் பிணம்!
-------------------
நேபாளத்திலும்
கொலை கொள்ளை
கூர்க்காக்கள் தூக்கம்!
-------------------
பிடித்தது புளியங்கொம்பு
தாங்கியது தூக்குக் கயிறு
வரதட்சணை!
-------------------
தொண்டரணிவகுப்பு
கட்சி ஊர்வலம்
பலியாடுகள்!
-------------------
பூகம்பமா?சூறாவளியா?
தொலைநோக்குச் சிந்தனை
எறும்பு விஞ்ஞானிகள்!
-------------------
முரசின் முழக்கம்
வாண வேடிக்கை
மழையழகு!

-இமாம்.கவுஸ் மொய்தீன்

இரண்டாம் கற்காலம் !


கல்லும், உளியும்

கலந்த பொழுது

கர்ப்பமான கல்

சிற்பமானது


மலையை செதுக்கத் தெரிந்த

மனிதன் தன்

மனத்தை செதுக்கத்தான்

மறந்தே போனான்


கல்லுக்குத்தான்

எத்தனை பரிணாமங்கள்

கல் கடவுளாக்கப்பட்டது

பகுத்தறிவு கடவுளைக் கல்லால் அடித்தது...

காலம் புரண்டது...

கடவுளை கல்லால் அடித்தவர்களும்

கல்லாய்த்தான் நிறுத்தப்பட்டார்கள்.


கடவுள் பக்திக்கு மட்டுமின்றி

கலவரத்திற்கும்...

கல்லே மூலமாய்...


மனிதனுக்கு

கல்லையும் கடவுளாய்ப்

பார்க்க முடிந்தது ...

மற்றவனைத்தான்

தன்போல் பாவிக்க முடியவில்லை.


உடைப்பட்ட சிலைகளுக்காய்

உருள்கின்றன தலைகள்...


ஒரு தலைவர் ஆற்றிய

சேவைகளை விட

அவருக்கு வைக்கப்படும்

சிலைகளே ...

அவர் தகுதி உரைக்கிறது...


ஒன்று மட்டும் உண்மை

மனிதன் கல்லை

சிலையாக்கினான்

சிலையோ

மனிதனைக்கல்லாக்கி விட்டது.


நகரவீதிகள் தோறும்

நகரா சிலைகள்

ஓ ... இது இரண்டாம் கற்காலம் !


இங்கே

அடிமைத்தளை நீக்க

யுத்தம் செய்பவர்களை விட

தலைவர் சிலை வைக்க

ரத்தம் சிந்துவோர் அதிகம்


சட்ட சபைகள்

நலத்திட்டங்களை விட

சிலைத்திட்டங்களே

அதிகம் அறிவிக்கின்றன


இருபத்தோராம் நூற்றாண்டின்

இனிய தமிழா ...

கணிப்பொறி யுகத்தில்

உலகம்...

நீ இன்னும்

கற்காலத்தை

கடக்காமலா?


ஒவ்வொரு சிலையும்

மலையின் தவணைமுறை

சமாதிஎன்பதை மறவாதே !


சிலைகளை மற

மனிதனை நினை

ஜாதிகளும், சிலைகளும்

அறிவுக்கு அமைக்கப்பட்ட

வேகத்தடைகள்

நாம் விரைந்து முன்னேற

இரண்டையும் தகர்ப்போம்...!.


- ஆரூர் புதியவன்

மார்க்ஸ் வாக்குமூலம்.

அந்த காலத்தில் பிரபலமானவர்கள் அல்லது தமக்கு பிடித்தவர்களிடம் வாழ்வியல் குறித்த ஒப்புதல் வாக்குமூலம் வாங்கும் வழக்கம் இருத்தது. அவ்வாறு தந்த மார்க்ஸ் - ஏங்கெல்ஸின் ஒப்புதல் வாக்குமூலம் தான் கீழே உள்ளது.. இதையும், இன்று உள்ள தலைவர்களும், நடிகர்களும், ஒப்புதல் வாக்குமூலங்களை ஒப்பிட்டு பாருங்கள்.

மார்க்ஸ் வாக்குமூலம்

பிடித்த குணம் : எளிமை
உங்களது முக்கிய குணாதிசியம் : குறிக்கோளில்விடாப்பிடித்தன்மை
மகிழ்ச்சி : போராடுவது
வருத்தம் : சரணடைவது
மன்னிக்கும் தவறு : ஏமாறுவது
மன்னிக்க முடியாத தவறு : அடிமைத்தனம்
பிடித்தமான பொழுது போக்கு : புத்தகப் புழுவாக இருப்பது
பிடித்த கவிஞ்சர்கள் : ஷேக்ஸ்பியர், கோதே, ஆஷ்லச்
பிடித்த கட்டுரையாளர் : டைட்ரோட்
பிடித்த கதாநாயகன் : ஸ்ப்பார்ட்டகஸ், கெபலர்
பிடித்த கதாநாயகி : கிரெட்ஸ்சன்
பிடித்த நிறம் : சிவப்பு
பிடித்த பெயர் : லாவ்ரா, ஜென்னி
பிடித்த உணவு : மீன்
பிடித்த மலர் : டாஅக்னே ( புகழ்பெற்ற ஐரோப்பிய மலர்
பிடித்த முழக்கம் : “ஓவ்வொன்றையும் சந்தேகப்படு”

எது சிறந்தது ?

சோசலிசம்: உங்களிடம் உள்ள இரண்டு மாடுகளில் ஒன்றைப் பிடுங்கி பக்கத்து விட்டுக்காரரிடம் கொடுப்பது.

கம்யூனிசம்: உங்களிடம் உள்ள இரண்டு மாடுகளை அரசு பறித்துக்கொண்டு உங்களுக்கு பால் தருவது!

பாசிசம்: இரண்டு மாடுகளையும் பிடுங்கிக்கொண்டு பாலை உங்களுக்கே அதிக விலைக்கு விற்பது.

நாசிசம்: இரு மாடுகளையும் எடுத்துக் கொண்டு உங்களை சுட்டுக் கொன்றுவிடுவது.

காப்பிடலிசம்: இரண்டு மாடுகளில் ஒன்றை மட்டும் விற்று விட்டு அந்த பணத்த்ில் ஒரு காளையை வாங்குவது.

அதிகாரவர்கம்: இருமாடுகளையும் அரசு எடுத்துக்கொண்டு ஒன்றைத் தவறுதலாக சுட்டுக் கொன்றுவிட்டு இன்னொரு மாட்டிடம் அத்தனை பாலையும் கறந்து, அதை அப்படியே சாக்கடையில் கொட்டுவது.

என் பணம்...- அனு ஹாசன்


''பணத்தை வைத்து சில பாடங்களைக் கற்றிருக்கிறேன். சிறுவயதில் 'வீட்டுக்கு வருபவர்களை அவர்களுடைய 'பளபள'ப்பை வைத்து எடைபோடக் கூடாது' என்று எங்கள் வீட்டுப் பெரியவர்கள் சொல்லிக் கொடுத்ததுதான் பணம் குறித்த முதல் பாடம்


எப்படி முதல் வகுப்பில் படித்த அ, ஆ காலத்துக்கும் மறக்காமல் இருக்கிறதோ... அதுபோல, இந்த அரிச்சுவடி எனக்கு இன்றும் மறக்காமல் இருக்கிறது.
அடுத்து, நானே உழைத்துச் சம்பாதித்த பணம் எனக்குக் கற்றுக்கொடுத்த இரண்டாவது பாடம்... நான் மும்பையில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில்
1,200 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்தேன். ஹாஸ்டலில் தங்கி வேலை பார்க்கும் பெண்ணுக்கு அந்தப் பணம் போதுமானதாக இருக்காது. ஆனால், நான் ஹாஸ்டலில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு நடந்துசெல்வது, சலுகை விலையில் வங்கி கேன்டீனில் கிடைக்கும் சாப்பாட்டைச் சாப்பிடுவது என்று அந்த வருமானத்துக்குள் என் வாழ்க்கையை நடத்தினேன். இன்றைக்கும் கையில் இருக்கும் பணத்துக்குள் வாழ்கிறேன் என்றால் அதற்கான பாடத்தை நான் கற்றுக்கொண்டது அப்போதுதான்.


அடுத்து தெர்மேக்ஸ் நிறுவனத்தின் மனிதவளத்துறையில் டிரைனியாகச் சேர்ந்தபோது 3,500 ரூபாய் மாதச் சம்பளம். கையில் கொஞ்சம் காசு சேர்ந்தால் அடிப்படைத் தேவைகளைப் படிப்படியாக நிறைவேற்றிக்கொள்ள அதைப் பயன்படுத்த வேண்டும் என்ற பாடம் அப்போதுதான் கிடைத்தது. முதல்மாதச் சம்பளத்தில் ஒரு அயர்ன்பாக்ஸ் வாங்கினேன். இன்றுவரை அதுதான் என் உடைகளை சுருக்கமில்லாமல் வைக்க உதவுகிறது. உடைகளில் மட்டுமல்ல... என் செலவுகளிலும்..!
எவ்வளவு பணம் கிடைத்தாலும் நகைகளோ துணிமணிகளோ வாங்கிக் குவிப்பதில்லை என்ற தீர்மானத்தில் இருக்கிறேன். 'பொண்ணா நீ' என்றுகூட சிலர் என்னைக் கேட்டிருக்கிறார்கள். பெண் என்றால் தங்க நகை ஸ்டாண்டாகத்தான் இருக்கவேண்டுமா?


இப்போது என் வாழ்க்கைமுறை கொஞ்சம் மாறியிருக்கிறது. இன்ஷ¨ரன்ஸ் பற்றியும், பி.பி.எஃப். முதலீடு பற்றியும் தெரிந்து அவற்றில் பணம் போட்டிருக்கிறேன். மியூச்சுவல் ஃபண்டுகளில் கவனம் செலுத்துகிறேன். பங்குச் சந்தை பற்றி பலரும் சொல்கிறார்கள். நல்ல சிறப்பான பங்குகளில் பணத்தைப் போட்டுவிட்டு மறந்துவிடலாம். மற்றபடி அடிக்கடி கவனித்து முதலீட்டை மாற்றிக் கொண்டேயிருப்பது எனக்குச் சரிப்பட்டு வராது.
பணத்தை வைத்து ஆளை எடைபோடக் கூடாது என்ற பால பாடம் எனக்கு மறக்காமல் இருக்கிறது. ஆனால், இன்றைக்கு அதை வைத்துதான் மதிக்கிறார்கள் என்ற உண்மையும் எதிரே நிற்கிறது... முரண்பாடுதானே வாழ்க்கை!”

கீழே விழுந்துட்டேங்க,

மதிகெட்டான்பட்டியின் அராஜகப் பேர்வழிகள் அத்தனை தப்பு தண்டாக்களையும் செய்துவிட்டு, ஊர் பூசாரியிடம் போய், தாங்கள் செய்த தப்பை விலாவாரியாகச் சொல்லி, 'ஐயோ! இப்படிச் செய்துவிட்டேனே!' என்று வருந்திக் குமைவார்கள்.

அவர் எண்பது வயது முதியவர். பழுத்த பழம். அவருக்கு இதனால் பெரிய தலைவலியாகிவிட்டது.
ஊர் நாட்டாமையிடம் அவர் ஒருநாள் இதுபற்றி முறையிட, நாட்டாமை ஊரைக் கூட்டி, ''இதோ பாருங்கப்பா! அவரோ வயசானவரு. அவர்கிட்டே நீங்க பண்ணின கற்பழிப்பு விஷயம், பொம்பளைங்க சோரம் போன விஷயம் இதையெல்லாம் அப்படியே விவரிச்சுச் சொன்னா, பாவம் அந்த மனுஷன் ரொம்பச் சங்கடப்படறாரு. இனிமே அந்த மாதிரி விஷயமா இருந்தா, வெறுமே 'கீழே விழுந்துட்டேங்க'ன்னு சொன்னா போதும், புரிஞ்சுப்பாரு!'' என்றார்.

அன்று முதல் பூசாரியிடம் தினமும் யாராவது வந்து, ''கீழே விழுந்துட்டேங்க!'' என்பது வாடிக்கையாயிற்று. அவர் காலத்துக்குப் பிறகு பூசாரியாக பொறுப்பேற்றுக்கொண்ட வெளியூர் இளைஞனிடமும் தினமும் யாராவது வந்து ''கீழே விழுந்துட்டேங்க'' என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.
ஊர் நாட்டாமையைச் சந்தித்த அவன், ''ஐயா! நம்ம கோயிலுக்கு வர்ற பாதையை உடனே சீர்படுத்தியாகணும்! தினம் தினம் யாராவது 'கீழே விழுந்துட்டேன்'னு புகார் சொல்லிட்டே இருக்காங்க'' என்றான்.
ஊர் வழக்கத்தை அவனிடம் யாரும் இதுவரை சொல்லவில்லை என்பதைப் புரிந்துகொண்ட நாட்டாமை இடி இடியென்று சிரித்தார்.
''ஐயா! நீங்க இப்ப எதுக்காகச் சிரிக்கிறீங்கன்னு எனக்குப் புரியலே! போன வாரம் மட்டும் உங்க மனைவி மூணு தடவை கீழே விழுந்திருக்காங்க. அப்புறம் உங்க சௌகரியம்!'' என்றான்.

- நன்றி விகடன்

இயேசு கிறிஸ்து போதனைகள்

இயேசு கிறிஸ்து பல இடங்களுக்கும் சென்று கிறிஸ்துவ மத உபதேசங்களை செய்து வந்தார். பலரின் நோய்களையும் குணப்படுத்தி வந்தார். அவரது புகழ் பரவியது.அவர் எங்கு சென்றாலும் மக்கள் அவரை பின் தெடார்ந்து சென்றனர்

அது போல் ஒரு நாள் அவரை பின் தொடர்ந்து பெருந்திரளான மக்கள் வந்து கொண்டிருந்தனர். இதைக் கண்ட இயேசு அருகிலிருந்த குன்றின் மேல் அமர்ந்துமக்களுக்கு போதனை செய்தார். அதனால் இந்த போதனை மலைமேல் இயேசு செய்த போதனை என அழைக்கப்படுகிறது.

அமர்ந்த இடத்திலிருந்து மக்களை பார்த்தார் இயேசு பிரான். கூடியிருந்த மக்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகளாக இருப்பவர்களும், மனவருத்தம் உடையவர்களாகவும் இருக்க கண்டார் இயேசு.

மனம் வருந்தாதீர்கள். சொர்க்கம் என்பது ஏழைகளின் ராஜ்யம்தான்.

தங்களுக்கு ஆறுதல் வேண்டும் என கேட்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.

கருணையோடு இருப்பவர்களுக்கு கருணை கிடைக்கும்.

தூய இதயத்தோடு இருப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.

அமைதியை உருவாக்குகிறவர்கள் ஆண்டவனின் புதல்வர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.

என் பொருட்டு துன்பப்படுகிறவர்கள் அதற்கான பரிசாக சொர்க்கத்தை அடைவார்கள்.

ஆண்டவர் மேல் நம்பிக்கை கொள்ளுங்கள். அவர் என்றும் உங்களை ஆசிர்வதிப்பார். உங்கள் உணவுக்காகவும், உடைக்காகவும் கவலைப்பட வேண்டாம்.ஆண்டவர் அந்த பொறுப்பேற்பார் என்று கூறி எவ்வாறு பிரார்த்தனை செய்வது எனவும் கூறினார்.

மற்றவர்கள் நீங்கள் பிரார்த்தனை செய்வதை காண வேண்டும் என பொது இடங்களில் பிரார்தனை செய்யாதீர்கள். தனி அறைக்கு சென்று பரமண்டலத்திலிருக்கும் பரமபிதாவை பிரார்த்தியுங்கள்.

உங்களைப்பற்றி அறிந்த தந்தை உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் கேட்கும் முன்பே உங்களுக்கு என்ன தேவை என்பதை அவர் அறிவார் அதை அவர்அருள்வார் என கூறினார்.

- நன்றி தட்ஸ் தமிழ்

தமிழக அரசின் புரட்சி...

நன்றி : விகடன் தமிழக அரசின் புரட்சி உத்தரவு!


அரவாணிகளுக்கு அறுவை சிகிச்சை!


‘வாடாமல்லி’ என்றும், ‘சந்திப்பிழைகள்’ என்றும் இலக்கியங்கள் சுட்டும் திருநங்கைகளின் (அரவாணிகள்) நடைமுறை வாழ்க்கை, வலிகள் நிறைந்தது. சமூகத்தில் எந்த திசையில் திரும்பினாலும் புறக்கணிப்புகளும், அவமானங்களும் மட்டுமே எஞ்சியிருக்கும் இவர்களின் வாழ்க்கையில், முதன்முதலாக நம்பிக்கை ஒளியை ஏற்றியிருக்கிறது தமிழக அரசு. ‘பாலின மாற்று அறுவை சிகிச்சையை இனி அரசு மருத்துவமனைகளிலேயே செய்துகொள்ளலாம்’ என்ற அரசின் உத்தரவு, எங்களின் ரணங்களுக்குக் கிடைத்திருக்கும் மாமருந்து’’ என திருநங்கைகள் தெம்போடு பேச ஆரம்பித்துள்ளனர்.இந்த உத்தரவு வருவதற்கான மூலக்காரணங்களாக இரண்டு விஷயங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஒன்று, அண்மையில் சென்னையில் நடந்த பாலின சிறுபான்மை யினர் மாநாட்டில் இது தொடர்பாக வைக்கப்பட்ட கோரிக்கை. இன்னொன்று, மதுரையில் வசிக்கும் ‘லிவிங் ஸ்மைல்’ வித்யா என்ற திருநங்கை, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் போட்ட வழக்கு. இவர் தன்னுடைய இயற்பெயரான சரவணன் என்பதை, ‘லிவிங் ஸ்மைல்’ வித்யா என்று கெஜட்டில் மாற்றித்தர வேண்டியும், பாலின மாற்றம் வேண்டியும் அரசுக்கு விண்ணப்பித்தார். ஆனால், ‘நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளவில்லை’ என்று சொல்லி இவரது கோரிக்கையை நிராகரித்தது அரசு. இதை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனார் வித்யா. அந்த வழக்கின் தீர்ப்பு அண்மையில் வந்தது. அதில், வித்யாவுக்கு முறைப்படியான பெயர் மற்றும் பாலின மாற்றுச் சான்றிதழ் வழங்கச் சொல்லி உத்தரவிட்டது கோர்ட். இதைத் தொடர்ந்துதான், தமிழக அரசு இப்படியரு உத்தரவை அறிவித்திருக்கிறது.
திருநங்கைகளின் துயர் மிகுந்த வாழ்வில் இந்த உத்தரவு ஒரு மைல்கல் என்பதால், ‘லிவிங் ஸ்மைல்’ வித்யாவுடன் பேசினோம்.
‘‘எங்களைத் தாயன்போடு அரவணைத்து இப்படியரு உத்தரவு பிறப்பிக்கக் காரணமான தமிழக முதல்வர் கலைஞரய்யாவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி’’ என்று நெகிழ்ச்சியான குரலில் ஆரம்பித்தார்.‘‘பாலின மாற்று அறுவை சிகிச்சையை எங்கள் மொழியில் நிர்வாணம் செய்வது என்போம். முன்பெல்லாம் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி ஆணுறுப்பை அறுத்து எடுப்பார்கள். செத்துப் பிழைக்கும் அந்தப் பயங்கர முறை இப்போது கிட்டத்தட்ட வழக்கொழிந்துவிட்டது. தற்போது மருத்துவர்கள் மூலமாக நிர்வாணம் செய்துகொள்ளும் முறை வந்துவிட்டது. இதற்குப் பதினைந்திலிருந்து, இருபதாயிரம் ரூபாய் வரை செலவாகும். இந்தத் தொகையை சேமிப்பதுதான் திருநங்கைகளுக்கு மிகப்பெரிய சவால். இதற்காக, ஆண்டுக்கணக்கில் பிச்சை எடுத்தும், விபசாரம் செய்தும் பணம் திரட்டுகின்றனர். நான் நிர்வாணம் செய்துகொள்வதற்காக,வட மாநிலங்களில் ஒரு வருடகாலம் பிச்சை எடுத்துத் திரிந்தேன். இப்போது இந்த சிகிச்சையை அரசு மருத்துவமனை களில் இலவசமாக செய்துகொள்ளலாம் என சொல்லியிருக்கிறது தமிழ்நாடு அரசு.
இந்தியாவின் முன்மாதிரி அரசாணையான இதுபற்றி முழு விவரங்கள் இன்னும் வெளிப் படையாகத் தெரியாத நிலையில், ஒரு திருநங்கையாக அந்த அரசாணையில் என்னென்ன அம்சங்கள் இருந்தால் உண்மையிலேயே எங்களுக்கு நன்மை தருவதாக இருக்கும் என்று என்னால் சொல்ல முடியும். இப்படிப்பட்ட சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு, ‘மாறிய பாலினம்’ என்று சான்றிதழ் வழங்கும் பழக்கம் மேலை நாடு களில் இருக்கிறது. அதே மாதிரி இங்கும் சான்றிதழ் கொடுக்கப்பட வேண்டும். அந்த சான்றிதழைக் கொண்டு, அரசிதழில் பெயர்மாற்றம் செய்துகொள்ள உத்தரவிட வேண்டும்.
ஒரு திருநங்கையால் வங்கிக் கணக்கு மட்டுமல்ல... டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் என்று எதையுமே பெறமுடியாது. அவ்வளவு ஏன்..? ஒரு செல்போன் இணைப்புக்கூட வாங்க முடியாது. எனவே, இப்படியான எல்லாவித பிரச்னைகளையும் கலைவதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் தற்போதைய உத்தரவில், அறுவை சிகிச்சை மட்டுமின்றி, மார்பக வளர்ச்சிக்கான சிகிச்சையும், குரலை மாற்றிக்கொள்வதற்கான வாய்ஸ் தெரப்பியும் வழங்கப்படப் போவதாகச் சொல்லப்பட்டிருப்பது வரவேற்க வேண்டிய விஷயம். இதில், ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொது வாக மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஒரு வீட்டில் திருநங்கை இருந்தால், கணக்கெடுக்கும் அதிகாரிகள் அவரை ஆண் என்றோ, பெண் என்றோ ஒரு பிரிவுக்குள் அடக்கி எழுதி விடுகிறார்கள். இதனால் இதுவரைக்கும் தமிழ்நாட்டில் திருநங்கைகளின் எண்ணிக்கைபற்றிய முறையான தகவல்கள் இல்லை. திருநங்கைகளின் வாழ்வில் முதல் சுடரை ஏற்றி வைத்திருக்கும் முதல்வர் அவர்கள், இந்தப் பிரச்னைக்கும் ஒரு தீர்வைத் தருவார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்...’’ என்று சொன்ன ‘லிவிங் ஸ்மைல்’ வித்யா, ‘‘ஊனமுற்ற குழந்தையாக இருந்தாலும் கூட, கடைசிவரைக்கும் சோறுபோட்டு காப்பாற்றும் பெற் றோர்கள், எங்களைப் போன்றவர்களை மட்டும் பருவ வயதில் வீட்டைவிட்டு வெளியேற்றி விடுகின்றனர். அடுத்த வேளை சோற்றுக்கு வழியின்றி தெருவில் நிற்கும்போதுதான், இந்த சமூகத்தின் பொது ஒழுக்க விதிகள் தங்களைக் கட்டுப்படுத்தாது என்ற மனநிலைக்குத் திருநங்கைகள் வந்துவிடுகிறார்கள். எனவே ‘மரம் வளர்ப்போம்’, ‘எய்ட்ஸை தடுப்போம்’ என்றெல்லாம் பிரசாரம் செய்வதுபோல, ‘திருநங்கைகளும் மனிதர்கள்தான். அவர்களையும் மதிப்போம்’ என்று தீவிரமாக எல்லா வடிவங்களிலும் பிரசாரம் செய்ய வேண்டும்.
திருநங்கைகளின் குடும்பத்தினருக்கும் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். பெற்றோர் பாதுகாப்பு சட்டம்போல, திருநங்கைகளை வீட்டை விட்டுத் துரத்தும் குடும்பத்தினருக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும். தலித்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருப்பதுபோல, திருநங்கை களைப் பொது இடத்தில் கேவலப்படுத்தினால் தண்டனை கொடுக்க வேண்டும்!’’ என்று பொங்கி முடித்தார்.
நன்றி : பாரதி தம்பிபடம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தபூ சங்கர் கவிதைகள்


தெய்வமே,

உன்னை என் இதயத்திலிருந்து

வெளியேற்றிவிட்டு,

ஒரு பெண்ணைக்

குடிவைத்ததற்காகக்

கோபித்துக்கொண்டு

என்னைக் கைவிட்டு விடாதே!

உன்னால் தூணிலோ,

துரும்பிலோகூட வாசம்

செய்ய முடியும். அவளால் முடியுமா?


*****


ஒரு வண்ணத்துப் பூச்சி

உன்னைக் காட்டி

என்னிடம் கேட்கிறது

ஏன் இந்தப் பூ

நகர்ந்துகொண்டே இருக்கிறது? என்று!


*****


புத்தர் இந்த உலகத்தில் தோன்றி

ஒரு மார்க்கத்தைத்தான்

அமைத்துக் கொடுத்தார்.

நீயோ என் எதிரில் தோன்றி

எனக்கொரு உலகத்தையே

அமைத்துக் கொடுத்துவிட்டாய்


*****


அன்று
நீ குடை

விரித்ததற்காகக்

கோபித்துக் கொண்டு

நின்றுவிட்ட

மழையைப்

பார்த்தவனாகையால்

இன்று
சட்டென்று மழை

நின்றால்

நீ எங்கோ குடை

விரிப்பதாகவே

நினைத்துக்

கொள்கிறேன்.


*****


நீ எப்போதும்

தலையைக் குனிந்தே

வெட்கப்படுவதால்

உன் மதிப்புமிக்க

வெட்கத்தையெல்லாம்

இந்தப் பூமி

மட்டுமே தரிசிக்க

முடிகிறது!


ஒரே ஓரு முறை

கொஞ்சம் உன் தலையை

நிமிர்த்தி

வெட்கப்படேன்...

வெகுநாட்களாய்

உன் வெட்கத்தைத்

தரிசிக்கத் துடிக்கிறது

வானம்!


*****

நிறைவேறா காதல்

படித்த வலைப் பூ : http://manmadan.blogspot.com/

ஒரு பையனுக்கு கேன்சர் இருந்தது. எல்லோருக்கும் தெரிந்ததுதானே கேன்சரை குணப்படுத்த முடியாது என்று. அவனுக்கு 18 வயது , எந்த நேரத்திலும் சாகலாம். அவன் வாழ்க்கை முழுதும் அவன் வீட்டிலேயே முடங்கி கிடந்து அம்மாவின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தான். அவன் வீட்டை விட்டு எங்கேயும் வெளியில் சென்றதில்லை.
ஒரு நாள் அவன் வெளியில் சென்று சுத்திபார்க்க அவன் அம்மாவிடம் அனுமதி வாங்கினான். அவன் வீட்டை விட்டு வெளியில் இறங்கி நடக்கையில் பல கடைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தான். அப்படி ஒரு கடையை கடந்து விட்டு பின் திரும்பி இன்னொரு முறை அந்த கடையை பார்த்தான். அது ஒரு கேசட் கடை. அதைவிட முக்கியமாக அந்த கடையில் அவன் வயதை ஒட்டிய ஒரு தேவதை மாதிரி ஒரு பெண் இருந்தாள்.
அவன் மெதுவாக அந்த கடை உள்ளே சென்றான். அவன் 'என்ன வேண்டும்' என்று கேட்டுவிட்டு ஒரு புன்னகையை உதிர்த்தாள்.. அவன் வாழ்நாளில் இப்படியொரு அனுபவம் கிடைத்தில்லை. முதல் பார்வையிலே காதல் என்பதை உணர்ந்தான். ஆனாலும் அவனுக்கு ஒருவித பயம்.. ஏதோ ஒரு கேசட்டை காட்டி இது வேண்டும் என்றான். அவளும் அதை எடுத்து இதை பார்சல் கட்டவா என்றாள். அவன் ஆமாம் என்பதாக தலையை ஆட்டினான். அவள் உள்ளே சென்று கேசட்டை அழகாக பார்சல் கட்டி வந்தாள்.
நேராக அதை கொண்டு போய் அவன் அலமாரியில் வைத்து விடுகிறான். இது தினமும் நடக்கிறது. ஒருநாள் கூட அவளிடம் பேசுவதற்கு அவனுக்கு பயம். கேசட்டை பிரித்து பார்த்ததும் கிடையாது. இது அவன் அம்மாவுக்கு தெரிய வருகிறது. அவள் அவனுக்கு தைரியம் சொல்லி அனுப்பி வைக்கிறாள்.
அவன் அந்த கடைக்கு போய் ஒரு கேசட்டை வாங்கி அவள் பார்சல் கட்டும் சமயத்தில் ஒர் பேப்பரில் அவனது தொலைபேசி எண்ணை எழுதி வைத்துவிட்டு கேசட்டை வாங்கியவுடன் வீட்டிற்கு ஓடி வந்துவிடுகிறான். அடுத்த நாள் அந்த வீட்டு தொலைபேசி மணி அடிக்கிறது. அவன் அம்மா எடுக்கிறார்கள்.. அவன் பெயரை சொல்லி 'இருக்கிறானா' என்று கேட்கிறாள்.. அம்மாவிற்கு அழுகையை அடக்க முடியவில்லை. அவன் நேற்றே இறந்து விட்டான் என்று கூறுகிறாள். ஒரு பெரிய நிசப்தம். அவள் அம்மாவின் அழுகை தவிர எதுவும் கேட்கவில்லை.
அடுத்த நாள் அம்மா அவன் நியாபமாக அவன் அறைக்கு செல்கிறாள்.. அங்கே அவன் அலமாரியில் நிறைய பிரிக்கப்படாத பார்சல்கள் இருந்தன.. அதை பிரித்து பார்க்கிறாள். அதன் உள்ளே ஒரு கேசட்டும் ஒரு துண்டு பேப்பரும் இருந்தது. அதில் 'நீ ரொம்ப அழகாக இருக்கிறாய். ஏன் என்னிடம் பேசவே மாட்டேங்குறே ' என்று எழுதியுருந்தது.. மற்ற பார்சல்களிலும் ஒரு கேசட்டும் அதே துண்டு பேப்பரும் இருந்தது.
நெஞ்சை தொடும் இந்த குட்டிகதையில் ஒரு பெரிய நீதியே இருக்கிறது. உங்கள் துணையிடன் எப்பாவாவது சண்டை போட்டால், சிறிது நேரம் உங்கள் ஈகோவை கழட்டி வைத்துவிட்டு சில சமாதான வார்த்தை கூறுங்கள்.. இல்லாவிடில் அந்த பிரிக்கப்படாத பார்சல் போல பல வாய்ப்புகள் பறிபோகும்...

நிலையில்லா அழகு...


விலை போக வேண்டுமென்று

இரக்கப்பட்டு இறைவன் கொடுத்த

வனப்பைக் கொண்டு வனிதை நீங்கள்

வாலிப நெஞ்சம் கெடுக்கின்றீர்....


சிலகாலம் கொடுத்திருக்கும்

நிலையில்லா அழகைக் கொண்டு

பல காலம் எங்களது

இதயங்களை வதைக்கின்றீர்....


நல்ல எண்ணம் கொண்டு நீங்கள்

உய்வதற்கு வழிவகுத்த

இறைவனின் சிந்தையால்

எம் சிந்தைக் குலைக்கின்றீர்....


கொடுத்த அழகைக் காப்பதிலே

படுசிரத்தைக் கொள்ளும் நீங்கள்

அடுத்து நிற்கும் எங்களை

கெடுக்க எதற்கு நினைக்கின்றீர்....



அதிலும்...

கையேந்த நான் நினைத்து
பாதை பார்த்து நிற்கும் போது
எனைப் பார்த்து ஒரு மனிதன்
மடியேந்தி நிற்கிறான்...

ஆற்றுத் தண்ணீர் தானே என்று
அருகில் சென்று குடிக்கப் போனால்
அங்கொருவன் நின்று கொண்டு
அதிலும் எச்சில் துப்புகிறான்...

எங்கு நான் சென்றாலும்
எனக்கு மட்டும் எதற்காக
சங்கடங்கள் இது போல
பின் தொடர்ந்து வருகிறது...

ஆயிரம் மனிதர் வாழும் இந்த
அவனியிலே எனக்கு மட்டும்
ஆவி எடுக்கும் ஆராதனைகள்
ஏனோ....

விடை தெரியாமல் புலம்பும்
விட்டில் பூச்சிகள்....

அன்பு காதலிக்கு


நான் இறந்து விட்டால்

உன் கண்களில் கண்ணீர் வருமா

என்று என்னால் காண இயலாது...

ஆனால்

உன் கண்களில்

கண்ணீரைக் காண நேர்ந்தால்

என்னுயிர் இருக்காது..


பிரிவுடன் பிரியா,

உன் மீரா