திருக்குறள்

குறுங்கவிதைகள்

கூத்தும் மேளமும்
கொண்டாட்டமும்
தாளமும்
பிணம் மட்டும்
அமைதியாய்!
-------------------
கோடையின் கொடுமை
கசக்கவில்லை வேம்பு
இனிக்கிறது நிழல்!
-------------------
தோப்பில் பேய்!
திருடர் பயமில்லை
கனக்கிறது முதலாளிப் பை!
-------------------
பொதுவிடத்தில் கம்பம்
காலைத் தூக்கியபடி
நாயும் மனிதனும்!
-------------------
தண்ணீரில் கண்டம்
கோயில் குளத்தில்
சோதிடர் பிணம்!
-------------------
நேபாளத்திலும்
கொலை கொள்ளை
கூர்க்காக்கள் தூக்கம்!
-------------------
பிடித்தது புளியங்கொம்பு
தாங்கியது தூக்குக் கயிறு
வரதட்சணை!
-------------------
தொண்டரணிவகுப்பு
கட்சி ஊர்வலம்
பலியாடுகள்!
-------------------
பூகம்பமா?சூறாவளியா?
தொலைநோக்குச் சிந்தனை
எறும்பு விஞ்ஞானிகள்!
-------------------
முரசின் முழக்கம்
வாண வேடிக்கை
மழையழகு!

-இமாம்.கவுஸ் மொய்தீன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற