திருக்குறள்

கவிதைகள் - எஸ்.விஜயன்

கசாப்பு கடையிலிருந்து
பறந்து வந்த
இறகுகளைக்கண்ட குருவிகள்
சமாதானமடைந்தன

அலைந்து திரியும்
வாழ்க்கை மேலென்று

கிளை ஒடிந்து
சிறுவன் விழுந்ததும்
மரத்தை சபித்தார்கள்
மரமோகைகள் துண்டானதால்
வலியில்
முனகிக் கொண்டிருந்தது

இக்கரைக்கும்
அக்கரைக்கும்
வழியனுப்பிய
பரிசல்கள்

வழி தொலைந்து நின்றன
நீர் வற்றியதால்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற