திருக்குறள்

அஜினோ மோட்டோ....




னிதனைத் தவிர உயிரினங்கள் அனைத்தும் உணவை உயிர்வாழ்வதற்கான ஆதாரப் பழக்கமாக மட்டுமே கொண்டுள்ளன.  ஆனால் மனிதன்  மட்டுமே சுவைக்காகவும், சுகத்துக்காகவும் உணவருந்தும் பழக்கம் உள்ளவனாக இருக்கிறான்.  

இந்த பழக்கம் நவீன உலகில் இந்தியா போன்ற வளரும் நாடுகளை பெரும் சந்தையாக்கி இருப்பதால், சுவையின் பெயரால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வினோதப் பண்டங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரித்து இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக பிரபலமாகி வரும் அஜினோமோட்டோ என்ற உப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.  முன்பு சென்னை போன்ற மாநகரங்களில் மட்டும் பிரபலமாக இருந்த மோனோ சோடியம் குளூட்டமேட் (Mono sodium glutamate) என்ற வேதிப்பெயரைக் கொண்ட இந்த விநோத உப்பு, தற்போது கிராமப்புற வீடுகளின் சமையலறைக் குள்ளும் புகுந்துவிட்டது.

கண்ணைக் கவரும் வண்ணங்களில், வித்தியாசமான நறுமணத்துடன் சந்தைக்கு வரும் எந்த பொருளாக இருந்தாலும் அவற்றை வாங்கிக் குவிக்கும் நமது மக்கள், அஜினோ மோட்டோவுக்கும் அடிமையாக இருப்பதில் வியப்பில்லை.

பிரியாணி, ஃபிரைடு ரைஸ், சாம்பார், ரசம் போன்ற எதுவாக இருந்தாலும், ஒரு ஸ்பூன் அஜினோ மோட்டோ சேருங்கள்.. சாப்பிட அடம்பிடிக்கும் உங்கள் குழந்தைகள் எப்படி சாப்பிடுகிறார்கள் என்று பாருங்கள் என்ற விளம்பரங்களுடன் சந்தையில் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த  அஜினோமோட்டோ விற்பனை, இப்போது பெட்டிக்கடைகள் வரை சக்கைப்போடு போடுகிறது.

அஜினோமோட்டோ கலந்த உணவை உண்டால், குழந்தைகளுக்கு ஆபத்து.  தினமும் மூன்று கிராமுக்கு மேல் அஜினோமோட்டோ கலந்த உணவை உண்டால் பெரியவர்களுக்குக்கூட கழுத்துப் பிடிப்பு, தலைவலி, நெஞ்வலி, தலைச்சுற்றல், மூச்சுத் திணறல் வர வாய்ப்பு உள்ளது என்ற சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டது.  அப்போதுதான் அஜினோ மோட்டோவின் இன்னொரு முகம் பொதுமக்களுக்கு தெரியத் தொடங்கியது.

அஜினோமோட்டோ தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், ஏஜெண்டுகள், அஜினோ மோட்டோவைப் பயன் படுத்தும் ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்டுகள் என அனைவருக்கும் சென்னை மாநகராட்சி இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியது.  பின்னர் இதுகுறித்து கீழ்க்கண்ட விளக்கத்தை அந்த  நிறுவனத்தின் நிர்வாகிகள் அளித்தனர். 

எங்கள் நிறுவனம் கண்டுபிடித்த இந்த சோடியம் குளுட்மேட் தொண்ணூற்று எட்டு ஆண்டுகளாக  இருபத்து மூன்று நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.  அஜினோமோட்டோ என்ற பெயரில் இதனை விற்பனை செய்து வருகிறோம். வேறு பல நிறுவனங்களும் வெவ்வேறு பெயர்களில் இதனை விற்பனை செய்து வருகின்றன.

சீன, ஜப்பானிய, ஸ்பானிய, பிரெஞ்ச் மற்றும் மேற்கத்திய உணவு வகைகளிலும் அஜினோ மோட்டோ  பயன்படுத்தப்பட்டு வருகிறது.   நாங்கள் தாய்லாந்தில் இருந்து இதை இறக்குமதி செய்து சென்னையில் பேக் சேய்து இந்தியா முழுவதும் விற்கிறோம்.

அஜினோமோட்டோவால் தலைவலி, வாந்தி, உடல் அசதி, கழுத்துப்பிடிப்பு, மூச்சுத் திணறல் வரும் என்ற தவறான தகவல் ஆரம்பத்தில் அமெரிக்காவில் உலா வந்தது.  அதன்பிறகு  நடந்த ஆய்வில் அது தவறான கூற்று எனத் தெரிய வந்தது.  அஜினோமோட்டோவால் எந்த ஆபத்தும் இல்லை என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஆராய்ச்சிக் கழகம் சான்றிதழ் அளித்துள்ளது.  உலக சுகாதார அமைப்பு  இது பாதுகாப்பானது என அங்கீகரித்துள்ளது.  சில நிபந்தனைகளுடன் இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளது.

மேலும் சோடியம் குளுட்மேட் என்பது ஒரு அமினோ அமிலம்.  இது நம் உடலில் உள்ள புரதத்தில் இயற்கையாகவே உள்ளது.  நாங்கள் ஆண்டுக்குப் பதினெட்டு லட்சம் டன் சோடியம் குளுட்மேட்டை உற்பத்தி செய்து, அதை எழுபதாயிரம் கோடி டாலருக்கு விற்று வருகிறோம்.  இதே அளவுக்கு கலப்பட சோடியம் குளுட்மேட் விற்பனையும் நடைபெறுகிறது.  கடைகளில் கலப்படமாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் சோடியம் குளுட்மேட், உண்மையிலேயே ஆபத்தானது.  இந்த கலப்பட சோடியம் குளுட்மேட்டை தடுத்தாலே தற்போது எழுந்துள்ள சர்ச்சை ஓய்ந்துவிடும் என்று அவர்கள் விளக்கம் கூறியிருந்தனர். 

போலி உணவுப் பொருட்களையும் மாத்திரை மருந்துகளையும் கண்டறிவதே குதிரைக்கொம்பாக இருக்கும்போது, போலி  வேதிப் பொருட்களை கண்டறிவது சுலபமான வேலையா என்ன ?

விஷத்தன்மை

இந்த அஜினோமோட்டோவின் விஷத்தன்மை பற்றி இருவேறு கருத்துகள் இருந்தபோதிலும் பல மருத்துவ ஆராய்ச்சிகள் மனிதர்களுக்கு அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு இது பலவித ஆபத்துகளை உருவாக்கும் என்று நிரூபித்துள்ளன.  கருவுற்ற எலிகளுக்கு அஜினோமோட்டோ  கலந்த உணவைத் தொடர்ந்து கொடுத்து வந்தால் அவற்றின் குட்டிகளுக்கு மூளைப் பகுதியில் உள்ள செல்கள், அளவில் சுருங்கியிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

அஜினோமோட்டோ  கலந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாக குறையும்.  இதனால் உடல் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் குறைகிறது.  மேலும் இந்த வேதிப் பொருள் மூளையில் ஆர்குவேட் நுக்ளியஸ் என்னும் பகுதியைப் பாதிப்பதால் உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கும்.

மூளை மட்டுமின்றி இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளிலும் அழற்சியையும், சிறு ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.  இதனால் குழந்தைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத வயிற்றுவலி அடிக்கடி ஏற்படும்.  ஒவ்வாமை உள்ள ஒரு சிலருக்கு இந்த வேதிப் பொருள் கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மார்பில் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, உடல் வியர்க்க ஆரம்பித்துவிடும்.  இந்த நோய்க் குறிகளுக்கு சைனா உணவக நோய் என்று தனிப் பெயரே சூட்டப் பட்டுள்ளது.

ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட்

அஜினோ மோட்டேவைப் போன்றே பாஸ்ட் புட் கடைகளிலும், ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் பயன்படுத்தப்படும் ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட் என்ற எண்ணெயும், பல்வேறு ஆபத்துக்களை உருவாக்கும் குணம் கொண்டது என்ற தகவல்களையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட் என்ற எண்ணெய் பசு, எருது, பன்றி போன்ற பல விலங்குகளின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப் படுவதாகும்.  இதில் உடலுக்குத் தேவையற்ற ஒருவித கொழுப்பு இருக்கிறது.  பாக்கெட்டுகளில் கிடைக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ், பீட்ஸா, சாக்லெட், துரித உணவுகள் போன்றவை இந்த  எண்ணெயில்தான் தயாரிக்கப்படுகின்றன.  இந்த எண்ணெயைப் பலமுறை திரும்பத் திரும்ப பயன்படுத்தினாலும் உணவின் மணம் மாறாது பதினெட்டு மாதம் வரை உணவுப் பொருள்  கெட்டுப் போகாது.  மெக்டொனால்ட், பீட்ஸா கார்னர்களில் கிடைக்கும் ஸ்னாக்ஸ் பொருட்கள் நாம் வீட்டுத் தயாரிப்பை விட சுவையுடன் இருப்பது போல தோன்றுவதற்கு இந்த எண்ணெய்தான் காரணம்.  ஆனால் இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் உடலில் வேண்டாத கொழுப்பு சேர்ந்து இருதய நோய், புற்றுநோய், உடல் பருமன் எல்லாம் வந்துவிடும் என்கிறார்கள்.  இது குறித்து எச்சரிக்கும் மருத்துவ ஆய்வாளர்கள்.

புதிது புதிதாக கண்டுபிடித்து சுற்றுச் சூழலிலும், உணவிலும் கலக்கும் பெரும்பாலான வேதிப் பொருட்களை நமது கல்லீரலில் செயல்படும் பி 450 என்னும் நொதிப் பொருட்கள் விஷ முறிவு செய்து நம்மைக் காப்பாற்றுகின்றன.  ஆயினும் சில வகையான நச்சுப் பொருட்களை வெளியேற்ற முடியாமல் இந்த பி 450 நொதிகள் திணறுகின்றன.  குறிப்பாகச் செயற்கை நிறமிகளும் அஜினோ மோட்டோ  போன்ற சுவையூட்டிகளும் பி 450 நொதிகளைச் செயலிழக்கச் செய்கின்றன.

சோடியம் குளுட்மேட்டை உணவில் கலந்து சாப்பிடுவதால் தலைவலி, வாந்தி வருவதாக எழுபதுகளின் ஆரம்பத்தில் அமெரிக்க டாக்டர்கள் கண்டுபிடித்து எச்சரித்தனர்.  ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கக் கூடாது என்ற அமெரிக்க அரசு தடை விதித்தது.

இந்த நிலையில், அஜினோமோட்டோ  நிறுவனம் 6 ஆண்டுகளுக்கு முன் அமர்க்களமாக இந்த சோடியம் குளுட்மேட்டை இந்தியாவில் அறிமுகம் செய்தது.  பால், பால் சேர்க்கப்பட்ட பொருள்கள், மினரல் வாட்டர், ஐஸ்கிரீம், காபி, டீ போன்றவற்றில் இதைக் கலக்கக்கூடாது என்ற நிபந்தனையோடுதான் அஜினோமோட்டோ நிறுவனம் இங்கு அடியெடுத்து வைக்க இந்திய அரசு அனுமதியளித்தது.  ஆனால், இந்திய உணவுப் பொருள் கலப்பட தடுப்புச் சட்டத்திற்கு எதிராக  இந்த பொருள்  விளம்பரப்படுத்தப்பட்டு, தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.

பரவலான விளம்பரங்கள் மூலமும் வீடு வீடாக சென்று விற்பனை செய்வதாலும் தற்போது பலரும் இந்த நச்சுப் பொருளை சமையலில் ஒரு சுவையூட்டியாகச் சேர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.   பெரிய உணவகங்களில் வழங்கப்படும் சூப்களிலும் பிரியாணி வகைகளிலும், துரித உணவகங்களில் வறுத்து வழங்கப்படும் எல்லா உணவுப் பண்டங்களிலும் இந்த அஜினோமோட்டோ  சேர்க்கப்படுகிறது.  விருந்துணவு தயாரிக்கும் பல சமையல் நிபுணர்கள் டேஸ்ட் பவுடர் என்று பெயரிட்டு சமையல் பொருட்களின் பட்டியலில் இதையும் சேர்த்து வாங்குகின்றனர்.

இதனால்தான் திருமணம் போன்ற விருந்து நிகழ்ச்சிகளில் உணவு உண்போர் உடனடியாக வயிற்று உபாதையால் அவதிப்படுகிறார்கள்.

மேலை நாடுகளில் உணவுப் பொட்டலங்களின் அட்டைப்  பெட்டியில் அஜினோமோட்டோ கலந்திருப்பதை வெளிப்படையாக எழுத வேண்டும் என்று விதி இருக்கிறது.

ஆனால் நமது நாட்டில் குழந்தைகளைக் கவரும் வகையில் பல வண்ணப் பாக்கெட்டுகளில் நொறுக்குத் தீனிகளை விற்பவர்கள் அவற்றில் அஜினோமோட்டோ  கலந்திருப்பதை மறைத்து அஞீஞீஞுஞீ ஞூடூச்திணிதணூண் என்று  மக்களுக்குப் புரியாத சங்கேத மொழியில் எழுதி ஏமாற்றுகிறார்கள்.

குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கப்படும் ரெடிமேட் நொறுக்குத் தீனிகளாக மேகி, லேய்ஸ், குர்குர்ரே என்பதிலிருந்து இன்று பலவகை துரித உணவுகள், வீட்டுச் சமையல் அறைகள் வரை புகுந்துவிட்ட இந்த அஜினோமோட்டோ  தன் கரங்களை இன்னும் அகலமாக நீட்டிக்கொண்டிருப்பது அதன் ஆக்கிரமிப்புத் தன்மையையே காட்டுகிறது.

சாப்பாட்டில் அதிகம் பிரியமில்லாத நோஞ்சான் குழந்தைகளுக்குப் பல பெற்றோர்கள் இந்த அஜினோமோட்டோ கலந்த நொறுக்குத் தீனி பொட்டலங்களை வாங்கிக் கொடுப்பர்.  இந்தக் குழந்தைகளும் வீட்டு உணவைவிட இந்தப் பொட்டலத் தீனிகளை அளவுக்கு அதிகமாக விரும்பித் தின்பர்.  குழந்தை இதையாவது சாப்பிடுகிறதே என்று ஆசை ஆசையாக பலரும் அதை வாங்கிக்கொடுப்பர்.

சில மாதங்கள், வருடங்கள் கழித்து இந்த நோஞ்சான்  எக்கச்சக்கமாக சதை போட்டு ஊளைச் சதையுடன் தோன்றுவான் என்பதே உண்மை.  பசியை கண்ட்ரோல் செய்யும் உடலின் இயற்கையான நொதிப் பொருட்கள் அஜினோமோட்டோ வால்  செயல்படாத தன்மை ஏற்படும்போது, அஜினோமோட்டோவைத் தொடர்ந்து உண்ணும் சிறுவர்கள்  சில காலம் கழித்துக் கண்டதை உண்ண ஆரம்பிப்பார்கள்.  பசிக்கும் நேரத்தில் அளவுக்கு அதிகமாக இப்படி உண்டதால்தான் இவர்கள் காலப்போக்கில் நடக்க முடியாத அளவுக்கு குண்டாக மாறிவிடுகிறார்கள்.

பிறப்புக் கோளாறு, உறுப்புகளில் வளர்ச்சியற்றத் தன்மை, தலைவலி, வாந்தி, வயிற்றுவலி, செரிமானச் சிக்கல், கெட்ட கனவு, தூங்குவதில் சிக்கல், சோம்பல், மிதமாகும் இதயத்துடிப்பு, முடிகொட்டுதல், ஆஸ்துமா, பக்கவாதம், அல்சிமர்ஸ் என்ற முதுமை நோய்  மற்றும் சர்க்கரை நோய் என அஜினோமோட்டோ அள்ளி வழங்கும் நோய்களை சர்வதேச மருத்துவ ஆய்வாளர்கள் அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.

பெற்றோர்களே ! குழந்தைகளே இயற்கையான உப்பு நம்மிடம் இருக்க இந்த அஜினோமோட்டோ  என்ற ஆபத்து தேவையா?

தயவு செய்து சிந்தித்துப் பாருங்களேன்..

இதற்கான ஆதாரங்கள்

Sharon fowler, University of Texas, USA  Jock – Samvels – NOHA Board member Lecture on “The dangers and hidder sowiees of processed free glutmatic acid”                                                                                                                                                                                        
 Dr. Olney, 5w Brain lesions, Obesity and other disturbences in mice treated with MSG                      
 Mr.Ka He, Department of Nutrition School of public health, 
University of Carolina.                                               
Dr. Betty Maritimi, Georgic, Asinomoto, Aspartame & Brain 
Tumors Recipe of Death.
- நன்றி, ஹெல்த்சாய்ஸ்

அடிக்கடி விமானப்பயணம் செய்பவரா? பாஸ்போர்ட் பத்திரம்????

இது எனக்கு மெயிலில் வந்த செய்தி. ஏற்கெனவே உங்களுக்கு தெரிந்திருக்கலாம். தெரியாதவர்களுக்கு உதவட்டுமே என்றுதான் இந்த பதிவு.
நாம் பாஸ்போர்ட்டை இமிக்ரேஷன் ஆஃபீசர், அல்லது கஸ்டம்ஸ் அல்லது ஏர் இந்தியா ஊழியர்களிடம் கொடுக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். நம் பாஸ்போர்ர்ட்டை சேதப்படுத்திவிட்டு நம்மை சிக்கலில் மாட்டி காசு கறக்கப் பார்ப்பார்கள்.
எப்படீன்னா நாம இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்கு போகும்போது நாம் பாஸ்போர்ர்டை அதிகாரியிடம் கொடுத்துவிட்டு நாம் அசந்த சமயம் பார்த்து பாஸ்போர்ட்டில் ஏதேனும் பக்கத்தை கிழித்து விட்டு அல்லது சேதப்படுத்திவிட்டுexit stamp அடித்து தந்து விடுவார். நாமும் இது தெரியாமல் பாஸ்போர்ட்டை வாங்கிக்கொண்டு போய்விடுவோம். ஆனால் நம் பாஸ்போர்ட் பற்றிய எல்லா விவரங்களையும் ரெட் மார்க்கோடு சிஸ்டத்தில் ஏற்றிவிடுவார்.
அடுத்தமுறை நாம் இந்தியாவரும்போது ஆரம்பிக்கும் ஏழரை. விசாரணை ஆரம்பிக்கும். எவ்வளவு நாள் வெளிநாடுகளில் இருக்கிறார் அவரது வருமானம் இதைப் பொறுத்து பேரம் போலீஸ் மற்றும் இமிக்ரேஷன் அதிகாரிகளால் பேரம் பேசப்பட்டு பணம் கறக்கப்படும். யாராவது நம்ம மேல தப்பு இல்லன்னுட்டு சண்டை போட ஆரம்பிச்சோம் அவ்வளவுதான் நம்ப எதிர்காலத்தையே நாசமாக்கிடுவானுங்க இந்த படுபாவிங்க.
அதனால பாஸ்போர்ட்டை இந்த படுபாவிங்கக்கிட்ட கொடுத்துட்டு தேமேன்னு நிற்காம நம் பாஸ்போர்ட்டில் எப்போதும் கவனம் வைத்திருக்க வேண்டும். இல்லேன்னா ஆப்புதான்.
இந்த செயல் அதிகம் நடக்கும் ஏர்போர்ட்டுகள் மும்பை,ஹைதராபாத் மற்றும் பெங்களூரு. ஒரு மாதத்தில் 20 முதல் 30 கேஸ்கள் பதிவு செய்யப்படுகின்றனவாம் (இதுக்கு கூட டார்கெட் வச்சிருக்கானுங்க போல).
Aramaco's Arifuddin அப்படீங்கறவர் தன்னோட குடும்பத்தோட மொத்தம் 6பேர் ஜெட்டாவிலிருந்து இந்தியா வழியாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருக்கிறார்கள். ஹைதராபாத்தில் வந்திறங்கி ஒரு மாதம் தங்கி விட்டு அங்கிருந்து அமெரிக்கா சென்றிருக்கிறார். அமெரிக்காவில் இறங்கி அங்குள்ள இமிக்ரேஷன் கடக்க இருக்கும் போதுதான் மனைவி பாஸ்போர்ர்ட்டிலிருந்த அமெரிக்க விசா பக்கத்தை காணவில்லை என்பதை பார்த்திருக்கிரார். ஹைதராபாத்தில் இருக்கும் போது விசா இருந்திருக்கிறது. வேறு வழியில்லாமல் மொத்த குடும்பமும் இந்தியா திரும்பியிருக்கிறது. மும்பையில் இறங்கியதும் போலீஸ் அரெஸ்ட் செய்து இருக்கிறது. இப்போது கோர்ட்டுக்கும் இமிக்ரேஷன் அலுவலங்களுக்கும் இடையே கிடந்து அல்லாடுகிறார்.

மக்களே கவனமா இருங்க. நீங்களும் சிக்கலில் மாட்டிக்காதீங்க. நண்பர்களிடத்தும் தெரிந்தவர்களிடத்தும் சொல்லி உஷார்ப்படுத்துங்கள். மீடியாவில் வெளியிடப்பட்டால் மிக நல்லது.
பணத்திற்காக அப்பாவிகளை பாடாய்ப்படுத்தும் இந்த ஜென்மங்களை என்ன செய்வது?

தகவல்: நண்பர் முஜீப்., மற்றும் க்ஹாசிம் ஈமெயில் செய்தி
நன்றி!. 


Posted by Sai Gokula Krishna

தப்பு செஞ்சா தப்பே இல்லை!





வேலையில் தவறு செய்யும் ஊழியர்களை சகட்டுமேனிக்குத் திட்டித் தீர்ப்பது
அந்தக் காலம். தவறு செய்த ஊழியர் களிடம் தவறை உணர்த்தித் தட்டிக்
கொடுத்து, மீண்டும் அவர்கள் அந்தத் தவறை செய்ய முடியாதபடிக்கு
மாற்றுவது இந்தக் காலம். அப்படியானால் இப்போது தவறு செய்கிறவர்களை மேலதிகாரிகள் திட்டுவதும் தண்டிப்பதும் இல்லையா..?
''90 சதவிகிதம் குறைந்துவிட்டது. தவறு செய்த ஊழியர்களைத் தண்டிப்பது,
அபராதம் விதிப்பது என்கிற காலம் மலையேறிவிட்டது. தவறு செய்தவர்களை தனிமைப்படுத்துவதைவிட அவர்கள் செய்த தவறை உணரச் செய்வது
இப்போது பல இடங்களில் நடந்து வருகிறது'' என ஆச்சரியமான பதிலைச்
சொல்கிறார் 'மைண்ட் டைனமிக்ஸ் சென்டர்' நிறுவனத்தின் இயக்குனர் முத்தையா ராமனாதன். இந்த புதிய சிந்தனை குறித்து அவர் மேலும் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்...
''அரைத்த மாவையே அரைக்கும் ஊழியர்கள் பெரும்பாலும் தவறு செய்வதில்லை. புழக்கத்தில் உள்ள பழைய நடைமுறைகளையே நூல் பிடித்த மாதிரி செய்து ஒப்பேற்றுபவர்களாக இவர்கள் இருப்பார்கள். தங்கள் வேலையை இன்னும்
திறமையாகச் செய்வது பற்றி இவர்கள் கனவில்கூட நினைக்க மாட்டார்கள்.
இவர்களால் நிறுவனத்துக்கு எந்த வளர்ச்சியும் ஏற்படாது. மாறாக, புதிய புதிய முயற்சிகளில் ஈடுபட்டு, அதனால் ஏற்படும் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்பவர்கள் வித்தியாசமாக யோசித்து வெற்றி காண்பவர்களாக இருப்பார்கள். கற்றலின் ஓர் அங்கமாக தவறுகளை அங்கீகரிக்க வேண்டும் என்பதை நிறுவனங்கள் இப்போது உணரத் தொடங்கி இருக்கின்றன. அதன் விளைவாக 'மேக் மிஸ்டேக்' எனும் புதிய கான்செப்ட் உருவாகியுள்ளது.




உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமொன்று தன் பணியாளர்கள் தேர்வின்போது பிற நிறுவனங்களிலிருந்து தவறு செய்து நீக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. காரணம், அவர் ஏற்கெனவே செய்த தவறை மீண்டும் ஒருமுறை செய்ய மாட்டார் என்பதால்தான். தற்போது சில பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தில் உள்ள குழுக்களில் ஏதாவது ஒன்றில் தவறுகளே வரவில்லை என்றால் அக்குழுவில் உள்ள நபர்களை வேறு குழுவுக்கு மாற்றிவிடுவார்கள். தவறுகள் நடக்கவில்லை எனில் அங்கே புதிய முயற்சிகள் எதுவும் நடக்கவில்லை என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள்.
நிறுவனத்தின் உயர் பொறுப்புகளில் இருக்கும் பலரும் தங்களது தொடக்க
காலத்தில் பல்வேறு தவறுகளைச் செய்தவர்கள்தாம். ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கையாளர் சேவை மையங்கள் வைத்திருக்கக் காரணம் 'நிறுவனத்
தயாரிப்புகளில் நிச்சயம் தவறுகள் வர வாய்ப்பு உண்டு' என்பதை
உணர்ந்ததால்தான். வருடாந்திர பராமரிப்புக் கட்டணம் என்பதே
 தவறுகளைக் கண்டுபிடித்து களையும் செலவினங்களுக்காகவே
வசூலிக்கப்படுவதுதானே'' என்று சொன்ன முத்தையா ராமநாதன்,
ஊழியர்கள் செய்யும் தவறுகளை ஒரு நிறுவனம் எப்படி அணுக
 வேண்டும் என்பது பற்றியும் ஒவ்வொரு பாயிண்ட்டாக விளக்கினார்.

வேலையில் தவறு செய்தால் உடனடியாக அதன் தாக்கத்தை
அறிந்து கொண்டு தலைமையிடம் தெரிவித்துவிடுவது நல்லது. மறைக்காமல் சொல்லப்படும் தவறுகளுக்காக ஊழியர்கள் தண்டிக்கப்பட மாட்டார் கள் என்கிற உறுதிமொழி கொடுக்கப்படும் பட்சத்தில் ஊழியர்கள் எந்தத் தயக்கமும் இன்றி தானாகவே முன்வந்து சொல்வார்கள்.

தவறு நடந்தால் அதைச் செய்தது யார் என்கிற ஆராய்ச்சியில்
 இறங்குவதற்குப் பதில், அதனால் ஏற்படும் பாதிப்பை சரி செய்வதில்
 அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.

தவறு செய்த ஊழியர்களை மன்னித்து விட்டு, அந்தத் தவறு
மீண்டும் நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளில் இறங்க
வேண்டும்.

தவறு செய்த ஊழியர்களை பிற ஊழியர்கள் முன்பு திட்டுவதோ,
 விமர்சிப்பதோ கூடாது. இதனால் அந்த ஊழியர் மனதளவில்
பாதிக்கப்படுவதோடு, நிர்வாகத்தின் இமேஜும் கடுமையாகப் பாதிப்படையும்.

தவறு செய்யும்போது சில புதிய அனுபவங்கள், சிந்தனைகள் கிடைக்கலாம். அதனால் சில புதிய யோசனைகள், சிந்தனைகள் நமக்குத் தோன்றலாம்.

தவறு நடந்துள்ளது என்றால் அது ஏன் நடந்தது என்ற நிகழ்வைத்தான்
 பார்க்க வேண்டுமே தவிர, காரணமானவர்களை கை காட்டுவது
வளர்ச்சிக்கு உதவாது.

நிறைய தவறு செய்தவர்கள் பெரிய அனுபவ சாலிகளாக இருப்பார்கள்.
 நிறைய முறை தவறு செய்த வர்கள் மிகச் சிறந்த வழிகாட்டிகளாக இருப்பார்கள். இப்படிப்பட்ட ஒருவரை வைத்து தவறே செய்யாத பல நூறு பேரை நம்மால் உருவாக்க முடியும்.

சிக்கலான பல பிரச்னைகளுக்கு அபத்தமாக பேசுபவர்களிடமிருந்துகூட
 தீர்வு கிடைக்கலாம். எனவே எதையும் வீண் என்று ஒதுக்கித் தள்ளத்
தேவையில்லை.

தவறு நடந்துவிட்டது என்பதை நாம் கண்டுபிடித்துச் சொன்னால்
மட்டும் போதாது; அதற் கான தீர்வையும் நாம் கண்டுபிடித்துச் சொன்னால்
 மட்டுமே நமக்கு பேரும் புகழும் கிடைக்கும்.

தவறே நடக்காத இடத்தில் எல்லோருமே நல்லவர்களாக இருக்கிறார்கள்.
 ஆனால் தவறு நடக்கும் இடத்திலிருந்துதான் எதிர்காலத்தின் தலை விதியை நிர்ணயிக்கும் தகுதியான தலைவர்கள் உருவாகிறார்கள்.
எனவே தவறுகளே நிறுவனங்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகிற நெம்புகோல் என்பதை மட்டும் மறந்துவிட வேண்டாம்!


- என்.திருக்குறள் அரசி, படம்: என்.விவேக்.
-  நன்றி-விகடன்

இந்திய ரூபாய்க்கு புதிய குறியீடு !!!


புதுடெல்லி: இந்திய ரூபாய்க்கு புதிய குறியீட்டை மத்திய அரசு வெளியிட்டது. டெல்லியில் மத்திய அமைச்சர் அம்பிகா சோனி இந்திய ரூபாய்க்கானப் புதிய குறியீட்டை வெளியிட்டார். கவுகாத்தி ஐ.ஐ.டி., மாணவர் வடிவமைத்த குறியீட்டை மத்திய அரசு தேர்வு செய்தது. சர்வதேச தரத்திலான இந்திய ரூபாய்க்கான குறியீட்டை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 5 பேர் கொண்ட குழு பல்வேறு சின்னங்களை ஆராய்ந்து இறுதியில் ஐஐடி கான்பூரில் படித்த மாணவரான உதயக்குமார் வடிவமைத்த சின்னத்தை தேர்வு செய்துள்ளது.

மொத்தம் ஐந்து சின்னங்களை இந்தக் குழு ஆராய்ந்து அவற்றிலிருந்து உதயக்குமாரின் சின்னத்தை தேர்வு செய்து மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்ததில் மத்திய அமைச்சரவை இந்த சின்னத்தை தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது. தேவநாகரி எழுத்தான ‘Ra’ மற்றும் ரோமன் எழுத்தான ‘R’ ஆகியவற்றின் கலவையாக உதயக்குமார் உருவாக்கிய சின்னம் உள்ளது. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் எண்ணத்தையொட்டி இந்த சின்னம் அமைந்துள்ளது. தற்போது தேர்வாகியுள்ள சின்னத்தை நிதியமைச்சகம் அங்கீகரித்துள்ளது.

இந்த சின்னத்தை வடிவமைப்பதற்காக போட்டி ஒன்றையும் நிதியமைச்சகம் அறிவித்திருந்தது. இதற்கான பரிசாக ரூ. 2.5 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்திய ரூபாய்க்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் வகையில் டாலர், யென், யூரோ உள்ளிட்டவற்றின் வரிசையில் தனி சின்னத்தை உருவாக்க மத்திய அரசு தீர்மானித்தது. புதிய சின்னம் உருவாக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இனிமேல் ‘Rs’ என்ற எழுத்து இனிமேல் பயன்படுத்தப்பட மாட்டாது. தற்போது ரூபிஸ் என்ற இந்த எழுத்தை பாகிஸ்தான், நேபாளம், இலங்கை ஆகியவையும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

உதயக்குமார் உருவாக்கியுள்ள சின்னம் இந்தியாவின் மூவண்ணம் மற்றும் கணிதத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. சின்னத்தில் உள்ள இரண்டு கிடைமட்டக் கோடுகளுக்கு இடையில் உள்ள இடம் இந்தியாவின் தேசியக் கொடியை நினைவூட்டுவதாக உள்ளது. இரண்டு பக்கவாட்டுக் கோடுகள் ‘equals to’ என்பதை நினைவூட்டுவதாக உள்ளது. அதாவது உலகப் பொருளாதாரத்திற்கு இந்தியப் பொருளாதாரம் சமமானது, எந்தவகையிலும் குறைந்ததில்லை என்பதை குறிப்பிடுவதாக இது அமைந்துள்ளது. இந்நிலையில் இன்னும் 6 மாதங்களில் இந்த புதிய குறியீடு நடைமுறைக்கு வரும் என்று அம்பிகா சோனி தெரிவித்துள்ளார்.

- தினகரன்