திருக்குறள்

சத்தமில்லாமல் அதிகரிக்கும் 'ஷாப்பிங்' கலாசாரம்... அவசியமா...ஆடம்பரமா...?

ஷாப்பிங்... பதினைந்து, இருபது வருடங்களுக்கு முன் இந்த வார்த்தை, பெரும் பணம் படைத்த வர்களுக்கு அந்நியோன்யமாகவும், மத்தியத்தர குடும்பங்களுக்கு அந்நியச் சொல் லாகவும் இருந்தது. ஆனால், இன்று?!


ஒரு காலத்தில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள், முகூர்த்த நாட்கள், ஊர்த்திருவிழா என விசேஷ காலங்களில் மட்டும்தான் கடைகள் மூச்சுத் திணறும். இப்போது வாரத்தின் ஏழு நாட்களும் கடை வீதியின் பெரிய தெருக்களும், ஒவ்வொரு சிறிய கடைகளும்கூட படு சுறுசுறுப்பாகவே இருக்கின்றன. எதனால் இந்த மாற்றம், இது வரவேற்கத்தக்கதுதானா, தனி நபர் வருமான உயர்வு, பணப்புழக்கம், நுகர்வோர் சந்தை என்று இதற்குள் இயங்கும் காரணிகள் என்னென்ன... பேசினோம் சிலரிடம்... விடைபெற!

ஷாப்பிங் செய்வதை ஒரு ஹாபி போல் ஹாயாக செய்துகொண்டிருக்கும் சென்னையைச் சேர்ந்த ஷர்மி, "எனக்கு ஷாப்பிங் பண்றதுனா ரொம்ப இஷ்டம். இன்னிக்கு ஈவ்னிங், இந்த வீக் எண்ட்னு எப்பவெல்லாம் தோணுதோ... அப்பவெல்லாம் ஷாப்பிங் கிளம்பிடுவேன். டிசைன் டிசைனா டிரெஸ், ஜீன்ஸ் சப்பல்ஸ், சேண்டல்ஸ், இயர் ரிங்ஸ்னு நிறைய வாங்குவேன். வெரைட்டியா டிரெஸ் பண்றது, அதுக்கு மேட்சா கம்மல், பேங்கிள்ஸுனு டிசைனிங் அக்ஸசரிஸ் போட்டுக்கறதுக்காகதான் இப்படி கடை கடையா ஏறி, இறங்குறேன். ஜஸ்ட், ஐ லவ் ஷாப்பிங்!" என்றவர்,

"மாசத்துக்கு இதுக்காக சில ஆயிரங்கள் செலவாகுது. இருந்தாலும் இட்ஸ் ஓகே!" என்றார் அலட்டிக் கொள்ளாமல்.

யங்ஸ்டர்கள்தான் இப்படி... இளம் அம்மாக்கள் எப்படி? அதைத் தெரிந்துகொள்ள பெங்க ளூருவை சேர்ந்த வசுமதியுடம் பேசியபோது... "என்னோட காலேஜ் நாட்கள்ல விதம்விதமா கம்மல், வளையல், கழுத்துக்கு மாலை, பொட்டுனு வாங்கிக் குவிப்பேன். அப்புறம் டிகிரி முடிச்சு வேலைக் குப் போக ஆரம்பிச்சதும், வெரைட் டியா ஹேண்ட் பேக்ஸ், சப்பல்ஸ் மேல பயங்கற கிரேஸ்; வாங்கிக் குவிச்சு வச்சேன். கல்யாணம் ஆன தும், அந்த டேஸ்ட் மாறிடுச்சு. இப்ப எல்லாம் வீட்டை அழகா காட்டுற டெகரேட்டிவ் வால் பெயின்ட்டிங்ஸ், டிஸைனிங் வால் ஹேங்கிங்ஸ்னு நிறைய வாங்குறேன்.

எனக்கு 4 வயசுல ஒரு பொண்ணு, ஆறு மாச வயசுல ஒரு பையன்னு ரெண்டு குழந்தைங்க. இப்ப ஷாப்பிங்னாலே அவங்களுக்குத்தான்னு ஆயிடுச்சு. என் பொண்ணுக்கு கலர்ஃபுல்லா கம்மல், வளையல் வாங்க ஆரம்பிச்சுட்டேன் (உலகம் உருண்டைதான்!). அவளுக்கு டிராயிங்ல ஆர்வம் அதிகம்ங்கிறதுனால கிடைக்கிற கலரிங் புக்ஸ், பென்சில்ஸ், கலர் பெயின்ட்ஸ் அதிகமா வாங்குறேன்" என்று மூச்சுவிடாமல் பேசி முடித்தார்.

ஷாப்பிங்குக்காக பெண்கள் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்Õ என்பது காலகாலமாக சொல்லப்படும் விஷயம்தான். அண்மையில் வெளியாகியிருக்கும் ஒரு சர்வேகூட அதைத்தான் சொல்கிறது. அது பொய்யில்லை என்பதைதான் உறுதிபடுத்துகிறது இவர்களின் உற்சாகப் பேச்சும்!

" 'இது வேணும்... கடையில போய் வாங்கணும்' என்று அத்தியாவசிய தேவைக்காக கடைக்குச் சென்ற நிலை மாறி, இன்று 'ஷாப்பிங்' என்பது பொழுதுபோக்காகவும், பணப்புழக்கத்தை குறிக்கும் சங்கேத பாஷையாகவும் மாறித்தான் போய்விட்டது..." என்று ஆரம்பித்த பெங்களுரூ, 'இந்தியா பிளாசா'வின் ஃபௌண்டர் - சி.இ.ஓ-வான வைத்தீஸ்வரன், "இந்த மாற்றத்துக்கு மூன்று முக்கிய காரணங்களை அடையாளப்படுத்தலாம்..." என்று ஆரம்பித்தார்...

"முதல் காரணம் பொருளாதார மாற்றம். இன்றைய காலகட்டத்தில் நடுத்தர குடும்பங்களின் பொருளாதாரம், நிதி நிலைமை உயர்ந்து இருக்கிறது. மத்திய, மாநில அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்ந்திருக்கிறது. அதேபோல், பன்னாட்டுத் தனியார் கம்பெனி களின் வருகையும், அவர்கள் தரும் சம்பளமும் தனிநபர் வருமானத்தையும் குடும்ப வருமானத் தையும் உயர்த்தி இருக்கிறது. அதனால், பணப் புழக்கம் அதிகமாகியுள்ளது. கையில் காசு இருந் தால் இதை வாங்கலாமா... அதை வாங்கலாமா என்று யோசிப்பது இயல்புதானே?!

இரண்டாவது காரணம், 20 வருடங்களுக்கு முன்பு பெண்கள் அதிகபட்சம் அரசு ஊழியர்களாகவோ, வங்கி, ரயில்வே துறை பணியாளர்களாகவோதான் வேலை பார்த்தார்கள். இன்று பன்னாட்டு கம்ப்யூட்டர் நிறுவனங்கள், கால் சென்டர்கள், பன்னாட்டு வங்கிகள், கார் கம்பெனிகள் என வேலை வாய்ப்புகள் விரிவடைந்திருக்கின்றன. அங்கெல்லாம் பெண்களின் கூட்டமும் ஆளுமையும் அதிகரித்திருக்கிறது; அதனால் அவர்களின் கையில் பணம் அதிகமாகப் புழங்குகிறது. அதை அவர்களின் 'ஃபேவரைட்' விருப்பமான 'ஷாப்பிங்'ல் செலவழிக்கிறார்கள்

மூன்றாவது, சமூக மாற்றம். பன்னாட்டு கம்பெனிகளின் வரவால், பன்னாட்டுக் கலாசாரத்தைக் கற்றுக் கொண்டோம். அவர்களைப் போலவே பீட்ஸா, பர்கர், கோக் என சாப்பிடவும், அவர்களைப் போலவே ஆடை உடுத்தவும் கற்றுக் கொண்டோம். அதனால்தான், இன்று உலகின் மிகப்பெரிய பிராண்டட் கம்பெனிகள் எல்லாம் இந்தியாவில் கடை விரித்திருக்கின்றன. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், உலகப் பொருளாதார மந்த நிலையின்போதுகூட இந்தியாவில் இந்த கம்பெனிகளின் வியாபாரம் குறையவில்லை" என ஆச்சர்ய தகவல்களோடு காரணங்களை முடித்தார் வைத்தீஸ்வரன்.

"ஷாப்பிங்கில் பெண்கள் அதிக பணத்தை, நேரத்தை செலவிடுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம், நுகர்வு கலாசாரத்தை நிமிடத்துக்கு நிமிடம் வளர்க்கும் மீடியாக்கள்தான்" என்று சரவெடியாகவே ஆரம்பித்தார் கவிஞர் அ.வெண்ணிலா.

"10, 15 வருடங்களுக்கு முன் அதிகபட்சம் ஐந்தாறு டி.வி. சேனல்கள்தான் இருந்தன. இன்று நூறுக்கும் மேற்பட்ட சேனல்கள் வந்து விட்டன. நிமிடத்துக்கு பத்து விளம்பரங்கள். முகப்பூச்சு கிரீம்களுக்கு மட்டும் 100 விளம்பரங்கள். சோப், பவுடர், டிரெஸ், நகை, மிக்ஸி, கிரைண்டர், ஃப்ரிட்ஜ், கம்ப்யூட்டர் என்று மட்டுமில்லை... சாப்பாட்டில் உப்பிலிருந்து மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சிப்ஸ், சாக்லேட், பிஸ்கட் என எல்லாவற்றுக்கும் விளம்பரங்கள்... விளம்பரங்கள்.

இந்தத் தலைமுறையினர் விளம்பரங்களோடு சேர்ந்து வளர்கிறார்கள். 'இது நம்மகிட்ட இருக்கு, இது இல்ல; வாங்கணும்...' என்று விளம்பரப் பொருட்களில்தான் தங்களின் வாழ்க்கையைப் பொருத்திப் பார்க்கிறார்கள். இதன் அசுரத்தனமான ஆளுமை, விளம்பரங்களில் மின்னும் பிராண்டட் பொருட்களின் பின்னால் நம்மை ஓடவைக்கிறது. அந்தப் பொருள் தேவைப்படுகிறதோ இல்லையோ... வாங்கி வைத்துக் கொள்கிறோம் நாம். நம் வீட்டில், சமையல் அறையில் வாங்கி அடுக்கி வைத்திருக்கும் எத்தனைப் பொருட்களை முழுமையாகப் பயன்படுத்துகிறோம் நாம்...?" என்று கேள்வி வைத்தவர்,

"அடுத்து, இன்று தனக்குப் பிடித்த சினிமா நட்சத்திரங்கள், செலிப்ரிட்டிகளின் உடைகளைப் போல தாங்களும் 'சீஸனல்' உடைகள் வாங்கி குவிக்கும் மனோபாவத்தில் இருக்கும் இளைஞர்கள் அதிகம். 'என்னிடம் இத்தனை புடவை, சுடிதார் இருக்கிறது' என்று பெருமையாக சொல்லும் பெண்களையும் நாம் பார்க்கிறோம். இப்படி ஆசைக்காக, ஆர்வக் கோளாறுக்காக 'ஷாப்பிங்' அடிக்ஷனில் காசைக் கரியாக்குவதற்குப் பதில், அதை ஒரு சேமிப்பாக, முதலீடாக ஆக்கலாம்தானே?" என்று சொல்லி யோசிக்க வைத்தவர்,

"முந்தைய தலைமுறை, எது தனக்கு மிகத் தேவையோ, அதை மட்டும் வாங்கினார்கள். நாம்தான் பயன் இருக்கிறதோ இல்லையோ... எல்லாவற்றையும் வாங்குகிறோம். இந்த வேறுபாடுதான் ஷாப்பிங் கலாசாரத்தை பம்பரமாக சுழல வைத்துக்கொண்டு இருக்கிறது. அதனால்தான், இந்தியாவில் கல்யாண ஷாப்பிங்கில் மட்டும் 2,000 கோடி ரூபாயைக் கரைக்கிறோம்!

அவசியத்துக்குப் பொருளா, ஆடம்பரத்துக்குப் பொருளா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்!" என்றார் முத்தாய்ப்பாக.

மிகச் சரிதானே?!

- நாச்சியாள்
அவள் விகடன்

கமல் தமிழ் இனத் துரோகியா?

இலங்கையில் ஜூன் மாதம் நடக்க விருக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் விழாவிற்கு எதிரான கிளர்ச்சிகள் எதிரொலிக்கத் துவங்கியிருக்கிறது. இந்த விழாவின் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ள பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சனின் வீட்டை முற்றுகையிட்டு "அமிதாப்பச்சனே...... ஈழத் தமிழினத்தை கொன்று குவித்த ராஜபக்சே அரசு நடத்தும் இந்த விழாவில் கலந்து கொள்ளக் கூடாது' என்று ஆர்ப்பரித்துள்ளனர் மும்பை யில் உள்ள "நாம் தமிழர்' இயக் கத்தினர். அப்போது வீட்டில் இருந்த அமிதாப், தனக்கு எதிராக போராட்டம் நடத்திய "நாம் தமிழர்' இயக்கத்தின் நிர்வாகிகளை அழைத்து அவர்களின் உணர்வுகளை கேட்டறிந்ததுடன் இது பற்றி என் நிலையை விரைவில் தெரிவிக்கிறேன்'' என்று கூறியிருக்கிறார்.


இதே விழாவில் தமிழகத்தை சேர்ந்த பிரபல நடிகர் களும் தொழில்நுட்பவியலாளர்களும் கலந்துகொள்ள தீர்மானித்திருப்பதால் அவர்களுக்கு எதிரான போராட்டங்களையும் கிளர்ச்சிகளையும் தமிழகத்தில் நடத்த, நாம் தமிழர் இயக்கம், இந்து மக்கள் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கண்ணனிடம் கேட்டபோது, ""இந்திய தொழில் மற்றும் வர்த்தகத்திற்கான கூட்டமைப்பின் கீழ் ஐ.ஐ.எஃப்.ஏ. என்கிற சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடத்தப்படுகிறது. முதன் முதலில் 2000-த்தில் துவக்கப்பட்ட இந்த நிகழ்வு ஒவ்வொரு வருஷமும் சர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டில் நடக்கிறது. உலக நாடுகளில் இந்திய திரைப்படத்தின் தொழில் வணிகத்தை பெருக்கவும் ஹிந்தி திரைப்படங்களை வெளிநாடுகளில் முதன்மைப் படுத்துவதுமே இதன் முக்கிய நோக்கம். இந்திய திரைப்பட விருதுகள் என்றாலும் இதுவரை ஒரு தமிழ்த் திரைப்படத் திற்கும் விருது வழங்கப்பட்டதில்லை.

இதற்கு முன்பு லண்டன், துபாய், நெதர்லாந்த் உள்ளிட்ட பல நாடுகள் இந்த விழாவை நடத்தியிருக்கிறது. அப்போது அந்த நாடுகளின் சுற்றுலா பொருளாதாரம் பன்மடங்கு அதி கரித்தது. இதனாலேயே இந்த விழாவை நடத்த பல நாடுகள் போட்டி போடுகின்றன. இந்த விழாவை இந்த வருஷம் தங்கள் நாட்டில் நடத்த கனடா, அயர்லாந்த், தென்கொரியா ஆகிய 3 நாடுகள் போட்டி போட்டது. இறுதியாக தென்கொரியாவில் நடத்துவ தென்று முடிவெடுக்கப்பட்டது. பிப்ரவரி 27 வரை இதான் முடிவு.

திடீரென்று இலங்கையின் சுற்றுலா அமைச்சர் அச்சலாஜகோடா, "சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் விழாவை இலங்கை நடத்துகிறது' என்று அறிவித்தார். இது பற்றி நாங்கள் விசாரித்த போது, போர் நடந்த காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இலங் கையை காப்பாற்றிக்கொண்டிருந்தது ஐரோப்பிய நாடுகள் வழங்கி வந்த வர்த்தகத்திற்கான வரிச்சலுகைகள்தான். யுத்தத்திற்குப் பிறகு ராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்காக இந்த வரிச்சலுகையை ஒட்டுமொத்தமாக ரத்து செய்தன ஐரோப்பிய நாடுகள். இதனால் இன்றளவும் பொருளாதார வீழ்ச்சியில் கடுமையாக பாதிக்கப்பட்டி ருக்கிறது ராஜபக்சே அரசு. இதனை சரிக்கட்டத்தான் இந்திய அரசின் உதவியுடன் விழாவை இலங்கைக்கு கடத்தியிருக்கிறார் ராஜபக்சே. இந்த விழாவை நடத்துவதன் மூலம் உலக நாடுகளில் உள்ள தொழில் நிறு வனங்களும் சுற்றுலா பயணிகளும் எவ்வித பயமுமின்றி இலங்கைக்குள் வருவார்கள். அதன் மூலம் இலங்கை யின் பொருளாதாரம் மேம்படும் என்று கணக் கிடப்பட்டுள்ளது.

அதனால் இந்த விழாவை பிரமாண்டப்படுத்த ஹிந்தி திரைப்பட சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், இவரது மனைவி ஜெயாபச்சன், கரன் ஜோகர், மன்மோகர் ஷெட்டி, பகலஜ் நிஸ்லாணி, ரமேஷ்ஷிப்பி, ஷான் சிராப், வினோத்கண்ணா உள்ளிட்ட பிரபலங்களை விழாவின் தூதராக நியமித்துள்ளது இலங்கை. தவிர அமிதாப், ஷாருக்கான், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட ஹிந்தி பிரபலங்களின் ஆட்டம் பாட்டம் என கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. இதில் இந்தியாவி லிருந்து அனைத்து மொழிகளையும் சேர்ந்த நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், கேமராமேன்கள், டெக்னிஷியன்கள் கலந்துகொள்கிறார்கள். இவர்களை தவிர இந்தியா உள்பட சர்வதேச நாடுகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட தொழில்நிறுவனங்களும் கலந்துகொள்கிறது.

இந்த விழாவிற்கு ரஜினிகாந்த், கமலஹாசன், சூர்யா, மாதவன், விஜய், அஜீத், டைரக்டர் மணிரத்னம் உள்ளிட்டோரை கூட்டமைப்பின் வாயிலாக அழைத்திருக்கிறது இலங்கை அரசு.

ஈழத் தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்சே அரசின் அழைப்பை ரஜினிகாந்த் மட்டும் நிராகரித்து விட்டார். கமலஹாசனும் மணிரத்னமும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களின் நிலை என்ன வென்று தெரியவில்லை.

கடந்த வருடம் ஒலிம்பிக் போட்டி சீனாவில் நடந்தது. ஒலிம்பிக் ஜோதியை இந்தியா வுக்கு எடுத்து வந்தபோது, திபெத்தியர்களை சீனா அடி மைப்படுத்தி வைத்துள்ளதை சுட்டிக்காட்டி ஜோதியை வாங்க மறுத்தவர் இந்திய கால்பந்து டீமின் கேப்டன் பாய்சுங் பூட்டியா. அவரது உணர்வுகளில் 1 சதவீதமாவது நமது ஹிந்தி திரைப்படத் துறையினருக்கும் தமிழகத் திரைப்படத் துறையினருக்கும் இருக்கவேண்டாமா? இலங்கையில் நடக்கும் இந்த விழாவில் கலந்துகொள்ள தமிழக திரைத்துறையினர் யார் சென்றாலும் அவர்களுக்கு எதிரான போராட்டம் தீவிர மடையும்'' என்று விரிவாகவும் ஆவேசமாகவும் பேசினார் கண்ணன்.

அமிதாப்பிற்கு எதிரான போராட் டங்களை முன்னெடுத்துள்ள நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமானிடம் பேசிய போது,

""மும்பையில் மட்டுமல்ல தமிழகத்திலும் இந்த போராட்டங்களை முன்னெடுக்க விருக்கிறோம். இலங்கைக்கு செல்வதை பரிசீலிப்பதாக அமிதாப் சொல்லியிருக்கிறார். தமிழர்களின் உணர்வுகளையும் ஈழத்தில் ராஜபக்சே நடத்திய கொடூரங்களையும் திரைப்படத்துறையினர் உணர வேண்டும். தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக இவ்விழாவில் யார் கலந்துகொண்டாலும் அவர்கள் தமிழினத் துரோகிகள். அந்த துரோகிகளை தமிழகத்தில் நுழைய அனுமதிக்க மாட்டோம். அவர்களுக்கு எதிரான எங்களின் கிளர்ச்சிகள் வீரியமாக எழும்'' என்கிறார் கோபமாக.

-இளையசெல்வன்
நக்கீரன்.

ஐ.பி.எல் பார்க்கிற தமிழா கொஞ்சம் இவங்களையும் பாரு..

ஒரு வார இதழில் வெளிவந்த கட்டுரை..

உலகத்தின் கண்கள் பார்த்திருக்க, உப்புக்காற்று மெள்ள மெள்ள உயிர் குடிக்க, நடுக்கடலில் தத்தளிக்கும் ஈழத்தமிழர்கள் இன்னமும் கரை சேரவில்லை. ஆறு மதங்களுக்கும் மேலாக ஒரு சிறிய படகில் 260க்கும் அதிகமான தமிழர்கள் 'எங்களை அகதிகளாக என்றுக் கொள்ளுங்கள் ' என அனைத்துலகம் நோக்கி கையேந்தி நிற்கின்றனர். ஆஸ்திரேலியா மறுக்கிறது. இந்தோனேசியா எதிர்கிறது. என்ன செய்வது, எங்கு போவது என்று தெரியாமல் தத்தளித்து நிற்கின்றனர் ஈழத்தமிழர்கள்.


01 .10 .2009 இல் இலங்கையில் தொடங்கிய பயணம் இது. ஆஸ்திரேலியாவுக்கு சென்று அகதிகளாக தஞ்சம் கோருவது அவர்களின் நோக்கம். இடையில் இந்தோனேசியா கடற்படை மடக்க, 'நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்றது ஆஸ்திரேலியா. 'பாதுகாப்பை'க் காரணம் காட்டி இன்னமும் மறுத்துக்கொண்டே இருக்கிறது. ஆறு மதங்கள் முடிந்துவிட்டன. இலங்கையில் யுத்தமும் முடிந்துவிட்டது. இன்னமும் இவர்களின் கடல் வாழ்கை முடியவில்லை. படகில் மிக குறைந்த இடத்தில 260 பேர் நெருக்கி அடித்து வாழ்வதால், நோய்கள் பெருகிக்கிடக்கின்றன. மருத்துவ வசதிகள் இன்றி ஒருவர் இறந்தும் விட்டார். உண்ணா விரதமும் இருந்து பார்த்தார்கள். ஒன்றும் நடக்க வில்லை. உலகமே பார்த்திருக்க 260 பேரை கடல் சிறை வைத்து கொலை செய்து கொண்டு இருக்கிறோம். ஆனால் இதை ஒரு செய்தியாக கூட உலகம் பேசவில்லை. தீபாவளிக்கு பட்டாசும், பொங்கலுக்கு கரும்பும் விற்கும் 'சீசன் பிசினஸ்'போல இலங்கையில் யுத்தம் நடந்த போது மட்டும் அதை பேசி மறந்து போனோம்.

கப்பலில் இருக்கும் சொந்தங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை தொலை பேசுகின்றனர். 'எதாவது செய்யுங்கள் அண்ணா'என்று கதறுகின்றனர். ஓங்கி அழுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும் என்னால்?. அழுதால் கூட இறையாண்மைக்கு கேடு வந்துவிடும் என்கிறார்கள். மனிதர்கள் சாவதைப்பற்றி இங்கு யாருக்கும் கவலை இல்லை. இறையாண்மைக்கு மட்டும் கெட்டு விடக்கூடாது. புலிகளை பயங்கரவாதிகள் என்று சித்தரித்து கொன்றொழித்தது. எங்கள் இனத்தை கதறடிக்கவும் சிதறடிக்கவும் தானா?.. வெடிக்கும் கோபத்துடன் சீறுகிறார் நான் தமிழர் இயக்கத்தின் சீமான்.

தமிழர்கள் மீது இவ்வளவு அக்கறை கொண்டுள்ள இந்திய பேரரசு ..எதை எதையோ உளவு பார்க்கிற இந்திய பேரரசுஇந்தோனேசிய கடற்கரையில் மட்டும் தத்தளிக்கும் தமிழர்களை மட்டும் அறிந்திருக்கவில்லையா. கர்பிணிப்பெண்கள், சின்னக்குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் என வாழ வழியற்றவர்கள் தான் அந்த படகில் உள்ளனர். வேறு கதியற்ற அவர்களை அன்போடு அரவணைத்து எங்கள் நாட்டில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் இலங்கை தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்களோடு சேர்ந்து நீங்களும் வாழுங்கள் என அழைத்து வருவதில் இந்தியாவுக்கு என்ன பிரச்சனை?. 25 ஆண்டுகால யுத்தத்தில் ஈழத்தமிழர்கள் ஆயிரக்கணக்கனோர் புலம் பெயர்ந்து தமிழகத்தில் வாழ்கின்றனர். அவைகளோடு சேர்த்து இந்த 260 பெரும் வாழ்வதில் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது.

இதற்கு முதலில் தமிழக அரசு அவர்களை தமிழ்நாட்டுக்கு அனுப்புங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று மத்திய அரசிடம் முறையிட வேண்டும். அதான் பிறகு அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு, இந்தியா அரசு தலையிட்டு அவர்களை அழைத்து வார வேண்டும். ஆனால் தமிழக அரசு, 'இலங்கையில் ஓர் இனப்படுகொலை நடந்திருக்கிறது' என்று ஒரு தீர்மானம் கூட நிறைவேற்ற முயற்சிக்கவில்லை. தமிழர்களை நடுக்கடலில் சாக விட்டு புதிய சட்டமன்ற வளாகமும் உலக செம்மொழி மாநாடும் யாருக்காக?. இதை தமிழக அரசு என்றோ தமிழனுக்கான அரசு என்றோ நாங்கள் எப்படி நம்புவது?. எல்லா தேசங்களுக்கும் ஒரு இறையாண்மை இருப்பது போல் தமிழன் என்ற தேசிய இனத்துக்கு என ஒரு தனித்த இறையாண்மை இருக்கிறது. அதை என் மறந்தீர்கள்?.தலையை பறிகொடுத்துவிட்டு அப்புறம் எங்கே தமிழனென்று சொல்லி தலை நிமிர்ந்து நிற்பது.?

இந்தியா கடல் எல்லையில் கிட்டத்தட்ட 500 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தார்கள். அதனால் சுட்டோம். என இலங்கை அரசு காரணம் சொல்லியது. ஆனால் என் நாட்டு மீனவன் ஆயுதம் கடத்தினான் என்று சுட்டுக்கொன்றாயே .. அவன் கடத்திய ஆயுதம் எங்கே..? என ஒருமுறை கூட இந்தியா கேட்டது இல்லை. இலங்கையும் கொடுத்தது இல்லை. உலகத்தின் வலிமை மிக்க ராணுவம் கடல் எல்லையில் தான் நாட்டு மீனவனுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆனால் 500 பேர் சுடப்பட்ட போது ஒரே ஒரு தடவையேனும் இந்தியா கடற்படை நம் மீனவர்களை காப்பாற்ற முயற்சித்தது இல்லை. அல்லது சிங்கள கடற்படையை திருப்பி தாக்கியதாக ஒரு செய்தி கூட இல்லை. அப்படியானால் நீங்கள் செய்வது பாதுகாப்பு பணியா?. இல்லை உல்லாசப் பயணமா?..அன்று புலிகள் இருந்தார்கள் சரி..இன்று தான் யாரும் இல்லையே..இப்போதும் தமிழக மீனவனை சிங்கள ராணுவம் சுடுகிறது. அடிக்கிறது. வழக்கம் போல இந்திய ராணுவம் வேடிக்கை பார்கிறது.

இத்தனை கோடி மக்கள் வேடிக்கை பார்த்திருக்க இந்த நவீன யுகத்தில் பட்டினியிலும் பிணியிலும் அம்மக்களை தவிக்க விடுவது பெரும் பாவம். இல்லை எனில் கடலில் கதறி துடிக்கும் ஒவ்வொரு தமிழனின் குரலும் இந்த இனத்தின் நிங்காச் சாபமாக மாறும். இத்தனை கோடி மனிதர்கள் வாழும் உலகில் தங்களுக்கு ஓர் ஆதரவு இல்லையே என்று ஏங்கி ஏங்கி எம் தமிழ் மக்கள் உதிர்க்கும் ஏக்க வெப்பம் ஒட்டுமொத மனித குலத்துக்கும் நிரந்தர சாபமாகும்..!

காவல் நிலையங்களில் வாகனக் குவியல்

காவல் நிலையங்களுக்கு அடையாளமாக இருப்பது அதன் சிவப்பு நிற வண்ணம் மட்டுமல்ல; வளாகம் நிறைய குவிந்து கிடக்கும் அழுக்கேறிய வாகனங்களும் தான். இற்று, இரும்பெல்லாம் தூளாகி, உள்ளுறுப்புகள் களவு போன பின், மண்ணோடு மண்ணாக மட்கிப் போவதற்கு நாள் பார்த்துக் கிடக்கும் இந்த வாகனங்களுக்கு உரியவர்கள் யாரோ? எங்கே இருக்கிறார்களோ?

தமிழக காவல் நிலையங்களிலும், ஆர்டிஓ அலுவலகங்களிலும் வீணாய் கிடக்கும் வாகனங்களின் எண்ணிக்கை லட்சத்தை தொடும். மதிப்போ நூறு கோடியை தாண்டும் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இவற்றில் பாதி வழக்கு விசாரணையில் இருப்பவை. மீதி கேட்பாரில்லாதவை.

திருட்டு, கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட வாகனங்கள் தான் இங்கே இப்படிக் கிடக்கின்றன. பறிமுதல் செய்த போலீசாருக்கு பாதுகாக்க இடமில்லை. ஏலம் விட வேண்டிய நீதிமன்றங்களுக்கோ ஏனோ நேரமில்லை. விளைவு, நாள் கணக்கு, மாதக் கணக்கு, வருடக் கணக்கை கடந்து வெள்ளி விழா காணும் வாகனங்கள் கூட இங்கே உண்டு. பிடிபடும்போது உருப்படியாக இருந்த வாகனங்கள், இங்கே உள்ளுறுப்பை இழந்து வெறும் கூடாக கிடப்பதற்கு யார் காரணம் என்பதை சொல்லத் தேவையில்லை. ஆனால், நல்ல நிலையில் இருந்தபோதே இவற்றை ஏலம் விட்டிருந்தால், அரசுக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைத்திருக்கும். விலை போகக்கூடிய பொருள் விரயமாவதற்கு என்ன காரணம்?

கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஒரு நடைமுறை இருக்கிறது. பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் உடனடியாக ஏலம் விடப் படுகின்றன. அதில் கிடைக்கும் தொகை, வங்கியில் டிபாசிட் செய்யப்படுகிறது. 10 ஆண்டோ, 20 ஆண்டோ வழக்கு முடியும் நாளில், அந்த பணம் பெரும் தொகையாகி விடுகிறது. பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாகவோ அல்லது அரசுக்கு வருவாயாகவோ போய்ச் சேருகிறது. அரியானா போன்ற மாநிலங்களில், பிடிபட்ட வாகனங்கள் பற்றிய முழு விபரங்கள் உடனடியாக இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. உரிமையாளர்களுக்கு உதவ இந்த ஏற்பாடு. அந்த நடைமுறை இங்கே வர என்ன தடை?

திருட்டும் வாடகையும்...


காவல் நிலையங்களில், போக்குவரத்து துறை அலுவலகங்களில், நீதிமன்றங்களில் போட்டு வைத்திருக்கும் கார், ஆட்டோ, லாரி, பைக் போன்ற வாகனங்களின் உதிரி பாகங்கள் ஒவ்வொன்றாக காணாமல் போய்விடுவது வாடிக்கை. சின்னச்சின்ன உதிரிபாகங்கள் மட்டுமல்ல, இன்ஜின் போன்ற பெரிய பாகங்களும் மாயமாகி விடுகின்றன. எஞ்சியவை மழைக்கும், வெயிலுக்கும் பலியாகி விடுகின்றன.

மணல் லாரி மோதிய விபத்து தொடர்பாக ஒரு வழக்கு. லாரி மோதியதில் பாதிக்கப்பட்டவர் நிவாரணம் கோரி தொடர்ந்திருந்தார். விசாரணையில் காப்பீடு நிறுவனம் அதிர்ச்சி தகவலை அளித்தது. Ôஅந்த லாரி, மணல் திருட்டு தொடர்பாக காவல்துறையால் கைப்பற்றப்பட்டது. அவர்கள் பொறுப்பில் இருந்த வண்டி. எனவே அந்த வண்டிக்கான காப்பீடு ரத்தாகி விட்டது. நிவாரணம் அளிக்க முடியாதுÕ என்று சொல்லிவிட்டது. அதை ஏற்ற நீதிமன்றம், காவல்துறை பொறுப்பில் இருந்த லாரி எப்படி சாலைக்கு வந்தது என்று விசாரிக்க உத்தரவிட்டது. இதுபோல பல வாகனங்களை வாடகைக்கு விடப்படுவதும் தொடர்கிறது.

கோவையில் ஒரு சம்பவம். கள்ள நோட்டு கும்பல் பிடிபட்டபோது, கார் கைப்பற்றப்பட்டது. அந்த வாகனம் பற்றிய விசாரணையில், அது ஆர்எஸ் புரம் காவல் நிலையத்தால் பறிமுதல் செய்யப்பட்ட ஒன்று எனத் தெரிந்தது. பறிமுதல் செய்த வாகனத்தை, கேட்க ஆளில்லை என்பதால், கள்ளநோட்டுக் கும்பலுக்கு விற்று விட்டனர். அதேபோன்ற குற்றச்சாட்டுக்காக பீளமேடு போலீசில் இரண்டு அதிகாரிகள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டது எல்லாம் பழைய வரலாறு.

அதுக்கு உதவும் கார்களுக்கும் இதே நிலைமை

செல்போன் சகிதமாக காரில் அழகிகளை வைத்து நடத்தப்படும் நவீன விபசாரம் 10 ஆண்டுகளாக பழக்கத்தில் இருக்கிறது. சிக்கும் போது வாகனங்களும் சாட்சிப் பொருளாகி விடுகின்றன. அதுமட்டுமல்ல நட்சத்திர விடுதிகளில் விபசார ரெய்டு நடத்தும் போது மாட்டும் விஐபிகளின் கார்களும் தூக்கிச் செல்லப்படும். அதன் பிறகு இந்த வாகனங்கள் எதற்கும் பயன்படாமல் அப்படியே காவல் நிலையங்களில் வீணாய் போடப்படும். சென்னை சிந்தாதரிப்பேட்டை விபசார தடுப்பு காவல் பிரிவு அலுவலகத்தில் மட்டும் 20 கார்கள் கிடக்கின்றன.

இங்கே மட்டும் தான் இந்த நிலைமை என்றில்லை. போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகம், சென்னை ராஜாஜி பவனில் உள்ளது. இதன் வாசலில் 42 வாகனங்கள் கிடக்கின்றன. 20 ஆண்டுகளாக கிடக்கும் வாகனங்களும் இதில் உண்டு. சில கோடிகள் மதிப்புள்ள இந்த வாகனங்களை ஏலம் விட வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு செய்து இன்னமும் காத்துக் கொண்டிருக்கிறது இந்த துறை.

சட்டத்தை திருத்தினால் தேவலை


வழக்கு சம்பந்தமாக கைப்பற்றப்பட்ட வாகனங்கள் நீதிமன்றத்தில் இடம் இல்லை என்பதால் காவல் நிலையங்களில் போட்டு வைக்கப்படுகின்றன. இருக்கும் வேலையில் அந்த வாகனங்களை காவல்துறையினர் பராமரிப்பதெல்லாம் சாத்தியமில்லை. போதாக்குறைக்கு இந்த வாகனங்களால் காவல்துறை வாகனங்களையும் நிறுத்த இடமில்லாமல் போய் விடுகிறது. வாகனங்களை அனாமத்தாக போட்டு வைத்து வீணாக அழிய வைப்பதை விட அவற்றை விற்று காசக்காலாம். போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைப்பற்றும் வண்டிகளை ஏலம் விட சட்டம் அனுமதிக்கிறது. அதேபோல் உணவு கடத்தல், மணல் கடத்தல், கொலை வழக்குகளில் பயன்படுத்தபட்ட வாகனங்களையும் ஏலம் விடும் வகையில் ஏற்கனவே இருக்கும் சட்டத்தை திருத்தினால் போதும். வாகனங்களை ஏலம் விட வருவாய்துறை, போக்குவரத்து துறை, காவல்துறை அதிகாரிகளை கொண்ட குழுவை ஒவ்வொரு மாவட்ட அளவிலும் ஏற்படுத்தலாம். அக்குழு மாவட்டந்தோறும் கைப்பற்றப்படும் வாகனங்களை 3 முதல் 6 மாதத்திற்கு ஒருமுறை ஏலம் போடலாம். சட்டரீதியாக உரிமையாளர்கள் திரும்ப கேட்கும் வாகனங்களை தவிர மற்ற வாகனங்களை இப்படி செய்யலாம். அதன்மூலம் வாகனங்களை தவறான காரியங்களுக்கு பயன்படுத்துபவர்களும் யோசிப்பார்கள். பல கோடிகள் மதிப்பிலான வாகனங்கள் வீணாவதையும் தடுக்கலாம். அரசுக்கும் வருவாய் கிடைக்கும்.

அரசு அலுவலகங்களிலும்...


இப்படி வீணாகும் வாகனங்கள் இருக்கும் இடங்களின பட்டியலில் அரசு அலுவலகங்களும் வருகின்றன. அங்கும் ஓடி களைத்த வாகனங்களை அப்படியே போட்டு விடுகின்றனர். போக்குவரத்து கழகங்கள், பழைய வாகனங்களை ஏலம் விட்டு விற்பது போல் அரசு அலுவலகங்களில் செய்வதில்லை. அதனால் அவையெல்லாம் வீணாகி கொண்டிருக்கின்றன
தீர்ப்பு வரும்போது பழைய இரும்பு


போக்குவரத்து வாகனத் துறையினர் (ஆர்டிஓ) அடிக்கடி வாகன சோதனை நடத்துகின்றனர். அதிக ஆட்கள், அதிக பாரம், வரி ஏய்ப்பு போன்ற காரணங்களால், ஆட்டோ, கார், வேன், ஆம்னி பஸ் உள்ளிட்ட வாகனங்கள் பிடித்து வைக்கப்படும். பாதிக்கும் மேற்பட்டவற்றை, உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி எடுத்துச் சென்று விடுகின்றனர். உரிய அனுமதியின்றியும் முறைகேடாகவும் இயக்கப்படும் வாகனங்கள் பிடிபட்டால், அதை உரிமை கேட்க வருவோர் குறைவு.

இதுபோன்ற வாகனங்களை, சென்னையில் குரோம்பேட்டை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம், தரமணி சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வைத்துள்ளனர். பராமரிப்பின்றி நீண்ட காலமாக ஒரே இடத்தில் இருப்பதால், துருப்பிடித்து பயன்படுத்த முடியாத அளவுக்கு போய் விட்டன.

அபராதம் விதித்து விடுவிக்க வேண்டிய வாகனங்களைகூட போக்குவரத்துத் துறையினர் பிடித்து வைக்கின்றனர். கொலை போன்ற குற்ற வழக்குகளில் தொடர்பே இல்லாத வாகனங்களையும் போலீசார் வழக்கில் சேர்த்து விடுகின்றனர். இதனால் அந்த வழக்கு முடியும் வரை வாகனங்கள் போலீசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டிய நிலை. நீண்ட காலத்துக்குப் பிறகு, வழக்கு ஒரு வழியாக முடிந்து, வாகனத்தை உரிமையாளரிடம் கொடுக்குமாறு நீதிமன்றம் குறிப்பிடும்போது, குறிப்பிட்ட வாகனம் பழைய இரும்புக் கடைக்குப் போகும் நிலையில் இருக்கும். இந்த நிலையை மாற்ற அரசு நிலையான விதிகளை வகுக்க வேண்டும் என்கிறார் செங்கொடி ஆட்டோ&டாக்சி&வேன் ஓட்டுநர் சங்கப் பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன்.

போக்குவரத்து வாகனத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘இது போன்ற வாகனங்கள் அனைத்தும் அதிகபட்சம் ஓராண்டு, ஒன்றரை ஆண்டுகளுக்குள் தனி குழு அமைத்து ஏலம் விடப்படும். இந்தக் குழுவில் போக்குவரத்து வாகனத் துறையினர் தவிர, மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறை, போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் இடம்பெறுவார்கள். ஏலம் மூலம் கிடைக்கும் தொகை போக்குவரத்துத் துறையின் கணக்கில் சேர்க்கப்படும். சென்னை மற்றும் புறநகரில் மட்டும் இப்போதைக்கு 382 வாகனங்கள் உள்ளன’’ என்றார்.

சட்டம் என்ன சொல்கிறது?

சட்டச் சிக்கலில் சிக்கி சீரழியும் வாகனங்களை திரும்ப பெறுவது குறித்து சட்டம் என்ன சொல்கிறது?
ஏதாவது வழக்கில் சிக்கும் வாகனங்களை அதன் உரிமையாளர்கள் சட்டப்படி திரும்ப பெறலாம். குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 451ன் கீழ் புகார் பதிவு செய்யப்பட்டதும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட போதும், விசாரணையின் போதும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பின்னரும், வழக்கு விசாரணையின் போதும், தீர்ப்புக்கு முன்பும் திரும்ப பெறலாம். தீர்ப்புக்கு பிறகும், மேல்முறையீட்டின் போதும் இதே சட்டம் பிரிவு 452ன் கீழ் வாகனத்தை திரும்ப பெறலாம்.

வாகன உரிமையாளர்கள், வாகனங்களை தவணை முறையில் விற்றவர்கள், வாடகைக்கு விட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய முடியும். தேவைப்படும் போது வாகனத்தை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதாக உறுதி அளித்தும், நீதிமன்றம் சொல்லும் மதிப்பிற்கு பத்திரம் எழுதிக் கொடுத்தும் வாகனங்களை கொண்டுச் செல்லலாம். வழக்கு முடியும் வரை நீதிமன்ற அனுமதியின்றி அந்த வாகனங்களை விற்க மாட்டோம், அடகு வைக்க மாட்டோம் என்ற உறுதி அளிப்பது அவசியம்.

சில வழக்குகளில் குற்றங்களில் சம்பந்தமில்லாத வாகனங்களும் சிக்கிக் கொள்ள நேரிடுகிறது. இப்படி யாரும் உரிமை கோராத வாகனங்களை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 458ன் படி ஏலம் விட அனுமதிக்கப்படுகிறது. அதாவது 6 மாதங்கள் வரை வாகனங்களை யாரும் சட்டப்படி உரிமை கோரி வராவிட்டால் நீதிமன்ற அனுமதி பெற்று ஏலம் விடலாம்.

எப்படி வந்தன இவ்வளவு வாகனங்கள்?

கொலை, ஆட்கடத்தல், சாராயம், எரிசாராயம் போன்ற போதைப் பொருட்கள் கடத்தல், மணல் திருட்டு, விபசாரம், விபத்து உள்ளிட்ட சம்பவங்களில் வாகனங்கள் காவல் துறையினரால் கைப்பற்றப்படுகின்றன. ஓட்டுநர் உரிமம், பர்மிட் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்களை போக்குவரத்து துறையினரும் கைப்பற்றுகின்றனர். போதை பொருட்கள் கடத்தும் வாகனங்களை மத்திய போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவினரும் கைப்பற்றுகின்றனர். இதபோல்தான் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு துறையினரும் செய்கின்றனர். விபத்தில் சிக்கும் வாகனங்கள் பயன்படுத்தும் நிலையில் இருந்தால், அந்த வாகனங்கள் வழக்கு பதிவு செய்ததும், நீதிமன்ற அனுமதியுடன் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். உரிய ஆவணம் இல்லாவிட்டால், அபராதம் விதிக்கப்படும் அல்லது கைப்பற்றப்படும்.

பொதுவாக குற்றச் செயல்களுக்கு பயன்படும் வாகனங்கள், திருட்டு வாகனங்களே. அதனால், பிடிபடும்போது கேட்க யாரும் வருவதில்லை. திருட்டு கொடுத்தவர் இன்சூரன்ஸ் மூலம் பயன் அடைந்திருப்பார். பொதுவாக திருட்டு வழக்குகளில் எப்ஐஆர் போடுவதில்லை. அப்படியே எப்ஐஆர் போட்டிருந்தாலும், கண்டுபிடிக்க முடியவில்லை என்று சான்றிதழ் கொடுத்து முடித்திருப்பார்கள். திருடன் பிடிபடும்போது, அவனிடம் இருந்து 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். ஆனால், அவற்றிற்கு புகார் இருக்காது. அவற்றில் பல வாகனக்குவியலுக்கு போகும். மெல்ல மெல்ல போலீசார் பாக்கெட் நிறையும். இதில் என்ன வேதனை என்றால், தமிழக போலீசில் சல்லடை போட்டுத் தேடினாலும், இந்த வாகனக்குவியல் பற்றிய எந்த புள்ளிவிவரமும் இல்லை என்பதுதான்.

- Dinakaran

உதவும் கரங்கள்

No limitations for helping ---- No Partiality for helping

துடிக்கும் தொண்டனின் இதயம்!

''தி.மு.க. என்பது மூளையால் வளர்ந்த கட்சி... அ.தி.மு.க. இதயத்தால் வளர்ந்த கட்சி! தி.மு.க-வின் தொண்டனுக்கு யோசிக்கக் கற்றுக் கொடுத்தே அந்தக் கட்சியை வளர்த்தார்கள் அதன் தலைவர்கள். எம்.ஜி.ஆரோ, தன்னை நேசிக்கக் கற்றுக் கொடுத்தே படை திரட்டினார்!'' என்று அடிக்கடி சொல்வார் ஒரு திராவிட இயக்க மூத்த தலைவர். அதையே இன்னும் விளக்கமாக,

''தி.மு.க. அறிவால் செழித்த கட்சி. அ.தி.மு.க. என்பது அன்பால் முகிழ்த்த கட்சி'' என்றும் சொல்வார் அவர்!

தி.மு.க. கழகத்தின் தலைமையை உணர்ச்சிப் பெருக்கோடு குற்றம் சாட்டிவிட்டு, தனிக் கட்சி கண்ட எம்.ஜி.ஆர்., தான் இருந்தவரையில் ஒட்டுமொத்தத் தொண்டர்களையும் தன் அன்புப் பிடிக்குள் அசை யாமல் வைத்திருந்தார். அதனால்தான் போட்டியிட்ட திண்டுக்கல் எம்.பி. தொகுதி முதல் இடைத் தேர்தலிலேயே சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தது அந்தக் கட்சி!

இன்றைக்கு பென்னாகரம் இடைத்தேர்தலில் டெபாசிட்டைப் பறிகொடுத்து
தலைகுனிந்து நிற்பதும் அதே சாதனைக் கட்சிதான்! 'பென்னாகரம் தொகுதியில் தி.மு.க-வுக்கு கிடைத்திருக்கும் வெற்றி ஜனநாயகத்துக்கு ஏற்பட்டிருக்கும் மாபெரும் தோல்வி' என்ற அறிக்கையால் இந்தத் தோல்வியை நியாயப்படுத்தி, நிம்மதியாகிவிட்டார் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா. ஆனால், தொண்டனின் இதயம் நிம்மதியை மொத்தமாக இழந்துபோனது. ஈரோட்டில் ஒரு தொண்டன் தீக்குளித்திருக்கிறான். இன்னும் எத்தனையோ தொண்டர்களின் இதயத்துக்குள் எரிந்துகொண்டே இருக்கிறது அவநம்பிக்கை நெருப்பு!

டெபாசிட் இழப்பது என்பது அ.தி.மு.க-வின் வரலாற்றில் இதுவரை ஐந்தாறு தொகுதிகளில்தான் நடந்திருக்கிறது. அதுவும் ஒட்டுமொத்தத் தொகுதிகளையும் தலைவர்கள் சுற்றிச் சுற்றி வந்து கவனிக்கவேண்டிய பொதுத் தேர்தல்களின்போது!

எம்.ஜி.ஆர். காலத்தில் கிள்ளியூர், ஒசூர் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க. டெபாசிட் இழந்தது. துடித்துப் போனார் எம்.ஜி.ஆர். 'ஏன் இப்படி நடந்தது?' என்று பல மணி நேரம் செலவிட்டு விசாரணை நடத்தினார். 'வேட்பாளர் தேர்வு தவறாகிவிட்டது' என்று சக தலைவர்கள் எத்தனையோ ஆறுதல் சொல்லியும், அவர் மனது அடங்கவில்லை என்பார்கள்.

2006-ல் மைனாரிட்டி பலத்தோடு தி.மு.க. அரசு ஆட்சியில் அமர்ந்த பிறகு நடந்த இடைத்தேர்தல்களில் கம்பம், தொண்டாமுத்தூர் உட்பட ஐந்து தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடவே இல்லை.

அப்போதுதான் அக்கட்சியின் தொண்டர்களில் பலருக்கும் வருத்தமும் அச்சமும் மேலிட ஆரம்பித்தது. காரணம், தங்களையெல்லாம் ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கும் அன்பெனும் பட்டு நூல் அறுந்துகொண்டிருப்பதாக அவர்கள் நினைக்கத் தொடங்கினார்கள். இருந்தாலும் தேர்தலில் இருந்து விலகியதற்கு அவர்களே வெவ்வேறு காரணங்களைக் கற்பித்துத் தங்களைத் தேற்றிக் கொண்டார்கள்.

ஆனால், பென்னாகரம் நிலைமை அதுவல்ல! கட்சிக்குள் இருந்த குடும்பப் பாச உணர்வெல்லாம் மெள்ள மெள்ள நைந்துபோய், ஆளுங்கட்சியின் அசுரவேக முன்னேற்றமும்... அதற்கு பதிலடி கொடுக்கவேண்டிய தங்கள் தலைவியின் துப்புரவான பாராமுகமும்... இதனால் கட்சித் தளபதிகளைத் தாக்கிவிட்ட கடும் சோர்வும் சேர்ந்துதான் இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக தொண்டர்கள் நினைக்கிறார்கள்.

வறண்ட அவர்கள் மனதோ பசுமையைத் தேடி பின்னோக்கி ஓடுகிறது...

1980-ம் வருடம் அ.தி.மு.க. ஆட்சி பிரதமர் இந்திரா காந்தியால் கலைக்கப்பட்டது. அப்போது வந்த தேர்தலில் மாபெரும் கூட்டணியாய் காங்கிரஸும் தி.மு.க-வும் இணைந்து மிரட்ட... எதற்கும் கலங்காத எம்.ஜி.ஆர் தமிழகம் முழுவதும் சூறாவளியாய் சுற்றினார். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியின் அசுர பலத்தையும் தாண்டி 129 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த நாட்கள் அ.தி.மு.க. தொண்டனின் இதயத்தில் ஏக்கத்தோடு இப்போது நிழலாடுகிறது. 84-ம் வருட தேர்தலின்போது கடுமையான உடல்நலக்குறைவால் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபோதும்கூட, அவர் படத்தையே தமிழகம் முழுவதும் காட்டி வெற்றிக் கொடியை நாட்டிய பெருமித உணர்வு இன்னும்கூட அந்தத் தொண்டனை விட்டு அகலவில்லை.

அதேபோல, ஜெ. என்றும் ஜா. என்றும் கட்சி இரண்டாக உடைந்து... மீண்டும் ஜெயலலிதா தலைமையில் இணைந்து... இரட்டை இலை சின்னத்தை மீட்டு... 91-ல் மறுபடி ஆட்சியைக் கைப்பற்றிய சமயத்தில், 'எங்கள் தலைவருக்கு மறைவேயில்லை. புரட்சித் தலைவியின் உருவில் அவர் என்றும் வாழ்கிறார்' என்று விண்ணதிர கோஷமிட்ட அதே தொண்டன்தான், 'என்ன ஆனது என் தலைவிக்கு?' என்று விக்கித்துப் போய் உட்கார்ந்திருக்கிறான்:

1996 தேர்தலில் தோற்ற பிறகு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டும் கலங்காமல் வெளியில் வந்து, கர்ஜனையோடு கருணாநிதியை எதிர்கொண்ட தங்கள் தலைவிக்கு, அப்போதெல்லாம் வராத சோர்வு, எந்தவித அடக்குமுறைகளுமே தங்களுக்கு எதிராக இல்லாத இந்த சமயத்தில் ஏன் வந்தது என்ற அவனுடைய கேள்வி அர்த்தமுள்ளது! 'மைனாரிட்டி தி.மு.க' என்று வார்த்தைக்கு வார்த்தை ஆளுங்கட்சியை தங்கள் தலைவி வர்ணித்தபோது, உற்சாகத்தோடு முறுவல் பூத்த காலம் போய், 'டெபாசிட் இல்லாத அ.தி.மு.க.' என்ற ஏளனப் பேச்சுக்கு ஆளாகிவிட்டதை எண்ணி மருகி நிற்கிறான் அந்தத் தொண்டன்!

''ஒரு தகவல் தெரியுமா சார் உங்களுக்கு? தமிழகத்தி லேயே எம்.ஜி.ஆர். சிலைகள் நிறைய இருக்கறது பென்னாகரத்தில்தான். அந்தளவுக்கு அந்த மக்கள் புரட்சித் தலைவர் மேல வெறியா இருக்கறவங்க. அப்படிப்பட்ட தொகுதியில இந்த கதின்னா எங்கே நடந்திருக்கு தவறு? அரசு இயந்திரத்தையும், பணத்தையும், பிரியாணியையும் காட்டித்தான் தி.மு.க. இத்தனை ஓட்டுகளை வாங்கி ஜெயித்தது என்று சொல்லி எங்கள் கட்சித் தொண்டனை சமாதானப்படுத்த முடியலை. 'அப்படியே பார்த்தாலும், பா.ம.க. எப்படி ரெண்டாம் இடத்துக்கு வந்தது. காசு பணத்துக்கு மயங்காத மக்கள் கூடவா நமக்கு ஓட்டுப் போட முன்வரலை'னு எதிர் லாஜிக் பேசுறான் எங்க தொண்டன்...'' என்று உதடு துடிக்கச் சொல்கிறார், அ.தி.மு.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர் ஒருவர்.

''சசிகலா குடும்பத்துக்கு தேவையில்லாம முக்கியத்துவம் கொடுக்குறாங்கனு சொல்லித்தான் மக்கள் ஏற்கெனவே ஆட்சியை விட்டு இறக்கினாங்க. ஆனா, இப்படி டெபாசிட்டே போகிற அளவுக்கான நிலைமை வருவதற்கு, சசிகலா குடும்பத்தின் தலையீடுகளை மட்டுமே காரணமாகச் சொல்ல முடியாது. அவங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்களுக்கு தெரிஞ்சே பொறுப்புகள் கொடுத்து, கட்சியை ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி ஆக்கியது மட்டுமே இந்த சறுக்கலுக்குக் காரணமில்லை. தொண்டனுக்கும் தனக்குமான இடைவெளியை தானாகவே அதிகப்படுத்திக்கிட்டாங்க அம்மா. அதுதான் முக்கியக் காரணம்!'' என்று குமுறுகிறார் இன்னொரு தலைவர்.

''தள்ளாத வயதிலும், ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது தினம் ஒரு மணி நேரமாவது அறிவாலயத்துல உட்கார்ந்து கடைநிலை தொண்டனின் பிரச்னை வரை காதில் வாங்குறாரு கருணாநிதி. அம்மாவோ கட்சி ஆபீஸுக்கு வர்றதே ஒரு அதிசயத் திருவிழாவா ஆகிப்போச்சு. இதோட, கட்சிக்கு அடிக்கடி லீவு விட்டுட்டு கொடநாட்டுக்கு போயிடுறாங்க. எதிர்க்கட்சியா இருந்து செய்ய வேண்டியதை எல்லாம் அறிக்கைகள் மூலமாகவே சாதிச்சிடலாம்னு நினைச்சிட்டாங்க. ஓ.பி.எஸ்., மதுசூதனன், செங்கோட்டையன் மாதிரியான முக்கியஸ்தர்கள்கூட, மிக அவசரமான முடிவுகளை எடுப்பதற்காக அம்மாவை சந்திக்க முடியாதபோது கட்சி எப்படி உயிரோட்டத்தோடு இருக்க முடியும்?'' சீனி பட்டாசு போல வெடிக்கிறார் இன்னொரு சீனியர்.

இன்னும் சிலரோ அம்மாவிடம் நேரிலேயே பேசுவதுபோல் ஆதங்கத்தைக் கொட்டுகிறார்கள். ''புதிய சட்டசபை திறப்பு விழாவுல கலந்துக்கக் கூடாதுங்குறதுக்காகத்தான் நீங்க கொடநாடு போனீங்க. இதுதான் நீங்க செஞ்ச பெரிய தவறு. சட்டசபை திறப்பு விழாவுக்கு போயிருந்தா ஒட்டுமொத்த மீடியோவோட பார்வையும் உங்க மேலதான் இருந்திருக்கும். எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூப்பிட்ட நாகரிகத்துக்கு போனாங்கன்ணு மக்கள் மத்தியிலும் ஒரு இமேஜ் வந்திருக்கும். இதையெல்லாம் உங்களுக்கு யாரு எடுத்துச் சொல்றது? நடக்கக்கூட முடியாத நிலையிலும் பென்னாகரத்துக்கு வந்து கருணாநிதி மேடையில் ஏறி பேசிட்டு போறாரு. நீங்க டெம்போ டிராவலர்ல கண்ணாடியைக்கூட இறக்காம போறீங்க? பென்னாகரம் வந்தப்பவாவது தேர்தல் பொறுப்பாளர் தம்பிதுரையைக் கூப்பிட்டு பேசினீங்களா? வேட்பாளரிடம் பேசினீங்களா? உங்க முகத்தைப் பார்த்ததும் அப்படியே ஓடிவந்து ஓட்டுப் போடுறதுக்கு இது எம்.ஜி.ஆர். காலம் இல்லை. வீட்டுக்குள்ளே டி.வி. வச்சிக்கிட்டு உலகத்தையே மடியில் உருட்டிப் பார்க்கிற விவரமான ஜனங்களின் காலம்! எம்.ஜி.ஆர். விதைச்சுட்டுப் போன அன்பு என்கிற பயிரை, திரும்பத் திரும்ப நேரில் வந்து நீர் வார்த்தால்தான் கட்சியைக் காப்பாற்ற முடியும்!'' என்றவர்கள் தொடர்ந்து...

''தினந்தோறும் தொகுதிக்குள் சுற்றி வருகிற அனுபவசாலிகள் கருத்துக்கு கொஞ்சமாவது காது கொடுத்திருக்கணும், அம்மா! இடைத்தேர்தல் அறிவிச்சதும் பென்னாகரத்தோட நிலவரத்தை தெரிஞ்சு தேர்தல் பொறுப்பாளர்களை நியமிச்சிருக்கணும். அது வன்னிய செல்வாக்குமிக்க தொகுதிங்கிறதால எல்லா கட்சியிலயுமே வன்னிய நிர்வாகிகளைப் பொறுப்பாளரா போட்டாங்க. ஆனா, நீங்க கொங்கு கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த தம்பிதுரையை தேர்தல் பொறுப்பாளரா போட்டீங்க. அதே மாவட்டத்துல இருந்த வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனைக் கண்டுக்கக்கூட இல்ல. உங்களால கட்சியைவிட்டுப் போன செல்வகணபதியை முன்னிறுத்திதான் தி.மு.க. வன்னிய மக்களை வளைச்சது. டாக்டர் ராமதாஸும் சாதியை சொல்லித்தான் எல்லா வீட்டுக்குள்ளயும் போயிட்டு வந்தாரு. ஆனா, அ.தி.மு.க-வில எல்லோரும் கடமைக்காகத்தான் வேலை பார்த்தாங்க. தம்பிதுரையில ஆரம்பிச்சு பிரசாரத்துக்கு வந்த அத்தனை பேருமே ஏதோ ஆபீஸ் டூட்டி மாதிரி காலையில 10 மணிக்கு வந்துட்டு சாய்ந்திரம் அஞ்சு மணிக்கெல்லாம் கிளம்பிப் போயிட்டாங்க.

டாக்டர் ராமதாஸ் தர்மபுரியிலேயே தங்கி ஒவ்வொரு கிராமமாகப்போய் வீடு வீடாக அலைஞ்சு திரிஞ்சு ஓட்டு கேட்டாரு. தி.மு.க-வுலயோ எ.வ.வேலுவோடு மொத்தம் பதினைஞ்சு அமைச்சருங்க வேலை பார்த்தாங்க. துணை முதல்வர் ஸ்டாலின் ஒரு கிராமம் விடாம திறந்த வேன்ல சுத்திட்டு இருந்தாரு. நீங்களோ வந்ததும் தெரியலை... போனதும் தெரியலை! வழக்கம்போல கொடநாட்டுல போய் ஓய்வெடுத்தீங்க. நம்ம வேட்பாளருக்கு தொகுதி முழுக்க சொந்தக்காரங்க இருக்கறதா கேள்விப்பட்டோம். அவங்க மொத்தப் பேரும் ஓட்டுப் போட்டிருந்தாக்கூட டெபாசிட் வாங்கியிருப்போம். ஆனா வேட்பாளரோட சொந்தக்காரங்களையே நம்மால கவர முடியலையே! இதெல்லாம் இப்பவாவது உங்களுக்கு தெரியுமா?'' என்கிறார்கள் எங்கோ இருக்கும் தங்கள் தலைவியின் திசை நோக்கி!

மீண்டும் மீண்டும் அவர்கள் சுட்டிக்காட்டுவது தங்கள் தங்கத் தலைவரின் பொற்காலத்தையேதான்!

''அப்பல்லாம் ஒரு ஆர்.எம்.வீ., ஒரு முத்துசாமி, ஒரு பண்ருட்டி, ஒரு அண்ணாச்சி, ஒரு திருநாவுக்கரசுனு திரும்பின பக்கமெல்லாம் பர்சனாலிட்டிகளின் படையெடுப்பு இருக்கும். கட்சிக்காரர்களின் கஷ்டங் களையும் மக்களின் தேவைகளையும் கவனிச்சுத் தீர்ப்பதற்கான முழு சுதந்திரத்தையும் அவங்களுக்குக் கொடுத்திருந்தார் புரட்சித் தலைவர். அவங்களும் தங்கள் தலைவருக்கான கவர்ச்சியையும் அன்பு உருவத்தையும் நேரில் ஏந்திச் செல்லும் தூதர்களாகவே மாநிலம் முழுக்கச் சுற்றி வந்தார்கள். ஆனா, இப்போ யார்தான் தங்கள் சொந்த ஆளுமையோடு கட்சி வேலைகளைப் பார்க்க முடிகிறது? 'எல்லாமே அம்மாதான். மத்தவங்க சும்மாதான்' என்று கட்சியின் சக தலைவர்கள் சொல்லுவதை அல்லவா அம்மா ரசிக்கிறார். தனிப்பட்டு யாரும் பேர் வாங்கிவிடக்கூடாது என்பதற்கல்லவா அவர் கூடுதலாக கவலைப்படுகிற மாதிரி தெரிகிறது! 'எல்லாமே அம்மாதான்' என்பதே நிஜமாகவே இருந்தாலும், அந்த அம்மா அவ்வப்போதாவது மக்கள்முன் வந்து தரிசனம் கொடுத்தால்தானே கட்சி என்று இருப்பது ஜனங்களுக்குத் தெரியும்? வழியும் விடமாட்டேன்... வரமும் தரமாட்டேன் என்று அம்மா ஏன் இப்படி சும்மாவே இருக்கிறார்?'' என்று ரத்தக் கண்ணீர் வடித்துக் கேட்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

கடைசி நம்பிக்கையோடு காத்திருக்கிறான் தொண்டன். என்ன பதில் சொல்லப் போகிறார் முன்னாள் முதல்வர்?

- நமது அரசியல் நிருபர்
ஜுனியர் விகடன்

ஓட்டுக்கு பணம்...

பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளைப் பற்றி ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கருத்தை வெளியிட்டு வருகின்றன. இடைத் தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு கட்சிகளின் பலம், பலவீனம் எல்லாம் அலசப்படு கின்றன. உண்மையில் அலசப் பட வேண்டிய விஷயம் லயோலா கல்லூரி வெளியிட்ட சர்வே சொல்லும் ஒரு முக்கிய செய்தி தான் என்கிறார்கள் சிந்தனையாளர்கள். சர்வேயின் அதிர்ச்சி தரும் முக்கியச் செய்தி என்ன?

நடந்து முடிந்த பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் குறித்த லயோலா சர்வேயில், 47.4 சதவீத வாக்காளர்கள்... ஓட்டு போட பணம் வாங்குவது தவறில்லை என கருத்து தெரிவித்திருக் கிறார்கள். கிட்டதட்ட பாதிக்கு பாதி வாக்காளர் கள் பணம் வாங்குவதில் தவறில்லை என்கிற மன நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் சிந்தனையாளர்களின் கவலையாகவும், அதிர்ச்சியாக வும் இருக்கிறது.

சர்வேயின் போது மாணவர்களை வழிநடத்திய லயோலா கல்லூரி பேராசிரியர் ராஜநாயகம், “ ""கடந்த சில வருடங்களாகவே தேர்தலை வாக்காளர்கள் அணுகும் முறை மாறிக்கொண்டிருப்பதாக தெரி கிறது. தேர்தல் என்பதே ஒரு திருவிழாவாக மாறி வருகிறது. கோயில் திருவிழா என்றால் கூட அதிக பட்சம் 3 நாள் கொண்டாட்டம்தான் இருக்கும். ஆனால் தேர்தல் திருவிழா ஒரு மாதத்துக்கு மேல் நீடிப்பதாக இருக்கிறது. கொண்டாட்டத்தின் பிரதான அம்சமாக பணம்தான் இருக்கிறது.

பொதுவாக தேர்தல் களத்தில் அரசியல்வாதி களுடன் வாக்காளர்கள் பேரம் பேசுவதுண்டு. முன் பெல்லாம் உங்களுக்கு இந்த திட்டங்களை நிறைவேற்றித் தருகிறேன் என்று பேரம் பேசு வார்கள் அரசியல்வாதிகள். ஆனால் இப்போதெல்லாம் திட்டங்களுக்கு பதிலாக பணம் என்பதாக மாறியிருக்கிறது இந்த பேரம். வாக்குக்கு பணம் வாங்கு வது என்பது தேர்தல் முறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்க் கொண்டிருப்பதை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது. இதற்காக மக்களை நாம் குறை சொல்ல முடியாது. தங்களுக்கான பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதில் வாக்காளர்களுக்கு சாய்ஸ் குறைவாகவே உள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த அரசியல்வாதிகள் மீது இந்திய அள விலேயே கூட பெரிய அளவுக்கு தண்டனை எதுவும் வழங்கப்பட்டு விடவில்லை. மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவரின் பொருளாதார வளர்ச்சியை கண் எதிரில் பார்க்கும் வாக்காளர்கள்... சம்பா தித்த பணத்தை திருப்பி கொடுக்கட்டுமே என்று நினைக்கிறார்கள். கும்பிட்டு வாக்கு கேட்பதையும், பணம் கொடுப்பதையும் தங்களுக்கான கவுரவமாக நினைக்க தொ டங்கிவிட்டார்கள் வாக்காளர்கள். தங்க ளின் வாக்கு என்கிற பலமான ஆயு தத்தை அரசியல்வாதிகளிடம் கொடுத்து தங்கள் வாழ்க்கையை அடமானம் வைப்பதாக வோ, விற்பதாகவோ அவர்கள் உணர வில்லை என்பதுதான் வருத்தம்.

வாக்காளர்களை இந்த நிலைக்கு மாற்றி வருகிறார்கள் அரசியல்வாதிகள். இது நீடித்தாலோ, அதிகரித்தாலோ ஜனநாயகம் அர்த்தமிழக்கும் நிலை வரலாம். ஒரு கட்டத்துக்கு மேல் மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாற்றம் உருவாகாவிட்டால் போராட்டமாக வோ, குழப்பமாகவோ மாறும் நிலை ஏற்படும். ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையின்மை என்கிற மனநிலை தற்போது இடை நிலையில்தான் இருக்கிறது. எங்களுடைய கணிப் பின்படி 2016 தேர்தலில் இது முதிர்ந்த நிலை அடைந்துவிடும். அப்போது நிலைமை மிக மோசமாகிவிடும் வாய்ப் பிருக்கிறது. எனவே பொறுப் பில் இருப்பவர்கள் தங்களை மாற்றிக் கொள்வது அவ சியம்'' என்று தன்னுடைய கள அனுபவத்தை வெளிப் படுத்தினார் பேராசிரியர் ராஜநாயகம்.

சமூக ஆர்வலரும், அடித்தட்டு மக்களோடு நெருக்கமாக இருப்பவரு மான கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன், "தற்போ தைய தேர்தல் நடை முறையிலேயே தனக்கு நம்பிக்கை இல்லை' என்கிறார். தன்னுடைய பெயரே வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதில்லை என்று சொல்லும் கிருஷ்ணம்மாள் இது வரை ஒரு முறை கூட ஓட்டு போட்டதில்லையாம்.

""வாக்காளர்களின் ஏழ்மை நிலையும், அறியாமையும்தான் ஓட்டுக்கு பணம் வாங்கும் நிலையை உருவாக்கி இருக்கிறது. தேர்தல் என்பதே ஒரு நாடகமாகத்தான் தெரிகிறது. மக்கள் பிரதிநிதிகளாக சட்டமன்றத்திற்கும், பாராளுமன் றத்திற்கும் செல்பவர்களுக்கு தங்க ளுடைய கடமை பற்றிய சிந்த னையே இருப்பதில்லை. பல வருடங்களுக்கு முன்பு பீகாரில் நாங்கள் மக்கள் பணியாற்ற சென்றபோதே வாக்காளர்களை அரசியல்வாதிகள் ஏமாற்றி ஓட்டு பெறுவதை பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் அடித்தட்டு மக்களை ஓட்டுச் சாவடிக்கு அழைத்துப் போய் அவர்கள் ஓட்டை போடவைத்து, அருகி லேயே இருக்கும் இடத்தில் பூரி கிழங்கு சாப்பிடக் கொடுத்து அனுப்பிவிடுவார்கள். அன்றைக்கு பூரி கிழங்காக இருந்தது இன்று பணமாக மாறியிருக்கிறது.

தற்போதைய சிஸ்டமே பணக்காரர் களுக்கானதாக மாறிவிட்டது. பிரிட்டிஷ் பீரியடை விட மோசமான நிலையில் இருக்கிறோம். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து ஓட்டுக்கு பணம் என்கிற மனப்போக்கை மாற்ற பாடுபட வேண்டும். ஒவ்வொரு வீடாக சென்று வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வெறுமனே பிரச்சா ரம் என்பதோடு நிற்காமல் இதை ஒரு போராட்டமாகவே மாற்ற வேண்டும். தேசத்தின் மீது அக்கறை கொண்ட அத்தனை பேரும் இதில் பங்கெடுக்க வேண்டும்'' என அழுத்தமாக சொல்கிறார் கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்.

தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக குரல் கொடுத்து வரும் முன்னாள் இந்திய தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தியும் தற்போ தைய நிலைக்காக கவலை தெரிவிக்கிறார். ""2004-ம் ஆண்டு ஜூலையில் நாங்கள் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து பிரதமருக்கு ஒரு பரிந்துரை அனுப்பியிருந்தோம். அந்த பரிந்துரையில் அரசியல் கட்சிகளின் கணக்குகளை சரிபார்ப்பது, கிரிமினல்களை தேர்தலில் போட்டியிடாமல் தடுப்பது, விகிதாச்சார அடிப்படையிலான பிரதிநிதித்துவம் தருவது உள்ளிட்ட 22 சீர்திருத்தங்களை வலியுறுத்தியிருக்கிறோம். அந்த சீர்திருத்தங்கள் நடைமுறைப் படுத்தப்படும்போது இப்போ தைய தவறுகள் பெருமளவு களையப்படும். ஓட்டுப் போட பணம் பெறுவது தவறு என்று வாக்காளர் களுக்கு தெரிவதில்லை. தற்போதைய சிஸ்டத்தை மேம்படுத்துவதன் மூலமாக மக்களின் மனநிலை யையும் மாற்ற முடியும். தேர்தல் சீர்திருத்தங்களுக்காக ‘கேட்ட லிஸ்ட்’ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. பல மேடைகளில் நானும் இதற்காக பேசி வருகிறேன்'' என்கிற முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையாளர், "ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அத்தனை பேரும் இதற்காக முயற்சி எடுக்க வேண்டும்' என விரும்புகிறார். "வலுவான தேர்தல் ஆணையம் - வளமான ஜனநாயகம்' என்கிற தன்னுடைய நூல் ஒன்றிலும் தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி எழுதியிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

இந்தியாவின் இளைய தலை முறையினர் மத்தியில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உண்டாக்கி வரும் தலைவர்களில் ஒருவரான டாக்டர் அப்துல்கலாம் தேர்தலில் பணம் வாங்கி ஓட்டு போடுவதை தடுக்க சில முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். அவருடைய இந்த முயற்சிக்கு ஓரளவு பலனும் கிடைத் திருக்கிறது.

லீட் இந்தியா 2020 என்ற அமைப்பை சேர்ந்த 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களும், இளைஞர்களும் தேர்தலில் ஓட்டளிக்க பணம் வாங்க மாட்டோம் என தங்கள் பெற்றோரிடம் உறுதி மொழி வாங்கிவந்து கலாமிடம் கொடுத் திருக்கிறார்கள். ஆந்திராவைச் சேர்ந்த இந்த இளைஞர்கள் தொடர்ந்து தங்கள் பகுதிகளில் இதுபற்றிய பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகிறார்கள். ""ஓட்டுக்கு பணம் பெறுவதன் மூலம் எங்கள் கவுரவத்துக்கு இழுக்கு ஏற்படுவ தாக நினைக்கிறோம். சில நூறு ரூபாய் களுக்காக எங்கள் எதிர்காலத்தை விற்காதீர்கள் என்று தங்கள் பெற்றோரிடம் சண்டை போட்டிருக்கிறார்கள் ஆந்திராவின் சித்தூர் மாவட்ட இளைஞர்கள். தங்கள் பெற்றோர்களிடம் பெற்ற ஒரு லட்சத்துக்கும் அதிகமான உறுதிமொழி கடிதங்களை அந்த இளைஞர்கள் கொடுத்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். வளர்ச்சி அரசியலில் அக்கறை கொண்ட அரசியல்வாதிகள் அனைவரும் இந்த இளைஞர்களின் உணர்வை புரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு என்பதை நாட்டின் வளர்ச்சியில் அக்கறை உள்ள அரசியல்கட்சிகள், சிந்தனையாளர்கள், நீதித்துறையினர், அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் அனைவரும் வலியுறுத்த வேண்டும். தேர்தல் சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்வதும் அவசியம்'' என நாட்டின் வளர்ச்சி குறித்த அக்கறையோடு நம்மிடம் பேசினார் டாக்டர் அப்துல் கலாம்.

ஓட்டுக்கு பணம் என்கிற நிலைமை இன்னும் தீவிரமானால் பெரும் பணக்காரர்களும், ஆளும் கட்சியும் மட்டுமே வெற்றி பெற முடியும் என்கிற சூழல் உருவாகும். மக்களின் மனநிலை மாற்றப்படுவது எதிர்காலத்தில் அரசியல் கட்சிகளுக்கே எதிரானதாக போகும். பணம் கொடுத்து வாக்கு கள் வாங்குவதை ஒரு வெற்றி ஃபார்முலாவாக அறிவிப்பதும் அதை மற்ற கட்சிகள் பின்பற்றுவதும் ஆபத்தானது. இதை உணர்ந்து அரசியல் கட்சிகள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் சிந்த னையாளர்கள். மாறுவார்களா அரசியல்வாதிகள்?

-ச.கார்த்திகைச்செல்வன்
- நன்றி_ நக்கீரன்

ஏப்ரல் 1 ஏன் முட்டாள்கள் தினமானது?

இன்று ஏப்ரல் 1… உலகம் முழுக்க முட்டாள்களின் தினமாகக் ‘கொண்டாடுகிறார்கள்’… ஆம் மக்கள் தங்களைத் தாங்களே முட்டாள்களாக்கிக் கொண்டு, அதையும் கொண்டாடி மகிழும் நாள் இன்று.


எப்போது முட்டாள்கள் தினம் பிறந்தது என்பதை யாரும் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. சரித்திரம் முன்னும் பின்னுமாக சில சம்பவங்களைச் சொல்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் பல காலம் வரை ஏப்ரல் முதல் நாள்தான் வருடத்தின் முதல் நாளாக இருந்தது.

அதன் பின் 16ம் நூற்றாண்டில் ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டு தினமாக பின்பற்றத் தொடங்கினர்.

1582ம் ஆண்டு போப் ஆண்டவராக இருந்த 13ம் கிரிகோரி, ஜார்ஜியன் காலண்டர் என்ற புதிய காலண்டர் முறையை அறிமுகப்படுத்தினார். அதில் ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு பிறப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஸ்காட்லாந்து, ஜெர்மனி, நார்வே, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் படிப்படியாக இந்த மாற்றத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டன.

ஆனால் பல ஐரோப்பிய நாடுகளும் அவற்றின் காலனி நாடுகளும் இந்த புத்தாண்டை ஏற்கவில்லை. எனவே அப்போது சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐரோப்பியர்கள் தங்களின் புத்தாண்டை பின்பற்றாதவர்களை முட்டாள்கள் என நையாண்டி செய்யத் தொடங்கினர்.

அத்தோடு நில்லாமல், ஏப்ரல் 1ம் தேதி பல்வேறு பொய்யான, தவறான செய்திகளைச் சொல்லி அவர்களை ஏமாற்றவும் ஆரம்பித்தனர்.

இது தான் காலப்போக்கில் ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினம் என மாறிவிட்டதாக கூறுகிறார்கள்.

ஆனால் இதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஈரானியர்கள் முட்டாள்கள் தினம் போன்ற நாளை கடைப்பிடித்ததாக வரலாறு கூறுகிறது.

தற்போது உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில் ஏப்ரல் 1ம் தேதியை முட்டாள்கள் தினமாக கடைப்பிடித்து வருகின்றனர்.

பெரியளவிலான கொண்டாட்டங்கள் போன்றவை இல்லை என்றாலும், நண்பர்கள், குடும்பத்தினர் என தெரிந்த நபர்களிடம் வேடிக்கை செய்வதும் அவர்களை முட்டாளாக்கி மகிழ்வதிலும் பெரும்பாலான மக்கள் ஈடுபடுகிறார்கள்.

பிரான்ஸ் பேரரசர் நெப்போலியன் போனபார்ட் , ஆஸ்திரியாவைச் சேர்ந்த மேரி லூயிஸை 1810-ல் திருமணம் செய்துகொண்டார். அந்த மாதம், நாள் ஏப்ரல் 1 என்பதால் மணமகளை எல்லோரும் கேலி செய்தனராம். ‘நெப்போலியன் உண்மையாகத் திருமணம் செய்யவில்லை. உன்னை முட்டாளாக்கவே திருமணம் செய்திருக்கிறார்’ என்று எள்ளி நகையாடியதாகக் கூறப்படுகிறது.

நவீன காலத்தில் பிரபல டிவி, ரேடியோ, பத்திரிகைகளும் முட்டாள்கள் தினத்தை ஒட்டி, தங்கள் வாசகர்களையும், நேயர்களையும் ஏமாற்றி ‘உட்டாலக்கடி’ செய்திகளை வெளியிடுவதுண்டு.

முன்பு ஒரு தமிழ் வார இதழ் குஷ்புவுக்கும், பாலச்சந்தருக்கும் கல்யாணம் என்றும், மீனாவுக்கும் சடகோபன் ரமேஷுக்கும் காதல் திருமணம் என்றும் சொல்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். குஷ்பு கோடி ரூபாய் நஷ்டம் கேட்டு வழக்குப் போட்டதெல்லாம் நினைவிருக்கலாம்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் கூட கடந்த 2005ம் ஆண்டில் ஏப்ரல் 1ம் தேதி ஒரு குறும்பு வேலையில் ஈடுபட்டுள்ளது.

‘மார்ஸில் (செவ்வாய் கிரகம்) தண்ணீர்’ என்று கொட்டையாக ஒரு தலைப்பில் தன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் முகப்பு பக்கத்தில் எழுதிவைத்து, ஒரு குடுவை தண்ணீர் இருக்கும் படத்தையும் போட்டிருந்தது. பின்னர் அதை ‘சும்மா தமாசு’ என்றது நாசா.

ஆனால் சில நேரங்களில் ஏப்ரல் 1 அன்று காமெடி என்ற பெயரில் சிலர் செய்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.

2003ல் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை கொன்றுவிட்டார்கள் என சில இணையத் தளங்கள் பொய் செய்தியை பரப்பி அதனால் தென்கொரியா பங்குச் சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனப் பங்கு 1.5 சதவீதம் சரிந்தது நினைவிருக்கலாம்.

ஆனால், வரலாற்றில் பல நல்ல விஷயங்களின் துவக்க நாளாக இருந்ததும் இதே ஏப்ரல் 1 தான் என்பதை மறக்கக்கூடாது. காரணம் ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கமாக ஏப்ரல் 1 அமைந்திருப்பதால் தொழிலிலும் வணிகத்திலும் ஏப்ரல் 1 முக்கிய நாளாகக் கருதப்படுகிறது.

1935 ஏப்ரல் 1-ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி துவங்கப்பட்டது, 2004 -ல் கூகுளின் மெயில் சேவை துவங்கப்பட்டது என ஏகப்பட்ட நல்ல விஷயங்களின் துவக்கம் ஏப்ரல் 1 தான் என்பது நினைவிருக்கலாம்.

இன்னொன்று வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் நாள் இந்த ஏப்ரல் 1-தான். யோசித்துப் பார்த்தால், முட்டாள்கள் தினத்தன்றுதான் பல புத்திசாலித்தனமான நிகழ்வுகளை சரித்திரம் கண்டுள்ளது.

ஆக, இதை ஏன் முட்டாள்கள் தினமாகப் பார்க்க வேண்டும்… புத்திசாலிகள் விழிப்போடு இருக்க வேண்டிய நாளாகவும் பார்க்கலாம்!

- நன்றி
என் வழி.காம்

சாமியார்கள் பெரியார் தொண்டர்களின் வேலையை குறைக்கிறார்கள்

- வே.மதிமாறன்
ஒவ்வொரு முறையும் சாமியார்கள் பெரியார் தொண்டர்களின் வேலையை குறைக்கிறார்கள் அல்லது பெரியார் தொண்டர்களின் பேச்சுகளுக்கு ஆதாரமாக விளங்குகிறார்கள்.

பத்து மாநாடுகள், 1000 தெருக் கூட்டங்கள் நடத்தி அம்பலப்படுத்த வேண்டிய செய்தியை, தங்களின் கட்டுப்படுத்த முடியாத அல்லது கட்டுக் கடங்காத லீலைகளின் மூலம் அவர்களே அம்பலமாகிறார்கள்.

‘அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுத்தி அம்பத்தெட்டு அருவா’ என்கிற பாணியில் ஜெயெந்திரன் போன்ற கிழடுகளே, ‘நேத்து… ராத்திரி…. யம்மா…’ பாணியில் ஏகப்பட்ட பெண்களோடு உல்லாசமாக ‘இருக்கும்’ போது, இளமை ஊஞ்சலாடும் நித்தியானந்தம் போன்றவர்கள் என்ன இளிச்சவாயர்களா? ‘இளமை இதோ… இதோ…’ என்று ‘இருக்க’ மாட்டார்களா? அதான் ‘இருந்து’ ட்டாரு.

அதுக்காக பக்தர்கள், ‘இனி சாமியாரே வேண்டாம், சாமியே போதும்’ என்று ஒதுங்கிவிடுவார்களா? அப்படியிருந்தால், பிரேமானந்தாவிற்கு பிறகு சாமியார்களே தமிழகத்தில் உருவாகி இருக்க முடியாது.

ஆனாலும், இப்போதெல்லாம் முன்பைவிட அதிகமாக, வசதியாக, நவீனமாக மல்டிநேஷ்னல் கம்பெனிகளின் ‘ஆசிர்வாதம்’ பெற்ற பணக்கார சாமியார்கள் உருவாகிறார்கள். அமெரிக்காவில் ஆசிரமம் வைத்திருக்கிறார்கள். அரசியல்வாதிகளைபோல் ‘தனககுப் பிறகு தன் மகன்’ என்று பக்தி தொழில் நடத்தி, என்ஜினியரிங் கல்லூரி நடத்தி சம்பாதிக்கிறார்கள்.

‘தர்மம் பண்ண புண்ணியம்’ என்கிற நம்பிகையையும் உடைத்து, பக்தர்களிடம் இருக்கும் பத்து ரூபாவைக்கூட நன்கொடை, செல்போன் டோக்கன், புத்தக விற்பனை என்று புடுங்கிக் கொண்டு, உள்ளே எளிய மக்களான பிச்சைக்காரர்களை கூட அனுமதிக்காமல், தங்கக் கோயில் கட்டி ‘ரிசார்ட்’ டைப்போல் கோயில்களை, மடங்களை நிர்வகிக்கிறார்கள்

இப்படி வெள்ளைக்காரனையே ஏமாற்றி சம்பாதித்த சாமியார்களும் இருக்கிறார்கள். இதில் பார்ப்பான் பார்ப்பனரல்லாதவன் என்ற பேதமில்லாமல் ஒற்றுமையாய் கொள்ளை அடிக்கிறார்கள்.

அப்படி கொள்ளையடித்து மாட்டியிருக்கிறான் ‘கல்கி பகவான்’ என்ற ஒரு ஹைடெக் சாமியார்.

எது எப்படியோ? தொடர்ந்து இந்து மதத்தை அம்பலப்படுத்தும் பிரேமானந்தா, ஜெயெந்திரன், தேவநாத குருக்கள், நிந்தியானந்தம், கல்கி போன்றவர்களுக்கு பெரியார் தொண்டன் என்கிற முறையில், நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘மாட்றவரைக்கும் சாமியார், மாட்டிக்கிட்ட போலிச் சாமியார்’ என்கிற முறையில் தங்களின் பக்தியை சாமியார்களின காலடியில் தேடிக் கொண்டிருக்கும் பக்தர்களுக்காக…… என்ன சொல்றது?

நீங்க நல்லவன்னு நம்பிக்கிட்டு இருக்கிற சாமியாரின் லீலைகள், மோசடிகள் வெளி உலகத்திற்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள். ஏன் என்றால், மோசடிகளும், லீலைகளும் செய்யாத சாமியார் எவனும் கிடையாது.