திருக்குறள்

அவசரம்


அவசர உலகின் அலங்கோலம்
ஆண் போனால் என்ன ?
பெண் போனால் என்ன ?
என் அவசரம் எனக்கு…

நாங்கள் மூத்த குடிமக்கள்-சொன்ன
சொல்லை தட்டாதவர்கள்
ஆம்

ஆத்திரத்தை அடக்கினாலும்
-------------அடக்க முடியாது

வெண்ணிலவை உங்களுக்கு.

வெண்ணிலவை உங்களுக்கு
கண்ணியரே எதற்காக
உவமையாக சொல்லி வைத்தான் - புலவன்
எதைக்கொண்டு புலம்பிச் சென்றான்

ஓர் உருவாய் நிலைக்காமல்
ஓரிடத்தில் நில்லாமல்
நாளும் ஓர் உருவம் கொண்டு
நாழிக் கொருதிசை மாறும்

குணம் போன்றே நீங்களும்
எண்ணம் ஒன்றாய் இல்லாமல்
உண்மை ஏக்கம் கொள்ளாமல்
கண்கள் காணும் காளையிடம்

எண்ணம் கொடுத்து அதுவும் கொஞ்ச
நாளில் வேறு அழகு மனிதன்
கண்டதும் பாதை மாறி
பழைமை மறந்து புதிய மனிதன்

பாதை செல்லும் குணத்துக்காக
பாவையரே உங்களையே
பாரில் இந்த புலவனிவன்
பால் நிலவிற்குரைத்தானா ?

கலாநிதி மாறனின் ஆண்டு சம்பளம் 11 கோடி

ஒருவரின் அதிகப்பட்ச ஆண்டு வருவாய் ரூ। 25 கோடி
ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி 9।14 விழுக்காடு
ரூ 5 கோடிக்கும் அதிகச் சொத்து வைத்திருப்போரின் எண்ணிக்கை 1 லட்சம்
படித்து முடித்ததுமே மாதம்ரூ 2 லட்சத்தில் வேலை
ஆண்டுக்கு 50 வகையான ஆடம்பரக் கார்கள் அறிமுகம்

3 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 79 விழுக்காட்டினர் போதிய சத்தில்லாமல் நலிவடைந்தவர்களாக இருப்பவர்கள்
கருவுற்ற பெண்களில் 48 விழுக்காட்டினருக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை கூட சத்தான உணவு கிடைப்பதில்லை
40 கோடிப் பேரின் வருமானம் ஒரு நாளைக்கு ரூ 20க்கும் குறைவு
10 கோடிப் பேருக்கும் மேல் வேலையின்றித் தவிக்கின்றனர்।
சுமார் 2 லட்சம் கிராமங்களுக்கு நடந்து போவதற்குக் கூடச் சரியான பாதை இல்லை.

மேலே குறிப்பிட்ட இரண்டு புள்ளி விவரங்களையும் படிப்பவர்களுக்கு முதலில் கூறப்பட்ட தகவல்கள் அமெரிக்காவைப் பற்றியதெனவும் இரண்டாவதாகக் கூறப்பட்ட செய்திகள் சோமாலியாவைப் பற்றிதெனவும் தோன்றினால் வியப்பில்லை. ஆனால் இந்த இருவிதமான புள்ளி விவரங்களுமே இந்தியா வைப் பற்றியவை என்பதுதான் அதிர்ச்சியும் சோகமும் கலந்த உண்மை.

இந்தியர்கள் அனைவரின் பொருளாதார நிலையையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டு, அனைவரையும் இந்நாட்டு மன்னர்களாக்குவதே எங்கள் குறிக்கோள் என்ற சவாலுடன் 1990களில் கொண்டுவரப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள், உள்ளபடியே அனைவரின் பொருளாதார நிலையையும் தலைகீழாகப் புரட்டித்தான் போட்டுவிட்டன. ஆம்... அதுவரை இலட்சாதிபதிகளாக இருந்தவர்கள் பொருளாதாரக் கொள்கையின் விளைவாக கோடீசுவரர்களாக மாறிவிட்டனர். சில ஆயிரங்களையாவது வருவாயாகப் பார்த்துக் கொண்டிருந்தவர்களோ தெருக்கோடியில் நிற்கும் ஈசுவரர்களாகி விட்டனர்.

அதன்பிறகும் புதிய பொருளாதாரம் என்ற இந்தப் புயலில் சிக்கி ஏழைகளின் கூரைகள்தான் பறக்கின்றவே தவிர, பணக்காரர்களின் மாளிகைக்கு எதுவுமே நேர்வதில்லை. இந்தியாவின் முதல் பணக்காரக் குடும்பமாக இருந்த அம்பானி குடும்பம் இரண்டாக உடைந்தாலும், இருவருமே இந்தியாவின் முதல் இரண்டு பணக்காரர்களாகி விட்டனர். இந்தியா வில் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த டாடா நிறுவனம் இப்போது உலக நிறுவனங்களையெல்லாம் வாங்கிக் குவித்து வருகிறது. ஒரு காலத்தில் அமெரிக்க நிறுவனங்களில் வேலை கேட்டு இந்திய நிறுவனங்கள் அலைந்த நிலை மாறி இப்போது இந்திய நிறுவனங்களில் வேலைக்குச் சேர அமெரிக்கர்கள் ஆலாய்ப் பறக்கிறார்கள் என்று புதிய பொருளாதாரப் புராணம் பாடும் வல்லுநர்களுக்குக் கிராமங்களில் வாழும் ஏழைகள் கீற்றுக் கொட்டகையையும் விற்றுவிட்டு வீதிக்கு வந்துவிட்ட நிகழ்ச்சி மட்டும் உறைக்கவே இல்லை.

சரி... அப்படி என்னதான் மிகப் பெரிய தவற்றைப் புதிய பொருளாதாரக் கொள்கை செய்துவிட்டது?. அதுவா ஏழைகளிடமிருந்த சொத்து களையெல்லாம் பிடுங்கிப் பணக்காரர் களிடம் தந்தது? என்ற கேள்வி உங்களின் மனத்தில் எழலாம். அப்படி ஓர் ஐயம் ஏற்பட்டவர்களுக்கு இதோ ஓரு விளக்கம்.

ஒரு தந்தை ஒரு நாளைக்கு ரூ 100 வருமானம் ஈட்டுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த வருமானத்தைத் தனது இரு மகன்களுக்கும் பிரித்துத்தர அவர் விரும்பினால் ஆளுக்கு ரூ50 என பிரித்துத் தந்தால் தான் சரியாக இருக்கும். அதை விடுத்து முதல் மகனுக்கு 90 ரூபாயும், இரண்டாவது மகனுக்கு 10 ரூபாயும் கொடுத்து வந்தால் ஓராண்டுக்குப்பிறகு முதல் மகனின் பொருளாதார நிலை எப்படி இருக்கும், இரண்டாவது மகனின் பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்பதைச் சற்றுக் கற்பனை செய்து பாருங்கள். அதுதான் இப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. தொழில் வளர்ச்சியைப் பெருக்குகிறோம் எனக் கூறி தொழிலதிபர்களுக்கே தொடர்ந்து சலுகைகள் வழங்கப்படுவதால் அவர்கள் வளர்ந்து கொண்டே செல்கிறார்கள். மறுபுறம் ஏழை உழவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உரமானியம் போன்ற சலுகைகள் கூட பறிக்கப்படுவதால் உழுதவனின் கைகளே உணவுக்காகப் பிறரிடம் கையேந்த வேண்டியிருக்கிறது.

அப்படியென்றால் பொருளாதாரக் கொள்கையினால் ஒரு பயனுமே இல்லையா? என்று கேட்கத் தோன்றுகிறதா? நிச்சயமாகப் பயன் உண்டு, ஆனால் அது முழுக்க முழுக்க பணக்காரர்களையே சென்றடையும் வகையில் செயல்படுத்தப்படுவதுதான் தவறு, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக சேவைத் துறைக்கும், தொழில்துறைக்கும் சலுகைகளைக் கொட்டிக்கொடுத்த அரசு, அடிப்படைத் துறையான வேளாண்துறையைக் கண்டு கொள்ளாததால் பொருளாதார அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துவிட்டன.

சான்றாகச் சொல்ல வேண்டுமானால், அரசு கொடுக்கும் சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வெகுவேகமாக வளர்ந்து வருகின்றன, இதனால் அதில் வேலைக்குச் சேர்வோருக்கு 25 வயதிற்குள்ளாகவே இயல்பை மீறி மாதத்திற்குக் குறைந்த பட்சம் ரூ, 30 ஆயிரம் முதல் அதிகப்பட்சம் ரூ, 3 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. இந்தத் துறைகளில் வல்லுநர்களாக இருப்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.20 கோடி வரை கொட்டித் தரப்படுகிறது.

அடிப்படைத் தேவைகளில் தொடங்கி வீட்டு வாடகை வரை எல்லாமே அதிக வருவாய் ஈட்டுவோரின் வசதியைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுவதால் ஏழைகளால் வாழவே முடியாத நிலை உருவாகியுள்ளது.

கடந்த சூலை மாத நிலவரப்படி இந்தியாவில் ஆண்டுவருமானம் ஐம்பது லட்சத்திற்கும் மேல் இருப்போரின் எண்ணிக்கை 850. முதலாளிகளாக இருக்காமல் தொழிலாளியாக இருந்து இவ்வளவு ஊதியம் பெறும் நிலையை உருவாக்கியது பொருளாதாரக் கொள்கையின் சாதனைதான். ஆனால், ஒரு நாளைக்கு ரூ. 20 கூட சம்பாதிக்க முடியாமல் திண்டாடும் அமைப்பு சாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?... 39 கோடியே 50 லட்சம் பேர். இவர்களில் எவருக்குமே எந்தச் சமூகப் பாதுகாப்புமே இல்லை என்கிறது இது பற்றி ஆய்வு நடத்திய அமைப்பு சாரா தொழில்களுக்கான தேசிய ஆணையத்தின் அறிக்கை.

ஏற்றுமதியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வரிச் சலுகையும், தொழில் துறையினருக்கு பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடனும் வழங்கும் மத்திய அரசுக்கு, 60 வயதைத் தாண்டிய அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.400 ஓய்வூதியம் வழங்க வகை செய்யும் சட்டத்தை, அது தயாரிக்கப்பட்டு 8 ஆண்டுகளாகியும் நிறைவேற்ற மனம் வரவில்லை.

புதிய பொருளாதாரக் கொள்கைகளின் பயனாக வருவாய் அதிகரித்து இந்தியாவில் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சொத்து வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டி விட்டதாகவும், ஆசியாவிலேயே அதிக பணக்காரர்களைக் கொண்ட நாடு இந்தியாதான் என்றும் மத்திய அரசு கடந்த மாதம் பெருமைப் பட்டுக்கொண்டது.

ஆனால் மறுபுறமோ, இந்தியாவில் 6 முதல் 35 மாதம் வரை உள்ள குழந்தைகளில் 70% பேர் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தியக் குழந்தைகளில் 45% பேர் எடை குறைவாகவும், 38% பேர் வளர்ச்சிக் குறைவாகவும் உள்ளனர். இந்தியக் குழந்தைகளில் 56% பேர் தடுப்பூசி கூட போட்டுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். கருவுற்ற பெண்களில் 48% பேருக்கு ஒருவேளை சத்தான உணவு கிடைக்கவில்லை. இந்த நிலையை மாற்றுவதற்காக ஒவ்வொரு குடியிருப்பிலும் ஓர் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவை மையத்தை (அங்கன்வாடி) தொடங்கவேண்டும் என நாங்கள் பிறப்பித்த உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை? என்று உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

முதலாளிகளும் இவர்களே... தொழிலாளிகளும் இவர்களே...!
இந்தியாவின் புகழ்பெற்ற ஆங்கில நாளேடுகளில் ஒன்று அண்மையில் நடத்திய ஆய்வில், அதிக ஊதியம் பெறும் தனியார் நிறுவன நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது தெரிய வந்துள்ளது। இந்தியாவில் 850 தனியார் நிறுவன நிர்வாகிகள் ஆண்டுக்கு ரூ. 50 லட்சத்துக்கும் அதிகமாக ஊதியம் பெறுகிறார்களாம்.குறிப்பாக நாட்டிலேயே அதிக ஊதியம் பெறும் 10 நிர்வாகிகளின் பட்டியலும், அவர்களின் ஆண்டு வருமானமும்:

1. முகேஷ் அம்பானி - ரூ. 24.51 கோடி
ரிலையன்ஸ் நிறுவனத்தலைவர்
2. லால் முஞ்சால் - ரூ. 15.58 கோடிதலைவர்.
ஹீரோஹோண்டா
3. பவன் முஞ்சால் - ரூ. 15.22 கோடி
நிர்வாக இயக்குநர், ஹீரோஹோண்டா
4. நவின் ஜிண்டால் - ரூ. 13.54 கோடி
தலைவர் ஜிண்டால் நிறுவனம்
5. சுனில் பார்தி மிட்டல் - ரூ. 12.61 கோடி
தலைவர் பார்தி நிறுவனம் (ஏர்டெல்)
6. மிக்கி யமாமோட்டோ - ரூ. 12.60 கோடி
நிர்வாகி, ஹீரோ ஹோண்டா
7. டாகோ எகுச்சி - ரூ. 12.55 கோடி
நிர்வாகி, ஹீரோ ஹோண்டா
8. கலாநிதி மாறன் - ரூ. 11.13 கோடி
தலைவர், சன் தொலைக்காட்சி
9. காவேரி கலாநிதிமாறன் -ரூ. 10.26 கோடி
நிர்வாக இயக்குநர், சன் தொலைக்காட்சி
10. ஏ.ஜே.அகர்வால் - ரூ. 10.00 கோடி
நிர்வாக இயக்குநர், எமர்கேடர்லைன்ஸ் கப்பல் நிறுவனம்
11. அனில் அம்பானி - ரூ. 7.32 கோடி
தலைவர், திருபாய் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனம் 

நன்றி
கீற்று

சென்னை நகரின் 369 வது நிறுவன நாள்...

இன்றைய சென்னை மாநகரம், 1639ஆம் ஆண்டில் மதராசா பட்டிணமாக இருந்தபோது, இந்தியாவில் தங்களின் வணிக சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த வெள்ளையர்கள், தாங்கள் நிலையாக காலூன்ற இந்த மதராசா பட்டிணம் என்ற கடலோர கிராமத்தை வாங்கினர்।இதற்கான பத்திரம் 1639ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதியிட்டு எழுதப்பட்டிருந்தாலும்,

அப்போது வெள்ளையரின் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகி பிரான்சிஸ் டே இந்தியா வந்து சேராததால் அந்த விற்பனை பத்திரம் ஒரு மாத காலத்திற்குப் பிறகே கையெழுத்திடப்பட்டது என்று நம்பப்படுகிறது. பிரான்சிஸ் டே இந்தியா வந்தபிறகு மதராசா பட்டிணத்திற்குச் சொந்தக்காரர்களான நாயக்கர் ஆட்சியாளர்களின் சந்திரகிரி கோட்டையில் ப‌த்‌திர‌ம் கையெழுத்தானது. எனவே இந்த நாளே சென்னை நகரம் உருவான நாளாக கருதப்படுகிறது.கிழக்கிந்தியக் கம்பெனி வாங்கிய அந்த இடத்தில்தான் இன்றுள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை கட்டப்பட்டபோது கடல் மிக அருகிலிருந்தது. அங்கு ஒரு இறங்குதுறையும் இருந்தது. அதை வெள்ளையர் மேம்படுத்தி, தூரத்தில் கப்பல்கள் நிற்க, சரக்குகளும் பயணிகளும் கப்பலில் இருந்து இறங்கி படகுகளில் சிறிது தூரம் பயணித்து இந்த இறங்குத் துறையை அடைவார்கள்.1639இல் வாங்கிய அந்த இடத்தில்தான் பின்னாளில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அதனை மையமாகக் கொண்டே சென்னை நகரம் உருவானது. இக்கோட்டையில் பணியாற்ற வந்த தொழிலாளர்கள் தங்குவதற்காக கோட்டையின் மேற்குப்பகுதியில் ஒரு குடியிருப்புப் பகுதி உருவாக்கப்பட்டது.
ஜார்ஜ் டவுன் ஆகும். அந்தப் பகுதியில்தான் சென்னை மாநகராட்சி இயங்கும் ரிப்பன் கட்டடம் கட்டப்பட்டது (அதற்கும் 300 வயது முடிந்துவிட்டது). இதற்குப் பிறகுதான் கடற்கரையில் இருந்த அந்த இறங்குத்துறையை ஒரு துறைமுகமாக மாற்றும் திட்டம் துவங்கியது. வெள்ளையரின் கிழக்கிந்தியக் கம்பெனியின் செல்வாக்கும் வணிகமும் அதிகரிக்க மதராஸ் பட்டணம் வளர ஆரம்பித்தது.18வது நூற்றாண்டில் வெள்ளையரின் ஆதிக்கம் முழுமையாக நிலைப்பெற்றுவிட்ட நிலையில், மேய்ச்ச‌ல் நிலமாக இருந்த மந்தவெளி (அடையாறு வரை), மைலாப்பூர், மாம்பலம் ஆகிய கிராமங்கள் மதராஸ் பட்டண விரிவாக்கத்திற்குள் கொண்டுவரப்பட்டன. இதேபோல செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் மேற்கிலும், வடக்கிலும் இருந்த கொண்டித்தோப்பு, ராயபுரம், திருவொற்றியூர், பெரம்பூர் பகுதிகளும், சிந்தாதிரிப்பேட்டையும் இணைய மதராஸ் பெரும் பட்டணமானது. மதராஸை நிர்வகிக்க ரிப்பன் கட்டடம் கட்டப்பட்டது.
இப்படி படிப்படியாக 4 நூற்றாண்டுக்காலமாக வளர்ந்து பெருகி இன்று மாநகரமாக திகழ்ந்துவரும் சென்னை, ஒரு வரலாற்று நகரமாகவும், முன்னேறிய முதல் நிலை நகரங்களில் ஒன்றாகவும் உள்ளது
- நன்றி
தட்ஸ் தமிழ்

இரண்டும் இருப்பது..

ஒரு புறம் இனிக்கும
மறு புறம் கசக்கும்
இரண்டும் இருப்பது
ஒரிடம் என்றால்
எனக்கு உண்மையில்
எப்படி இருக்கும் ?
கரும்பின் அடிப்புறம்
அதிகமாய் இனிக்கும்
அதன் இள நுனிப்புறம்
உவர்ப்பாய் கரிக்கும்
அதுபோல் என் மனம்
பார்ப்பவள் முகமும்
ஒருமுறை இனித்து
மறுமுறை சுளித்து
திரும்பும் பார்வையில்
பாவங்கள் நூறு॥
நாளும் காட்டி
பார்க்கும் மனதை
நோகச் செய்தால்
புலம்பும் இதயம்
எதையெண்ணி ஆறும் ?

ஆத்மா அடங்க வைப்பதேன் ??

குளிர் மழை பொழியுமுன்னே
கூம்பி நிற்கும் மேகக் கூட்டம்
அன்பு மழை பொழிவதற்கோ
அமைதி காக்குதுன் முகம்?

அலைபாயும் விழியெங்கே?
களைசொட்டும் நகை எங்கே?
பார்த்தவுடன் இதழ் விரிக்கும்
முத்துப் பல் வரிசை யெங்கே?

காவியுடை அணிந்த மனிதன்
கோலம் உனக்கு வந்ததேன்?
தரைபதியா உன் கால்கள்
தடம் பார்த்து நடப்பதேன்?

எள்ளி நகையாடும் விழி
துள்ளியோடும் உந்தன் சுழி
கள்ளியென பெற்ற பெயர்
தள்ளி வைத்து செல்வதேன்??

ஓடும் மானை ஒத்தகால்கள்
ஆட்டம் சிறிதும் காட்டாதிங்கு
அடங்கி நடை போட்டு என்
ஆத்மா அடங்க வைப்பதேன் ???

நீ பூக்களை காதலி்த்துக் கொண்டிருக்கலாம்....



உன் கொலுசுகள்

முத்தமிட்டால் கூட

வெட்கப்படுகிறாய்...


மேகங்கள் நிலவைக் கடக்கும்போதெல்லாம்

நீ என் நினைவுகளைக் கடக்கிறாய்...


நீ உன் வீட்டில் வீழ்ந்து கிடக்கும் மலர்களை

பொறுக்குகிறாய்

என் மனமெல்லாம் வாசனைகள்


உயிருக்குள் ஊடுருவுகிறது உன்

சிரிப்பொலி-மரணம்வரை பத்திரமாய் வைத்திருப்பேன்


நான் மர நிழலில் ஒதுங்கும்போது

நீ மரக்கன்றுகள் நட்டுக் கொண்டிருக்கிறாய்

ஓர் மழையிலோ ஓர் வெயிலிலோ மீண்டும் ஒதுங்குவேன்

அப்போது நீ பூக்களை காதலி்த்துக் கொண்டிருக்கலாம்....


உலகில் காற்றும் நீரும் தீர்ந்தபின்னும்

உயிர்வாழ்வேன் உன் நினைவுகளை

சுவாசித்தபடி...


கனவுகள் சுகமானவை-வரும்

எல்லா கனவுகளிலும் நீ

பூங்கொத்தோடு என்னைக் கடக்கிறாய்

சிறுகுழந்தையாய் சிரித்திருக்கிறேன்- நான்...


-ரிஷி சேது
( நன்றி தட்ஸ் தமிழ்)
நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும் என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து நன்றியுடன்

(ஈரோடு தமிழன்பன்)


அகல் விளக்காக
இரு;
அது முடியாவிட்டால் பரவாயில்லை।
சூரியன் மேல் சாணி அடிக்காதே!

பாதை போட
வர மறுத்தாய்; பாதகமில்லை,
பாதையில்
முள்ளையும், கண்ணாடித்
துண்டையும் தேடாதே.

சத்தியத்தின்
பாதவிலங்கை உடைத்தெறிய
முடியவில்லையா?
சங்கடப்படாதே!
பொய்யின் உதட்டுக்கு
புன்னகை தயாரிக்க
உலகை உருக்காதே!

அறத்திற்கு ஆதரவாகப்
பேசத்தவறினாய்;
அது குற்றமில்லை.

ஊளையிட்டபடி
ஓடி வராமல் உன் வார்தைகளைச்
சங்கிலியால்
கட்டிபோடக் கூடாதா?

கொடுமைக்கு எதிராக
இரத்த முழக்கம் செய்!
முடியவில்லையா?
தப்பில்லை.

அநியாங்களின்
படுக்கை அறைக்கு
ஆள் அனுப்பும் வேலை உனக்கு
நல்லதா?

மகத்தான
மானுட இசை பெருக்கில்
உன் குரலை சங்கமிக்கச் செய்!.
ஒப்பவில்லையா?
ஒதுங்கிக் கொள்.

ஒளிந்திருந்து
அபஸ்வரங்களை விட்டெறிந்து
காயங்களைக் கண்டு
கை கொட்டிச் சிரிக்காதே!

மாறாக----
குயிலோடு
உனக்குக் கோபம் என்பதால்
கழுதையிடமா போய்ச்
சங்கீதம் கேட்பாய்?

புலியோடு
முற்றிவிட்டது பகை என்றால்
போராடு! அதை விட்டு விட்டு
ஓடிப்போய்
நரியிடம் நட்புக் கொள்ளாதே.

கடலிடம்
ஒரு முறை தோற்றால்
மறு முறையும் மோது.
ஒடைகளோடு சேர்ந்துகொண்டு
அறிக்கை விடாதே!

நீ உயர முடியவில்லை
என்பதற்காக மலை மீது
கற்களை விட்டெறியாதே!

மற்றவர்களின்
மகுடங்களை மட்டம் தட்டக்
குப்பைக் கூடையைச்
சூட்டிக் கொள்ளாதே
உன் தலையில்.

உனக்கும்
உண்மைக்கும் ஊடல் என்றால்
பொய்யின் கன்னத்திலா
போய் முத்தமிட்டுக் கொண்டிருப்பாய்?

வாழ்க்கை உனக்கு
அறைகூவல் விட்டால் நீயே சமாளி!
சாவிடம் போய்
யோசனை கேட்காதே!

எது தேசபக்தி?

- ஈரோடு தமிழன்பன்

பூமி மங்கையின்
பூங்கன்னத்தில் முத்தம் போடும்
புலவன் நான்...
சூரியனுக்கும் சந்திரனுக்கும்
சொந்தக்காரன்...
கண்மணி கருகிய
மின்மினிக் கூட்டம்
இந்தவெளிச்சத்தின்
புதல்வனைவிமர்சிக்கிறது।

என் தமிழ்மேல்
தமிழ் நாட்டின் மேல்
அன்பு வைப்பது என் பிறப்புரிமை.
இந்தியத் திருநாட்டின்மேல்
இதயத்தில் போடும்
பாசப் பதியம் என் சிறப்புரிமை.

புத்தரும் பெரியாரும்
என் அறிவு நரம்புகளில்!
மகாவீரரும் இராமானுசரும்
என்
இரத்த அணுக்களில்!
என்னைக்
கோடி அலைகளாக்கிக்
கங்கைக்கும் காவிரிக்கும்
பங்கிட்டுக் கொடுப்பே.
உறிஞ்சப்படுபவன்
ஒரிசாவில் இருந்தாலும்
உள்ளூரில் இருந்தாலும்
அவன் என்தோழன்!

அபகரிக்கப்பட்ட வைகறைக்காக
ஆர்த்தெழுபவன்
ஆப்பிரிக்காவில் இருந்தால் என்ன?
ஈழத்தில் இருந்தால் என்ன?
அவன் என் வர்க்கம்.
கொடியை உயர்த்திவிட்டுப்
பாரத தேவியின் பாதச் சிலம்பைத்
திருடுவதுதான் தேச பக்தியா?

அவளை
அடகு வைத்துத்
தங்கள் வீட்டுக்குத்
தங்கச் சாளரம் போடுவதுதான்
தேச பக்தி என்றால் - அந்தத்
தேச பக்தி,
எனக்குத் தேவையில்லை!

கள்ள வாக்குகளால்
ஜனநாயகத்தைக் கற்பழிக்கும்
பதவிக் காமம்தான் தேச பக்தி என்றால்
ஒப்புக் கொள்கிறேன். அந்தத்
தேச பக்தியில்லாக் குற்றவாளி நான்!
தேச பக்தியின் முன்னோடிகள்
நரிகளின் மூதாதையர் ஆனதுஎப்போது?

(நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும் கவிதைத் தொகுப்பிலிருந்து)

விதைகளும் வேர்களும்

- ஹேமமாலினி

விதை-
பூமிக்குள்
புதையுண்டு
தன்னைத் தானே
சிறைப்படுத்த,
புதிய செடியொன்று
பூத்து எழுந்தது,
மண் மேலே !

இலைகளும் கிளைகளும்
காற்றோடு கைகுலுக்கினாலும்
வேர்களுக்கு மட்டும்
உலகம் என்றும்இருட்டறை!

திருமணத் தோட்டத்தில்
பெண்ணும் ஒரு விதைதான்!

தனிப்பட்ட விருப்பங்களை
தனக்குள்ளே புதைத்து
தாயான பின்னர் தன்
தனித்துவத்தை மறந்து...
குடும்பத்தின் வாரிசுகள்
வானில் வலம் வந்தாலும்
அம்மாவின் உலகம்
அடுப்படி தாண்டுவதுண்டா?

கனிகளை மட்டுமே
கண்டு பாராட்டும் நாம்,
வேர்களை இனம் கண்டு
வாழ்த்துவது எப்போது?

நீ வந்த பின்பு...-

- ரா. மகேந்திரன்

விழித்த பின்பும்
விட்டு விடாத
எனது காலை சோம்பல்!
பலமுறை முயன்றும்
நான் வெல்லாத
என் தோல்விகள்!
எப்போதும் நிறைவேறாமல்
போகும் என் கனவுகள்!
சோகம் சுமந்து திரியும்
என் தினசரி நினைவுகள்!
இவை அத்தனையும்
கதிரவன் முன் பனி போல
காணாமல் போயின...
முன்பு என்னிடம் துளியும் இல்லாத
தன்னம்பிக்கை
என்னை வந்தடைந்த மறுகணமே!

நட்பின் இலக்கணம்...

'உடுக்கை இழ‌ந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு' என நட்பிற்கு இலக்கணம் வகுக்கிறார் வள்ளுவர்।

எரிமலை இல்லாத, ஆறுகள் இல்லாத ஏன் திரையரங்குகள் கூட இல்லாத நாடுகள் இருக்கின்றன। ஆனால், நண்பர்கள் இல்லாத நாடுகள் என்று ஏதும் இல்லை.

அத்தகைய மகத்துவம் வாய்ந்த நட்பினை, நட்பின் உயர்வினை கொண்டாட, கூடி மகிழ அன்பினைப் பரிமாறி ஆரவாரம் செய்ய எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினமே 'ந‌ட்பு தினம்'.

வயது வரம்பு இல்லாமல், பாலினம் பாராமல் பலராலும் பருகப்படுவதும், பாராட்டப்படுவதும் தொட்டுத் தொடரும் இந்த தோழமைதான்.ஒவ்வொரு ஆ‌ண்டு‌ம் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை நட்பை‌ப் போற்றும் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

அந்நிய இறக்குமதியால் ஆயிரமாயிரம் தினங்கள் அவ்வப்போது வந்து போனாலும், நண்பர்கள் தினத்திற்கு மட்டும் என்றுமே நல்ல வரவேற்பு இருப்பதை மறுக்க முடியாது. காதலர் தினத்தை கணிசமாக எதிர்க்கும் நம கலாச்சாரக் காவலர்கள், நண்பர்கள் தினத்திற்கு மட்டும் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து சிம்மாசனத்தில் அமர வைக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

நாடு போற்றும் நல்ல நட்பினை நம் இதிகாசங்களும், புராணங்களும் சிறப்பிக்கத் தவறவில்லை.நட்பினை நேரில் பார்த்துத்தான் நம் நேசத்தை தெரிவிக்க வேண்டுமென்று இல்லை. பேசிப் பழகி பிரிந்து வருந்த வேண்டும் என்றும் இல்லை. இதனை நம் புராண கதைகளில் இருந்து தெரிந்து கொள்ள முடியும்.

ஆம்! நமக்கெல்லாம் தெரிந்த உதாரணம் கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பைக் கூறலாம். அன்று, புரவலரும், புலவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளவில்லை, பேசிக் கொள்ளவில்லை என்றாலும் நட்பின் உச்சாணிக் கொம்பில் ஏறிக் கொண்டு எல்லோருக்கும் பாடாமாய் அமைந்தார்கள்.

ஒருவரின் புகழ் பற்றி மற்றொருவர் அறிந்து நட்பு பாராட்டினார்கள். தனது நண்பர் கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிரிழப்பதைக் கேள்விப்பட்டு தாமும் வடக்கிருந்து உயிர் துறந்தார் பிசிராந்தையார்.

நமது இதிகாசம் கூறும் நட்பு : கர்ணன் - துரியோதனன். தோழமை என்ற ஒரே வலிமையான ஆயுதத்திற்காக, சொந்தம் என்று தெரிந்தும் பாண்டவர்களை போரில் எதிர்த்து நின்றான் கர்ணன்.

ஒருமுறை துரியோதனின் மனைவியும், கர்ணனும் பகடை விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது துரியோதனின் மனைவி அணிந்திருந்த முத்துமாலையை கர்ணன் பற்றி இழுக்க அது அறுந்து சிதறி கீழே விழுந்தது.

அத்தருணம் அங்கே துரியோதனன் வர, நண்பனின் மனைவியிடம் தவறாக நடந்து விட்டோமோ என்ற பதைபதைப்பில் கர்ணன் நிற்க, செய்வதறியாது திகைத்து நின்றாள் துரியோதனன் மனைவி.

தனது நண்பனை சிறிதும் சந்தேகப்படாத துரியோதனன்,.....
சிதறிய முத்துக்களை 'எடுக்கவோ, கோர்க்கவோ' என தன் மனைவியைப் பார்த்துக் கேட்டான்.

நட்பு என்றால் இப்படி இருக்க வேண்டும்,என்பதற்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள் இவர்கள்.ஆனால்... ஆண்-பெண் நட்பு என்றால் அங்கு காதல் புகுந்து விடுகிறது. இல்லையேல் காமம் தலைதூக்குகிறது என்ற அவலமான சமூகப் பார்வை இன்றைய இளைய சமுதாயம் மீது படர்ந்துள்ளது.

துளியே கடல்
என்கிறது
காமம்

கடலே துளி
என்கிறது
நட்பு
என்றார் புதுக்கவிஞர் அறிவுமதி.

அன்பு... காதல்... நட்பு என்ற மூன்றிற்கும் வித்தியாசம் தெரியாமல் இன்றைய நம் தலைமுறை குழம்பிக் கிடக்கிறது.இவை ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்திருந்தாலும், ஒவ்வொன்றிற்கும் இடையே ஒரு மெல்லிய நூலிழை இடைவெளி இருக்கத்தான் செய்கிறது.

இதனை கவனமாய் கையாள்கிறவனுக்கு மட்டுமே காதலியுடனும், தோழியுடனும் நெருடல் இல்லாத நெருக்கம் ஏற்படும்.

நகுதல் பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு - என்றார் வள்ளுவப் பெருந்தகை.

சிரித்து மகிழ, நல்லன சொல்வதற்கு மட்டுமே அல்ல நட்பு. சிறந்த நட்பு என்பது தவறு செய்கிற போது, தடுத்து நிறுத்தி கண்டிப்பதே ஆகும் என்கிறார் வான் புகழ் கொண்ட வள்ளுவர்.

எனவே வள்ளுவரின் வாக்கிற்கேற்ப வாழ்ந்து காட்டுவோம்!
வாருங்கள் நண்பர்களே! ஆகஸ்ட் 3 நண்பர்கள் தினம்!

- நன்றி
வெப்துனியா

இறைபோல் எங்கும் இருப்பது நட்பு!


மானுட மனத்தின் தூய்மை

இரக்கம் சுரக்கும் சுணை

இன்பத்தை அள்ளித்தரும் கற்பகத் தரு

துயரத்தில் பங்கேற்கும் துணிவு

துன்பத்தை தாங்கிடும் சுமைதாங்கி

பரந்த சிந்தனையின் ஊற்றுக்கண்

உண்மையை அறியும் உரைகல்

வஞ்சத்தை வதைக்கும் சூரியன்

நியாயத்தைக் காக்கும் அரண்

நேர்மையாளனின் உடை வாள்

பொய்மையை பொசுக்கும் யாகத் தீ

பேருண்மையைக் காணத் தூண்டும் ஞானக் கண்

தூய அன்பின் ஒளிக் கதிர்... நட்பு


வானமும் பூமியும் தொடுவது நட்பு

வயலும் மழையும் கலப்பதும் நட்பு

நிலமும் நெல்லும் வளர்வதும் நட்பு

வேராயும் விழுதாயும் படர்வதும் நட்பு

நாடு மொழிகளைத் தாண்டியது நட்பு

உலகளாவிய அமைதிக்கு வேண்டும் நட்பு

உன்னத வாழ்விற்கும் தேவை... நட்பு


- நன்றி

வெப்துனியா

தந்தை பெரியாரும், அவரது நண்பர்களும்!

-மு।பெருமாள்



தந்தை பெரியாரை நாம் எப்படி அறிந்து வைத்திருக்கிறோம்...?

ஓர் ஜாதி மறுப்பாளராக, சமூகப் போராளியாக, மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவராக தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக, சமூக சீர்திருத்தவாதியாக, இன்றைய அரசியல் கட்சிகளுக்கு அடித்தளம் இட்டவராக.... இப்படி பல்வேறு அவதாரங்கள் பெரியாருக்கு மட்டுமே உள்ள சிறப்பம்சங்கள்।

யாருக்காவும், எதற்காகவும் தனது எண்ணங்களை மாற்றிக்கொள்ளாத கொள்கை வீரராக திகழ்ந்ததன் காரணமாகவே பலரது கண்களுக்கும் அவர் ஓர் கலகக்காரராக தெரிந்தார்

ஆனால், தனது கொள்கைகள் ஒரு பக்கம் இருந்தாலும் ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு தலைவர்களிடமும் நெருங்கிய நட்பு பாராட்டிய ஒரு மாபெரும் தலைவர் பெரியார் மட்டுமே।

அன்புக்குரிய அய்யங்கார்:
பெரியாரின் நெருங்கிய நண்பர்களில் மிக முக்கியமானவர் ஏ।எஸ்.கே.அய்யங்கார். தமிழ்நாடு கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களில் ஒருவரான இவர், சென்னைத் துறைமுக தொழிற்சங்கத் தலைவராகவும் பணிபுரிந்தவர்.

பெரியாருடன் மிக நட்பு வைத்திருந்த இவர், பெரியாரின் எண்ணங்கள், கொள்கைகள், விருப்பங்கள் என அனைத்தையுமே அறிந்து வைத்திருந்தார்.

“பிராமணர்கள் மீது பெரியாருக்கு எந்த வெறுப்போ, கோபமோ கிடையாது. ஆனால், பெரும்பாலான பிராமணர்கள் அவரைப் பற்றி தவறாகவே நினைத்து கொண்டிருகிறார்கள். பிராமணீயம் என்ற பெயரில் கடவுள், புராணங்கள், இதிகாசங்களை போற்றும் அந்த கொள்ளையைத்தான் எதிர்த்தார்" என்று தனது நண்பர் பற்றி உலகுக்கு உரக்க சொன்னவர் இவர்தான். அதுதான் உண்மையும் கூட.

ராஜாஜியின் சினேகிதன்:

பெரியார் ஒரு நட்புக்கடல்। அவரது பிராமண நண்பர்களில் மிக முக்கியமானவர் மூதறிஞர் ராஜாஜி.

தனிப்பட்ட முறையில் பிறரது மனம் புண்படும் அளவுக்கு எதுவும் பேசிவிடக்கூடாது, எதையும் செய்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தவர் பெரியார்.

அதனால்தான், கொள்கை ரீதியாக முரண்பட்டவர்கள் கூட, நட்பு ரீதியாக அவருடன் கடைசி காலம் வரை இணைந்திருந்தனர். அவர்களில் முக்கியமானவர் ராஜாஜி.

பெரியார் மிக கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நேரம்; இயற்கை எய்தினார் ராஜாஜி. தனது நண்பனின் மறைவை எண்ணி, சிறு பிள்ளை போல் தேம்பி, தேம்பி அழுதார் பெரியார். எந்த ஒரு துயரத்திலும் அவர் அப்படி அழுது, எவரும் பார்த்தது இல்லை.

ராஜாஜியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக அன்றைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரியும் வந்திருந்தார். எக்கச்சக்கமான பிரமுகர்கள் அமர்ந்திருந்த நிலையில், தள்ளாத வயது; நிற்கக்கூட காலில் வலு இல்லாத நிலை. சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வந்திருந்தார் பெரியார்.

அப்போது, அங்கு வந்த குடியரசுத் தலைவர் கிரிக்கு இருக்கை இல்லை. இதை கவனித்த பெரியார், சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து, தனது சக்கர நாற்காலியில் உட்காரும்படி கிரியை வேண்டினார்.

எனது நண்பருக்கு மரியாதை செலுத்த வந்தவர் நிற்பதா என்று பெரியார் தனது இருக்கையை அளித்தது கண்டு கிரி ரொம்பவே அதிசயித்துப் போனார். இதன் மூலம் தான் நட்புக்கடல் மட்டுமல்ல; பண்பாட்டுக் காவலரும் கூட என்பதை பெரியார் நிரூபித்தார்.

திரு.வி.க.வின் நண்பன்:

பெரியாரின் அன்புக்கு பாத்திரமான நண்பர்களில் ஒருவர் 'தமிழ் தென்றல்' திரு.வி.கல்யாண சுந்தரானார். ஒருமுறை பெரியாரின் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்தார் திரு.வி.க॥ இரவு நீண்ட நேரம் இருவரும் உரையாடி மகிழ்ந்தனர்.

மறுநாள் காலை திரு.வி.க. எழுந்து குளித்து, உடை மாற்றி அவரது அறையிலிருந்து வெளியே வந்தபோது, அவரது முன்பு திருநீற்று சம்படத்தை நீட்டியபடி நின்றிருந்தார் பெரியார்.

இதை சற்றும் எதிர்பாராத திருவிக. ஆச்சரியத்தின் விளிம்புக்கே போய்விட்டார்.“கடவுள் நம்பிக்கை இல்லாதவர் நீங்கள். உங்கள் வீட்டில் திருநீறு சம்படமா...?” என்று திகைப்பு மாறாமல் கேட்டார் திரு.வி.க.

அதற்கு பெரியார் அளித்த பவ்யமான பதில் இதுதான். “நான்தான் கடவுளை நம்பாதவன்தான். ஆனால் எனது நண்பரான தாங்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவராயிற்றே. எனது விருந்தாளியாக வந்திருக்குக்ம் உங்களது தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வது எனது கடமை.

பெரியாரின் திருஉள்ளம் கண்டு மெய்சிலிர்த்துப் போன திருவிக அப்படியே ஆர தழுவிக்கொண்டாராம்.

பெரியாரின் நட்புள்ளத்துக்கு மற்றொரு உதாரணம் இதோ.திரு.வி.க. காலமான செய்தி கேட்டு, ஈரோட்டில் இருந்து விரைந்து வந்தார் பெரியார். இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார்.

ஆனாலும், தொழிலாளர்களின் தோழராகவும், பொதுத்தொண்டுக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவருமான திரு.வி.க மறைவுக்கு மிக குறைந்தளவு கூட்டமே வந்திருப்பது கண்டு வேதனை அடைந்தார்.

உடனடியாக தனது திராவிடர் கழகத் தொண்டர்கள் பலரும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள வரும்படி தகவல் அனுப்பினார். அவ்வளவுதான் சில மணி நேரத்தில் அந்த பகுதியே கூட்ட நெரிசலில் திணற ஆரம்பித்தது. அதோடு, திரு.வி.க.விற்குப் பிடித்தமான பதிகத்தையும் உரத்துக் கோஷம் போடவைத்தார் பெரியார்.

அன்புள்ள அண்ணா:

பேரறிஞர் அண்ணா, சுமார் 40 ஆண்டு காலம் பெரியாருடன் பழகியவர். பெரியாரின் மனைவி நாகம்மையார் இறந்து பின்பு, திராவிடக் கொள்கைகளில் ஈடுபாடுகொண்ட மணியம்மை என்ற பெண்மணியை 1949ம் ஆண்டு மணந்து கொண்டார் பெரியார். அப்போது பெரியாருக்கு வயது 72. மணியம்மைக்கு வயது 26 மட்டுமே.

பெண் உரிமை, பெண் விடுதலை என்று பேசும் பெரியார் தள்ளாத வயதில் ஒரு இளம்பெண்ணை மணம் முடித்தது கழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் கழகத்தை விட்டு வெளியேறினார்கள்.பெரியாருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த பேரறிஞர் அண்ணாவும் விலகிச் சென்று திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்தார்.

தற்போதைய முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் அண்ணாவுடன் சென்றனர். திராவிடர் கழகத்தின் சொத்துக்களைப் பாதுகாக்கவே பெரியார் திருமணம் செய்துகொண்டார் என்பது புரியாமல் பிரிந்து சென்றவர்கள் பற்றி கவலைப்படவில்லை.

ஆனால், காலங்கள் பல சென்ற பின்னரும் அண்ணா-பெரியார் நட்பு, கலைஞர்-பெரியார் நட்பு முறியவே இல்லை. முன்பை விட நெருக்கமான நட்பாகவே அது வலுவடைந்தது. கடந்த 1967ல் திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது, முதல்வராக இருந்த அண்ணா சொன்னது இது. 'தி.மு.கழகத்தின் ஆட்சியை பெரியாரிடம் காணிக்கையாக அளிக்கிறேன்”.

பெரியாருடன் நட்புக் கொண்ட பலர் வரலாற்று நாயகர்களாக இடம் பெற்றது இப்படித்தான். பெரியாரின் நட்பு வட்டத்தில் இடம் பெற்றிருந்த நண்பர்களை பட்டியலிட எத்தனை பக்கங்கள் எழுதினாலும் தீராது. அந்த அளவுக்கு பரந்து விரிந்த மனம் கொண்டிருந்தார் பெரியார்.

அரசியலாகட்டும்; சமூக சேவையாகட்டும்; கொள்கை முடிவாகட்டும்; இன்றைய காலக்கட்டத்தில் பெரியார் போல் நட்புள்ளம் கொண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா, சொல்லுங்கள்...?

நன்றி
வெப்துனியா