திருக்குறள்

நீ வந்த பின்பு...-

- ரா. மகேந்திரன்

விழித்த பின்பும்
விட்டு விடாத
எனது காலை சோம்பல்!
பலமுறை முயன்றும்
நான் வெல்லாத
என் தோல்விகள்!
எப்போதும் நிறைவேறாமல்
போகும் என் கனவுகள்!
சோகம் சுமந்து திரியும்
என் தினசரி நினைவுகள்!
இவை அத்தனையும்
கதிரவன் முன் பனி போல
காணாமல் போயின...
முன்பு என்னிடம் துளியும் இல்லாத
தன்னம்பிக்கை
என்னை வந்தடைந்த மறுகணமே!

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற