திருக்குறள்

உலக தினங்கள்..

காதலர் தினம், அன்னையர் தினம், நட்பு தினம் என ஒரு சில தினங்கள்தான் தற்போது இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது.

இவற்றுக்கே இதென்ன அன்னையர் தினம், நட்பு தினம் என்று தனித்தனியாக ஒரு தினம் என்று சலித்துக் கொள்பவர்கள் ஏராளம்.

இவர்கள் எல்லாம் இந்த பட்டியலைப் படித்துவிட்டு என்னத்தான் சொல்வார்களோத் தெரியவில்லை.

உலக தினங்களின் பட்டியல்..

பிப்ரவரி 14, காதலர் தினம்‌
பி‌ப்ரவ‌ரி 28, உலக அ‌றி‌விய‌ல் ‌தின‌ம்

மார்ச் 2, உலக புத்தக தினம்
மார்ச் 8, உலக மகளிர் தினம்
மார்ச் 22, உலக தண்ணீர் தினம்

ஏப்ரல் 1, முட்டாள்கள் தினம்
ஏப்ரல் 7, உலக சுகாதார தினம்
ஏப்ரல் 22, உலக பூமி தினம்
ஏப்ரல் 25, உலக இறைச்சல் விழிப்புணர்வு தினம்

மே 1, உழைப்பாளர் தினம்
மே 8, உலக விலங்குகள் பாதுகாப்பு தினம்
மே 11, உலக அ‌ன்னைய‌ர் ‌தின‌ம்
மே 15, உலக குடும்பங்கள் தினம்
மே 18, உலக அருங்காட்சியக தினம்
மே 31, உலக புகையிலை எதிர்ப்பு தினம்

ஜுன் 5, உலக சுற்றுச்சூழல் தினம்
ஜுன் 12, உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

ஜுலை 1, உலக நகைச்சுவை தினம்
ஜுலை 11, உலக மக்கள் தொகை தினம்

ஆகஸ்ட் 5, உலக நட்பு தினம்
ஆகஸ்ட் 12, உலக இளைஞர் தினம்

செப்டம்பர் 21, உலக அமைதி தினம்
செப்டம்பர் 26, உலக சுற்றுலா தினம்

அக்டோபர் 1, உலக முதியோர் தினம்
அக்டோபர் 5, உலக ஆசிரியர் தினம்
அக்டோபர் 10, உலக மனவளர்ச்சி குன்றியோருக்கான தினம்
அக்டோபர் 16, உலக உணவு தினம்

நவம்பர் 11, உலக நினைவூட்டல் தினம்
நவம்பர் 16, உலக பொறுமை தினம்
நவம்பர் 20, உலக குழந்தைகள் தினம்
நவம்பர் 21, உலக தொலைக்காட்சி தினம்

டிசம்பர் 1, உலக எய்ட்ஸ் தினம்
டிசம்பர் 3, உலக உடல் ஊனமுற்றோர் தினம்
டிசம்பர் 10, உலக உரிமைகள் தினம்

- வெப்துனியா

கைக் குட்டைக்குச் சட்டம்

கைக்குட்டை சதுரமாகத்தான் இருக்க வேண்டும் என்று பிரெஞ்ச் மன்னன் 1785ஆம் ஆண்டு ஒரு சட்டமே போட்டிருந்தார்.

சதுரத்தைத் தவிர வேறு அளவுகளில் கைக்குட்டைகளை வைத்திருந்தால் அவர்களுக்குக் கடுந் தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்தார்.அதற்குப் பிறகுதான் சர்வதேச கைக்குட்டை தயாரிப்பாளர்களும் சதுர அளவில் கைக்குட்டைகள் தயாரிக்க ஆரம்பித்தனர்

- வெப்துனியா

ஐ.நா. உச்சி மாநாட்டில் இந்திய சிறுமி பேச்சு..

பருவ‌நிலை மா‌ற்ற‌த்‌தா‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளை எ‌த்தனையோ ‌வித‌ங்க‌ளி‌ல் எ‌த்தனையோ‌ பே‌ர் ‌விள‌க்‌கி‌வி‌ட்டன‌ர். ஆனா‌ல், பருவ‌நிலை மா‌ற்ற‌த்தா‌ல் உ‌ண்மை‌யிலேயே பா‌தி‌க்க‌ப்பட இரு‌க்கு‌ம் நமது இளைய சமூக‌ம் இதனை‌ப் ப‌‌ற்‌றி‌ப் பே‌சினா‌ல் அதுதா‌ன் ஏ‌ற்புடையதாக இரு‌க்கு‌ம்.

உ‌ங்க‌ள் குழ‌ந்தை‌க்கு ந‌ல்ல உலக‌த்தை ‌வி‌ட்டு‌‌ச் செ‌ல்லு‌ங்க‌ள் எ‌ன்று எ‌த்தனையோ ‌வித‌ங்‌க‌ளி‌ல் கூ‌றி‌வி‌ட்டா‌ர்‌க‌ள். எத‌ற்கு‌ம் செ‌விசா‌ய்‌க்க‌வி‌ல்லை இ‌ந்த ம‌க்க‌ள். உ‌ங்களது மூதாதைய‌ர் உ‌ங்களு‌க்கு எ‌ப்படி ஒரு ந‌ல்ல உலக‌த்தை ‌வி‌ட்டு‌ச் செ‌ன்றா‌ர்களோ, அதை‌ப் போ‌ன்றே எ‌ங்களு‌க்கு‌ம் ஒரு ந‌ல்ல உலக‌த்தை கொடு‌ங்க‌ள்.

‌நீ‌ங்க‌ள் பாழா‌க்‌கிய இ‌ந்த பூ‌மியை இ‌ங்களே ‌சீ‌ர்படு‌த்து‌ங்க‌ள் எ‌ன்று நமது ‌பி‌ள்ளைகளே‌ச் சொ‌ன்னா‌ல் கே‌ட்காம‌ல் இரு‌க்க முடியுமா?ஆ‌ம், அத‌ற்காக‌த்தா‌ன் ஐ.நா. உ‌ச்‌சி மாநா‌ட்டி‌ல் நட‌ந்த பருவ‌நிலை மா‌ற்ற‌த்‌தினா‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைக‌ள் கு‌றி‌‌த்து ‌விவா‌தி‌க்க கூ‌ட்ட‌ப்ப‌ட்ட கூ‌ட்‌ட‌த்‌தி‌ல் இ‌ந்‌தியாவை‌ச் சே‌ர்‌ந்த 9ம‌் வகு‌ப்பு மா‌‌ண‌வி யு‌க்ர‌த்னா கல‌ந்து கொ‌ண்டு பே‌சியு‌ள்ளா‌ர்.

பருவநிலை மாற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடு செய்துள்ள உச்சிமாநாடு அமெரிக்காவின் நியுயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடந்து வருகிறது.

இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, சுற்றுச்சூழல் வனத்துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர். இதில், உலகெங்கும் உள்ள 300 கோடி குழந்தைகள் சார்பில் இந்தியாவைச் சேர்ந்த 13 வயது சிறுமி யுக்ரத்னா ஸ்ரீவத்சவா உ‌ச்‌சி மாநா‌‌ட்டி‌ல் ப‌ங்கே‌ற்று பே‌சினா‌ர். இவ‌ர் உ.பி. தலைநகர் லக்னோவில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரு‌ம் மாண‌வியாவா‌ர்.

யுக்ரத்னா மாநா‌ட்டி‌ல் பேசுகை‌யி‌ல், பருவநிலை மாற்றத்தால் உலகின் வெப்ப நிலை அதிகரித்து இமய மலை உருகுகிறது. இமயமலை‌யி‌ல் வாழு‌ம் பனிக்கரடிகள் பலியாகின்றன. ஐந்து பேரில் இருவருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. அதே நேரத்தில், பசிபிக் பெருங்கடலின் நீர்மட்டம் அதிகரித்தபடி உள்ளது. பருவ நிலை மாற்றத்தை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை. நமக்காக இல்லாவிட்டாலும் வருங்கால சந்ததிக்காகவாவது உலகை காக்க வேண்டியது நம் கடமை எ‌ன்று கூ‌றினா‌ர்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன அதிபர் ஜு ஜின்டோ உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரது மு‌ன்‌னிலை‌யிலு‌ம் யு‌க்ர‌த்னா‌வி‌ன் பே‌ச்சு இட‌‌ம்பெ‌ற்றது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
- வெப்துனியா

ஒரு 'முக்கோண' மர்மக் கதை!


விடை தெரியாத சில இயற்கை விநோதங்களில் மிக முக்கியமானது... பெர்முடா முக்கோணம்!

வட அட்லான்டிக் பெருங்கடலில் பெர்முடா, மியாமி, போர்டோ ரிகோ இந்த மூன்று பகுதிகளையும் இணைத்தால் கிடைப்பதுதான், பெர்முடா முக்கோணம்!
பல மர்மங்களை உள்ளடக்கிய கடல் பகுதி. இந்த முக்கோணப் பரப்புக்குள் வந்த கப்பல்கள், விமானங்கள் பல வீடு திரும்பியது இல்லை. அப்படியே மாயமாகிவிடும். ஏன், கப்பல்களைக் காணவில்லை என்று ஆராய்ச்சிக்காகச் சென்ற 40 கப்பல்கள், 20 அதிநவீன விமானங்களையும் காணவில்லை.
1872-ல் அந்தப் பகுதிக்குள் அப்பாவியாகத் தலை நீட்டிய மேரி செலஸ்டின் என்ற கப்பல்தான் முதல் பலி. தொடர்ந்து மெடா, சைக்ளோப்ஸ், கரோல் ஏ டீரிங்க், கன்னிமரா போன்ற பிரமாண்டக் கப்பல்களும் ஃப்ளைட் 19, ஸ்டார் டைகர் போன்ற போர் விமானங்களும் மிதந்து, பறந்த சுவடுகளே இல்லாமல் மாயமாகிவிட, ஆயிரக்கணக்கான மக்கள் பலியானர்கள். 'நடந்தது என்ன?' என்று ஆராய்ச்சியாளர்கள் களத்தில் குதித்தார்கள். வாலன்டைன் என்ற கடல் ஆராய்ச்சியாளர், ''கப்பல்கள் எங்கும் போகவில்லை. அவை எல்லாமே அங்குதான் வேறு ஒரு பரிமாணத்தில் இருக்கின்றன!'' என்று குழப்பியடித்தார். அமெரிக்க விஞ்ஞானிகள், ''முக்கோண ஏரியாவுக்குள் திடப்பொருட்கள் சின்னச் சின்ன அணுக்களாக உடைந்துவிடுவதால் பொருட்கள் மாயமாகிவிடுகின்றன!'' என்றார்கள். ஏலியன்களின் தாக் குதல், ஓவர்டோஸ் புவிஈர்ப்பு விசை, கடலின் நீரோட்டத்தில் இருக்கும் மின்னோட்டம் என்று பலர் பல செய்திகள் சொன்னார்கள்.

பெர்முடா புதிர் முடிச்சு அவிழ்வதற்குள் அடுத்த பூதம்... ஜப்பானின் தென் கிழக்குக் கடற்பகுதி வழியாகச் செல்லும் கப்பல்கள் இப்போது காணாமல் போக ஆரம்பித்திருக்கின்றன. ஜப்பான் விஞ்ஞானிகள் 'டிராகன் டிரையாங்கிள்' என்று பெயரிட்டுக் கவலையோடு ஆராய்ந்துகொண்டு இருக்கிறார்கள்!
- ஆர்.சரண்
மூலம்- ஆனந்தவிகடன்

கறுப்புப் பெட்டி என்ன நிறம்?


விமான விபத்து என்றால் உடனே பத்திரிகைகளில் கறுப்புப் பெட்டி தேடும் செய்தி வரும். ஏனெனில் அதில்தான் இருக்கிறது விபத்தின் ரகசியம். கறுப்புப் பெட்டியின் உண்மையான பெயர் ஃப்ளைட் டேட்டா ரெக்கார்டர். விமானம் பறக்க ஆரம்பித்ததும் விமானம் பறந்த வேகம், விமானிகளின் உரையாடல், சீதோஷ்ண நிலை, இன்ஜின் வெப்பநிலை போன்றவற்றைப் பதிவு செய்ய ஆரம்பிக்கும். விபத்து ஏற்பட்ட நேரத்தில் இருந்து முந்தைய இரண்டு மணி நேரத் தகவல்களை இதில் இருந்து எடுக்கலாம். பெயர் என்னவோ கறுப்புப் பெட்டி. ஆனால், பார்த்தவுடன் பளிச்சென்று கண்டுபிடிக்க வசதியாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் அந்தப் பெட்டி. விமான விபத்துக்களுக்குப் பிறகு பெரும்பாலும் கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுவிடும். உலக வர்த்தக மையம் மீது தாக்குதல் நடந்தபோது கறுப்புப் பெட்டிகள் முற்றிலுமாகச் சேதமடைந்துவிட்டன.
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி விபத்தான ஹெலிகாப்டரில் இருந்த கறுப்புப் பெட்டி மோதிய வேகத்தில் சேதமானதால் போதிய தகவல்களைப் பெற முடிய வில்லை. அதை அமெரிக்காவுக்கு அனுப்பி தகவல் பெற இருக்கிறார்கள் இந்திய அதிகாரிகள். விபத்தின் ரகசியம் விரைவில் வரும்!
-பா.பிரவீன்குமார்
மூலம். ஆனந்தவிகடன்

உங்களை உலகம் புகழனுமா?!

சக்போரா குறியீடுகள்!

இங்கிலாந்தில் உள்ள சக்போரா ஹாலில் இருக்கும் அந்தப் படத்தில் ஒரு பெண்ணும் மூன்று மேய்ப்பர்களும் இருக்கிறார்கள். மூன்று ஆண்கள் ஒரு கல்லறையைத் தோண்டுகின்றனர். கல்லறையில் லத்தீன் மொழியில் 'நானும்
ஆர்காடியாவில் இருக்கிறேன்!' என எழுதப்பட்டு இருக்கிறது. அது என்ன என்பதுதான் ரகசியம். கண்டுபிடித்தால், இயேசு கடைசியாக திராட்சை ரசம் குடித்த கோப்பையின் இடம் தெரியும் என்பது பலரின் நம்பிக்கை. D O U O S V A V V M என்னஎன்று புரிகிறதா? புரிந்தால் நீங்கள் உலகப் புகழ் பெறலாம்!

-ரயன்
மூலம். - ஆனந்தவிகடன்

கடத்தல் ஏலியன்ஸ் கமிங்!

வேற்றுக் கிரகத்து மனிதர்கள்தான் சென்ற நூற்றாண்டில் அமெரிக்க, ஐரோப்பிய மக்களின் தூக்கம் கெடுத்தவர்கள். UFO (Unidentified Flying Objects) எனப்படும் பறக்கும் தட்டுக்கள்தான் பல வருடங்களாக உலக மக்களை ஆச்சர்யப்படுத்தி அச்சப்படுத்துகிறது. சங்குச் சக்கரம் மாதிரி தலைக்கு மேலே கிறுகிறுவெனச் சுற்றி, பின்னர் விஷ்க்கென வேகமெடுத்து மறையும் பல பறக்கும் தட் டுக்கள் இன்று வரை பீதி கொடுத்து பேதி கிளப்புகிறது. ஏலியன்கள் (வேற்றுக் கிரக வாசிகள்) பூமிக்கு வருவதே மனிதர்களின் ஐ.க்யூ லெவலைக் கண்டுபிடிக்கத்தான் என்பது அமெரிக்க மக்களின் நம்பிக்கை. 1961-ம் வருடம் பார்னே மற்றும் பெட்டி ஹில் தம்பதியர் விநோதமான உருவம்உடைய ஆட்களால் கடத்தப்பட்டார்கள். அந்த உருவங்கள் தங்கள் உடலில் ஏதோ ஆராய்ச்சி செய்தன என்பதைத் தாண்டி அவர்களால் எதுவும் பேச முடியவில்லை. அதற்கடுத்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக வசித்தவர்கள் திடீரெனக் காணாமல் போக ஆரம்பித்தார்கள். இரண்டு நாள் கழித்து மந்திரித்த கோழி மாதிரி திரும்பி வந்தார்கள். கர்ப்பிணிப் பெண் ஒருவர் காணாமல் போய் குழந்தை இல்லாமல் திரும்பி வந்த கதையும் நடந்தது. ஊரடங்கு உத்தரவு போட்டது போல ஊரே வீட்டுக்குள் அடைந்துகிடந்தது. 'நாங்கள் பறக் கும் தட்டைப் பார்த்தோம். எங்களை ஏலியன்கள் கடத்திச் சென்றார்கள்' என்று பலர் மீடியாவை நோக்கிப் படையெடுத்தார் கள். அன்றில் இருந்து இன்று வரை டியூப் லைட் மாதிரி, கவிழ்க்கப்பட்ட பக்கெட் மாதிரி விநோத உருவங்கள் பறந்ததைப் பலர் படம் எடுத்திருக்கிறார்கள். அமெரிக்க அரசாங்கமும் முடிந்தவரை என்னென்னவோ ஆராய்ச்சிகள் செய்து பார்த்துச் சலிப்படைந்துவிட்டது. உலகின் வெவ்வேறு மொழிகளில் 'நாங்கள் உங்கள் நண்பர்கள்' என்பதை ரெக்கார்ட் செய்து சேட்டிலைட் மூலமாக விண்வெளியில் ஒலிபரப்பு செய்தார்கள் என்றுகூடச் செய்தி வதந்தி. எத்தனையோ பேர் பார்த்திருந்தாலும் இன்று வரை பறக்கும் தட்டின் ஒரு பகுதியோ, அதில் இருக்கும் ஓர் உயிரினமோ பூமியில் சிக்கியது இல்லை. பறக்கும் தட்டு என்பது 'அமெரிக்க ராணுவம் உருவாக்க முயற்சித்து, தோற்றுப்போன புதுவகைத் தாக்குதல் கருவி' என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இருக்கிறதோ, இல்லையோ... ஹாலிவுட் டைரக்டர்களின் உதவியால் ஏலியன்கள் பூமியை நோக்கி வருடா வருடம் படை எடுத்துக்கொண்டே இருக்கின்றன!

- - கார்த்திகா குமாரி
மூலம் - ஆனந்தவிகடன்

மாஜிகளின் மஜா PARTY !!!






















நன்றி - நக்கீரன் குழுமம்

புறக்கடையில் கோழி வளர்க்கும் அமெரிக்கா...!

"நேரங்காலம் சரியில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்றெல்லாம் யாராலும் ஆருடம் கணிக்க முடியாது. அப்படியே எதையாவது கணித்தாலும், அது தலைகீழாக மாறிப் போகலாம். அதனால், இப்போதே சுதாரித்துக் கொண்டு வீடுகளிலேயே கோழிகளை வளர்த்து பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொண்டு, நிதிச் சுமையிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்"

-இது, உலகத்தைத் தாங்கிப் பிடிப்பதற்காகவே அவதாரம் எடுத்தவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டு, உச்சக்கட்ட மமதையில் உலக நாடுகளைப் பலவகையிலும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் அமெரிக்காவில் பரபரப்பாக இப்போது ஓடிக்கொண்டிருக்கும் அறிவுரைதான்!

அந்நாட்டின் பொருளாதார வல்லுநர்கள் பலரும், மக்களை நோக்கி அடிக்கடி இப்படிப்பட்ட அறிவுரைகளைத்தான் அள்ளிவிட்டுக் கொண்டுள்ளனர். நம்புவதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தாலும், மறைக்கவோ... மறுக்கவோ முடியாத விஷயம்தான் இது

உலக அளவிலான பொருளாதார வீழ்ச்சி காரணமாக உலக நாட்டாண்மையான அமெரிக்கா ரொம்பவே ஆடிப்போயிருப்பது ஊரறிந்த உண்மை. அமெரிக்காவில் கடந்த ஆறாண்டுகளாக எகிறிக்கொண்டே போகும், உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் திணறிக் கிடக்கிறார்கள், அமெரிக்கர்கள்

சாப்பிடுவதற்காகவே வாழும் ஜென்மங்கள்!

வாழ்வதற்காக சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையைவிட, சாப்பிடுவதற்காகவே வாழ்பவர்களின் எண்ணிக்கை அங்கே அதிகம். அரசும், தனியார் நிறுவனங்களும் இப்படித்தான் அந்த மக்களை பழக்கியும் வைத்துள்ளன. இதன் காரணமாக 'சாப்பாட்டு ராமன்'களாகிப் போனவர்கள்கூட, தற்போதையச் சூழலில் சாப்பாட்டைக் குறைக்க வேண்டிய கட்டாயம். விடுமுறைகளைக் கழிக்க அருகிலுள்ள ஊர்களுக்கு மட்டுமே போகிறார்கள். புதிய கார்களை வாங்குவது, புதிய வீடு வாங்குவது என்று பல விஷயங்களைத் தவிர்த்து வருகிறார்கள் மக்கள். அதன் ஒரு கட்டமாகத்தான் கோழி வளர்ப்பு என்பதும் அங்கே அதிகரித்துக் கொண்டுள்ளது. அதிகளவில் கோழி இறைச்சியை உண்டு பழகிப்போன அமெரிக்கர்கள், இறைச்சிக்காக பணம் செலவளிக்க முடியவில்லை. இந்நிலையில்தான், பொருளாதார வல்லுநர்களின் அறிவுரைப்படி வீட்டுக்குவீடு புறக்கடை முறையில் கோழிகளை வளர்க்க ஆரம்பித்திருக்கின்றனர்.

நாட்டுக் கோழி மற்றும் பிராய்லர் கோழி என்று தங்களுக்குப் பிடித்த கோழிகளை மக்கள் வளர்க்க ஆரம்பித்திருப்பதால், நாடு முழுவதுமே புறக்கடை கோழி வளர்ப்பு முழு வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதனால் கோழிக்குஞ்சு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் முழு வீச்சில் குஞ்சுகளை உற்பத்தி செய்து வருகின்றன. நியூயார்க், சிகாகோ போன்ற பெரு நகரங்களில்கூட கோழிகளுக்கான கூண்டுகள் கனஜோராக விற்பனையாகின்றன. ‘கோழிகளை வீட்டில் வளர்க்கக் கூடாது' என்ற சட்டத்தையே அரசாங்கம் சற்று தளர்த்தியிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

நாளைக்கே வேலைபோனால் என்னாவது?

நாடு முழுவதும் கோழி வளர்ப்பில் ஏற்பட்டுள்ள ஆர்வம் காரணமாக, கோழிக் குஞ்சுகள் அதிகளவில் பார்சலில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து ஜூன் மாதம் வரை மட்டுமே 1.2 லட்சம் பவுண்ட் அளவில் கோழிக் குஞ்சுகள் பார்சலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்கின்றன புள்ளிவிவரங்கள்.

"நாளைக்கே என் வேலை போய் விட்டால்... நான் என்ன செய்யமுடியும்? எப்படி, என் குழந்தைகளுக்குச் சோறு போடுவது?'' என்று பரிதாபமாகக் கேட்கும் நான்கு குழந்தைகளின் தந்தையான ரோம்ரியல், "அதனாலதான் நிறையக் கோழிகளை வளர்க்க ஆரம்பித்துள்ளேன். வளர்ந்த கோழிகளையோ, இறைச்சியையோ வாங்க அதிகளவு செலவு பண்ண வேண்டியிருக்கிறது. அதனால் குஞ்சுகளை வாங்கி நாமே வளத்தால் பணம் மிச்சமாகிறது" என்று தெம்பாகச் சொல்கிறார்.

கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வரும் நூலகர் ஜாஸ்மின் மிடல்பாஸ், "நான் கடந்த ஆண்டிலிருந்து கோழி வளர்க்க ஆரம்பித்தேன். இப்போது என்னிடம் 26 கோழிகள் உள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக எனக்கு ஒரு டஜன் முட்டைகள் கிடைக்கின்றன. அதிகபட்சமாக மூன்று டாலர் வரை கிடைக்கிறது" என்று சொல்கிறார் சந்தோஷத்துடன்.

இதையெல்லாம் பார்த்துவிட்டு, அரசுத்துறையினரும் புறக்கடைக் கோழி வளர்ப்புக்கு அங்கே ஊக்கம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இதைப் பார்க்கும்போது,

'ஆடாத ஆட்டமெல்லாம்... போட்டவங்க மண்ணுக்குள்ள... போன கதை, உனக்குத் தெரியுமா...?'

என்றே பாடத்தோன்றுகிறது.

- நன்றி
விகடன் குழுமம்

"முடியும்" என்ற நம்பிக்கை....


அது 1950 வருடங்களில் நிகழ்ந்த சம்பவம்...

தமிழ்நாடுமுழுவதும் சூறாவளியாகப் பயணம் செய்து மக்களைத் தன்னுடைய சாதுர்யமான பேச்சினால் கவர்ந்து கொண்டி ருந்தார் அண்ணா. அவருடைய எரிதழலும், தென்றல் காற்றும் கலந்த அறிவார்ந்த பேச்சு மக்களிடையே ஒரு பெரிய எழுச்சியையே ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளி மாணவர்களாகிய நாங்களும் மகுடிக்கு அடங்கிய பாம்பு போல் அந்த வசீகரப் பேச்சில் கட்டுண்டு கிடந்தோம்.
அவரை எப்படியாவது எங்களுடைய பள்ளி விழாவுக்கு அழைத்து வந்து பேச வைக்க வேண் டும் என்கிற ஆசை தணியாத தாகமாய் மாறியது. ஒருநாள் நானும் சக மாணவர்கள் சிலரும் சென்னைக்கு ரயில் ஏறி விட்டோம். அறிஞர் அண்ணாவின் வீட்டைக் கண்டுபிடித்து அவரைச் சந்தித்தும் விட்டோம். மிக எளிமையான வீட்டில், ரொம்ப சிம்பிளாக இருந்த அந்த மாபெரும் தலைவரை முதல் முதலாகப் பார்த்த போது எனக்கு வியப்பில் மூச்சடைத்தது. இவரா மேடைகளில் புயல் கிளப்பும் பேச்சுக்களை அனல் பறக்க விடுபவர் என்கிற எண்ணம் ஏற்பட்டது.

ஆனால் அந்த கரகரப்பான மயக்கும் குரல் அருகில் ஒலித்ததை நான் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். கைலி, கை வைத்த பனியன் மற்றும் ஷேவ் செய் யாத முகத்துடன் இருந்த அண்ணா, "இப்போதைக்கு என்னால் அங்கே வர முடி யாது'’என்று சொன்னதும் எங்களுக்கு ஏமாற்றமாக இருந் தது. ஆனாலும் நாங்கள் விடாப்பிடியாக "தாங்கள் கண்டிப்பாக வந்தே ஆக வேண்டும்'’என்று பிடிவாதம் பிடித்தோம். மெலிதாகப் புன்னகை புரிந்த அவர் “"சரி, திருவையாருக்குச் சுற்றுப் பயணம் வரும்போது உங்கள் பள்ளிக்கு அவசியம் வருகிறேன்' என்று உறுதி மொழி அளித்து எங்களை அனுப்பி வைத்தார். நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

திரும்பும் வழி எங்கும் அண்ணா எங்கள் பள்ளிக்கு வந்து பேசுவது போன்ற கனவுகளே வந்து கொண்டிருந்தன. இங்கே சிக்கல் ஒன்று இருந்தது. நாங்கள் சென்னைக்குக் கிளம்பி வந்து அண்ணா அவர்களைப் பார்த்ததோ, அவர் எங்கள் பள்ளிக்கு வர ஒப்புக் கொண்ட தோ எங்கள் பள்ளித் தலைமை ஆசிரியருக்குத் தெரியாது. அன்றிருந்த திராவிட இயக்க அரசியல் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருந்தது. தலைமை ஆசிரியருக்குத் தெரிந்தால் திட்டுவார் என்று பயந்து அவரிடம் இந்த விஷயத்தை மறைத்து விட்டோம்.

அண்ணாவிடமிருந்து ஒருநாள் "நான் இந்த தேதியில் பள்ளிக்கு வருகிறேன்' என்கிற தகவல் வந்ததும் நாங்கள் புளகாங்கிதம் அடைந்தோம். இனிமேலும் தலைமை ஆசிரி யரிடம் மறைக்க முடியாது என்கிற சூழ்நிலை யில் அவரிடம் தயங்கித் தயங்கி விஷயத்தைப் போட்டு உடைத்தோம். கடுங்கோபம் கொண்ட அவர் தன்னிடம் கேட் காமல் எப்படி அவ ரை அழைக்கலாம் என்று கேட்டு ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதித்தார். அவரை மெல்ல மெல்ல ஆசுவாசப் படுத்தினோம். கடைசியில் ஒப்புக்கொண்டார்.அண்ணாவை வரவேற்பதற்கான கோலாகலமான ஏற்பாடுகளைச் செய்தோம். இராமநாதபுரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அண்ணாவும் எங்கள் பள்ளிக்கு வருகை தந்தார். அருமையான உரையை நிகழ்த்தினார். மேடைப் பேச்சில் அவருடைய அணுகு முறை மிகவும் வித்தியாசமானது. அன்று எங்கள் பள்ளி மேடையில் ஏறிய அவர் மாணவர்களாகிய எங்களைப் பார்த்து ""நான் எந்த தலைப்பில் பேச வேண்டும் என்று சொல்லுங்கள்..அதில் பேசுகிறேன்..''’என்றார். ஒரு கணம் நாங்கள் திகைத்துப் போனோம். எங்களுக்குள் அவசர அவசரமாகப் பேசி முடிவெடுத்து "நதிகள்'’என்கிற தலைப்பில் பேசுமாறு வேண்டினோம்.

மடை திறந்த வெள்ளம் போல் அந்தத் தலைப்பில் பேச ஆரம்பித்தார் அறிஞர் அண்ணா. மனித வரலாற்றில் ஐயாயிரம் வருடங்களுக்கும் மேலாக நதிகள் எப்படி மனித நாகரிகத்தை மேம்படுத்தின என்பதில் ஆரம்பித்து, இந்திய நாகரீக வளர்ச்சியில் நதிகளின் பங்கு, மற்றும் மேற்கு நாடுகளான சுவிட்ஸர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா முதலியவற்றில் நதி நீர் எவ்வளவு அற்புதமாகப் பயன்படுத்தப் படுகிறது என்பது வரை சுமார் ஒன்றரை மணி நேரம் தேனருவி போன்ற பேச்சை அளித்தார். நாங்கள் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந் தோம். நதிகளின் முக்கியத் துவம் பற்றி அப்போது அவர் பேசிய பேச்சு என் மனதில் பசு மரத்தாணி போல் பதிந் தது. இன் றைக்கும் நான் பேசும் பல கூட்டங்களிலும், எழுதும் கட்டு ரைகளிலும் நதி நீர் இணைப்பின் முக்கியத்துவம் பற்றிச் சொல்வதற்கு அந்தப் பேச்சு ஒரு ஆரம்ப விதை என்றே சொல்லலாம்.

ஐம்பது வருடங்களுக்கு முன் னால் அந்த தீர்க்கதரிசி பேசியது இன்று நிறைவேறக்கூடிய ஒரு சூழ் நிலை மெதுவாகக் கனிந்து வருகிறது. தீர்க்கதரிசிகள் பலரின் கனவுகள் பலிக்கும்போது அவர்கள் இருப்ப தில்லை என்பது வரலாற்றில் சோகமான நடப்பு.

நமது நாட்டில் ஆண்டுதோறும் 1500 BMC நதிநீர் வெள்ளத்தினால் கடலுக்குள் போய் சேருகிறது. அதில் 300 BMC நீரை நாம் உபயோகித்தாலே, நாடு வளம் பெற்று நலம் பெறும். அந்த 300 BMCநீரை எப்படி நாட்டுக்குள் திருப்பி விடுவது என்பதைப் பற்றி நாம் யோசித்து செயல்பட வேண்டிய கட்டத்தில் இருக் கிறோம். நதிநீர் இணைப்பு என் பது இன்று பேச் சளவில் ஒரு கருத்துருவாக்க மாக இருந்தா லும் மிக விரை வில் காலத்தின் கட்டாயத்தினால் அது நனவாகி விடும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. ஆனால், பல பேர் முடியாது, முடியாது என்பதை தாரக மந்திரமாக வைத்துள் ளார்கள்.

கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்று காந்தியடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களும் நினைத் திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத் திருக்காது. சி.சுப்பிரமணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருக்காது. வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியில் வெற்றி அடைந்து இருக்காது. விக்ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று செயற்கைக்கோளை இந்தியா ஏவியிருக்க முடியாது.

முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது. எனவே நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்ட 54 கோடி இளைஞர்கள்தான், இந்திய நதிகளை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்ட இளைஞர்கள்தான் அனுபவத் தின் துணை கொண்டு வெற்றியை காண வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும்... "முடியும்' என்ற நம்பிக்கை முதலில் ஓவ்வொரு இந்தியனுக்கும் வேண்டும்.

ஒவ்வொரு இந்தியனின் மேம்பாட்டுக்காக, மாநிலங்கள் பெருந்தன்மையுடனும், பரந்த மனப்பான்மையுடனும் நதிநீர் இணைப்புக்காக ஒன்றுபட வேண் டும் என்பதுதான் என் அவா. இதற்குத் தேவை கூட்டு மனப் பான்மை எல்லா மனங்களும் இந்த விஷயத்தில் ஒன்றுபட வேண்டும். இந்த கூட்டு மனப்பான்மையை அந்த நாள் முதல் இந்நாள் வரை நான் இராமநாத புரத்து மக்களிடம் பார்க்கிறேன். பொதுப் பிரச்னையில் அவர்கள் எப்போதும் ஒன்றுபட்டே முடிவெடுப் பார்கள்.

ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் நான் மேற் கொண்ட என்னுடைய முதல் சொந்த ஊர்ப்பயணம் மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. என்னைக் காண மக்கள் அலை அலையாக வந்து கொண்டே இருந்தார்கள். அவர்களிடம்தான் எத்தனை கதைகள்! எத்தனை சோகங்கள்! எத்தனை போராட்டங்கள்! எத்தனை வெற்றிகள்!

அவர்களுடைய கோரிக்கைகளில் ஒன்று இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சை தியேட்டர் வேண்டும் என்பது. கொச்சியில் இருந்த மாதா அமிர்தா மருத்துவ அறிவியல் கழகத்திடம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன். நானும் ஒரு நிதியை அதற்காக ஒதுக்கியிருந்தேன். அவர்களும் மனம் உவந்து அப்பணிகளை மேற்கொண்டிருந்தார்கள்.

அந்த மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர் திறப்பு விழா எனக்கு மிக மகிழ்ச்சியைத் தந்தது. சில வருடங்களுக்கு முன்னால் இதே இராமநாதபுரம் மாவட்டத்துக்கு நான் வருகை தந்த போதும் எண்ணற்ற இளைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைக் கண்டேன். அவர்களிடம் இந்தியா முன்னேறிய நாடாக மாற வேண்டும் என்கிற கனவு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

நம்முடைய பக்கத்து நாடுகள் சிலவற்றில் மனித உரிமைகள் நசுக்கப்படுவதை நாம் காண்கிறோம், அந்த நாடுகள் இராமநாதபுரம் மாவட்ட மக்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

தேவையில்லை தாழ்வு மனப்பான்மை...

மனித இனம் இயற்கையின் உயரிய படைப்பாகும். மற்ற உயிர்களுக்கில்லாத ஆறாவது அறிவான பகுத்தறிவு என்னும் தன்னைத்தானே அறிந்து கொள்ளும் அறிவை கொண்ட இனம்தான் மனித இனம். இடம், பொருள், ஏவல் இம்மூன்றையும் பகுத்து அறிவதே பகுத்தறிவாகும். இதைத்தான் சித்தர்கள் ஆறாவது அறிவு என்கிறார்கள்.

மனித இனம் ஆரம்ப காலங்களில் விலங்குகள் போல்தான் அலைந்து திரிந்தது. பின் நாகரீகம் வளர வளர தன் சுய தேவைகளைத் தேடி குடும்பம் குடும்பமாக வாழ ஆரம்பித்தனர். மேலும் வளர்ச்சியில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் நிகழ்ந்து முதலாளி தொழிலாளி என்ற நிலை வந்தது. மேலை நாட்டவர்கள் பலர் நம் நாட்டை அடிமை தேசமாக்கி 150 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். இப்படி மக்களை அடிமைகளாக்கியது மனிதன்தான். தன் சுய நலத்திற்காக தன் இனத்தை சேர்ந்தவர்களையே அடிமையாக்கினான். இந்த அடிமை நிலையால் மனித இனம் பலவகையான துன்பங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் சந்தித்து வந்துள்ளது. இதில் ஒரு மனிதன் தன்னை மட்டும் உயர்ந்தவனாகவும், மற்றவர்களையெல்லாம் தாழ்ந்தவர்களாகவும் எண்ணி அடிமையாக்கியதன் விளைவு தாழ்வு மனப் பான்மையை உண்டாக்கியது.

சிலரது மனம் வெற்றிக் களிப்பில் மூழ்கி கொக்கரிக்க ஆரம்பிக்கும்போது அவர்களுக்கு தானாகவே அகம்பாவமும், அகங்காரமும் ஏற்படுகிறது. இதனால், தன்னை பெரிய அறிவாளி என்றும் மற்றவனை முட்டாள் என்றும் எண்ணி அவர்களை எதற்கும் லாயக்கற்றவர்களாக சித்தரிக்கின்றனர். இப்படி சித்தரிக்கப்பட்டவர்கள் தங்களிடம் உள்ள அறிவைக் கூட அறியாமல் அவர்களாகவே தாழ்வு மனப் பான்மையை ஏற்படுத்திக்கொண்டு தாம் எதற்கும் உதவாதவர்கள் என்று மனதளவில் எண்ணி விடுகின்றனர்.

குழந்தைப் பருவத்திலிருந்தே தாழ்வு மனப்பான்மை தொடர முக்கிய காரணம் குடும்பச் சூழ்நிலைதான். குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவரை உயர்த்தியும் மற்றவரை தாழ்த்தியும் கூறுவது. மற்றவரை உதாரணமாகக் காட்டி இவர்களை மட்டப்படுத்திப் பேசுவது, இதுபோன்ற காரணங்களால் தாழ்வு மனப்பான்மை உண்டாகிறது.

சிலரது உடல் அங்கக் குறைபாடுகளை சுட்டிக் காட்டி கிண்டல் செய்வது, மேலும் நிற வேற்றுமை காட்டி அவமானப் படுத்துவதும் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும்.சிலர் எதிலாவது தோல்வியடைந்தால் அவரை மறுபடியும் முயற்சி செய்ய தூண்டாமல் எந்த வேலையும் செய்யத் தெரியாதவர் என முத்திரை குத்தி அவரை தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளி விடுகின்றனர்.

பலர் முன்னிலையில் ஒருவரை தேவையில்லாமல் தாழ்த்திப் பேசுவது, அவரது செயல்களை கிண்டல் செய்வது போன்ற செயலால் தாழ்வு மனப்பான்மை வளர்கிறது.

பெற்றோர்கள் அல்லது ஆசிரியர்கள் ஒரு குழந்தையை மட்டும் ஓஹோ வென புகழும்போது மற்ற குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை வந்துவிடுகிறது.சிறு குழந்தை தன் குற்றத்திற்காக கடுமையாக விமர்சிக்கப்படும்போதும், பயமுறுத்தப்படும் போதும் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது.

பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டப் படாதபோதும் அவரின் மனம் வேதனையடைந்து தாழ்வுமனப்பான்மை கொள்ளச் செய்கிறது.குழந்தைகளை அதிகம் செல்லம் கொடுத்து எந்த வேலையையும் செய்ய விடாமல் இருக்கச் செய்வதும், அவர்களை சுயமாக செயல்பட விடாமல் தடுப்பதும் பிற்காலத்தில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்.

தாழ்வு மனப்பான்மையைப் போக்க

தாழ்வு மனப்பான்மைக்கு உடலில் உள்ள பித்த நீரின் செயல்பாடும் ஒரு காரணமாகும். இவர்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்துவந்தால் தாழ்வு மனப்பான்மையை போக்கலாம்.தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களிடம் அன்பாகப் பேசி அவர்களிடம் ஒளிந்திருக்கும் திறமையை பாராட்டி அவர்களால் முடியும் என்பதை உணர்த்த வேண்டும்.

சிறு குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டும் கதைகளை சொல்லி வளர்க்க வேண்டும். நல்ல செயல்களை பாராட்டவேண்டும். தவறு செய்தால் அவர்களை தண்டிக்காமல் அதை திருத்தி எப்படி செய்வது என்பதை புரிய வைக்க வேண்டும்.

பொதுவாக தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் பெரும்பாலும் தனிமை விரும்பிகளாக இருப்பார்கள்.தனக்கு எல்லாம் தெரிந்தது போல் காட்டிக் கொள்வார்கள். இவர்கள் எந்த ஒருசெயலிலும் முழுமையாக ஈடுபடாமல் விலகியே இருப்பார்கள். அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களை மெதுவாக ஒரு செயலில் இறங்கச் செய்து தன்னம்பிக்கையூட்டி தாழ்வு மனப்பான்மையை போக்க வேண்டும்.

இந்த உலகில் பிறந்த அனைவருக்குள்ளும் ஒவ்வொரு திறமை உள்ளடங்கியுள்ளது. தோல்வி என்பது நிரந்தரமல்ல. தோல்வியுற்றவர்கள் எல்லாரும் முட்டாள்களும் அல்ல, வெற்றி பெற்றவர்கள் எல்லாருமே புத்திசாலிகளும் அல்ல என்பதை அவர்களுக்கு உணரச் செய்ய வேண்டும்.

உதாரணமாக - தாமஸ் ஆல்வா எடிசன் மின்விளக்கை 960 முறை முயற்சி செய்து 961 வது முறை கண்டுபிடித்தார். மின்விளக்கு பற்றி விளக்கும்போது , அவரிடம் ஒருவர், 960 முறை தோல்வியடைந்தது உங்களுக்கு சோர்வைத் தரவில்லையா என கேட்டதற்கு தாமஸ் ஆல்வா எடிசன் சிரித்துக்கொண்டே 960 முறை எப்படி செய்யக்கூடாது என்பதை அறிந்துகொண்டேன் என்றார். அவரின் தன்னம்பிக்கையை நினைத்துப் பாருங்கள்.

வாழ்க்கையின் எளிய நிலையிலிருந்து முன்னேறிய பலர் இன்று பெரிய பதவிகளிலும் பொறுப்புகளிலும், ஆளுமையாளர்களாகவும், அறிஞர்களாகவும் திகழ்கின்றனர். இவர்களின் விடா முயற்சி, ஆழ்ந்த சிந்தனை, செயல்திறன் இவற்றை செயல்படுத்துவதில் கொண்ட உறுதி, உழைப்பு இவற்றால் அவர்கள் இன்று உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. இந்த உலகில் மனிதனால் முடியாத செயல் எதுவும் இல்லை. இதைத்தான் திருவள்ளுவர்

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலிதரும்

எந்த ஒரு செயலிலும் முயற்சி செய்தால் வெற்றியடையலாம்.

தாழ்வு மனப்பான்மையை தூக்கி எறிந்துவிட்டு கடமையை செய்து பலன் பெறுங்கள்.

தாழ்வு மனப்பான்மை என்பது நிரந்தரமல்ல அது மாற்றக்கூடியதுதான். மாற்றம் என்ற ஒன்றே மாறாதது என்பதை நினைவில் வைத்து அப்துல்கலாம் கூறிய கனவு காணுங்கள் என்ற வாசகத்தை நினைவில் கொண்டு கனவு காணுங்கள் வெற்றியடையுங்கள்.

- Nakheeran

இந்தியக் கல்வியில் புதிய சீர்திருத்தங்கள்! - உரிய பலன் தருமா?

விண்ணை உரசுவது போல உயர்ந்து பறந்தது இந்திய தேசியக் கொடி. 63-வது சுதந்திர நாள் விழாவில் காற்றில் படபடத்து பறந்த அக் கொடி, என்னைப் போலநாடு உயர்ந்திருக்கிறதா என்று கேட்பதாகவே தோன்றியது. ஒரு நாட்டின் உயர்வுக்குத் தேவைப்படும் அம்சங் களில் முக்கியமான ஒன்று, கல்வி. இந்தியர் அனைவருக்கும் அவரவர் விரும்பும் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பதே காந்தியடி களின் விருப்பம். தேசத்தந்தையின் விருப்பத்தின் ஒரு பகுதியை நிறைவேற்ற நமக்கு 63 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள 6 வயது முதல் 14 வயது வரையிலான அனைவருக்கும் கட்டாய இலவச அடிப்படைக் கல்வி வழங்கப்படவேண்டும் என்ற மசோதா அண்மையில் நமது நாடாளு மன்றத்தில் நிறைவேறியுள்ளது. அனைவரும் அடிப்படைக் கல்வியை இலவசமாகப் பெறும் உரிமையை இந்திய அரசியல் சாசனம் அளித்துள்ளபோதும் அதனைச் சட்டமாக்கு வதற்கான வாய்ப்பு இதுவரை உருவாகமாலேயே இருந்தது. தற்போதுதான் அந்த நம்பிக்கை ஒளிக்கீற்று தோன்றியுள்ளது. ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்திய சமுதாயத்தில் இந்த இலவசக் கல்வித் திட்டம் நடைமுறையில் எந்தளவு பலன் தரும் என்ற கேள்வி எழாமலில்லை.

செல்போன் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 48 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதே நேரத்தில், நாளொன்றுக்கு 20 ரூபாய்கூட கூலி கிடைக்காத இந்தியர்கள் 40 கோடிக்கும் அதிகமாக இருக்கிறார்கள். இந்திய மக்கள் தொகையில் 27.5% பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிறார்கள். இவர்களால் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பமுடியாத சூழ்நிலை நிலவுவதால், கட்டாய இலவசக் கல்வி என்பது ஏழ்மையின் பிடியில் இருக்கும் இந்தியக் குடும்பங்களுக்கு ஒரு நல்ல வாய்ப் பாகும். அதே நேரத்தில், கட்டாய இலவசக் கல்வியை அளிக்கவேண்டிய அரசுப் பள்ளிகளின் தரமும் கட்டமைப்பும் அவலகரமான நிலையில் இருக்கிறது. மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்களின் விகிதாச்சாரம் இல்லை. நூலகம், ஆய்வகம், விளையாட்டுத் திடல், கழிவறைகள் ஆகியவையும் சரியான முறையில் இருப்பதில்லை. நிதிநிலை அறிக்கையில் ராணுவத்துக்கு அதிகளவில் நிதி ஒதுக்கும் அர சாங்கம், கல்விக்காக ஒதுக்குவது 3.4% நிதி மட்டுமே.கல்வியை நாம் எந்த இடத்தில் வைத்திருக்கிறோம் என்பதற்கு இதுவே சாட்சி.

காசுக்கேற்ற தோசையாக கல்வி மாறிவிட்ட தால், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பள்ளிகளைத் தவிர்த்துவிட்டு, தனியார் பள்ளிகளுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப் பும் போக்கும் நடுத்தர வர்க்கத்தினரிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டாய இலவச அடிப்படைக் கல்வியை அரசுப் பள்ளிகளால் எத்தனை மாணவர் களுக்கு சரியான முறையில் தர முடியும் என்பதும், வளர்ச்சி பெற்றிருக்கும் தனியார் பள்ளி களிலும் அடிப்படைக் கல்வியை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்பதும் முழுமையான விடை தெரியாத கேள்விகளாக இருக்கின்றன.

பள்ளியில் சேரும்போது நன்கொடை, அனுமதி கிடைப் பதற்கு முன் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் நேர்காணல், வகுப்புகளில் குழந்தைகளுக்குத் தண்டனை போன்றவற்றைத் தடை செய்யும் நல்ல அம்சங்களுடன் கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய சட்டம், நடைமுறையிலும் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளை மத்திய- மாநில அரசுகள் உருவாக்க வேண்டியது அவசியமாகும்.

14 வயதுவரை இலவசக் கல்வி என்கிறபோது, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகிற பருவம் வரை இலவசமாக கல்வி பெறமுடியும். ஆனால், இத்தகைய கல்வி என்பது இன்றைய நடைமுறையில் சமச்சீரானதாக இல்லை. எடுத்துக்காட்டாக, மாநில அர சின் கல்வித்திட்டத்தின் கீழ் 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் எஸ்.எஸ்.எல்.சி, மெட்ரி குலேஷன், ஓ.எஸ்.எல்.சி, ஆங்கிலோ-இந்தியன் என 4 விதமான பொதுத்தேர்வு முறைகள் உள்ளன. இதுதவிர, மத்திய அரசின் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் ஒரு பொதுத்தேர்வும் நடைபெறுகிறது. 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கிடையே 5 வகை பாடத் திட்டங்கள், பயிற்சி முறைகள் இருப்பதால் கல்வியின் நிலை சமமானதாக இல்லை.

அண்மையில், யஷ்பால் குழுவின் அறிக்கை யின்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது பற்றி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் அறிவித்தார். 10ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு என இரண்டுமுறை பொதுத்தேர்வுகள் எழுதவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஒரு சுமையை குறைக்கலாம் என்பதுதான் இதன் நோக்கம். ஆனால், சமச்சீரற்ற கல்வி நிலவுகிற நாட்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்பது உரிய பலனை முழுமையாகத் தராது என்பது கல்வியாளர்களின் கருத்து.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெறுவதால் கிடைக்கும் அரசு சான்றிதழ், வேலைவாய்ப்புக்கான அடிப்படைத் தகுதியாக இருக்கிறது. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டால், அந்த சான்றிதழ் கிடைக்காது. குறைந்தபட்ச கல்வித்தகுதி என்பது 12-ஆம் வகுப்பு என்றாகிவிடும். இது கிராமப்புற- ஏழ்மையான- பின்தங்கிய சமுதாயத்து மாணவர்களின் வளர்ச்சிக்குத் தடையாகிவிடும். அத்துடன், 11-ஆம் வகுப்பில் எந்தப் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுப்பது என்பது 10-ஆம் வகுப்புபொதுத்தேர்வின் அடிப்படையிலேயே அமைகிறது. 5 வகையான கல்வி முறை உள்ள நிலையில், பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட் டால் பாடப்பிரிவைத் தேர்வு செய்வதற்கான நெறிமுறைகளும் மாறும். இதுவும் கிராமப்புற- ஏழ்மையான-பின்தங்கிய சமுதாயத்து மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நல்ல நோக்கத்தில் அறிவிக்கப்பட்ட, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்பது நடைமுறையில் பல சிக்கல்களை எதிர்கொள்வதாக இருக் கிறது.

பள்ளிக்கல்வியில் மட்டுமின்றி, உயர்கல்வி யிலும் பல சிக்கல்கள் நிலவுகின்றன. காளான்கள் போலப் பெருக்கெடுக்கும் தனியார் சுயநிதி கல்லுரிகள்- நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கல்வி வியாபாரம், இத்தகைய கல்வி நிறுவனங் களில் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படாத நிலைமை உள்ளிட்ட பல அம்சங்கள் சமச்சீரான கல்விக்கும் சமவாய்ப்புக்கும் எதிரான அம்சங் களாக இருக்கின்றன. இவற்றின் மீதும் மத்திய அரசின் கவனம் தற்போது திரும்பியுள்ளது. அர சியல் நெருக்கடிகளுக்கு இடமளிக்காமல் கல்வித்துறையில் சீர்திருத்தங்களை மேற்கொண் டால் அடுத்த தலைமுறை பெரும் பயன் பெறும். இந்தியா உண்மையாகவே ஒளிரும்.

- பொது அறிவு உலகம்

'ஆன்-லைனை' கலக்கும் 'ஹைடெக்' மோசடி

நீங்கள் அதிர்ஷ்டசாலி. எங்கள் நிறுவனம் நடத்திய குலுக்கலில் ஆறுதல் பரிசுவிழுந்து உள்ளது. கமிஷனோ, டெபாசிட்டோ, பங்குத் தொகையோ எதுவும் வேண்டாம்.பணம் பரிமாற்ற தொகை 430 பவுண்ட் செலுத்தினால், பரிசுத்தொகையாக 18.50லட்சம் பவுண்ட்( இந்திய மதிப்பு ரூ.16 கோடி) கிடைக்கும்' என்று இமெயிலில்ஆசைக் காட்டி மோசடி செய்யும் வேலை நடக்கிறது.

மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர் இமெயில் முகவரிக்குசெப்.,9ல் கடிதம் வந்தது. அதில், யாகூ/எம்.எஸ்.என் நிறுவனமும்,அமெரிக்காவின் லாட்டோ லாட்டரி நிறுவனமும் போட்டி ஒன்றை நடத்தியதாகவும்,ஒவ்வொரு இமெயில் முகவரிக்கும் ஒரு லாட்டரி எண் கொடுக்கப்பட்டதில்,வசந்தகுமார் இமெயிலுக்கு ஆறுதல் பரிசு விழுந்திருப்பதாகவும்தெரிவிக்கப்பட்டது. இது மோசடி வேலை என்று அறிந்த அவர், நமது சூப்பர்ரிப்போர்ட்டருக்கு தகவல் தெரிவித்தார். இருவரும் சேர்ந்து இந்த மோசடிகுறித்த தகவல்களை திரட்ட ஆரம்பித்தனர். செப்.,10ல் வசந்தகுமார்இமெயிலுக்கு மீண்டும் கடிதம் வந்தது. "உங்கள் வங்கி கணக்கு எண்,பாஸ்போர்ட் நகல், இன்டர்நேஷனல் வங்கி எண் ஆகியவற்றை உடனே அனுப்புங்கள்'என்றனர். வசந்தகுமார் அனுப்பினார். செப்.,11ல் "நீங்கள் அனுப்பிய விபரம்திருப்தி தருகிறது. உங்கள் பரிசுத்தொகை 16 கோடி ரூபாய் "அலைடு ஐரீஷ்வங்கி'யில் டெபாசிட் செய்ததோடு, இன்சூரன்ஸூம் செய்துள்ளோம்' என்றுஅதற்குரிய போலி சான்றுகள் அனுப்பினர்.

செப்.,11 இமெயிலில் "நீங்கள் பணம் பெறுவதற்குரிய பரிவர்த்தனை எண்ணை,அலைடு வங்கி அதிகாரியிடம் தெரிவிக்கவும்' என்று தெரிவிக்கப்பட்டு,அதிகாரியின் இமெயில் முகவரி தரப்பட்டது. அந்த அதிகாரியையும் வசந்தகுமார்தொடர்பு கொண்டார். "நீங்கள் எந்த பணமும் செலுத்த வேண்டாம். பணம்பரிவர்த்தனைக்காக 40 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் போதும். 12 மணிநேரத்தில் உங்கள் வங்கி கணக்கில் பரிசுத்தொகை விழும்' என்று அவர்தெரிவித்தார். "அவ்வளவு பணம் செலுத்தும் அளவிற்கு வசதி வாய்ப்பற்றவன்.வேண்டுமானால் எனக்காக நீங்கள் பணம் கட்டுங்கள். பரிசுத்தொகை கிடைத்தவுடன்திருப்பி தந்துவிடுகிறேன்' என்று வசந்தகுமார் எச்சரிக்கையாக பதில்அளித்தார். டென்ஷனான அந்த நபர், "நீங்கள் அசால்ட்டாக இருக்க வேண்டாம்.காலதாமதம் செய்தால் பரிசுத்தொகை குறையும்' என எச்சரிக்கை செய்தார்.

செப்.,12ல், "30 ஆயிரம் ரூபாய் செலுத்த தயாராக இருக்கிறேன். 10 ஆயிரம்ரூபாய் நீங்கள் செலுத்த முடியுமா' என்று வசந்தகுமார் கேட்டார்."பரவாயில்லை. அந்த பணத்தை செலுத்தி விடுகிறோம். முதலில் பணத்தைகட்டுங்கள்' என்றுகூற, சில நிமிடங்களில் ஒருவர் முதன்முறையாக இமெயில் களைவிட்டு போனில் தொடர்புக்கொண்டார். மொபைல் போன் டிஸ்ப்ளேயில் எந்தநம்பரிலிருந்து பேசுகிறார் என்பது தெரியாமல் இருக்க"நோ நம்பர்' எனஇருந்தது. அவர் எங்கிருந்து பேசுகிறார் என்று புலனாய்வு செய்ததில்,நைஜீரியாவிலிருந்து பேசியது தெரியவந்தது. அந்த நபர் அமெரிக்காவில் ஒருவங்கியில் பணம் செலுத்தும்படி, கணக்கு எண்ணை கொடுத்தார். வசந்தகுமார்பணம் செலுத்தவில்லை. தற்போது "ஐ.எஸ்.டி.' போன் கால் செலவானாலும்பரவாயில்லை என்று, பரிசுத்தொகையை வாங்க பணம் செலுத்தும்படி, தொடர்ந்துஅந்த நபர் வசந்தகுமாரை வற்புறுத்துகிறார்.

இதுமட்டுமல்ல, "பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு ஆயிரக்கணக்கான கோடிசொத்து இருப்பதாகவும், அதை உங்கள் வங்கி கணக்கில் பாதுகாத்தால், 30சதவீதம் கமிஷன் தருகிறோம், அதற்கு பணம் செலுத்த வேண்டும்' என்றும்ஜாக்சன் செயலாளர் ஜான் பிராங்கா பெயரிலும் போலி இமெயில் உலா வருகிறது.இது போன்ற மோசடி இமெயில்களால் பணத்திற்கு சபலபட்டு ஏமாந்தவர்கள்எண்ணிக்கை பல நூறை தொடும். வெளியே தெரிந்தால் அவமானம் என்று எல்லாம்தொலைத்து விட்டு கம்ப்யூட்டர் முன் முடங்கி கிடக்கின்றனர்.

இதுபோன்ற "ஆன்-லைன்' மோசடிகளை தடுக்க முடியாதா என்று சைபர் கிரைம்போலீசாரிடம் சூப்பர் ரிப்போர்ட்டர் கேட்டபோது, "நேர்மையாக போட்டி நடத்திபரிசுத்தொகை அறிவிப்பவர்கள் தங்களது நிறுவன இமெயிலில்தான் தெரிவிப்பதுவழக்கம். பொதுவாக இருக்கும் யாகூ இமெயிலை பயன்படுத்துவதில்லை. அப்படிபயன்படுத்துபவர்களை மோசடி பேர்வழிகள் என தெரிந்து கொள்ளலாம். முழுமுகவரியும் தருவதில்லை. சிலர் "நெட்வொர்க்' அமைத்து இந்த மோசடிகளில்ஈடுபடுகின்றனர். சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இதுபோன்றகுற்றங்களை தடுக்க முடியும். பேராசைப்பட்டு இந்த வலையில் விழாமல்இருப்பது அவரவர் சாமர்த்தியம்' என்றனர்.

- தமிழ் உலகம்