திருக்குறள்

கோடிஸ்வர பிச்சைகாரர்கள் ?

கேரளாவில் மலப்புறம் அருகே பள்ளி வாசல் முன்பு பிச்சையெடுத்து கொண்டிருந்த சென்னை முதியவரிடம் ரூ.1.25 லட்சம் பணம், வெள்ளி மோதிரங்கள் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் வங்கியில் ரூ.20 லட்சம் டெபாசிட் செய்திருந்தது தெரிய வந்தது. கேரளாவில் மலப்புறம் மாவட்டம் தேஞ்சிபாலம் அருகே உள்ள பாணாம்புறா வில் ஜிம்மா மஜித் பள்ளிவாசல் உள்ளது. இங்கு நேற்று ஒரு முதியவர் பிச்சை எடுத்து கொண்டிருந்தார்.

அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.  போலீசார் வந்து அவரிடம் இருந்த பை யை பரிசோதித்தனர். அதில் ரூ.1.25 லட்சம் இருந்தது. 8 விலை உயர்ந்த வாட்சுகள், 10 வெள்ளி மோதிரங்கள், மதபிரசங்க சி.டி.கள் மற்றும் பல வங்கி பாஸ் புத்தகங்கள் இருந்தன. அந்த வங்கி கணக்குகளில் ரூ.20 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. 

விசாரணையில், அவரது பெயர் அப்துல்கனி(70) என்றும், சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அவரிடம் கத்தை, கத்தையாக பணம் இருந்ததால், அவர் திருடனாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். ஆனால், முதியவர் அதை மறுத்தார். தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், இறுதியில் அவரை சென்னைக்கு ரயிலில் அனுப்பி வைத்தனர்.

அரசியல்வாதிகளே.! அப்ப நீங்க எதுக்கு?

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் மந்திரக்கோல் எதுவும் எங்களிடம் இல்லை.

யங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பு, மாநிலங்களுக்கே அதிகம்.

ணவீக்கம் குறைய, பொது வினியோக முறையை, மாநிலங்கள் தான் பலப்படுத்த வேண்டும்.

திநீர் இணைப்பு, சாத்தியமில்லாத ஒன்று! - இவை, மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகார மையத்தின் முக்கியஸ்தர்கள் கூறியவை.

ல்லா பிரச்னைகளையும் மாநில அரசே தீர்க்க வேண்டுமென்றால், மத்திய அரசின் பணி என்ன? எல்லா அதிகாரங்களையும் டில்லியில் குவித்து வைத்து, எல்லா வருமானம், வளங்களையும் மத்திய அரசு எடுத்துக்கொண்ட பின், விவகாரங்களை மட்டும், எப்படி, எந்த வகையில் தீர்க்க சொல்கிறது?

விவசாயத்துறை அமைச்சரோ, விவசாயப் பிரச்னைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு, கிரிக்கெட் துறையில் மூழ்கி, முத்தெடுத்துக்கொண்டு இருக்கிறார்.

காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி வாரிய ஊழல், ஸ்பெக்ட்ரம் போன்றவைகள் நடந்து கொண்டிருப்பதை, பிரதமர் கவனித்துக் கொண்டு மட்டுமே இருக்கிறார். நன்றி  தினமலர்.

னால், பிரச்னைகளை மட்டும், மாநிலங்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார். மோசமான ஆசிரியர்களை வைத்துக்கொண்டு, ஒரு நல்ல தலைமை ஆசிரியரால், நல்ல மாணவர்களை எப்படி உருவாக்க முடியும்?
ல்ல தலைமை ஆசிரியரான மன்மோகன் சிங் தான், இதற்கு வழி காண வேண்டும்.


Source - வேடந்தாங்கல்