திருக்குறள்

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை: அமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல்

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மசோதா விரைவில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும், தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் ஒப்புதல் பெறப்பட்டு நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து மத்திய வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி கூறுகையில்,

இந்தியாவில் வாக்களிக்க வேண்டும் என்ற வெளிநாடு வாழ் இந்தியர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் கூறியிருந்தார். அதன்படி மத்திய அமைச்சர்கள் கூட்டம் அவர்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்திய ஜனநாயகம் மேலும் வலுவடையும் என்றார்.

இப்போதுள்ள சட்டப்படி வெளிநாட்டில் சென்று 6 மாதங்களுக்கு மேல் தங்கிவிட்டால் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிடும்.

இப்போது கொண்டு வரப்படும் சட்டத் திருத்தத்தின் படி, வெளிநாடுகளில் இருந்தாலும், வாக்குப் பதிவு நடைபெறும் நாளில் தங்கள் தொகுதியில் இருந்தால் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.

-நன்றி. நக்கீரன்

வாழ்க்கையைப் பற்றி கோகா கோலா தலைவர்....

வாழ்க்கையைப் பற்றி கோகா கோலா தலைவர் (திரு.பிரையன் டைசன்) நிகழ்த்திய முப்பது வினாடி உரை இங்கே.

வாழ்க்கையை ஐந்து பந்துகளுடன் விளையாடும் ஒரு விளையாட்டாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த பந்துகளாவன: வேலை (தொழில்) , குடும்பம், உடல்நலம், நண்பர்கள் மற்றும் ஆன்மிகம் (அல்லது சுய தேடல்). அனைத்தையும் மாற்றி மாற்றி காற்றில் சுழல வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

வேலை என்பது ரப்பர் பந்து போல. அது தவற விடப் பட்டாலும் துளியும் சேதமடையாமல் திரும்பக் கைக்கு வந்து சேர்ந்து விடும். ஆனால் மற்ற பந்துகள் அப்படியல்ல.

குடும்பம், நட்பு, உடல் நலம் மற்றும் ஆன்மிகம் ஆகியவை கண்ணாடி பந்துகள் போன்றவை. ஒரு முறை தவற விட்டாலும், அவற்றை பழைய நிலையில் திரும்பப் பார்க்க முடியாது. சொல்லப் போனால் சமயத்தில் சிதறி சின்னாபின்னமாக ஆகியும் விடலாம்.

எனவே நண்பர்களே!

வேலை நேரத்தில் சுறுசுறுப்பாக வேலையை கவனியுங்கள். வேலை நேரம் முடிந்தவுடன் வீட்டுக்கு கிளம்புங்கள்.

தேவையான நேரத்தை உங்கள் குடும்பம், நட்பு ஆகியவற்றுக்கு வழங்குங்கள். உடலுக்கு தேவையான ஓய்வை அளியுங்கள்!