திருக்குறள்

காதல், கல்யாணம் என்றால் என்ன?

ஒரு வகுப்பறையில் ஆசிரியரிடம் மாணவன் கேட்டான் காதல் என்றால் என்னவென்று?

அதற்கு அந்த ஆசிரியர், உனது கேள்விக்கு பதில் அளிப்பதற்கு முன்பு, அங்கு சோளம் விளைந்திருக்கும் வயலில் சென்று இருப்பதிலேயே மிகப்பெரிய சோளத்தை எடுத்துக் கொண்டு வா। ஆனால் ஒரு விதிமுறை உள்ளது।நீ கடந்து விட்டப் பகுதிக்கு திரும்பி வந்து சோளத்தை எடுக்கக் கூடாது। ஒரு முறை கடந்து சென்றுவிட்டால் அவ்வளவுதான். முன்னோக்கிச் செல்லலாமேத் தவிர மீண்டும் பின்னோக்கு வந்து சோளத்தை எடுக்கக் கூடாது.

அதன்படியே அந்த மாணவரும் சோளம் விளைந்திருக்கும் வயலுக்குச் சென்றான்।முதல் வரிசையிலேயே ஒரு பெரிய சோளத்தைக் கண்டான். ஆனால் அவனுக்குள் ஒரு எண்ணம், உள்ளே இதை விடப் பெரிய சோளம் இருந்தால் என்ற எண்ணத்துடன் உள்ளேச் சென்றான். ஆனால் உள்ளே பாதி வயல் வரை தேடிவிட்டான். அவன் கண்ட எந்த சோளமும் முதலில் கண்ட சோளத்தைவிட பெரிதாக இருக்கவில்லை.

முதலில் கண்ட சோளம்தான் பெரியது. அதைவிட பெரியது இல்லை என்ற தீர்மானத்திற்கு வந்த அவன் வெறுங்கையுடன் வகுப்பிற்குத் திரும்பினான்.அப்போது ஆசிரியர் கூறினார். காதலும் இதுபோலத்தான்.

ஒருவரைப் பார்த்ததும் பிடித்து விடும். ஆனால் இதை விடச் சிறந்தவர் கிடைப்பார் என்ற எண்ணத்துடன் நீங்கள் போய்க் கொண்டே இருந்தால் கடைசியாகத்தான் உணர்வீர்கள் உங்களுக்கானவரை ஏற்கனவே நீங்கள் இழந்துவிட்டீர்கள் என்பதை.

க‌‌ல்யாண‌ம் எ‌ன்றா‌ல் எ‌ன்ன?........
அந்த மாணவன் மீண்டும் கேட்டான் கல்யாணம் என்றால் என்ன?

அதற்கு அந்த ஆசிரியர், இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் முன் நீ அங்குள்ள கம்பு வயலுக்குச் சென்று அதே போல் பெரிய கம்பு ஒன்று எடுத்துவா। பழைய விதிமுறையே இதற்கும் பொருந்தும். முன்னோக்கி மட்டுமேச் செல்ல வேண்டும்.

அந்த மாணவன் கம்பு வயலுக்குச் சென்றான். இம்முறை மாணவன் அதிக கவனத்துடன் நடந்து கொண்டான். கடந்த முறை செய்த தவறை மீண்டும் செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான். வயலுக்குச் சென்று அவனுக்கு பெரிது என்று பட்ட ஒரு நடுத்தரமான கம்பை மிகவும் திருப்தியுடன் எடுத்துக் கொண்டு வந்து ஆசிரியரிடம் காண்பித்தான்.

இந்த முறை நீ வெற்றியுடன் வந்துள்ளாய். நீ பார்த்த ஒன்றே உனக்கு பெரிதாக தெரிந்தது. இதுவே நமக்கு சரி என்று அதனை தேர்வு செய்து கொண்டு திருப்தியோடு வந்திருக்கிறாய். இதுவே கல்யாணம் என்று ஆசிரியர் பதிலளித்தார்.

நன்றி
வெப்துனியா

தூங்குவதில் விசித்திரங்கள்

தூ‌ங்காத உ‌யி‌ரின‌ம் உ‌ண்டா? இ‌ல்லை எ‌ன்றே சொ‌ல்லலா‌ம்। ஆனா‌ல் ஒ‌வ்வொரு ‌உ‌யி‌ரினமு‌ம் தூ‌ங்குவ‌தி‌ல் எ‌த்தனை ‌வி‌சி‌த்‌திர‌ங்க‌ள் உ‌ள்ளன‌த் தெ‌ரியுமா?
வாத்துக்கள் நீரில் வட்டமடித்துக் கொண்டே தூங்கும்.

ராபின் இனப்பறவை பாடிக் கொண்டே தூங்கும்।

பாம்புகள் கண்களைத் திறந்து கொண்டேக் கூட தூங்கும்।

டால்பின்கள் ஒரு கண்ணை மட்டும் திறந்து கொண்டேத் தூங்கும்।

மனிதனால் மட்டுமே முதுகை பூமியில் படும்படி படுத்துத் தூங்க முடியும்।

வரிக்குதிரை நின்று கொண்டேத் தூங்கும்।

மாடுகள், ஒ‌ட்டக‌ங்க‌ள் அசை போட்டுக் கொண்டேத் தூங்கும்

கோழிகள் நின்று கொண்டேத் தூங்கும்।

மனிதனால் கண்களை பா‌தி திறந்து கொண்டேத் தூங்க முடியாது।

கோ‌ழிக‌ள் ஒரு‌ சில ‌நி‌மிட‌ங்க‌ள் ம‌ட்டுமே‌க் கூட தூ‌ங்‌கி ‌வி‌ழி‌க்க முடியு‌ம்।

கு‌ர‌ங்குக‌ள் மர‌த்‌தி‌ல் தொ‌ங்‌கியபடியே‌த் தூ‌‌ங்கும‌்।
நன்றி
வெப்துனியா

ஓட்டமும்...ஓய்வும்... ( பில்கேட்ஸ் )


வெற்றியாளர்களில் இரண்டு வகை... உலகின் எதிர்காலப் பாதையைச் சரியாகக் கணித்து, அந்தத் திசையில் எல்லோரையும்விட வேகமாக ஓடி முதலிடத்தைப் பிடிப்பவர்கள் ஒரு வகை... அப்படி இல்லாமல் தானே ஒரு திசையைத் தீர்மானித்து, ஒட்டுமொத்த உலகத்தையும் அந்தத் திசையில் தன் பின்னால் ஓடிவரச் செய்பவர்கள் இரண்டாவது வகை... பில்கேட்ஸ் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்।
'உழைக்க மட்டுமல்ல... உழைப்பை விட்டு விலகியும் இருக்கத் தெரிய-வேண்டும்...' - இதுதான் பில்கேட்ஸ் நமக்கு உணர்த்தியிருக்கும் சமீபத்திய பாடம். அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஒரு பொருள் இருக்கிறது. ஒரு எம்.பி.ஏ. பாடத் திட்டத்துக்கு நிகரான வாழ்க்கைமுறை அவருடையது.
பள்ளிக்கூட காலத்திலேயே பில்கேட்ஸ் 'பாட'த்தைத் தொடங்கிவிட்டார்।

கொடுக்கிற பாடத் திட்டத்தைப் படிப்பதைவிட விருப்பமானதைப் படிப்பதுதான் சிறந்தது என்பதை நம்பினார்। மற்ற மாணவர்களிடமிருந்து வேறுபட்டு, படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்த பில்கேட்ஸை, சியாட்டில் நகரின் 'லேக்சைட் (Lake Side) பள்ளி'யில் அவருடைய பெற்றோர் சேர்த்தனர். அங்கே பில்கேட்ஸை ஈர்த்தது ராட்சத சைஸில் பூதம் போல இருந்த கம்ப்யூட்டர். அந்தக் காலத்தில் கம்ப்யூட்டரை விஞ்ஞானக் கூடங்களில் மட்டுமே பயன்படுத்தினார்கள். இரவு பகலாக அதன் முன் தவமாகக் கிடந்த பில்கேட்ஸ், தானாகவே புத்தகங்களையும், கையேடுகளையும் படித்து கம்ப்யூட்டர் மொழியான 'பேசிக்'கில் (BASIC) புரோகிராம் எழுதத் தொடங்கினார். அவருடைய பள்ளித் தோழர் பால் அலெனுக்கும் அதே ஆர்வம். திடீரென்று ஒருநாள், 'இனிமேல் மாணவர்கள் கம்ப்யூட்டரை இலவசமாகப் பயன்படுத்த முடியாது' என்ற அறிவிப்பு வந்தது. இருவரும் கவலைப்பட்டனர்.
அந்தக் காலகட்டத்தில் கம்ப்யூட்டரை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தும் பழக்கம் அதிகமாக இருந்தது। 'அந்த கம்ப்யூட்டரில் ஏதாவது குறைபாடு இருந்தால் வாடகை கொடுக்கத் தேவையில்லை' என்று வாடகைக்குக் கொடுக்கும் நிறுவனங்கள் அறிவித்திருந்தன. குறைபாடுகள் அதிகம் இருக்கவும் செய்தன.

பில்கேட்ஸ் நினைத்திருந்தால் வாடகைக்கு கம்ப்யூட்டர் எடுத்து, அதில் உள்ள குறைபாடுகளைச் சொல்லி, வாடகை கட்டாமல் பயன்படுத்தியிருக்க முடியும்। ஆனால், அவர் கம்ப்யூட்டர் வாடகைக்குத் தரும் நிறுவனங்களில் ஒன்றான 'கம்ப்யூட்டர் சென்டர் கார்ப்பரேஷனு'க்குச் சென்று அவர்கள் கம்ப்யூட்டரில் உள்ள குறைபாடுகளைக் கண்டுபிடித்துத் தருவதாக ஒப்பந்தம் செய்துகொண்டார். அதனால், அந்தக் குறைபாடுகள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு வாடகைப் பணம் பெருகியது. பில்கேட்ஸ் சம்பளமாகப் பெற்றுக்கொண்டது இலவசமாக கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் உரிமையை!

கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துவதைவிட, புதிய திசையில் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளும் கலை அவரிடம் நிறையவே இருந்தது। வாகனப் போக்குவரத்து விவரத்தை கம்ப்யூட்டரில் உள்ளிடும் 'டேட்டா என்ட்ரி' வேலை 17 வயது பள்ளி மாணவன் பில்கேட்ஸூக்குக் கிடைத்தது. ஒவ்வொரு வாகனமும் கடந்து செல்லும்போது காகிதச் சுருளில் ஒரு துளை போடப்படும். அந்தத் துளைகளை எண்ணி கம்ப்யூட்டரில் என்டர் செய்வதுதான் வேலை. துளைகளை எண்ணிச் சொல்வதற்கு சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்து, 'டிராஃப்- ஓ -டேட்டா' (Traf-O-Data) என்று பெயரிட்ட பில்கேட்ஸூக்கு, இந்தத் தொழிலில் நல்ல லாபம்! போக்குவரத்து விவரங்களை அலசி அதை நெறிப்படுத்துவதற்காக பல நகராட்சிகள் அந்தக் கருவியை நாடியபோது, 'இனிமேல் நாங்களே அந்த வேலையை நகராட்சிகளுக்குச் செய்துதருவோம்' என்று அமெ-ரிக்க மத்திய அரசு அறிவித்துவிட்டது. பில்கேட்ஸின் பிஸினஸ் படுத்துவிட்டது.

இந்தச் சமயத்தில் அவர் ஹார்வர்ட் கல்லூரியில் இணைந்தார்। அதற்குப் பக்கத்திலேயே பால் அலெனுக்கு ஒரு வேலை கிடைத்தது. இருவரும் அடிக்கடி சந்தித்தனர். 1975 ஜனவரி மாதம் 'பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ்' இதழில் 'உலகின் முதல் மைக்ரோ கம்ப்யூட்டர் அல்டெய்ர் 8800' என்று வந்த கட்டுரையை எடுத்துக்கொண்டு பில்கேட்ஸிடம் ஓடிவந்தார் அலென். அதைத் தயாரித்த எம்.ஐ.டி.எஸ். (MITS) நிறுவனத்தைத் தொடர்புகொண்ட கேட்ஸூம் அலெனும், 'உங்கள் கம்ப்யூட்டரில் பேசிக் புரோகிராம் பயன்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும். அதைச் செயல்படுத்த உதவும் பேசிக் இன்டர்பிரட்டர் (புரோகிராமை கம்ப்யூட்டர் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றித்தரும் இடைநிலை சாஃப்ட்வேர்) எங்களிடம் இருக்கிறது' என்று அள்ளிவிட்டனர். உண்மையில் அவர்களிடம் 'அல்டெய்ர்' ரக கம்ப்யூட்டர் ஒன்றுகூட கிடையாது.

'எம்.ஐ.டி.எஸ்-ஸின் ஹார்ட்வேர், தனது சாஃப்ட்வேர் இரண்டும் சேர்ந்து முழுமையான கம்ப்யூட்டராக இயங்கும்' என்ற ஒப்பந்தம் போட்டார் பில்கேட்ஸ். இனி இங்கு என்ன வேலை என்று ஹார்வர்டில் இருந்து வெளியேறினார். 1975 ஏப்ரலில் 'மைக்ரோசாஃப்ட்' நிறுவனம் உருவானது.
இனி எதிர்காலம் மைக்ரோ கம்ப்யூட்டருக்குத்-தான் என்பதை உணர்ந்த பில்கேட்ஸ், தன்னுடைய சாஃப்ட்வேர் உரிமையை கம்ப்யூட்டர் தயாரிக்கும் பிற நிறுவனங்களுக்கும் விற்பனை செய்தார்।

இதில் எம்.ஐ.டி.எஸ். அதிருப்தி அடைந்ததைப் பற்றியோ, கோர்ட்டுக்கு இழுத்ததைப் பற்றியோ கவலைப்படவில்லை. வெறும் 'பேசிக்' புரோகிராமோடு நிற்காமல் 'ஃபோர்ட்ரான்', 'கோபால்' ஆகிய மொழிகளுக்கும் இன்டர்பிரட்டர் உருவாக்கினார். அவற்றை கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களிடமே கொடுத்து கம்ப்யூட்டரோடு பொட்டலம் கட்டி விற்கும்படி ஒப்பந்தம் போட்டார். பில்கேட்ஸின் சாஃப்ட்வேர் இல்லாமல் கம்ப்-யூட்டர் முழுமையடையாது என்ற நிலையை உருவாக்கிவிட்டார்.
மிகப்பெரிய கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ।பி।எம்। மைக்ரோசாஃப்ட் நிறுவனக் கதவுகளைத் தட்டியதுதான் பில்கேட்ஸின் வாழ்வில் திருப்பு-முனை! அப்படியரு சூழ்நிலையைக் கையாள்-வது எப்படி என்ற பாடத்திட்டம் உருவானது.

குட்டி கம்பெனிகள் மைக்ரோ கம்ப்யூட்டர் தயாரிக்கும்போது, தான் பின் தங்கிவிடக்கூடாது என்று தாமதமாக விழித்துக்கொண்ட ஐ।பி।எம்., நெருக்கடியான காலக்கெடுவோடு பில்கேட்ஸிடம் வந்தது. அந்தக் காலக்கெடுவுக்குள் ஹார்ட்வேரை உருவாக்குவது சிரமமில்லை. ஆனால், அதைச் செயல்பட வைக்கும் சாஃப்ட்வேர்... அந்த சாஃப்ட்-வேரை ஹார்ட்வேருக்குப் புரியவைக்கும் ஆப-ரேட்டிங் சிஸ்டம்... இதையெல்லாம் உருவாக்குவது அத்தனை எளிதில்லை.

சாஃப்ட்வேருக்கு ஓகே சொன்ன மைக்ரோசாஃப்ட், இன்னொரு நிறுவனத்தின் ஆபரேட்டிங் சிஸ்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள சிபாரிசு செய்தது। ஆனால், அந்த இன்னொரு நிறுவனத்-துடன் ஐ।பி.எம்மால் உடன்பட முடியவில்லை. பந்து திரும்பவும் பில்கேட்ஸ் கோர்ட்டுக்கே வந்தது.

இந்தமுறை “சரி” என்றார் கேட்ஸ்। அதுதான் அவரை உலகின் முதல் பணக்காரர் ஆக்கிய வார்த்தை!
இத்தனை குறுகிய காலத்தில் 'ஆபரேட்டிங் சிஸ்ட'த்தை புதிதாக உருவாக்க முடியாது என்பது பில்கேட்ஸூக்கு தெரியும்। 'சியாட்டல் கம்ப்யூட்டர் புராடக்ட்ஸ்' (SCP) என்ற நிறுவனம் உருவாக்கியிருந்த 'க்யூடாஸ்' (QDOS) என்ற 'ஆபரேட்டிங் சிஸ்ட'த்தை, வெறும் இருபத்தைந்தாயிரம் டாலர் என்ற விலைக்கு வாங்கி-னார்। அதில் மராமத்து வேலைகள் செய்து,
தன்னுடைய கைவண்ணத்தைக் கொஞ்சம் காட்டி 'டிஸ்க் ஆபரேட்டிங் சிஸ்டம்' (ஞிளிஷி) என்ற பெயரில் ஐ।பி.எம். கம்ப்யூட்டரோடு சேர்ந்து உலகமெங்கும் பரப்பினார். 'பர்சனல் கம்ப்யூட்டர் புரட்சி' என்று சொல்லும் நிகழ்வாக இது 1981-ல் அமைந்தது. தன் தயாரிப்புதான் பவுடர் பூசி 'ஐ.பி.எம்'- கம்ப்யூட்டரோடு சக்கைபோடு போடுகிறது என்று 'சியாட்டல் கம்ப்யூட்டர் புராடக்ட்ஸ்' நிறுவனம் குய்யோ, முறையோ என்று கூவியபோது, பில்கேட்ஸ் பணத்தால் அடித்து, அந்த நிறுவனத்தின் வாயை அடைத்தார்.

உன்னால் ஒரு செயல் முடியாதபோது, யாரால் முடியுமோ அவரை உன்னுடையதாக்கு என்ற தத்துவம் அவருக்குக் கைவந்ததானது!
ஐ।பி।எம். நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தில் இருந்த சாமர்த்தியம்தான் பில்கேட்ஸிடம் கற்றுக்கொள்ள வேண்டிய அடுத்த முக்கியமான பாடம்.
என்னதான் 'ஐ।பி.எம்.' நிறுவனம் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் பாகங்களை உருவாக்கியிருந்தாலும், மற்ற யார் வேண்டுமானாலும் அதை காப்பியடிக்க முடியும். ஆனால், அதில் இயங்கும் சாஃப்ட்வேர் மைக்ரோசாஃப்டிடம் மட்டுமே இருந்தது. ஐ.பி.எம்-க்குப் போட்டியாக பல கம்பெனிகள் இறங்கியபோது அவை சாஃப்ட்வேருக்காக பில்கேட்ஸை நாடின. பிற நிறுவனங்களுக்கு விற்கக்-கூடாது என்று ஒப்பந்தம் போடாததால் 'ஐ.பி.எம்.' கையைப் பிசைந்துகொண்டு நிற்க, பில்கேட்ஸ் டாலர் மழையில் நனையத் தொடங்கினார். தூறல், மழையாகி, அதுவே அடைமழையாகக் கொட்டத் தொடங்கியது.

கீ போர்டு மூலம் மட்டுமே கட்டளைகளை உள்ளிடக்கூடிய 'டாஸ் சிஸ்ட'த்தில் 'மைக்ரோசாஃப்ட்' இருந்த நேரத்தில் 'மவுஸை' வைத்து திரையில் தெரியும் கட்டளைகளை 'க்ளிக்' செய்து செயல்படுத்தும் புதிய தளத்துக்குப் போயிருந்தது போட்டி நிறுவனமான 'ஆப்பிள்'. 1984-ல் அதன் 'மேகின்டாஷ்' கம்ப்யூட்டர் 'மவுஸ்' உடன் வெளிவந்தது.

'மேகின்டாஷ்' கம்ப்யூட்டரில் இயங்குவதற்கு ஏற்ப 'எம்.எஸ்.வேர்ட்'டை (MS word) மட்டும் உருவாக்கிக் கொடுத்தது. ஆனால், அந்த முயற்சியின்போது மவுஸால் கம்ப்யூட்டரை இயக்கும் சிஸ்டத்தின் நுணுக்கங்களை காப்பியடித்து, அதை வைத்து 'விண்டோஸ்' என்ற 'ஆபரேட்டிங் சிஸ்ட'த்தை தயாரித்ததாக 'மைக்ரோசாஃப்ட்' மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதை நீதிமன்றம் உறுதிப்படுத்தவும் செய்தது.
ஆனால், எதுபற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து நடைபோட்ட 'மைக்ரோசாஃப்ட்'டில் இருந்து, 1990-ல் 'விண்டோஸ்- 3।0' வெளியானது. அதைப் பிரபலப்படுத்த 'மைக்ரோசாஃப்ட்' தயாரித்து அளித்த 'எக்ஸெல்', 'வேர்ட்', 'பவர் பாயின்ட்' ஆகியவற்றை உள்ளடக்கிய 'மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்' மென்பொருட்கள் பெரிதும் பயன்பட்டது. 'ஆப்பிள்' கம்ப்யூட்டரில் கூட 'மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்' வெற்றிகரமாக இயங்கியது. 'விண்டோஸ்- 3.0' நல்ல வெற்றி. 1995-ல் வந்த 'விண்டோஸ் -95' அதை விடக் கூடுதல் வெற்றி. அதற்குள்ளாக அவர் உலகப் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்துக்குச் சென்றிருந்தார். 'விண்டோஸி'ன் நதிமூலம் 'ஆப்பிள்'தான் என்பது மறந்தே போயிற்று.

இப்படி 'ஆபரேட்டிங் சிஸ்டம்' பந்தயத்தில் கவனம் செலுத்திய பில்கேட்ஸ், இணையப் புரட்சியைத் தவறவிட்டார்। இணையதளங்களை மேய்வதற்கு 'நெட்ஸ்கேப் நேவிகேட்டர்' என்ற உலாவி பிரபலமாக இருந்தது. சுமார் 85 சதவிகிதம் பேர் இந்த உலாவியைப் பயன்படுத்தியே இணையத்தில் உலாவினார்கள்.

அதனால் என்ன... பில்கேட்ஸ் கையில்தான் ஒரு வெற்றி ஃபார்முலா இருக்கிறதே... உருவாக்கத் தவறினால் உருவாக்கியவனை அழுத்து என்று!
'இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்' என்ற உலாவியைத் தயாரித்தார்। மக்கள் கவனத்தை இந்தப் பக்கம் திருப்ப அவர் எடுத்த ஆயுதம்... இலவசம்! 'விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்ட'த்தோடு 'இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை' இலவசமாகக் கொடுத்தார். விளைவைச் சொல்லவேண்டுமா... கொஞ்ச நாளில் 'நெட்ஸ்கேப்' பின்னுக்குத் தள்ளப்பட்டது.

'விண்டோஸ்' என்ற அரக்கனை வைத்துகொண்டு எல்லா சாஃப்ட்வேர் நிறுவனங்களையும் நசுக்குவதாக பில்கேட்ஸ் நீதிமன்றத்துக்கு இழுக்கப்பட்டார். மைக்ரோசாஃப்டின் சட்ட விரோத நடவடிக்கை நிரூபிக்கப்பட்டது. மைக்ரோசாஃப்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும். ஒன்று 'ஆபரேட்டிங் சிஸ்டம்' தயாரிக்க. மற்றது பிற சாஃப்ட்வேர்களைத் தயாரிக்க என்று நீதிமன்றம் சொன்னது. ஆனால், சாஃப்ட்வேருக்கு முன்-னால் சட்டம் கொஞ்சம் பலவீனமாகத்-தான் பேசி-யது. பிறகு, அந்தத் தண்டனை வெகுவாகக் குறைக்கப்-பட்டது.

இன்றும் சாஃப்ட்வேர் கொடி உயரத்தான் பறக்கிறது... பில்கேட்ஸ் சொல்லும் தெளிவான பாடம் இதுதான்... 'உழைக்கத் தயங்காதே... ஒரு கட்டத்துக்கு மேல் போனபிறகு உண்மையாக உழைப்பவனுடைய உழைப்பை தனதாக்கிக் கொள்ளவும் தயங்காதே...' இதுதான் சக்சஸ் ஃபார்முலா! அதற்கு வாழும் உதாரணமாக இருக்-கிறார் பில்கேட்ஸ்!

2006-ல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முழுநேர தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார்। அதன்பின் 'சேர்மன்' என்ற அளவில் மற்றவர்களை வைத்து கம்பெனியை நடத்தி, மேற்பார்வை செலுத்திவந்த பில்கேட்ஸ், தற்போது முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்। பல முனைகளிலும் இருந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சவாலைச் சந்திக்கும் நேரத்தில், இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார். ஆனால், பில்கேட்ஸ் எனும் மனிதரும், அவர் உலக மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கமும் வரலாற்றின் பக்கங்களில் நிரந்தரமாகப் பொறிக்கப்பட்டிருக்கும், சாஃப்ட்வேர் சாம்ராஜ்ஜியத்தின் நிகரில்லாச் சக்கரவர்த்தி என்ற அடையாளத்தோடு
- நன்றி
விகடன் குழுமம்











பாவம் அவர்கள் தமிழர்கள்!

இருபத்தைந்து ஆண்டுகள் முடிந்து விட்டன। இதற்கிடையே பூமிப்பந்தில் எவ்வளவோ மாற்றங்கள். ஆட்சிகளில் மாற்றம், நாடுகளின் எல்லைகளில் மாற்றம், உணவில், உடையில், பண்பாட்டில் மாற்றம்... ஆனால், மாறாமல் தொடர்கிறது

அந்தக் கதறலும், கண்ணீரும்। இலங்கை வீதிகளை நிறைத்த அந்த ஓலக் குரல்கள், நம்முடைய காற்றில் கலந்து பேரோசையாய்ப் பெருகுகிறது। இருபத்தைந்து ஆண்டுகள்... கறுப்பு ஜூலை என வர்ணிக்கப்படும் அந்த இனப்படுகொலை நடந்து இருபத்தைந்து ஆண்டுகள்!

வாகனங்களில் சென்ற தமிழர்களை வழிமறித்து உயிரோடு எரித்துக் கொன்று நடனமாடிய சம்பவங்கள் நடந்து இருபத்தைந்து ஆண்டுகள்; வாக்காளர் பட்டியலை வைத்துத் தமிழர்களை அடை யாளம் கண்டு வீடுகளிலிருந்து இழுத்தெறிந்து வெட்டித் துண்டாடிய காட்சிகள் நிகழ்ந்து இருபத்தைந்து ஆண்டுகள்; கடைகளில் தமிழனின் கறி கிடைக்கும் என பலகையில் எழுதி வைத்து எக்காளமிட்ட கோரங்கள் நிகழ்ந்து இருபத்தைந்து ஆண்டுகள்; எல்லாவற்றுக்கும் விழா எடுத்துக் கொண்டாடும் தமிழர்கள், இதையும்கூட வெள்ளி விழாவாகக் கொண்டாடி மகிழலாம்।

உள்ளூர் களேபரத்தில் கொஞ்ச காலமாக இலங்கையை மறந்து விட்டோம்। சிங்களக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவர்களை எண்ணிக் கசிந்து கண்ணீர்விட்ட நேரத்திலும்கூட, தமிழர்களைப் பற்றிப் பேசாமல் தவிர்த்துவிட்டோம். முன் ஜாக் கிரதை முத்தண்ணாக்களான நாம் ஈழப்பிரச்னையில் எளிதில் சிக்கிக்கொள்வோமா என்ன?

சார்க் மாநாட்டுக்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறது இலங்கை। ''உலக நாடுகளுடனும் எம்முடைய பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக்கொள்ளவே நாம் என்றும் விரும்புகின்றாம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி ஒரு நட்புறவுப் பாலத்தை கட்டியெழுப்புவதிலும் இதய சுத்தியோடு இருக்கின்றோம். தமிழீழ தேசத்தினதும், தமிழீழ மக்களினதும் நலலெண்ணத்தை வெளிப் படுத்தி பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துவிட விரும்புகின்றோம். இந்த நல்லெண்ண நடவடிக்கையாக சார்க் மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரையான காலப்பகுதியை ராணுவ நடவடிக்கைகள் அற்ற அமைதி நாட்களாகக் காத்து, ஒருதலைப்பட்சமாகப் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து, மாநாடு வெற்றிபெற ஒத்துழைப்போம்'' என புலிகள் இயக்கம் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்தச் சூழலில்தான் இலங்கையில் 1983-ம் ஆண்டு ஜூலை மாதம் 24-ம் தேதி நடைபெற்ற இனப்படுகொலையை நாம் நினைவு கூர்கிறோம். ''நெருப்பையும், குருதியையும், அவலக் குரலையும் ஒன்றாகக் கேட்கும்போது, வன்முறையின் சித்திரம் அல்லது கலவரம் ஒன்றின் தோற்றம் எப்போதும் மனதில் விரிகிறது... எரிந்து கொண்டிருக்கும் இந்த நெருப்பு எப்போதுதான் அணையப்போகிறது?'' என்ற ஈழத்து எழுத்தாளர் கருணாகரனின் கேள்வியை நாமும் பகிர்ந்து கொள் கிறோம்.

எப்படி நடந்தது இந்த வன்முறை? 1983 ஜூலை 23-ம் தேதி மாலை யாழ்ப்பாணத்துக்கு வெளியே ராணுவ ஜீப் ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது। அந்த ஜீப்புக்குப் பின்னால் வந்த ராணுவ டிரக்கிலிருந்து வீரர்கள் இறங்கி ஓடி வருகிறார்கள். நாலாபுறமிருந்தும் அவர்கள் தாக்கப்படுகிறார்கள். எந்திரத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள். தாக்குதலின் முடிவில் பதினைந்து சிப்பாய்களின் சடலங்கள் இரைந்து கிடக்கின்றன. கொல்லப்பட்ட சிப்பாய்கள் அனைவரும் சிங்களவர்கள். அவர்களைக் கொன்றதோ விடுதலைப்புலிகள்.

கொல்லப்பட்ட சிப்பாய்களின் உடல்களை அவர் களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பினால் கலவரம் வெடிக்கக்கூடும் என அஞ்சிய இலங்கை அரசாங்கம், அந்த உடல்களை கொழும்புவில் அடக்கம் செய்வதென்று முடிவு செய்தது। ஜூலை 24-ம் தேதி கொழும்புவில் சிப்பாய்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படும்போது, அங்கே கூடிய சிங்களவர்களின் கும்பல் கொழும்பு நகருக்குள் புகுந்து தமிழர்களின் வீடுகளைத் தேடிக் கண்டு பிடித்துத் தாக்கத் தொடங்கியது। தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானார்கள்। வீட்டிலிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. வீடுகள் எரிக்கப் பட்டன. தமிழ் மக்களில் பலர் தப்பித்து ஓடி, இரக்கமுள்ள சிங்களவர்கள் சிலரின் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பித்தபோதிலும் கலவரம் அடங்குவதாக இல்லை.

கொழும்புவில் ஆரம்பித்த கலவரம் தமிழர்கள் வசித்த கண்டி, மாத்தளை, நாவல்பிட்டியா, பாதுல்லா, நுவரேலியா முதலான பகுதிகளுக்கும் பரவியது। சிங்களவர்கள் வாழ்ந்த பகுதிகளில் குடியிருந்த தமிழர்களே அதிகம் பாதிப்புக்கு ஆளானார்கள். இதுகுறித்து ஆர்.சம்பந்தன் எழுதியிருப்பது நமக்கு நல்ல விளக்கமாக இருக்கிறது-

''இந்த வன்முறையின் போது குறிப்பிட்ட ஒரு தந்திரத்தை சிங்களவர்கள் கையாண்டார்கள்। முதலில் இலங்கை ராணுவத்தினர், தமிழர் வாழும் பகுதிக்குள் வருவார்கள். அங்கே ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்திருப்பதாகச் சொல்லித் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவார்கள். தமிழர்களை ஆபாசமாகப் பேசி அச்சுறுத்திக் களேபரம் செய்வார்கள். அங்கிருக்கும் இளைஞர்களை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பிடித்துப் போவார்கள். சிறிது நேரத்தில் அங்கே சிங்களவர்களின் கும்பல் நுழையும். தமிழர்களின் வீடுகளைக் கொள்ளையடிக்கும். அதன்பிறகு வீடுகளுக்குத் தீ மூட்டும். ராணுவத்தினரின் தேடுதல் வேட்டையும், தமிழ் இளைஞர்களை அவர்கள் பிடித்துச் செல்வதும் அதன்பிறகு வருகின்ற சிங்களவர்களின் கும்பலுக்கு உதவத்தான்.'' தங்களை தற்காத்துக்கொள்ள எதுவுமற்ற நிலையில் தமிழர்கள், சிங்களவர்களிடம் சிக்கி உயிரிழந் தனர் என்று அதை வர்ணிக்கிறார் சம்பந்தன்.

முதலில் அரசாங்க அலுவலகங்களைக் குறிவைத்துத்தான் வன்முறை ஏவப்பட்டது। அதன்பிறகு, அது தமிழர்களுக்கு எதிரானதாக மாறியது. தெருச்சந்திகளில் கையில் பெட்ரோல் கேன்களோடு வாகனங்களை வழிமறித்த கும்பல், டிரைவரும் அந்த வாகனத்தில் பயணம் செய் பவரும் தமிழரா என்று விசாரித்து, அவர்கள் தமிழர்கள் எனத் தெரிந்தால் பெட்ரோலை ஊற்றி உயிரோடு கொளுத்தியது. அப்படியரு சம்பவத்தை சிங்களக் கவிஞரான பாஸில் ஃபெர்னாண்டோ என்பவரே தன் கவிதையன்றில் கடுமையாக விமர்சித்திருக்கிறார். வீதிகளிலும், வீடுகளிலும் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது மட்டுமின்றி, சிறையில் இருந்தவர்களும் குரூரமாகக் கொல்லப்பட்டனர். வெலிக்கடை சிறையில் ஜூலை 25-ம் தேதி முப்பத்தேழு தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப் பட்டனர். மூன்று நாள் கழித்து மீண்டும் பதினைந்து பேர் படு கொலை செய்யப்பட்டனர்.

ராணுவ வீரர்கள் கொல்லப் பட்டதற்காகப் பழிவாங்கவே இந்தக் கலவரம் நடத்தப்பட்டதென்று சிலர் கூறுகின்றனர்। அது உண்மையல்ல. தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை பல ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பமாகி விட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்தது முதலே இன ஒதுக்கல் கொள்கையும் தீவிரமடைய ஆரம்பித்து விட்டது. 1983-ல் ª-ஜயவர்த்தனே ஆட்சிக் காலத்தில் அது புதிய பரிமாணத்தை எட்டியது. அந்த ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி திரிகோணமலை காவல் நிலையத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இறந்தார். எந்தவித விசாரணையுமின்றி அடைத்து வைக்கப்பட்டிருந்த அவர் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அவருடைய உடம்பிலிருந்த காயங்கள் காட்டின. அது தமிழ் மக்களிடம் கொந்தளிப்பைக் கூட்டியது. 1983 ஜூன் மாதம் 3-ம் தேதி அரசாங்கம் ஆணையன்றைப் பிறப்பித்தது. அந்த அவசர ஆணையின்படி போலீஸார் எவ்வித விசாரணையோ, போஸ்ட்மார்ட்டமோ இன்றி எந்தவொரு சடலத்தையும் புதைக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பே தமிழர்களின் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் தொடங்கி விட்டன. இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே, ''இனிமேல் நான் தமிழர்களின் அபிப்ராயம் பற்றி கவலைப்படப் போவதில்லை. அவர்களுடைய உயிர் களோ, கருத்துக்களோ எங்களுக்குப் பொருட்டல்ல. தமிழர்களைப் பட்டினி போட்டால், சிங்களவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்'' என லண்டனிலிருந்து வெளி யான பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

ஆக, ஜூலை கலவரத்துக்கான தயாரிப்பை நீண்ட நெடுங்காலமாகவே சிங்களவர்கள் செய்து கொண் டிருந்தார்கள் என்பதுதான் உண்மை। 1977-ம் ஆண்டு நடத்தப்பட்ட கலவரமும், 1981-ம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்டதும் இந்தத் தயாரிப்பில் சில மைல் கற்கள்।

''மக்களில் ஒரு பிரிவினரை ஒரு குறிப்பிட்ட அடையாளத்துக்குள் அடக்கி அவர்களை ஆதிக்கம் செய்வது; அதற்கு வன்முறையைக் கருவியாகப் பயன்படுத்துவது; அரசியலை இனவாதத்தின் செல்வாக் குக்குள் கொண்டுவருவது; சிறுபான்மை இனத்துக்கு எதிராக வன்முறையை ஏவுகிறவர் அரசியலில் தலைமையேற்பது; தங்களது சந்தோஷத்துக்காகவும், கேளிக்கைக்காகவும் எதிராளிகள் மீது வன்முறையை ஏவுவது; மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்து செல்ல நிர்ப்பந்தப்படுத்தும் விதமாகத் தாக்குதல் தொடுப்பது; இன சுத்திகரிப்புக்கு வன்முறையை வழியாகக் கொள்வது; காவல்துறை, ராணுவம் முதலானவற்றின் ஒரு சார்பான அணுகுமுறை...'' -இப்படி இனஅழித்தொழிப்பு மனோபாவத்தின் அம்சங்களை அவர் பட்டியலிடுகிறார்। இவை எல்லாமே 1983 ஜூலை கலவரத்துக்குப் பொருந்துகின்றன.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தொடரும் யுத்தத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் விரும்பியும், விரும்பாமலும் அங்கு பலியாகியுள்ளனர்। ஈழத் தமிழர்கள் உலகமெங்கும் அகதிகளாக விரட்டப்பட்டிருக்கிறார்கள். இப்போதும் தமிழர்களின் வீடுகளின் மீது குண்டுகள் வீழ்ந்து கொண்டிருக்கின்றன. சின்னஞ்சிறு குழந்தைகள் புன்னகை மாறாமல் புதை குழிகளுக்குள் போய்க் கொண்டிருக்கின்றனர். இதை ஐ.நா. சபை வேடிக்கை பார்க்கிறது; உலக நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன; இந்தியா வேடிக்கை பார்க்கிறது; தமிழகமும் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது! மௌனம் என்பது காய்ந்து போன ரத்தம் என்று சொன்னான் ஒரு கவிஞன். காய்ந்து போனாலும் கவிச்சி மாறாத ரத்தம் அது. உணர்வுள்ளவர்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும் ரத்தம்.

கொழும்பு நகரில் சார்க் நாடுகளின் தலைவர்கள் இப்போது சந்தித்துப் பேசவுள்ளனர்। நம்முடைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் அங்கு செல்கிறார்। நம்பிக்கை வாக்கெடுப்பில் பெற்ற வெற்றியை அங்கு வரும் தலைவர்களோடு அவர் பகிர்ந்து கொள்ளலாம்। அவர்களுக்குப் ரத்யேகமாக விருந்துகூட கொடுக்கலாம்। மாநாடு நடக்கும் இடத்தி லிருந்து சில மைல் தொலைவில் உயிரைக் கையில் பிடித்தபடி தவித்துக் கொண்டிருக்கும் தமிழர்களின் ஞாபகம் அவருக்கு வருமென்று சொல்ல முடியாது. ஏனென்றால், பாவம் அவர்கள் தமிழர்கள்!

- ரவிக்குமார் எம்.எல்.ஏ
நன்றி ஜுனியர் விகடன்

நான் பெண்



ஒரு காட்டாறு


ஒரு பேரருவி


ஓர் ஆழக் கடல்


ஓர் அடை மழை


நீர் நான்


கரும் பாறை மலை


பசும் வயல் வெளி


ஒரு விதை


ஒரு காடு


நிலம் நான்


உடல் காலம்


உள்ளம் காற்று


கண்கள் நெருப்பு


நானே ஆகாயம்


நானே அண்டம்


எனக்கென்ன எல்லைகள்


நான் இயற்கை


நான் பெண்





- அனார் கவிதைகள்

சாவுக்குப் பின்னும் சாதியை நிலைநாட்டும் சடங்குகள்

தந்தை பெரியார்

மனிதன் தன் வாழ்க்கையில் குழந்தைப் பருவம் முதல் கிழப்பருவம் வரை அடையும் தன்மையும் இயற்கையின் தத்துவமேயாகும்। அவனுடைய அங்கங்கள் (உறுப்புகள்) குழந்தைப் பருவம் முதற்கொண்டு சிறிது சிறிதாக வளர்ந்து கொண்டே வருகின்றன। அந்த வளர்ச்சி அவன் உண்ணும் ஆதாரங்களையும் மன நிம்மதியான வாழ்க்கையையும் பொறுத்ததாகும்।இப்படி வளர்ச்சியடையும் உடல் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வந்தவுடன், அதன் பிறகு வளருவது நின்று விடுகிறது। பிறகு அவ்வுறுப்புகளுக்குக் கொடுக்கப்படும் சக்திகளுக்கு ஏற்றவாறு இயங்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன। அந்த உறுப்புகள் எத்தனை நாளுக்குத்தான் அப்படியே இருக்க முடியும்? அவையும் ஒரு குறிப்பிட்ட காலம்வரை இயங்கும் சக்தியைக் கொண்டவைகளாக இருக்கின்றன। நாளடைவிலேயே அங்கங்களுக்குள்ள சக்தி சிறிது சிறிதாகக் குறைவதற்கு ஆரம்பிக்கிறது. இப்படியே ஒவ்வொரு அங்கமும் பலவீனம் அடைந்து வரும் காலத்தில் மனிதன் கிழப்பருவத்தை அடைந்து கொண்டே வருகிறான்.கிழப்பருவம் வளர்ச்சியடைந்து கொண்டே வந்து, முற்றிலும் கிழத்தன்மை அடைந்தவுடன், உடலின் உறுப்புகள் யாவையும் ஒருவித சக்தியும் இன்றி அங்கும் இங்கும் அசையக்கூட போதிய சிறிதளவு பலம்கூட இல்லாமல் போய்விடுகின்றன. அத்தன்மை வந்தவுடன் மனிதன் உடலினுள் இருக்கும் உறுப்புகளும் அதே தன்மையை அடைந்து உண்ணும் உணவை ஜீரணிக்கவும் அதைப் பக்குவம் செய்து சத்தைக் கிரகிக்கும் உறுப்புகள் போதிய பலமும் இன்றிப் போய் உணவும் செய்வதற்கும் இல்லாமல் போய்விடுகிறது. பின்பு மனிதனுக்கு இறுதியில் எஞ்சி நிற்பது காற்று ஒன்றுதான். அக்காற்று மூக்குக்கும் சுவாச உறுப்புகளுக்கும் இடையில் உள்ள துவாரத்தின் வழியே போய்வந்து கொண்டிருக்கிறது.சுவாசிக்கும் காற்றில் மனிதன் பிராணவாயுவை உட்கொண்டு கரியமிலவாயுவை வெளியிடுகிறான். அந்த ஆராய்ச்சிப்படி இதுவரை அவன் பிராண வாயுவைக் கிரகித்து கரியமில வாயுவை வெளியிட்டு வருகிறான். இந்தத் தன்மையும் ஏற்பட சுவாச உறுப்புகள் பலமுடன் இருந்து இயங்கினால்தானே முடியும்? ஆனால் இயற்கையின்படி எல்லா உறுப்புகளும் பலவீனம் அடைந்தது போல் சுவாச உறுப்புகளும் பலவீனம் அடைய ஆரம்பிக்கின்றன. அவைகளுக்குப் போதிய அளவு அதாவது ஒரு சிறிது அளவு காற்றையாவது இழுத்து கிரகிக்கும் பலம் உள்ள வரை மனிதன் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறான் என்று கூறுகிறோமே அந்த நிலையை அடைகிறான்.இறுதியில் அந்தப் பலம்கூட இல்லாமல் சுவாச உறுப்புகள் முற்றிலும் பலவீனம் அடைந்து விடுவதால் சிறிதுகூட காற்றைச் சுவாசிக்க முடியாமல் போய் விடுகிறது. அப்போதுதான் மனிதன் இறந்து விடுகிறான் என்று சொல்லப்படுகிறது. அவன் உடலில் காற்று போய் உடல் உறுப்புகளையும் இரத்தத்தையும் சுத்தம் செய்து கொண்டு வந்ததன் காரணமாக உடலில் எந்தவிதக் கெடுதலும் ஏற்படுவதில்லை. சுவாசிக்கப்பட்ட பிராணவாயு உடம்பில் உள்ள இரத்தத்தைச் சுத்தம் செய்வதனால் சுத்தம் செய்யப்பட்ட இரத்தம் பரவிய உடலின் தசைகள் கெட்டுப் போகாமல் இருக்கின்றன.ஆனால் மனிதன் இறந்தவுடனோ சுவாசம் இல்லை. அதனால் உடலின் தசைகள் கெடுவதற்கு ஆரம்பிக்கின்றன. அந்தப் பிணம் எவ்வளவு நேரம் இருக்கிறதோ அதற்குத் தகுந்தபடிக் கெட்டுப் போய்விடும். அதைத் தகுந்தபடி எரித்துவிடாமலோ இருக்கப்பட்டுவிடுமானால் அந்த உடல் அழுகிக் கொழகொழுத்துப் போய் சகிக்க முடியாதபடி துர்நாற்றமடிக்க ஆரம்பிக்கிறது. அதற்கென்றே உடலைப் புதைத்தோ அல்லது எரித்தோ விடுகிறார்கள். இப்படி மனிதன் பிறந்தது முதல் இறந்ததுவரை உண்டாகும் சம்பவங்கள் அத்தனையையும் நேரில் காணுகிறோம். சுவாசிக்கும் காற்று நின்றவுடன் உடலை அடக்கம் செய்கிறார்கள்.இத்தன்மை மனிதன் என்று சொல்லப்படுபவர்கள் அத்தனை பேருக்கும் அவ்வித முடிவுதான். தாழ்ந்த ஜாதி என்று ஆக்கப்பட்டிருப்பவர்களுக்கும் இதே நிலைதான். மேல்ஜாதி, கடவுளுக்கும் அடுத்த ஜாதி என்று ஆக்கப்பட்டிருப்பவர்களுக்கும் இந்நிலைதான். அவன் யோக்கியனானாலும், முனிவரானாலும், சித்தரானாலும், மகாபக்திமான் ஆனாலும், கடவுள் அவதாரம் ஆனாலும், தியாகி ஆனாலும், மற்றும் மந்திரியானாலும் நாட்டின் தலைவன் என்பவன் ஆனாலும், இன்னும் புலவன், சிற்பி, பாடகன், ஓவியன் மற்றும் எப்பேர்பட்ட வெங்காயமானாலும், இந்த நிலையை அடைந்தே தீர வேண்டும்; இது இயற்கையேச் ஆகும்.இப்படி மனிதனுக்கு மட்டுமல்ல; உயிர் உள்ளது என்று எவை எவை சொல்லப்படுகின்றனவோ அவைகள் அத்தனையும் இப்படிப்பட்ட இயற்கைத் தன்மையை அடைந்தே தீருகின்றன - மரம் பட்டுப் போய்விட்டது என்றால், அது வளர்ச்சி இன்றிப் போய்விட்டது என்பது பொருள். அதுமுதல் அந்தப் பட்டுப்போன மரம் காய்ந்துபோக ஆரம்பிக்கிறது; ஒருவித ஈரப்பசையும் இன்றி வெற்றுக் கட்டையாக ஆகிவிடுகிறது. இப்படியே உயிருள்ளது என்பவைகள் அத்தனையும் செத்துப் போகும் நிலையை அடைகின்றன.செத்துப் போகுதல் என்பது சத்துப் போய்விடுதல் என்பது பொருள். வளருவதற்கு வேண்டிய சத்துக்கள் என்னென்னவோ அத்தனையும் இல்லாமல் போய்விட்ட பிறகு, அதாவது சத்துப்போய்விட்ட பின் அதை சத்துப் போகுதல் என்பது செத்துப் போகுதல் என்று ஆகி இருக்கிறது.மரம் செத்துப் போனவுடன் அதை அடுப்பு எரிக்க உபயோகிக்கிறோம். நாய், மாடு, கழுதை செத்தவுடன் புதைக்காவிடில் அழுகிப் புழு, பூச்சிபிடித்து விடுகிறது. இறுதியில் அதுவும் மண்ணுடன் மக்கிப் போய்விடுகிறது. செத்துப்போனது என்ற பிறகு அதைப் பற்றி ஒன்றுமே கிடையாது. அதன் முடிவு அத்துடன் சரியாகி விடுகிறது. இதை நாம் கேள்விப்படவில்லை; சாஸ்திரத்தில் படிக்கவில்லை. கடவுளும் வெங்காயமும் கூறியதாக நான் உங்களிடம் கூறவில்லை. நேரில் கண்டவை; நீங்களும் நேரில் காணுகிற விஷயமே அன்றி, நான் அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று சொல்லவில்லை; எனவே இந்த முடிவுக்குப் பிறகு என்ன இருக்க முடியும்? ஒன்றுமே கிடையாது. அத்துடன் வாழ்க்கை இறுதியடைந்து போய்விடுகிறது.பார்ப்பனன் தங்கள் வாழ்க்கைக்குச் சாதகமாகப் பலவழிகளைக் கையாளுகின்றான். மனிதன் இறந்தவுடன் அந்த உடலை அவரவர் மதப்படி, அதிலும் மதத்தின் உட்பிரிவாக அமைக்கப்பட்டுள்ள ஜாதிமுறைப்படி எரிக்கவோ, புதைக்கவோ வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறான். அதன்படி மக்களும் இது எங்கள் ஜாதி வழக்கம் என்று கூறிக் கொண்டு, புதைப்பவர்கள் புதைப்பதும், எரிப்பவர்கள் எரிப்பதுமாக இருக்கின்றனர்.இதனால் என்னவென்றால் அந்தந்த ஜாதிக்காரன் அவனுடைய பின்சந்ததிகள் இன்னா ஜாதியைச் சேர்ந்தவர்கள் அவர்களும், அதே முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற முறையை நிலைநாட்டுவதன் மூலம் நடத்தப்படுகின்றன. எனவே மனிதன் இறந்த பின்னும்கூட பார்ப்பான் மதப்பிரச்சாரத்திற்கென்று இன்னின்ன பழக்க வழக்கம் என்று ஏற்படுத்தி இருக்கிறான். அத்துடன் விடவில்லை. செத்துப் போனவுடன் உடலிலிருந்து ஆத்மா என்று ஒன்று பிரிந்து விடுகிறதாம்.அது இங்கே தங்காமல் நேராக மேல்லோகம் போகிறதாம்! இவ்வளவு இயற்கைத் தன்மைகளையும் கண்டபின் ஆத்மா என்பது எங்கே இருக்கிறது? அது எப்படிப் பிரிகிறது? என்றால் அது உருவம் அற்றது, கண்ணுக்குத் தெரியாதது என்று கூறினார்கள். அந்த ஆத்மா நேராக மேல்உலகம் சென்று அங்கு அது இங்கு செய்த பாவபுண்ணியத்துக்கு ஏற்றபடி தண்டனை பெறுகிறதாம். பாவம் செய்த ஆத்மா நரகத்தில் தள்ளப்படுகிறதாம். புண்ணியம் செய்த ஆத்மா மோட்சத்தில் தள்ளப்படுகிறதாம்.இங்கேதான் உடல் நம் கண்முன்பாகவே எரிக்கப்பட்டது அல்லது புதைக்கப்பட்டது. உருவம் அற்ற ஆத்மா எப்படி அங்கே தண்டனை பெறும்? என்று கேட்டால் அந்த ஆத்மாவுக்கு வேறொரு உடலை மேல் உலகத்தில் கொடுக்கிறார்களாமே! அந்த உடலை இந்த ஆத்மா உடுத்திக் கொண்டவுடன் மனித உருவம் அடைகிறதாம். அதே உடலுக்கு அங்கே தண்டனை கிடைக்கிறதாம். இதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதைச் சிந்திக்க வேண்டும்.பாவமோ புண்ணியமோ செய்த உடல் நம் கண்முன் இங்கே இருக்க, அங்கே வேறொரு உடல் பாவத்தின் தண்டனையையோ, புண்ணியத்தின் சுகத்தையோ அனுபவிக்கிறதாம். அப்படியானால் உண்மையில் பாவம் செய்த உடலைத் தண்டிக்க வேண்டும்; உண்மையில் புண்ணியம் செய்த உடல் சுகமடைய வேண்டும். இதைவிட்டு விட்டு, ஏதும் அறியாத வேறொரு உடலை வதைப்பதும், சுகப்படுத்துவதும் என்ன நியாயம் என்று கேட்டால் உடனே இவன் நாத்திகம் பேசுகிறான் என்று தான் சொல்லத் தெரியுமே தவிர தக்க பதில் ஒன்றும் கூற முடியாது.மறுபடியும் அந்த ஆத்மா உலகில் உருவம் எடுத்து வருகிறதாம்! அந்த உருவம் பாவ புண்ணியத்திற்கு ஏற்றபடித் தக்க உருவம் அடைகிறதாம். அதில் ஃபஸ்ட்கிளாஸ் (முதல்தரம்) உருவம் என்று சொல்லப்படுவது பார்ப்பன உருவம். மற்றவை எல்லாம் அதற்குக் கீழ்ப்பட்டவை. மனித உருவத்திலேயே பார்ப்பான் தவிர்த்த மற்ற கீழ்ஜாதி உருவங்கள் தரம் பிரித்து உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்பதற்குத் தகுந்தபடி அமைக்கப்பட்டிருக்கின்றன. மனித உருவத்துக்குக் கீழ் மிருக உருவம்! அதிலும் தரம் பிரித்து அமைத்து மற்றபடி மரம், செடி, கொடி இப்படி அமைக்கப்பட்டிருக்கின்றன.இதை ஏன் கூறுகிறேன் என்றால் அயோக்கியப் பார்ப்பனர்கள் தங்களை மட்டும் பெரும் புண்ணியாத்மாக்கள், மற்றவர்கள் எல்லாரும் பெரும் சண்டாளர்கள் என்பதை வாய்விட்டுக் கூறுவதற்குப் பதிலாக இப்படி எழுதி வைத்திருக்கிறார்கள் என்பதைக் கூறவேயாகும். இப்படி நம்மை எந்த விதத்தில் இழிவுபடுத்த வேண்டுமோ அம்முறைகளில் எல்லாம் இழிவுபடுத்தி இருக்கிறார்கள்.அந்த ஆத்மாதான் மேல்லோகத்தில் புண்ணியத்திற்கேற்றபடி மோட்சத்திலேயோ அல்லது பாவத்திற்கேற்றபடி நரகத்திலேயோ தள்ளப்பட்டிருக்கிறதே, பிறகு இங்கே எப்படி வந்தது? அதனதன் நல்வினை தீவினைக்குத் தகுந்தபடி மோட்சம் நரகத்தில் போய்ச் சேருகிறது என்ற பிறகு இங்கே எப்படிக் குதித்து வரமுடியும்? அப்படியானால் மோட்சத்திலிருந்து தப்பி ஓடிவந்ததா? நரகத்தை விட்டு ஓடிவந்து விட்டதா? அப்படி அங்கு போய்ச் சேருகிற ஆத்மா சாந்தியடைய இங்கே பார்ப்பானுக்குத் தானதர்மம் செய்தால் போதுமாம்! உடனே அது அவர்களுக்குப் போய்ச் சேருகிறதாம்! அதை அடைந்த அவர்கள் சுகம் அடைகிறார்களாம்! என்ன முட்டாள்தனம் என்பதைச் சிந்திப்பதே இல்லை. 100க்கு 100 முட்டாள்களாக இருப்பவர்கள்தான் இன்னமும் இதை நம்பிக் கொண்டு பார்ப்பானுக்கு அள்ளிக் கொடுக்கின்றனர். கையில் பணம் காசு இல்லை என்றால்கூட கடன் வாங்கியாவது திவசமும் கருமாதியும் செய்கிறான்.இப்படித் திவசம் செய்வது குறிப்பிட்ட நாள் வரையிலும் என்று கூட இல்லை. இவன் உயிர் இருக்கும் நாள்வரை அவன் தகப்பனுக்குத் திவசம் செய்கிறான். பார்ப்பான் கூறி இருக்கிறபடி மேலே சென்ற ஆத்மா பிறகு என்ன உருவம் எடுத்ததோ தெரியவில்லை. அந்த உருவம் எடுத்த பிறகும் இவன் திவசம் செய்தானாகில், பார்ப்பான் கூறுகிறபடி அந்த ஆத்மா எங்கே இருந்தாலும் அந்த தானப் பொருள்கள் போய்ச்சேர வேண்டும். அப்படி இது வரை யார் அடைந்திருக்கிறார்கள்?அப்படியே அவன் கூறுவது உண்மை என்றாலும் இக்கூட்டத்தில் உள்ள அத்தனை பேரும், ஏன் இவ்வூரில் உள்ள அத்தனை பேரும் மற்றும் இந்நாட்டு மக்கள் அத்தனை பேரும் இதற்கு முன் ஏதாவது ஒரு பிறவியில் இருந்திருக்க வேண்டும். நாம் இல்லை என்றாலும் மற்ற சீவராசிகளாவது முதலில் மனித உருவத்தில் இருந்திருக்க வேண்டும். அவைகள் இறந்தவுடன் அதனதன் பிள்ளைகள் திவசம் கொடுப்பார்கள். அத்தனை பேருக்கும் இல்லை என்றாலும் ஒரு சிலருக்காவது தன்னுடைய பிள்ளைகள் திவசம் கொடுப்பார்கள்; அப்படிக் கொடுப்பது இப்போது இவர்களுக்கு வந்து சேரவேண்டும். நியாயப்படி அதுதான் முறையாகும்.ஆனால் இதுவரை அப்படி யாரும் அடைந்ததாகக் கிடையாது. கேள்விப்பட்டது கூட இல்லை. எனவே பார்ப்பானுக்குக் கொடுத்த பின் அதை ஜீரணித்து விடுகிறான். பிறகு எங்கே இவன் அப்பனுக்கு மேல் உலகத்துக்கு? போக முடியும்? அப்படியே பார்ப்பான் மேல் உலகத்துக்கு அனுப்பும் சக்தி கொண்ட மந்திரம் கொண்டவனாக இருந்தால் இன்றைக்கு எவ்வளவோ காரியத்துக்குப் பயன்படும். ஆனால் அத்தனையும் புரட்டு என்பதற்கு நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறேன்.ஒரு பார்ப்பனனிடம் ஒரு மடையன் திவசம் கொடுத்துக் கொண்டிருந்தானாம். அப்போது பார்ப்பனன் சொல்படி அந்த மடையன் ஆற்றில் உள்ள தண்ணீரைக் கையால் அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தான். அதன் காரணம் என்னவென்றால் இவன் இறைக்கும் தண்ணீர் மேல் உலகத்திற்குப் போய் இவனுடைய முன்னோர்களுக்குப் பயன்படுகிறது என்பதாகும். அந்த அடிப்படையில் புரோகிதன் மந்திரம் கூற இவன் தண்ணீர் இறைக்கிறான்.கிழங்குத் தோட்டம் வைத்திருக்கிறேன். அதற்குத் தண்ணீர் இறைத்து அதிக நாள்கள் ஆகின்றன. இப்போது நீங்கள் மந்திரம் சொல்லும்போது இறைத்தால் இந்தத் தண்ணீர் என்னுடைய உருளைக்கிழங்குத் தோட்டத்துக்கு போய்ச்சேரும்,” என்றானாம்.அதற்குப் புரோகிதன் “அது எப்படி அவ்வளவு தூரம் போய்ச் சேரும்?” என்று கேட்க அதற்கு இவன் “நீங்கள் இன்றைக்கும் தண்ணீர் எங்கேயோ கண்ணுக்குத் தெரியாமல் ஒருவரும் காணமுடியாத அவ்வளவு உயரத்தில் இருக்கும் மேல் உலகத்திற்குப் போகிறபொழுது இது இங்கே அடுத்த ஊரில் உள்ள என் தோட்டத்திற்குப் போகாமல் இருக்க முடியுமா?” என்று கேட்டானாம். பிறகு புரோகிதன் நம்முடைய சாயம் வெளுத்தது என்று நினைத்து தலைகுனிந்து போய்விட்டானாம்

பெண் அக்றிணையா?

மு. வரதராசன்

அம்மா சமையல் செய்கிறாள் ‘அத்தை பணம் தருவாள்', ‘அக்கா கடிதம் எழுதினாள்', ‘தங்கை பள்ளிக்கூடம் போயிருக்கிறாள்' என்று சிலர் பேசுகின்றனர்। ‘செவிகைப்பச் சொற்பொருத்தல்' என்பது இச்சொல் தொடர்களைக் கேட்டு பொறுத்தலே’ என்றார் ஒருவர்।

"இச்சொல் தொடர்களில் எழுவாய், பயனிலைப் பிழை ஒன்றும் இல்லை। அம்மை, அத்தை, தமக்கை, தங்கை, என்பவை உயர் திணைப் பெண்பாற் பெயர்கள். செய்கிறாள், தருவாள், எழுதினாள், போயிருக்கிறாள் என்பவை அந்த திணைப்பாலை குறிக்கும் வினை முற்றுக்கள். ஆதலால் இவற்றில் தவறு இல்லையே!'' என்றார் மற்றொருவர்.

"அய்யா! இலக்கணப் பிழை பற்றி இங்குப் பேச வேண்டாம்। பொருளைக் காண்க. திணையோ பாலோ வேண்டாம். செய்கிறாள் என்றும், இவள் என்றும், வந்தாள் என்றும், செய்கிறாள் என்றும் பேசுவது நாகரிகமா?'' என்றார் முதலில் பேசியவர்.

"ஓ! அப்படியானால், ‘அம்மா சமையல் செய்கிறார்', செய்கிறார்கள் (செய்கிறாங்க)' முதலிய சொல் தொடர்களால் பேச வேண்டுமா? ‘ஆர்', ‘ஆர்' என்னும் விகுதிகளும், ‘கள்' என்னும் விகுதியும் சேர்ந்தால்தான் நாகரிகமும் மதிப்பும் உண்டு என்று கருதுகின்றீரா? வெறும்சொற்களால் -சில விகுதிகளால் - மதிக்கும் மதிப்புத்தானா சிறந்தது? இது தானா தமிழர் நாகரிகம்?'' என்று மற்றவர் கூறினார்।

முதலில் பேசியவர் அமைதி இழந்தார்। தம்மை மறந்து பேசத் தொடங்கினார். "நன்று, நன்று; சொற்களால் மதிக்கும் மதிப்பு உங்களுக்கு வேண்டாமா? பெண்ணைக் குறிக்கும் போது மட்டும் இவ்வாறு பேசுகின்றீரே! ஆணைக் குறித்து உமது கருத்து என்ன? ‘அப்பா ஊருக்குப் போகிறான்’ ‘மாமன் பணம் தருவான்’ என்று பேசுகின்றீரா? இல்லையே. ‘அப்பா ஊருக்குப் போகிறார்' அல்லது ‘போகிறார்கள்,’ ‘மாமா பணம் தருவார்' அல்லது ‘தருவார்கள்' என்று பேசுகிறீர். ‘பாதர் வந்தார்' என்று பேசுகிறீர். ‘பாதர் வந்தார்' என்று ஆங்கில மதிப்புடன் சொல்லும் வாயால் ‘மதர் வந்தாள்' என்று சொல்லுகிறீர். ‘பிரதர் சொன்னார்' என்ற வாயால் ‘சிஸ்டர் சொன்னாள்' என்கிறீர். இந்த வேறுபாடு என்ன? விகுதிகளால் மதிக்கும் மதிப்பு உம்மிடம் இல்லையா?'' என்றார்.

உடனே, மற்றவர் பரபரப்புடன் சில கருத்துக்களைக் கூறத் தொடங்கினார்। "அப்படியா, ‘தமக்கை வந்தாள்' என்று சொல்லுகின்ற முறை ஒரு வகையில் ஏற்புடையது ஆகும். ஆங்கில மொழியை பாருங்கள். ஒருவனையோ ஒருத்தியையோ அவர் என்று கூறும் வழக்கம் அம்மொழியில் இல்லை. ஆணை "ஹி' (he) என்றே கூறுவர்; பெண்ணை "ஷி' (she)' என்றே கூறுவர். அந்த முறை பகுத்தறிவுக்கு உகந்தது. எனவே, "தமக்கை வந்தாள்', ‘தங்கை போனாள்' என்று பேசுவது குற்றமாகாதே! ஆனால், ‘தமக்கை வந்தது' ‘தங்கை போனது' என்று பேசுகிறீரே! அது நாகரிகம்தானா?

உம்முடைய கண்ணுக்கு பெண் உயர்திணையாகத் தெரிவதில்லையா? ‘நாய் போனது' ‘பூனை வந்தது' என்பதைப் போல், பெண் ஒருத்தியைக் குறிக்கும்போது ‘போனது, வந்தது' என்று பேசுவது தகுமா? அன்றி, பெண் உயிரில்லாத பொருளா? மரம், கல் முதலியவற்றிற்கு ஒப்பாகக் கருதுகின்றீரா? அது போனதாம்। இது வந்ததாம் நல்ல பேச்சு! தமக்கையையும், தங்கையையும் சுட்டிக்காட்டி பேசும்போது என்ன சொல்கின்றீர்? அது சொன்னது. இது கேட்டது என்கிறீர். தமக்கையும், தங்கையும் அதுவும் இதுவுமா? எண்ணிப் பார்த்தால் குறை தெரியும். ‘ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம்' காண வேண்டாமா?'' என்று பேசிக் கொண்டே போனார்.அவர் பேச்சு முடிவு பெறவில்லை. அப்பேச்சு விளக்குவது என்ன? பிற்காலத் தமிழில் பெண் பெற்ற சிறுமையை விளக்குகின்றது. ஆணை மதித்து உயர்வாகக் கூறியவர் பெண்ணை உயர்த்தாமல் விட்டது தவறில்லையா? சொல் பொருள் அமைதியில் சிறந்தது தமிழ்மொழி. அத்துறையில் உலகில் வேறொரு மொழி இதற்கு இணையாக இல்லை. இது மொழியியல் ஆராய்ச்சியாளர் அனைவரும் அறிந்த உண்மை. பெண் உரிமையைப் போற்றும் அகப்பொருள் நுட்பங்களை இலக்கண நூல்களாகவும் இனிய சுவைப் பாட்டுக்களாகவும் எடுத்துச் சொல்லும் சிறப்புடையது இச்சிறப்பான மொழியே. இத்தகைய மொழியில் பேச்சு வழக்கில் நுழைந்து இடம் பெற்ற குறை இது. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல’ என்பது உண்மையே. அப்படியெனில் ஒரு நாட்டு மக்களின் உயர்ந்த நாகரிகத்துக்கு இழிவைத் தரும் ஒன்று புதியதாய்ப் புகுவதும், சிறப்பைத் தரும் ஒன்று பழையதாய்க் கழிவதும் அழகோ?

ஆணை உயர்த்தப் புகுந்த மக்கள் பெண்ணை உயர்த்தாததோடு விட்டனர். நிற்காமல், பெண்ணைத் தாழ்த்தவும் தொடங்கினர்! உயர்திணையில் பெண்பாலாக இருந்த ஒருத்தி அக்றிணையில் ஒன்றன் பாலாக ஆனாள்! அவளும் இவளும் ‘அது' ‘இது' என்றும் ‘வந்தது' ‘சொன்னது' என்றும் ஆன இவை அறிவிப்பது என்ன? பகுத்தறிவில்லாத ஒன்றை அன்றோ அக்றிணை என்று இலக்கணம் கூறுகின்றது? பெண்ணுக்குப் பகுத்தறிவு இல்லையா?

தமிழில் இக்குறை பேச்சு வழக்கில் மட்டும் உள்ளது। இலக்கணமாக எழுதுகையில் இதற்கு இடமில்லை. ஆனால், தெலுங்கு, கோண்டு இருமொழிகளிலும் ஒருத்தியை உணர்த்தும் பெண்பால் இல்லை. ஒருத்தியைக் குறிக்க அக்றிணை ஒன்றன்பாலை வழங்குகின்றனர். ஒருத்தியைக் குறிக்கும் சுட்டுப்பெயர்களையும் வினைமுற்றுக்களையும் அக்றிணையாகவே அமைத்துள்ளனர். அரசியைக் குறிக்கும்போதும் ‘ஆதி' ‘இதி' (அது, இது) என்பர்; திருமகள், கலைமகள் முதலான பெண் தெய்வங்களைக் குறிக்கும்போதும் ‘ஆதி', ‘இதி' என்று சுட்டுதல் உண்டு. எத்துணை உயர்வு பெற்ற பெண்ணையும் அக்றிணை ஒருமையாகச் சுட்டுகின்றனர். தெலுங்கில் பெண்பாலைக் குறிக்கும் பழங்கால சொற்கள் சில உள்ளன. ஆனால் அவை அருகி வழங்குகின்றன.

ஆணை அவன் என்றும், அவன் வந்தான் என்றும் கூறும் இலக்கணம் பெண்ணை அது என்றும், அதுவந்தது என்றும் கூறுவது வியப்பன்றோ? பெண்பாற் பெயர்களை அக்றிணைப் பெயர்கள் (அமஹத்) என்றே தெலுங்கு மொழியின் இலக்கணம் கூறுகின்றது। தெலுங்கு பேசும் மக்கள் பலகோடிக்கு மேற்பட்டவர்கள். அவர்கள் அனைவரும் இவ்வாறு பேசுகின்றனர்; ‘அவள்' என்று தமிழில் உள்ளது போலத் தெலுங்கில் ஒரு சொல் இல்லை; ஆயினும், பெண்டிர் பலரைக் குறிக்கும்போது அவைகள் என்று சொல்லாமல், அவர்கள் என்றே வழங்குகின்றனர்.

தூதுவரும் கோடரும், ஆணாயினும் பெண்ணாயினும் விலங்காயினும் கல்லாயினும் அது என்று திணைப்பாகுபாடு இன்றியே கூறுகின்றனர்। அவர் சுட்டுக்களிலும் ஆண் பெண் வேறுபாடு இல்லை. அம்மொழிகளை ஆராய வேண்டாம்.தமிழில் அமைந்துள்ள மொழியியல் சிறப்புகளுள் திணைப் பாகுபாடும் ஒன்று. அதனைக் குறித்துக் கால்டுவெல் என்னும் அறிஞர் கூறும் கருத்து போற்றுதலுக்கு உரியது

திராவிட மொழிகளின் திணைப்பாகுபாடு இந்தோ அய்ரோப்பிய மொழிகளிலும் செமிடிக் மொழிகளிலும் உள்ள பாகுபாடு போல கற்பனையால் ஆகியது அல்ல। அவற்றினும் சிறந்த தத்துவ உணர்வு மிக்கது ஆகும். பகுத்தறிவு உடையவை, பகுத்தறிவு இல்லாதவை என்ற பிரிவு சிறப்பும் இன்றியமையாமையும் உடையது தானே?''

"உயிருள்ளவற்றின் பெயர்களுக்கு ஒரு பன்மை விகுதியும், உயிரில்லாதவற்றின் பெயர்களுக்கு மற்றொரு பன்மை விகுதியும் சேர்த்து வழங்குவது பாரசீகமொழி ஒன்றே। அந்த மொழி ஒன்றே திராவிட மொழிகளோடு இவ்வகையில் ஒப்புமை உடையதாகும். ஆனால் அந்த ஒப்புமை மிகச் சிறிதே. எனவே, திராவிட மொழிகளின் திணை இலக்கணம் தனிச்சிறப்புடைய ஒன்றாகும். இது அறிவும் இலக்கணமும் வளர்ந்து மேம்பட்டதன் பயன் ஆகும்.''

இக்கருத்துக்கள் திராவிட மொழிகளின் திணையிலக்கணத்தைப் போற்றுகின்றன. இது திராவிட மொழிகள் எல்லாவற்றிற்கும் உரிய ஒன்று. ஆயினும், பிறமொழிக் கலப்பால் கன்னடம், மலையாளம் முதலியன இத்திணையிலக்கணத்தை இழந்தன. தமிழும் தெலுங்குமே இவ்விலக்கணம் உடையவனாக விளங்குகின்றன. இவற்றிலும், தெலுங்கும், பெண்ணை உயர்திணை எனக் கூற மறந்து அக்றிணையாக்கி விட்டது; இலக்கணமும் எழுதிவிட்டது. தமிழோ பேச்சு வழக்கில் அந்நோய்க்கு இடம் தந்துள்ளது.

யாழன் ஆதி கவிதை


காலம் தொலைத்த வாழ்வின்

இருப்புகள்

கைகள்ளில் ஊன்றுகோல்களாயின


சுருங்கிய தோலும்

நரைத்த முடியும்

வற்றிய உடலும்

நாட்கள் நகர்த்திய காய்கள்


அனுபவத்தின் நதிகள்

வற்றிக் கிடக்க

மீந்திருக்கும் கட்டங்களை

நிரப்பி முடிக்க

எத்தனிக்கும் மனதின் அலைகள்


திறக்கப்படாத கதவுகளும்

மறுக்கப்பட்ட வழிகளும்

நெடுகிலும் நிறைந்திருக்க

பள்ளங்களையும் மேடுகளையும்

பார்வையால் தடவி

தத்திதத்தி

நடக்கின்றன கால்கள்


அறிவிக்கப்படாத முடிவுகளுக்காய்

கண்கள் முளைத்த கோல்களை

செலுத்தி தட்டுகிறது முதுமை


ஆசைகள் தூர்ந்துபோன வாழ்வில்

பாம்பு கடிபட்ட

தாயத்தைப் போல

மீண்டும்

கீழிருந்தே ஆரம்பமாகிறது

ஆட்டம்

ஒரேயொரு தமிழன்கூட...!

"சாதி அமைப்பு முறையை விட்டுவிட்டுத் தீண்டாமையை ஒழித்துக் கட்டுவதோடு நாம் நிறைவடைய வேண்டும் என்று சிலர் சொல்லக்கூடும். சாதி அமைப்பு முறையில் உள்ளார்ந்து பொதிந்துள்ள ஏற்றத் தாழ்வுகளுக்கு முடிவுகட்ட முயலாமல், தீண்டாமையை மட்டுமே ஒழித்துக் கட்டுவது என்பது, மிகவும் கீழான குறிக்கோளாகும். தோல்வியைவிட மிகக் குறைந்த குறிக்கோளை மேற்கொள்வது குற்றம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் கொடுந்தீமையை அதன் அடிவேர் வரை ஆராய வேண்டும். நமது வலியை, நோயைத் தணிப்பதோடு நாம் நிறைவடைந்து விடக்கூடாது. நோய் எதுவென்று சரியாக, உறுதியாக அடையாளம் காணவில்லை என்றால், அதற்கான தீர்வு பயனற்றதாகி விடும்; குணமடைதல் தள்ளிப்போகக்கூடும். தீண்டாமை என்னும் கறை, வடு, இழுக்கு அகற்றப்பட்டு விட்டதாக வைத்துக் கொண்டால்கூட, தற்போதைய தீண்டத்தகாதவர்களின் சமூகப் படிநிலை எத்தகையதாக இருக்கும்? அதிகபட்சம் அவர்கள் சூத்திரர்களாக நடத்தப்படுவார்கள். அவ்வளவுதான்.'' - பாபாசாகேப் அம்பேத்கர்

‘தீண்டாமை ஒழிக்கப்பட்டுள்ளது' என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. ஆனால், இத்தீண்டாமைக்கு ஆதாரமான ஜாதியை அது இன்றளவும் பாதுகாத்தே வருகிறது. அறுபது ஆண்டுகால சுதந்திர இந்தியாவில், சாதி ஏன் சட்ட ரீதியாக ஒழிக்கப்படவில்லை என்று கேட்க, அம்பேத்கர் - பெரியார் இயக்கங்களைத் தவிர யார் இருக்கிறார்கள்? தீண்டாமைக்கு எதிராகவும், சாதிக்கு ஆதரவாகவும் (அதற்கு எதிராகப் பேசாமல் அமைதி காப்பது) இருப்பதற்குப் பெயர்: பார்ப்பனியம் / காந்தியம் / முற்போக்கு / அரசியல்! இன்று உத்தப்புரம் கிராமத்திலும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவின் ஆறு லட்சம் கிராமங்களைப் போலவே இக்கிராமமும் (சேரியும்) அனைத்து வகை சாதிப்பாகுபாடுகளுடன்தான் இயங்குகிறது. ஆனால் 600 அடி சுவற்றில் (பொதுவழியில் இருக்கும்) 15 அடியை மட்டும் இடித்துவிட்டு, அது ‘உத்தம'புரமாக மாறி விட்டது என அரசு குதூகலிக்கிறது. மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் அதைக் கொண்டாடுகிறது.

இக்கொண்டாட்டத்தில் பங்கேற்காத ‘குற்ற'த்திற்காக, அது தலித் இயக்கங்களையும் சாடுகிறது. கட்சி தொடங்கி அரை நூற்றாண்டுக்குப் பிறகே ‘தீண்டாமையை மட்டும்' ஒழிக்கக் கிளம்பி இருப்பவர்கள், அம்பேத்கர் கொள்கையை ஏற்று சாதி ஒழிப்பை மய்யமாகக் கொண்டு அணி திரளும் தலித் இயக்கங்களை விமர்சிப்பது, கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம்.

அண்மையில் வெளிவந்த புள்ளிவிவரங்களின்படி, "இந்தியாவில் ஒவ்வொரு 18 நிமிடத்திற்கு ஒருமுறை, தலித்துகளுக்கு எதிராக ஒரு குற்றம் இழைக்கப்படுகிறது; ஒவ்வொரு நாளும் 3 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.'' இக்கொடுமைகள் இன்று நேற்றல்ல; சாதி அமைப்பு தொடங்கியது முதலே இதுதானே நிலை. ஆக, பன்னூறு ஆண்டுகளாக தீண்டாமையை அனுபவிக்கும் தலித்துகள், சாதியை சிதைத்து விடாமல் அதன் வெளிப்பாட்டை மட்டுமே எதிர்த்துப் போராடும்படி நிர்பந்தித்து, அதன்மூலம் இந்து (மத) சமூக அமைப்பை உயிர்ப்புடன் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான் பார்ப்பனியத்தின் நோக்கம். இச்சதித்திட்டத்தை ஏற்க மறுத்து, ஒரே நொடியில் இந்து சமூக அமைப்பிலிருந்து வெளியேறுவதுதான் (சாதி ஒழிப்பு) - அம்பேத்கரியம்.

தீண்டாமையை அகற்றி, இந்து மதத்தைச் சீர்திருத்தும் "சனாதன முற்போக்கு' வாக்கு அறுவடைசெய்யும் தேர்தல் செயல்திட்டத்தில் - தலித்துகள் பங்கேற்கவும் முடியாது; அதை ஆதரிக்கவும் முடியாது. தமிழ்நாட்டு எல்லைக்கு வெளியே - ஈழத்திலும், கருநாடகத்திலும், மலேசியாவிலும் தமிழர்கள் தாக்கப்பட்டால், அந்நியனை எதிர்த்து சுரணையோடு போராடுகின்றவர்கள், தமிழக எல்லைக்குள் தமிழன் தாக்கப்பட்டால் மட்டும் - சொந்த (ஜாதி) தமிழனை எதிர்க்க அஞ்சுகின்றனர். இங்கு சேரித்தமிழன் அவர்களுக்கு அந்நியனாகிவிடுகிறான்!

அம்பேத்கரின் மதமாற்றத்தை (இந்துவாக இருக்க மறுப்பது) கொச்சைப்படுத்துகின்றவர்கள், தமிழனை சாதியொழிந்த தமிழனாக எப்படி மாற்றப் போகிறார்கள்? சிந்து சமவெளி நாகரிகத்திற்குப் பிறகு, இன்று வரை எத்தனையோ கோடி தமிழர்கள் வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள். இன்றும் எட்டு கோடிக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால், ஒரேயொரு சாதியற்ற தமிழனைக்கூட அடையாளப்படுத்த முடியாத வக்கற்ற இனமாகத் தமிழினம் தாழ்ந்து கிடக்கிறதே? திருவள்ளுவர் கூட சாதியிலிருந்து தப்பவில்லையே! இனி பிறக்கப்போகும் தமிழனாவது சாதியின்றி பிறப்பதற்கு, தமிழர்களிடம் ஏதாவது செயல்திட்டம் இருக்கின்றதா? தமிழ்ச்சமூகம் சற்று சுரணையுடன் சிந்திக்கட்டும்.

நன்றி - தலித்முரசு

பாலபாரதியின் "தாயம்மா"

திரைப் பத்திரிகையாளராக வாழ்க்கையை தொடங்கி தற்போது திரைப்படத் துறையில் துணை இயக்குனராகியுள்ளவர் பாலபாரதி. திரைப்பட இயக்குனர்கள் சிலரின் போராட்டங்களைக் கூறும் "ஜெயித்த கதை" மற்றும் 75 ஆண்டுகால தமிழ் திரைப்பட வரலாற்றில் வெள்ளிவிழா கண்ட வெற்றிப் படங்களைப் பற்றிய "தமிழ் திரையுலகச் சாதனைப் படங்கள்" என்ற நூலையும் இவர் ஆக்கித் தந்துள்ளார்.

பழனிக்கு அருகில் உள்ள கலையம்புத்தூர் என்ற ஒரு அழகிய கிராமம் இவரது சொந்த ஊராகும். அங்கு தனது பள்ளித் தோழனின் தங்கை வறுமை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு, சாயப்பட்டறை தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றதால், சூனியமாகிப்போன இளம் தளிரை பற்றிய சோக வாழ்வை இந்த தாயம்மாவில் படைத்துள்ளார்.

தாயம்மாவின் மகள் லட்சுமி. தாயம்மா உடல் நலம் குன்றியதால், மகள் லட்சுமி படிப்பை நிறுத்தி விட்டு அந்த ஊரில் அடியெடுத்து வைக்கும் சாயப்பட்டறை ஆலைக்கு வேலையில் சீர்கிர்ரால்

சாயப்பட்டறைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் லட்சுமியின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்து கடைசியில் இறந்தே விடுகிறாள் அந்தச் சிறுமி. அதனை பொறுக்கமாட்டாத தாயம்மா பைத்தியம் ஆகிறாள்.

75 பக்கங்களில் ஒரு சோகக் கதையை விறுவிறுப்பாக எழுதியுள்ளார் பாலபாரதி. பெரும்பாலும் ஒரு திரைக்கதை வடிவத்தில் எழுதப்பட்டுள்ளது. சிறு சிறு உணர்வுகளை அகழ்ந்தாய்ந்து செல்லும் இலக்கிய நுட்பத்தை தேடுபவர்களுக்கு இந்த நாவலில் ஏதுமில்லை.

மாறாக சுற்றுச்சூழலை கெடுத்து நாசமாக்கும் ஒரு சாயப்பட்டறை அந்த ஊரில் எவ்வாறு நுழைய முடிகிறது என்பதையும், அதற்கான அரசியல் பலம், பண பலம் என்ன செய்யும் என்பதையும், இந்த ஆதிகாரச் சக்திகளின் முன் அப்பாவி கிராம மக்கள் தங்கள் பாரம்பரிய விவசாயத் தொழில்களை இழந்து தவிப்பதையும் அவரளவில் உரக்கப் பேசியுள்ளார் பாலபாரதி.

முதலில் சாயப்பட்டறை‌க் கழிவை குடித்து மாடு ஒன்று இறக்கிறது. அப்போதும் ஊர் ம‌க்க‌‌ள் விழித்துக் கொள்ளவில்லை. லட்சுமியின் இறப்பு கிராம மக்களின் சக்தியை வெளிக்கொணருகிறது. இறுதியில் சாயப்பட்டறைக்கு சீல் வைக்கப்படுகிறது. வேலையிழந்தோருக்கு முதல்வர் அரசாங்க வேலை கொடுக்க உத்தரவாதம் அளிக்கிறார். ஆனால்... தாயம்மா... எதுவும் புரியாமல் நடைபிணமாய் வலம் வந்து கொண்டிருக்கிறாள்...

இந்த நாவல் 2001-ஆம் ஆண்டு மேனகா இதழ் தனது பிப்ரவரி மாத இதழில் முதன் முதலாக பிரசுரமானது. அதன் பிறகு 2006-ல் இது முழு நூல் வடிவம் பெற்று வெளிவந்துள்ளது

-நன்றி - வெப் துனியா

ரஜினிக்கு பிச்சை அளித்த பெண்!


ஆசியாவிலேயே ஜாக்கி ஜானுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினிகாந்தை பிச்சைக்காரராக நினைத்த ஒரு பெண்மணி ரூ.10 தானம் அளித்துள்ளார்.


இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகளவில் வருமானத்தை குவித்த 'சிவாஜி' பட வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் வெளிநாடுகளுக்கு செல்லாமல், இந்தியாவிலேயே உள்ளார்.


தமிழ் திரையுலகத்தினால் சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் ரஜினி திடீரென பெங்களூருவில் உள்ள ஒரு கோயிலுக்கு தனது நண்பருடன் சென்றார். கசங்கிய சட்டை, சாதாரண லுங்கி அணிந்தோடு மட்டுமல்லாமல், பழுப்பு நிற துண்டை தலையில் கட்டியிருந்தார். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும் கோயிலில் ரஜினி மிக எளிமையாக இருந்ததால், அவரை பலருக்கும் அடையாளம் தெரியவில்லை.


அப்போது ஒரு பெண்மணி ரஜினியை பிச்சைக்காரர் என்று தவறுதலாக நினைத்து ரூ.10-யை தானமாக வழங்கியுள்ளார்.


இத்தகவல், சமீபத்தில் வெளியிடப்பட்ட 'தி நேம் இஸ் ரஜினிகாந்த்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் இந்த புத்தகத்தின் ஆசிரியர் கண் மருத்துவரான காயத்ரி ஸ்ரீகாந்த்.


கோடிக்கணக்கான சொத்திற்கும், புகழுக்கும் சொந்தக்காரர் பிச்சைக்காரராக நினைக்கும் அளவுக்கு இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து அவரது நண்பர் கேட்டதற்கு, 'எனக்கு சுதந்திரமாக இருப்பது பிடிக்கும். யாராலும் என்னை தங்க கூண்டிற்குள் அடைத்து வைத்திருக்க முடியாது' என்று ரஜினி பதிலளித்துள்ளதாக அந்த புத்தகத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

"தொந்தரவுக்குள்ளே நான் சுகம் காண'' ஒப்பிவிட்டேன்!


முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கவிதை:


முத்தமிழ் வித்தகராம் நல்லோர்க்கும்

முதுபெரும் புலமையில்

வல்லோர்க்கும்


முரசு கொட்டி மொழிப்போரில்

அணிவகுத்தோர் அனைவர்க்கும்

அரசொன்று வருமென்று கருதிடாமல் அறப்போர்களிலே


ஆவிதனை அர்ப்பணித்தோர்க்கும்; அகவை எண்பத்தி ஐந்தில்

அன்பு குழைத்து; அய்யன்மீர்! வீர வணக்கம் செலுத்துகின்றேன்.


வழித்தோன்றல்களாய் அவர்க்கு வாய்த்த குடும்பத்தார்க்கும்

கழிபேருவகைப் பொங்கி வழிந்திட நன்றிகளைக்

குவிக்கின்றேன்.


அலை அலையாய்ப் பெருகி அணி வகுத்துத் திராவிட இயக்க

அரண் காத்திட ஆர்த்தெழாமல் அன்றைக்கு அயர்ந்திருப்பின்


தீரா விடமன்றோ நம்மினத்தைத் தீர்த்துக் கட்டியிருக்கும்

ஈரோடு சிங்கமன்றோ எழுந்து முழங்கிற்று!


போராட வா தம்பியென்று காஞ்சியின் புறநானூறும்

அழைத்தபோது

வேரோடு தமிழினம் வீழாமல் காப்பதற்கு;


வெகுண்டெழுந்து வந்தவரில் ஒருவன் நான்!

பகுத்துணர்ந்து பல்லாண்டுக‌ளாக இனமுழக்கம் செய்கின்ற


பண்பாளர் எனக்கு மூத்த பேராசிரியர்

பழகு தமிழில் ஆணையிட்டு அழைத்த பிறகும்


பகுத்தறிவுப் பாசறையாம் பழைய தாய்க் கழகத்து வீர

மணிக்குரலும் விரிவானமாய் மனம் தோய்த்து


பல்லாயிரம், பல லட்சம் உடன் பிறப்பாளர்

பாசத்தை வெள்ளமாய்ப் பாய விட்டுப்


"பணிந்திடுக எம் அன்புக்கு!'' என ஆணையிட்ட பின்னும்

துணிந்து நான் துண்டிக்க முடியுமோ உடன்பிறப்புத் தொடர்பையெல்லாம்;


அதனாலே பாவேந்தர் பாடல் வரி போல

"தொந்தரவுக்குள்ளே நான் சுகம் காண'' ஒப்பிவிட்டேன்!


உன் வாழ்த்தினையேற்று

என் வணக்கமும் வாழ்த்தும்

வட்டியும் முதலுமாய் வழங்குதற்கே!


தமிழ்ப் பழமொழிகளில் சாதி உணர்வு!

-ஆ.கணேசன்

[பழமொழிகள் சமுதாயத்தின் மக்களிடையே ஓழுக்கங்களை போதிக்கவல்லது என்றும் அது மனித மனத்தை பண்படுத்தவல்லது என்றும் நாம் நினைத்திருக்கலாம். ஆனால், கூட்டாக, குழுவாக, சாதியாக வாழும் மனித மனத்தில் ஏற்படும் காழ்ப்புணர்வின் பிரதிபலிப்பாகவும் சில பழமொழிகள் உள்ளதை இந்த ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்... 1979ம் ஆண்டு செப்டம்பர் மாத கணையாழி இதழில் இந்த கட்டுரை வெளியானது.]

பழமொழிகள் யாவும் மக்களின் அனுபவக் குரலாக ஒலிக்கின்றன. பழமொழிகள் சமுதாயத்தில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாட்டுக் கோலங்கள், சமூக-சாதி உணர்வுகள், தொழில்கள் ஆகியவற்றைக் காட்டும் கண்ணாடியாக விளங்குகின்றன. சமுதாய வாழ்வின் பொதுவான போற்றுதல்களையும் தூற்றுதல்களையும் விளக்கிக் கூறுபவையாகும் காணப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள மக்கள் கூறும் பழமொழிகளிலிருந்து அவர்களின் வாழ்க்கைச் சித்திரத்தை ஓரளவிற்கு ஊகித்துணர முடியும். அவர்களது வாழ்க்கை நெறிமுறைகளையும், குடும்ப நிலைகளையும் ஆய்ந்தறிய பழமொழிகள் பெரிதும் உதவியாக இருக்கின்றன என்பதைத் துணிந்து கூறலாம்.

சாதிக் காழ்ப்புணர்ச்சி:

இந்தியாவில் மொழியினால் மட்டுமின்றி, ஒவ்வொரு மொழியினரும் சாதி எனும் தடுப்புச் சுவரால் பிரிக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு சாதியினரும் தங்கள் சாதியை உயர்த்தியும் பிறர் சாதியினரை தூற்றியும் வந்துள்ளனர். ஒவ்வொரு சாதியினரும் தனி தனிப்பிரிவுகளாக வாழ்ந்து, மற்ற சாதியில் வாழும் மக்களை ஒதுக்கியே வாழ்ந்து வந்திருக்கின்றனர். சாதியினைக் கொண்டே அம்மக்களின் பழக்க வழக்கங்களை அறியும் வண்ணம் பாகுபடுத்திப் பிரிக்கின்றனர். "சாதிக்குத் தக்க புத்தி, குலத்துக்கு தக்க ஆசாரம்" என்னும் பழமொழி மக்களிடையே அறிவு வேறுபாடும் சாதியினால் உண்டாகிறது என்பதை விளக்குகிறது. "ஊணினால் புத்தி, பூணினால் சாதி" என்ற பழமொழியும் இதனையே எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு சாதியை சேர்ந்த மக்களும் மற்ற சாதி மக்களைத் தாக்கும் வழக்கத்தை பழமொழிகள் மூலம் வெளியிடுகின்றனர். அதே சமயத்தில் பிற சாதியினரிடத்தில் காணப்படும் உயர்ந்த பண்புகளைப் புகழாமலும் இருந்து விடவில்லை. அவர்களது அனுபவ மொழிகள் முழுதும் உண்மையெனக் கூறாவிட்டாலும், ஓரளவு உண்மை இருக்கிறதென்பதையும் மறுக்க இயலாது.

சாதி வகைகள்:

தமிழில் காணப்படும் சாதிப் பழமொழிகளைக் காணும்போது உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற பாகுபாடின்றி அனைத்துச் சாதியினரைப் பற்றியும் பழமொழிகள் காணப்படுகின்றன. பெரும்பாலான பழமொழிகள் மற்ற சாதியினரிடையே காணப்படும் குறைகளை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளன. தமிழில் காணப்படும் பழமொழிகள் பிராமணர், செட்டியார், இடையர், வேளாளர், அம்பட்டர், வண்ணார், சக்கிலியர், கம்மாளர், பறையர், தச்சர், தட்டார், குறவர், முதலியார், கிராமணி, கவுண்டர் போன்ற எல்லா சாதியினரைப் பற்றியும் எடுத்துரைக்கின்றன. அவைகளுக்குள் புகுந்து பார்க்கும்போது, இத்தனை வேறுபாடுகளும் உட்பூசல்களும், நம் மக்களிடையே காணப்படுகின்றனவா என்று தோன்றுகிறது. சாதிச் சண்டைகள் ஆங்காங்கே நடைபெறும்போது ஒரு குற்றவுணர்வுதான் வெளிப்படுகிறது. "ஆயிரம் உண்டிங்கு சாதி" என்று மகாகவி பாரதி கூறிய வாக்கு உண்மையென்று பறைசாற்றிக் கொண்டு இப்பழமொழிகள் திகழ்கின்றன.

பிராமணர்:

"நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் வேண்டுமா?" என்ற பழமொழி அவர்களுக்குறிய சாதி வழக்கமுறையை சுட்டிக்காட்டுகிறது

"பின் புத்திக்காரன் பிராமணன்" என்ற பழமொழி அவர்களின் அறிவுத் திறனை எடைபோடுகிறது.

"பசுவிலும் ஏழை இல்லை, பார்ப்பாரிலும் ஏழை இல்லை", "பசுவிலே சாதுவையும், பார்ப்பானிலே ஏழையையும் நம்பக்கூடாது" - என்ற பழமொழிகள் அவர்கள் செல்வந்தர்களாகவே உள்ளனர்; ஏழைகள் இல்லை என்பதாக உள்ளது.

கடுமையான பழிப்புரைகளை பழமொழியில் காணும்போது, எவ்வளவு தூரம் உண்மையாக இருக்கும் என்பதை அறிய வேண்டும். "அண்டைவீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டித் தீர்ப்பான்", "பார்ப்பான் சேவகமும் வெள்ளைக் குதிரை சேவகமும் ஆகாது" என்ற பழமொழிகள் நேரடியாக பழித்துரைக்கின்றன. மேலும் அவர்களது உணவு முறையைப் பற்றிக் கூறும் இரு பழமொழிகளாக "பானையிலே சோறு இருந்தால் பார்ப்பான் கண்ணடையான்" "ஒரு பிடிச் சோற்றுக்கு பார்ப்பான் ஊர்வழி போவான்" என்பவை உள்ளன.

செட்டியார்:

இச்சாதியைச் சேர்ந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் சிக்கனமான பேர்வழிகள் என்று பொதுவாகச் சொல்வதுண்டு. இவர்களது பணம் சம்பாதிக்கும் திறனும் பாராட்டுக்குரிய பண்பாகும். இவர்கள் பண்பைக் குறிக்கும் வகையில் "ஆதாயம் இல்லாமல் ... ஆற்றோடு போவானா" "ஆதாயமில்லாமல் ஆற்றைக் கட்டி இறைப்பானா" என்ற பழமொழிகள் வழங்குகின்றன. "போன இடமெல்லாம் வட்டம் காற்பணம்" என்ற பழமொழிகளும் அவர்களது பொருள் ஈட்டும் திறனைக் காட்டுகின்றன. மறைமுகமாக இவ்வாறு கூறினாலும் இச்சாதியினரைப் பற்றி புகழ்ந்துரைகளையும் காண்கிறோம். "செட்டி பிள்ளையோ கெட்டிப்பிள்ளையோ" ... செட்டி மிடுக்கோ, சரக்கு மிடுக்கோ போன்ற பழமொழிகள் அவர்களது தொழிற் திறமைகளை பாராட்டுகின்றன.

பறையர்:

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினராக கருதக் கூடிய மக்களைப் பற்றிய பழமொழிகளும் தாக்கியே பேசுகின்றன. அவர்களது குல வழக்கமும், பேச்சு முறைகளும் ஏளனம் செய்யப்படுகின்றன. "பறச்சி பிள்ளையைப் பள்ளியிலே வைத்தாலும் பேச்சிலே ஐயே என்னுமாம்", பள்ளி பாக்கு தின்றால் பத்து விரலுக்கும் சுண்ணாம்பு" என்று ஏளனம் செய்கின்றது. முதல் பழமொழி அவர்களது பேச்சு வழக்கு எவ்வளவு மாற்றினாலும் மாறாது என்று கூறுகிறது. வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கம் அவர்களிடத்தில் இல்லையென்றோ, அல்லது முறையாக போடத்தெரியாது என்றோ இரண்டாவது பழமொழி ஏளனம் செய்கிறது

பறைப்புத்தி அரைப்புத்தி" என்று புத்தி கூர்மை பற்றிக் கூறும் பழமொழி மூலம் மற்ற சாதியினைச் சேர்ந்த மக்கள் இவர்களை தாழ்ந்த நிலையில் வைத்தே எண்ணிப்பார்க்கின்றனர் என்று அறியலாம்...

இடையர்:

"என்ன மாயம் இடைச்சி மாயம் மோரோடு தண்ணீர் கலந்த மாயம்" என்ற பழமொழி அவர்கள் நீர் கலந்து செய்யும் வியாபாரத்தை எள்ளி நகையாடுகிறது.

"ஆடு கொடாத இடையன் ஆவைக் கொடுப்பானா", “கொடுக்க மாட்டாத இடையன் சினை ஆட்டைக் காட்டியது போல" என்ற பழமொழிகள், அவரகளது தானம் வழங்காத்தன்மையை எடுத்துக் காட்டுகிறது. மேலும் சில பழமொழிகள் இந்த சாதியினரை வெளிப்படையாகத் தாக்கிப் பேசுகின்றன... பொதுவாகப் பார்க்கும்போது இவர்களது குலத் தொழிலைப் பற்றிய பழமொழிகளே அதிகம் காணப்படுகின்றன.

போற்றுதலும் உண்டு:

...ஒற்றுமையின் தொடர்பை விளக்கும் பழமொழிகளைக் காணும்போது இவர்கள் எவ்வாறு தாக்கிக் கொண்டார்கள் என்று எண்ணுகிறோம். "நாலாந்தலைமுறையைப் பார் நாவிதனும் சிற்றப்பன் ஆவான்" என்ற பழமொழி உறவு முறையை கற்பிக்கின்றது."பார்ப்பானுக்கு மூத்த பறையன் கேட்பாரின்றி கீழ்ச்சாதி ஆனான்", "தொட்டுப் பார்த்தால் தோட்டியும் உறவு" போன்ற பழமொழிகள் இவர்களிடையே உறவுப்பாலம் அமைக்கின்றது. தங்களுக்கிடையே உள்ள வேற்றுமை உணர்வால் ஒருவருக்கொருவர் பழிப்புரைகளை வீசிக் கொண்டிருந்தாலும், எங்கோ ஒரு மூலையில் அதற்கு எதிர்ப்புக் குரலும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. அங்கே அது ஒற்றுமையின் வலிமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

பாதிப்புகள்:

ஒரு சமுயாதத்தின் படிப்பினைகளாக விளங்கக்கூடிய பழமொழிகள் மக்களின் மனதை படம் பிடித்துக் காட்டுகின்றன. தமிழில் காணப்படும் பழமொழிகள் தமிழக மக்களின் அனுபவக் குரலாக விளங்குகின்றன. சமுதாயத்தில் காணப்படும் சாதிமுறைகள் மக்களை எவ்வாறு பாதித்தன என்பதை உணர்த்துகின்றன. பலவித வேற்றுமைகளினுள்ளும் ஒருமித்த மனத்துடன் காலங்காலமாக வாழ்ந்து, வளர்ந்து வரும் சமுதாயத்தில் இச்சாதிப் பூசல்கள் மறைமுகமாகவே இவர்கள் வாழ்க்கையை பாதிக்கின்றன. அவை எல்லைமீறும்போது சாதியின் காரணமாக சிற்சில இடங்களில் வெடித்துக் கிளம்புகின்றன.

அப்பாவாகலாம், தந்தையாக முடியாது..

நீ என்னவாக௦ வேண்டும்?" கேட்டார், ஆசிரியர்.
"விஞ்ஞானி" என்றான் சுரேஷ்.
"மருத்துவன்" என்றான் மூர்த்தி.
"வழக்கறிஞன்' என்றான் மகாலிங்கம்.

என்னிடம் கேட்டார்...

"ஆசிரியர்" என்றேன் நான். பொய்தான், உண்மையில் 'தந்தை' ஆக வேண்டும் என்பதே என் விருப்பம். காரணம்...

எ‌ன் ‌வீ‌ட்டி‌ன் ‌பி‌ன்புற‌ம் உ‌ள்ள தோ‌ட்ட‌த்‌தி‌ல் எ‌ன்னுடனு‌‌ம் எனது சகோதரனுடனு‌ம் ‌விளையாடுவதை எ‌ன் த‌ந்தை வழ‌க்கமாக‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ர். அ‌ப்போது அ‌ங்கு வரு‌ம் எ‌ன் தா‌‌ய் "செடிகளை அ‌ழி‌‌த்து‌விடாதீ‌ர்" எ‌ன்று ச‌த்த‌மிடுவா‌ர். அத‌ற்கு எ‌ன் த‌ந்தை "நா‌ம் செடிகளை அ‌ழி‌க்க‌வி‌ல்லை, குழ‌ந்தைகளை வள‌ர்‌க்‌கிறோ‌ம்" எ‌ன்று ப‌தில‌ளி‌ப்பா‌ர்.

ஆ‌ம் அ‌ப்படி‌த்தா‌ன் அவ‌ர் எ‌ங்களை வள‌ர்‌த்தா‌ர். எ‌ன் த‌ந்தை என‌க்கு எ‌ப்போது‌‌ம் எ‌ப்படி வாழ வே‌ண்டு‌ம் எ‌ன்று சொ‌ல்‌லி‌த் த‌ந்த‌தி‌ல்லை. அவ‌ர் வா‌ழ்‌ந்தா‌ர். அதை‌ப் பா‌ர்‌த்து எ‌ங்களை வாழ‌ச் செ‌ய்தா‌ர். அது எ‌த்தகைய சூ‌ழ்‌நிலையாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி. துணை பு‌ரி‌ந்தாரே த‌விர, முழுமையாக ஏ‌‌‌ற்று‌க் கொ‌ண்ட‌தி‌ல்லை

ஒரு த‌ந்தை நூ‌ற்று‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட தலைமை ஆ‌சி‌‌ரிய‌ர்களு‌க்கு‌ச் சமமானவ‌ர் எ‌ன்ற அ‌றிஞ‌ர் ஜா‌ர்‌ஜ் ஹெ‌ர்ப‌ர்‌ட்டி‌ன் வா‌க்கு எ‌வ்வளவு உ‌ண்மையானது எ‌ன்பதை எனது த‌ந்தை‌யிட‌ம் நா‌‌ன் க‌ண்டே‌ன்.

எ‌தை‌க் கே‌ட்டாலு‌ம், "‌நீ முடிவு செ‌ய்' எ‌ன்று அவ‌ர் சொ‌ல்லு‌ம் போது என‌க்கு‌க் கோப‌ம் வரு‌ம். எ‌ன்னை‌த் த‌னிமை‌யி‌ல் த‌வி‌க்க ‌வி‌ட்டு ‌வி‌ட்டதாக‌த் தோ‌ன்று‌ம். ஆனா‌ல் ‌மிக ‌விரை‌வி‌ல் எனது கோப‌ம் தவறு எ‌ன்று பு‌ரி‌ந்து‌விடு‌ம்.

அவ‌ர் எ‌ங்களு‌க்காக பெரு‌ம் பொரு‌ட் செ‌ல்வ‌ங்க‌ள் எதையு‌‌ம் சே‌ர்‌க்க‌வி‌ல்லை. பு‌த்தக‌ங்களை‌ச் சேக‌ரி‌த்தா‌ர். எ‌ங்க‌ளி‌ன் அ‌றிவு மு‌தி‌ர்‌ச்‌சி‌க்கே‌ற்ற பு‌த்தக‌ங்களை‌த் தேடி‌ப் ‌பிடி‌த்து வழ‌ங்‌கினா‌ர். அவ‌ற்றை‌ப் படி‌க்க‌ச் சொ‌ல்‌லி‌த் தூ‌ண்டினா‌ர். எதுவொ‌ன்றையு‌ம் தானாக‌த் தேடி‌க் க‌ற்க வே‌ண்டு‌ம் எ‌ன்ற வே‌ட்கையை உருவா‌‌க்‌கினா‌ர்.

இதனா‌ல் அவரு‌க்கு எ‌ல்லா‌ம் தெ‌ரியு‌ம் எ‌ன்று பொருள‌ல்ல. அவரு‌க்கு‌த் தெ‌ரியாத ‌விடய‌ங்களை தெ‌ரிய‌வி‌ல்லை எ‌ன்று மனதார ஒ‌ப்பு‌க்கொ‌ள்ளவு‌ம் அவ‌ர் தவ‌றிய‌தி‌ல்லை. முடி‌ந்த வரை அவ‌சியமானவ‌ற்றை‌த் தேடவு‌ம் அவ‌ர் தவ‌றிய‌தி‌ல்லை

எ‌ங்களை‌‌த் தா‌ங்கு‌ம் வேளை‌யி‌ல் ‌அவ‌ர் தடுமா‌றிய தருண‌ங்களு‌ம் பல இரு‌க்‌கி‌ன்றன. ஆனா‌ல் ஒருபோது‌ம் ‌நிலை குலை‌ந்த‌தி‌ல்லை, அவரது த‌ந்தை இற‌ந்தபோது த‌விர...

எ‌ந்த ஆணு‌ம் அ‌ப்பாவா‌கி ‌விடலா‌ம். ஆனா‌ல் த‌ந்தையாக முடியாது. அத‌ற்கு‌ச் ‌சில ‌சி‌ற‌ப்பான குண‌ங்க‌ள் தேவை. வா‌ழ்‌வி‌ன் கடுமையான பகு‌திக‌ளி‌ல் பெ‌ற்ற அனுபவ‌ங்களை ‌நினை‌த்தால‌ன்‌றி அ‌ந்த‌க் குண‌ங்களை‌ப் பெற இயலாது.

ஒருவேளை எனது த‌ந்தையை, அவரது இளமை‌க் கால‌த்‌தி‌ல் தா‌யி‌ன்‌றி, உறவுக‌ளி‌ன்‌றி, வா‌ழ்‌வி‌ன் வச‌ந்த‌ங்க‌ளி‌ன்‌றி வா‌ழ்‌ந்த அவரது அனுபவ‌மோ, அ‌ல்லது அத‌ற்கு‌ப் ‌பிறகு ‌கிடை‌த்த அவரது தோழ‌ர்களோ இவவாறு உருவா‌க்‌கி‌யிரு‌க்கலா‌ம்

எனது த‌ந்தையை‌ப் பா‌ர்‌த்து நா‌னு‌ம் ‌விரு‌ம்பு‌கிறே‌ன். த‌ந்தையாக வே‌ண்டு‌ம் எ‌ன்று...

-சித்தார்த்தன்.

சேது கப்பலுக்கு வழி விட மறுக்கின்றார் இன்று: கருணாநிதி கவிதை!


அயோத்தியில் ராமர் பிறந்தார் என்று, அடியோடு இடித்தார் பாபர் மசூதி, அன்று! வருங்காலத் தமிழகத்தின் வளம் பெருகாமல் தடுத்திட வரலாற்றைத் திரித்து சேது கப்பலுக்கு வழி விட மறுக்கின்றார் இன்று! எ‌ன்று கருணா‌நி‌தி க‌விதை எழு‌தியு‌ள்ளா‌ர்.அவ‌ர் இ‌ன்று எழு‌தியு‌ள்ள க‌விதை வருமாறு:


சாதிக்கப் போவது யாரு?

சாதிக்கு அப்பாலே யாரோ, அவரு!


மதச் சார்பில்லா ஆட்சிக்குத் தான்

மனித நேய ஆட்சி என்று பேரு!


மத நல்லிணக்கம் காண்பதே நமக்கினி வேதம்

மற்றவை யெல்லாம் நம்மிடை விளைக்கும் பேதம்!


மதம் சார்ந்த கட்சிகள் வாழ்வதற்கு உரிமை உண்டு. அவை

மனிதர்களை இருட் சிறையில் பூட்டுவதற்கு உரிமை

உண்டோ?


அயோத்தியில் ராமர் பிறந்தார் என்று

அடியோடு இடித்தார் பாபர் மசூதி, அன்று!


வருங்காலத் தமிழகத்தின் வளம் பெருகாமல் தடுத்திட

வரலாற்றைத் திரித்து சேது கப்பலுக்கு வழி விட மறுக்கின்றார்

இன்று!


இதையெல்லாம் எண்ணிப் பார்த்து,

இயல்பான பகுத்தறிவுக்கு மாறாக இயற்றிய சாத்திரங்களை


புயல் வேகம், புது வேகம் கொண்டுபுதைத்திடுவோம்,

ஆயிரம் அடி ஆழத்திலே!

வாழ்க்கை வாழ்வதற்கே ...

பள்ளியில் படிக்கையில் கல்லூரி வாழ்க்கைக்கு ஏங்குகிறோம் கல்லூரி வாழ்க்கையில் ஒரு நல்ல வேலை கிடைத்து 'செட்டில்' ஆக ஆசைப் படுகிறோம். வேலை கிடைத்ததும் பதவி உயர்வுக்கோ, அதிக சம்பளம் கிடைக்கும் இன்னொரு வேலைக்கோ அவசரப்படுகிறோம். அப்படிக் கிடைத்தவுடன் நல்ல வாழ்க்கைத் துணையைத் தேட ஆரம்பிக்கிறோம். திருமணம் முடிந்தவுடன் பேரன் பேத்திக்காக நம் பெற்றோர் அவசரப்படுகிறார்கள். குழந்தைகள் பிறந்தவுடன் எப்போது அவர்கள் பள்ளிக்கூடம் போவார்கள் என்று ஆகி விடுகிறது. அவர்கள் படிப்பு ஆரம்பித்தவுடன் அவர்களது அடுத்தடுத்த கட்டங்களுக்காக கவலைப்பட்டுக் கொண்டே போகிறோம். நம்முடைய வேலையின் சுமையோ எப்போது இதிலிருந்து ஓய்வு பெறுவோம் என்று நம்மை ஏங்க வைக்கிறது. வேலையில் இருந்தும் ஓய்வு பெற்ற பின் உடல்நலம் பெரிதாக பாதிக்கப்படும் முன் கொண்டு போய் விடு என்பது தான் கடவுளிடம் நாம் கேட்கும் பிரார்த்தனையாக இருக்கிறது.

இது தான் நம்மில் பெரும்பாலானோரின் வாழ்க்கை வரலாறாக இருக்கிறது. இன்றைய சமூகத்தில் கிட்டத்தட்ட எல்லோருமே இப்படி எந்திரத்தனமாக ஓடிக் கொண்டிருப்பதால் நம்மிடம் எந்தத் தவறும் இருப்பதாக நமக்குத் தோன்றுவதுமில்லை. ஆனால் உண்மையில் நாம் வாழ்க்கை முழுவதும் ஓடும் இந்த ஓட்டத்தில் நாம் வாழ மறந்து விடுகிறோம். அந்தந்த காலத்தில் அந்தந்த அனுபவங்களின் அருமையை நாம் உணரத் தவறி விடுகிறோம். ஒவ்வொரு கட்டத்திலும் அடுத்த கட்டத்திலிருந்து வாழ ஆரம்பிப்போம் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். அடுத்த கட்டத்தில் நாம் அடியெடுத்து வைக்கும் போது அதற்கடுத்த கட்டத்தைப் பற்றிய எண்ணங்கள் நம்மை ஆட்கொள்ள ஆரம்பித்து விடுகின்றன. மரணம் வரை வாழ்க்கை நமக்குப் பிடி கொடுக்காமலேயே போய் விடுகிறது.

இதற்கான ஒரே காரணம் எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்கள் மட்டும்தான் என்றும் சொல்லி விட முடியாது. கடந்த காலத்தைப் பற்றிய வருத்தங்களும் கூட இந்த சதியை நம் வாழ்வில் செய்கின்றன. இப்படி ஏன் ஆயிற்று, அப்படி ஏன் நடந்து கொண்டார்கள் என்று புலம்பிக் கொண்டு பல சமயங்களில் நம் வாழ்க்கையை இருட்டாக்கிக் கொள்கிறோம். கடந்த காலத்தை மாற்றி அமைக்கும் சக்தி கடவுளுக்கே இல்லாத போது நாம் இது போன்ற வருத்தங்களில் செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடமும் விரயமே அல்லவா? உண்மையில் கடந்த காலம் என்பது நாம் சுமக்கத் தேவையில்லாத மிகப் பெரிய சுமையே. அதை சுமந்து கொண்டே அலைபவன் நிகழ்காலத்தைப் பாழடித்து எதிர்காலத்தையும் கோட்டை விடுகிறான். எனவே நாம் அதை இறக்கி வைத்து விட்டு வாழ்வது நல்லது

நிகழ்காலம் என்ற நிஜம் எதிர்காலக் கனவுகளாலும், கடந்த காலக் கவலைகளாலும் நிரப்பப்பட்டு நம்மால் வாழ மறுக்கப்படுகிறது. வாழ்வில் எப்போதும் நிகழ்காலம் மட்டுமே நம் கைவசம் இருப்பது என்பதை என்றும் நாம் மறந்து விடக் கூடாது. எதிர்காலத்திற்காக திட்டமிடுவதும், கடந்த காலத்தில் இருந்து கற்றுக் கொள்வதும் மட்டுமே முக்கியம். அதைச் செய்து முடித்தபின் எதிர் காலத்தையும், இறந்த காலத்தையும் நம் கவனத்தில் இருந்து அகற்றி விட்டு நிகழ்காலத்தில் முழுமையாக கவனம் செலுத்துவதே அறிவு. நிகழ்காலம் நன்றாக வாழப்படும் போது, இறந்தகாலத் தவறுகள் திருத்தப்படுகின்றன, எதிர்கால வெற்றிகள் உறுதியாகின்றன.

நாம் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறோம், உடலில் உயிர் இருக்கிறது என்பதால் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தமல்ல. வாழ்க்கையில் உயிர் இருக்கிறதா என்பதே மிக முக்கியமான கேள்வி. வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நாம் நூறு சதவீதம் பங்கெடுத்துக் கொண்டு வாழ்கிறோமா என்பது யோசிக்க வேண்டிய விஷயம். ஏனென்றால் நம் வாழ்வில் பெரும்பாலான நேரங்களில் நாம் எந்திரத்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் பங்கேற்காமலேயே நம்முள் உள்ள ரோபோ (Robot) அந்த சமயங்களில் நம் வாழ்க்கையை நடத்திச் செல்கிறது. பயிற்சி பெற்றுப் பழகிய பின் நீச்சல், வாகனங்கள் ஓட்டுதல் முதலிய செயல்களை இந்த ரோபோ செய்யும் போது அது நமக்கு வரப்பிரசாதம். ஆனால் அதே ரோபோ நாம் அனுபவித்துச் செய்ய வேண்டிய செயல்களைத் தானே செய்யத் துவங்கினால் அது உண்மையில் சாபக்கேடே. துரதிஷ்டவசமாக இப்படி எத்தனையோ நாம் முழுமையாகப் பங்கெடுத்துச் செய்ய வேண்டிய செயல்களையும் அந்த ரோபோவிடம் ஒப்படைத்து விடுகிறோம். அது நம் வேலையைச் செய்யும் போது நாம் நடந்ததிலும், நடக்க இருப்பதிலும் மனதை சஞ்சரிக்க விடுகிறோம்.

நாம் வாழ்கிறோமா, இல்லை அந்த ரோபோவிடம் வாழ்வை ஒப்படைத்து விட்டோமா என்று அறிய நமது தினசரி வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தாலே தெரியும். நாம் சாப்பிடும் உணவை ஒவ்வொரு கவளமாக ருசித்து சாப்பிடுகிறோமா? சூரியோதயம், சூரியாஸ்தமனம் போன்ற ரம்மியமான இயற்கைக் காட்சிகள், அழகான பூக்கள், குழந்தைகளின் மழலை, நல்ல இசை போன்றவை நம் கவனத்திற்கு வருகிறதா? ரசிக்கிறோமா? ஈடுபடும் விஷயங்களில் நம்மை மறந்து லயித்துப் போகும் தருணங்கள் உண்டா? செலவில்லாத சின்னச் சின்ன மகிழ்ச்சிகள், மன நிறைவுகள் அடைவதுண்டா? இதில் சிலவற்றிற்காவது ஆமென்று சொல்ல முடிந்தால் அந்த அளவிற்கு வாழ்ந்திருக்கிறோம் என்று பொருள். இல்லை என்பது பதில் என்றால் நம்முள் உள்ள ரோபோ தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று பொருள்
வாழ்க்கையின் ஒவ்வொரு தருணமும் முக்கியமானதே. அதை முழுமையாக வாழும் போதுதான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது. நமது வாழ்க்கையை ஆரம்பிக்க ஒரு கச்சிதமான தருணத்திற்காகக் காத்திருக்க வேண்டாம். அப்படி ஒன்றை நாம் காணப்போவதேயில்லை. வாழ்க்கையில் அடுத்த நாள், அடுத்த மாதம், அடுத்த வருடம் என்று எதுவும் நிச்சயமல்ல. எப்போது வேண்டுமானாலும் வாழ்க்கை முடிவுக்கு வந்து விடலாம். நிகழ்காலம் மட்டுமே நமது அதிகாரத்தில் உள்ளது. அதில் குழந்தையின் குதூகலத்துடனும், முழு கவனத்துடனும் ஈடுபட முடிந்தால் அப்போது தான் நாம் உண்மையில் வாழ்பவர்களாகிறோம்.

- என்.கணேசன்

மனிதனின் மூன்று முகங்கள்

பற்பல வகைகளில் குணாதிசயம், பழக்க வழக்கங்களுடைய மனிதர்களை தினந்தோறும் நாம் பார்க்கிறோம். பொதுவில், மனிதர்களுக்கு மூன்று விதமான முகங்கள் உள்ளதாக கடவுள் கூறுகிறார். அவரது கதையைக் கேட்போமா

ஒரு நாள் கடவுள் தெருவில் சென்று கொண்டிருந்தார். அங்கே ஒரு மனிதன் கட்டிட வேலை செய்து கொண்டிருந்ததைக் கண்டார். அவனருகே சென்று, "என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். அவன், "பார்த்தால் தெரியவில்லையா? ஒரு செங்கல் மேல் இன்னொரு செங்கல் வைத்து அடுக்குகிறேன்" என்றான்.

தெருவில் மேலும் சிறிது தூரம் நடந்து சென்ற கடவுள் அதே வேலையைச் செய்யும் மற்றொரு மனிதனைக் கண்டார். அவனிடமும் அதே கேள்வியைக் கேட்டார். அதற்கு அவன் "நான் ஒரு சுவர் எழுப்புகிறேன்" என்றான்.

மேலும் சிறிது தூரம் சென்ற அவர் அதே வேலை செய்து கொண்டிருந்த மற்றொரு மனிதனைக் கண்டு அவனிடமும் அதே கேள்வியை மீண்டுமொரு முறை கேட்டார். எழுந்து நின்ற அந்த மனிதன் புன்னகையுடன், "நோய்களுக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவமனை கட்டுகிறேன். இதனால் மக்கள் அனைவரும் பயனடைவார்கள்" என்றான்

கடவுள் சந்தித்த மூன்று நபர்களும் ஒரே மாதிரியான வேலை செய்கிறவர்கள்தான். இதில் வித்தியாசம் என்னவென்றால், முதலாமவன் சுயநலவாதி, இரண்டாமவன் நியாயவாதி, மூன்றாமவன் பொதுநலவாதி

முதலாமவனைப் பொறுத்தவரையில் எந்த சந்தோஷமுமில்லாமல் இயந்திரத்தனமாக பணத்திற்காக மட்டுமே வேலை செய்கிறான். நிச்சயமாக அவன் ஒரு சுயநலவாதி. இதன்மூலம் அவன் அறிந்து கொள்ளப்போவதென்பது எதுவுமில்லை. பணம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட அவன் ஒரு மனித இயந்திரம்தான்

இரண்டாமவனைப்பொறுத்தவரையில் செய்யும் வேலை என்னவென்று அவனுக்குத் தெரியும். அவனால் ஒரு சிறந்த கட்டிடத்தை உருவாக்கிட முடியும். அவன் எழுப்பும் கட்டிடங்களில் மக்களால் நிம்மதியாக வாழ்ந்திட முடியும்.

மூன்றாமவன் தான், தன்னுடைய சுற்றம் என்ற வட்டத்தையும் மீறிய தொலைநோக்குப் பார்வையுடன் வாழ்பவன். அவனுடைய குடும்பத்தினர், உற்றார், உறவினர் மட்டுமல்லாது முன்பின் அறியாதவர்களும் நலமுடன் வாழவேண்டும் என்று எண்ணுகிறான். தான் செய்யும் வேலையை கடமையாக மட்டும் எண்ணாமல் சமுதாயத்தின் மீது அவன் கொண்டுள்ள பொறுப்புணர்ச்சியும் அவன் பதிலில்வெளிப்படுகிறது.

இப்போது சொல்லுங்கள், மூன்று முகங்களில் உங்களுடையது எதுவென்று? சில சமயங்களில் சுயநலவாதியாக நாம் வாழ்ந்தாலும் பல சமயங்களில் நியாயவாதியாகவே நாம் வாழ்கிறோம். ஒரு சிலரால் மட்டுமே பொதுநலவாதியாக வாழ்ந்திட முடிகிறது. அவர்களை நாம் மகாத்மாக்கள் என்கிறோம்.

- காயத்ரி

பாவப்பட்ட ஜென்மங்கள்...

வீங்கிப் புண்ணான கழுத்தோடு
விளக்கிச் சொல்ல வாயின்றி
ஓட்டுபவனின் உதைக்குப் பயந்து
ஓட்டமாய் வண்டி இழுத்துச் செல்லும்
ஒற்றை மாடு...

தன்னைப்பெற்ற ஏழைக் கூலித் தாயோ
தரிசு நிலத்திலே பசுவுக்குப் புல் பிடுங்க
பசியால் துடிதுடிக்கும் பத்துமாதத் தங்கையை
பாதி இடுப்பிலே தூக்கிச் சுமக்கும்
பாவாடை கிழிந்த மூன்று வயது அக்கா...

பச்சைப் பசேல் காட்டுக்குள்ளே
பாடிப் பறக்க முடியாமல்
வெட்டப்பட்ட சிறகுகளுடன்
பெட்டிக்குள் அடைக்கப்பட்ட
பச்சைக்கிளி...

பத்து மாதம் சுமந்து பெற்ற
பச்சைக் குழந்தையை
கால் வயிற்றுக் கஞ்சிக்காக
கால் காசுக்கு விற்றிட்ட
ஏழைத்தாய்...
என் கண்ணில் பட்டவற்றை
எழுதாமல் இருந்திடவோ
என்னால் இயலவில்லை

உன் கண்ணில் எதிர்ப்பட்டால்
உன் நண்பன் கிளி வளர்த்தால்

உடனே சொல்லித் திருத்திடு!

- பெனடிக்ட்

காற்றுக்கு ஏதடா கடைசி மூச்சு..

- ஈரோடு தமிழன்பன்

அவன் இறக்கவில்லை!
சூரியன் இறந்ததாய்
எவன் சொன்னவன்?

உணர்ச்சித் தமிழனின்
ஒவ்வொரு உதிரத்துளியிலும்
உயிரோடு இருக்கிறான்...
அவன்
சினத்தின் பிடரியில்
சிலிர்த்துக் கொண்டிருக்கிறான்!

எந்த இருட்டும் அவனைச் செறித்துவிட முடியாது
தமிழுக்கு
வைகறை தயாரிக்கப்
போயிருக்கிறான்.

மரணத்தையும்
ஒரு ஆயுதமாகப்
பயன்படுத்தியிருக்கிறான்
பிறக்கும் வெற்றியின்
இதயமாய்த் துடிப்பான்.

எந்தச்
செடிகொடிகள் பூக்களைத்
தப்பாய் உச்சரித்தன?

எந்த நாளில்
விண்மீன்கள் பிழைபட ஒளியை
எழுதின? அப்படிக்
குற்றமில்லாமல் நற்றமிழ் பேசும், எழுதும்,
குரலில், விரலில் இருக்கிறான்.

தப்புக் குரல் மீது
அவன் கந்தக மகரந்தம்
கொட்டுகிறான்.
தவறும் விரல்மீது
கண்டனக் கண்களைத் திறக்கிறான்.

அவன்
இறக்கவில்லை...
ஆகாயம் செத்ததென்று
யார் அறிவித்தவன்?

தமிழினப்
பகைமீது திரும்பும்
செங்குட்டுவ விழிகளில்
தீயாய் வளர்கிறான்.

தமிழ் நிலம்
தானியம் வளர்க்கிறது
அவன் இதய ஈரத்தில்.
சிறகடிக்கும்
தமிழ்ச்சிட்டுகள் தொட்டுப் பார்க்கும்முன்
அவன்
மொட்டுவிரல்கள்
கட்டவிழ்ந்து விடுகின்றன.

அவன்
இறைக்கும் எழுத்துக்களைக்
கொத்திப் பறக்கும்
பள்ளிப் பறவைகளுக்குத்
தன் கண்களிலேயே
கட்டி வைத்திருக்கிறான்
தங்கக் கூடுகள்.

பெருஞ்சித்திரன் இறக்கவில்லை!
ஆம்;
காற்றுக்கு ஏதடா
கடைசி மூச்சு?