திருக்குறள்

இறைபோல் எங்கும் இருப்பது நட்பு!


மானுட மனத்தின் தூய்மை

இரக்கம் சுரக்கும் சுணை

இன்பத்தை அள்ளித்தரும் கற்பகத் தரு

துயரத்தில் பங்கேற்கும் துணிவு

துன்பத்தை தாங்கிடும் சுமைதாங்கி

பரந்த சிந்தனையின் ஊற்றுக்கண்

உண்மையை அறியும் உரைகல்

வஞ்சத்தை வதைக்கும் சூரியன்

நியாயத்தைக் காக்கும் அரண்

நேர்மையாளனின் உடை வாள்

பொய்மையை பொசுக்கும் யாகத் தீ

பேருண்மையைக் காணத் தூண்டும் ஞானக் கண்

தூய அன்பின் ஒளிக் கதிர்... நட்பு


வானமும் பூமியும் தொடுவது நட்பு

வயலும் மழையும் கலப்பதும் நட்பு

நிலமும் நெல்லும் வளர்வதும் நட்பு

வேராயும் விழுதாயும் படர்வதும் நட்பு

நாடு மொழிகளைத் தாண்டியது நட்பு

உலகளாவிய அமைதிக்கு வேண்டும் நட்பு

உன்னத வாழ்விற்கும் தேவை... நட்பு


- நன்றி

வெப்துனியா

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற