திருக்குறள்

வெண்ணிலவை உங்களுக்கு.

வெண்ணிலவை உங்களுக்கு
கண்ணியரே எதற்காக
உவமையாக சொல்லி வைத்தான் - புலவன்
எதைக்கொண்டு புலம்பிச் சென்றான்

ஓர் உருவாய் நிலைக்காமல்
ஓரிடத்தில் நில்லாமல்
நாளும் ஓர் உருவம் கொண்டு
நாழிக் கொருதிசை மாறும்

குணம் போன்றே நீங்களும்
எண்ணம் ஒன்றாய் இல்லாமல்
உண்மை ஏக்கம் கொள்ளாமல்
கண்கள் காணும் காளையிடம்

எண்ணம் கொடுத்து அதுவும் கொஞ்ச
நாளில் வேறு அழகு மனிதன்
கண்டதும் பாதை மாறி
பழைமை மறந்து புதிய மனிதன்

பாதை செல்லும் குணத்துக்காக
பாவையரே உங்களையே
பாரில் இந்த புலவனிவன்
பால் நிலவிற்குரைத்தானா ?

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற