திருக்குறள்

நினைவலைகள்

கடலலைக்கு வேண்டுமானால்
கரைக்கு வந்து போவது
பழகிப்போயிருக்கலாம் - ஆனால்
கரைக்கு வந்து போவது
பழக்கமில்லையடி
அது என்றும் அதே இடத்தில்தான்
இருக்கும்।
உனக்கு வேண்டுமானால்
நம் பிரிவு சந்தோஷம் தரலாம்
ஆனால் எனக்கு வேதனையடி
உனக்குத் தெரியுமா
திறந்தவுடன் உன்னைக் காட்டும்
மணிப்பர்ஸ்,
உனது குரலைக் கேட்க மட்டுமே
காத்திருக்கும்
எனது செல்போன்,
உனக்காக மட்டுமே மீண்டும் மீண்டும்
எழுதத் துடிக்கும்
விரல்கள்
உன்னை மட்டுமேசிந்திக்கச் செய்யும்
சிந்தனைகள்
உனது வருகைக்காய்காத்திருக்கும்
எனது கால்கள்
உன்னிடம் மட்டுமே பேசத் துடிக்கும்
எனது உதடுகள்.
இப்படி சொல்லப் போனால்
அநேகம்எனக்குள்ளே
இயங்கிக் கொண்டிருக்கும்உனது
நிலைவலைகளைஎன்னைவிட்டு
பிரிந்து போகச் சொல்லடி
பிறகு -
நான் உன்னை பிரிந்து போவதை
யோசிக்கிறேன்।

- ஜோயில்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற