திருக்குறள்

என் நினைவுகளை எடுத்துப்போனாய்...

உன் செல்ல கோபத்திற்காக
எத்தனை முறை வேண்டுமானாலும்
முட்டாளாகத் தயார்....

என் உயிரில் பாதி
உன்னிடமும் மீதியை
உன் வீட்டோர தும்பைப்பூக்களை சுற்றிவரும்
பாட்டாம்பூச்சிகளிடமும் வைத்திருக்கிறேன்....

நீ நட்சத்திரங்களை ரசித்திருக்கும்
ஓர் மொட்டைமாடிப் பனியிரவில்
நான் உன்மீதான காதலை சொன்னேன்....
நீ நட்சத்திரங்களை பூவாக்கித் தலைசூடி
நிலவாய் சிரித்தாய்...
நான் பைத்தியமானேன்...

நீ கனவுகளை கொடுத்து
என் நினைவுகளை எடுத்துப்போனாய்...

என் உறவுகள் என்னை ஆச்சர்யமாய் பார்க்கிறது
நான் உன்னைக் காதலித்துக் கொண்டிருக்கிறேன்...

நீ என் நாட்களை நிரப்பிவிடுகிறாய்
நான் தேன் குடித்த வண்டாய்
சுற்றிக் கொண்டிருக்கிறேன்....

நீ எதார்த்தமாய் திரும்பினாலும்
நான் என்னை பார்ப்பதாய்
நினைத்துக் கொள்வேன்
அது என்னை வாழவைக்கிறது....

- ரிஷி சேது

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற