திருக்குறள்

அண்ணா சில நினைவுகள்


அண்ணா முதலில் கல்வி கற்கச் சேர்ந்ததும் பச்சையப்பன் ஆரம்பப் பாடசாலை; அவர் பட்டம் பெற்றதும் பச்சையப்பன் கல்லூரிதான்.
அந்தப் பச்சையப்பன் கல்லூரி இப்போது சேத் துப்பட்டில் இருக்கும் கல்லூரி அல்ல! சைனாபஜாரில் கூச்சலும் சந்தடியும் நிறைந்த இடத்தில் அந்தப் பச்சையப்பன் கல்லூரி இருந்தது।

பொருளாதாரப் பேராசிரியர் 'மால்துஷியஸ்', தத்துவப் பாடத்தை விளக்கிக்கொண்டு இருப்பார்। வெளியே ''ஒன்றரையணா, ஒன்றரையணா... எதை எடுத்தாலும் ஒன்றரையணா!'' என்ற கூச்சல் கேட்கும்। இருப்பினும், அண்ணா பாடத்திலேயே கவனமாக இருப்பார்। உலகத்தில் எத்தகைய கூச்சலும் குழப்பமும் அமளியும் ஏற்பட்டாலும், அமைதியாக மனத்தை ஒருமுகப்படுத்தி விஷயத்தில் செலுத்தும் பண்பை அண்ணா இங்கிருந்தே பெற்றார்.
சென்னையில், பெத்துநாயக்கன் பேட்டைப் பகுதியில், ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தது அண்ணாவின் குடும்பம். அந்த வீடு பல குடித்தனங்கள் இருந்த பெரிய வீடு. குழந்தைகளும் குட்டிகளும் ஏராளமாக இருந்தன. அண்ணா படிப்பதற்கேற்ற சூழ்நிலை அங்கில்லை. இருந்தாலும், அண்ணா எல்லாவற்றையும் சகித்துக்கொண்டே படிக்கத் தொடங்கினார்.

கல்லூரியில் இன்டர் வகுப்பு முடிந்து, குடும்பத்திலுள்ள வசதிக் குறைவு காரணமாக அண்ணா தமது படிப்பைத் தொடருவ தில்லை என்று முடிவு செய்து விட்டார்। இந்தச் செய்தி, அன்றைய பச்சையப்பன் கல்லூரி முதல்வர் சின்னத்தம்பிப் பிள்ளை யவர்களின் காதில் விழுந்தது। அண்ணாவை அழைத்து வரச் சொன்னார்.

''இன்டரில் முதல் வகுப்பில் பாஸ் செய்த நீயெல்லாம் இப்படிப் படிப்பைத் தொடராது விட்டால் எப்படி? நீ, பி।ஏ। ஆனர்ஸ் படிப்பைத் தொடர்ந்து படிக்க வேண்டும். அந்த மூன்று வருடங்களுக்குரிய புத்தகச் செலவை நான் ஏற்றுக்கொள் கிறேன்'' என்றார்.

எந்த அண்ணாவுக்காக லட்சோப லட்சம் மக்கள் தங்கள் ஐஸ்வரியங்களையெல்லாம் கொட்டித் தரத் தயாராக இருந் தார்களோ, அந்த அண்ணா வறுமை காரணமாகக் கல்லூரி முதல்வரின் கருணையினால் புத்தகங்கள் பெற்றுத் தமது படிப்பைத் தொடங்கினார்।
கல்லூரியில் படிக்கும்போது தான் அண்ணா அவர்கள் ராணி அம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார்। பிற்காலத்தில் சுயமரியாதை இயக்கத் தளபதி யாக இருந்தவர், சுய மரியாதைத் திருமணச் சட்டம் கொண்டு வந்த முதலமைச்சராக இருந்தவர், ராணி அம்மையாரைப் பழைய சம்பிரதாய முறைப்படிதான் திருமணம் செய்துகொண்டார்.

கல்லூரிப் படிப்பை முடித்த தும், அண்ணா எல்லோரையும் போலவே வேலை தேடும் படலத் தில் இறங்கினார்।
காஞ்சி நகராட்சியில் கிளார்க் வேலை, காஞ்சிபுரம் பள்ளிக்கூடத் தில் (தனியாருடையது) ஆசிரியர் வேலை, சென்னையில் கோவிந் தப்ப நாயக்கன் பள்ளியில் ஆசிரியர் வேலை என்று சிறிது காலம் வேலை பார்த்தார்।

அப்போதுதான் 'சண்டே அப்சர்வர்' என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியரான பால சுப்பிரமணியம் அவர்களின் நட்பு அண்ணாவுக்குக் கிடைத்தது।

இன்று உலகிலுள்ள எல்லாத் தமிழர்களாலும் 'அண்ணா' என்று அழைக்கப்படும் அண்ணா, தன் வாயால் 'அண்ணா' என்று அழைத்த ஒரே ஒருவர் சண்டே அப்சர்வர் பாலசுப்பிரமணியம் அவர்கள்தான்।

எப்படியாவது அண்ணாவைத் தமது அணியில் சேர்த்து விட வேண்டும் என்று யோசித்த பெரியார், மெதுவாக அண்ணா விடம் தமது பத்திரிகையான 'விடுதலை'யில் பணியாற்ற வருமாறு கேட்டார்। யோசித்துச் சொல்வதாக அண்ணா வழக்கம் போல் பதில் சொன்னார்।

''நீங்க எப்பவும் இப்படித்தான்! என்ன யோசனை... வெங்காயம்... 'சட்டுபுட்டு'னு ஒத்துக்கவேண்டி யதுதானே!'' என்று சலித்துக் கொண்டார் பெரியார்।

சேலம் பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்த அண்ணா அவர்களை மிகவும் வற்புறுத்திப் பெரியார் தமது 'விடுதலை' பத்திரிகையில் பணியாற்றுமாறு செய்துவிட்டார்। 'விடுதலை'யில் பரதன், வீரன், சௌமியன் என்ற புனைபெயர் களில் பல கட்டுரைகளை எழுதி, வாலிப உள்ளங்களுக்கு வேகம் ஊட்டினார் அண்ணா.

ஈரோட்டில் அண்ணா இருந்த போது ஏற்பட்ட கலைப் பற்று, நாளாக ஆக வளரத் தொடங்கி, அவரைக் கலையுலகில் ஒரு மறு மலர்ச்சியைத் தோற்றுவிக்கிற அளவுக்கு வளர்த்தது।

சந்திரமோகன், நீதிதேவன் மயக்கம், சந்திரோதயம், ஓர் இரவு, காதல் ஜோதி, வேலைக் காரி போன்ற ஏராளமான நாடகங்களை எழுதினார்। எழுதியது மட்டுமல்ல; சில நாடகங்களில் நடிக்கவும் செய்தார். எம்.ஏ. படித்தவர் - ஓர் இயக்கத் தின் தளபதி அரிதாரம் பூசி நடிக்க ஆரம்பித்ததும்தான், கலையுலகம் பற்றியும் கலைஞர்கள் பற்றியும் இருந்து வந்த கேவலமான எண்ணம் மாறத்தொடங்கியது.

ஒரு முறை அண்ணாவின் நாட கத்தைப் பார்த்த பெரியார், ''நாம் பேசும் நூறு கூட்டங்களும் சரி, அண்ணாதுரையின் ஒரு நாடகமும் சரி!'' என்று வாய் விட்டுப் பாராட்டினார்।


'நீதிதேவன் மயக்கம்' என்ற நாடகத்தில் ராவணனாக நடிப் பார் அண்ணா.
நீதிதேவனைப் பார்த்துச் சரமாரியாகக் கேள்வி கேட்பார்। அப்போது நீதிதேவன் வேடம் போட்டிருந்தவர் பேராசிரியர் அன்பழகன். ஒரு முறை, அண்ணா வெகு வேகமாக சரளமாகப் பேசுவதைப் பார்த்து மயங்கிப் போயிருந்த அன்பழகன், தனது பாடத்தை மறந்துவிட்டு, அடுத்துப் பேச முடியாமல் விழித்தார்.

உடனே அண்ணா சமாளித்துக் கொண்டு, ''பேசமாட்டீர் நீதி தேவனே! நீர் பேசமாட்டீர்! உமக்கு மறந்து போய்விட்டது - நீதியும் நெறிமுறையும்!'' என்று பேச ஆரம்பித்தார்।

நாடகம் பார்க்க வந்த மக்கள் புரிந்துகொண்டு, நீண்ட கையலி எழுப்பினர்.
1949 ஜூன் 18-ம் தேதி... பெரியாருக்கும் மணியம்மைக்கும் சென்னை ரிஜிஸ்தரார் முன்னிலை யில் திருமணம் நடந்தது।

அந்தத் திருமணத்தை ரத்து செய்துவிடும்படி அண்ணாவும் கழகப் பிரமுகர்களும் கையெழுத் திட்டு ஓர் அறிக்கை விடுத்தனர்। பயன் ஏதும் ஏற்படவில்லை.

திராவிடர் கழகத் தோழர்களின் எதிர்காலத் திட்டம் பற்றி ஆராய 17-9-49 அன்று சென்னை பவழக் காரத் தெருவிலுள்ள ஒரு சிறிய அறையில் அண்ணா ஒரு கூட்டத் தைக் கூட்டினார். புதிய கழகம் அமைப்பதெனத் தீர்மானமாகியது. அதுவே திராவிட முன்னேற்றக் கழகம்.
தி।மு.கழகம் அமைந்ததை யட்டி அன்று ராபின்சன் பூங்காவில் கூட்டம். ஏராளமான மக்கள்!

''நாம் திராவிடர் கழகத்தாருடன் மோதுவதோ, சாடுவதோ கூடாது। திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்'' என்று பேசத் தொடங்கினார் அண்ணா।

ஒரு நாள் அண்ணாவின் இல்லத்திற்கு மாநகராட்சி தி।மு.கழகத்தினர் வந்தனர்.

''உங்களுக்கு ஒரு சிலை வைக்கலாமென்றிருக்கிறோம்'' என்றனர்.
''எனக்கேன் சிலை? வேண் டாம்'' என்றார் அண்ணா.
''இல்லை, சிலை வைத்துத்தான் ஆகவேண்டும்'' என்றனர்.
''அப்படியானால் நான் சொல் வதைக் கேளுங்கள்। தமிழ்நாட்டின் புகழை உயர்த்தியுள்ள காமராச ருக்கும் சத்தியமூர்த்திக்கும் சிலை வையுங்கள்'' என்றார் அண்ணா.

பெருந்தன்மையும் நாகரிகமும் கலந்த அந்தத் தலைவரின் உத்தரவுப் படியே காமராசருக்கும் சத்திய மூர்த்திக்கும் சிலைகள் வைக்கப்பட்டன.
அண்ணாவுக்கு முதன்முதலாக 'அறிஞர்' பட்டம் தந்தது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்தான்।
- அடியார்




பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற