திருக்குறள்

சு, சூ

  1. சுக துக்கம் சுழல் சக்கரம்.
  2. சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
  3. சுட்ட சட்டி அறியுமா சுவை.
  4. சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
  5. சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.
  6. சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.
  7. சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
  8. சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே
  9. சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
  10. சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.
  11. சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
  12. சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.
  13. சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.
  14. சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற