திருக்குறள்

  1. கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?
  2. கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
  3. கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
  4. கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
  5. கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
  6. கடல் திடலாகும், திடல் கடலாகும்.
  7. கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
  8. கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
  9. கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.
  10. கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
  11. கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
  12. கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
  13. கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
  14. கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
  15. கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.
  16. கடுகு களவும் களவுதான் , கற்புரம் களவும் களவு தான்.
  17. கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
  18. கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
  19. கடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவான்
  20. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
  21. கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
  22. கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
  23. கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
  24. கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
  25. கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.
  26. கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
  27. கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
  28. கண் உள்ள போதே காட்சி; கரும்பு உள்ள போதே ஆலை!
  29. கண் கண்டது கை செய்யும்.
  30. கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
  31. கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
  32. கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
  33. கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
  34. கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
  35. கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
  36. கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது
  37. கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு
  38. கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள்மணை குற்றம் என்கிறாள்
  39. கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
  40. கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
  41. கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி
  42. கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
  43. கரணம் தப்பினால் மரணம்.
  44. கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
  45. கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
  46. கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
  47. கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
  48. கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?
  49. கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்
  50. கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
  51. கல்லாடம் [ நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.
  52. கல்லாதவரே கண்ணில்லாதவர்.
  53. கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
  54. கல்வி அழகே அழகு.
  55. கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
  56. கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.
  57. கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
  58. களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
  59. கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
  60. கள்ள மனம் துள்ளும்.
  61. கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
  62. கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
  63. கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
  64. கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
  65. கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
  66. கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
  67. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
  68. கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
  69. கனிந்த பழம் தானே விழும்.
  70. கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
  71. கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற