திருக்குறள்

  1. எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ?
  2. எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
  3. எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
  4. எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
  5. எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்கார கழுவில் இருக்க வேண்டும்!
  6. எட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது.
  7. எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்ந்தென்ன?
  8. எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
  9. எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது!
  10. எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
  11. எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்.
  12. எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
  13. எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
  14. எண்ணெய் முந்துதோ திரி முந்துதோ?
  15. எதார்த்தவாதி வெகுசன விரோதி.
  16. எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
  17. எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
  18. எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
  19. எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
  20. எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா
  21. எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
  22. எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
  23. எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
  24. எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
  25. எலி அழுதால் பூனை விடுமா?
  26. எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
  27. எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
  28. எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.
  29. எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
  30. எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
  31. எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
  32. எல்லாரும் கூடிக் குல்லாய் போட்டனர்!
  33. எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
  34. எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
  35. எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
  36. எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
  37. எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
  38. எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
  39. எள் என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
  40. எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
  41. எறும்பு ஊரக் கல்லுந் தேயும்.
  42. எறும்புந் தன் கையால் எண் சாண்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற