திருக்குறள்

மா

  1. மாடம் இடிந்தால் கூடம்.
  2. மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
  3. மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா?
  4. மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது.
  5. மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.
  6. மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.
  7. மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.
  8. மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.
  9. மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.
  10. மாரடித்த கூலி மடி மேலே.
  11. மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.
  12. மாரி யல்லது காரியம் இல்லை.
  13. மாவுக்குத் தக்க பணியாரம்.
  14. மாற்றானுக்கு இடங் கொடேல்.
  15. மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?
  16. மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற