- மாடம் இடிந்தால் கூடம்.
- மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
- மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா?
- மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது.
- மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.
- மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.
- மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.
- மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.
- மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.
- மாரடித்த கூலி மடி மேலே.
- மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.
- மாரி யல்லது காரியம் இல்லை.
- மாவுக்குத் தக்க பணியாரம்.
- மாற்றானுக்கு இடங் கொடேல்.
- மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?
- மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.
பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற