திருக்குறள்

  1. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
  2. அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
  3. அகல உழுகிறதை விட ஆழ உழு.
  4. அகல் வட்டம் பகல் மழை.
  5. அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
  6. அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
  7. அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
  8. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
  9. அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
  10. அடக்கமே பெண்ணுக்கு அழகு.
  11. அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
  12. அடாது செய்தவன் படாது படுவான்.
  13. அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
  14. அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
  15. அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
  16. அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
  17. அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
  18. அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
  19. அந்தி மழை அழுதாலும் விடாது.
  20. அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
  21. அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
  22. அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
  23. அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
  24. அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
  25. அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
  26. அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.
  27. அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
  28. அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
  29. அரைக்காசுக்குப் போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வாராது.
  30. அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.
  31. அல்லல் ஒரு காலம், செல்வம் ஒரு காலம்.
  32. அலை அடிக்கும் போதே கடலாட வேண்டும்
  33. அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்.
  34. அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
  35. அழுத பிள்ளை பால் குடிக்கும்.
  36. அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
  37. அள்ளாதது குறையாது , சொல்லாதது பிறவாது .
  38. அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
  39. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்.
  40. அறச் செட்டு முழு நட்டம் .
  41. அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
  42. அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
  43. அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
  44. அறமுறுக்கினால் அற்றும் போகும்.
  45. அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
  46. அறிய அறியக் கெடுவார் உண்டா?
  47. அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
  48. அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
  49. அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
  50. அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
  51. அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
  52. அறுக்கமாட்டாதான் கையில் 58 அருவாளாம்
  53. அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும்.
  54. அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
  55. அற்ப அறிவு அல்லற் கிடம்.
  56. அன்பான நண்பனை ஆபத்தில் அறி.
  57. அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
  58. அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?
  59. அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
  60. அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
  61. அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
  62. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற