திருக்குறள்

மனிதகடவுள்களின் மர்மலீலைகள்

[இதுயார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல, எதார்த்தங்களையும் உண்மைகளையும் எனக்குத்தெரிந்தவகையில் எடுத்துச்சொல்கிறேன்..]


தற்போதுள்ள நிலவரப்படி எங்குநோக்கினும் மனிதக்கடவுள்களின்
மர்மலீலைகள்.
காவிச்சாமிகளின் களியாட்டங்கள். சாமியார்களின் சல்லாப லீலைகள். என்று தீயைவிட வேகமாக பரவிவருகிறது இணையங்களிலும். பத்திரிக்கைகளிலும். சேனல்களிலும். இதே புராணங்கள்தான். இதே செய்திகள்தான்.

இது ஏன்? எதனால்? இன்னிலைக்கு யார் காரணம்? அவர்களா? அல்லது
அறிந்தும் அறியாமல் இதுபோன்றவர்களுக்கு ஆதரவுதரும் மக்களா?
நம்பிக்கை வேண்டும் அதற்காக மூட நம்பிக்கை கொள்வதா?.
ஒருவர் ஒருவார்த்தை சொல்லிவிட்டால் அது திருவார்தையாகிவிடுமா?
அவர் யார்? கடவுளா?
மனிதன் கடவுளாகமுடியுமா? முடியுமென்றால் எப்படி?

கடவுளென்பவன் தவறிழைக்காதவன் மனிதனென்பவன் தவறிழைக்ககூடியவன்
ஒருவர் ஒருவிதத்தில் நல்லவரென்றால், மற்றொருவிதத்தில் கெட்டவராக இருப்பார். இதுதான் மனித நிலைபாடு, மனிதன் அப்படித்தான் படைக்கப்பட்டுள்ளான்.

ஒருவனுக்கு அறிவுகூடுதலாகயிருக்கும். ஒருவனுக்கு திறமைகள் கூடுதலாகயிருக்கும். இப்படி ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொருவகையில் மேன்மையாகவிளங்குகிறான். அதற்காக அவன் கடவுளாகமுடியுமா?

அப்படிப்பார்த்தால் அனைவருமே கடவுளா?

ஏனென்றால்”  தவறிழைக்காத மனிதனே பூமியில் இல்லை இல்லைவேயில்லை
அப்படியிருப்பதாக சொன்னால் அவரின் மனசாட்சிக்குதெரியும் தான் சிறுதவறுகூட இழைக்காதவரா? என்று. அப்படியிருக்கவேமுடியாது.

மனிதனாகப்பட்டவன் தவறிழைத்து,தன்னைத்திருத்தி தனிமனித ஒழுக்கத்துடன் வாழநினைக்க, அவனுக்கு வழங்கப்படிருக்கும் வாழ்க்கையிது, பரிசோதனையான, இவ்வுல பரிட்சைக்கான வாழ்க்கை, இதில்தான் அடங்கியிருக்கு அவனின் வெற்றியும் தோல்வியும்.

மனிதனை மனிதன் கடவுளாக எப்படிஏற்கிறான் என்றுதான் தெரியவில்லை?தன்னைபோன்றே.உண்ணும், உடுத்தும், உறங்கும், மலம்ஜலம் கழிக்கும். உணர்ச்சிகளிருக்கும். ஆசாபாசாங்களிருக்கும்.மரணிக்கும். இப்படி அனைத்திலும் தன்னைபோன்றே செயல்படும் ஒருவன் எப்படி கடவுளாக முடியும். துறந்து வாழ்ந்தால் கடவுளா? துறவரம் என்றால் என்ன?

துறவரம் என்பது தூய்மையின் உறைவிடம் அல்லவா? ஆனால்!!!!!

இங்கே காலங்காலமாக நடந்துவருவதென்ன? துறந்துவிட்டோமென்ற போர்வையில் குத்தாட்டங்களும், திறப்பாட்டங்களல்லவா! நடக்கிறன.அபலைப்பெண்களின் அங்கங்கள் இதுபோன்றவர்களின் அர்சனைக்கு ஆளாக்கப்படுகிறன. அழகிகள்கூட அடிபணிந்து அலைகின்றன

அடிமாட்டைவிட மோசமாகவல்லவா மனங்கள் மழுங்கிக்கிடக்கின்றன. எத்தனை ,எத்தனை இதுபோன்ற சம்பவங்கள் நடைப்பெற்றாலும். இதை அன்றே மறந்து,வேறு ஏமாற்றத்திற்கு தயாராகும் மக்களை நினைத்துதான் பரிதாமாக இருக்கிறது.

மனிதனைக் கடவுளென்று நினைத்து அவருக்கு தீபஆராதனையெடுத்த கைகளின்று, அவர்களின் உருவபொம்மைகளுக்கே தீயிட்டுக்கொளுத்தும் வேடிக்கைகள். மகானாக பார்த்த கண்களெல்லாம் மண்புழுவைவிட கேவளமாக பார்க்கும் வினோதங்கள். அவரின் பாதங்களுக்கு பாலபிஷேகம் செய்தவர்களெல்லாம் இன்று தங்கள் பாதங்களால் அவரின் உருவத்தைபோட்டு மிதிக்கும் அவலங்கள்.

மலர்மாலைகளை சூட்டி மண்டியிட்டவர்களெல்லாம். செருப்புமாலையணிவிக்கும் சிறுபிள்ளைதனம் என. தங்கள் எதை உயிரைவிட பெரிதென போற்றிபுகழ்தார்களோ அதையே இன்று தூற்றுகிறார்கள். தூக்கியெறிகிறார்கள்.

இன்னிலைக்கு எது காரணம்? அறியாமையா? அல்லது அறிந்தும் அறியமறுப்பதா? நம்பிக்கையா? அல்லது நம்பிக்கையென்று தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்வதா? அறியாமை காலத்தில் நடந்தால், அது அறிதலில்லாததது எனலாம்.

ஆனாலின்று, அத்தனையும் அப்பப்ப அறிந்துவிடும் காலம். 5 மணிக்கு அறியாததை 5 ,5 மணிக்கு அறிந்துவிடுமளவிற்கு, அறிவியலும் விஞ்ஞாமும் அளவில்லாமல் அறியாதவர்கள்கூட அறியும்படி அத்தனையும் ஆங்காங்கே உலகம் முழுவதும் கொட்டிக்கிடக்கிறன.

ஒருவேளை அறிவு அதிகரித்துவிட்டதாலும் வந்தவினையா இருக்குமோ?
கடவுளுக்கும். மனிதனுக்கும். வித்தியாசமில்லையென்றால்,உலகம் வந்ததெப்படி? நாம் பிறந்தது எப்படி? ஆதாம்தான் நம்மைப்படைத்தாரா? ஏனென்றால் அவர்தானே முதல்மனிதர்.

அவர் தானே தன் விலாயெலும்பிலிருந்து தன் துணையை படைத்துக்கொண்டாரா? இல்லை நம்மைப்பெற்றெடுத்த தாய் தந்தை கடவுளா? அவர்கள் எவ்விதத்திலும் தவறிழைக்காமல் இருக்கிறார்களா?

இறைவனுக்கு அடுத்தபடியாக வணங்கக்கூடிய தகுதிகள் தாய் தந்தை இருவருக்கும்தான். ”ஆனால்” வணக்கம் என்பது ஒருவருக்குதான். அனைத்திலும் அனைத்திலும் சிறந்தவன் எவனோ அவனே வணக்குத்திற்கு தகுதியானவன்.

அறிவில்லாதவருக்கூட இதைபற்றிய அறிதல் இருக்கும். அறிந்தவரும்கூட அதை அறியாதவர்போல் நடப்பதுதான் வியப்பிலும் வியப்பு.

முதல் மனிதரான ஆதமை மண்ணால் படைத்த கடவுள்
அவர்மூலம் உருவான அத்தனை மனிதனப்பிறப்புகளையும் மீண்டும் மண்ணுக்கே கொண்டுசெல்வதுகூடவா விளங்கவில்லை?

சரி கடவுளென்பவன்,அல்லது கடவுளென்பது, எப்படிருக்கவேண்டும்.
மனிதனை மீறிய, இயற்கையைமீறிய, உலகிலுள்ள அனைத்து சக்திகளையும்மீறிய. ஒன்று அவனிடமிருந்தால்தான் அவன் கடவுள் .

இல்லை அதுகடவுள். கடவுளென்பவன் தன்னிகரற்றவன். அவன் தனித்தவன், மிக மிக தூய்மையானவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை

மனைவி மக்கள். இல்லறவாழ்க்கை.உணவு. உறக்கம். இச்சை. மரணம்
என எந்ததேவையும் இல்லாதவன். உலகை இமைக்காமல் காத்துவருபவன்,நன்மை தீமையை முன்பே அறிந்தவன் மொத்ததில் அவனுக்கு இணை அவனே! அவன்தான் கடவுள்.

கடவுள் நம்பிக்கை நிச்சியம் இருக்கவேண்டும்.

அதற்காக  கண்டவரையும், , கடவுளென நினைத்து தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வதா?.உண்மையையும் போலியையும் பிரிதறிப்பாருங்கள்.

ஏமாற்றுபவனைவிட ஏமாறுபவன்தான் அடிமுட்டாள்.

சட்டத்தில்கூட கொலை செய்தவரைவிட அதற்கு துணையாக தூண்டுகோலாக இருந்தவருக்கே தண்டனை அதிகமாம்.


இன்று பரபரப்பாகும் செய்தி. நாளை மறைக்கப்படும்,
மறுநாள் மறைந்துவிடும், அதன் மறுநாள் மன்னிக்கப்படும்.

இதுவே தொடர்கதையாகி காலமுழுக்க ஏமாந்தயினம் மனிதயினமென்ற கறைய அடியோடு நீக்குங்கள்.

வார்த்தைகளில் வசியப்படுத்துபவரெல்லாம் கடவுளல்ல!

போற்றிப்புகழும் நீங்களே! போலியென்றதும் போட்டு உடைக்கிறீர்கள்.

மனிதனை மனிதனாய் ஏமாற்றுவது தவறென்றாலும் அது இயல்பு.

”ஆனால்” மனிதன் தன்னை இறைவனென்று மனிதனையும் ஏமாற்றி, அந்த இறைவனையும் ஏமாற்றுவதுதான் மகா மகா குற்றம்.

இதை மன்னிக்கவேமுடியாது.

இதுபோன்ற போலிக்கடவுள்களை நம்பி இனியாவது ஏமாறாமல் தன்னையே ஏமாற்றிக்கொள்ளாமல் இருக்குமா மனிதயினம். மிகுந்த மனவேதனையோடு முடிக்கிறேன்.

நல்லது நடக்குமென்ற எதிர்பார்ப்புடன் நானும் மனசாட்சியுள்ள மனிதமுள்ள மனுசியாய்.....................

இறைவா!

உன்னையே வணங்குகிறேன்

உன்னிடமே உதவியும் தேடுகிறேன்.

அன்புடன் மலிக்கா

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற