திருக்குறள்

சிறைச்சாலைக்காக

இழந்த உயிர்களோ கணக்கில்லை


இருமிச் சாவதில் சிறப்பில்லை

இன்னும் என்னடா விளையாட்டு

எதிரி நரம்பிலே கொடியேற்று.

வீரத்தைக் குண்டுகள் துளைக்காது

வீரனைச் சரித்திரம் புதைக்காது

நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்

வாடகை மூச்சில் வாழாது.!

---------------------------------------------------------------

பிணப் பரிசோதனை

அய்யர் குடலிலும்

மலம்.

----------------------------------------------------------------

பறையர் சுடுகாடு

படையாட்சி சுடுகாடு

தலைமுழுக

ஒரே ஆறு.

-----------------------------------------------------------------

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற