திருக்குறள்

கிழியும் விவேக் முகங்கள்:சா’தீ” மூட்டலுக்கு எதிர்ப்பு!


சின்னக்கலைவாணர் என்ற பட்டத்திற்கு கொஞ்சமும் தகுயியானவர் கிடையாது விவேக். காலக்கொடுமைதான் அவருக்கு அந்த பட்டப்பெயர் வந்தது.

பகுத்தறிவாளன் என்று திரையில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் விவேக், தன் வீட்டை வாஸ்து முறைப்படிதான் கட்டினார் என்று முன்பு விவேக் மீது ஏச்சுக்கள் விழுந்தது.

காமெடி என்கிற பெயரில் நமீதா,மாளவிகா என்று நடிகைகளை வைத்துக்கொண்டு இரட்டை அர்த்த வசனம் பேசும் இவர் நடிகைகளுக்காக வரிந்துகட்டிக்கொண்டு நடிகர் சங்க கோதாவில் நின்றார்.

இரட்டை அர்த்தத்துடன் ஆபாசமாக பேசும் இவருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சென்னை விருந்தினர் மாளிகை எதிரில் 20.10.09 அன்று மகளிர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.

சாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதி பாட்டை பாடி பறவைகளுக்கு எல்லாம் ப்ளு கிராஸ் இருக்கு..இவாளுக்கு எல்லாம் நம்மள மாதிரி ஒய்ட் கிராஸ்தானே இருக்கு என்று திரையில் சமத்துவம் பேசிய இவரின் இந்த முகமும் இப்போது கிழிய ஆரம்பித்திருக்கிறது.

பத்திரிக்கையாளர்களை மிகவும் தரக்குறைவாக பேசியதற்காக பத்திரிகையாளர்கள் தொடர்ந்த வழக்கில் 23ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

மேலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் விவேக் பத்மஸ்ரீ விருதுக்கு தகுதியானவர் அல்ல; அவரது விருதை பறிக்க வேண்டும் என்றும் பத்திரிக்கையாளர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் விவேக், தனது சாதியை நாடியிருக்கிறார். டாக்டர் சேதுராமன் நடத்திய மூவேந்தர் முன்னேற்றக் கழக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு ‘’எனக்கு ஒன்ணுன்னா நீங்க நிற்கனும்’’என்றிருக்கிறார்.

பதிலுக்கு கூட்டத்தில், ‘’உங்களுக்கு ஒன்னுன்னா உசிரையே கொடுப்போம்’’என்று ஆதரவுக்கரங்கள் நீண்டதாம்.

அடங்கொப்புறான...., இதற்கு பேருதான் பகுத்தறிவா?சாதீ மூட்டலுக்கு எதிர்ப்பு குரல் கிளம்பியுள்ளன.

இது மட்டுமல்ல இன்னும் கிழித்தெறியவேண்டிய விவேக் முகங்கள் நிறைய இருக்கு என்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

- நக்கீரன்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற