திருக்குறள்

நாம் யார்??


வளமையான

வாழ்விற்காக

இளமைகளை

தொலைத்த

துர்பாக்கியசாலிகள்!


வறுமை என்ற

சுனாமியால்

அரபிக்கடலோரம்

கரை ஒதுங்கிய

அடையாளம்

தெரிந்தநடை பிணங்கள்!


நிஜத்தை

தொலைத்துவிட்டு

நிழற்படத்திற்கு

முத்தம் கொடுக்கும்

அபாக்கிய சாலிகள்!


தொலைதூரத்தில்

இருந்து கொண்டே

தொலைபேசியிலே

குடும்பம் நடத்தும்

தொடர் கதைகள்!


ஈமெயிலிலும்

இண்டர்நெட்டிலும்

இல்லறம் நடத்தும்

கம்ப்யூட்டர் வாதிகள்!


பகட்டான

வாழ்க்கை வாழ

வாழ்க்கையை

பறி கொடுத்த

பரிதாபத்துக்குரியவர்கள்!


ஏ.சி.காற்றில்

இருந்துக் கொண்டே

மனைவியின்

மூச்சுக்காற்றை

முற்றும் துறந்தவர்கள்!


வளரும் பருவத்திலே

வாரிசுகளை

வாரியணைத்து

கொஞ்சமுடியாத

கல் நெஞ்சக்காரர்கள்!


உழைப்பு என்ற

உள்ளார்ந்த அர்த்தத்தை

உணர்வுபூர்வமாக

உணர்ந்தவர்கள்!


முடியும் வரை

உழைத்து விட்டு

முடிந்தவுடன்

ஊர் செல்லும்

நோயாளிகள்!
-ஹேமா
அபுதாபி

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற