கின்றன. கண்கூடாக பார்க்க முடிகிறது மாற்றங்களை.
பெண்கள், பாவாடை தாவாணியிலிருந்து சுடிதார்க்கு மாறி விட்டனர்.
ஜீன்ஸ் அணியும் பெண்களைக் கூட பார்க்க முடிகிறது. நைட்டிக்கு மேலே
துண்டு போட்டுக் கொண்டு, குழாயடிக்கும், பக்கத்து கடைகளுக்கும் வரும்
பெண்களை காணமுடிகிறது. பெண்கள் சுதந்திரமாக ஷாப்பிங், லைப்ரரி
எல்லாம் சென்று வருகின்றனர்.
பசும்பால் வாங்க மாடு இருக்கும் வீடுகளை தேடிய காலங்கள் போய்,
பால்பாக்கெட்டுகளும், தயிர்பாக்கெட்டுகளும் கடைகளை ஆக்ரமித்துக்
கொண்டுவிட்டன. பசும்பால் கிடைப்பது இங்கும் அரிதாகி வருகின்றது.
விருந்தினர் வந்தால், யார் வீட்டில் நாட்டுக்கோழி கிடைக்கும் என்று
அலைந்த காலங்கள் மாறி, 24 மணி நேரமும் `பிராய்லர் சிக்கன்’
கிடைக்கிறது. அனைத்து மாவு வகைகளும் ரெடிமேடாக பாக்கட்டுகளில்
கிடைக்கின்றன.
அவ்வப்போது கேட்கும் பஸ்ஹாரன்கள் நிரந்தரமாக ஒலிக்கின்றது.
டிஜிட்டல் ஸ்டுடியோக்கள், கம்ப்யூட்டர் சென்ட்டர்கள், ஏடிஎம் வங்கிகள்,
என அத்தனை வசதிகளும் வந்துவிட்டன.
தெருக்கள் ஏழுமணிக்கே அரவமற்று அடங்க ஆரம்பித்து விட்டன.
முன்பெல்லாம் யார் வீட்டுக்காவது விருந்தினர் வந்தால், உடனே
தெரு முழுக்கதெரிந்து விடும். இப்போது, அனைவரையும் டிவி
சீரியல்கள் இழுத்து பிடித்துக் கொண்டு விட்டன.
போன மாதம், மதியம் பதினோரு மணியளவில், வீடுபுகுந்து, தனியாக
இருந்த 75 வயது மூதாட்டியை அடித்துக் கொன்று, அணிந்திருந்த இரண்
டரை பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இத்தனைக்
கும் நல்ல ஜனநடமாட்டம் மிகுந்த தெருவுக்குள் தான் வீடு. இரவு ஏழு
மணியளவில், அந்த பாட்டியின் உறவினர் வந்த பின் தான் கொலை
நடந்ததே தெரிந்துள்ளது.
ஆம்.... கிராமங்கள் மாறித்தான் விட்டன.