திருக்குறள்

மனிதர்களை நேசிக்க கற்றுத் தரும் மகா விதிகள்...

எந்த வயதில் நாம் அதிகமாகக் காத லிக்கிறோம்? 'டீனேஜ் பருவத்தில்', 'படித்து முடித்து வேலை கிடைக்காமல் சுற்றும்போது', 'நல்ல வேலை கிடைத்து செட்டிலானதும் பூப்பதுதான் மெச்சூர்டான காதல்', 'எங்கங்க... இப்பெல்லாம் அஞ்சாப்பு படிக் கிறப்பவே காதலுக்காக உயிரைக் கொடுப் பேன்னு டயலாக் பேசுதுங்க!' என்று வித விதமாகப் பதில்கள் வந்து விழலாம்.


ஓர் ஆண் அல்லது பெண் தனது வாழ்க் கைத் துணை அல்லது பார்ட்னரிடம் வெளிப் படுத்தும் அன்புதான் காதல் என்ற அழுத்த மான பிம்பம்தான் இந்தப் பதில்களுக்கான காரணம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், உங்கள் 70 வயது அப்பா, உங்கள் மூன்று வயது மகனிடம் வைத்திருக்கும் அன்பும் காதல்தானே? மனதுக்கு மிகவும் விருப்ப மான, நெருக்கமான உங்கள் நண்பரிடம் நீங்கள் காட்டும் பிரியமும் காதல்தானே? உங்கள் லட்சியத்தை அடைய உங்களுக்கு வழிகாட்டும் காட்ஃபாதர் போன்ற ஒருவரி டம் நீங்கள் வைத்திருக்கும் மரியாதை காதல்தானே? அன்பு, பாசம், நேசம், பிரியம், தோழமை, நட்பு என்று அத்தனை அம்சங்களும் காதல் என்ற ஒரு குடையின் கீழ் அடங்கிவிடும் உணர்ச்சிகள்தாமே!

இப்போது சொல்லுங்கள்... எந்த வயதில் நாம் அதிகமாகக் காதலிக்கிறோம்? பிறந்த நொடி முதல் மரணத் தருணம் வரை காதல் நம்மைப் பற்றிப் படரும். அதிலும் குறிப்பாக, கல்லூரிப் பருவத்தில் கிடைக்கும் அறிமுகங் கள், நமது வாழ்க்கைத் துணை, வழித்துணை களைத் தீர்மானிக்கிறது. அந்தக் காலகட்டத் தில் நமது காதலைச் சில சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வெளிப்படுத்த வேண்டும் என்கி றார் ரிச்சர்ட் டெம்ப்ளர். இவரின் ''The Rules of Love என்ற புத்தகம் பேசும் விஷயங்கள், 'அட, ஆமாம்ல!' என்று மூளைக்குள் ஒரு பளீர் பல்பை ஒளிரச் செய்கிறது.

சட்டத்தைக் கையிலெடுக்கும் நட்பு!

எதற்கும் கட்டுப்படாதது நட்பு. நமது நண்பர்களை 'நீ இப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன்!' என்று எந்த நிலையிலும் நாம் கட்டுப்படுத்த முடியாது. என் நண்பன் ஒருவனை எப் போதும் எதிர்பார்க்கவே முடியாது. இரண்டே நிமிடங் களில் வருகிறேன்' என்று சொல்லிவிட்டு, ஒரு வாரம் கழித்து தலையைக் காட்டுவான். 'வரவே மாட்டான்' என்று நினைத்திருக்கும்போது பின்னால் இருந்து தோள் தட்டிச் சிரிப்பான். சினிமாவுக்கு வரச் சொல்லிவிட்டு டிக்கெட் எடுக்க மறந்துவிட்டேன் என்பது, நாலு பேருக்கு வாங்கிய உணவினை ஒற்றை ஆளாக காலி செய்வது, நம் அனுமதியின்றி நமது உடைகளை உரிமையோடு எடுத்து அணிவது என்று, எந்த 'லைன் ஆஃப் கன்ட்ரோலு'க்கும் அடங்க மாட்டான். ஒரு கட் டத்தில் அவனுடனான நட்பைத் துண்டித்துவிடலாமா என்றுகூட யோசித்தேன்.

ஆனால், அவனைப்போல அந்த நொடி வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும் என்று எப்போதுமே எனக்குள் ஓர் ஆசை. அது முடியாததால்தான் அவன் மீது எனக்கு ஓர் ஈர்ப்பு. அவனை நண்பனாக்கிக்கொண்டேன். இப் போது திடீரென்று அவன் மேல் வெறுப்பு ஏற்பட்டு அவனது இயல்பை மாற்றிக்கொள்ளச் சொல்வது என்ன நியாயம்? குறிப்பிட்ட குணம், பழகும் தன்மையுடன் இருந்ததால்தான் நீங்கள் ஒருவரை நண்பராக ஏற்றுக் கொள்கிறீர்கள். அதனால், அந்தக் குணம், மணம், நிறத்தை மாற்ற முயற்சிக்காதீர்கள்!

நல்ல நண்பன் வேண்டுமென்றால், நீங்கள் நல்ல நண்பனாக இருங்கள்!

இது கொஞ்சம் அநியாயமாகக்கூட உங்களுக்குத் தோன்றலாம். 'உங்கள் நண்பனை உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு, என்னை மட்டும் நல்ல நண்பனாக இருக்கச் சொல்கிறீர்களே?' என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், வேறு வழி இல்லை. கொஞ்சம் கஷ்டம்தான் என்றாலும், நிச்சயம் பலன் அளிக்கும் இந்தச் சட்டம். உங்கள் நண்பனுக்கு நீங்கள் தேவைப்படும் சமயம், அவருக்குத் தோள் கொடுக்கும் குணமே உங்களை நல்ல நண்பனாக வைத்திருக்கும். உங்கள் நண்பனின் புலம்பல்களுக்குக் காது கொடுப்பது, ஆறுதல் அளிப்பது, ஆதரவாக இருப்பது போன்றவை தான் உங்களை நல்ல நண்பராக்கும். நெருக்கமான நண்பர்களிடம்கூட திருமணம், குழந்தைகள், வேலைப் பளு போன்றவை பெரிய இடைவெளியை உண்டாக்கும். ஆனால், நீங்கள் அவர்களுக்கு 'நல்ல நண்பராக' இருந் திருந்தால், எத்தனை பெரிய இடைவெளிக்குப் பிறகும் விட்ட இடத்தில் இருந்து நட்பு துளிர்க்கும்.

திருப்பிக் கேட்கப்போவது இல்லையென்றால் மட்டுமே நண்பர்களுக்குக் கடன் கொடுங்கள்!

கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கும் பிரச்னை யில்தான் பல நட்புப் பாலங்கள் விரிசலடைகின்றன. உங்கள் நண்பன் உங்களிடம் கடன் கேட்கும் சமயம்... அவரது நட்பு அல்லது அந்தக் கடன் தொகை இரண்டில் எது அதிக விலைமதிப்புள்ளது என்று பாருங்கள். நட்பு பெரிதென்றால் திரும்ப வரவே வேண்டாம் என்ற மன நிலையுடன் அந்தக் கடனைக் கொடுங்கள். அந்தப் பணம்தான் பெரிதென்றால், 'ஸாரிடா மச்சான்!' என்று சொல்லிக் கை விரித்துவிடுங்கள்.

ஆனால், இக்கட்டான சமயங்களில் நண்பர்களிடம்தான் முதலில் உதவி கேட்கத் தோன்றும், நட்பைவிட விலை மதிப்புமிக்க எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை உங்கள் மனதில் இருத்திக்கொள்ளுங்கள்!

கண்டதும் காதலை உணர்வீர்கள்!

'கண்டதும் காதல்' என்பதற்கு அறிவியல்ரீதியான விளக்கங்கள் எதுவும் கிடையாது. ஆனால், உளவியல்ரீதி யாக அது 100 சதவிகிதம் பலனளிக்கக்கூடியது. ஒருவ ரைக் கண்டதும் உங்களுக்குள் காதல் (இந்த இடத்தில் 'காதல்' என்பது எதிர்பாலின ஈர்ப்பு!) கண் சிமிட்டினால், ஒருவேளை அவர் உங்கள் வருங்கால வாழ்க்கைத் துணை ஆகக்கூட வாய்ப்பிருக்கிறது. அதே முதல் பார்வை அல்லது சந்திப்பில் உங்களை எந்த விதத்திலும் ஈர்க்காதவரோடு பின்னாட்களில் உங்களுக்குக் காதல் கனிந்தாலும், அதைத் திருமணம் வரை கொண்டுசெல்ல வேண்டுமா என்று ஒன்றுக்குப் பலமுறை யோசித்து முடிவெடுங்கள்.

ஒருவரைப் பார்த்ததுமே உங்களுக்குள் பட்டாம்பூச்சி பறந்திருந்தால், உங்கள் ஆழ்மனதுக்குப் பிடித்த ஏதோ ஒரு விசேஷம் அவரிடம் இருக்க வேண்டும். அதனால் தான் பெயர், ஊர் தெரியாத நிலையிலும் உங்களுக்கு அவரைப் பிடித்திருக்கிறது. பழகப் பழக ஒருவரைப் பிடித்ததாலோ அல்லது அவர் உங்களிடம் காதல் சொன்னதாலோ, நீங்கள் அவர் கைபிடித்து மணமேடை யில் நிற்கிறீர்கள். அந்த சமயம், 'நம்ம ஆள் இவர் தானா?' என்று உங்களுக்குள் ஒரு சந்தேகம் முளைத் தால்... அது ஆயுளுக்கும் அடங்காது. ஆக, 'கண்டதும் காதல்'கொள்ளவைக்கும் சமிக்ஞைகளில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்!

- விகடன் குழுமம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற