திருக்குறள்

திருமங்கலம் வெற்றி தொடர்பாக முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள கவிதை:

உன் துதிக்கையை உலக்கை என்றார்; உன்
தூய வெள்ளைத் தந்தம்; கூர் தீட்டிய ஈட்டி என்றார்;
உரல் என்றார் - உன் கால்கள் நான்கு கண்டவர்கள்;
கனமான காதுகளை முறங்கள் எனக் கேலி செய்தார்!
இவ்வாறுக
ண்ணிருந்தும் குருடர்களாய்க்
கற்பனை பல செய்து, கதைகள் கட்டி-
பயனுள்ள பொருள்களையும்; படைக்குதவும்
பயமிகு கருவிகளையும் உவமையாக்கி; உனை
பழித்தும், புகழ்ந்தும்-குபைல சொல்லிப் பேசும் கும்பலை - வேடிக்கை
பார்த்துக் கொண்டேயிருந்தாய்; பாவம் நீ;
பாழும் அந்தக் கும்பல் பதறிக் குலைந்து சிதற,
கொம்புகளால் குத்தியும்;
கால்களால் மிதித்தும் - உன்னால்
பழி தீர்க்க முடியுமெனினும்
பதிலுக்குப் பதில் என்றில்லாமல்;
திருமங்கலத்து யானையாம் நீ;
திருக்குறள் வழி நிற்பதால்
இன்னா செய்தாரை ஒறுத்திட அவர் நாண
நன்னயஞ் செய்து விடுவாய்!

- கலைஞர் கருணாநிதி.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற