திருக்குறள்

காதலின் கடைசிக்குறிப்பு !!!


இறக்கை கோதிக்கொண்டிருக்கும்

ஓர் வெண்புறாவின் மென்மையென

தடவிப்போகிறாய்- உரசிப்போகும்

குளி்ர்காற்றென உணர்கிறேன் நான்


கூடிக்களித்திருக்கும்

ஓர் குடும்பவிழாவில்- நீ

ரகசியக்குறிப்புகளை வீசிப்போகிறாய்

நான் அவஸ்தையாய் சமாளிக்கிறேன்..


பெரும்மழையின் வேகத்துளிகளாய்

எனக்குள் புகுகிறாய்


சிறு குழந்தையின் புன்சிரிப்பை

ஓவியமாக்க முயற்சிக்கிறாள் தாய்


உலகின் கடைசி காதல் குறிப்பை

எழுதிக்கொண்டிருக்கிறான்-ஓர்

விரல்களிழந்த காதலன்

தீவிரவாதிகளால் சுடப்பட்ட

காதலியின் இரத்தத்தை மையமாக்கி.....


அமைதியாய் விடிகிறது காலை

இன்னுமொரு காதலை பூத்து...

கருத்துப்பிழை சுமந்து வெளிவரும்

அக்காதலின் கடைசிக்குறிப்பு


-ரிஷி சேது

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற