திருக்குறள்

ஒரு காதல் மன்னனின் கட்டுரை ..... 

முதலில் ஒரு பெண்ணை காதலித்தேன்
அவள் முகம் சரி இல்லை என்று முழுதாக
விட்டுவிட்டேன்..

இரண்டாமவளை காதலித்தேன்

அவள் இதயத்தை என்னோடு சேர்த்து இருவருக்கு
பகிர்ந்தவளாதலால் இவளும் வேண்டாமென இறுமாப்பாய் விட்டுவிட்டேன் ...

மூன்றாமவள் காதலை முழுதாக நம்புகிறாள்

பின்னால் பிரச்சனை என்று பிடிவாதமாய் விட்டுவிட்டேன்...

நான்காமவள் காதலை நான் விடவில்லை

என் நடவடிக்கை கண்டு அவளே விட்டுவிட்டாள்...

ஐந்தாமவள் காதலில் பல ஐநூறு நோட்டுகள்

அநியாயமாக செலவு ஆதலால் ஆபத்து என
அவளையும் விட்டுவிட்டேன் ...

எனக்கேற்ற பெண்ணவள் எப்பொழுது தான்

கிடைப்பாளோ என நண்பனிடம் கேட்டால் ,
நறுக்கென்று சில வார்த்தை நாசுக்காய் சொல்லிவிட்டான் ,

காதால் என்ற வார்த்தை கூட கண்ணீர்வடிக்கும்

உன் கலப்படமான காதலை கண்டு , காதலின் அர்த்தம் எதுவென்று அறியாத நீ காதல் என்று சொல்லி ஏன் காதலை கேவல படுத்துகிறாய் ,

என்று அடுக்கடுக்காய் வார்த்தைகள் அடுக்கிகொண்டே போகிறான்,

ஏதோ காதல் என்றால் கடவுள் என்று கடகடவென
கருத்துக்களும் சொல்கிறான்..

யார் என்ன சொன்னால் என்ன ?

என் காதல் பயணம் எத்தனை காதலை சந்தித்தாலும் புதுக்காதலை தேடி என்றும்
புத்துணர்ச்சியுடன் பயணிக்கும்.......

நான் தான் நவயுக காதல் மன்னன்...



எழுதியவர்:ஈஸ்வர்தனிக்காட்டுராஜா...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற